சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருதிலதைப்பதி (மதிமுத்தம்) - செவ்வழி ரசிகப்ரியா எதுகுல காம்போதி இஷ்டாங்கிணி ராகத்தில் திருமுறை அருள்தரு பொற்கொடியம்மை உடனுறை அருள்மிகு மதிமுத்தநாதேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ   Add audio link Add Audio
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.


1


தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்)
மதிமுத்தமே.


2


அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர்
தொழக்
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம்
திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி,
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே.


3


கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு, கூவிளம்,
வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்)
இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே.


4


புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித்தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,
மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே.


5


Go to top
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே.


6


ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி,
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே.


7


கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய,
வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே.


8


படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.


9


புத்தர் தேரர், பொறி இல் சமணர்களும், வீறு இலாப்
பித்தர் சொன்ன(ம்) மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர், சித்தர், பணிவு உற்று இறைஞ்சும் திலதைப்பதி,
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.


10


Go to top
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.

11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருதிலதைப்பதி (மதிமுத்தம்)
2.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,
Tune - செவ்வழி   (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal pathigam no 2.118