![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
തേവാര അരുള് മുറൈത് തിരട്ടു
ഉമാപതി ചിവാചാരിയാര് ഇയറ്റിയ തിരുവരുട് പയന് പത്തു അതികാരങ്കളുക്കേറ്പ തൊണ്ണൂറ്റൊന്പതു തേവാരപ് പാക്കളൈ കൊണ്ടുള്ളതു.
1. പതിമുതു നിലൈ The Nature of The Supreme Lord
2 . ഉയിരവൈ നിലൈ The State of Souls
3. ഇരുണ് മല തിലൈ The Nature of The Impurity of Darkness :
4, അരുളതു നിലൈ The Nature of Grace
5. അരുളുരു നിലൈ The Form of Grace
6. അറിയുമ് നെറി The Way of Knowledge
7. ഉയിര് വിളക്കമ് The Soul’s Purification
8. ഇന്പുറു നിലൈ The State of Bliss
9. അഞ്ചെഴുത്തരുണിലൈ The State of Grace of The Five Letters
10. അണൈന്തോര് തന്മൈ The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് തോടു ഉടൈയ ചെവിയന്, വിടൈ
തോടു ഉടൈയ ചെവിയന്, വിടൈ ഏറി, ഓര് തൂ വെണ്മതി ചൂടി,
കാടു ഉടൈയ ചുടലൈപ് പൊടി പൂചി, എന് ഉള്ളമ് കവര് കള്വന്-
ഏടു ഉടൈയ മലരാന് മുനൈനാള് പണിന്തു ഏത്ത, അരുള്ചെയ്ത,
പീടുഉടൈയ പിരമാപുരമ് മേവിയ, പെമ്മാന്-ഇവന് അന്റേ!
[ 1]
2 1.003 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പത്തരോടു പലരുമ് പൊലിയ മലര്
കടലില് നഞ്ചമ് അമുതു ഉണ്ടു, ഇമൈയോര് തൊഴുതു ഏത്ത, നടമ് ആടി,
അടല് ഇലങ്കൈ അരൈയന് വലി ചെറ്റു അരുള് അമ്മാന് അമര് കോയില്
മടല് ഇലങ്കു കമുകിന്, പലവിന്, മതു വിമ്മുമ് വലി തായമ്
ഉടല് ഇലങ്കുമ് ഉയിര് ഉള്ളളവുമ് തൊഴ, ഉള്ളത്തുയര് പോമേ.
[ 8]
3 1.017 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് മനമ് ആര്തരു മടവാരൊടു മകിഴ്
നെറി നീര്മൈയര്, നീള് വാനവര്, നിനൈയുമ് നിനൈവു ആകി,
അറി നീര്മൈയില് എയ്തുമ് അവര്ക്കു അറിയുമ് അറിവു അരുളി,
കുറി നീര്മൈയര് കുണമ് ആര്തരു മണമ് ആര്തരു കുന്റില്,
എറി നീര് വയല് പുടൈ ചൂഴ്തരുമ് ഇടുമ്പാവനമ് ഇതുവേ.
[ 6]
4 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
പുവമ്, വളി, കനല്, പുനല്, പുവി, കലൈ, ഉരൈ മറൈ, തിരികുണമ്, അമര് നെറി,
തിവമ് മലിതരു ചുരര് മുതലിയര് തികഴ്തരുമ് ഉയിര് അവൈ, അവൈതമ
പവമ് മലി തൊഴില് അതു നിനൈവൊടു, പതുമ നല്മലര് അതു മരുവിയ
ചിവനതു ചിവപുരമ് നിനൈപവര് ചെഴു നിലനിനില് നിലൈപെറുവരേ.
[ 1]
5 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
മലൈ പല വളര് തരു പുവി ഇടൈ മറൈ തരു വഴി മലി മനിതര്കള്,
നിലൈ മലി ചുരര് മുതല് ഉലകുകള്, നിലൈ പെറു വകൈ നിനൈവൊടു മികുമ്
അലൈ കടല് നടുവു അറിതുയില് അമര് അരി ഉരുവു ഇയല് പരന് ഉറൈ പതി
ചിലൈ മലി മതില് ചിവപുരമ് നിനൈപവര് തിരു മകളൊടു തികഴ്വരേ.
[ 2]
6 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
പഴുതു ഇല കടല് പുടൈ തഴുവിയ പടി മുതലിയ ഉലകുകള്, മലി
കുഴുവിയ ചുരര്, പിറര്, മനിതര്കള്, കുലമ് മലിതരുമ് ഉയിര് അവൈ അവൈ
മുഴുവതുമ് അഴി വകൈ നിനൈവൊടു മുതല് ഉരുവു ഇയല് പരന് ഉറൈ പതി
ചെഴു മണി അണി ചിവപുരനകര് തൊഴുമവര് പുകഴ് മികുമ്, ഉലകിലേ.
[ 3]
7 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
നറൈ മലിതരുമ് അളറൊടു, മുകൈ, നകു മലര്, പുകൈ, മികു വളര് ഒളി,
നിറൈ പുനല് കൊടു, തനൈ നിനൈവൊടു നിയതമുമ് വഴിപടുമ് അടിയവര്
കുറൈവു ഇല പതമ് അണൈ തര അരുള് കുണമ് ഉടൈ ഇറൈ ഉറൈ വന പതി
ചിറൈ പുനല് അമര് ചിവപുരമ് അതു നിനൈപവര് ചെയമകള് തലൈവരേ.
[ 4]
8 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
ചിനമ് മലി അറുപകൈ മികു പൊറി ചിതൈ തരു വകൈ വളി നിറുവിയ
മനന് ഉണര്വൊടു മലര് മിചൈ എഴുതരു പൊരുള് നിയതമുമ് ഉണര്പവര്
തനതു എഴില് ഉരു അതു കൊടു അടൈ തകു പരന് ഉറൈവതു നകര് മതില്
കനമ് മരുവിയ ചിവപുരമ് നിനൈപവര് കലൈമകള് തര നികഴ്വരേ.
[ 5]
9 1.021 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുവമ്, വളി, കനല്, പുനല്,
ചുരുതികള് പല നല മുതല് കലൈ തുകള് അറു വകൈ പയില്വൊടു മികു
ഉരു ഇയല് ഉലകു അവൈ പുകഴ്തര, വഴി ഒഴുകുമ് മെയ് ഉറു പൊറി ഒഴി
അരുതവമ് മുയല്പവര്, തനതു അടി അടൈ വകൈ നിനൈ അരന് ഉറൈ പതി,
തിരു വളര് ചിവപുരമ്, നിനൈപവര് തികഴ് കുലന് നിലന് ഇടൈ നികഴുമേ.
[ 6]
10 1.042 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പൈമ് മാ നാകമ്, പല്മലര്ക്
നിലനൊടു വാനുമ് നീരൊടു തീയുമ് വായുവുമ് ആകി, ഓര് ഐന്തു
പുലനൊടു വെന്റു, പൊയ്മ്മൈകള് തീര്ന്ത പുണ്ണിയര് വെണ്പൊടിപ് പൂചി,
നലനൊടു തീങ്കുമ് താന് അലതു ഇന്റി, നന്കു എഴു ചിന്തൈയര് ആകി,
മലനൊടു മാചുമ് ഇല്ലവര് വാഴുമ് മല്കു പെരുന്തുറൈയാരേ.
[ 4]
11 1.045 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് തുഞ്ച വരുവാരുമ്, തൊഴുവിപ്പാരുമ്, വഴുവിപ്
തുഞ്ച വരുവാരുമ്, തൊഴുവിപ്പാരുമ്, വഴുവിപ് പോയ്
നെഞ്ചമ് പുകുന്തു എന്നൈ നിനൈവിപ്പാരുമ് മുനൈ നട്പു ആയ്
വഞ്ചപ്പടുത്തു ഒരുത്തി വാഴ്നാള് കൊള്ളുമ് വകൈ കേട്ടു,
അഞ്ചുമ് പഴൈയനൂര് ആലങ്കാട്ടു എമ് അടികളേ.
[ 1]
12 1.103 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് തോടു ഉടൈയാന് ഒരു കാതില്-തൂയ
വെള്ളമ് എല്ലാമ് വിരിചടൈമേല് ഓര് വിരികൊന്റൈ
കൊള്ള വല്ലാന്, കുരൈകഴല് ഏത്തുമ് ചിറു തൊണ്ടര്
ഉള്ളമ് എല്ലാമ് ഉള്കി നിന്റു ആങ്കേ ഉടന് ആടുമ്
കള്ളമ് വല്ലാന്, കാതല്ചെയ് കോയില് കഴുക്കുന്റേ.
[ 6]
13 1.126 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പന്തത്താല് വന്തു എപ്പാല് പയിന്റു
പത്തിപ് പേര് വിത്തിട്ടേ, പരന്ത ഐമ്പുലന്കള്വായ്പ്
പാലേ പോകാമേ കാവാ, പകൈ അറുമ് വകൈ നിനൈയാ,
മുത്തിക്കു ഏവി, കത്തേ മുടിക്കുമ് മുക്കുണങ്കള് വായ്
മൂടാ, ഊടാ, നാല് അന്തക്കരണമുമ് ഒരു നെറി ആയ്,
ചിത്തിക്കേ ഉയ്ത്തിട്ടു, തികഴ്ന്ത മെയ്പ് പരമ്പൊരുള്
ചേര്വാര്താമേ താനാകച് ചെയുമവന് ഉറൈയുമ് ഇടമ്
കത്തിട്ടോര് ചട്ടങ്കമ് കലന്തു ഇലങ്കുമ് നല്പൊരുള്
കാലേ ഓവാതാര് മേവുമ് കഴുമല വള നകരേ.
[ 7]
14 1.131 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് മെയ്ത്തു ആറുചുവൈയുമ്, ഏഴ് ഇചൈയുമ്,
മേനിയില് ചീവരത്താരുമ്, വിരിതരു തട്ടു ഉടൈയാരുമ്, വിരവല് ആകാ
ഊനികളായ് ഉള്ളാര് ചൊല് കൊള്ളാതു ഉമ് ഉള് ഉണര്ന്തു, അങ്കു ഉയ്മിന്,തൊണ്ടീര്!
ഞാനികളായ് ഉള്ളാര്കള് നാല്മറൈയൈ മുഴുതു ഉണര്ന്തു, ഐമ്പുലന്കള് ചെറ്റു,
മോനികളായ് മുനിച്ചെല്വര് തനിത്തു ഇരുന്തു തവമ് പുരിയുമ് മുതുകുന്റമേ.
[ 10]
15 1.132 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് ഏര് ഇചൈയുമ് വട-ആലിന്കീഴ് ഇരുന്തു,
അകന് അമര്ന്ത അന്പിനരായ്, അറുപകൈ ചെറ്റു,
ഐമ്പുലനുമ് അടക്കി, ഞാനപ്
പുകല് ഉടൈയോര്തമ് ഉള്ളപ് പുണ്ടരികത്തുള്
ഇരുക്കുമ് പുരാണര് കോയില്
തകവു ഉടൈ നീര് മണിത്തലത്തു, ചങ്കു ഉള വര്ക്കമ്
അന്തി തികഴ, ചലചത്തീയുള്,
മിക ഉടൈയ പുന്കു മലര്പ്പൊരി അട്ട,
മണമ് ചെയ്യുമ് മിഴലൈ ആമേ.
[ 6]
16 2.040 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് എമ്പിരാന്, എനക്കു അമുതമ് ആവാനുമ്,
എമ്പിരാന്, എനക്കു അമുതമ് ആവാനുമ്, തന് അടൈന്താര്
തമ്പിരാന് ആവാനുമ്, തഴല് ഏന്തു കൈയാനുമ്,
കമ്പ മാ കരി ഉരിത്ത കാപാലി, കറൈക്കണ്ടന്
വമ്പു ഉലാമ് പൊഴില് പിരമപുരത്തു ഉറൈയുമ് വാനവനേ.
[ 1]
17 2.086 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് ഉരൈയിനില് വന്ത പാവമ്, ഉണര്
വേറു ഉയര് വാഴ്വു തന്മൈ; വിനൈ; തുക്കമ്, മിക്ക പകൈ
തീര്ക്കുമ്; മേയ ഉടലില്
തേറിയ ചിന്തൈ വായ്മൈ തെളിവിക്ക, നിന്റ കരവൈക്
കരന്തു, തികഴുമ്
ചേറു ഉയര് പൂവിന് മേയ പെരുമാനുമ് മറ്റൈത് തിരുമാലുമ്
നേട, എരി ആയ്ച്
ചീറിയ ചെമ്മൈ ആകുമ് ചിവന് മേയ ചെല്വത് തിരു
നാരൈയൂര് കൈതൊഴവേ.
[ 9]
18 2.106 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് എന്ന പുണ്ണിയമ് ചെയ്തനൈ നെഞ്ചമേ!
അറിവു ഇലാത വന്ചമണര്കള്, ചാക്കിയര്, തവമ് പുരിന്തു അവമ് ചെയ്വാര്
നെറി അലാതന കൂറുവര്; മറ്റു അവൈ തേറന് മിന്! മാറാ നീര്
മറി ഉലാമ് തിരൈക് കാവിരി വലഞ്ചുഴി മരുവിയ പെരുമാനൈപ്
പിറിവു ഇലാതവര് പെറു കതി പേചിടില്, അളവു അറുപ്പു ഒണ്ണാതേ.
[ 10]
19 3.037 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് കരമ് മുനമ് മലരാല്, പുനല്
അടൈയലാര് പുരമ് ചീറി അന്തണര് ഏത്ത, മാ മടമാതൊടുമ്,
പെടൈ എലാമ് കടല് കാനല് പുല്കുമ് പിരമാപുരത്തു ഉറൈ കോയിലാന്;
തൊടൈയല് ആര് നറുങ്കൊന്റൈയാന് തൊഴിലേ പരവി നിന്റു ഏത്തിനാല്,
ഇടൈ ഇലാര്, ചിവലോകമ് എയ്തുതറ്കു; ഈതു കാരണമ് കാണ്മിനേ!
[ 4]
20 3.054 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് വാഴ്ക അന്തണര്, വാനവര്, ആന്
വെന്ത ചാമ്പല് വിരൈ എനപ് പൂചിയേ,
തന്തൈയാരൊടു തായ് ഇലര്; തമ്മൈയേ
ചിന്തിയാ എഴുവാര് വിനൈ തീര്പ്പരാല്;
എന്തൈയാര് അവര് എവ്വകൈയാര് കൊലോ!
[ 3]
21 3.054 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് വാഴ്ക അന്തണര്, വാനവര്, ആന്
ആട്പാലവര്ക്കു അരുളുമ് വണ്ണമുമ് ആതിമാണ്പുമ്
കേട്പാന് പുകില്, അളവു ഇല്ലൈ; കിളക്ക വേണ്ടാ;
കോള്പാലനവുമ് വിനൈയുമ് കുറുകാമൈ, എന്തൈ
താള്പാല് വണങ്കിത് തലൈനിന്റു ഇവൈ കേട്ക, തക്കാര്
[ 4]
22 3.054 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് വാഴ്ക അന്തണര്, വാനവര്, ആന്
ഏതുക്കളാലുമ് എടുത്ത മൊഴിയാലുമ് മിക്കുച്
ചോതിക്ക വേണ്ടാ; ചുടര്വിട്ടു ഉളന്, എങ്കള് ചോതി;
മാ തുക്കമ് നീങ്കല് ഉറുവീര്, മനമ്പറ്റി വാഴ്മിന്!
ചാതുക്കള് മിക്കീര്, ഇറൈയേ വന്തു ചാര്മിന്കളേ
[ 5]
23 3.119 - തിരുഞാനചമ്പന്ത ചുവാമികള് പുള്ളിത്തോല് ആടൈ; പൂണ്പതു നാകമ്;
താങ്ക(അ)രുങ് കാലമ് തവിര വന്തു ഇരുവര് തമ്മൊടുമ്
കൂടിനാര് അങ്കമ്
പാങ്കിനാല്-തരിത്തുപ് പണ്ടു പോല് എല്ലാമ് പണ്ണിയ
കണ്നുതല് പരമര്
തേമ് കൊള് പൂങ് കമുകു, തെങ്കു, ഇളങ് കൊടി, മാ,
ചെണ്പകമ്, വണ് പലാ, ഇലുപ്പൈ,
വേങ്കൈ, പൂ മകിഴാല്, വെയില് പുകാ വീഴിമിഴലൈയാന്
എന, വിനൈ കെടുമേ.
[ 4]
24 4.005 - തിരുനാവുക്കരചര് മെയ് എലാമ് വെണ് നീറു
തുന്നാകത്തേന് ആകി, തുര്ച്ചനവര് ചൊല് കേട്ടു, തുവര് വായ്ക്കൊണ്ടു(വ്)
എന്നാകത് തിരിതന്തു, ഈങ്കു ഇരുകൈ ഏറ്റിട ഉണ്ടേന്, ഏഴൈയേന് നാന്,
പൊന് ആകത്തു അടിയേനൈപ് പുകപ് പെയ്തു പൊരുട്പടുത്ത ആരൂരരൈ
എന് ആകത്തു ഇരുത്താതേ,-ഏതന് പോര്ക്കു ആതനായ് അകപ്പട്ടേനേ!
[ 5]
25 4.008 - തിരുനാവുക്കരചര് ചിവന് എനുമ് ഓചൈ അല്ലതു,
വിരി കതിര് ഞായിറു അല്ലര്; മതി അല്ലര്; വേത വിതി അല്ലര്; വിണ്ണുമ് നിലനുമ്
തിരി തരു വായു അല്ലര്; ചെറു തീയുമ് അല്ലര്; തെളി നീരുമ് അല്ലര്, തെരിയില്;
അരി തരു കണ്ണിയാളൈ ഒരു പാകമ് ആക, അരുള് കാരണത്തില് വരുവാര്
എരി അരവു ആരമ് മാര്പര്; ഇമൈയാരുമ് അല്ലര്; ഇമൈപ്പാരുമ് അല്ലര്, ഇവരേ.
[ 2]
26 4.025 - തിരുനാവുക്കരചര് വെണ് നിലാ മതിയമ് തന്നൈ
എല്ലിയുമ് പകലുമ് എല്ലാമ് തുഞ്ചുവേറ്കു ഒരുവര് വന്തു
പുല്ലിയ മനത്തുക് കോയില് പുക്കനര്; കാമന് എന്നുമ്
വില്ലി ഐങ്കണൈയിനാനൈ വെന്തു ഉക നോക്കിയിട്ടാര്
അല്ലി അമ് പഴന വേലി അതികൈവീരട്ടനാരേ.
[ 8]
27 4.026 - തിരുനാവുക്കരചര് നമ്പനേ! എങ്കള് കോവേ! നാതനേ!
ഉറു കയിറു ഊചല് പോല ഒന്റു വിട്ടു ഒന്റു പറ്റി,
മറു കയിറു ഊചല് പോല വന്തുവന്തു ഉലവുമ്, നെഞ്ചമ്;
പെറു കയിറു ഊചല് പോലപ് പിറൈ പുല്കു ചടൈയായ്! പാതത്തു
അറു കയിറു ഊചല് ആനേന് അതികൈവീരട്ടനീരേ!
[ 6]
28 4.026 - തിരുനാവുക്കരചര് നമ്പനേ! എങ്കള് കോവേ! നാതനേ!
കഴിത്തിലേന്; കാമവെന്നോയ്; കാതന്മൈ എന്നുമ് പാചമ്
ഒഴിത്തിലേന്; ഊന് കണ് നോക്കി ഉണര്വു എനുമ് ഇമൈ തിറന്തു
വിഴിത്തിലേന്; വെളിറു തോന്റ വിനൈ എനുമ് ചരക്കുക് കൊണ്ടേന്;
അഴിത്തിലേന്; അയര്ത്തുപ് പോനേന് അതികൈ വീരട്ടനീരേ!
[ 7]
29 4.029 - തിരുനാവുക്കരചര് ഊനിനുള് ഉയിരൈ വാട്ടി ഉണര്വിനാര്ക്കു
ഊനിനുള് ഉയിരൈ വാട്ടി ഉണര്വിനാര്ക്കു എളിയര് ആകി,
വാനിനുള് വാനവര്ക്കുമ് അറിയല് ആകാത വഞ്ചര്;
നാന് എനില്-താനേ എന്നുമ് ഞാനത്താര്; പത്തര് നെഞ്ചുള്
തേനുമ് ഇന് അമുതുമ് ആനാര്-തിരുച് ചെമ്പൊന്പള്ളിയാരേ
[ 1]
30 4.031 - തിരുനാവുക്കരചര് പൊള്ളത്ത കായമ് ആയ പൊരുളിനൈ,
പഴി ഉടൈ യാക്കൈ തന്നില് പാഴുക്കേ നീര് ഇറൈത്തു
വഴി ഇടൈ വാഴമാട്ടേന്; മായമുമ് തെളിയകില്ലേന്;
അഴിവു ഉടൈത്തു ആയ വാഴ്ക്കൈ ഐവരാല് അലൈക്കപ്പട്ടുക്
കഴി ഇടൈത് തോണി പോന്റേന് കടവൂര്വീരട്ടനീരേ!
[ 6]
31 4.032 - തിരുനാവുക്കരചര് ഉരിത്തിട്ടാര്; ആനൈയിന് തോല് ഉതിര
പുലന്കളൈപ് പോക നീക്കി, പുന്തിയൈ ഒരുങ്ക വൈത്തു(വ്)
ഇനങ്കളൈപ് പോക നിന്റു, ഇരണ്ടൈയുമ് നീക്കി, ഒന്റു ആയ്
മലങ്കളൈ മാറ്റ വല്ലാര് മനത്തിനുള് പോകമ് ആകിച്
ചിനങ്കളൈക് കളൈവര് പോലുമ്-തിരുപ് പയറ്റൂരനാരേ.
[ 9]
32 4.033 - തിരുനാവുക്കരചര് ഇന്തിരനോടു തേവര് ഇരുടികള് ഏത്തുകിന്റ ചുന്തരമ്
കാല് കൊടുത്തു, ഇരുകൈ ഏറ്റി, കഴി നിരൈത്തു, ഇറൈച്ചി മേയ്ന്തു
തോല് മടുത്തു, ഉതിര നീരാല് ചുവര് എടുത്തു, ഇരണ്ടുവാചല്
ഏല്വു ഉടൈത്താ അമൈത്തു, അങ്കു ഏഴുചാലേകമ് പണ്ണി,
മാല് കൊടുത്തു, ആവി വൈത്താര്-മാ മറൈക്കാടനാരേ.
[ 4]
33 4.063 - തിരുനാവുക്കരചര് ഓതി മാ മലര്കള് തൂവി-ഉമൈയവള്
ഉരുവമുമ് ഉയിരുമ് ആകി, ഓതിയ ഉലകുക്കു എല്ലാമ്
പെരു വിനൈ പിറപ്പു വീടു ആയ്, നിന്റ എമ് പെരുമാന്! മിക്ക
അരുവി പൊന് ചൊരിയുമ് അണ്ണാമലൈ ഉളായ്! അണ്ടര്കോവേ!
മരുവി നിന് പാതമ് അല്ലാല് മറ്റു ഒരു മാടു ഇലേനേ.
[ 3]
34 4.067 - തിരുനാവുക്കരചര് വരൈകിലേന്, പുലന്കള് ഐന്തുമ്; വരൈകിലാപ്
വരൈകിലേന്, പുലന്കള് ഐന്തുമ്; വരൈകിലാപ് പിറവി മായപ്
പുരൈയുളേ അടങ്കി നിന്റു പുറപ്പടുമ് വഴിയുമ് കാണേന്;
അരൈയിലേ മിളിരുമ് നാകത്തു അണ്ണലേ! അഞ്ചല്! എന്നായ്
തിരൈ ഉലാമ് പഴന വേലിത് തിരുക്കൊണ്ടീച്ചുരത്തു ഉളാനേ!
[ 1]
35 4.067 - തിരുനാവുക്കരചര് വരൈകിലേന്, പുലന്കള് ഐന്തുമ്; വരൈകിലാപ്
പൊക്കമ് ആയ് നിന്റ പൊല്ലാപ് പുഴു മിടൈ മുടൈ കൊള് ആക്കൈ
തൊക്കു നിന്റു ഐവര് തൊണ്ണൂറ്റു അറുവരുമ് തുയക്കമ് എയ്ത,
മിക്കു നിന്റു ഇവര്കള് ചെയ്യുമ് വേതനൈക്കു അലന്തു പോനേന്
ചെക്കരേ തികഴുമ് മേനിത് തിരുക്കൊണ്ടീച്ചുരത്തു ഉളാനേ!
[ 5]
36 4.075 - തിരുനാവുക്കരചര് തൊണ്ടനേന് പട്ടതു എന്നേ! തൂയ
കള്ളനേന് കള്ളത് തൊണ്ടു ആയ്ക് കാലത്തൈക് കഴിത്തുപ് പോക്കി,
തെള്ളിയേന് ആകി നിന്റു തേടിനേന്; നാടിക് കണ്ടേന്;
ഉള്കുവാര് ഉള്കിറ്റു എല്ലാമ് ഉടന് ഇരുന്തു അറിതി എന്റു
വെള്കിനേന്; വെള്കി, നാനുമ് വിലാ ഇറച് ചിരിത്തിട്ടനേ!
[ 3]
37 4.075 - തിരുനാവുക്കരചര് തൊണ്ടനേന് പട്ടതു എന്നേ! തൂയ
ഉടമ്പു എനുമ് മനൈ അകത്തു(വ്), ഉള്ളമേ തകളി ആക,
മടമ് പടുമ് ഉണര് നെയ് അട്ടി, ഉയിര് എനുമ് തിരി മയക്കി,
ഇടമ് പടു ഞാനത്തീയാല് എരികൊള ഇരുന്തു നോക്കില്,
കടമ്പു അമര് കാളൈ താതൈ കഴല് അടി കാണല് ആമേ.
[ 4]
38 4.075 - തിരുനാവുക്കരചര് തൊണ്ടനേന് പട്ടതു എന്നേ! തൂയ
വെള്ള നീര്ച് ചടൈയനാര് താമ് വിനവുവാര് പോല വന്തു, എന്
ഉള്ളമേ പുകുന്തു നിന്റാര്ക്കു, ഉറങ്കുമ് നാന് പുടൈകള് പേര്ന്തു
കള്ളരോ, പുകുന്തീര്? എന്ന, കലന്തു താന് നോക്കി, നക്കു,
വെള്ളരോമ്! എന്റു, നിന്റാര്-വിളങ്കു ഇളമ്പിറൈയനാരേ.
[ 9]
39 4.076 - തിരുനാവുക്കരചര് മരുള് അവാ മനത്തന് ആകി
മെയ്മ്മൈ ആമ് ഉഴവൈച് ചെയ്തു, വിരുപ്പു എനുമ് വിത്തൈ വിത്തി,
പൊയ്മ്മൈ ആമ് കളൈയൈ വാങ്കി, പൊറൈ എനുമ് നീരൈപ് പായ്ച്ചി,
തമ്മൈയുമ് നോക്കിക് കണ്ടു, തകവു എനുമ് വേലി ഇട്ടു,
ചെമ്മൈയുള് നിറ്പര് ആകില്, ചിവകതി വിളൈയുമ് അന്റേ!
[ 2]
40 4.076 - തിരുനാവുക്കരചര് മരുള് അവാ മനത്തന് ആകി
വിള്ളത്താന് ഒന്റു മാട്ടേന്; വിരുപ്പു എനുമ് വേട്കൈയാലേ
വള്ളത് തേന് പോല നുന്നൈ വായ് മടുത്തു ഉണ്ടിടാമേ,
ഉള്ളത്തേ നിറ്റിയേനുമ്, ഉയിര്പ്പുളേ വരുതിയേനുമ്,
കള്ളത്തേ നിറ്റി; അമ്മാ! എങ്ങനമ് കാണുമ് ആറേ?
[ 7]
41 4.077 - തിരുനാവുക്കരചര് കടുമ്പകല് നട്ടമ് ആടി, കൈയില്
പുള്ളുവര് ഐവര് കള്വര് പുനത്തു ഇടൈപ് പുകുന്തു നിന്റു
തുള്ളുവര്, ചൂറൈ കൊള്വര്; തൂ നെറി വിളൈയ ഒട്ടാര്
മുള് ഉടൈയവര്കള് തമ്മൈ മുക്കണാന് പാത നീഴല്
ഉള് ഇടൈ മറൈന്തു നിന്റു, അങ്കു ഉണര്വിനാല് എയ്യല് ആമേ.
[ 5]
42 4.078 - തിരുനാവുക്കരചര് വെന്റിലേന്, പുലന്കള് ഐന്തുമ്; വെന്റവര്
മാട്ടിനേന്, മനത്തൈ മുന്നേ; മറുമൈയൈ ഉണര മാട്ടേന്;
മൂട്ടി, നാന്, മുന്നൈ നാളേ മുതല്വനൈ വണങ്ക മാട്ടേന്;
പാട്ടു ഇല് നായ് പോല നിന്റു പറ്റു അതു ആമ് പാവമ് തന്നൈ;
ഈട്ടിനേന്; കളൈയ മാട്ടേന് എന് ചെയ്വാന് തോന്റിനേനേ!
[ 3]
43 4.095 - തിരുനാവുക്കരചര് വാന് ചൊട്ടച്ചൊട്ട നിന്റു അട്ടുമ്
അലൈക്കിന്റ നീര്, നിലമ്, കാറ്റു, അനല് അമ്പരമ്, ആകി നിന്റീര്
കലൈക്കന്റു ചേരുമ് കരത്തീര്! കലൈപ്പൊരുള് ആകി നിന്റീര്
വിലക്കു ഇന്റി നല്കുമ് മിഴലൈ ഉള്ളീര് മെയ്യില് കൈയൊടു കാല്
കുലൈക്കിന്റു നുമ്മൈ മറക്കിനുമ്, എന്നൈക് കുറിക്കൊണ്മിനേ!
[ 3]
44 4.095 - തിരുനാവുക്കരചര് വാന് ചൊട്ടച്ചൊട്ട നിന്റു അട്ടുമ്
തോള് പട്ട നാകമുമ്, ചൂലമുമ്, ചുത്തിയുമ്, പത്തിമൈയാല്
മേറ്പട്ട അന്തണര് വീഴിയുമ്, എന്നൈയുമ് വേറു ഉടൈയീര്
നാള് പട്ടു വന്തു പിറന്തേന്, ഇറക്ക, നമന് തമര്തമ്
കോള്പട്ടു നുമ്മൈ മറക്കിനുമ്, എന്നൈക് കുറിക്കൊണ്മിനേ!
[ 5]
45 4.095 - തിരുനാവുക്കരചര് വാന് ചൊട്ടച്ചൊട്ട നിന്റു അട്ടുമ്
കണ്ടിയില് പട്ട കഴുത്തു ഉടൈയീര്! കരികാട്ടില് ഇട്ട
പണ്ടിയില് പട്ട പരികലത്തീര്! പതിവീഴി കൊണ്ടീര്
ഉണ്ടിയില്, പട്ടിനി, നോയില്, ഉറക്കത്തില്,-ഉമ്മൈ, ഐവര്
കൊണ്ടിയില് പട്ടു മറക്കിനുമ്, എന്നൈക് കുറിക്കൊണ്മിനേ!
[ 6]
46 4.097 - തിരുനാവുക്കരചര് അട്ടുമിന്, ഇല് പലി! എന്റു
ചെഞ്ചുടര്ച് ചോതിപ് പവളത്തിരള് തികഴ് മുത്തു അനൈയ,
നഞ്ചു അണി കണ്ടന്, നല്ലൂര് ഉറൈ നമ്പനൈ, നാന് ഒരു കാല്
തുഞ്ചു ഇടൈക് കണ്ടു കനവിന് തലൈത് തൊഴുതേറ്കു അവന് താന്
നെഞ്ചു ഇടൈ നിന്റു അകലാന്, പലകാലമുമ് നിന്റനനേ.
[ 4]
47 4.100 - തിരുനാവുക്കരചര് മന്നുമ് മലൈമകള് കൈയാല് വരുടിന;
കീണ്ടുമ് കിളര്ന്തുമ് പൊന് കേഴല് മുന് തേടിന; കേടു പടാ
ആണ്ടുമ് പലപലഊഴിയുമ് ആയിന; ആരണത്തിന്
വേണ്ടുമ് പൊരുള്കള് വിളങ്ക നിന്റു ആടിന; മേവു ചിലമ്പു
ഈണ്ടുമ് കഴലിന-ഇന്നമ്പരാന്തന് ഇണൈ അടിയേ.
[ 6]
48 4.113 - തിരുനാവുക്കരചര് പവളത്തടവരൈ പോലുമ്, തിണ്തോള്കള്; അത്
പന്തിത്ത പാവങ്കള് ഉമ്മൈയില് ചെയ്തന ഇമ്മൈ വന്തു
ചന്തിത്ത പിന്നൈച് ചമഴ്പ്പതു എന്നേ-വന്തു അമരര് മുന്നാള്
മുന്തിച് ചെഴുമലര് ഇട്ടു, മുടി താഴ്ത്തു, അടി വണങ്കുമ്
നന്തിക്കു മുന്തു ഉറ ആട്ചെയ്കിലാ വിട്ട നന് നെഞ്ചമേ?
[ 4]
49 5.012 - തിരുനാവുക്കരചര് കരൈന്തു കൈ തൊഴുവാരൈയുമ് കാതലന്;
എടുത്ത വെല് കൊടി ഏറു ഉടൈയാന് തമര്
ഉടുപ്പര്, കോവണമ്; ഉണ്പതു പിച്ചൈയേ
കെടുപ്പതു ആവതു, കീഴ് നിന്റ വല്വിനൈ;
വിടുത്തുപ് പോവതു, വീഴിമിഴലൈക്കേ.
[ 5]
50 5.013 - തിരുനാവുക്കരചര് എന് പൊനേ! ഇമൈയോര് തൊഴു
കരുവനേ! കരു ആയ്ത് തെളിവാര്ക്കു എലാമ്
ഒരുവനേ! ഉയിര്പ്പു ആയ് ഉണര്വു ആയ് നിന്റ
തിരുവനേ! തിരു വീഴിമിഴലൈയുള്
കുരുവനേ!-അടിയേനൈക് കുറിക്കൊളേ!
[ 5]
51 5.046 - തിരുനാവുക്കരചര് തുന്നക് കോവണ, ചുണ്ണവെണ് നീറു
വിണ്ണിന് ആര് മതി ചൂടിയ വേന്തനൈ
എണ്ണി, നാമങ്കള് ഓതി, എഴുത്തു അഞ്ചുമ്
കണ്ണിനാല്, കഴല് കാണ്പു ഇടമ് ഏതു എനില്,
പുണ്ണിയന് പുകലൂരുമ് എന് നെഞ്ചുമേ!
[ 5]
52 5.048 - തിരുനാവുക്കരചര് പൂമേലാനുമ് പൂമകള് കേള്വനുമ് നാമേ
പൊറിപ് പുലന്കളൈപ് പോക്കു അറുത്തു, ഉള്ളത്തൈ
നെറിപ്പടുത്തു, നിനൈന്തവര് ചിന്തൈയുള്
അറിപ്പു ഉറുമ്(മ്) അമുതു ആയവന് ഏകമ്പമ്
കുറിപ്പിനാല്, ചെന്റു, കൂടി, തൊഴുതുമേ.
[ 4]
53 5.050 - തിരുനാവുക്കരചര് എങ്കേ എന്ന, ഇരുന്ത ഇടമ്
യാതേ ചെയ്തുമ്, യാമ് അലോമ്; നീ എന്നില്,
ആതേ ഏയുമ്; അളവു ഇല് പെരുമൈയാന്
മാ തേവു ആകിയ വായ്മൂര് മരുവിനാര്-
പോതേ! എന്റുമ്, പുകുന്തതുമ്, പൊയ്കൊലോ?
[ 6]
54 5.060 - തിരുനാവുക്കരചര് ഏതുമ് ഒന്റുമ് അറിവു ഇലര്
ഏതുമ് ഒന്റുമ് അറിവു ഇലര് ആയിനുമ്,
ഓതി അഞ്ചു എഴുത്തുമ്(മ്) ഉണര്വാര്കട്കുപ്
പേതമ് ഇന്റി, അവര് അവര് ഉള്ളത്തേ
മാതുമ് താമുമ് മകിഴ്വര്, മാറ്പേറരേ.
[ 1]
55 5.091 - തിരുനാവുക്കരചര് ഏ ഇലാനൈ, എന് ഇച്ചൈ
തെള്ളത് തേറിത് തെളിന്തു തിത്തിപ്പതു ഓര്
ഉള്ളത് തേറല്; അമുത ഒളി; വെളി;
കള്ളത്തേന്, കടിയേന്, കവലൈക്കടല്-
വെള്ളത്തേനുക്കു എവ്വാറു വിളൈന്തതേ?
[ 9]
56 5.093 - തിരുനാവുക്കരചര് കാചനൈ, കനലൈ, കതിര് മാ
ഈചന്, ഈചന് എന്റു എന്റുമ് അരറ്റുവന്;
ഈചന് താന് എന് മനത്തില് പിരിവു ഇലന്;
ഈചന് തന്നൈയുമ് എന് മനത്തുക് കൊണ്ടു(വ്),
ഈചന് തന്നൈയുമ് യാന് മറക്കിറ്പനേ?
[ 3]
57 5.093 - തിരുനാവുക്കരചര് കാചനൈ, കനലൈ, കതിര് മാ
തുഞ്ചുമ് പോതുമ് ചുടര്വിടു ചോതിയൈ,
നെഞ്ചുള് നിന്റു നിനൈപ്പിക്കുമ് നീതിയൈ,
നഞ്ചു കണ്ടത്തു അടക്കിയ നമ്പനൈ,
വഞ്ചനേന് ഇനി യാന് മറക്കിറ്പനേ?
[ 8]
58 5.097 - തിരുനാവുക്കരചര് ചിന്തിപ്പാര് മനത്താന്, ചിവന്, ചെഞ്ചുടര്
ചരണമ് ആമ് പടിയാര് പിറര് യാവരോ?
കരണമ് തീര്ത്തു ഉയിര് കൈയില് ഇകഴ്ന്ത പിന്,
മരണമ് എയ്തിയപിന്, നവൈ നീക്കുവാന്
അരണമ് മൂ എയില് എയ്തവന് അല്ലനേ?
[ 17]
59 5.097 - തിരുനാവുക്കരചര് ചിന്തിപ്പാര് മനത്താന്, ചിവന്, ചെഞ്ചുടര്
അണ്ടമ് ആര് ഇരുള് ഊടു കടന്തു ഉമ്പര്
ഉണ്ടുപോലുമ്, ഓര് ഒണ്ചുടര്; അച് ചുടര്
കണ്ടു ഇങ്കു ആര് അറിവാര്? അറിവാര് എലാമ്,
വെണ് തിങ്കള് കണ്ണി വേതിയന് എന്പരേ.
[ 2]
60 6.001 - തിരുനാവുക്കരചര് അരിയാനൈ, അന്തണര് തമ് ചിന്തൈ
അരുന്തുണൈയൈ; അടിയാര് തമ് അല്ലല് തീര്ക്കുമ്
അരുമരുന്തൈ; അകല് ഞാലത്തു അകത്തുള് തോന്റി
വരുമ് തുണൈയുമ് ചുറ്റമുമ് പറ്റുമ് വിട്ടു, വാന്
പുലന്കള് അകത്തു അടക്കി, മടവാരോടുമ്
പൊരുന്തു അണൈമേല് വരുമ് പയനൈപ് പോക മാറ്റി,
പൊതു നീക്കി, തനൈ നിനൈയ വല്ലോര്ക്കു എന്റുമ്
പെരുന്തുണൈയൈ; പെരുമ്പറ്റപ്പുലിയൂരാനൈ;- പേചാത
നാള് എല്ലാമ് പിറവാ നാളേ.
[ 5]
61 6.013 - തിരുനാവുക്കരചര് കൊടി മാട നീള് തെരുവു
മുറ്റു ഒരുവര് പോല മുഴു നീറു ആടി, മുളൈത്തിങ്കള് ചൂടി, മുന്നൂലുമ് പൂണ്ടു,
ഒറ്റു ഒരുവര് പോല ഉറങ്കുവേന് കൈ ഒളി വളൈയൈ ഒന്റു ഒന്റാ എണ്ണുകിന്റാര്;
മറ്റു ഒരുവര് ഇല്ലൈ, തുണൈ എനക്കു; മാല് കൊണ്ടാല് പോല മയങ്കുവേറ്കു,
പുറ്റു അരവക് കച്ചു ആര്ത്തുപ് പൂതമ് ചൂഴ, പുറമ്പയമ് നമ് ഊര് എന്റു പോയിനാരേ!
[ 2]
62 6.013 - തിരുനാവുക്കരചര് കൊടി മാട നീള് തെരുവു
നഞ്ചു അടൈന്ത കണ്ടത്തര്, വെണ് നീറു ആടി, നല്ല പുലി അതള്മേല് നാകമ് കട്ടി,
പഞ്ചു അടൈന്ത മെല്വിരലാള് പാകമ് ആക,
പരായ്ത്തുറൈയേന് എന്റു ഓര് പവള വണ്ണര്
തുഞ്ചു ഇടൈയേ വന്തു, തുടിയുമ് കൊട്ട,
തുണ്ണെന്റു എഴുന്തിരുന്തേന്; ചൊല്ലമാട്ടേന്;
പുന്ചടൈയിന്മേല് ഓര് പുനലുമ് ചൂടി, പുറമ്പയമ് നമ് ഊര് എന്റു പോയിനാരേ!
[ 6]
63 6.019 - തിരുനാവുക്കരചര് മുളൈത്താനൈ, എല്ലാര്ക്കുമ് മുന്നേ തോന്റി;
വാനമ്, ഇതു, എല്ലാമ് ഉടൈയാന് തന്നൈ; വരി അരവക് കച്ചാനൈ; വന്പേയ് ചൂഴക്
കാനമ് അതില് നടമ് ആട വല്ലാന് തന്നൈ, കടൈക് കണ്ണാല് മങ്കൈയൈയുമ് നോക്കാ; എന്മേല്
ഊനമ് അതു എല്ലാമ് ഒഴിത്താന് തന്നൈ; ഉണര്വു ആകി അടിയേനതു ഉള്ളേ നിന്റ
തേന് അമുതൈ;-തെന്കൂടല്-തിരു ആലവാ അയ്ച് ചിവന് അടിയേ ചിന്തിക്കപ് പെറ്റേന്, നാനേ.
[ 4]
64 6.020 - തിരുനാവുക്കരചര് ആതിക്കണ്ണാന് മുകത്തില് ഒന്റു ചെന്റു(വ്)
കുലമ് കൊടുത്തുക് കോള് നീക്ക വല്ലാന് തന്നൈ, കുലവരൈയിന് മടപ്പാവൈ ഇടപ്പാലാനൈ,
മലമ് കെടുത്തു മാ തീര്ത്തമ് ആട്ടിക് കൊണ്ട മറൈയവനൈ, പിറൈ തവഴ് ചെഞ്ചടൈയിനാനൈ
ചലമ് കെടുത്തുത് തയാ മൂല തന്മമ് എന്നുമ്
തത്തുവത്തിന് വഴി നിന്റു താഴ്ന്തോര്ക്കു എല്ലാമ്
നലമ് കൊടുക്കുമ് നമ്പിയൈ, നള്ളാറ്റാനൈ,-നാന് അടിയേന് നിനൈക്കപ് പെറ്റു ഉയ്ന്ത ആറേ!.
[ 6]
65 6.025 - തിരുനാവുക്കരചര് ഉയിരാ വണമ് ഇരുന്തു, ഉറ്റു
ഉയിരാ വണമ് ഇരുന്തു, ഉറ്റു നോക്കി, ഉള്ളക്കിഴിയിന് ഉരു എഴുതി,
ഉയിര് ആവണമ് ചെയ്തിട്ടു, ഉന് കൈത് തന്താല്, ഉണരപ്പടുവാരോടു ഒട്ടി, വാഴ്തി;
അയിരാവണമ് ഏറാതു, ആന് ഏറു ഏറി, അമരര് നാടു ആളാതേ, ആരൂര് ആണ്ട
അയിരാവണമേ! എന് അമ്മാനേ! നിന് അരുള് കണ്ണാല് നോക്കാതാര് അല്ലാതാരേ.
[ 1]
66 6.025 - തിരുനാവുക്കരചര് ഉയിരാ വണമ് ഇരുന്തു, ഉറ്റു
കരു ആകി, കുഴമ്പി(ഇ)ഇരുന്തു, കലിത്തു, മൂളൈക് കരു നരമ്പുമ് വെള് എലുമ്പുമ് ചേര്ന്തു ഒന്റു ആകി,
ഉരു ആകിപ് പുറപ്പട്ടു, ഇങ്കു ഒരുത്തി തന്നാല് വളര്ക്കപ്പട്ടു, ഉയിരാരുമ് കടൈ പോകാരാല്;
മരുവുആകി, നിന് അടിയേ, മറവേന്; അമ്മാന്!
മറിത്തു ഒരു കാല് പിറപ്പു ഉണ്ടേല്, മറവാ വണ്ണമ്,-
തിരു ആരൂര് മണവാളാ! തിരുത് തെങ്കൂരായ്! ചെമ്പൊന് ഏകമ്പനേ!- തികൈത്തിട്ടേനേ.
[ 6]
67 6.025 - തിരുനാവുക്കരചര് ഉയിരാ വണമ് ഇരുന്തു, ഉറ്റു
മുന്നമ് അവനുടൈയ നാമമ് കേട്ടാള്; മൂര്ത്തി അവന് ഇരുക്കുമ് വണ്ണമ് കേട്ടാള്;
പിന്നൈ അവനുടൈയ ആരൂര് കേട്ടാള്; പെയര്ത്തുമ് അവനുക്കേ പിച്ചി ആനാള്;
അന്നൈയൈയുമ് അത്തനൈയുമ് അന്റേ നീത്താള്; അകന്റാള്, അകലിടത്താര് ആചാരത്തൈ;
തന്നൈ മറന്താള്; തന് നാമമ് കെട്ടാള്; തലൈപ്പട്ടാള്, നങ്കൈ തലൈവന് താളേ!.
[ 7]
68 6.027 - തിരുനാവുക്കരചര് പൊയ്മ് മായപ്പെരുങ്കടലില് പുലമ്പാനിന്റ
ഉന് ഉരുവിന് ചുവൈ ഒളി ഊറു ഓചൈ നാറ്റത്തു ഉറുപ്പിനതു കുറിപ്പു ആകുമ് ഐവീര്! നുങ്കള്
മന് ഉരുവത്തു ഇയറ്കൈകളാല് ചുവൈപ്പീര്ക്കു, ഐയോ! വൈയകമേ പോതാതേ, യാനേല്, വാനോര്
പൊന് ഉരുവൈ, തെന് ആരൂര് മന്നു കുന്റൈ,
പുവിക്കു എഴില് ആമ് ചിവക്കൊഴുന്തൈ, പുകുന്തു എന് ചിന്തൈ
തന് ഉരുവൈത് തന്തവനൈ, എന്തൈ തന്നൈ, തലൈപ്പടുവേന്; തുലൈപ് പടുപ്പാന് തരുക്കേന്മി(ന്)നേ!.
[ 4]
69 6.031 - തിരുനാവുക്കരചര് ഇടര് കെടുമ് ആറു എണ്ണുതിയേല്,
നിലൈ പെറുമാറു എണ്ണുതിയേല്, നെഞ്ചേ! നീ വാ! നിത്തലുമ് എമ്പിരാനുടൈയ കോയില് പുക്കു,
പുലര്വതന് മുന് അലകിട്ടു, മെഴുക്കുമ് ഇട്ടു, പൂമാലൈ പുനൈന്തു ഏത്തി, പുകഴ്ന്തു പാടി,
തലൈ ആരക് കുമ്പിട്ടു, കൂത്തുമ് ആടി, ചങ്കരാ, ചയ! പോറ്റി പോറ്റി! എന്റുമ്,
അലൈ പുനല് ചേര് ചെഞ്ചടൈ എമ് ആതീ! എന്റുമ്, ആരൂരാ! എന്റു എന്റേ, അലറാ നില്ലേ!.
[ 3]
70 6.035 - തിരുനാവുക്കരചര് തൂണ്ടു ചുടര് മേനിത് തൂനീറു
പാതമ് തനിപ് പാര്മേല് വൈത്ത പാതര്; പാതാളമ് ഏഴ് ഉരുവപ് പായ്ന്ത പാതര്;
ഏതമ് പടാ വണ്ണമ് നിന്റ പാതര്; ഏഴ് ഉലകുമ് ആയ് നിന്റ ഏകപാതര്;
ഓതത്തു ഒലി മടങ്കി, ഊര് ഉണ്ടു ഏറി, ഒത്തു ഉലകമ് എല്ലാമ് ഒടുങ്കിയ(പ്)പിന്,
വേതത്തു ഒലി കൊണ്ടു, വീണൈ കേട്പാര് വെണ്കാടു മേവിയ വികിര്തനാരേ.
[ 2]
71 6.035 - തിരുനാവുക്കരചര് തൂണ്ടു ചുടര് മേനിത് തൂനീറു
കൊള്ളൈക് കുഴൈക് കാതിന് കുണ്ടൈപ്പൂതമ് കൊടുകൊട്ടി കൊട്ടിക് കുനിത്തുപ് പാട,
ഉള്ളമ് കവര്ന്തിട്ടുപ് പോവാര് പോല ഉഴിതരുവര്; നാന് തെരിയമാട്ടേന്, മീണ്ടേന്;
കള്ളവിഴി വിഴിപ്പാര്, കാണാക് കണ്ണാല്; കണ്ണുളാര് പോലേ കരന്തു നിറ്പര്;
വെള്ളച് ചടൈമുടിയര്; വേത നാവര് വെണ്കാടു മേവിയ വികിര്തനാരേ.
[ 5]
72 6.040 - തിരുനാവുക്കരചര് അലൈ അടുത്ത പെരുങ്കടല് നഞ്ചു
ചുഴിത് തുണൈ ആമ് പിറവി വഴിത് തുക്കമ് നീക്കുമ് ചുരുള് ചടൈ എമ്പെരുമാനേ! തൂയ തെണ്നീര്
ഇഴിപ്പ(അ)രിയ പചുപാചപ് പിറപ്പൈ നീക്കുമ് എന് തുണൈയേ! എന്നുടൈയ പെമ്മാന്! തമ്മാന്!
പഴിപ്പ(അ)രിയ തിരുമാലുമ് അയനുമ് കാണാപ് പരുതിയേ! ചുരുതി മുടിക്കു അണി ആയ് വായ്ത്ത,
വഴിത്തുണൈ ആമ്, മഴപാടി വയിരത്തൂണേ! എന്റു എന്റേ നാന് അരറ്റി നൈകിന്റേനേ.
[ 7]
73 6.043 - തിരുനാവുക്കരചര് നില്ലാത നീര് ചടൈമേല് നിറ്പിത്താനൈ;
നില്ലാത നീര് ചടൈമേല് നിറ്പിത്താനൈ; നിനൈയാ എന് നെഞ്ചൈ നിനൈവിത്താനൈ;
കല്ലാതന എല്ലാമ് കറ്പിത്താനൈ; കാണാതന എല്ലാമ് കാട്ടിനാനൈ;
ചൊല്ലാതന എല്ലാമ് ചൊല്ലി, എന്നൈത് തൊടര്ന്തു, ഇങ്കു അടിയേനൈ ആളാക്കൊണ്ടു,
പൊല്ലാ എന് നോയ് തീര്ത്ത പുനിതന് തന്നൈ, പുണ്ണിയനേ, പൂന്തുരുത്തിക് കണ്ടേന്, നാനേ.
[ 1]
74 6.043 - തിരുനാവുക്കരചര് നില്ലാത നീര് ചടൈമേല് നിറ്പിത്താനൈ;
വെറി ആര് മലര്ക്കൊന്റൈ ചൂടിനാനൈ,
വെള്ളാനൈ വന്തു ഇറൈഞ്ചുമ് വെണ്കാട്ടാനൈ,
അറിയാതു അടിയേന് അകപ്പട്ടേനൈ, അല്ലല് കടല് നിന്റുമ് ഏറ വാങ്കി
നെറിതാന് ഇതു എന്റു കാട്ടിനാനൈ, നിച്ചല് നലി പിണികള് തീര്പ്പാന് തന്നൈ,
പൊറി ആടു അരവു ആര്ത്ത പുനിതന് തന്നൈ, പൊയ് ഇലിയൈ, പൂന്തുരുത്തിക് കണ്ടേന് നാനേ.
[ 4]
75 6.054 - തിരുനാവുക്കരചര് ആണ്ടാനൈ, അടിയേനൈ ആളാക്കൊണ്ടു; അടിയോടു
ഇരുള് ആയ ഉള്ളത്തിന് ഇരുളൈ നീക്കി, ഇടര്പാവമ് കെടുത്തു, ഏഴൈയേനൈ ഉയ്യത്
തെരുളാത ചിന്തൈതനൈത് തെരുട്ടി, തന് പോല് ചിവലോക നെറി അറിയച് ചിന്തൈ തന്ത
അരുളാനൈ; ആതി മാ തവത്തു ഉളാനൈ; ആറു അങ്കമ് നാല് വേതത്തു അപ്പാല് നിന്റ
പൊരുളാനൈ; പുള്ളിരുക്കു വേളൂരാനൈ; പോറ്റാതേ ആറ്റ നാള് പോക്കിനേനേ!.
[ 4]
76 6.054 - തിരുനാവുക്കരചര് ആണ്ടാനൈ, അടിയേനൈ ആളാക്കൊണ്ടു; അടിയോടു
മിന് ഉരുവൈ; വിണ്ണകത്തില് ഒന്റു ആയ്, മിക്കു വീചുമ് കാല് തന് അകത്തില് ഇരണ്ടു ആയ്, ചെന്തീത്-
തന് ഉരുവില് മൂന്റു ആയ്, താഴ് പുനലില് നാന്കു ആയ്, തരണിതലത്തു അഞ്ചു ആകി, എഞ്ചാത് തഞ്ച
മന് ഉരുവൈ; വാന് പവളക്കൊഴുന്തൈ; മുത്തൈ; വളര് ഒളിയൈ; വയിരത്തൈ; മാചു ഒന്റു ഇല്ലാപ്
പൊന് ഉരുവൈ; പുള്ളിരുക്കു വേളൂരാനൈ; പോറ്റാതേ ആറ്റ നാള് പോക്കിനേനേ!.
[ 5]
77 6.061 - തിരുനാവുക്കരചര് മാതിനൈ ഓര് കൂറു ഉകന്തായ്!
എവരേനുമ് താമ് ആക; ഇലാടത്തു ഇട്ട തിരുനീറുമ് ചാതനമുമ് കണ്ടാല് ഉള്കി,
ഉവരാതേ, അവര് അവരൈക് കണ്ട പോതു ഉകന്തു അടിമൈത് തിറമ് നിനൈന്തു, അങ്കു ഉവന്തു നോക്കി,
ഇവര് തേവര്, അവര് തേവര്, എന്റു ചൊല്ലി ഇരണ്ടു ആട്ടാതു ഒഴിന്തു, ഈചന് തിറമേ പേണി,
കവരാതേ, തൊഴുമ് അടിയാര് നെഞ്ചിനുള്ളേ കന്റാപ്പൂര് നടുതറിയൈക് കാണല് ആമേ!.
[ 3]
78 6.062 - തിരുനാവുക്കരചര് എത് തായര്, എത് തന്തൈ,
ഊന് ആകി, ഉയിര് ആകി, അതനുള് നിന്റ ഉണര്വു ആകി, പിറ അനൈത്തുമ് നീയായ്, നിന്റായ്;
നാന് ഏതുമ് അറിയാമേ എന്നുള് വന്തു, നല്ലനവുമ് തീയനവുമ് കാട്ടാ നിന്റായ്;
തേന് ആരുമ് കൊന്റൈയനേ! നിന്റിയൂരായ്! തിരു ആനൈക്കാവില് ഉറൈ ചിവനേ! ഞാനമ്-
ആനായ്! ഉന് പൊന്പാതമ് അടൈയപ് പെറ്റാല്, അല്ല കണ്ടമ് കൊണ്ടു അടിയേന് എന് ചെയ്കേനേ?.
[ 2]
79 6.062 - തിരുനാവുക്കരചര് എത് തായര്, എത് തന്തൈ,
ഒപ്പു ആയ്, ഇവ് ഉലകത്തോടു ഒട്ടി വാഴ്വാന്, ഒന്റു അലാത് തവത്താരോടു ഉടനേ നിന്റു,
തുപ്പു ആരുമ് കുറൈ അടിചില് തുറ്റി, നറ്റു ഉന് തിറമ് മറന്തു തിരിവേനൈ, കാത്തു, നീ വന്തു
എപ്പാലുമ് നുന് ഉണര്വേ ആക്കി, എന്നൈ ആണ്ടവനേ! എഴില് ആനൈക്കാവാ! വാനോര്
അപ്പാ! ഉന് പൊന്പാതമ് അടൈയപ് പെറ്റാല്,
അല്ല കണ്ടമ് കൊണ്ടു അടിയേന് എന് ചെയ്കേനേ?.
[ 3]
80 6.067 - തിരുനാവുക്കരചര് ആള് ആന അടിയവര്കട്കു അന്പന്
അളൈ വായില് അരവു അചൈത്ത അഴകന് തന്നൈ, ആതരിക്കുമ് അടിയവര്കട്കു അന്പേ എന്റുമ്
വിളൈവാനൈ, മെയ്ഞ്ഞാനപ് പൊരുള് ആനാനൈ, വിത്തകനൈ, എത്തനൈയുമ് പത്തര് പത്തിക്കു
ഉളൈവാനൈ, അല്ലാതാര്ക്കു ഉളൈയാതാനൈ, ഉലപ്പു ഇലിയൈ, ഉള് പുക്കു എന് മനത്തു മാചു
കിളൈവാനൈ, കീഴ്വേളൂര് ആളുമ് കോവൈ, കേടു ഇലിയൈ, നാടുമവര് കേടു ഇലാരേ.
[ 3]
81 6.075 - തിരുനാവുക്കരചര് ചൊല് മലിന്ത മറൈനാന്കു ആറു
ഏവി, ഇടര്ക്കടല് ഇടൈപ് പട്ടു ഇളൈക്കിന്റേനൈ ഇപ് പിറവി അറുത്തു ഏറ വാങ്കി, ആങ്കേ
കൂവി, അമരുലകു അനൈത്തുമ് ഉരുവിപ് പോക,
കുറിയില് അറുകുണത്തു ആണ്ടു കൊണ്ടാര് പോലുമ്
താവി മുതല് കാവിരി, നല് യമുനൈ, കങ്കൈ, ചരചുവതി, പൊറ്റാമരൈപ് പുട്കരണി, തെണ്നീര്ക്
കോവിയൊടു, കുമരി വരു തീര്ത്തമ് ചൂഴ്ന്ത കുടന്തൈക് കീഴ്ക്കോട്ടത്തു എമ് കൂത്തനാരേ.
[ 10]
82 6.084 - തിരുനാവുക്കരചര് പെരുന്തകൈയൈ, പെററ്കു അരിയ മാണിക്കത്തൈ,
ഉരുകു മനത്തു അടിയവര്കട്കു ഊറുമ് തേനൈ, ഉമ്പര് മണി മുടിക്കു അണിയൈ, ഉണ്മൈ നിന്റ
പെരുകു നിലൈക് കുറിയാളര് അറിവു തന്നൈ, പേണിയ അന്തണര്ക്കു മറൈപ്പൊരുളൈ, പിന്നുമ്
മുരുകു വിരി നറുമലര് മേല് അയറ്കുമ് മാറ്കുമ്
മുഴുമുതലൈ, മെയ്ത് തവത്തോര് തുണൈയൈ, വായ്ത്ത
തിരുകുകുഴല് ഉമൈ നങ്കൈ പങ്കന് തന്നൈ, ചെങ്കാട്ടങ്കുടി അതനില് കണ്ടേന്, നാനേ.
[ 3]
83 6.094 - തിരുനാവുക്കരചര് ഇരു നിലന് ആയ്, തീ
ഇരു നിലന് ആയ്, തീ ആകി, നീരുമ് മാകി, ഇയമാനനായ്, എറിയുമ് കാറ്റുമ് മാകി,
അരു നിലൈയ തിങ്കള് ആയ്, ഞായിറു ആകി, ആകാചമ് ആയ്, അട്ട മൂര്ത്തി യാകി,
പെരു നലമുമ് കുറ്റമുമ് പെണ്ണുമ് ആണുമ് പിറര് ഉരുവുമ് തമ് ഉരുവുമ് താമേ യാകി,
നെരുനലൈ ആയ്, ഇന്റു ആകി, നാളൈ യാകി, നിമിര് പുന്ചടൈ അടികള് നിന്റ വാറേ!.
[ 1]
84 6.095 - തിരുനാവുക്കരചര് അപ്പന് നീ, അമ്മൈ നീ,
വെമ്പ വരുകിറ്പതു അന്റു, കൂറ്റമ് നമ്മേല്;| വെയ്യ വിനൈപ് പകൈയുമ് പൈയ നൈയുമ്;
എമ് പരിവു തീര്ന്തോമ്; ഇടുക്കണ് ഇല്ലോമ്;| എങ്കു എഴില് എന് ഞായിറു? എളിയോമ് അല്ലോമ്
അമ് പവളച് ചെഞ്ചടൈ മേല് ആറു ചൂടി,| അനല് ആടി, ആന് അഞ്ചുമ് ആട്ടു ഉകന്ത
ചെമ്പവള വണ്ണര്, ചെങ്കുന്റ വണ്ണര്,| ചെവ്വാന വണ്ണര്, എന് ചിന്തൈയാരേ.
[ 2]
85 6.095 - തിരുനാവുക്കരചര് അപ്പന് നീ, അമ്മൈ നീ,
ആട്ടുവിത്താല് ആര് ഒരുവര് ആടാതാരേ? അടക്കുവിത്താല് ആര് ഒരുവര് അടങ്കാതാരേ?
ഓട്ടുവിത്താല് ആര് ഒരുവര് ഓടാതാരേ? ഉരുകുവിത്താല് ആര് ഒരുവര് ഉരുകാതാരേ?
പാട്ടുവിത്താല് ആര് ഒരുവര് പാടാതാരേ? പണിവിത്താല് ആര് ഒരുവര് പണിയാതാരേ?
കാട്ടുവിത്താല് ആര് ഒരുവര് കാണാതാരേ? കാണ്പാര് ആര്, കണ്ണുതലായ്! കാട്ടാക്കാലേ?.
[ 3]
86 6.095 - തിരുനാവുക്കരചര് അപ്പന് നീ, അമ്മൈ നീ,
കുലമ് പൊല്ലേന്; കുണമ് പൊല്ലേന്; കുറിയുമ് പൊല്ലേന്; | കുറ്റമേ പെരിതു ഉടൈയേന്; കോലമ് ആയ
നലമ് പൊല്ലേന്; നാന് പൊല്ലേന്; ഞാനി അല്ലേന്; | നല്ലാരോടു ഇചൈന്തിലേന്; നടുവേ നിന്റ
വിലങ്കു അല്ലേന്; വിലങ്കു അല്ലാതു ഒഴിന്തേന് അല്ലേന്; | വെറുപ്പനവുമ് മികപ് പെരിതുമ് പേച വല്ലേന്;
ഇലമ് പൊല്ലേന്; ഇരപ്പതേ ഈയ മാട്ടേന്; |എന് ചെയ്വാന് തോന്റിനേന്, ഏഴൈയേനേ?.
[ 9]
87 6.098 - തിരുനാവുക്കരചര് നാമ് ആര്ക്കുമ് കുടി അല്ലോമ്;
നാമ് ആര്ക്കുമ് കുടി അല്ലോമ്; നമനൈ അഞ്ചോമ്;
നരകത്തില് ഇടര്പ്പടോമ്; നടലൈ ഇല്ലോമ്;
ഏമാപ്പോമ്; പിണി അറിയോമ്; പണിവോമ് അല്ലോമ്;
ഇന്പമേ, എന്നാളുമ്, തുന്പമ് ഇല്ലൈ;
താമ് ആര്ക്കുമ് കുടി അല്ലാത് തന്മൈ ആന
ചങ്കരന്,
നല് ചങ്ക വെണ്കുഴൈ ഓര് കാതിന്
കോമാറ്കേ, നാമ് എന്റുമ് മീളാ ആള് ആയ്ക്
കൊയ്മ്മലര്ച് ചേവടി ഇണൈയേ കുറുകിനോമേ.
[ 1]
88 7.007 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് മത്തയാനൈ ഏറി, മന്നര് ചൂഴ
കൂചമ് നീക്കി, കുറ്റമ് നീക്കി, ചെറ്റമ് മനമ് നീക്കി,
വാചമ് മല്കു കുഴലിനാര്കള് വഞ്ചമ് മനൈ വാഴ്ക്കൈ
ആചൈ നീക്കി, അന്പു ചേര്ത്തി, എന്പു അണിന്തു ഏറു ഏറുമ്
ഈചര് കോയില് എതിര്കൊള്പാടി എന്പതു അടൈവോമേ .
[ 7]
89 7.021 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് നொന്താ ഒണ്ചുടരേ! നുനൈയേ നിനൈന്തിരുന്തേന്;
നിലൈ ആയ് നിന് അടിയേ നിനൈന്തേന്; നിനൈതലുമേ;
തലൈവാ! നിന് നിനൈയപ് പണിത്തായ്; ചലമ് ഒഴിന്തേന്;
ചിലൈ ആര് മാ മതില് ചൂഴ് തിരു മേറ്റളി ഉറൈയുമ്
മലൈയേ! ഉന്നൈ അല്ലാല് മകിഴ്ന്തു ഏത്ത മാട്ടേനേ .
[ 9]
90 7.026 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് ചെണ്ടു ആടുമ് വിടൈയായ്! ചിവനേ!
മറി ചേര് കൈയിനനേ! മതമാ ഉരി പോര്ത്തവനേ!
കുറിയേ! എന്നുടൈയ കുരുവേ! ഉന് കുറ്റേവല് ചെയ്വേന്;
നെറിയേ നിന്റു അടിയാര് നിനൈക്കുമ് തിരുക്കാളത്തിയുള്
അറിവേ! ഉന്നൈ അല്ലാല് അറിന്തു ഏത്ത മാട്ടേനേ .
[ 4]
91 7.040 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് വള് വായ മതി മിളിരുമ്
അരുമണിയൈ, മുത്തിനൈ, ആന് അഞ്ചുമ് ആടുമ് അമരര്കള് തമ് പെരുമാനൈ, അരുമറൈയിന് പൊരുളൈത്
തിരുമണിയൈത് തീങ്കരുമ്പിന് ഊറലിരുന് തേനൈത് തെരിവരിയ മാമണിയൈത് തികഴ്തരുചെമ് പൊന്നൈക്
കുരുമണികള് കൊഴിത്തിഴിന്തു ചുഴിത്തിഴിയുന് തിരൈവായ്ക് കോല്വളൈയാര് കുടൈന്താടുങ് കൊള്ളിടത്തിന് കരൈമേല്
കരുമണികള് പോല്നീലമ് മലര്കിന്റ കഴനിക് കാനാട്ടു മുള്ളൂരിറ് കണ്ടുതൊഴു തേനേ.
[ 7]
92 7.051 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് പത്തിമൈയുമ് അടിമൈയൈയുമ് കൈവിടുവാന്, പാവിയേന്
ഇങ്ങനമ് വന്തു ഇടര്പ് പിറവിപ് പിറന്തു അയര്വേന്; അയരാമേ
അങ്ങനമ് വന്തു എനൈ ആണ്ട അരു മരുന്തു, എന് ആരമുതൈ,
വെങ്കനല് മാ മേനിയനൈ, മാന് മരുവുമ് കൈയാനൈ,
എങ്ങനമ് നാന് പിരിന്തിരുക്കേന്, എന് ആരൂര് ഇറൈവനൈയേ?
[ 4]
93 7.051 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് പത്തിമൈയുമ് അടിമൈയൈയുമ് കൈവിടുവാന്, പാവിയേന്
വല്-നാകമ് നാണ്, വരൈ വില്, അങ്കി കണൈ, അരി പകഴി,
തന് ആകമ് ഉറ വാങ്കിപ് പുരമ് എരിത്ത തന്മൈയനൈ,
മുന് ആക നിനൈയാത മൂര്ക്കനേന് ആക്കൈ ചുമന്തു
എന് ആകപ് പിരിന്തിരുക്കേന്, എന് ആരൂര് ഇറൈവനൈയേ?
[ 6]
94 7.056 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് ഊര്വതു ഓര് വിടൈ ഒന്റു
മായമ് ആയ മനമ് കെടുപ്പാനൈ, മനത്തുളേ മതി ആയ് ഇരുപ്പാനൈ,
കായ മായമുമ് ആക്കുവിപ്പാനൈ, കാറ്റുമ് ആയ്ക് കനല് ആയ്ക് കഴിപ്പാനൈ,
ഓയുമ് ആറു ഉറു നോയ് പുണര്പ്പാനൈ, ഒല്ലൈ വല്വിനൈകള് കെടുപ്പാനൈ,
വേയ് കൊള് തോള് ഉമൈ പാകനൈ, നീടൂര് വേന്തനൈ, പണിയാ വിടല് ആമേ?
[ 8]
95 7.059 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് പൊന്നുമ് മെയ്പ്പൊരുളുമ് തരുവാനൈ, പോകമുമ്
കാര്ക്കുന്റ(മ്) മഴൈ ആയ്പ് പൊഴിവാനൈ, കലൈക്കു എലാമ് പൊരുള് ആയ് ഉടന്കൂടിപ്
പാര്ക്കിന്റ(വ്) ഉയിര്ക്കുപ് പരിന്താനൈ, പകലുമ് കങ്കുലുമ് ആകി നിന്റാനൈ,
ഓര്ക്കിന്റ(ച്) ചെവിയൈ, ചുവൈ തന്നൈ, ഉണരുമ് നാവിനൈ, കാണ്കിന്റ കണ്ണൈ,
ആര്ക്കിന്റ(ക്) കടലൈ, മലൈ തന്നൈ, ആരൂരാനൈ, മറക്കലുമ് ആമേ? .
[ 3]
96 7.060 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് കഴുതൈ കുങ്കുമമ് താന് ചുമന്തു
ഐവകൈയര് അരൈയര് അവര് ആകി, ആട്ചികൊണ്ടു, ഒരു കാല് അവര് നീങ്കാര്;
അവ് വകൈ അവര് വേണ്ടുവതു ആനാല്, അവര് അവര് വഴി ഒഴുകി, നാന് വന്തു
ചെയ്വകൈ അറിയേന്; ചിവലോകാ! തീവണാ! ചിവനേ! എരിആടീ!
എവ് വകൈ, എനക്കു ഉയ്വകൈ? അരുളായ് ഇടൈമരുതു(വ്) ഉറൈ എന്തൈപിരാനേ!.
[ 8]
97 7.067 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് ഊന് അങ്കത്തു ഉയിര്പ്പു ആയ്,
പന്തിത്ത വല് വിനൈപ് പറ്റു അറ, പിറവിപ്-പടുകടല് പരപ്പുത് തവിര്പ്പാനൈ;
ചന്തിത്ത(ത്) തിറലാല് പണി പൂട്ടിത് തവത്തൈ ഈട്ടിയ തമ് അടിയാര്ക്കു,
ചിന്തിത്തറ്കു എളിതു ആയ്, തിരുപ്പാതമ്, ചിവലോകമ് തിറന്തു ഏറ്റ വല്ലാനൈ;
വന്തിപ്പാര് തമ് മനത്തിന് ഉള്ളാനൈ; വലി വലമ് തനില് വന്തു കണ്ടേനേ .
[ 7]
98 7.084 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് തൊണ്ടര് അടിത്തൊഴലുമ്, ചോതി ഇളമ്പിറൈയുമ്,
മാവൈ ഉരിത്തു അതള് കൊണ്ടു അങ്കമ് അണിന്തവനൈ, വഞ്ചര് മനത്തു ഇറൈയുമ് നെഞ്ചു അണുകാതവനൈ,
മൂവര് ഉരുത് തനതു ആമ് മൂല മുതല് കരുവൈ, മൂചിടുമ് മാല്വിടൈയിന് പാകനൈ, ആകമ് ഉറപ്
പാവകമ് ഇന്റി മെയ്യേ പറ്റുമവര്ക്കു അമുതൈ, പാല് നറുനെയ് തയിര് ഐന്തു ആടു പരമ്പരനൈ,-
കാവല് എനക്കു ഇറൈ എന്റു, എയ്തുവതു എന്റുകൊലോ?-കാര് വയല് ചൂഴ് കാനപ്പേര് ഉറൈ കാളൈയൈയേ .
[ 7]
99 7.091 - ചുന്തരമൂര്ത്തി ചുവാമികള് പാട്ടുമ് പാടിപ് പരവിത് തിരിവാര്
എന്(ന്)നതു എഴിലുമ് നിറൈയുമ് കവര്വാന്,-
പുന്നൈ മലരുമ് പുറവില്-തികഴുമ്-
തന്നൈ മുന്നമ് നിനൈക്കത് തരുവാന്,
ഉന്നപ്പടുവാന്, -ഒറ്റിയൂരേ
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000