சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.088
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முற்றும் சடை முடி மேல் பண் - குறிஞ்சி (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.088  
முற்றும் சடை முடி மேல்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஆப்பனூர் ; (திருத்தலம் அருள்தரு அம்பிகையம்மை உடனுறை அருள்மிகு ஆப்பனூரீசுவரர் திருவடிகள் போற்றி )
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன், ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [1] |
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர் விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [2] |
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [3] |
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில் துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான், அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப் பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [4] |
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா, நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான், அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப் பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [5] |
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய, காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில் ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப் பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [6] |
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி, கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட, இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப் பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [7] |
கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான், உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி, அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப் பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [8] |
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும் அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல் எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப் பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே. | [9] |
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள், பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப் பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே. | [10] |
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை, நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே. | [11] |