சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
|
1
|
வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில் வேள்வெந்தெழக் கண்டவர் மூக்கீச்சரத்தெம் அடிகள் செய்கன்மமே.
|
2
|
மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட்டி யதும்உல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.
|
3
|
அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.
|
4
|
விடமுனாரவ் வழல்வாய தோர் பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன் அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.
|
5
|
Go to top |
வெந்தநீறு மெய்யிற் பூசுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரேதமே.
|
6
|
அரையிலாருங் கலையில்ல வனாணொடு பெண்ணுமாய் உரையிலாரவ் வழலாடு வரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதின்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான் அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.
|
7
|
ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் றதுங்கூற்றை யுதைத்ததும் கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தை நெரித்தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
|
8
|
நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே.
|
9
|
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழி யூனமதாக்கினான் ஒண்புலால்வேன் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
|
10
|
Go to top |
மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
|
11
|