சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா மாத்து ஆகிய மால்
பண் - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WFDXm6GlCIw
6.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
பண் - திருத்தாண்டகம்   (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=i8Pv6biHxdI

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.044   மா மாத்து ஆகிய மால்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதர் திருவடிகள் போற்றி )
மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

[1]
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.

[2]
காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,
போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்;
ஆமாத்தூர் அரனேழு என்று அழைத்தலும்,
தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.

[3]
பஞ்ச பூதவலையில் படுவதற்கு
அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும்,
வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!

[4]
குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,
அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை,
நிராமயன் தனை, நாளும் நினைமினே!

[5]
பித்தனை, பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்,
பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!

[6]
நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை
கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.

[7]
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!

[8]
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்-
கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!

[9]
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

[10]
விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி
அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர்
இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.009   வண்ணங்கள் தாம் பாடி, வந்து  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
  வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
  ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
 உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

[1]
வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை
  விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி,
கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை
சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது? என்றேன்;
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு,
நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில்,
அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ்
 செய் ஆமாத்தூர் என்று, அடிகள் போயினாரே.

[2]
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய
விடை ஏறி-காபாலி(ய்)யார்-
இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும்
 பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்;
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப்
பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்;
அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் - 
  அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[3]
பசைந்த பல பூதத்தர், பாடல் ஆடல்;பட
நாகக்கச்சையர்;பிச்சைக்கு என்று அங்கு
இசைந்தது ஓர் இயல்பினர்;எரியின் மேனி
 இமையா முக்கண்ணினர்;நால்வேதத்தர்;
பிசைந்த திருநீற்றினர்;பெண் ஓர்பாகம் பிரிவு
 அறியாப் பிஞ்ஞகனார்;தெண் நீர்க் கங்கை
அசைந்த திருமுடியர்;அங்கைத் தீயர் - 
  அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[4]
உருள் உடைய தேர், புரவியோடும், யானை,
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்திவெள் ஏறு;
இருள் உடைய கண்டத்தர்;செந்தீவண்ணர்;
  இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார், தாம்;
பொருள் உடையர் அல்லர்;இலரும் அல்லர்;
 புலித்தோல் உடை ஆகப் பூதம் சூழ,
அருள் உடைய அம் கோதை, மாலை 
மார்பர் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[5]
வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு
  பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு,
 குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து,
பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி,
பலி கொள்வார் அல்லர், படிறே பேசி;
ஆறு உடைய சடைமுடி எம் அடிகள்
 போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[6]
கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து
 உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே;
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ்
புன்சடை முடிமேல்-திங்கள் சூடி,
மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார்
 திரிபுரங்கள் வேவச் செய்து(வ்),
ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

[7]
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு;
ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்!
நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்?
  நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்;
என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்;
  இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ?
அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; 
-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[8]
கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய
  விடை ஏறி, காணக்காண
இல்லமே தாம் புகுதா, இடுமின், பிச்சை!
  என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்;
சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது?
  துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?
அல்லலே செய்து அடிகள் போகின்றார்,
 தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[9]
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்;மணி
 மிழலை மேய மணாளர் போலும்;
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்;
  கொடுகொட்டி, தாளம், உடையார் போலும்;
செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்;
 தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்;
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் -
அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D