சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முற்றும் சடை முடி மேல்
பண் - குறிஞ்சி   (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.088   முற்றும் சடை முடி மேல்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருஆப்பனூர் ; (திருத்தலம் அருள்தரு அம்பிகையம்மை உடனுறை அருள்மிகு ஆப்பனூரீசுவரர் திருவடிகள் போற்றி )
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[1]
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்
விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[2]
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[3]
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்
துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,
அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப்
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[4]
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[5]
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,
காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[6]
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[7]
கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,
உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,
அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப்
பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[8]
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.

[9]
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

[10]
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list