வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் புரையிலே யடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன் அரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்ச லென்னாய் திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
1
|
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன் அண்டனே யண்ட வாணா வறிவனே யஞ்ச லென்னாய் தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
2
|
கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை ஓலெடுத் துழைஞர் கூடி யொளிப்பதற் கஞ்சு கின்றேன் சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
3
|
கூட்டமா யைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே காட்டிடை யரங்க மாக வாடிய கடவு ளேயோ சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
4
|
பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழு மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
5
|
Go to top |
ஊனுலா முடைகொ ளாக்கை யுடைகல மாவ தென்றும் மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நானெலா மினைய கால நண்ணிலே னெண்ண மில்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
6
|
சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன் சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
7
|
பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து பைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று கைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன் செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
8
|
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.
|
9
|
விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத் திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.
|
10
|
Go to top |