சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
5 - விடமடைசு வேலை (விநாயகர்) 542 - எழுகு நிறை நாபி (திருக்கழுக்குன்றம்) 686 - கரிய முகில் போலும் (திருவொற்றியூர்) Songs from this thalam விநாயகர் 687 - சொருபப் பிரகாச
5 விநாயகர் திருப்புகழ் ( - வாரியார் # 4 )
விடமடைசு வேலை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
Easy Version:
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம்
விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர்
வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது
கலவி தனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு
கழல் இணைகள் சேர அருள்வாயே
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத
கணபதி எனு நாமம் முறை கூற
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கடலும், தேவர் படையும், சூலாயுதமும்,
விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான
விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும்,
அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது,
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ...
சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும்
ஆகிய
இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ...
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக.
இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை
கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ...
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர்
ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்
அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
1
Similar songs:
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song