சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

9.012   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா

பொது -திரைலோக்கிய சுந்தரம்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=HOLFzgY4IKs  https://www.youtube.com/watch?v=Iqo6harvYXs  https://www.youtube.com/watch?v=dLve31rr8K4   Add audio link Add Audio

நீரோங்கி வளர்கமல
    நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
    அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
    உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
1

நையாத மனத்தினனை
    நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
    அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
    கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
2

அம்பளிங்கு பகலோன்பால்
    அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
    முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
    என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே ! 
3

மைஞ்ஞின்ற குழலாள்தன்
    மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
    இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
    மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
4

நீவாரா(து) ஒழிந்தாலும்
    நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
    குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
    அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
5
Go to top

முழுவதும்நீ ஆயினும் இம்
    மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
    பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
    அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
6

தன்சோதி எழுமேனித்
    தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
    ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
    துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
7

அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
    ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
    நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
    நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
8

ஆறாத பேரன்பின்
    அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
    வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
    பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
9

சரிந்ததுகில் தளர்ந்தஇடை
    அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
    இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
    முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
10
Go to top

ஆரணத்தேன் பருகிஅருந்
    தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
    கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
    போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
    திரைலோக்கிய சுந்தரனே.
11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -திரைலோக்கிய சுந்தரம்
9.012   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
Tune -   (பொது -திரைலோக்கிய சுந்தரம் )

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000