சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநின்றியூர் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=vMdjKpqwUzU   Add audio link Add Audio
சூலம்படை; சுண்ணப்பொடி சாந்தம்,சுடு நீறு;
பால்அம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலினொடு போக்கி,கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.


1


அச்சம்இலர்; பாவம்இலர்; கேடும்இலர்; அடியார்,
நிச்சம்உறு நோயும்இலர் தாமும் நின்றியூரில்
நச்சம்மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம்உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.


2


பறையின்ஒலி சங்கின்ஒலி பாங்குஆரவும், ஆர
அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்அவர் தன்மை;
நிறையும்புனல் சடைமேல் உடைஅடிகள், நின்றியூரில்
உறையும்இறை, அல்லதுஎனது உள்ளம் உணராதே!


3


பூண்டவரை மார்பில்புரி நூலன்,விரி கொன்றை
ஈண்டஅத னோடுஒரு பால்அம்மதி அதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றிஅது தன்னில்
ஆண்டகழல் தொழல்அல்லது, அறியார்அவர் அறிவே!


4


குழலின்இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின்எழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்,
அழலின்வலன் அங்கையது ஏந்தி,அனல் ஆடும்
கழலின்ஒலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.


5


Go to top
மூரல்முறு வல்வெண்நகை உடையாள்ஒரு பாகம்,
சாரல்மதி அதனோடுஉடன் சலவம்சடை வைத்த
வீரன்,மலி அழகுஆர்பொழில் மிடையும்திரு நின்றி
யூரன்,கழல் அல்லாது,என துஉள்ளம்உண ராதே!


6


பற்றிஒரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅது ஆகித்திரி தேவர்பெரு மானார்,
சுற்றிஒரு வேங்கைஅத ளோடும்பிறை சூடும்
நெற்றிஒரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.


7


நல்லமலர் மேலானொடு ஞாலம்அது உண்டான்,
அல்லர்என, ஆவர்என, நின்றும்அறிவு அரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை ஆர்எம்
செல்வர்அடி அல்லாது,என சிந்தைஉண ராதே!


8


நெறியில்வரு பேராவகை நினையாநினைவு ஒன்றை
அறிவுஇல்சமண் ஆதர்உரை கேட்டும்அய ராதே,
நெறிஇல்லவர் குறிகள்நினை யாதே,நின்றி யூரில்
மறிஏந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே!


9


குன்றம்அது எடுத்தான்உடல் தோளும்நெரிவு ஆக
நின்றுஅங்கு ஒருவிரலால்உற வைத்தான்நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறைவு இன்றிநிறை புகழே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி   (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song lang tamil pathigam no 1.018