சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
பண் - திருக்குறுந்தொகை   (திருவன்னியூர் )
Audio: https://www.youtube.com/watch?v=N30N2eDaGo4

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.026   காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவன்னியூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

[1]
செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

[2]
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

[3]
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்;
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை-
வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.

[4]
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

[5]
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

[6]
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி
இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்;
வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும்
வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.

[7]
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்-
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.

[8]
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.

[9]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list