திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் (கோயில் (சிதம்பரம்))
2 திருநாவுக்கரசர் - தேவாரம் -பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், (கோயில் (சிதம்பரம்))
3 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு (திருநெல்வாயில் அரத்துறை)
4 திருநாவுக்கரசர் - தேவாரம் -வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, (திருவண்ணாமலை)
5 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டி ஏறு உகந்து ஏறி, (திருவண்ணாமலை)
6 திருநாவுக்கரசர் - தேவாரம் -எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; (திருவாரூர்)
7 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, (திருவாரூர்)
8 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாறு அலைத்த படுவெண் தலையினன்; (திருஅன்னியூர் (பொன்னூர்))
9 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் மால் கடல் பரவி (திருமறைக்காடு (வேதாரண்யம்))
10 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! (திருமறைக்காடு (வேதாரண்யம்))
11 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், (திருமீயச்சூர்)
12 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரைந்து கை தொழுவாரையும் காதலன்; (திருவீழிமிழலை)
13 திருநாவுக்கரசர் - தேவாரம் -என் பொனே! இமையோர் தொழு (திருவீழிமிழலை)
14 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் (திருவிடைமருதூர்)
15 திருநாவுக்கரசர் - தேவாரம் -பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் (திருவிடைமருதூர்)
16 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; (திருப்பேரெயில்)
17 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, பவளத்தை, முளைத்த எம் (திருவெண்ணியூர்)
18 திருநாவுக்கரசர் - தேவாரம் -முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், (திருக்கடம்பந்துறை (குளித்தலை))
19 திருநாவுக்கரசர் - தேவாரம் -தளரும் கோள் அரவத்தொடு தண்மதி (திருக்கடம்பூர்)
20 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவராய் இரு மூவரும் ஆயவன், (திருக்கடம்பூர்)
21 திருநாவுக்கரசர் - தேவாரம் -என்னில் ஆரும் எனக்கு இனியார் (திருஇன்னம்பர்)
22 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி (திருகுடமூக்கு (கும்பகோணம்))
23 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடுங் கண் வெண்தலை கொண்டு, (திருநின்றியூர்)
24 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒற்றி ஊரும் ஒளி மதி, (திருவொற்றியூர்)
25 திருநாவுக்கரசர் - தேவாரம் -முந்தி மூ எயில் எய்த (திருப்பாசூர்)
26 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் (திருவன்னியூர்)
27 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வாய்தல் உளான், வந்து; (திருவையாறு)
28 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் (திருவையாறு)
29 திருநாவுக்கரசர் - தேவாரம் -நிறைக்க வாலியள் அல்லள், இந் (திருவாவடுதுறை)
30 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; (திருப்பராய்துறை)
31 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் (திருவானைக்கா)
32 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி கொள் செல்வ விழாக் (திருப்பூந்துருத்தி)
33 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், (திருச்சோற்றுத்துறை)
34 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், (திருநெய்த்தானம்)
35 திருநாவுக்கரசர் - தேவாரம் -அருவனாய், அத்திஈர் உரி போர்த்து (திருப்பழனம்)
36 திருநாவுக்கரசர் - தேவாரம் -கான் அறாத கடி பொழில் (திருச்செம்பொன்பள்ளி)
37 திருநாவுக்கரசர் - தேவாரம் -மலைக் கொள் ஆனை மயக்கிய (திருக்கடவூர் வீரட்டம்)
38 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழை கொள் காதினர், கோவண (திருக்கடவூர் மயானம்)
39 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொள்ளும் காதன்மை பெய்து உறும் (திருமயிலாடுதுறை)
40 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; (திருக்கழிப்பாலை)
41 திருநாவுக்கரசர் - தேவாரம் -உடையர் கோவணம், ஒன்றும் குறைவு (திருப்பைஞ்ஞீலி)
42 திருநாவுக்கரசர் - தேவாரம் -நன்று நாள்தொறும் நம் வினை (திருவேட்களம்)
43 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், (திருநல்லம்)
44 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா மாத்து ஆகிய மால் (திருவாமாத்தூர்)
45 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாது இயன்று மனைக்கு இரு! (சீர்காழி)
46 திருநாவுக்கரசர் - தேவாரம் -துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு (திருப்புகலூர்)
47 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்டு செய்த பழவினையின் பயன் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
48 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
49 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண் காட்டிப் படிஆய தன் (திருவெண்காடு)
50 திருநாவுக்கரசர் - தேவாரம் -எங்கே என்ன, இருந்த இடம் (திருவாய்மூர்)
51 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீல மா மணிகண்டத்தர்; நீள் (திருப்பாலைத்துறை)
52 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லர்; நல்லது ஓர் நாகம் (திருநாகேச்சரம்)
53 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோணல் மா மதி சூடி, (திருவதிகை வீரட்டானம்)
54 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு நாள்மலர் கொண்டு, அவன் (திருவதிகை வீரட்டானம்)
55 திருநாவுக்கரசர் - தேவாரம் -வீறு தான் உடை வெற்பன் (திருநாரையூர்)
56 திருநாவுக்கரசர் - தேவாரம் -மைக் கொள் கண் உமை (திருக்கோளிலி (திருக்குவளை))
57 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்னமே நினையா தொழிந்தேன், உனை; (திருக்கோளிலி (திருக்குவளை))
58 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலை எலாம் பறிக்கும் சமண்கையர் (திருப்பழையாறை வடதளி)
59 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் ஆற்றின் படை வேண்டி, (திருமாற்பேறு)
60 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏதும் ஒன்றும் அறிவு இலர் (திருமாற்பேறு)
61 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து ஊரும் புனல் மொய் (திருஅரிசிற்கரைப்புத்தூர்)
62 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))
63 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் (திருத்தென்குரங்காடுதுறை)
64 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் (திருக்கோழம்பம்)
65 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் (திருப்பூவனூர்)
66 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் ஆர் கடலின் விடம் (திருவலஞ்சுழி)
67 திருநாவுக்கரசர் - தேவாரம் -படையும் பூதமும் பாம்பும் புல்வாய் (திருவாஞ்சியம்)
68 திருநாவுக்கரசர் - தேவாரம் -உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், (திருநள்ளாறு)
69 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் (திருக்கருவிலிக்கொட்டிட்டை)
70 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்ட பேச்சினில் காளையர் தங்கள் (திருக்கொண்டீச்சரம்)
71 திருநாவுக்கரசர் - தேவாரம் -குசையும் அங்கையில் கோசமும் கொண்ட (திருவிசயமங்கை)
72 திருநாவுக்கரசர் - தேவாரம் -வைத்த மாடும், மனைவியும், மக்கள், (திருநீலக்குடி)
73 திருநாவுக்கரசர் - தேவாரம் -தங்கு அலப்பிய தக்கன் பெரு (திருமங்கலக்குடி)
74 திருநாவுக்கரசர் - தேவாரம் -விரும்பி ஊறு விடேல், மட (திருவெறும்பூர்)
75 திருநாவுக்கரசர் - தேவாரம் -மரக் கொக்குஆம் என வாய்விட்டு (திருக்குரக்குக்கா)
76 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவின் நாதனும், செம்மலர் மேல் (திருக்கானூர்)
77 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூரியா வரும், புண்ணியம்; பொய் (திருச்சேறை (உடையார்கோவில்))
78 திருநாவுக்கரசர் - தேவாரம் -சங்கு உலாம் முன்கைத் தையல் (திருக்கோடி (கோடிக்கரை))
79 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள் எருக்கு அரவம் விரவும் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))
80 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானம் சேர் மதி சூடிய (திருஅன்பில் ஆலந்துறை)
81 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, (திருப்பாண்டிக்கொடுமுடி)
82 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ட மா மலர் கொண்டு (திருவான்மியூர்)
83 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
84 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)
85 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா (திருச்சிராப்பள்ளி)
86 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலபாசம் பிடித்து எழு தூதுவர், (திருவாட்போக்கி (ரத்னகிரி))
87 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))
88 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருகல் ஆம், தவம்; பேதைமை (திருமருகல்)
89 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; (பொது -தனித் திருக்குறுந்தொகை)
90 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை (பொது -தனித் திருக்குறுந்தொகை)
91 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏ இலானை, என் இச்சை (பொது -தனித் திருக்குறுந்தொகை)
92 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)
93 திருநாவுக்கரசர் - தேவாரம் -காசனை, கனலை, கதிர் மா (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை)
94 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, (தொழற்பாலதே திருக்குறுந்தொகை)
95 திருநாவுக்கரசர் - தேவாரம் -புக்கு அணைந்து புரிந்து அலர் (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)
96 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் உள்ளத் திரள் புன்சடையின் (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை)
97 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை)
98 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு அலைத்தது ஓர் மேனி, (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)
99 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாவமும் பழி பற்று அற (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை)
100 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின் (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
பண் - திருக்குறுந்தொகை (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
பண் - திருக்குறுந்தொகை (திருநெல்வாயில் அரத்துறை )
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட உடல் உளானை, ஒப்பாரி இலாத எம் அடல் உளானை, அரத்துறை மேவிய சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.004  
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.005  
பட்டி ஏறு உகந்து ஏறி,
பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம் இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும் அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.006  
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
பண் - திருக்குறுந்தொகை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; முப்போதும் பிரமன் தொழ நின்றவன், செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன், அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.007  
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பண் - திருக்குறுந்தொகை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, பக்கமே பகுவாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய், அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.008  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
பண் - திருக்குறுந்தொகை (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
பாறு அலைத்த படுவெண் தலையினன்; நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய, ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.009  
ஓதம் மால் கடல் பரவி
பண் - திருக்குறுந்தொகை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம் மாதரார் வலம்கொள் மறைக்காடரைக் காதல்செய்து, கருதப்படுமவர் பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
பண் - திருக்குறுந்தொகை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
பண் - திருக்குறுந்தொகை (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.012  
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
பண் - திருக்குறுந்தொகை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கரைந்து கை தொழுவாரையும் காதலன்; வரைந்து வைது எழுவாரையும் வாடலன்; நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் விரைந்து போவது, வீழிமிழலைக்கே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.013  
என் பொனே! இமையோர் தொழு
பண் - திருக்குறுந்தொகை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்; செம்பொனே! திரு வீழிமிழலையுள் அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும், ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம், இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
பண் - திருக்குறுந்தொகை (திருப்பேரெயில் )
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடைய கபாலியார்; துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்; பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.017  
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
பண் - திருக்குறுந்தொகை (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப் பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர் நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பந்துறை (குளித்தலை) )
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்- கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக் களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு அது ஆய குழகன், உறைவு இடம்- பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்
பண் - திருக்குறுந்தொகை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை; என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்; என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
பண் - திருக்குறுந்தொகை (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு ஆவணத்து உடையான், அடியார்களை;- தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர் கோவணத்து உடையான், குடமூக்கிலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.023  
கொடுங் கண் வெண்தலை கொண்டு,
பண் - திருக்குறுந்தொகை (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப் படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்- நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.024  
ஒற்றி ஊரும் ஒளி மதி,
பண் - திருக்குறுந்தொகை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை; ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.025  
முந்தி மூ எயில் எய்த
பண் - திருக்குறுந்தொகை (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
முந்தி மூ எயில் எய்த முதல்வனார், சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார், அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்- பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
பண் - திருக்குறுந்தொகை (திருவன்னியூர் )
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.027  
சிந்தை வாய்தல் உளான், வந்து;
பண் - திருக்குறுந்தொகை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்; பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்; முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.028  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
பண் - திருக்குறுந்தொகை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர் அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.029  
நிறைக்க வாலியள் அல்லள், இந்
பண் - திருக்குறுந்தொகை (திருவாவடுதுறை )
நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை; மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்- பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு- துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
பண் - திருக்குறுந்தொகை (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.031  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
பண் - திருக்குறுந்தொகை (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்; ஆனைக்காவில் எம்மானை அணைகிலார், ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.032  
கொடி கொள் செல்வ விழாக்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக் கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார், பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர் அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
பண் - நாட்டைக்குறிஞ்சி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார், தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.034  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
பண் - திருக்குறுந்தொகை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன், நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச் சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.035  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
பண் - திருக்குறுந்தொகை (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும், பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான், திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.036  
கான் அறாத கடி பொழில்
பண் - திருக்குறுந்தொகை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான், ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி- தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.037  
மலைக் கொள் ஆனை மயக்கிய
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே! கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால், கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.038  
குழை கொள் காதினர், கோவண
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
குழை கொள் காதினர், கோவண ஆடையர், உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்; பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்
பண் - திருக்குறுந்தொகை (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.040  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
பண் - திருக்குறுந்தொகை (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.041  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
பண் - திருக்குறுந்தொகை (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்- படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.042  
நன்று நாள்தொறும் நம் வினை
பண் - திருக்குறுந்தொகை (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
பண் - திருக்குறுந்தொகை (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்! நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல் சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.044  
மா மாத்து ஆகிய மால்
பண் - திருக்குறுந்தொகை (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி; ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.045  
மாது இயன்று மனைக்கு இரு!
பண் - திருக்குறுந்தொகை (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால், நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்; சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.046  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
பண் - திருக்குறுந்தொகை (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி, பொன் நக்கன்ன சடை, புகலூரரோ! மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன் என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.047  
பண்டு செய்த பழவினையின் பயன்
பண் - திருக்குறுந்தொகை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே! வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.048  
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
பண் - திருக்குறுந்தொகை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா! ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.049  
பண் காட்டிப் படிஆய தன்
பண் - திருக்குறுந்தொகை (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.050  
எங்கே என்ன, இருந்த இடம்
பண் - திருக்குறுந்தொகை (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக் கோல மா மதி கங்கையும் கூட்டினார்; சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப் பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.052  
நல்லர்; நல்லது ஓர் நாகம்
பண் - திருக்குறுந்தொகை (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்; வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்; பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.053  
கோணல் மா மதி சூடி,
பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கோணல் மா மதி சூடி, ஓர் கோவண நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை; பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.054  
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்- கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ- ரட்டனார் அடி சேருமவருக்கே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.055  
வீறு தான் உடை வெற்பன்
பண் - திருக்குறுந்தொகை (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்- கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும், நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும், அம்ம அழகிதே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.056  
மைக் கொள் கண் உமை
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத் தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன், கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை, தொழ நம்வினை நாசமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன், செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி மன்னனே, அடியேனை மறவலே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,
பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்
பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.061  
முத்து ஊரும் புனல் மொய்
பண் - திருக்குறுந்தொகை (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம் மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை)
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர் கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்- புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான் தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக் குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்; கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்- தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.065  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார், பாவம் ஆயின பாறிப் பறையவே, தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.066  
ஓதம் ஆர் கடலின் விடம்
பண் - திருக்குறுந்தொகை (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன், பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை, மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை, பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
பண் - திருக்குறுந்தொகை (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.068  
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
பண் - திருக்குறுந்தொகை (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், தெள் ஆறாச் சிவசோதித்திரளினை, கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை நள்ளாறா! என, நம் வினை நாசமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர், கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
பண் - திருக்குறுந்தொகை (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ் வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே, இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு
பண் - திருக்குறுந்தொகை (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.074  
விரும்பி ஊறு விடேல், மட
பண் - திருக்குறுந்தொகை (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு
பண் - திருக்குறுந்தொகை (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.076  
திருவின் நாதனும், செம்மலர் மேல்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்
பண் - திருக்குறுந்தொகை (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்; கூரிது ஆய அறிவு கைகூடிடும்- சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரிபாகன்தன் நாமம் நவிலவே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்
பண் - திருக்குறுந்தொகை (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.080  
வானம் சேர் மதி சூடிய
பண் - திருக்குறுந்தொகை (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை; ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக் கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
பண் - திருக்குறுந்தொகை (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர் பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.082  
விண்ட மா மலர் கொண்டு
பண் - திருக்குறுந்தொகை (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர், அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்! பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும், வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.083  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பண் - திருக்குறுந்தொகை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்; காணத் தான் இனியான் கடல் நாகைக்கா- ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
பண் - திருக்குறுந்தொகை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
பண் - திருக்குறுந்தொகை (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார்; கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும் சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பண் - திருக்குறுந்தொகை (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)
காலபாசம் பிடித்து எழு தூதுவர், பாலகர், விருத்தர், பழையார் எனார்; ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார் சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
பண் - திருக்குறுந்தொகை (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.088  
பெருகல் ஆம், தவம்; பேதைமை
பண் - திருக்குறுந்தொகை (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.089  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை )
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; ஒன்று கீள் உமையோடும் உடுத்தது- ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.090  
மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை )
மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.091  
ஏ இலானை, என் இச்சை
பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை )
ஏ இலானை, என் இச்சை அகம்படிக்- கோயிலானை, குணப் பெருங்குன்றினை, வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற தாய் இலானை, தழுவும், என் ஆவியே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.093  
காசனை, கனலை, கதிர் மா
பண் - திருக்குறுந்தொகை (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )
காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.094  
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,
பண் - திருக்குறுந்தொகை (தொழற்பாலதே திருக்குறுந்தொகை )
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு- முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்- துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.095  
புக்கு அணைந்து புரிந்து அலர்
பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்; நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்; சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்
பண் - திருக்குறுந்தொகை (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.097  
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
பண் - திருக்குறுந்தொகை (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,
பண் - திருக்குறுந்தொகை (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை; தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர் ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.099  
பாவமும் பழி பற்று அற
பண் - திருக்குறுந்தொகை (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே.
| [1] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )
வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.
| [1] |