சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
பண் - இந்தளம்   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=skV88Ai_8sg
5.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-zwgm9vj5cU

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.013   நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருக்கோழம்பம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி )
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

[1]
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.

[2]
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

[3]
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!

[4]
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!

[5]
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[6]
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!

[7]
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.

[8]
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[9]
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப்
பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக்
கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!

[10]
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.064   வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கோழம்பம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி )
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

[1]
கயிலை நல்மலை ஆளும் கபாலியை,
மயில் இயல் மலைமாதின் மணாளனை,
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.

[2]
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-
தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்-
தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில்
கோழம்பா! என, கூடிய செல்வமே.

[3]
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

[4]
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்;
நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.

[5]
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி, பாதம் அடைய வல்லார்களே.

[6]
முன்னை நான் செய்த பாவம் முதல் அற,
பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது-
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.

[7]
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்-
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.

[8]
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

[9]
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய,
அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள் உடையார்களே.

[10]
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப்
பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list