சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம் கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில் அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
|
1
|
விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனும் திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக வருள்கார ணத்தில் வருவார் எரியர வார மார்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே.
|
2
|
தேய்பொடி வெள்ளை பூசி யதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர் காய்கதிர் வேலை நீல வொளிமா மிடற்றர் கரிகாடர் காலொர் கழலர் வேயுட னாடு தோளி யவள்விம்ம வெய்ய மழுவீசி வேழ வுரிபோர்த் தேயிவ ராடு மாறு மிவள்காணு மாறு மிதுதா னிவர்க்கொ ரியல்பே.
|
3
|
வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக் கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர் நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக் குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.
|
4
|
உறைவது காடு போலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா இறையிவர் வாழும் வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால் பிறைநுதல் பேதை மாத ருமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான் அறைகழல் வண்டு பாடு மடிநீழ லாணை கடவா தமர ருலகே.
|
5
|
Go to top |
கணிவளர் வேங்கை யோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப வழகார் அணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ண வியலா ரொருவ ரிருவர் மணிகிளர் மஞ்ஞை யால மழையாடு சோலை மலையான் மகட்கு மிறைவர் அணிகிள ரன்ன வண்ண மவள்வண்ண வண்ண மவர்வண்ண வண்ண மழலே.
|
6
|
நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர் மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர் முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப் பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே.
|
7
|
ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர் களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார் அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே.
|
8
|
மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர் தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர் விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே.
|
9
|
புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர் இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே.
|
10
|
Go to top |