சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆப்பனூர் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு அம்பிகையம்மை உடனுறை அருள்மிகு ஆப்பனூரீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ   Add audio link Add Audio
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


1


குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்
விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


2


முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


3


பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்
துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,
அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப்
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


4


தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


5


Go to top
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,
காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


6


இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


7


கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,
உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,
அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப்
பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.


8


கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.


9


செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.


10


Go to top
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆப்பனூர்
1.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முற்றும் சடை முடி மேல்
Tune - குறிஞ்சி   (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal pathigam no 1.088