சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.060
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி மா மிடற்றான், பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.060  
கறை அணி மா மிடற்றான்,
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருவக்கரை ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சந்திரசேகரேசுவரர் திருவடிகள் போற்றி )
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான், பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான், மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில் உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே. | [1] |
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில் தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே. | [2] |
சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச, அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால், மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே. | [3] |
நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும் கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்; மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின், மேல்; மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே. | [4] |
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன், தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே. | [5] |
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன், பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே. | [6] |
கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்- வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்; ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே. | [7] |
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக் கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற, நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே. | [8] |
காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப, சேமமே, உன் தனக்கு! என்று அருள் செய்தவன்; தேவர்பிரான்; சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே. | [9] |
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள் தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்; பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும் வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம் வக்கரையே. | [10] |
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய் வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை, சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே. | [11] |