சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

Selected Thiruppugazh Songs
கற்பக விநாயகர் மலரடி ! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந்நாளும்
வானம் அரசாள் வரம்பெறலாம், மோனவீடு
ஏறலாம் யானைக்கு இளையான் திருப்புகழைக்,
கூறினார்க்கு ஆமேஇக் கூறு.
+ Show Meaning
திருப்புகழ் # 1   கைத்தல நிறைகனி ( - வாரியார் # 1 )  (விநாயகர்)  
திருப்புகழ் # 2   பக்கரை விசித்ரமணி ( - வாரியார் # 3 )  (விநாயகர்)  
திருப்புகழ் # 3   உம்பர் தரு ( - வாரியார் # 2 )  (விநாயகர்)  
திருப்புகழ் # 4   நினது திருவடி ( - வாரியார் # 5 )  (விநாயகர்)  
திருப்புகழ் # 5   விடமடைசு வேலை ( - வாரியார் # 4 )  (விநாயகர்)  
திருப்புகழ் # 6   முத்தைத்தரு ( குருஜி # 5 - வாரியார் # 6 )  (திருவருணை)  
திருப்புகழ் # 8   உனைத் தினம் ( குருஜி # 6 - வாரியார் # 7 )  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 9   கருவடைந்து ( குருஜி # 7 - வாரியார் # 13 )  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 11   கனகந்திரள்கின்ற ( குருஜி # 8 - வாரியார் # 10 )  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 13   சந்ததம் பந்த ( குருஜி # 9 - வாரியார் # 15 )  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 15   தடக்கைப் பங்கயம் ( குருஜி # 10 - வாரியார் # 16 )  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 28   அறிவழிய மயல்பெருக ( குருஜி # 15 - வாரியார் # 23 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 31   இயலிசையில் உசித ( குருஜி # 17 - வாரியார் # 25 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 36   ஏவினை நேர்விழி ( குருஜி # 20 - வாரியார் # 29 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 56   சங்கை தான் ஒன்று ( - வாரியார் # 92 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 62   தண்டை அணி ( குருஜி # 30 - வாரியார் # 103 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 63   தந்த பசிதனை ( குருஜி # 31 - வாரியார் # 43 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 64   தரிக்குங்கலை ( குருஜி # 32 - வாரியார் # 44 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 68   தொந்தி சரிய ( குருஜி # 34 - வாரியார் # 47 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 78   பரிமள களப ( குருஜி # 41 - வாரியார் # 55 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 97   வந்து வந்து முன் ( குருஜி # 52 - வாரியார் # 69 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 100   விந்ததில் ஊறி ( குருஜி # 54 - வாரியார் # 71 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 101   விறல்மாரன் ஐந்து ( குருஜி # 55 - வாரியார் # 101 )  (திருச்செந்தூர்)  
திருப்புகழ் # 106   அதல விதல ( - வாரியார் # 149 )  (பழநி)  
திருப்புகழ் # 107   அபகார நிந்தை ( குருஜி # 57 - வாரியார் # 110 )  (பழநி)  
திருப்புகழ் # 110   அவனிதனிலே ( குருஜி # 59 - வாரியார் # 130 )  (பழநி)  
திருப்புகழ் # 114   ஆறுமுகம் ஆறுமுகம் ( குருஜி # 60 - வாரியார் # 153 )  (பழநி)  
திருப்புகழ் # 134   கருவின் உருவாகி ( குருஜி # 68 - வாரியார் # 132 )  (பழநி)  
திருப்புகழ் # 145   குரம்பை மலசலம் ( குருஜி # 69 - வாரியார் # 188 )  (பழநி)  
திருப்புகழ் # 156   சிவனார் மனங்குளிர ( குருஜி # 71 - வாரியார் # 113 )  (பழநி)  
திருப்புகழ் # 158   சீ உதிரம் எங்கும் ( குருஜி # 72 - வாரியார் # 195 )  (பழநி)  
திருப்புகழ் # 166   தலைவலி மருத்தீடு ( குருஜி # 78 - வாரியார் # 141 )  (பழநி)  
திருப்புகழ் # 168   திமிர உததி ( குருஜி # 80 - வாரியார் # 123 )  (பழநி)  
திருப்புகழ் # 170   நாத விந்து ( குருஜி # 18 - வாரியார் # 104 )  (பழநி)  
திருப்புகழ் # 179   போதகம் தரு ( குருஜி # 85 - வாரியார் # 105 )  (பழநி)  
திருப்புகழ் # 182   மனக்கவலை ஏதும் ( குருஜி # 86 - வாரியார் # 1316 )  (பழநி)  
திருப்புகழ் # 192   வசனமிக ஏற்றி ( குருஜி # 89 - வாரியார் # 183 )  (பழநி)  
திருப்புகழ் # 201   அவாமருவு ( குருஜி # 93 - வாரியார் # 199 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 203   ஆனாத பிருதி ( குருஜி # 94 - வாரியார் # 201 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 212   காமியத் தழுந்தி ( குருஜி # 102 - வாரியார் # 205 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 216   சரண கமலாலயத்தில் ( குருஜி # 104 - வாரியார் # 206 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 217   சுத்திய நரப்புடன் ( குருஜி # 105 - வாரியார் # 207 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 222   நாசர்தங் கடை ( குருஜி # 108 - வாரியார் # 211 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 223   நாவேறு பா மணத்த ( குருஜி # 109 - வாரியார் # 212 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 228   பாதி மதிநதி ( குருஜி # 111 - வாரியார் # 217 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 232   வாதமொடு சூலை ( - வாரியார் # 220 )  (சுவாமிமலை)  
திருப்புகழ் # 239   அமைவுற்று அடைய ( குருஜி # 114 - வாரியார் # 291 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 240   அரகர சிவன் அரி ( குருஜி # 115 - வாரியார் # 248 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 242   இருப்பவல் திருப்புகழ் ( குருஜி # 116 - வாரியார் # 249 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 243   இருமலு ரோக ( குருஜி # 117 - வாரியார் # 302 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 249   எனக்கென யாவும் ( குருஜி # 123 - வாரியார் # 298 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 269   சினத்தவர் முடிக்கும் ( குருஜி # 131 - வாரியார் # 305 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 278   நினைத்தது எத்தனை ( குருஜி # 137 - வாரியார் # 272 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 280   பருத்தபற் சிரத்தினை ( குருஜி # 139 - வாரியார் # 297 )  (திருத்தணிகை)  
திருப்புகழ் # 314   புன மடந்தைக்கு ( குருஜி # 436 - வாரியார் # 474 )  (காஞ்சீபுரம்)  
திருப்புகழ் # 330   முட்டுப் பட்டு ( குருஜி # 439 - வாரியார் # 478 )  (காஞ்சீபுரம்)  
திருப்புகழ் # 339   கருமமான பிறப்பற ( குருஜி # 426 - வாரியார் # 487 )  (காஞ்சீபுரம்)  
திருப்புகழ் # 355   அனித்தமான ஊன் ( குருஜி # 441 - வாரியார் # 507 )  (திருவானைக்கா)  
திருப்புகழ் # 359   ஓல மறைகள் ( குருஜி # 442 - வாரியார் # 511 )  (திருவானைக்கா)  
திருப்புகழ் # 363   நாடித் தேடி ( குருஜி # 444 - வாரியார் # 501 )  (திருவானைக்கா)  
திருப்புகழ் # 366   வேலைப்போல் விழி ( - வாரியார் # 504 )  (திருவானைக்கா)  
திருப்புகழ் # 367   குமர குருபர குணதர ( - வாரியார் # 561 )  (திருவருணை)  
திருப்புகழ் # 397   இமராஜன் நிலாவது ( குருஜி # 448 - வாரியார் # 591 )  (திருவருணை)  
திருப்புகழ் # 401   இருவினை அஞ்ச ( குருஜி # 452 - வாரியார் # 517 )  (திருவருணை)  
திருப்புகழ் # 414   கீத விநோத மெச்சு ( குருஜி # 461 - வாரியார் # 530 )  (திருவருணை)  
திருப்புகழ் # 421   சிவமாதுடனே ( குருஜி # 462 - வாரியார் # 537 )  (திருவருணை)  
திருப்புகழ் # 425   செயசெய அருணா ( குருஜி # 463 - வாரியார் # 1323 )  (திருவருணை)  
திருப்புகழ் # 431   தோதகப் பெரும் ( - வாரியார் # 546 )  (திருவருணை)  
திருப்புகழ் # 470   அவகுண விரகனை ( குருஜி # 474 - வாரியார் # 638 )  (சிதம்பரம்)  
திருப்புகழ் # 487   வாத பித்தமொடு ( குருஜி # 492 - வாரியார் # 655 )  (சிதம்பரம்)  
திருப்புகழ் # 493   எழுகடல் மணலை ( குருஜி # 478 - வாரியார் # 596 )  (சிதம்பரம்)  
திருப்புகழ் # 513   மனமே உனக்குறுதி ( குருஜி # 490 )  (சிதம்பரம்)  
திருப்புகழ் # 519   நகைத்து உருக்கி ( - வாரியார் # 239 )  (கயிலைமலை)  
திருப்புகழ் # 521   புமி அதனில் ( குருஜி # 160 - வாரியார் # 241 )  (கயிலைமலை)  
திருப்புகழ் # 523   ஒருபதும் இருபதும் ( குருஜி # 182 - வாரியார் # 243 )  (ஸ்ரீ சைலம் திருமலை)  
திருப்புகழ் # 525   சரவண பவநிதி ( குருஜி # 185 - வாரியார் # 432 )  (திருவேங்கடம்)  
திருப்புகழ் # 530   அல்லி விழியாலும் ( குருஜி # 188 - வாரியார் # 312 )  (வள்ளிமலை)  
திருப்புகழ் # 544   வேத வெற்பிலே ( குருஜி # 169 - வாரியார் # 326 )  (திருக்கழுக்குன்றம்)  
திருப்புகழ் # 557   பகலிரவினில் ( குருஜி # 174 - வாரியார் # 338 )  (சென்னிமலை)  
திருப்புகழ் # 561   வாசித்து ( குருஜி # 176 - வாரியார் # 342 )  (திருசிராப்பள்ளி)  
திருப்புகழ் # 567   பத்தியால் யானுனை ( குருஜி # 148 - வாரியார் # 348 )  (இரத்னகிரி)  
திருப்புகழ் # 568   சீரான கோல கால ( - வாரியார் # 349 )  (விராலிமலை)  
திருப்புகழ் # 571   நிராமய புராதன ( குருஜி # 201 - வாரியார் # 352 )  (விராலிமலை)  
திருப்புகழ் # 585   அன்பாக வந்து ( குருஜி # 177 - வாரியார் # 375 )  (திருச்செங்கோடு)  
திருப்புகழ் # 586   பந்து ஆடி அம் கை ( - வாரியார் # 376 )  (திருச்செங்கோடு)  
திருப்புகழ் # 598   காலனிடத்து ( குருஜி # 178 - வாரியார் # 388 )  (திருச்செங்கோடு)  
திருப்புகழ் # 599   தாமா தாம ஆலாபா ( - வாரியார் # 389 )  (திருச்செங்கோடு)  
திருப்புகழ் # 602   பத்தர் கணப்ரிய ( குருஜி # 180 - வாரியார் # 392 )  (திருச்செங்கோடு)  
திருப்புகழ் # 610   மனையவள் நகைக்க ( குருஜி # 167 - வாரியார் # 400 )  (ஞானமலை)  
திருப்புகழ் # 616   ஐங்கரனை ( குருஜி # 165 - வாரியார் # 406 )  (கொங்கணகிரி)  
திருப்புகழ் # 635   அல்லில் நேரும் ( குருஜி # 193 - வாரியார் # 416 )  (வள்ளியூர்)  
திருப்புகழ் # 636   திருமகள் உலாவும் ( குருஜி # 155 - வாரியார் # 417 )  (கதிர்காமம்)  
திருப்புகழ் # 638   உடுக்கத் துகில் ( குருஜி # 150 - வாரியார் # 419 )  (கதிர்காமம்)  
திருப்புகழ் # 656   அடல் அரி மகவு ( குருஜி # 312 - வாரியார் # 666 )  (வெள்ளிகரம்)  
திருப்புகழ் # 664   வதன சரோருக ( குருஜி # 315 - வாரியார் # 671 )  (வெள்ளிகரம்)  
திருப்புகழ் # 675   புவிபுனல் காலும் ( - வாரியார் # 685 )  (திருவாலங்காடு)  
திருப்புகழ் # 676   வடிவது நீலம் ( - வாரியார் # 686 )  (திருவாலங்காடு)  
திருப்புகழ் # 724   அண்டர்பதி குடியேற ( குருஜி # 230 - வாரியார் # 735 )  (சிறுவை)  
திருப்புகழ் # 725   சீதள வாரிஜ ( குருஜி # 231 - வாரியார் # 736 )  (சிறுவை)  
திருப்புகழ் # 730   கருமுகில் போல் ( - வாரியார் # 741 )  (திருவாமாத்தூர்)  
திருப்புகழ் # 735   தாரகாசுரன் சரிந்து ( குருஜி # 284 - வாரியார் # 746 )  (தேவனூர்)  
திருப்புகழ் # 747   சதுரத்தரை நோக்கிய ( குருஜி # 276 - வாரியார் # 757 )  (திருவேட்களம்)  
திருப்புகழ் # 766   ஊனத்தசை தோல்கள் ( குருஜி # 233 - வாரியார் # 784 )  (சீகாழி)  
திருப்புகழ் # 780   எத்தனை கோடி ( குருஜி # 319 - வாரியார் # 790 )  (வைத்தீசுரன் கோயில்)  
திருப்புகழ் # 786   சூலம் என ஓடு ( - வாரியார் # 796 )  (திருக்கடவூர்)  
திருப்புகழ் # 798   மருக்குலாவிய ( குருஜி # 273 - வாரியார் # 799 )  (திருவிடைக்கழி)  
திருப்புகழ் # 816   கூசாதே பார் ( - வாரியார் # 830 )  (திருவாரூர்)  
திருப்புகழ் # 817   கூர்வாய் நாராய் ( - வாரியார் # 831 )  (திருவாரூர்)  
திருப்புகழ் # 818   பாலோ தேனோ பாகோ ( குருஜி # 268 - வாரியார் # 832 )  (திருவாரூர்)  
திருப்புகழ் # 821   கரமு முளரியின் ( - வாரியார் # 828 )  (திருவாரூர்)  
திருப்புகழ் # 847   எருவாய் கருவாய் ( குருஜி # 274 - வாரியார் # 857 )  (திருவீழிமிழலை)  
திருப்புகழ் # 858   அறுகுநுனி பனி ( - வாரியார் # 868 )  (திருவிடைமருதூர்)  
திருப்புகழ் # 894   நீரிழிவு குட்டம் ( - வாரியார் # 904 )  (குறட்டி)  
திருப்புகழ் # 904   என்னால் பிறக்கவும் ( குருஜி # 302 - வாரியார் # 910 )  (வயலூர்)  
திருப்புகழ் # 923   மதியால் வித்தகன் ( குருஜி # 217 - வாரியார் # 933 )  (கருவூர்)  
திருப்புகழ் # 925   தசையாகிய ( குருஜி # 215 - வாரியார் # 937 )  (கருவூர்)  
திருப்புகழ் # 943   இறவாமற் பிறவாமல் ( குருஜி # 204 - வாரியார் # 953 )  (அவிநாசி)  
திருப்புகழ் # 946   பக்குவ ஆசார ( குருஜி # 252 - வாரியார் # 956 )  (திருப்புக்கொளியூர்)  
திருப்புகழ் # 949   தீராப் பிணிதீர ( குருஜி # 291 - வாரியார் # 960 )  (பேரூர்)  
திருப்புகழ் # 967   முத்து நவரத்நமணி ( - வாரியார் # 975 )  (மதுரை)  
திருப்புகழ் # 973   சுரும்பு அணி ( - வாரியார் # 983 )  (இலஞ்சி)  
திருப்புகழ் # 974   மாலையில் வந்து ( - வாரியார் # 984 )  (இலஞ்சி)  
திருப்புகழ் # 982   கற்பக ஞானக் கடவுள் ( - வாரியார் # 992 )  (உத்தரகோசமங்கை)  
திருப்புகழ் # 986   விரகற நோக்கியும் ( குருஜி # 212 - வாரியார் # 996 )  (எழுகரைநாடு)  
திருப்புகழ் # 998   நாலிரண்டிதழாலே ( குருஜி # 385 - வாரியார் # 1237 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1002   கடலை பயறொடு ( - வாரியார் # 1241 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1015   விடம் என அயில் ( - வாரியார் # 1254 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1028   காதி மோதி ( குருஜி # 357 - வாரியார் # 1267 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1034   தோலத்தியால் ( குருஜி # 382 - வாரியார் # 1273 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1040   நாராலே தோல் ( குருஜி # 384 - வாரியார் # 1279 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1041   மாதா வோடே ( - வாரியார் # 1280 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1045   அமல வாயு ( குருஜி # 327 - வாரியார் # 1284 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1053   அதல சேடனாராட ( குருஜி # 325 - வாரியார் # 1292 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1078   கொடியன பிணி ( - வாரியார் # 1190 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1177   புகரில் சேவல ( குருஜி # 399 - வாரியார் # 1056 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1250   தீ ஊதை தாத்ரி ( - வாரியார் # 1153 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1291   துள்ளு மதவேள் ( குருஜி # 380 - வாரியார் # 1092 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1296   நீலங்கொள் ( குருஜி # 391 - வாரியார் # 1097 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1297   பட்டுப் படாத ( குருஜி # 394 - வாரியார் # 1098 )  (பொதுப்பாடல்கள்)  
திருப்புகழ் # 1306   கும்பகோணம் ( குருஜி # 322 - வாரியார் # 1002 )  (க்ஷேத்திரக் கோவை)  
திருப்புகழ் # 1307   அகரமுமாகி ( குருஜி # 494 - வாரியார் # 441 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1309   காரணமதாக ( குருஜி # 497 - வாரியார் # 443 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1313   ஆசை நாலுசதுர ( குருஜி # 495 - வாரியார் # 447 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1315   சீர் சிறக்கும் மேனி ( - வாரியார் # 449 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1316   துடிகொள் நோய் ( குருஜி # 500 - வாரியார் # 450 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1318   வாதினை அடர்ந்த ( குருஜி # 501 - வாரியார் # 439 )  (பழமுதிர்ச்சோலை)  
திருப்புகழ் # 1328   ஏறுமயிலேறி ( )  (திருவருணை)  
1 கைத்தல நிறைகனி   (விநாயகர்)  
தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

2 பக்கரை விசித்ரமணி   (விநாயகர்)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

3 உம்பர் தரு   (விநாயகர்)  
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

4 நினது திருவடி   (விநாயகர்)  
தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்
நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒரு
மகர சலநிதி வைத்த துதி கர
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல
சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்
நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே
எனவெ துகு துகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

5 விடமடைசு வேலை   (விநாயகர்)  
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
Audio/Video Link(s)

Back to Top

6 முத்தைத்தரு   (திருவருணை)  
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

8 உனைத் தினம்   (திருப்பரங்குன்றம்)  
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

9 கருவடைந்து   (திருப்பரங்குன்றம்)  
தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப்ப யின்று
          கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
     முலையருந்து விக்கக்கி டந்து
          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
     உலகமும்ப டைத்துப்ப ரிந்து
          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

11 கனகந்திரள்கின்ற   (திருப்பரங்குன்றம்)  
தனதந்தன தந்தன தந்தன
     தனதந்தன தந்தன தந்தன
          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

13 சந்ததம் பந்த   (திருப்பரங்குன்றம்)  
தந்தனந் தந்தத் ...... தனதான
     தந்தனந் தந்தத் ...... தனதான

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

15 தடக்கைப் பங்கயம்   (திருப்பரங்குன்றம்)  
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
     தனத்தத் தந்தனந் ......தனதான

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

28 அறிவழிய மயல்பெருக   (திருச்செந்தூர்)  
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதானா

அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
     அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ
     அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
     திருவடியில் அணுகவர ...... அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு
     செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
     நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி
     நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும்
     மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே
மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின
     மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

31 இயலிசையில் உசித   (திருச்செந்தூர்)  
தனதனன தனன தந்தத் ...... தனதான
     தனதனன தனன தந்தத் ...... தனதான

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

36 ஏவினை நேர்விழி   (திருச்செந்தூர்)  
தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

56 சங்கை தான் ஒன்று   (திருச்செந்தூர்)  
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா
     தந்தனா ...... தந்ததான

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
     சஞ்சலா ...... ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
     சம்ப்ரமா ...... நந்தமாயன்
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
     வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
     வந்துநீ ...... யன்பிலாள்வாய்
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
     கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
     கண்டலே ...... சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
     சென்றுமோ ...... தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
     செந்தில்வாழ் ...... தம்பிரானே.

Back to Top

62 தண்டை அணி   (திருச்செந்தூர்)  
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

63 தந்த பசிதனை   (திருச்செந்தூர்)  
தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

64 தரிக்குங்கலை   (திருச்செந்தூர்)  
தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

68 தொந்தி சரிய   (திருச்செந்தூர்)  
தந்த தனன தனனா தனனதன
     தந்த தனன தனனா தனனதன
          தந்த தனன தனனா தனனதன ...... தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

78 பரிமள களப   (திருச்செந்தூர்)  
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா

பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

97 வந்து வந்து முன்   (திருச்செந்தூர்)  
தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த
          தந்த தந்த தந்த தந்த ...... தனதான

வந்து வந்து முன்த வழ்ந்து
     வெஞ்சு கந்த யங்க நின்று
          மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
     விண்ட லம்பி ளந்தெ ழுந்த
          செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
     ழைந்து குங்கு மந்த யங்கு
          கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
     பைங்க டம்பு தண்டை கொஞ்சு
          செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
          கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
     பண்க டங்க டர்ந்த இன்சொல்
          திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த
     கந்த ரங்க லந்த சிந்து
          ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
     சம்பு நன்பு ரந்த ரன்த
          ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

100 விந்ததில் ஊறி   (திருச்செந்தூர்)  
தந்தன தான தந்தன தான
     தந்தன தான ...... தனதான

விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

101 விறல்மாரன் ஐந்து   (திருச்செந்தூர்)  
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

106 அதல விதல   (பழநி)  
தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன
          தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான

அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

107 அபகார நிந்தை   (பழநி)  
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

110 அவனிதனிலே   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

114 ஆறுமுகம் ஆறுமுகம்   (பழநி)  
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தந்ததான

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

134 கருவின் உருவாகி   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

145 குரம்பை மலசலம்   (பழநி)  
தனந்த தனதன தனதன தனதன
     தனந்த தனதன தனதன தனதன
          தனந்த தனதன தனதன தனதன ...... தனதான

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
     எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
          குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
     இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
          குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
     இரங்கு கலியனை பரிவுறு சடலனை
          சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
     அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
          தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
     லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
          லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
     டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
          இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
     அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
          செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
     சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
          செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

156 சிவனார் மனங்குளிர   (பழநி)  
தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

158 சீ உதிரம் எங்கும்   (பழநி)  
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

166 தலைவலி மருத்தீடு   (பழநி)  
தனதன தந்தான தானான தானதன
     தனதன தந்தான தானான தானதன
          தனதன தந்தான தானான தானதன ...... தனதான

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

168 திமிர உததி   (பழநி)  
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

170 நாத விந்து   (பழநி)  
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

179 போதகம் தரு   (பழநி)  
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

182 மனக்கவலை ஏதும்   (பழநி)  
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
     தனத்ததன தான தந்த ...... தனதான

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

192 வசனமிக ஏற்றி   (பழநி)  
தனதனன தாத்த ...... தனதான
     தனதனன தாத்த ...... தனதான

வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

201 அவாமருவு   (சுவாமிமலை)  
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
     மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
     தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
     முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
     சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

203 ஆனாத பிருதி   (சுவாமிமலை)  
தானான தனதனத் தான தனதன
     தானான தனதனத் தான தனதன
          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
     சீராமன் மருகமைக் காவில் பரிமள
          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
     மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
     பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

212 காமியத் தழுந்தி   (சுவாமிமலை)  
தானனத் தனந்த ...... தனதான
     தானனத் தனந்த ...... தனதான

காமியத் தழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
     ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

216 சரண கமலாலயத்தில்   (சுவாமிமலை)  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
Audio/Video Link(s)

Back to Top

217 சுத்திய நரப்புடன்   (சுவாமிமலை)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம்
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

222 நாசர்தங் கடை   (சுவாமிமலை)  
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

223 நாவேறு பா மணத்த   (சுவாமிமலை)  
தானான தான தத்த தானான தான தத்த
     தானான தான தத்த ...... தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
     நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீராகு காகு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

228 பாதி மதிநதி   (சுவாமிமலை)  
தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

232 வாதமொடு சூலை   (சுவாமிமலை)  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
     பாவமது பான முண்டு ...... வெறிமூடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.

Back to Top

239 அமைவுற்று அடைய   (திருத்தணிகை)  
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

அமைவுற் றடையப் பசியுற் றவருக்
     கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
     தருள்தப் பிமதத் ...... தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
     சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
     தளர்வுற் றொழியக் ...... கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
     தவருக் கிசையப் ...... புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
     கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
     தவமுற் றவருட் ...... புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
     தணியிற் குமரப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

240 அரகர சிவன் அரி   (திருத்தணிகை)  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
     னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
     அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
     உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
     பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
     உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
     ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
     பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
     மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

242 இருப்பவல் திருப்புகழ்   (திருத்தணிகை)  
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
     தனத்தன தனத்தன ...... தனதான

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

243 இருமலு ரோக   (திருத்தணிகை)  
தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

249 எனக்கென யாவும்   (திருத்தணிகை)  
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
     இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
     இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
     உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
     பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
     விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
     விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
     சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

269 சினத்தவர் முடிக்கும்   (திருத்தணிகை)  
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

278 நினைத்தது எத்தனை   (திருத்தணிகை)  
தனத்த தத்தனத் ...... தனதான
     தனத்த தத்தனத் ...... தனதான

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

280 பருத்தபற் சிரத்தினை   (திருத்தணிகை)  
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
     பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
     பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
     பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
     குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
     கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
     கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
     சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

314 புன மடந்தைக்கு   (காஞ்சீபுரம்)  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

330 முட்டுப் பட்டு   (காஞ்சீபுரம்)  
தத்தத் தத்தத் ...... தனதான
     தத்தத் தத்தத் ...... தனதான

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
     முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
     வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

339 கருமமான பிறப்பற   (காஞ்சீபுரம்)  
தனன தானன தத்தன தனதன
     தானா தத்தத் ...... தனதான

கரும மானபி றப்பற வொருகதி
     காணா தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
     னோபா வத்துக் ...... கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப் ...... புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
     காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
     மாரா கச்சிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

355 அனித்தமான ஊன்   (திருவானைக்கா)  
தனத்த தான தானான தனத்த தான தானான
     தனத்த தான தானான ...... தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
     மகப்ர வாக பானீய ...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

359 ஓல மறைகள்   (திருவானைக்கா)  
தான தனன தனதந்த தந்தன
     தான தனன தனதந்த தந்தன
          தான தனன தனதந்த தந்தன ...... தனதான

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
     மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
          ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
     போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
          ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
     மூல நிறைவு குறைவின்றி நின்றது
          சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
     வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
          தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
     வேல மயில எனவந்து கும்பிடு
          வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
     வீர கடக புயசிங்க சுந்தர
          வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
     நீலி கவுரி பரைமங்கை குண்டலி
          நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
     ளாலி னுதர முளபைங் கரும்புவெ
          ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

363 நாடித் தேடி   (திருவானைக்கா)  
தானத் தானத் ...... தனதான
     தானத் தானத் ...... தனதான

நாடித் தேடித் ...... தொழுவார்பால்
     நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
     பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
     ஆனைக் காவிற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

366 வேலைப்போல் விழி   (திருவானைக்கா)  
தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.

Back to Top

367 குமர குருபர குணதர   (திருவருணை)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.

Back to Top

397 இமராஜன் நிலாவது   (திருவருணை)  
தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான

இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

401 இருவினை அஞ்ச   (திருவருணை)  
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

414 கீத விநோத மெச்சு   (திருவருணை)  
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

421 சிவமாதுடனே   (திருவருணை)  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

425 செயசெய அருணா   (திருவருணை)  
தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

431 தோதகப் பெரும்   (திருவருணை)  
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

Back to Top

470 அவகுண விரகனை   (சிதம்பரம்)  
தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
          தனதன தனதன தானான தானன ...... தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
          அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
     கசனியை யசனியை மாபாத னாகிய
          கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
     மரகத முழுகிய காகோத ராஜனு
          மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
          மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி யானாய் நமோநம
          திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

487 வாத பித்தமொடு   (சிதம்பரம்)  
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

வாத பித்தமொடு சூலை விப்புருதி
     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
     யாடு வித்தகட லோட மொய்த்தபல
          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
     கான பொற்சரவ ணாப ரப்பிரம
          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
     மேவி சுத்தமண மாடி நற்புலியு
          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

493 எழுகடல் மணலை   (சிதம்பரம்)  
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

எழுகடல் மணலை அளவிடி னதிக
     மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
     மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
     கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
     விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
     ரினில்நட மருவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

513 மனமே உனக்குறுதி   (சிதம்பரம்)  
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா

மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை யற்றசுக ...... மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

519 நகைத்து உருக்கி   (கயிலைமலை)  
தனத்த தனத்த தனத்த தனத்த
     தனத்த தனத்த ...... தனதான

நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
     நடித்து விதத்தி ...... லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
     நலத்தி லணைத்து ...... மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
     திரட்டி யெடுத்து ...... வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
     பதத்த கனத்த ...... தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
     வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
     ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.

Back to Top

521 புமி அதனில்   (கயிலைமலை)  
தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான

புமியதனிற் ......ப்ரபுவான
     புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
     அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
     தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

523 ஒருபதும் இருபதும்   (ஸ்ரீ சைலம் திருமலை)  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
யா

ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

525 சரவண பவநிதி   (திருவேங்கடம்)  
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

சரவண பவநிதி யறுமுக குருபர
     சரவண பவநிதி யறுமுக குருபர
          சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
     சனனம ரணமதை யொழிவுற சிவமுற
          தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
          கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
     கலகமி னையதுள கழியவும் நிலைபெற
          கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
     குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
     மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
          திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெ னவெவரு மதிசய முடையவ
          அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
     வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

530 அல்லி விழியாலும்   (வள்ளிமலை)  
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

544 வேத வெற்பிலே   (திருக்கழுக்குன்றம்)  
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

557 பகலிரவினில்   (சென்னிமலை)  
தனதனதனத் ...... தனதான
     தனதனதனத் ...... தனதான

பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

561 வாசித்து   (திருசிராப்பள்ளி)  
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
     தானத்தத் தான தானன ...... தந்ததான

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

567 பத்தியால் யானுனை   (இரத்னகிரி)  
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

568 சீரான கோல கால   (விராலிமலை)  
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான

சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
     மீதேறி மாறி யாடு மிறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
     லூடாடி யால வாயில் விதிசெய்த
          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி
     காவேரி யாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

571 நிராமய புராதன   (விராலிமலை)  
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

585 அன்பாக வந்து   (திருச்செங்கோடு)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
     ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
     ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

586 பந்து ஆடி அம் கை   (திருச்செங்கோடு)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
     பங்கே ருகங்கொள் ...... முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
     வன்பாத கஞ்செய் ...... தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
     மங்காம லுன்ற ...... னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
     கண்டா வரம்பை ...... மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
     திண்டோள் நிரம்ப ...... அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

Back to Top

598 காலனிடத்து   (திருச்செங்கோடு)  
தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

599 தாமா தாம ஆலாபா   (திருச்செங்கோடு)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

தாமா தாமா லாபா லோகா
     தாரா தாரத் ...... தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
     நாசா பாசத் ...... தபராத
யாமா யாமா தேசா ரூடா
     யாரா யாபத் ...... தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
     யாதே யீமத் ...... துகலாமோ
காமா காமா தீனா நீணா
     காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
     காமா மோதக் ...... கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
     தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

Back to Top

602 பத்தர் கணப்ரிய   (திருச்செங்கோடு)  
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

610 மனையவள் நகைக்க   (ஞானமலை)  
தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
     னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
     மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
     தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
     சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
     எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

616 ஐங்கரனை   (கொங்கணகிரி)  
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
     தந்ததன தத்ததன ...... தனதான

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

635 அல்லில் நேரும்   (வள்ளியூர்)  
தய்ய தானன ...... தனதான
அல்லில் நேருமி ...... னதுதானும்
அல்ல தாகிய ...... உடல்மாயை
கல்லி னேரஅ ...... வழிதோறுங்
கையு நானுமு ...... லையலாமோ
சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா
வல்லி மாரிரு ...... புறமாக
வள்ளி யூருறை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

636 திருமகள் உலாவும்   (கதிர்காமம்)  
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதான

திருமகளு லாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

638 உடுக்கத் துகில்   (கதிர்காமம்)  
தனத்தத் தனதான தானன
     தனத்தத் தனதான தானன
          தனத்தத் தனதான தானன ...... தனதான

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணுநல்
          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
     இருக்கச் சிறுநாரி வேணுமொர்
          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
     மயக்கக் கடலாடி நீடிய
          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
     மழைத்துத் தரவேணு மூழ்பவ
          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

656 அடல் அரி மகவு   (வெள்ளிகரம்)  
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா

அடலரி மகவு விதிவழி யொழுகு
     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா
விடதர திகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

664 வதன சரோருக   (வெள்ளிகரம்)  
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
     கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
     ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
     வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

675 புவிபுனல் காலும்   (திருவாலங்காடு)  
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.

Back to Top

676 வடிவது நீலம்   (திருவாலங்காடு)  
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.

Back to Top

724 அண்டர்பதி குடியேற   (சிறுவை)  
தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

725 சீதள வாரிஜ   (சிறுவை)  
தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான

சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
          சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

730 கருமுகில் போல்   (திருவாமாத்தூர்)  
தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

735 தாரகாசுரன் சரிந்து   (தேவனூர்)  
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

747 சதுரத்தரை நோக்கிய   (திருவேட்களம்)  
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
     மயிலிற்புற நோக்கிய னாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
     யவர்முத்தமி ழாற்புக வேபர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்தவி நாயகி
          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
     விகடத்துற வாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

766 ஊனத்தசை தோல்கள்   (சீகாழி)  
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

780 எத்தனை கோடி   (வைத்தீசுரன் கோயில்)  
தத்தன தான தான தத்தன தான தான
     தத்தன தான தான ...... தனதான

எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

786 சூலம் என ஓடு   (திருக்கடவூர்)  
தானதன தான தத்த தானதன தான தத்த
     தானதன தான தத்த ...... தனதான

சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
     தூ யவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
     சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
     மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
     வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
     மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
     காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
     கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

798 மருக்குலாவிய   (திருவிடைக்கழி)  
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

816 கூசாதே பார்   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

கூசா தேபா ரேசா தேமால்
     கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
     கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
     வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
     நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

Back to Top

817 கூர்வாய் நாராய்   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
     கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடே றாரிற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
     சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
     சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

Back to Top

818 பாலோ தேனோ பாகோ   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

பாலோ தேனோ பாகோ வானோர்
     பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
     தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
     சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
     லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

821 கரமு முளரியின்   (திருவாரூர்)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
          கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
          களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
     இயலு மயலற விழியினி ரிழிவர
          இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
          யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
          துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
          சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
          படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
     யிளைய குமரநி ருபபதி சரவண
          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

847 எருவாய் கருவாய்   (திருவீழிமிழலை)  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
     முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

858 அறுகுநுனி பனி   (திருவிடைமருதூர்)  
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான

அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
     ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
     ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
     ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
     வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
     வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
     மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
     வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
     பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
     வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
     மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
     காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
     ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
     ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
     ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

894 நீரிழிவு குட்டம்   (குறட்டி)  
தானன தனத்த தான தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள்
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய்
பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
     நாயக ரிடத்து காமி ...... மகமாயி
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
     வாணுத லளித்த வீர ...... மயிலோனே
மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

Back to Top

904 என்னால் பிறக்கவும்   (வயலூர்)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

923 மதியால் வித்தகன்   (கருவூர்)  
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

925 தசையாகிய   (கருவூர்)  
தனனா தனனத் தனனா தனனத்
     தனனா தனனத் ...... தனதான

தசையா கியகற் றையினால் முடியத்
     தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
     றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
     படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
     படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
     கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
     றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
     கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
     கருவூ ரழகப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

943 இறவாமற் பிறவாமல்   (அவிநாசி)  
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

946 பக்குவ ஆசார   (திருப்புக்கொளியூர்)  
தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான

பக்குவ வாசார லட்சண சாகாதி
     பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
     பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
     அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
     னற்புத சீர்பாத ...... மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
     வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
     யுற்பல ராசீவ ...... வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

949 தீராப் பிணிதீர   (பேரூர்)  
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

967 முத்து நவரத்நமணி   (மதுரை)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.

Back to Top

973 சுரும்பு அணி   (இலஞ்சி)  
தனந்தன தந்த தனந்தன தந்த
     தனந்தன தந்த ...... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
     துரந்தெறி கின்ற ...... விழிவேலால்
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
     சுருண்டும யங்கி ...... மடவார்தோள்
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய்
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
     குரும்பைம ணந்த ...... மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.

Back to Top

974 மாலையில் வந்து   (இலஞ்சி)  
தான தனந்த தான தனந்த
     தனா தனந்த ...... தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு
     மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
     வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
     கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
     கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
     கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
     காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
     சூரனை வென்ற ...... பெருமாளே.

Back to Top

982 கற்பக ஞானக் கடவுள்   (உத்தரகோசமங்கை)  
தத்தன தானத் தனதன தந்தத்
     தத்தன தானத் தனதன தந்தத்
          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
     திற்புத சேனைக் கதிபதி யின்பக்
          கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
     றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
          கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
     பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
          பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
     றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
          றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
     குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
          கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
     தத்தன தானத் தடுடுடு வென்கச்
          செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி
உற்பன மாகத் தடிபடு சம்பத்
     தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
          றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
          றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

986 விரகற நோக்கியும்   (எழுகரைநாடு)  
தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தந்ததான

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
     முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
     பரமப ராக்ரம ...... சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

998 நாலிரண்டிதழாலே   (பொதுப்பாடல்கள்)  
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான

நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய
          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி
காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1002 கடலை பயறொடு   (பொதுப்பாடல்கள்)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
     சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
          கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
     அமுது துதிகையில் மனமது களிபெற
          கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
     பிறகு வருமொரு முருகசண் முகவென
          குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
     வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
          குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
     மறலி வெருவுற ரவிமதி பயமுற
          நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
     பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
          நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான
நடன மிடுபரி துரகத மயிலது
     முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
          நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
     அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
          நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1015 விடம் என அயில்   (பொதுப்பாடல்கள்)  
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
     வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும்
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
     இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
     கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
     முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
     மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
     பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
     மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
     முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.

Back to Top

1028 காதி மோதி   (பொதுப்பாடல்கள்)  
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1034 தோலத்தியால்   (பொதுப்பாடல்கள்)  
தானத்த தானத்த தானத்த தானத்த
     தானத்த தானத்த ...... தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
     தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
     வேதித்த சூலத்த ...... னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
     டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
     கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
     ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
     மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
     தோதக்கண் மானுக்கு ...... மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1040 நாராலே தோல்   (பொதுப்பாடல்கள்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

நாரா லேதோல் நீரா லேயாம்
     நானா வாசற் ...... குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
     பாவார்வேதத் ...... தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
     டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
     சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1041 மாதா வோடே   (பொதுப்பாடல்கள்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

மாதா வோடே மாமா னானோர்
     மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
     மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரூ டேபோய் மூழ்கா
     வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
     போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
     வானோர் மேனிப் ...... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
     வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார் தீயு டேமூள்
     சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

Back to Top

1045 அமல வாயு   (பொதுப்பாடல்கள்)  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல ...... அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான ...... மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மெளிது சால மேலாக ...... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத ...... மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல ...... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர ...... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1053 அதல சேடனாராட   (பொதுப்பாடல்கள்)  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1078 கொடியன பிணி   (பொதுப்பாடல்கள்)  
தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான

கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
     கூன்போந் ...... தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
     கோண்பூண் ...... டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
     போந்தேன் ...... தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
     பூண்டாண் ...... டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
     சூழ்ந்தாங் ...... குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
     தோந்தாந் ...... தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
     பாழ்ங்கான் ...... தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1177 புகரில் சேவல   (பொதுப்பாடல்கள்)  
தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம
     நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
          பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
     புயச பூதர என்றிரு கண்புனல்
          பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
     மருவு மாருயி ருங்கர ணங்களு
          மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
     அடைய ஆமென அன்றென நின்றதை
          யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
     மலய மாருத மும்பல வெம்பரி
          மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
     மதுர கார்முக மும்பொர வந்தெழு
          மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
     முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
          முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
     கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
          முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1250 தீ ஊதை தாத்ரி   (பொதுப்பாடல்கள்)  
தானான தாத்த தானான தாத்த
     தானான தாத்த ...... தனதான

தீயூதை தாத்ரி பானீய மேற்ற
     வானீதி யாற்றி ...... கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
     மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
     பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
     போமாறு பேர்த்து ...... னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
     லேய்வாளை வேட்க ...... வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
     வேலோடு வேய்த்த ...... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
     மாமேரு வேர்ப்ப ...... றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
     வானாடு காத்த ...... பெருமாளே.

Back to Top

1291 துள்ளு மதவேள்   (பொதுப்பாடல்கள்)  
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே
செய்யகும ரேசத் ...... திறலோனே
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1296 நீலங்கொள்   (பொதுப்பாடல்கள்)  
தானந்த தானத்தம் ...... தனதான
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1297 பட்டுப் படாத   (பொதுப்பாடல்கள்)  
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
   பக்கத்து மாதர் ...... வசையாலும்
      சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
         துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
   தர்க்கித்த சூரர் ...... குலகாலா
      மட்டுப் படாத ...... மயிலோனே
         மற்றொப்பி லாத ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1306 கும்பகோணம்   (க்ஷேத்திரக் கோவை)  
தந்த தானன தானான தந்தன
     தந்த தானன தானான தந்தன
          தந்த தானன தானான தந்தன ...... தனதான

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
          தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
     கம்பு லாவிய காவேரி சங்கமு
          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
     தென்சி வாயமு மேயா யகம்படு
          கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல
          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1307 அகரமுமாகி   (பழமுதிர்ச்சோலை)  
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1309 காரணமதாக   (பழமுதிர்ச்சோலை)  
தானதன தான தந்த ...... தனதான
காரணம தாக வந்து ...... புவிமீதே
   காலனணு காதி சைந்து ...... கதிகாண
      நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
         ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
   ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
      சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
         சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1313 ஆசை நாலுசதுர   (பழமுதிர்ச்சோலை)  
தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
     வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
          ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
     யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
          ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
     மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
          மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
     மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
          யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
     வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
          மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
          மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
     ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
          காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
     நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
          காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

1315 சீர் சிறக்கும் மேனி   (பழமுதிர்ச்சோலை)  
தானதத்த தான தனாதனா தன
     தானதத்த தான தனாதனா தன
          தானதத்த தான தனாதனா தன ...... தனதானா

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
          தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
          மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி
வாடைபற்று வேளை யடா வடா வென
     நீமயக்க மேது சொலாய் சொலா யென
          வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
          பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
          பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
          போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
          பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1316 துடிகொள் நோய்   (பழமுதிர்ச்சோலை)  
தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான

துடிகொ ணோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1318 வாதினை அடர்ந்த   (பழமுதிர்ச்சோலை)  
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

1328 ஏறுமயிலேறி   (திருவருணை)  

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்று
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

  ()