காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
|
1
|
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை, அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை, வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?
|
2
|
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
|
3
|
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,- ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
|
4
|
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை, வான வெண்மதி சூடிய மைந்தனை, வேனிலானை மெலிவு செய் தீ-அழல்- ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?
|
5
|
| Go to top |
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை, மின்னனை, மின் அனைய உருவனை, பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய என்னனை, இனி யான் மறக்கிற்பனே?
|
6
|
கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச் சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை, அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர் விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?
|
7
|
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை, நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை, நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை, வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?
|
8
|
புதிய பூவினை, புண்ணிய நாதனை, நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை, கதியை, கண்டம் கறுத்த கடவுளை, மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?
|
9
|
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை, உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை, பருகு பாலனை, பால்மதி சூடியை, மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?
|
10
|
| Go to top |