சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவலம்புரம் - திருத்தாண்டகம் அருள்தரு வடுவகிர்க்கணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=fs5u5igGi7o   Add audio link Add Audio
மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


1


சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த,
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து, கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல்
மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


2


தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்;
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து   இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி,
வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


3


மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ,
வா வா! என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.


4


அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி,
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன் போல் மேனிப் புனிதனார், புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த,
சின விடையை மேற்கொண்டு, திரு ஆரூரும் சிரபுரமும் இடை மருதும் சேர்வார் போல,
மனம் உருக, வளை கழல, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


5


Go to top
கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால்   காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்;
முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி, முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும்
தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம்
வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ,
மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


6


பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, எவ் ஊரீர், எம்பெருமான்? என்றேன்; ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல,
வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


7


பல்லார் பயில் பழனப் பாசூர் என்று, பழனம் பதி பழைமை சொல்லி நின்றார்;
நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய், நள்ளாறு சேர்தும் என்றார்;
சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய், வெந்த நீறு ஆடி, எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


8


பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்   வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து அருளார்; தத்துவத்தே நின்றேன் என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


9


செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும் சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலம்புரம்
3.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொடி உடை மும்மதில் ஊடு
Tune - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
4.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   தெண் திரை தேங்கி ஓதம்
Tune - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
Tune - திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
Tune - காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D pathigam no 6.058