Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.001   அரியானை, அந்தணர் தம் சிந்தை
பண் - பெரியதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.002   மங்குல் மதி தவழும் மாட
பண் - புக்கதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்; கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின் உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த் தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து உள்ளார்; தக்களூரார்- பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.003   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
பண் - ஏழைத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை, பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை, அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை, எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.004   சந்திரனை மா கங்கைத் திரையால்
பண் - அடையாளத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத- கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப் பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே; ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.006   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
பண் - குறிஞ்சி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி; அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி; சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி; சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி; பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி; பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி; திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.007   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
பண் - காப்புத்திருத்தாண்டகம் (திருவதிகை வீரட்டானம் )
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.008   விற்று ஊண் ஒன்று இல்லாத
பண் - திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண், வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால் மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண், மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப் பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான் காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன் காண்;அவன் என் கண் உளானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.009   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
பண் - திருத்தாண்டகம் (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து, வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக் கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்; சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.010   நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல்
பண் - திருத்தாண்டகம் (திருப்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை)
நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்; பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி; ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல் கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்; பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.011   பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம் (திருப்புன்கூரும் திருநீடூரும் சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை, பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை, துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை; திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.012   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
பண் - திருத்தாண்டகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து, தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார், கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும் வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.013   கொடி மாட நீள் தெருவு
பண் - குறிஞ்சி (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும், நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக; படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள் பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.014   நினைந்து உருகும் அடியாரை நைய
பண் - திருத்தாண்டகம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்; சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்; செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்- இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.015   குருகு ஆம்; வயிரம் ஆம்;
பண் - திருத்தாண்டகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.016   சூலப்படை உடையார் தாமே போலும்;
பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த திங்கள் கண்ணி உடையார் போலும்; மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்; வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்; மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்; ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.017   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம் பொன்தோள் மேல் நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலி கொள்வர்; மொய்த்த பூதம் கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள் தால வேடத்தர்; கொள்கை சொல்லின், ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.018   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்; கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்; இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.019   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
பண் - திருத்தாண்டகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.020   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
பண் - திருத்தாண்டகம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத சொல் உரைக்கத் தன் கை வாளால் சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை, மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல் அயனோடு மாலும் காணா நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.021   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்; கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்; அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.022   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
பண் - திருத்தாண்டகம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, பைஞ்ஞீலியானை, சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும் திருமுடிமேல்-திங்கள் சூடிப் பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர் தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,- கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.023   தூண்டு சுடர் அனைய சோதி
பண் - திருத்தாண்டகம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.024   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்; அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்; எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்; செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.025   உயிரா வணம் இருந்து, உற்று
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி, உள்ளக்கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி; அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட அயிராவணமே! என் அம்மானே! நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.026   பாதித் தன் திரு உருவில்
பண் - (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை, பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை, வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை, வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை, சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை, சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை, ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை, -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.027   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள் இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர் தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த் தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்; இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.028   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்; காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்; கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்; ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.029   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.030   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்; வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்; வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட, அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்- செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.031   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய்! என்றும், சுடர் ஒளியாய்! உள் விளங்கு சோதீ! என்றும், தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா! என்றும், கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா! என்றும், கலைமான் மறி ஏந்து கையா! என்றும், அடல் விடையாய்! ஆரமுதே! ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.032   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி! அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி! அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி! மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி! வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி! செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.033   பொரும் கை மதகரி உரிவைப்
பண் - அரநெறிதிருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை, பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை, கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை, காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை, இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும் அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.034   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ? கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ? காமனையும் கண் அழலால் விழித்த நாளோ? மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம் திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.035   தூண்டு சுடர் மேனித் தூநீறு
பண் - திருத்தாண்டகம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி, ஓர் சுழல் வாய் நாகம் பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள் அவை தாழ, புரி வெண்நூலர், நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார், வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி; வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.036   அலை ஆர் கடல் நஞ்சம்
பண் - திருத்தாண்டகம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே; கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே; சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே; பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.037   ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
பண் - திருத்தாண்டகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே! என்றேன், நானே; கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள் பூதப்பல் படையாய்! என்றேன், நானே; பேர் ஆயிரம் உடையாய்! என்றேன், நானே; பிறை சூடும் பிஞ்ஞகனே! என்றேன், நானே; ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.038   ஓசை ஒலி எலாம் ஆனாய்,
பண் - திருத்தாண்டகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே; வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே; பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.039   நீறு ஏறு திருமேனி உடையான்
பண் - திருத்தாண்டகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்; கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்; கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்; ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்; மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.040   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
பண் - திருத்தாண்டகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன் சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்; நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.041   வகை எலாம் உடையாயும் நீயே
பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான் கயிலை மேவினாய் நீயே என்றும், மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு மேவினாய் நீயே என்றும், பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும், பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும், திகை எலாம் தொழச் செல்வாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.042   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
பண் - திருத்தாண்டகம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம் இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே! மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.043   நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
பண் - திருத்தாண்டகம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை; கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை; சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு, பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.044   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
பண் - திருத்தாண்டகம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே! ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே! காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.045   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
பண் - திருத்தாண்டகம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி, திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார் உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்; கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என் தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.046   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
பண் - திருத்தாண்டகம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை, நன்மை தன்னை, கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை, செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை, அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.047   திருவே, என் செல்வமே, தேனே,
பண் - திருத்தாண்டகம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் சோதி மிக்க உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய், அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்! ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.048   நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்
பண் - திருத்தாண்டகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச் சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.049   சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;
பண் - திருத்தாண்டகம் (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.050   போர் ஆனை ஈர் உரிவைப்
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே உடை ஆடை போற்றினானை, பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்- தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.051   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து உளார்; காளத்தி(ய்)யார்; மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்; சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி, வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.052   கண் அவன் காண்; கண்
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்; மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர் விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.053   மான் ஏறு கரம் உடைய
பண் - திருத்தாண்டகம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்; கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி, துடி, கைக் கொண்டார் போலும்; தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்; ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.054   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
பண் - திருத்தாண்டகம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.055   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.056   பொறை உடைய பூமி, நீர்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.057   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.058   மண் அளந்த மணி வண்ணர்
பண் - திருத்தாண்டகம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே? பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல, மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.059   தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்
பண் - திருத்தாண்டகம் (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும், தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும், புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும், வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும், வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும், விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.060   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
பண் - திருத்தாண்டகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை; திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம் காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.061   மாதினை ஓர் கூறு உகந்தாய்!
பண் - திருத்தாண்டகம் (திருக்கன்றாப்பூர் நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை)
மாதினை ஓர் கூறு உகந்தாய்! மறை கொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம் நாதனே! என்று என்று பரவி, நாளும் நைந்து உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து, வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு, வைகல் மறவாது, வாழ்த்தி, ஏத்தி, காதன்மையால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.062   எத் தாயர், எத் தந்தை,
பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு சும்மாடு? ஏவர் நல்லார்? செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்; சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு ஆனைக்கா உடைய செல்வா! என்தன் அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.063   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே, தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை; என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ் தென் ஆனைக்காவானை; தேனை; பாலை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.064   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
பண் - திருத்தாண்டகம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண், குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண், காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும் மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண், நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல் ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.065   உரித்தவன் காண், உரக் களிற்றை
பண் - திருத்தாண்டகம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால் எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.066   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
பண் - திருத்தாண்டகம் (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம் ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.067   ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்
பண் - திருத்தாண்டகம் (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.068   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
பண் - திருத்தாண்டகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை, குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை, கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை, அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.069   ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,
பண் - திருத்தாண்டகம் (திருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை)
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை, அயனொடு மால் அறியாத ஆதியானை, தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை, நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள் விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த பாரானை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.070   தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி (பொது -க்ஷேத்திரக்கோவை )
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும், முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.071   பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்
பண் - திருத்தாண்டகம் (பொது -அடைவுத் திருத்தாண்டகம் )
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து, புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்- கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல் சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர் பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.072   அலை ஆர் புனல் கங்கை
பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம் தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு, இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த, மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.073   கருமணி போல் கண்டத்து அழகன்
பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்; பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்; வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய் குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.074   சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
பண் - திருத்தாண்டகம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை, அல்லானை, பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை, வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.075   சொல் மலிந்த மறைநான்கு ஆறு
பண் - திருத்தாண்டகம் (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச் சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்; கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்; மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்; மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்; கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.076   புரிந்து அமரர் தொழுது ஏத்தும்
பண் - திருத்தாண்டகம் (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும் விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக் கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும் தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன் காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண் திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.077   பாட அடியார், பரவக் கண்டேன்;
பண் - திருத்தாண்டகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல் கண்டேன்; கங்கையாளைக் கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.078   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
பண் - திருத்தாண்டகம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே; நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே; கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே; சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.079   தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை, சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை, அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை, ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை, முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை, மூ உருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.080   பாரானை; பாரினது பயன் ஆனானை;
பண் - திருத்தாண்டகம் (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
பாரானை; பாரினது பயன் ஆனானை; படைப்பு ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை; ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு, அனைத்து உலகும் ஆனானை; அமரர் கோனை; கார் ஆரும் கண்டனை; கயிலை வேந்தை; கருதுவார் மனத்தானை; காலற் செற்ற சீரானை; செல்வனை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.081   கண் தலம் சேர் நெற்றி
பண் - திருத்தாண்டகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்; மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்; விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்; கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.082   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
பண் - திருத்தாண்டகம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்; தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்; ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்; தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.083   விண் ஆகி, நிலன் ஆகி,
பண் - திருத்தாண்டகம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி, வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற எண் ஆகி, எழுத்து ஆகி, இயல்பும் ஆகி, ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி, காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற பண் ஆகி, இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.084   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
பண் - திருத்தாண்டகம் (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த் திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.085   ஆர்த்தான் காண், அழல் நாகம்
பண் - திருத்தாண்டகம் (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப் போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்; காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே! சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.086   கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்
பண் - திருத்தாண்டகம் (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)
கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை, கமலத்தோன் தலை அரிந்த காபாலி(ய்)யை, உரு ஆர்ந்த மலை மகள் ஓர் பாகத்தானை, உணர்வு எலாம் ஆனானை, ஓசை ஆகி வருவானை, வலஞ்சுழி எம் பெருமான் தன்னை, மறைக்காடும் ஆவடு தண்துறையும் மேய திருவானை, தென்பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.087   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
பண் - திருத்தாண்டகம் (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்; வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன் காண்; கையில் அனல் ஏந்தி ஆடும் கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்; கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.088   ஆர் ஆரும் மூ இலை
பண் - திருத்தாண்டகம் (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும் ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை; ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.089   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
பண் - திருத்தாண்டகம் (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்; சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்; வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்; எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.090   மூ இலை நல் சூலம்
பண் - திருத்தாண்டகம் (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை, நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும் காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.091   பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்
பண் - திருத்தாண்டகம் (திருவெறும்பூர் )
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்; எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய- தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத் தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய் அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.092   மூ இலை வேல் கையானை,
பண் - திருத்தாண்டகம் (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு உடையானை, முதல் ஆனானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை, பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை, காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.093   நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்
பண் - திருத்தாண்டகம் (பலவகைத் திருத்தாண்டகம் )
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர ஆயிரம் மா முகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்- தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.094   இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை (நின்றத் திருத்தாண்டகம் )
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.095   அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் )
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.096   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம் (பொது -தனித் திருத்தாண்டகம் )
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்; தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம் கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்; காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.097   அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம் (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ? பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ? தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.098   நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
பண் - திருத்தாண்டகம் (பொது - மறுமாற்றம் )
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
6 -ஆம் திருமுறை பதிகம் 6.099   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்? கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன், கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்; ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்; புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
[1]
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org