சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.038
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் பண் - தக்கராகம் (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NRSDFiUVZNg |
3.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏன எயிறு, ஆடு அரவொடு, பண் - சாதாரி (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vOagAP6nv-0 |
5.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொள்ளும் காதன்மை பெய்து உறும் பண் - திருக்குறுந்தொகை (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AZ8aI2Uy3XQ |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.038  
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருமயிலாடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி )
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் வர மா மயிலாடுதுறையே. | [1] |
உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதி என்பர் குரவம், சுரபுன்னையும், வன்னி, மருவும் மயிலாடுதுறையே. | [2] |
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில், ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு ஆன மயிலாடுதுறையே! | [3] |
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற மஞ்சன் மயிலாடுதுறையை நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல் துஞ்சும், பிணி ஆயினதானே. | [4] |
தணி ஆர் மதி செஞ்சடையான்தன் அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும் பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் மணியான், மயிலாடுதுறையே. | [5] |
தொண்டர் இசை பாடியும் கூடிக் கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் பண்டும் பல வேதியர் ஓத, வண்டு ஆர் மயிலாடுதுறையே. | [6] |
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் நுணங்கும் புரிநூலர்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறையே. | [7] |
சிரம் கையினில் ஏந்தி இரந்த பரம் கொள் பரமேட்டி, வரையால் அரங்க அரக்கன் வலி செற்ற, வரம் கொள் மயிலாடுதுறையே. | [8] |
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும், கோலத்து அயனும், அறியாத சீலத்தவன் ஊர் சிலர் கூடி மாலைத் தீர் மயிலாடுதுறையே. | [9] |
நின்று உண் சமணும், நெடுந் தேரர், ஒன்று அறியாமை உயர்ந்த வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் மன்றல் மயிலாடுதுறையே. | [10] |
நயர் காழியுள் ஞானசம்பந்தன் மயர் தீர் மயிலாடுதுறைமேல் செயலால் உரை செய்தன பத்தும் உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.070  
ஏன எயிறு, ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருத்தலம் திருமயிலாடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி )
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய், கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர் வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே. | [1] |
அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து, அழகர் ஆம் எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர் பதி அது ஆம் கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே. | [2] |
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்கு அரியராய், மூளை படு வெண்தலையில் உண்டு, முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ, வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும் மயிலாடுதுறையே. | [3] |
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால், மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே. | [4] |
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி தேர் பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவர மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே. | [5] |
கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிக நோக்கு அரியராய், விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர்வாய் மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே. | [6] |
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல் எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே. | [7] |
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய, விரலால் விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா, மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே. | [8] |
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால், அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம் கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து, கிளர்வாய் அறுதல் சேர் வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும் மயிலாடுதுறையே. | [9] |
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க திறலோன் இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூ வண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே. | [10] |
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்- கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு காதன்மையினால், மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப் புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர், பொன்னுலகமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமயிலாடுதுறை ; (திருத்தலம் அருள்தரு அஞ்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாயூரநாதர் திருவடிகள் போற்றி )
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே. | [1] |
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்; பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி வைத்த மா மயிலாடுதுறை அரன் கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே. | [2] |
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும், கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் வண்டு சேர் மயிலாடுதுறை அரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. | [3] |
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்; அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்- மஞ்சன், மா மயிலாடுதுறை உறை அஞ்சலாள் உமைபங்கன், அருளிலே. | [4] |
குறைவு இலோம், கொடு மானுட வாழ்க்கையால்- கறை நிலாவிய கண்டன், எண் தோளினன், மறைவலான், மயிலாடுதுறை உறை இறைவன், நீள் கழல் ஏத்தி இருக்கிலே. | [5] |
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்? கலைகள் ஆய வல்லான், கயிலாயநல் மலையன், மா மயிலாடுதுறையன், நம் தலையின்மேலும் மனத்துளும் தங்கவே. | [6] |
நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை- ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன் மாற்றினான், மயிலாடுதுறை என்று போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.? | [7] |
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்? நீல மா மயில் ஆடு துறையனே! நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே? | [8] |
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி மணம் கொளச் சடை வைத்த மறையவன், வணங்கும் மா மயிலாடுதுறை அரன், அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே! | [9] |
நீள் நிலா அரவச் சடை நேசனைப் பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்; வாள்நிலா மயிலாடுதுறைதனைக் காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே. | [10] |
பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும் வரத்தினான், மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே! | [11] |