சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.013
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது பண் - இந்தளம் (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=skV88Ai_8sg |
5.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் பண் - திருக்குறுந்தொகை (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-zwgm9vj5cU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.013  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
பண் - இந்தளம் (திருத்தலம் திருக்கோழம்பம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி )
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர் ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர் கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே! | [1] |
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே. | [2] |
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும் வேதனை, வெண்குழை தோடு விளங்கிய காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே! | [3] |
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம் உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே! | [4] |
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே! | [5] |
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை, விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக் கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக் கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே! | [6] |
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை, கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே! | [7] |
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக் குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச் செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம் பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே. | [8] |
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் படியானை, பண்டங்கவேடம் பயின்றானை, கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே! | [9] |
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப் பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக் கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே! | [10] |
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கோழம்பம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரியம்மை உடனுறை அருள்மிகு கோகுலேசுவரர் திருவடிகள் போற்றி )
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்; கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்- தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. | [1] |
கயிலை நல்மலை ஆளும் கபாலியை, மயில் இயல் மலைமாதின் மணாளனை, குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே. | [2] |
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்- தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்- தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில் கோழம்பா! என, கூடிய செல்வமே. | [3] |
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு; கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே! | [4] |
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர் பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்; நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே. | [5] |
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்- வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில் கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட ஆதி, பாதம் அடைய வல்லார்களே. | [6] |
முன்னை நான் செய்த பாவம் முதல் அற, பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது- அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர் பின்னல் வார் சடையானைப் பிதற்றியே. | [7] |
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்- கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே. | [8] |
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை; குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே? | [9] |
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய, அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள் அமரலோகம் அது ஆள் உடையார்களே. | [10] |
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப் பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான் கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று இட்ட கீதம் இசைத்த அரக்கனே. | [11] |