முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.
|
1
|
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்இடம் புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.
|
2
|
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான் வெருளின்மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின் அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
|
3
|
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள் ஆதிநாலும் அவலம் மிலாதஅடி கள்மறை ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.
|
4
|
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் தனுள் பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
|
5
|
Go to top |
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப் புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும் பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள் குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.
|
6
|
கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள் அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே.
|
7
|
வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
|
8
|
அன்னந்தாவும் மணியார் பொழின்மணியார் புன்னை பொன்னந் தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள் முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன் தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.
|
9
|
உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத் திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும் எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின் புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
|
10
|
Go to top |
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம் பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள் சந்தமாலைத் தமிழ்பத்தி வைதரித் தார்கண்மேல் வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.
|
11
|