சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.096   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி ராகத்தில் திருமுறை அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY   Add audio link Add Audio

தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்,
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!

1

பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்-
தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி!
மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு
அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே!

2

நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே!
பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு
ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே!

3

நோக்குவேன், உன்னையே; நல்லன நோக்காமைக்
காக்கின்றாய்; கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்,
வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுள் மண்டளி அம்மானே!

4

பஞ்சு ஏறும் மெல் அடியாளை ஓர்பாகம் ஆய்,
நஞ்சு ஏரும் நல் மணிகண்டம் உடையானே!
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை,
அஞ்சேல்! என்பரவையுள் மண்டளி அம்மானே,

5
Go to top

அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர்
அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!

6

விண்டானே! மேலையார் மேலையார் மேல் ஆய
எண்தானே! எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன்
கண்டானே! கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே!-
அண்டானே! பரவையுள் மண்டளி அம்மானே!

7

காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம்
கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம்
நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர்
ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே!

8

செடியேன், நான்; செய்வினை நல்லன செய்யாத
கடியேன், நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன், நான்; கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன், நான்பரவையுள் மண்டளி அம்மானே!

9

கரந்தையும், வன்னியும், மத்தமும், கூவிளம்,
பரந்த சீர்ப் பரவையுள் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
7.096   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தூ வாயா! தொண்டு செய்வார்
Tune - பஞ்சமம்   (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000