சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))  
2 திருநாவுக்கரசர் - தேவாரம் -பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  (கோயில் (சிதம்பரம்))  
3 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  (திருநெல்வாயில் அரத்துறை)  
4 திருநாவுக்கரசர் - தேவாரம் -வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  (திருவண்ணாமலை)  
5 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டி ஏறு உகந்து ஏறி,  (திருவண்ணாமலை)  
6 திருநாவுக்கரசர் - தேவாரம் -எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  (திருவாரூர்)  
7 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  (திருவாரூர்)  
8 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாறு அலைத்த படுவெண் தலையினன்;  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
9 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் மால் கடல் பரவி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
10 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
11 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  (திருமீயச்சூர்)  
12 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  (திருவீழிமிழலை)  
13 திருநாவுக்கரசர் - தேவாரம் -என் பொனே! இமையோர் தொழு  (திருவீழிமிழலை)  
14 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  (திருவிடைமருதூர்)  
15 திருநாவுக்கரசர் - தேவாரம் -பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  (திருவிடைமருதூர்)  
16 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  (திருப்பேரெயில்)  
17 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  (திருவெண்ணியூர்)  
18 திருநாவுக்கரசர் - தேவாரம் -முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  (திருக்கடம்பந்துறை (குளித்தலை))  
19 திருநாவுக்கரசர் - தேவாரம் -தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  (திருக்கடம்பூர்)  
20 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  (திருக்கடம்பூர்)  
21 திருநாவுக்கரசர் - தேவாரம் -என்னில் ஆரும் எனக்கு இனியார்  (திருஇன்னம்பர்)  
22 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  (திருகுடமூக்கு (கும்பகோணம்))  
23 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடுங் கண் வெண்தலை கொண்டு,  (திருநின்றியூர்)  
24 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒற்றி ஊரும் ஒளி மதி,  (திருவொற்றியூர்)  
25 திருநாவுக்கரசர் - தேவாரம் -முந்தி மூ எயில் எய்த  (திருப்பாசூர்)  
26 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  (திருவன்னியூர்)  
27 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வாய்தல் உளான், வந்து;  (திருவையாறு)  
28 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  (திருவையாறு)  
29 திருநாவுக்கரசர் - தேவாரம் -நிறைக்க வாலியள் அல்லள், இந்  (திருவாவடுதுறை)  
30 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  (திருப்பராய்துறை)  
31 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  (திருவானைக்கா)  
32 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி கொள் செல்வ விழாக்  (திருப்பூந்துருத்தி)  
33 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  (திருச்சோற்றுத்துறை)  
34 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  (திருநெய்த்தானம்)  
35 திருநாவுக்கரசர் - தேவாரம் -அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  (திருப்பழனம்)  
36 திருநாவுக்கரசர் - தேவாரம் -கான் அறாத கடி பொழில்  (திருச்செம்பொன்பள்ளி)  
37 திருநாவுக்கரசர் - தேவாரம் -மலைக் கொள் ஆனை மயக்கிய  (திருக்கடவூர் வீரட்டம்)  
38 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழை கொள் காதினர், கோவண  (திருக்கடவூர் மயானம்)  
39 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொள்ளும் காதன்மை பெய்து உறும்  (திருமயிலாடுதுறை)  
40 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  (திருக்கழிப்பாலை)  
41 திருநாவுக்கரசர் - தேவாரம் -உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  (திருப்பைஞ்ஞீலி)  
42 திருநாவுக்கரசர் - தேவாரம் -நன்று நாள்தொறும் நம் வினை  (திருவேட்களம்)  
43 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  (திருநல்லம்)  
44 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா மாத்து ஆகிய மால்  (திருவாமாத்தூர்)  
45 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாது இயன்று மனைக்கு இரு!  (சீர்காழி)  
46 திருநாவுக்கரசர் - தேவாரம் -துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  (திருப்புகலூர்)  
47 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்டு செய்த பழவினையின் பயன்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
48 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
49 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண் காட்டிப் படிஆய தன்  (திருவெண்காடு)  
50 திருநாவுக்கரசர் - தேவாரம் -எங்கே என்ன, இருந்த இடம்  (திருவாய்மூர்)  
51 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீல மா மணிகண்டத்தர்; நீள்  (திருப்பாலைத்துறை)  
52 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லர்; நல்லது ஓர் நாகம்  (திருநாகேச்சரம்)  
53 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோணல் மா மதி சூடி,  (திருவதிகை வீரட்டானம்)  
54 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  (திருவதிகை வீரட்டானம்)  
55 திருநாவுக்கரசர் - தேவாரம் -வீறு தான் உடை வெற்பன்  (திருநாரையூர்)  
56 திருநாவுக்கரசர் - தேவாரம் -மைக் கொள் கண் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))  
57 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  (திருக்கோளிலி (திருக்குவளை))  
58 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  (திருப்பழையாறை வடதளி)  
59 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் ஆற்றின் படை வேண்டி,  (திருமாற்பேறு)  
60 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏதும் ஒன்றும் அறிவு இலர்  (திருமாற்பேறு)  
61 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து ஊரும் புனல் மொய்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
62 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))  
63 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  (திருத்தென்குரங்காடுதுறை)  
64 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  (திருக்கோழம்பம்)  
65 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  (திருப்பூவனூர்)  
66 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் ஆர் கடலின் விடம்  (திருவலஞ்சுழி)  
67 திருநாவுக்கரசர் - தேவாரம் -படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  (திருவாஞ்சியம்)  
68 திருநாவுக்கரசர் - தேவாரம் -உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  (திருநள்ளாறு)  
69 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  (திருக்கருவிலிக்கொட்டிட்டை)  
70 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  (திருக்கொண்டீச்சரம்)  
71 திருநாவுக்கரசர் - தேவாரம் -குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  (திருவிசயமங்கை)  
72 திருநாவுக்கரசர் - தேவாரம் -வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  (திருநீலக்குடி)  
73 திருநாவுக்கரசர் - தேவாரம் -தங்கு அலப்பிய தக்கன் பெரு  (திருமங்கலக்குடி)  
74 திருநாவுக்கரசர் - தேவாரம் -விரும்பி ஊறு விடேல், மட  (திருவெறும்பூர்)  
75 திருநாவுக்கரசர் - தேவாரம் -மரக் கொக்குஆம் என வாய்விட்டு  (திருக்குரக்குக்கா)  
76 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவின் நாதனும், செம்மலர் மேல்  (திருக்கானூர்)  
77 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூரியா வரும், புண்ணியம்; பொய்  (திருச்சேறை (உடையார்கோவில்))  
78 திருநாவுக்கரசர் - தேவாரம் -சங்கு உலாம் முன்கைத் தையல்  (திருக்கோடி (கோடிக்கரை))  
79 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள் எருக்கு அரவம் விரவும்  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
80 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானம் சேர் மதி சூடிய  (திருஅன்பில் ஆலந்துறை)  
81 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
82 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ட மா மலர் கொண்டு  (திருவான்மியூர்)  
83 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
84 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)  
85 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  (திருச்சிராப்பள்ளி)  
86 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  (திருவாட்போக்கி (ரத்னகிரி))  
87 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
88 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருகல் ஆம், தவம்; பேதைமை  (திருமருகல்)  
89 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
90 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
91 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏ இலானை, என் இச்சை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
92 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)  
93 திருநாவுக்கரசர் - தேவாரம் -காசனை, கனலை, கதிர் மா  (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை)  
94 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  (தொழற்பாலதே திருக்குறுந்தொகை)  
95 திருநாவுக்கரசர் - தேவாரம் -புக்கு அணைந்து புரிந்து அலர்  (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)  
96 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் உள்ளத் திரள் புன்சடையின்  (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை)  
97 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை)  
98 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு அலைத்தது ஓர் மேனி,  (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)  
99 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாவமும் பழி பற்று அற  (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை)  
100 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  
பண் - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  
பண் - திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )

கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.004  
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.005  
பட்டி ஏறு உகந்து ஏறி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.006  
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.007  
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.008  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.009  
ஓதம் மால் கடல் பரவி  
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.012  
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.013  
என் பொனே! இமையோர் தொழு  
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,
இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பேரெயில் )

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.017  
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)

முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பந்துறை (குளித்தலை) )

முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்  
பண் - திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;
என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  
பண் - திருக்குறுந்தொகை   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)

பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.023  
கொடுங் கண் வெண்தலை கொண்டு,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)

கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.024  
ஒற்றி ஊரும் ஒளி மதி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.025  
முந்தி மூ எயில் எய்த  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)

முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவன்னியூர் )

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.027  
சிந்தை வாய்தல் உளான், வந்து;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.028  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.029  
நிறைக்க வாலியள் அல்லள், இந்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.031  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்;
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.032  
கொடி கொள் செல்வ விழாக்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)

கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக்
கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்,
பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர்
அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  
பண் - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.034  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.035  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.036  
கான் அறாத கடி பொழில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான்,
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-
தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.037  
மலைக் கொள் ஆனை மயக்கிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.038  
குழை கொள் காதினர், கோவண  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்;
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.040  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.041  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)

உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.042  
நன்று நாள்தொறும் நம் வினை  
பண் - திருக்குறுந்தொகை   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)

கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.044  
மா மாத்து ஆகிய மால்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)

மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.045  
மாது இயன்று மனைக்கு இரு!  
பண் - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்;
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத்
தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.046  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.047  
பண்டு செய்த பழவினையின் பயன்  
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.048  
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.049  
பண் காட்டிப் படிஆய தன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.050  
எங்கே என்ன, இருந்த இடம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)

நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.052  
நல்லர்; நல்லது ஓர் நாகம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.053  
கோணல் மா மதி சூடி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.054  
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்-
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ-
ரட்டனார் அடி சேருமவருக்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.055  
வீறு தான் உடை வெற்பன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்-
கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும்,
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும், அம்ம அழகிதே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.056  
மைக் கொள் கண் உமை  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத்
தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன்,
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனை, தொழ நம்வினை நாசமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)

தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.061  
முத்து ஊரும் புனல் மொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)

முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை)

ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.065  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)

பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.066  
ஓதம் ஆர் கடலின் விடம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.068  
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
தெள் ஆறாச் சிவசோதித்திரளினை,
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறா! என, நம் வினை நாசமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)

மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)

வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு  
பண் - திருக்குறுந்தொகை   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)

தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.074  
விரும்பி ஊறு விடேல், மட  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)

விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)

மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர்,
சரக்குக் காவி, திரிந்து அயராது, கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்
குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.076  
திருவின் நாதனும், செம்மலர் மேல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்,
நள் இருப்பர், நரகக்குழியிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.080  
வானம் சேர் மதி சூடிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)

வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)

சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,
அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்
பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி
நட்டனை, தொழ, நம் வினை நாசமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.082  
விண்ட மா மலர் கொண்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.083  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  
பண் - திருக்குறுந்தொகை   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

மட்டு வார்குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்;
கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும்
சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)

காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  
பண் - திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)

பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.088  
பெருகல் ஆம், தவம்; பேதைமை  
பண் - திருக்குறுந்தொகை   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)

பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்;
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.089  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.090  
மாசு இல் வீணையும், மாலை  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.091  
ஏ இலானை, என் இச்சை  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )

கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.093  
காசனை, கனலை, கதிர் மா  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )

காசனை, கனலை, கதிர் மா மணித்-
தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்;
மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.094  
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  
பண் - திருக்குறுந்தொகை   (தொழற்பாலதே திருக்குறுந்தொகை )

அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.095  
புக்கு அணைந்து புரிந்து அலர்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை
மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )

பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.097  
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.099  
பாவமும் பழி பற்று அற  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )

பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )

வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai first last song thirumurai 5