மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர் பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.
|
1
|
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும் வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையும் தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும் பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.
|
2
|
சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும் பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.
|
3
|
செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை அறுவிப் பாரது வன்றியும் நல்வினை பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.
|
4
|
மற்றை யாரறி யார்மழு வாளினார் பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச் சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு பெற்றி யாரவர் பேரெயி லாளரே.
|
5
|
Go to top |
திருக்கு வார்குழற் செல்வன சேவடி இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார் சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப் பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.
|
6
|
முன்னை யார்மயி லூர்தி முருகவேள் தன்னை யாரெனின் தானோர் தலைமகன் என்னை யாளுமி றையவ னெம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே.
|
7
|
உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல் அழைக்கு மன்பின ராய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.
|
8
|
நீரு லாநிமிர் புன்சடை யாவெனா ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய வாரு லாவன மென்முலை யாளொடும் பேரு ளாரவர் பேரெயி லாளரே.
|
9
|
பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர் தூணி யார்விச யற்கருள் செய்தவர் மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன் பேணி யாரவர் பேரெயி லாளரே.
|
10
|
Go to top |
மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம் சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.
|
11
|