சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நிழல் மேய கறை பண் - குறிஞ்சி (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QK_9CQJKKMA |
5.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், பண் - திருக்குறுந்தொகை (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=X2PwqK7erCQ |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.085  
கல்லால் நிழல் மேய கறை
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருநல்லம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி )
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த, வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [1] |
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத் துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ, கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும் நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [2] |
அந்திமதியோடும் அரவச் சடை தாழ, முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி; சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [3] |
குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ, மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில், தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய், நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே. | [4] |
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித் துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த, நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [5] |
வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும் சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை ஈசன்! என உள்கி எழுவார் வினைகட்கு நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [6] |
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி, கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக, வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும் நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [7] |
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி, நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே. | [8] |
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும் போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும் ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும் நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே. | [9] |
குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர், அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே! பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும், நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே. | [10] |
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருநல்லம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு உமாமகேசுவரர் திருவடிகள் போற்றி )
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்! நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல் சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே. | [1] |
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே, துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ; தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன், நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே. | [2] |
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்! அணுக வேண்டில், அரன்நெறி ஆவது; நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.! | [3] |
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால், இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்; உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி- நமக்கு நல்லது-நல்லம் அடைவதே. | [4] |
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம், நரைவிடை உடையான் இடம் நல்லமே பரவுமின்! பணிமின்! பணிவாரொடே விரவுமின்! விரவாரை விடுமினே! | [5] |
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும், வல்ல ஆறு சிவாய நம என்று, நல்லம் மேவிய நாதன் அடி தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. | [6] |
மாதராரொடு, மக்களும், சுற்றமும், பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே, நாதன் மேவிய நல்லம் நகர் தொழப் போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே. | [7] |
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர், செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்; சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ, நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே! | [8] |
காலம் ஆன கழிவதன் முன்னமே, ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின் மாலும், மா மலரானொடு, மாமறை- நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே! | [9] |
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி, நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே. | [10] |