சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
3   விநாயகர் திருப்புகழ் ( - வாரியார் # 2 )  

உம்பர் தரு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

உம்பர் தரு தேனுமணி கசிவாகி
     ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
     எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்(து) அணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே
     ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
உம்பர் தரு ... விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம்
தேனுமணி ... காமதேனு, சிந்தாமணி
கசிவாகி ... (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து
ஒண்கடலிற் தேனமுது ... ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய
அமுதம்போன்ற
உணர்வூறி ... உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும் ... இன்பச் சாற்றினை நான்
உண்ணும்படி பலமுறை
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே ... என்னுயிரின் மீது
ஆதரவு வைத்து அருள்வாயாக
தம்பிதனக்காக ... தம்பியின் (முருகனின்) பொருட்டாக
வனத்(து) அணைவோனே ... தினைப்புனத்திற்கு வந்தடைவோனே
தந்தை வலத்தால் ... தந்தை சிவனை வலம் செய்ததால்
அருள்கைக் கனியோனே ... கையிலே அருளப்பெற்ற பழத்தை
உடையவனே
அன்பர்தமக் கான ... அன்பர்களுக்கு வேண்டிய
நிலைப் பொருளோனே ... நிலைத்து நிற்கும் பொருளாக
விளங்குபவனே
ஐந்து கரத்து ... ஐந்து கரங்களையும்
ஆனைமுகப் பெருமாளே. ... யானைமுகத்தையும் உடைய
பெருமானே.
Similar songs:

3 - உம்பர் தரு (விநாயகர்)

தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான

Songs from this thalam விநாயகர்

1 - கைத்தல நிறைகனி

2 - பக்கரை விசித்ரமணி

3 - உம்பர் தரு

4 - நினது திருவடி

5 - விடமடைசு வேலை

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 3