சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காலை நல்மாமலர் கொண்டு அடி பண் - குறிஞ்சி (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=75ihhsCeeFQ Audio: https://sivaya.org/audio/1.075 Kaalai Nan malar.mp3 |
1.076
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, பண் - குறிஞ்சி (திருஇலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=YPJdXk4xlRc |
1.077
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பண் - குறிஞ்சி (திருஅச்சிறுபாக்கம் பாக்கபுரேசர் சுந்தரமாதம்மை) Audio: https://www.youtube.com/watch?v=azhVoTHS8qg |
1.078
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரி வளர் அவிர் ஒளி பண் - குறிஞ்சி (திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eaRWjJFY0eM |
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்; பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=sbgfwwP-7Iw |
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rS7fTpfQ_1w Audio: https://sivaya.org/audio/1.080 Katraangu Eriyombi.mp3 |
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார், பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=Q5rDRmz_PVE |
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி பண் - குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=9vmj1OVCS1E |
1.083
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் பண் - குறிஞ்சி (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vgzGfOazfPA |
1.084
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பண் - குறிஞ்சி (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oCWjnKbTyZw |
1.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நிழல் மேய கறை பண் - குறிஞ்சி (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QK_9CQJKKMA |
1.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொட்டும் பறை சீரால் குழும, பண் - குறிஞ்சி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ctmd0yeKnNY |
1.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுடு கூர் எரிமாலை அணிவர்; பண் - குறிஞ்சி (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lo0L1dYrDac |
1.088
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முற்றும் சடை முடி மேல் பண் - குறிஞ்சி (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ |
1.089
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை ஆர்தரு பூதப் பகடு பண் - குறிஞ்சி (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yMdIOYz2ckU |
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் பண் - குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=VjxnyPOF7T4 |
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி பண் - குறிஞ்சி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KrT89fazF1I |
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு பண் - குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE Audio: https://sivaya.org/audio/1.092 Vaasi Theerave.mp3 |
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று பண் - குறிஞ்சி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ixiwntdKLwU |
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் பண் - குறிஞ்சி (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vCNP3lGfb-E |
1.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு ஓர் காதினன்; பாடு பண் - குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vO4Rc6aU4oM |
1.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மன்னி ஊர் இறை; சென்னியார், பண் - குறிஞ்சி (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=u-A7eRn23xU |
1.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று பண் - குறிஞ்சி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs |
1.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நன்று உடையானை, தீயது இலானை, பண் - குறிஞ்சி (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY Audio: https://sivaya.org/audio/1.098 Nantruudayanai.mp3 Audio: https://sivaya.org/audio/1.098 nandurudaiyanai.mp3 |
1.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வம்பு ஆர் குன்றம், நீடு பண் - குறிஞ்சி (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=B-abMQIdD-A |
1.100
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீடு அலர் சோதி வெண்பிறையோடு பண் - குறிஞ்சி (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3wtL44T-VIM |
1.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=8zdt1kW19Xg |
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப் பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=cF9XvmpMTxQ |
1.103
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடையான் ஒரு காதில்-தூய பண் - குறிஞ்சி (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wbEEJYTso-0 |
1.104
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=bne7fi0psYs |
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட பண் - வியாழக்குறிஞ்சி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ZeajoyxTUVA |
1.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இல் அவுணர் அரணம் பண் - வியாழக்குறிஞ்சி (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yn1AREaeV-8 |
1.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY |
1.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பாதாளீச்சரம் ) Audio: https://www.youtube.com/watch?v=USJnqTJ4Zp8 |
1.109
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் உறு வனமுலை மங்கை பண் - வியாழக்குறிஞ்சி (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lVWhByJf30Q |
1.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=-yJGrUCvJdM |
1.112
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இன்குரல் இசை கெழும் யாழ் பண் - வியாழக்குறிஞ்சி (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=XgZQga40iFg |
1.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், பண் - வியாழக்குறிஞ்சி (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sZs5as1K7o4 |
1.114
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குருந்து அவன், குருகு அவன், பண் - வியாழக்குறிஞ்சி (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VuAmAPZ_kNI |
1.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சங்கு ஒளிர் முன் கையர் பண் - வியாழக்குறிஞ்சி (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=A4nmsC17vas |
1.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அவ் வினைக்கு இவ் வினை பண் - வியாழக்குறிஞ்சி (பொது -திருநீலகண்டப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY |
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=lI9_fQ073sk |
1.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=70GGL3BPf4w |
1.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முள்ளின் மேல் முது கூகை பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY |
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து பண் - வியாழக்குறிஞ்சி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zDHSBZvbt6M |
1.121
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நடை மரு திரிபுரம் எரியுண பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=30yijJBtHus |
1.122
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=cTl52pwVSrY |
1.123
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ இயல் புரிகுழல்; வரிசிலை பண் - வியாழக்குறிஞ்சி (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5thCIuYVLWc |
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் பண் - வியாழக்குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=fUl7MIiDDQg Audio: https://sivaya.org/audio/1.124_alarmakaL_malithara.mp3 |
1.125
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை மலி அகல் அல்குல் பண் - வியாழக்குறிஞ்சி (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GaQYSPNIl58 |
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று பண் - வியாழக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=k79jeHXwR6w |
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=AiiIfwx12us |
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான் பண் - வியாழக்குறிஞ்சி (திருப்பிரமபுரம் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=rfRTjyK3Eck Audio: https://sivaya.org/audio/1.128 Oor Uru Aayinai.mp3 |
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான் பண் - மேகராகக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=UTv5Fo4z8ms |
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி, பண் - மேகராகக்குறிஞ்சி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE |
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், பண் - மேகராகக்குறிஞ்சி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=g8kcAS4LkJk |
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, பண் - மேகராகக்குறிஞ்சி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=knCU4ih-2bI |
1.133
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் பண் - மேகராகக்குறிஞ்சி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AbtH6ieiJGM |
1.134
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw |
1.135
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு சேர்வது ஒர் மேனியர், பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nkTMgUi7HWk |
3.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை) |
3.125
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் ஊர்ப் பெரு மணம் பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=28Azl8Dg42c |
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன் பண் - குறிஞ்சி (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oqk0okHIuQ0 |
4.084
திருநாவுக்கரசர்
தேவாரம்
எட்டு ஆம் திசைக்கும் இரு பண் - வியாழக்குறிஞ்சி (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=8Rzb2aTC8Oo |
5.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், பண் - நாட்டைக்குறிஞ்சி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=56rtMguGQ7s |
6.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=EudEaUvuF4k |
6.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி மாட நீள் தெருவு பண் - குறிஞ்சி (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vaiY_Vc890g |
6.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0 |
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oW7MPaskWVM |
7.091
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் பண் - குறிஞ்சி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை) |
7.092
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? பண் - குறிஞ்சி (திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=s_4KMZXZ-Bw Audio: https://sivaya.org/audio/7.092 Etraal Marakkaen.mp3 |
7.093
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீரும் மலரும் நிலவும் சடைமேல் பண் - குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=IxgdpEeZDvI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.075  
காலை நல்மாமலர் கொண்டு அடி
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவெங்குரு (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன், ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்- மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி, வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [1] |
பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும் அரவினை அணிந்து, அழகு ஆகப் பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி, மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப, மற்று உயர்ந்து விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [2] |
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது உரு அது கொண்டு, காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல் செய் பெருமான்- நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து, வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [3] |
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்- பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல் வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [4] |
சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக் கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப் படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து, விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [5] |
கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள் அறத் துரப்ப, எண்திசையும் புரை மலி வேதம் போற்று சுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [6] |
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில் நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [7] |
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய, ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர் வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [8] |
ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி, சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண் நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த, வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [9] |
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை விட்டு, அழகு ஆக ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து, காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [10] |
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை, நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும் பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள், விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.076  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஇலம்பையங்கோட்டூர் ; (திருத்தலம் அருள்தரு கோடேந்துமுலையம்மை உடனுறை அருள்மிகு சந்திரசேகரர் திருவடிகள் போற்றி )
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம், நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்- கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும் இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [1] |
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள் தலைமகன், திருக்கழிப்பாலை நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்- கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை இளையவர் மதிமுகத்து உலவும் இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [2] |
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக, கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும் ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [3] |
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல், விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்- குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள, இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [4] |
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்- கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடுஞ்சாரல் ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [5] |
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான், மற்று ஓர் தனம் இலான், எனது உரை தனது உரை ஆக, தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்- புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து, ஈண்டி வந்து, எங்கும் இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [6] |
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து உளான், நித்தமா ஏத்தும் ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்- பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை வண்டு இனம் பாடும் ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [7] |
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில் ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல், ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [8] |
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா, உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்- வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு மணி அணி மாலை, இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [9] |
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கியப்பேய்கள் பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான்- கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக வண்டொடு தேன் இனம் முரலும், இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [10] |
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்- எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார், போய் வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று, வீடு எளிது ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.077  
பொன் திரண்டன்ன புரிசடை புரள,
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஅச்சிறுபாக்கம் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாதம்மை உடனுறை அருள்மிகு பாக்கபுரேசர் திருவடிகள் போற்றி )
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய, குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும்பொடி அணிவர்; மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி, அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [1] |
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம் திருவடி தொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர், ஒன்று அலாது ஊரார், வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார், ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [2] |
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி, நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்; பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்; பேய்க்கணம் சூழ ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [3] |
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும், மலைமகள் அவளொடு மருவினர் எனவும், செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார் தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர, அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [4] |
விண் உலாம் மதியம் சூடினர் எனவும், விரிசடை உள்ளது, வெள்ளநீர் எனவும், பண் உலாம் மறைகள் பாடினர் எனவும், பல புகழ் அல்லது பழி இலர் எனவும், எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [5] |
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி, தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக, காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த, ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [6] |
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகிக் கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும் நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர, ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [7] |
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக் கவரியும் குடையும் பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப் பெரியவர் பேண, பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த திண்தோள்களை அடர்வித்து, அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [8] |
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலைக் கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு முடி உற, தங்கள் ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [9] |
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல மா மதி போல் ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [10] |
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான், கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு, அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.078  
வரி வளர் அவிர் ஒளி
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஇடைச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு இமயமடக்கொடியம்மை உடனுறை அருள்மிகு இடைச்சுரநாதர் திருவடிகள் போற்றி )
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி, கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக; விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும், எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [1] |
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்; குழகு அலது அறியார்; கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள் ஆடுவர்; கொன்றை அம்தாரார்; சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [2] |
கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்; கனல் மழுவாளர்; வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்; நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர், ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [3] |
கட மணி மார்பினர்; கடல் தனில் உறைவார் காதலர்; தீது இலர்; கனல் மழுவாளர்; விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்; வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, வாழையின் தீம்கனி வார்ந்து தேன் அட்டும் இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [4] |
கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்; வளர்மதி கதிர்விட, கங்கை- நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ் மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்; சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செங்குலை வாழை ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [5] |
தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின் ஆடுவர்; தோல் உடை ஆகப் பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன் ஆடுவர்; பெரியவர் பெருமான்; கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும் மன்னிய பாங்கர், ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [6] |
கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர்; அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்; ஆர் அணங்கு உடையர்; பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடைப் புணர்குயில் ஆலும் எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [7] |
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி, வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்; சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி, ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [8] |
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது பழி இலர், தாமும்; தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர்; மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல், இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [9] |
பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர்; கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம் வயல் இளவாளைகள் இரிய, எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [10] |
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச் சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன், புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.079  
அயில் உறு படையினர்; விடையினர்;
பண் - குறிஞ்சி (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்; மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்; பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர் கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [1] |
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்; படுதலைக் கையர்; பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து எற்றிய கரைமேல் கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. | [2] |
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்; நால் மறையாளர்; மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை; எட்டு இருங்கலை சேர் பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ, மதனனை வெகுண்ட கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [3] |
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித் திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி, வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. | [4] |
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்; பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு, ஒண்மணி வரன்றி, கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. | [5] |
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த, பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி, கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [6] |
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள் முத்து என அரும்ப, கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [7] |
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள் பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன, இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [8] |
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம் பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறைகோயில் மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி, வெள் இப்பியும் சுமந்து, கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. | [9] |
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச் சமணரும், தேரரும், கணி சேர் நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச் சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி வையகத்து ஏற்று, காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [10] |
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல், வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல் மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
பண் - குறிஞ்சி (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
நல்ல இசைக் குழு அமைய
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே. | [1] |
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும் சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை, மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே. | [2] |
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள், பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச் செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே. | [3] |
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப் பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச் சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே. | [4] |
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற, செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே. | [5] |
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம் பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே. | [6] |
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம் மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச் சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத் தலையால் வணங்குவார் தலை ஆனார்களே. | [7] |
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து, சீராலே மல்கு சிற்றம்பலம் மேய நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே. | [8] |
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான், சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த, மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே. | [9] |
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே. | [10] |
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.081  
நல்லார், தீ மேவும் தொழிலார்,
பண் - குறிஞ்சி (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்- சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த, வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும் கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே. | [1] |
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம், தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி, ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும் களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே. | [2] |
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச் சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால் பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே. | [3] |
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும் நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும் பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே. | [4] |
மாலும் பிரமனும் அறியா மாட்சியான், தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன், ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழிந் நகர்தானே. | [5] |
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள், பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்! மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக் கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே. | [6] |
வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன் பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப் பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே. | [7] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.082  
இரும் பொன்மலை வில்லா, எரி
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,- திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே. | [1] |
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர, ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும் வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே. | [2] |
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு, துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் மயிலும் மடமானும் மதியும் இள வேயும் வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே. | [3] |
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில் குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை, விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே. | [4] |
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக, பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே. | [5] |
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள் மேலால் எரி காட்டும் வீழி மிழலையே. | [6] |
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான், கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில் நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. | [7] |
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி; கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில் படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே. | [8] |
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது, தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில் படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே. | [9] |
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும் நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே. | [10] |
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள் ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.083  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஅம்பர்மாகாளம் ; (திருத்தலம் அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து, மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும் சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே. | [1] |
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி, வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய, ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே. | [2] |
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி, விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய, நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும் உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே. | [3] |
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு, மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய, கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த, எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே. | [4] |
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய், மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும் பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே. | [5] |
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி, வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக் கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே. | [6] |
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி, வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த, தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே. | [7] |
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி, மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும் நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே. | [8] |
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட, மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா, இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே. | [9] |
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார், கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல; வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய ஈசா! என்பார்கட்கு இல்லை, இடர்தானே. | [10] |
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்- திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர் பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.084  
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி, வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு, கனையும் கடல் நாகைக்காரோணத்தானே. | [1] |
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்- மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக் கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. | [2] |
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும் ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்; தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. | [3] |
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல் அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த, கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே. | [4] |
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி, சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்- பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் காணும் கடல் நாகைக்காரோணத்தானே. | [5] |
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு, வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல் ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த, கானல் கடல் நாகைக்காரோணத்தானே. | [6] |
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு, விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல் வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. | [7] |
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள் இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்- பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த, கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே. | [8] |
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த, பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச் செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த கருமால் கடல் நாகைக்காரோணத்தானே. | [9] |
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற, அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்; பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த, கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே. | [10] |
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம் கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.085  
கல்லால் நிழல் மேய கறை
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருநல்லம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி )
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த, வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [1] |
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத் துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ, கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும் நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [2] |
அந்திமதியோடும் அரவச் சடை தாழ, முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி; சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [3] |
குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ, மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில், தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய், நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே. | [4] |
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித் துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த, நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [5] |
வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும் சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை ஈசன்! என உள்கி எழுவார் வினைகட்கு நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [6] |
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி, கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக, வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும் நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [7] |
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி, நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே. | [8] |
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும் போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும் ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும் நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே. | [9] |
குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர், அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே! பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும், நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே. | [10] |
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.086  
கொட்டும் பறை சீரால் குழும,
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே. | [1] |
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன, நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே. | [2] |
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ, ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே. | [3] |
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை, நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை, காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. | [4] |
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் போகம் மனத்தராய், புகழத் திரிவாரே. | [5] |
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே. | [6] |
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும் நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே. | [7] |
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் தீபமனத்தார்கள்; அறியார், தீயவே. | [8] |
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை, தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே. | [9] |
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே. | [10] |
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவடுகூர் (ஆண்டார்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வடுகேசுவரர் திருவடிகள் போற்றி )
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்; கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார் வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே. | [1] |
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி, ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க, கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம் ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே. | [2] |
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல் ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே. | [3] |
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார் கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார் பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே. | [4] |
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல் தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த, அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே. | [5] |
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி, கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர் வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே. | [6] |
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும் முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்; கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே. | [7] |
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார், மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே. | [8] |
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார் அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே. | [9] |
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர் செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே. | [10] |
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன, கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.088  
முற்றும் சடை முடி மேல்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஆப்பனூர் ; (திருத்தலம் அருள்தரு அம்பிகையம்மை உடனுறை அருள்மிகு ஆப்பனூரீசுவரர் திருவடிகள் போற்றி )
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன், ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [1] |
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர் விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [2] |
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [3] |
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில் துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான், அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப் பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [4] |
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா, நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான், அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப் பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [5] |
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய, காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில் ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப் பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [6] |
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி, கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட, இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப் பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [7] |
கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான், உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி, அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப் பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [8] |
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும் அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல் எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப் பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே. | [9] |
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள், பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப் பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே. | [10] |
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை, நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.089  
படை ஆர்தரு பூதப் பகடு
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) ; (திருத்தலம் அருள்தரு நீலமலர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுரர் திருவடிகள் போற்றி )
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச் சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில் விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே. | [1] |
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய், நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில் கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே. | [2] |
விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ! பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி! எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற அண்ணா! என வல்லார்க்கு அடையா, வினைதானே. | [3] |
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி, வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே. | [4] |
வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து, சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான், ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை வேறா நினைவாரை விரும்பா, வினைதானே. | [5] |
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப் புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத் தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே. | [6] |
ஆவா! என அரக்கன் அலற அடர்த்திட்டு, தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்- தேவே! என, அல்லல் தீர்தல் திடம் ஆமே. | [7] |
மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி! நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய் இறையான்! எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே. | [8] |
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி, சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும் நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே. | [9] |
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை, சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன் ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார் பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.090  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம் பரனையே மனம் பரவி, உய்ம்மினே! | [1] |
காண உள்குவீர்! வேணுநல்புரத் தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே! | [2] |
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல் ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே! | [3] |
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன், வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே. | [4] |
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து ஆணி நன்பொனைக் காணுமின்களே! | [5] |
பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும், ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே. | [6] |
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம் அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே! | [7] |
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே! | [8] |
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன் அன்று நெரித்தவா, நின்று நினைமினே! | [9] |
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான் பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே. | [10] |
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன் நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே. | [11] |
தொழு மனத்தவர், கழுமலத்து உறை பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே. | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.091  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே. | [1] |
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே. | [2] |
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர் நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே. | [3] |
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக் கையினால்-தொழ, நையும், வினைதானே. | [4] |
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக் கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே. | [5] |
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர் வாசமலர் தூவ, நேசம் ஆகுமே. | [6] |
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர் செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே. | [7] |
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே. | [8] |
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே. | [9] |
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர் எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே. | [10] |
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே. | [1] |
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே! | [2] |
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே! | [3] |
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே! | [4] |
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே! | [5] |
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே! | [6] |
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே! | [7] |
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே! | [8] |
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே! | [9] |
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே. | [10] |
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.093  
நின்று மலர் தூவி, இன்று
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே. | [1] |
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர், நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே. | [2] |
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று, கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே. | [3] |
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் வாசமலர் தூவ, பாசவினை போமே. | [4] |
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர், பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே. | [5] |
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா! என வல்லார் பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே. | [6] |