சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Order by:
Thiruppugazh from Thalam: சுவாமிமலை
201   அவாமருவு     209   கடிமா மலர்க்குள்     217   சுத்திய நரப்புடன்     225   நிறைமதி முகமெனும்     233   வாரம் உற்ற     208   கடாவினிடை     216   சரண கமலாலயத்தில்     224   நிலவினிலே     232   வாதமொடு சூலை     207   ஒருவரையும் ஒருவர்     215   கோமள வெற்பினை     223   நாவேறு பா மணத்த     231   முறுகு காள     1336   வறுமைப் பாழ்பிணி     206   எந்தத் திகையினும்     214   குமர குருபர முருக சரவண     222   நாசர்தங் கடை     230   மருவே செறித்த     238   விழியால் மருட்டி     205   இருவினை புனைந்து     213   குமரகுருபர முருக குகனே     221   தெருவினில் நடவா     229   மகர கேதனத்தன்     237   விரித்த பைங்குழல்     204   இராவினிருள் போலும்     212   காமியத் தழுந்தி     220   தருவர் இவர்     228   பாதி மதிநதி     236   விடமும் வடிவேலும்     203   ஆனாத பிருதி     211   கறை படும் உடம்பு     219   சேலும் அயிலும்     227   பலகாதல் பெற்றிட     235   வார்குழல் விரித்து     202   ஆனனம் உகந்து     210   கதிரவனெ ழுந்து     218   செகமாயை உற்று     226   பரவரிதாகி     234   வார்குழலை    
201   சுவாமிமலை   அவாமருவு  
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
     மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
     தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
     முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
     சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

202   சுவாமிமலை   ஆனனம் உகந்து  
தானதன தந்த தானன தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ...... தனதான

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல்
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன்
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ...... வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

203   சுவாமிமலை   ஆனாத பிருதி  
தானான தனதனத் தான தனதன
     தானான தனதனத் தான தனதன
          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
     சீராமன் மருகமைக் காவில் பரிமள
          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
     மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
     பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

204   சுவாமிமலை   இராவினிருள் போலும்  
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
     இராமசர மாகும் ...... விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
     இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
     தடாதவிலை கூறும் ...... மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
     அநாதிமொழி ஞானந் ...... தருவாயே
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
     குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
     குடாவியிட வேலங் ...... கெறிவோனே
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
     தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

205   சுவாமிமலை   இருவினை புனைந்து  
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
     னிருவினை யிடைந்து போக ...... மலமூட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
     மிலையென இரண்டு பேரு ...... மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
     பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
     பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
     அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
     அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
     மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
     மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

206   சுவாமிமலை   எந்தத் திகையினும்  
தந்தத் தனதன தனதன தனதன
     தந்தத் தனதன தனதன தனதன
          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான

எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

207   சுவாமிமலை   ஒருவரையும் ஒருவர்  
தனதனன தனதனன தான தந்தனம்
     தனதனன தனதனன தான தந்தனம்
          தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
          துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
          தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
          கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென்
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
          கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
          திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
          திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
          குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
          குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

208   சுவாமிமலை   கடாவினிடை  
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
     கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
     கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
     கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
     றியானுமுனை யோதும் ...... படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
     வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
     விநாசமுற வேலங் ...... கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
     சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

209   சுவாமிமலை   கடிமா மலர்க்குள்  
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
     கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
     முடியான துற்று கந்து ...... பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
     மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
     னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
     ணருளே தழைத்து கந்து ...... வரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
     படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

210   சுவாமிமலை   கதிரவனெ ழுந்து  
தனதனன தந்த தான தனதனன தந்த தான
     தனதனன தந்த தான ...... தனதான

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
     கடலளவு கண்டு மாய ...... மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
     கவினறந டந்து தேயும் ...... வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
     மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே
இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
     லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
     மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
     மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
     அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
     அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

211   சுவாமிமலை   கறை படும் உடம்பு  
தனதனன தந்த தானனத்
     தனதனன தந்த தானனத்
          தனதனன தந்த தானனத் தனதான

கறைபடுமு டம்பி ராதெனக்
     கருதுதலொ ழிந்து வாயுவைக்
          கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
     பனைமருவு சிந்தை போய்விடக்
          கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
     குணமதுபொ ருந்தி வீடுறக்
          குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா
குமரசர ணென்று கூதளப்
     புதுமலர்சொ ரிந்து கோமளப்
          பதயுகள புண்ட ரீகமுற் ...... றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
     புயலுடன டங்க வேபிழைத்
          திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
     சிகரிகளும் வெந்து நீறெழத்
          திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்
     பிரமனைமு னிந்து காவலிட்
          டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
     கரியெனப்ர சண்ட வாரணப்
          பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

212   சுவாமிமலை   காமியத் தழுந்தி  
தானனத் தனந்த ...... தனதான
     தானனத் தனந்த ...... தனதான

காமியத் தழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
     ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

213   சுவாமிமலை   குமரகுருபர முருக குகனே  
தனதனன தனதனன தனனா தனத்ததன
     தனதனன தனதனன தனனா தனத்ததன
          தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
     கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
          குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
     தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
          கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
     முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
          தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
     வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
          தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
     தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
          தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
     ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
          தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
     வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
          திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
     லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
          சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

214   சுவாமிமலை   குமர குருபர முருக சரவண  
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான

குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ...... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு ...... மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின ...... முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர ...... லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட ...... வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் ...... குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

215   சுவாமிமலை   கோமள வெற்பினை  
தானன தத்தன தத்தன தத்தன
     தானன தத்தன தத்தன தத்தன
          தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான

கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
     காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்
          கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை
கோகில நற்புற வத்தொடு குக்குட
     ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்
          கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்
     யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்
          சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
     காசுப றிக்கம றித்துமு யக்கிகள்
          தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ
மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய
     சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி
          வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி
     மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
          மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில்
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
     னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்
          ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
     வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ
          ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

216   சுவாமிமலை   சரண கமலாலயத்தில்  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
Audio/Video Link(s)
http://www.skandagurunatha.org/works/thiruppugal/thiruppugal-0216-sarana-gama-la-layath-thai-snaganathan.mp3
Add (additional) Audio/Video Link

Back to Top

217   சுவாமிமலை   சுத்திய நரப்புடன்  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம்
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

218   சுவாமிமலை   செகமாயை உற்று  
தனதான தத்த தனதான தத்த
     தனதான தத்த ...... தனதான

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

219   சுவாமிமலை   சேலும் அயிலும்  
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
     தானதன தந்த தத்த ...... தனதான

சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
     மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச்
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
     காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே
காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
     நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
     லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
     பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம்
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
     ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா
சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
     பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
     சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

220   சுவாமிமலை   தருவர் இவர்  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
     தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
     தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
     வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
     மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
     உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
     முதவியெனை யாள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
     குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
     குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

221   சுவாமிமலை   தெருவினில் நடவா  
தனதன தனனா தனனா
     தனந்த தத்தம் ...... தனதான

தெருவினில் நடவா மடவார்
     திரண்டொ றுக்கும் ...... வசையாலே
தினகர னெனவே லையிலே
     சிவந்து திக்கும் ...... மதியாலே
பொருசிலை வளையா இளையா
     மதன்தொ டுக்குங் ...... கணையாலே
புளகித முலையா ளலையா
     மனஞ்ச லித்தும் ...... விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
     யுரம்பு குத்தும் ...... வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
     யுகந்து நிற்கும் ...... முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
     தெரிந்து ரைக்கும் ...... புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
     விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

222   சுவாமிமலை   நாசர்தங் கடை  
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

223   சுவாமிமலை   நாவேறு பா மணத்த  
தானான தான தத்த தானான தான தத்த
     தானான தான தத்த ...... தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
     நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீராகு காகு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

224   சுவாமிமலை   நிலவினிலே  
தனதன தான தந்த தனதன தான தந்த
     தனதன தான தந்த ...... தனதான

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
     நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும்
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
     நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின்
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
     கனியித ழேய ருந்தி ...... யநுராகக்
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
     கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய்
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
     முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும்
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
     உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
     குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
     குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

225   சுவாமிமலை   நிறைமதி முகமெனும்  
தனதன தனதன ...... தனதான
     தனதன தனதன ...... தனதான

நிறைமதி முகமெனு ...... மொளியாலே
     நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
     உனதிரு வடிவியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
     மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
     குருமலை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

226   சுவாமிமலை   பரவரிதாகி  
தனதன தானன, தனதன தானன
     தனதன தானன ...... தனதான

பரவரி தாகிய வரையென நீடிய
     பணைமுலை மீதினி ...... லுருவான
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
     பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
     நிரைதரு மூரலி ...... னகைமீது
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
     நிலையெழ வேயலை ...... வதுவாமோ
அரவணை யார்குழை பரசிவ ஆரண
     அரனிட பாகம ...... துறைசோதி
அமையுமை டாகினி திரிபுரை நாரணி
     அழகிய மாதருள் ...... புதல்வோனே
குரவணி பூஷண சரவண தேசிக
     குககரு ணாநிதி ...... அமரேசா
குறமக ளானைமின் மருவிய பூரண
     குருகிரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

227   சுவாமிமலை   பலகாதல் பெற்றிட  
தனதான தத்ததன தனதான தத்த
     தனதான தத்ததன ...... தனதான

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
     பலனேபெ றப்பரவு ...... கயவாலே
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
     பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி
விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
     வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே
விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
     விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ
மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
     வடமேரெ னத்தரையில் ...... விழவேதான்
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
     மருகாக டப்பமல ...... ரணிமார்பா
சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
     செவியார வைத்தருளு ...... முருகோனே
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
     திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

228   சுவாமிமலை   பாதி மதிநதி  
தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FDMcv6CjglI
https://www.youtube.com/watch?v=A8EPWbOilko
Add (additional) Audio/Video Link

Back to Top

229   சுவாமிமலை   மகர கேதனத்தன்  
தனன தான தத்த தனன தான தத்த
     தனன தான தத்த ...... தனதான

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
     மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
     வலிய சாய கக்கண் ...... மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
     இளமை போயொ ளித்து ...... விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
     னினிய தாள ளிப்ப ...... தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
     அதிர வேந டத்து ...... மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
     அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
     விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
     வினவ வோது வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

230   சுவாமிமலை   மருவே செறித்த  
தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான

மருவே செறித்த குழலார் மயக்கி
     மதனா கமத்தின் ...... விரகாலே
மயலே யெழுப்பி யிதழே யருத்த
     மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப்
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
     பிரியாது பட்ச ...... மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே
குருவா யரற்கு முபதேசம் வைத்த
     குகனே குறத்தி ...... மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
     குடகா விரிக்கு ...... வடபாலார்
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
     சிறுவா கரிக்கு ...... மிளையோனே
திருமால் தனக்கு மருகா வரக்கர்
     சிரமே துணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

231   சுவாமிமலை   முறுகு காள  
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
     முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
     முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
     அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
     னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
     தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
     தரணி யேழும் வலம்வ ருந்திண் ...... மயில்வீரா
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
     வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
     வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

232   சுவாமிமலை   வாதமொடு சூலை  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
     பாவமது பான முண்டு ...... வெறிமூடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

233   சுவாமிமலை   வாரம் உற்ற  
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
     னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
     மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
     மாப ணிக்கள் விந்தை ...... யதுவான
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
     டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
     சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
     சூத னுக்கி சைந்த ...... மருகோனே
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
     தானி றைக்க வந்த ...... தொருசாலி
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
     மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

234   சுவாமிமலை   வார்குழலை  
தானன தத்தன தத்தன தத்தன
     தானன தத்தன தத்தன தத்தன
          தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
     காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
          வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்ரீவ
வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
     டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
          மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர்
காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
     சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
          கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக்
கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு
     மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
          காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோ
சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய
     ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு
          சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்கமாகச்
சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை
     யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
          சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலா
ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
     மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
          வேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
     வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண
          ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

235   சுவாமிமலை   வார்குழல் விரித்து  
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
     வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட
வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
     வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச்
சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி
     தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச்
சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
     சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ
சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
     சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த
     தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே
ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
     மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே
ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற
     ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

236   சுவாமிமலை   விடமும் வடிவேலும்  
தனதனன தான தனதன தந்தன
     தனதனன தான தனதன தந்தன
          தனதனன தான தனதன தந்தன ...... தனதான

விடமும்வடி வேலு மதனச ரங்களும்
     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
          விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும்
ம்ருகமதப டீர பரிமள குங்கும
     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
          வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
          நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம்
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
          னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
          வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும்
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
     வகையிரவி போலு மணியும லங்க்ருத
          மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும்
அடைவலமு மாள விடுசர அம்புடை
     தசரதகு மார ரகுகுல புங்கவன்
          அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
          அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

237   சுவாமிமலை   விரித்த பைங்குழல்  
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
     தனத்த னந்தன தனதன வெனவொலி
          விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய
மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
     டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
          வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத்
தரித்த தந்திரி மறிபுய மிசைபல
     பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
          தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை
தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
     பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
          சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ
உரித்த வெங்கய மறியொடு புலிகலை
     தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
          ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே
உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
     குவட்டை யும்பொடி படசத முடிவுற
          வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா
வரித்த ரந்துள வணிதிரு மருவிய
     வுரத்த பங்கயர் மரகத மழகிய
          வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே
வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
     குறத்தி மென்புன மருவிய கிளிதனை
          மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

238   சுவாமிமலை   விழியால் மருட்டி  
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த
     தனதான தத்த தந்த ...... தனதான

விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
     விரகான லத்த ழுந்த ...... நகையாடி
விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
     விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
     முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
     முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே
பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
     பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
     புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா
செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
     திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே
திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

1336   சுவாமிமலை   வறுமைப் பாழ்பிணி  
தனனத் தானன தாத்தத்த தானன
     தனனத் தானன தாத்தத்த தானன
          தனனத் தானன தாத்தத்த தானன ...... தனதானா

வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்
     உருகிப் போனது தேற்றப்ப டாதினி
          மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென ...... அழையாயோ
வலியப் போய்உடல் கூச்சப்ப டாமையும்
     இடியப் பேசிய நாசிக்க லாமையும்
          மறுசொற் காதுகள் கேட்கப்ப டாமையும் ...... வரலாமோ
கறுவிப் பாய்புலி வேட்டைக்கு ளேவரு
     பசுவைப் போல்மிடி யாற்பட்ட பாடெழு
          கதையைப் பாரினி லார்க்குச்சொல் வேனினம் ...... அறியாயோ
கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்
     தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே
          கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி ...... அலையாதே
குறைபட் டேஉயிர் காத்துக்கொள் வாயென
     முறையிட் டோர்கரி கூப்பிட்ட நாளொரு
          குரலிற் போய்உயிர் மீட்டுக்கொள் வோர்திரு ...... மருகோனே
குளிர்முத் தாலணி மூக்குத்தி யோடணி
     களபப் பூண்முகை பார்த்துப்பெண் மோகினி
          குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் ...... குருநாதா
நிறையத் தேன்விழு பூக்கொத்தி லேகனி
     கிழியத் தான்விழு காய்கொத்தி லேமயில்
          நடனக் கால்படு தோப்புக்கு ளேகயல் ...... வயலூடே
நதியைக் காவிரி யாற்றுக்கு ளேவரு
     வளமைச் சோழநன் நாட்டுக்கு ளேரக
          நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh list