சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
110 - அவனிதனிலே (பழநி) 134 - கருவின் உருவாகி (பழநி) 161 - சுருளளக பார (பழநி) 195 - வனிதை உடல் (பழநி) 220 - தருவர் இவர் (சுவாமிமலை) 648 - வருபவர்கள் ஓலை (கதிர்காமம்) 692 - இணையது இலதாம் (திருமயிலை) Songs from this thalam சுவாமிமலை 697 - வரும் மயில் ஒத்தவர்
220 சுவாமிமலை திருப்புகழ் ( - வாரியார் # 209 )
தருவர் இவர்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
Easy Version:
தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி
வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) முதலான
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல்
அதான செம் சொல் வகை பாடி
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து
வரினும்
இவர் வீதம் எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும்
என்று
ஒரு பணம் உதாசினம் சொல்
மடையரிடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக
வெந்து
கவிதை சொ(ல்)லியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து
விடவே
நல் உபய பத மால் விளங்கி இக பரமும் ஏவ இன்பம் உதவி
எனை ஆள அன்பு தருவாயே
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி
தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு
குரு மலையின் மேல் அமர்ந்த பெருமாளே. Add (additional) Audio/Video Link
நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால்
பலரை விரும்பித் தேடிச் சென்று,
வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) முதலான ...
வண்டு விடு தூது1, தண்டகம்2 முதலான,
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல்
அதான செம் சொல் வகை பாடி ... இனிமையான கவி மாலைகள்,
சிந்து3, கலித்துறைகள்4, ஏசல்5, இன்பமான தரு6
முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி,
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து
வரினும் ... அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து,
அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து வந்தாலும்,
இவர் வீதம் எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும்
என்று ... (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது
போதும் என்று கூறி,
ஒரு பணம் உதாசினம் சொல் ... ஒரு பணம் கூடத் தராமல்
அலட்சிய வார்த்தை பேசுவார்கள்.
மடையரிடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக
வெந்து ... அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம்
உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து,
கவிதை சொ(ல்)லியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து
விடவே ... பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது
ஒழிவதற்காகவே,
நல் உபய பத மால் விளங்கி இக பரமும் ஏவ இன்பம் உதவி
எனை ஆள அன்பு தருவாயே ... உனது நல்ல இரு திருவடிகளிலும்
ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான
இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக.
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி ...
கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை
விரும்பித் தேடி
தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக ... (காவிரியின்
நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு
பயம் கொள்ள,
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு ...
ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும்
குரு மலையின் மேல் அமர்ந்த பெருமாளே. ... சுவாமி
மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
1
Similar songs:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song