சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
4   விநாயகர் திருப்புகழ் ( - வாரியார் # 5 )  

நினது திருவடி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
Easy Version:
நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்
நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து
ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல
சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்
நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே
எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள்
இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி
கொடுத்திட
... (முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல்
(இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு,
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் ...
நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும்,
புதிய பால், தேன்,
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி
பருப்பு அவல் எள் பொரி
... நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன்,
லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி,
நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் ... ஒப்பில்லாத
இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப்
பொருட்களை),
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ... மன மகிழ்ச்சியுடன் தொடும்
கைகளையும்,
ஒரு மகர சலநிதி வைத்த துதி கர ... ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள
கடலில் வைத்த துதிக்கையையும் உடைய
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக ... வளரும்
யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு ... அவருக்கென்றே
பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய
சொற்களைக் கொண்டு (துதித்தும்),
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு ... தூக்கிய
கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில்
குட்டியும்,
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே ... (அந்த
விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில்
அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன்.
தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம்
மொய்த்து உதிரப் புனல்
... தெனன தெனதென தெத்தென
இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர்,
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை ...
திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய
மூளைத் திசுக்கள்,
செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் ... பிளந்த வயிற்றில்
நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள்,
நிரைய அரவ நிறைத்த களத்து இடை ... இவைகளோடு
வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில்
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ ...
திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம்
செகசே சே என ஒலிக்கவும்,
துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து
முழக்கிட
... துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப்
பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க,
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை ... டிமுட டிமு
டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப,
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட ... ஒன்றோடொன்று
பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட,
இரண பயிரவி சுற்று நடித்திட ... ரண பைரவி என்னும் தேவதைகள்
சுற்றிக் கூத்தாட,
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. ... எதிர்த்து
வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.

Similar songs:

4 - நினது திருவடி (விநாயகர்)

தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

Songs from this thalam விநாயகர்

1 - கைத்தல நிறைகனி

2 - பக்கரை விசித்ரமணி

3 - உம்பர் தரு

4 - நினது திருவடி

5 - விடமடைசு வேலை

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song