சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.135
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீறு சேர்வது ஒர் மேனியர், பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nkTMgUi7HWk |
5.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; பண் - திருக்குறுந்தொகை (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=YohZYGl7318 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.135  
நீறு சேர்வது ஒர் மேனியர்,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருத்தலம் திருப்பராய்துறை ; (திருத்தலம் அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி )
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை கூறு சேர்வது ஒர் கோலம் ஆய், பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர் சடை அண்ணலே. | [1] |
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை, வந்த பூம்புனல், வைத்தவர் பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை அந்தம் இல்ல அடிகளே. | [2] |
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து ஓத நின்ற ஒருவனார்; பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை ஆதி ஆய அடிகளே. | [3] |
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு நூலும் தாம் அணி மார்பினர் பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை, ஆல நீழல் அடிகளே. | [4] |
விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்; இரவில் நின்று எரி ஆடுவர்; பரவினார் அவர் வேதம் பராய்த்துறை அரவம் ஆர்த்த அடிகளே. | [5] |
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடையவர் பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை அறைய நின்ற அடிகளே. | [6] |
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில் கங்கை தரித்தவர்; படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே. | [7] |
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார், விரல் ஒன்றினால்; பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை அருக்கன் தன்னை, அடிகளே. | [8] |
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும் அறியாதவர்; பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை ஆற்றல் மிக்க அடிகளே. | [9] |
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள், உரு இலா உரை கொள்ளேலும்! பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை மருவினான் தனை வாழ்த்துமே! | [10] |
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல், சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், செல்வம் ஆம், இவை செப்பவே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பராய்துறை ; (திருத்தலம் அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி )
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே. | [1] |
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்; சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத் தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே. | [2] |
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்; சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்; இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே. | [3] |
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்- தென்பராய்த்துறை மேவிய செல்வனார்; அன்பராய் இருப்பாரை அறிவரே. | [4] |
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன் தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள், வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச் சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே! | [5] |
நல்ல நால்மறை ஓதிய நம்பனை, பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை, தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை, வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே! | [6] |
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை; பருப்பதம் மதயானை உரித்தவன், திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல் பொருப்பு அராவி இழி புனல் போன்றதே. | [7] |
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல் பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல், விட்டு, நம் வினை உள்ளன வீடுமே. | [8] |
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை; மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி; திருப் பராய்த்துறை மேவிய செல்வனார் விருப்பராய் இருப்பாரை அறிவரே. | [9] |
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும், இண்டை கட்டி இணை அடி ஏத்தியும், பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே. | [10] |
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை, பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்! பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே! | [11] |