சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருமூலர் - திருமந்திரம் -விநாயகர் வணக்கம்  ()  
2 திருமூலர் - திருமந்திரம் -பாயிரம்  ()  
3 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்  ()  
4 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு  ()  
5 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு  ()  
6 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 4. உபதேசம்  ()  
7 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை  ()  
8 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை  ()  
9 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை  ()  
10 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை  ()  
11 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 9. கொல்லாமை  ()  
12 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்  ()  
13 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை  ()  
14 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு  ()  
15 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 13. நல்குரவு  ()  
16 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்  ()  
17 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்  ()  
18 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை  ()  
19 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு  ()  
20 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு  ()  
21 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்  ()  
22 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்  ()  
23 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 21. அன்புடைமை  ()  
24 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்  ()  
25 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 23. கல்வி  ()  
26 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்  ()  
27 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 25. கல்லாமை  ()  
28 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை  ()  
29 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை  ()  
30 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்  ()  
31 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு  ()  
32 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்  ()  
33 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி  ()  
34 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்  ()  
35 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு  ()  
36 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்  ()  
37 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்  ()  
38 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி  ()  
39 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 10. திதி  ()  
40 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்  ()  
41 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்  ()  
42 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்  ()  
43 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை  ()  
44 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்  ()  
45 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்  ()  
46 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்  ()  
47 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை  ()  
48 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்  ()  
49 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்  ()  
50 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை  ()  
51 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை  ()  
52 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை  ()  
53 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை  ()  
54 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்  ()  
55 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்  ()  
56 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 2. இயமம்  ()  
57 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 3. நியமம்  ()  
58 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்  ()  
59 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  ()  
60 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்  ()  
61 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 7. தாரணை  ()  
62 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 8. தியானம்  ()  
63 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 9. சமாதி  ()  
64 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு  ()  
65 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி  ()  
66 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை  ()  
67 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்  ()  
68 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்  ()  
69 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை  ()  
70 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்  ()  
71 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்  ()  
72 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்  ()  
73 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்  ()  
74 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை  ()  
75 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்  ()  
76 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 1. அசபை  ()  
77 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்  ()  
78 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 3. அருச்சனை  ()  
79 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்  ()  
80 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்  ()  
81 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்  ()  
82 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி  ()  
83 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்  ()  
84 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்  ()  
85 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்  ()  
86 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்  ()  
87 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்  ()  
88 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்  ()  
89 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்  ()  
90 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்  ()  
91 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்  ()  
92 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்  ()  
93 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 5. சரியை  ()  
94 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை  ()  
95 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்  ()  
96 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்  ()  
97 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்  ()  
98 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்  ()  
99 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்  ()  
100 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்  ()  
101 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி  ()  
102 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்  ()  
103 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்  ()  
104 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்  ()  
105 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்  ()  
106 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்  ()  
107 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்  ()  
108 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்  ()  
109 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு  ()  
110 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்  ()  
111 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 4.துறவு  ()  
112 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 5.தவம்  ()  
113 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்  ()  
114 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்  ()  
115 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்  ()  
116 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்  ()  
117 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 10. திருநீறு  ()  
118 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்  ()  
119 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்  ()  
120 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்  ()  
121 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்  ()  
122 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்  ()  
123 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்  ()  
124 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்  ()  
125 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்  ()  
126 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்  ()  
127 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்  ()  
128 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்  ()  
129 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்  ()  
130 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு  ()  
131 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 10.அருளொளி  ()  
132 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை  ()  
133 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 12. குருபூசை  ()  
134 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை  ()  
135 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை  ()  
136 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 15. போசன விதி  ()  
137 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி  ()  
138 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்  ()  
139 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி  ()  
140 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை  ()  
141 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்  ()  
142 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்  ()  
143 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்  ()  
144 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்  ()  
145 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்  ()  
146 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்  ()  
147 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்  ()  
148 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்  ()  
149 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 28. புருடன்  ()  
150 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 29. சீவன்  ()  
151 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 30. பசு  ()  
152 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 31. போதன்  ()  
153 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை  ()  
154 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை  ()  
155 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி  ()  
156 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி  ()  
157 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்  ()  
158 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்  ()  
159 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்  ()  
160 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்  ()  
161 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்  ()  
162 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்  ()  
163 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை  ()  
164 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்  ()  
165 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்  ()  
166 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்  ()  
167 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை  ()  
168 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்  ()  
169 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்  ()  
170 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்  ()  
171 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்  ()  
172 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை  ()  
173 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்  ()  
174 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்  ()  
175 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை  ()  
176 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்  ()  
177 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்  ()  
178 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்  ()  
179 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்  ()  
180 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்  ()  
181 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்  ()  
182 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி  ()  
183 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்  ()  
184 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்  ()  
185 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி  ()  
186 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்  ()  
187 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி  ()  
188 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்  ()  
189 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை  ()  
190 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை  ()  
191 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி  ()  
192 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம  ()  
193 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை  ()  
194 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்  ()  
195 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்  ()  
196 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்  ()  
197 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 38. வாய்மை  ()  
198 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்  ()  
199 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்  ()  
200 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை  ()  
201 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை  ()  
202 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 43. சோதனை  ()  
203 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்  ()  
204 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்  ()  
205 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி  ()  
206 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை  ()  
207 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்  ()  
208 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்  ()  
209 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்  ()  
210 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்  ()  
211 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்  ()  
212 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து  ()  
213 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து  ()  
214 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து  ()  
215 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து  ()  
216 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து  ()  
217 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து  ()  
218 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு  ()  
219 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்  ()  
220 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்  ()  
221 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்  ()  
222 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்  ()  
223 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்  ()  
224 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்  ()  
225 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்  ()  
226 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை  ()  
227 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி  ()  
228 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி  ()  
229 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை  ()  
230 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்  ()  
231 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்  ()  

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.000  
விநாயகர் வணக்கம்  
பண் -   ( )

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.100  
பாயிரம்  
பண் -   ( )

கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.101  
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்  
பண் -   ( )

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.102  
முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு  
பண் -   ( )

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.103  
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு  
பண் -   ( )

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.104  
முதல் தந்திரம் - 4. உபதேசம்  
பண் -   ( )

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.105  
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை  
பண் -   ( )

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.106  
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை  
பண் -   ( )

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.107  
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை  
பண் -   ( )

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.108  
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை  
பண் -   ( )

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.109  
முதல் தந்திரம் - 9. கொல்லாமை  
பண் -   ( )

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.110  
முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்  
பண் -   ( )

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.11,

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.111  
முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை  
பண் -   ( )

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.112  
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு  
பண் -   ( )

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.113  
முதல் தந்திரம் - 13. நல்குரவு  
பண் -   ( )

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.114  
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்  
பண் -   ( )

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.115  
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்  
பண் -   ( )

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.116  
முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை  
பண் -   ( )

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.117  
முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு  
பண் -   ( )

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.118  
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு  
பண் -   ( )

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.19,

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.119  
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்  
பண் -   ( )

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.120  
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்  
பண் -   ( )

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.121  
முதல் தந்திரம் - 21. அன்புடைமை  
பண் -   ( )

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.122  
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்  
பண் -   ( )

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.123  
முதல் தந்திரம் - 23. கல்வி  
பண் -   ( )

குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.124  
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்  
பண் -   ( )

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.125  
முதல் தந்திரம் - 25. கல்லாமை  
பண் -   ( )

கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.126  
முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை  
பண் -   ( )

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.127  
முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை  
பண் -   ( )

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.201  
இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்  
பண் -   ( )

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.202  
இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு  
பண் -   ( )

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.203  
இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்  
பண் -   ( )

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.204  
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி  
பண் -   ( )

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.205  
இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்  
பண் -   ( )

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.206  
இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு  
பண் -   ( )

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.207  
இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்  
பண் -   ( )

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 8,

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.208  
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்  
பண் -   ( )

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.209  
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி  
பண் -   ( )

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.210  
இரண்டாம் தந்திரம் - 10. திதி  
பண் -   ( )

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.211  
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்  
பண் -   ( )

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.212  
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்  
பண் -   ( )

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.213  
இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்  
பண் -   ( )

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.214  
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை  
பண் -   ( )

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.215  
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்  
பண் -   ( )

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.216  
இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்  
பண் -   ( )

திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.217  
இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்  
பண் -   ( )

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.218  
இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை  
பண் -   ( )

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.219  
இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்  
பண் -   ( )

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.220  
இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்  
பண் -   ( )

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.221  
இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை  
பண் -   ( )

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.222  
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை  
பண் -   ( )

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.223  
இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை  
பண் -   ( )

ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.224  
இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை  
பண் -   ( )

பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.225  
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்  
பண் -   ( )

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.301  
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்  
பண் -   ( )

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.302  
மூன்றாம் தந்திரம் - 2. இயமம்  
பண் -   ( )

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 3,

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.303  
மூன்றாம் தந்திரம் - 3. நியமம்  
பண் -   ( )

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே. 

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.304  
மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்  
பண் -   ( )

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.305  
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  
பண் -   ( )

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.306  
மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்  
பண் -   ( )

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.307  
மூன்றாம் தந்திரம் - 7. தாரணை  
பண் -   ( )

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.308  
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்  
பண் -   ( )

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.309  
மூன்றாம் தந்திரம் - 9. சமாதி  
பண் -   ( )

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.310  
மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு  
பண் -   ( )

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.311  
மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி  
பண் -   ( )

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.312  
மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை  
பண் -   ( )

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.313  
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்  
பண் -   ( )

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.314  
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்  
பண் -   ( )

மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.315  
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை  
பண் -   ( )

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.316  
மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்  
பண் -   ( )

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.317  
மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்  
பண் -   ( )

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.318  
மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்  
பண் -   ( )

கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்துநட்ட மிருக்க நமனில்லை தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.319  
மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்  
பண் -   ( )

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.320  
மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை  
பண் -   ( )

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.321  
மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்  
பண் -   ( )

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.401  
நான்காம் தந்திரம் - 1. அசபை  
பண் -   ( )

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.402  
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்  
பண் -   ( )

இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.403  
நான்காம் தந்திரம் - 3. அருச்சனை  
பண் -   ( )

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.404  
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்  
பண் -   ( )

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.405  
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்  
பண் -   ( )

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.406  
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்  
பண் -   ( )

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.407  
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி  
பண் -   ( )

அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.408  
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்  
பண் -   ( )

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.409  
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்  
பண் -   ( )

ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.410  
நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்  
பண் -   ( )

அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.411  
நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்  
பண் -   ( )

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.412  
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்  
பண் -   ( )

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.413  
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்  
பண் -   ( )

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.501  
ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்  
பண் -   ( )

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.502  
ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்  
பண் -   ( )

இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.503  
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்  
பண் -   ( )

பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.504  
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்  
பண் -   ( )

வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.505  
ஐந்தாம் தந்திரம் - 5. சரியை  
பண் -   ( )

நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.506  
ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை  
பண் -   ( )

பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.507  
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்  
பண் -   ( )

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.508  
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்  
பண் -   ( )

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.509  
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்  
பண் -   ( )

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.510  
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்  
பண் -   ( )

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.511  
ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்  
பண் -   ( )

மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.512  
ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்  
பண் -   ( )

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.513  
ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி  
பண் -   ( )

சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.514  
ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்  
பண் -   ( )

தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.515  
ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்  
பண் -   ( )

சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.516  
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்  
பண் -   ( )

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.517  
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்  
பண் -   ( )

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.518  
ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்  
பண் -   ( )

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.519  
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்  
பண் -   ( )

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.601  
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்  
பண் -   ( )

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.602  
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு  
பண் -   ( )

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.603  
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்  
பண் -   ( )

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.604  
ஆறாம் தந்திரம் - 4.துறவு  
பண் -   ( )

இறப்பும் பிறப்பும் இருமையும நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.605  
ஆறாம் தந்திரம் - 5.தவம்  
பண் -   ( )

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.606  
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்  
பண் -   ( )

தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.607  
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்  
பண் -   ( )

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.608  
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்  
பண் -   ( )

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.609  
ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்  
பண் -   ( )

தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.610  
ஆறாம் தந்திரம் - 10. திருநீறு  
பண் -   ( )

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.611  
ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்  
பண் -   ( )

ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.612  
ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்  
பண் -   ( )

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.613  
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்  
பண் -   ( )

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.614  
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்  
பண் -   ( )

தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.701  
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்  
பண் -   ( )

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.702  
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்  
பண் -   ( )

இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.703  
ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்  
பண் -   ( )

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.704  
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்  
பண் -   ( )

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.705  
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்  
பண் -   ( )

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.706  
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்  
பண் -   ( )

உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.707  
ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்  
பண் -   ( )

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.708  
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்  
பண் -   ( )

உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.709  
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு  
பண் -   ( )

இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.710  
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி  
பண் -   ( )

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.711  
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை  
பண் -   ( )

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.712  
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை  
பண் -   ( )

ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.713  
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை  
பண் -   ( )

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.714  
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை  
பண் -   ( )

திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.715  
ஏழாம் தந்திரம் - 15. போசன விதி  
பண் -   ( )

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.716  
ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி  
பண் -   ( )

விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.717  
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்  
பண் -   ( )

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.718  
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி  
பண் -   ( )

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.719  
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை  
பண் -   ( )

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.720  
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்  
பண் -   ( )

உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.721  
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்  
பண் -   ( )

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.722  
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்  
பண் -   ( )

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.723  
ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்  
பண் -   ( )

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.724  
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்  
பண் -   ( )

எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.725  
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்  
பண் -   ( )

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.726  
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்  
பண் -   ( )

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.727  
ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்  
பண் -   ( )

உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.728  
ஏழாம் தந்திரம் - 28. புருடன்  
பண் -   ( )

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.729  
ஏழாம் தந்திரம் - 29. சீவன்  
பண் -   ( )

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.730  
ஏழாம் தந்திரம் - 30. பசு  
பண் -   ( )

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.731  
ஏழாம் தந்திரம் - 31. போதன்  
பண் -   ( )

சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.732  
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை  
பண் -   ( )

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.733  
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை  
பண் -   ( )

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.734  
ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி  
பண் -   ( )

உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.735  
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி  
பண் -   ( )

தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.736  
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்  
பண் -   ( )

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.737  
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்  
பண் -   ( )

வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.738  
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்  
பண் -   ( )

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.801  
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்  
பண் -   ( )

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.802  
எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்  
பண் -   ( )

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.803  
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்  
பண் -   ( )

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.804  
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை  
பண் -   ( )

சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.805  
எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்  
பண் -   ( )

தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.806  
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்  
பண் -   ( )

நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.807  
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்  
பண் -   ( )

தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.808  
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை  
பண் -   ( )

அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.809  
எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்  
பண் -   ( )

சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 10,

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.810  
எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்  
பண் -   ( )

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.811  
எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்  
பண் -   ( )

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.812  
எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்  
பண் -   ( )

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.813  
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை  
பண் -   ( )

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.814  
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்  
பண் -   ( )

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.815  
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்  
பண் -   ( )

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.816  
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை  
பண் -   ( )

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.817  
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்  
பண் -   ( )

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.818  
எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்  
பண் -   ( )

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.819  
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்  
பண் -   ( )

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.
[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.820  
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்  
பண் -   ( )

தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.821  
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்  
பண் -   ( )

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.822  
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்  
பண் -   ( )

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.823  
எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி  
பண் -   ( )

சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.824  
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்  
பண் -   ( )

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.825  
எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்  
பண் -   ( )

இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.826  
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி  
பண் -   ( )

தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.827  
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்  
பண் -   ( )

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.828  
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி  
பண் -   ( )

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.829  
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்  
பண் -   ( )

முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.830  
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை  
பண் -   ( )

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.831  
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை  
பண் -   ( )

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.832  
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி  
பண் -   ( )

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.833  
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம  
பண் -   ( )

நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.834  
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை  
பண் -   ( )

பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.835  
எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்  
பண் -   ( )

விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.836  
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்  
பண் -   ( )

சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
ஓவி விடும்தத் துவமசி உண்மையே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.837  
எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்  
பண் -   ( )

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.838  
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை  
பண் -   ( )

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.839  
எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்  
பண் -   ( )

முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.840  
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்  
பண் -   ( )

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.841  
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை  
பண் -   ( )

முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.842  
எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை  
பண் -   ( )

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.843  
எட்டாம் தந்திரம் - 43. சோதனை  
பண் -   ( )

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.901  
ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்  
பண் -   ( )

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.902  
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்  
பண் -   ( )

மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.903  
ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி  
பண் -   ( )

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.904  
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை  
பண் -   ( )

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.905  
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்  
பண் -   ( )

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.906  
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்  
பண் -   ( )

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.907  
ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்  
பண் -   ( )

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.908  
ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்  
பண் -   ( )

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.909  
ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்  
பண் -   ( )

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.910  
ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து  
பண் -   ( )

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.911  
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து  
பண் -   ( )

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.912  
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து  
பண் -   ( )

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.913  
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து  
பண் -   ( )

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.914  
ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து  
பண் -   ( )

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.915  
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து  
பண் -   ( )

குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.916  
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு  
பண் -   ( )

உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.917  
ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்  
பண் -   ( )

மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.918  
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்  
பண் -   ( )

எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.919  
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்  
பண் -   ( )

பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.920  
ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்  
பண் -   ( )

செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.921  
ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்  
பண் -   ( )

சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.922  
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்  
பண் -   ( )

ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.923  
ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்  
பண் -   ( )

ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.924  
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை  
பண் -   ( )

காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.925  
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி  
பண் -   ( )

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.926  
ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி  
பண் -   ( )

தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.927  
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை  
பண் -   ( )

மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.928  
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்  
பண் -   ( )

மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.929  
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்  
பண் -   ( )

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai first last song thirumurai 10