முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார் கடிப்பதும் ஏறுமென் றஞ்சு வன்திருக் கைகளால் பிடிப்பது பாம்பன்றி இல்லை யோஎம் பிரானுக்கே.
|
1
|
தூறன்றி யாடரங் கில்லை யோசுட லைப்பொடி நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள் கூறன்றிக் கூறாவ தில்லை யோகொல்லைச்சில்லைவெள் ளேறன்றி யேறுவ தில்லை யோஎம் பிரானுக்கே.
|
2
|
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை ஒட்டெனும் ஒட்டெனு மாநி லத்துயிர் கோறலைச் சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே.
|
3
|
நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள் எரிதலைப் பேய்புடை சூழ வாரிருட் காட்டிடைச் சிரிதலைமாலை சடைக்க ணிந்தஎஞ் செல்வனைப் பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே.
|
4
|
வேயன தோளி மலைம களைவி ரும்பிய மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை ஆயன சொல்லிநின் றார்கள் அல்ல லறுக்கினும் பேயனே பித்தனே என்ப ரால்எம் பிரானையே.
|
5
|
Go to top |
இறைவ னென்றெம் பெருமானை வானவர் ஏத்தப்போய்த் துறையொன் றித்தூ மலரிட் டடியிணை போற்றுவார் மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம் பிறையன்றிச் சூடுவ தில்லை யோஎம் பிரானுக்கே.
|
6
|
தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும் ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும் ஊரும்ஒன் றில்லை உலகெ லாம்உகப் பார்தொழப் பேரும்ஓ ராயிர மென்ப ரால்எம் பிரானுக்கே.
|
7
|
அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார் வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோஎம் பிரானுக்கே.
|
8
|
கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால் எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள் பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக் கரியின் உரியல்ல தில்லை யோஎம் பிரானுக்கே.
|
9
|
காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத் தீசனை ஊரன் எட்டோ டிரண்டு விரும்பிய ஆயின சீர்ப்பகை ஞானியப் பனடித் தொண்டன்றான் ஏசின பேசுமின் தொண்டர் காள்எம் பிரானையே.
|
10
|
Go to top |