சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் பண் - திருக்குறுந்தொகை (திருவன்னியூர் ) Audio: https://www.youtube.com/watch?v=N30N2eDaGo4 |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவன்னியூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே. | [1] |
செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே. | [2] |
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே. | [3] |
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்; மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை- வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே. | [4] |
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே. | [5] |
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்; துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே. | [6] |
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்; வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும் வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே. | [7] |
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்- அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே. | [8] |
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே. | [9] |