சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.008
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வான் உலாவும் மதி வந்து பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oLtSekfKGMY |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.008  
வான் உலாவும் மதி வந்து
பண் - இந்தளம் (திருத்தலம் திருச்சிக்கல் ; (திருத்தலம் அருள்தரு வேனெடுங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு நவநீதநாதர் திருவடிகள் போற்றி )
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை, தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள் வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே. | [1] |
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை சூழ், திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள் விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி மேவிய அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே. | [2] |
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன், வெண்ணெய்ப்பிரான், பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே. | [3] |
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில் செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை ஆர் கழல் சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே. | [4] |
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே, தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே. | [5] |
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ், தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே! | [6] |
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத் துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான், செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே! | [7] |
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே, செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே! | [8] |
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும் கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும் சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான் பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே. | [9] |
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக் கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர், சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப் பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே! | [10] |
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல் செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே. | [11] |