சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.017
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் பண் - நட்டபாடை (திருஇடும்பாவனம் சற்குணநாதர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ni1yUeyJIAI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.017  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்
பண் - நட்டபாடை (திருத்தலம் திருஇடும்பாவனம் ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு சற்குணநாதர் திருவடிகள் போற்றி )
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய், தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி, சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில் இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [1] |
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர், கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில் இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே. | [2] |
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை, ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர், கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே. | [3] |
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில், தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில், குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [4] |
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல் செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல், கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில் எந்தாய்! என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே. | [5] |
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி, அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி, குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில், எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே. | [6] |
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம் பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா, கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [7] |
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து, கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த, ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [8] |
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த் தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய், மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த, இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [9] |
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார், உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும், மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல் இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே. | [10] |
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே. | [11] |