சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HCo_sta0KMM

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.065   பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பூவனூர் ; (திருத்தலம் அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி )
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

[1]
என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர்,
தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்;
இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!

[2]
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்!
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்;
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!

[3]
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான்,
மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை-
பூவனூர் புகுவார் வினை போகுமே.

[4]
புல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல்
நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர்,
தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்-
வல்லம் ஊர் என, வல்வினை மாயுமே.

[5]
அனுசயப்பட்டு அது இது என்னாதே,
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி,
புனிதனை-பூவனூரனை- போற்றுவார்
மனிதரில்- தலைஆன மனிதரே.

[6]
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்;
வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர்
பாதி ஆனான்; பரந்த பெரும் படைப்
பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.

[7]
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்,
கோவலூர், குடவாயில், கொடுமுடி,
மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!

[8]
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்-
பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான்,
தேவதேவன் திருநெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!

[9]
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன்,
வாரணன், குமரன், வணங்கும் கழல்
பூரணன்திருப் பூவனூர் மேவிய
காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.

[10]
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்,
பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list