தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச் சடைவிரித் தலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித் திருமுகம் மலர்ந்துசொட் டட்டக் கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
|
1
|
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே.
|
2
|
திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேற் புரிதரு மலரின் தாதுநின் றூதப் போய்வருந் தும்பிகாள் இங்கே கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வருதிறல் மணியம் பலவனைக் கண்டென் மனத்தையும் கொண்டுபோ துமினே.
|
3
|
தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும் செவிஅவன் அறிவுநூல் கேட்கும் மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள் விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே என்னும்என் மனனே.
|
4
|
தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந் துளங்கரைந் துருக்கும் கேழலும் புள்ளு மாகிநின் றிருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே.
|
5
|
Go to top |
என்செய்கோம் தோழி தோழிநீ துணையா இரவுபோம் பகல்வரு மாகில் அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரு மாறுகண் டயர்வன் கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மஞ்சணி மணியம் பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே.
|
6
|
தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும் சங்கமும் சகடையின் முழக்கும் குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.
|
7
|
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீ றின்னகை மழலை கங்கைகொங் கிதழி இளம்பிறை குழைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.
|
8
|
யாதுநீ நினைவ தெவரையா முடைய தெவர்களும் யாவையும் தானாய்ப் பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான் கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர் மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனம்புகுந் தானே.
|
9
|
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும் வெண்ணீறும் சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன் செய்வதென் தெளிபுனல் அலங்கற் கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங் கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர் வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே அறியும்என் மனமே.
|
10
|
Go to top |
கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க் ககலிரு விசும்பின் முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல் முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.
|
11
|