சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
152   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 109 )  

கோல குங்கும

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தந்தன தத்தன தத்தம்
     தான தந்தன தத்தன தத்தம்
          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான


கோல குங்கும கற்புர மெட்டொன்
     றான சந்தன வித்துரு மத்தின்
          கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
     பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
          கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
     தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
          பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்
     டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
          பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்
     தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
          சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
     சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
          சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
     தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
          றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
     கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
          காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே.

கோல குங்கும கற்புரம் எட்டு ஒன்று ஆன சந்தனம்
வித்துருமத்தின் கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழு
நீரின் கோதை சங்கிலி உற்ற கழுத்தும்
பூஷணம் பல ஒப்பனை மெச்சும் கூறு கொண்ட பணைத்
தனம் விற்கும் பொதுமாதர்
பாலுடன் கனி சர்க்கரை சுத்தந் தேன் எனும்படி மெத்த
ருசிக்கும் பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ்
நித்தம் பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
தாலம் முன்பு படைத்த ப்ரபுச் சந்தேகம் இன்றி மதிக்க
அதிர்க்கும் சாகரம் சுவறக் கிரி எட்டும் தலை சாய
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி
பட்டிட யுத்தம் சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் தனி
வேலா
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து
எரியில் சென்று ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின்
உச்சி உடுத் தங்கும் ஆவினன்குடி வெற்பினில் நிற்கும்
பெருமாளே.
அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை, செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும், ஆபரணம், பல வித அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின் பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில் ஆசை வைக்காமல், உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான். உலகத்தை முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும், பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே, ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும் மகிழ்கின்ற குரு நாதனே, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கோல குங்கும கற்புரம் எட்டு ஒன்று ஆன சந்தனம்
வித்துருமத்தின் கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழு
நீரின் கோதை சங்கிலி உற்ற கழுத்தும்
... அழகிய குங்குமம்,
பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை,
செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய
பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும்,
பூஷணம் பல ஒப்பனை மெச்சும் கூறு கொண்ட பணைத்
தனம் விற்கும் பொதுமாதர்
... ஆபரணம், பல வித
அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை
விற்கின்ற விலைமாதர்களின்
பாலுடன் கனி சர்க்கரை சுத்தந் தேன் எனும்படி மெத்த
ருசிக்கும் பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
...
பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக
மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில்
ஆசை வைக்காமல்,
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ்
நித்தம் பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
...
உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு
நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும்
என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான்.
தாலம் முன்பு படைத்த ப்ரபுச் சந்தேகம் இன்றி மதிக்க
அதிர்க்கும் சாகரம் சுவறக் கிரி எட்டும் தலை சாய
... உலகத்தை
முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப்
பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல்
வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும்,
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி
பட்டிட யுத்தம் சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் தனி
வேலா
... பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி
விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட
திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே,
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து
எரியில் சென்று ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
...
ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும்
தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு
நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும்
மகிழ்கின்ற குரு நாதனே,
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின்
உச்சி உடுத் தங்கும் ஆவினன்குடி வெற்பினில் நிற்கும்
பெருமாளே.
... பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள்
வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற
திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே.
Similar songs:

152 - கோல குங்கும (பழநி)

தான தந்தன தத்தன தத்தம்
     தான தந்தன தத்தன தத்தம்
          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 152