சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓடே கலன்; உண்பதும் ஊர் பண் - தக்கராகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ywVeiOlRRiY |
1.095
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு ஓர் காதினன்; பாடு பண் - குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vO4Rc6aU4oM |
1.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lVWhByJf30Q |
1.121
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நடை மரு திரிபுரம் எரியுண பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=30yijJBtHus |
1.122
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=cTl52pwVSrY |
2.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பண் - காந்தாரம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=icx3ld09lwA |
4.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு உடைச் சுடலை நீற்றார்; பண் - திருநேரிசை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=WLhQ-ercnlA |
5.014
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mriLYunU1fc |
5.015
திருநாவுக்கரசர்
தேவாரம்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uJFYBKLJhYo |
6.016
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப்படை உடையார் தாமே போலும்; பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6n1Oi9pN0ec |
6.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=tnH6jbo3c98 |
7.060
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கழுதை குங்குமம் தான் சுமந்து பண் - தக்கேசி (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=JXJJZzDa-P4 |
9.017
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர் பண் - (திருவிடைமருதூர் ) |
11.028
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.032  
ஓடே கலன்; உண்பதும் ஊர்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை; காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ் வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து, ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ. | [1] |
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல் குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட, படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ. | [2] |
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி, அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து, பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல், எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ. | [3] |
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக் கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல், வெதபொடிப் பூசிய வேத முதல்வன்- எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ. | [4] |
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய், பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ. | [5] |
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி, அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய் இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ. | [6] |
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி, போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால் ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ. | [7] |
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப, ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த, ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ. | [8] |
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன், நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த, பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ. | [9] |
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற, நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த, வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல் எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ. | [10] |
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல் பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.095  
தோடு ஓர் காதினன்; பாடு
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்- காடு பேணி நின்று ஆடும் மருதனே. | [1] |
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்; மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே. | [2] |
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை, பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே. | [3] |
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத் தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே. | [4] |
பந்த விடை ஏறும் எந்தை மருதரைச் சிந்தை செய்பவர் புந்தி நல்லரே. | [5] |
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத் தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே. | [6] |
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை நிறையால் நினைபவர் குறையார், இன்பமே. | [7] |
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத் தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே. | [8] |
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப் பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே. | [9] |
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே. | [10] |
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி, பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.110  
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான், அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் இருந்தவன், வள நகர் இடைமருதே. | [1] |
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள் கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல் ஏற்றவன், வள நகர் இடைமருதே. | [2] |
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன், நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம் உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்- இடைமருது இனிது உறை எம் இறையே. | [3] |
பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார் துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக் கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற இணை இலி, வள நகர் இடைமருதே. | [4] |
பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும் தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும் கழலவன், கரிஉரி போர்த்து உகந்த எழிலவன், வள நகர் இடைமருதே | [5] |
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட இறையவன், வள நகர் இடைமருதே. | [6] |
நனி வளர் மதியொடு நாகம் வைத்த பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன், முனிவரொடு அமரர்கள் முறை வணங்க, இனிது உறை வள நகர் இடைமருதே. | [7] |
தருக்கின அரக்கன தாளும் தோளும் நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும் எரித்தவன், வள நகர் இடைமருதே. | [8] |
பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான், வரி அரவு அணை மறிகடல்-துயின்ற கரியவன் அலரவன் காண்பு அரிய எரியவன், வள நகர் இடைமருதே. | [9] |
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே, அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா, எந்தைதன் வள நகர் இடைமருதே. | [10] |
இலை மலி பொழில் இடைமருது இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார் உலகு உறு புகழினொடு ஓங்குவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.121  
நடை மரு திரிபுரம் எரியுண
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த படை மரு தழல் எழ மழு வல பகவன், புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய, இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே. | [1] |
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்; குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர் இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே. | [2] |
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன், கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன், பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின் இருமையும் உடை அணல், இடம் இடைமருதே. | [3] |
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன், வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர் எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே. | [4] |
வரு நல மயில் அன மடநடை மலைமகள் பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான், செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர் இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே. | [5] |
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை, மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்; விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு இலை உடை படையவன்; இடம் இடைமருதே. | [6] |
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி, குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே. | [7] |
மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு துறையவன் என வல அடியவர் துயர் இலர்; கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை இறையவன், உறைதரும் இடம் இடைமருதே. | [8] |
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும் இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக் கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே. | [9] |
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும் அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல் கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு- மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே. | [10] |
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன், இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த, படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.122  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல் புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே. | [1] |
மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர் எறிதிரை கரை பொரும் இடைமருது எனுமவர் செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்; பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே. | [2] |
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள் நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர், இலர் என இடு பலியவர், இடைமருதினை வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே. | [3] |
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி கடை கடை தொறு, பலி இடுக! என முடுகுவர், இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர் உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே. | [4] |
உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர், அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை இரை மரும் அரவினர், இடைமருது என உளம் உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே. | [5] |
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் அழகிய முடி உடை அடிகளது, அறைகழல் எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே. | [6] |
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும் நிலையினர், சலமகள் உலவிய சடையினர், மலைமகள் முலை இணை மருவிய வடிவினர், இலை மலி படையவர், இடம் இடைமருதே. | [7] |
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும் அரு வரையினில் ஒருபது முடி நெரிதர, இருவகை விரல் நிறியவர் இடைமருது அது பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே? | [8] |
அரியொடு மலரவன் என இவர் அடி முடி தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ, எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல் புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே. | [9] |
குடை மயிலின தழை மருவிய உருவினர், உடை மரு துவரினர், பல சொல உறவு இலை; அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் இடை மருது என மனம் நினைவதும் எழிலே. | [10] |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப் பரவிய ஒருபது பயில வல்லவர் இடர் விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே. | [11] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
11.028  
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
பண் - (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற் றாது வலம்புரி நெடுமால் ஏன மாகி நிலம்புக் காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத் தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து நச்செயிற் றரவக் கச்சையாப் புறத்துப் பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி அரத்த ஆடை விரித்துமீ துறீஇ இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங் கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம் வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் பொற்றா மரையின் முற்றா முகிழென உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம் அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து மூவிலை வேலும் பூவாய் மழுவுந் தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும் தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் பாலிற் கிடந்த நீலம் போன்று குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும் கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் அரவும் மதியமும் விரவத் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு நான்முகம் கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணங் கருத்தையுங் கடந்து சேணிகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் கைவைத்துப் புனைந்த தெய்வமாலை நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத் திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி இனைய வண்ணத்து நினைவருங் காட்சி இருவயின் உருவும் ஒருவயிற்றாகி வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க வாணுதல் பாகம் நாணுதல் செய்ய வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங் குலகம் ஏழும் பன்முறை ஈன்று மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள் நின் திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயம் சேரா மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே. | [1] |
பொருளுங் குலனும் புகழுந் திறனும் அருளும் அறிவும் அனைத்தும் ஒருவர் கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை மருதாவென் பார்க்கு வரும். | [2] |
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. | [3] |
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத் தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக் குயிலென மொழியும் மயிலியல் சாயல் மான்மற விழிக்கும் மானார் செல்வத் திடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல் ஆரணந் தொடாராப் பூரணபுராண நாரணன் அறியாக் காரணக் கடவுள் சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள் ஏக நாயக யோக நாயக யானொன் றுணர்த்துவ துளதே யான்முன் நனந்தலை யுலகத் தனந்த யோனியில் பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து யாயுறு துயரமும் யானுறு துயரும் இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும் நீயல தறிகுநர் யாரே அதனால் யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான் றுற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா உள்ளமொன் றுடைமை வேண்டும் அஃதன்றி ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று தானல தொன்றைத் தானென நினையும் இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம் கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர் எற்பிற ருளரோ இறைவ கற்பம் கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி உரையெயிற் றுரகம் பூண்ட கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. | [4] |
கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும் எண்ணென்றும் மூல எழுத்தென்றும் ஒண்ணை மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றுக் கருதவப்பால் உண்டோ கதி. | [5] |
கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேபரத்தின் பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர் விதியாம் எனச்சிலர் நோவதல் லாலிதை வேண்டுநர்யார் மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே. | [6] |
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி அவியடு நர்க்குச் சுவைபலபகர்ந்தேவி ஆரா உண்டி அயின்றன ராகித் தூராக் குழியைத் தூர்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக் கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ் சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத் தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச் சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் மேவுழி மேவல் செய்யாது காவலொடு கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும் அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின் கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப் பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும் நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம் விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் அகமலர்ந் தீவார் போல முகமலர்ந் தினிது மொழிந்தாங் குதவுதல் இன்றி நாளும் நாளும் நாள்பல குறித்தவர் தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேளிகழ்ந்து இகமும் பரமும் இல்லை என்று பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித் தன்னையும் ஒருவ ராக உன்னும் ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து யோசனை கமழும் உற்பல வாவியில் பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமும் சூழ்ந்த மருத வாண சுருதியும் தொடராச் சுருதி நாயக பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும் முத்தித் தாள மூவா முதல்வநின் திருவடி பிடித்து வெருவரல் விட்டு மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும் பொருளென நினையாதுன் னருளினை நினைந்து இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் சின்னச் சீரை துன்னல் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனைந்து சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங் கிடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஒவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின் செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும் பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக் குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் இருவகைப் பொருளும் ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க் கடிமை பூண்டு நெடுநாட் பழகி முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர் காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக் கண்டது காணின் அல்லதொன் றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே. | [7] |
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் அறிந்தேன் அநங்கவேள் அம்பில் செறிந்த பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன் மருதவட்டம் தன்னுளே வந்து. | [8] |
வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே சிந்திக்கண் டாயரன் செம்பொற் கழல்திரு மாமருதைச் சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய் உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே. | [9] |
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையுற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற மெய்யெனும் எருவை விரித் தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக் குரோதக் களையறக் களைந்து சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட் டம்மெனக் கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து. புண்ணிய அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி காள கண்டமும் கண்ணொரு மூன்றும் தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும் சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி பையப் பையப் பழுத்துக் கைவர எம்ம னோர்கள் இனிதினி தருந்திச் செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக் காமக் காடு மூடித் தீமைசெய் ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக் கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவா திமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. | [10] |
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம் படமொடுங்கப் பையவே சென்றங் கிடைமருதர் ஐயம் புகுவ தணியிழையார் மேல் அநங்கன் கையம் புகவேண்டிக் காண். | [11] |
காணீர் கதியொன்றுங் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. | [12] |
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர் பாவிய தோலின் பரப்போ தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ கூறுசெய் திடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின் றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை வைத்த மலத்தின் குவையோ வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா தின்ன தியானென் றறியேன் என்னை ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம் வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக் கண்படை யாகக் காமனை ஒருநாள் நுண்பொடி யாக நோக்கியண் டத்து வீயா அமரர் வீயவந் தெழுந்த தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி இருவர் தேடி வெருவர நிமிர்ந்து பாலனுக் காகக் காலனைக் காய்ந்து சந்தன சரள சண்பக வகுள நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப் புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த திருவிடை மருத பொருவிடைப் பாக மங்கை பங்க கங்கைநா யகநின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலங் கீறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே நின்னைக் காணா மாந்தர் தம்மையுங் காணாத் தன்மை யோரே. | [13] |
ஒராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம். | [14] |
நாமே இடையுள்ள வாறறி வாமினி நாங்கள்சொல்லல் ஆமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப் பூமேல் அணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே. | [15] |
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக சிமையச் செங்கோட் டிமையச் செல்வன் மணியெனப் பெற்ற அணியியல் அன்னம் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன மதரரி நெடுங்கண் மானின் கன்று வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி வையம் ஏழும் பன்முறை ஈன்ற ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி எமையா ளுடைய உமையாள் நங்கை கடவுட் கற்பின் மடவரல் கொழுந பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை பூவலர் குடுமிச் சேவலம் பதாகை மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த் தாங்குங் குமரன் தாதை பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும் மருதிடங் கொண்ட மருத வாண நின்னது குற்றம் உளதோ நின்னினைந் தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் பாவிகள் தமதே பாவம் யாதெனின் முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத் தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி வாலுகங் கிடந்த சோலை கிடப்ப வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப அடிபெயர்த் திடுவான் ஒருவன் நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. | [16] |
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும். | [17] |
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலால் தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள் ஓக்கிற்றுத் தக்கன் தலையுருண் டோடச் சலந்தரனைப் போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே. | [18] |
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக காள கண்ட கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந பூத நாத பொருவிடைப் பாக வேத கீத விண்ணோர் தலைவ முத்தி நாயக மூவா முதல்வ பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும் திருவிடை மருத திரிபு ராந்தக மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ மனையும் பிறவும் துறந்து நினைவரும் காடும் மலையும் புக்குக் கோடையில் கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும் காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங் களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முத்தி அடைவதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர் ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம் பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ் செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந் தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந் தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் பூவிரி தரங்க வாரிக் கரையிலும் மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட மருப்பின் இயன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அணைமேல் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச் சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப் பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம் கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல் மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள் வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங் கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக் காலன் வேலும் காம பாணமும் ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர மதியென மாசறு வதனம் விளங்கப் புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும் அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் நின்னது பெருமை அன்றோ என்னெனின் வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும் மாட்டா ஒருவன் வாளா எறியினும் நிலத்தின் வழாஅக் கல்லேபோல் நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே. | [19] |
நாமம் நவிற்றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து காமம் நவிற்றிக் கழிந்தொழியல் ஆமோ பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள் மருதவனத் தானை வளைந்து. | [20] |
வளையார் பசியின் வருந்தார் பிணியின்மதன னம்புக் கிளையார் தனங்கண் டிரங்கிநில் லாரிப் பிறப்பினில்வந் தளையார் நரகினுக் கென்கட வார்பொன் னலர்ந்தகொன்றைத் தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே. | [21] |
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம் மூலமும் நடுவும் முடிவும் இகந்து காலம் மூன்றையும் கடந்த கடவுள் உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத் துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர் எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது உறுப்பில் நின் றெழுதரும் உள்ளத் தோசை வைத்த நாவின் வழிமறுத் தகத்தே தித்தித் தூறும் தெய்வத் தேறல் துண்டத் துளையில் பண்டைவழி யன்றி அறிவில் நாறும் நறிய நாற்றம் ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும் தானே ஆகி நின்ற தத்துவ தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித் தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும் இருள்விரி கண்டத் தேக நாயக சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர மருதிடம் கொண்ட மருதமா ணிக்க உமையாள் கொழுந ஒருமூன் றாகிய இமையா நாட்டத் தென்தனி நாயக அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில் குடரெனும் சங்கிலி பூண்டுதொடர்ப்பட்டுக் கூட்டுச் சிறைப்புழுவின் ஈட்டுமலத் தழுந்தி உடனே வருந்தி நெடுநாட் கிடந்து பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந் தண்ட லாளர் மிண்டவந் தலைப்ப உதர நெருப்பில் பதைபதை பதைத்தும் வாதமத் திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா திடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் பாவப் பகுதியில் இட்டுக் காவல் கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பாசப் படுத்திப் பையென விட்டபின் யானும் போந்து தீதினுக் குழன்றும் பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும் பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும் வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள் வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன் நின்னை அடைந்த அடியார் அடியார்க் கென்னையும் அடிமையாகக் கொண்டே இட்டபச் சிலைகொண் டொட்டிநன் கறிவித் திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. | [22] |
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல் ஒருத்தி பொலிய இடையேபோய்ச் சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப தெங்கே இருக்க இவள். | [23] |
இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவொட்டாத் திருக்கும் அறுத்தைவர் தீமையுந் தீர்த்துச்செவ் வேமனத்தை ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே. | [24] |
சுடர்விடு சூலப் படையினை என்றும் விடையுகந் தேறிய விமல என்றும் உண்ணா நஞ்சம் உண்டனை என்றும் கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும் திரிபுரம் எரித்த சேவக என்றும் கரியுரி போர்த்த கடவுள் என்றும் உரகம் பூண்ட உரவோய் என்றும் சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும் வலந்தரு காலனை வதைத்தனை என்றும் சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும் வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும் தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும் உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும் ஏனமும் அன்னமும் எட்டா தலமர வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும் செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும் அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும் இனையன இனையன எண்ணிலி கோடி நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின் அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும் என்தன் வாயில் புன்மொழி கொண்டு நின்னை நோக்குவன் ஆதலின் என்னை இடுக்கண் களையா அல்லல் படுத்தா தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவ போல நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத் துயிலின் நீங்கிப் பயிலும் வீதித் திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன் நின்நினைந் தெறிந்த அதனால் அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே. | [25] |
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய புன்தலை மாக்கள் புகழ்வரோ வென்றிமழு வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை ஆளுடையான் செம்பொன் அடி. | [26] |
அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர் முடியா யிரங்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த தொடியா யிரங்கொண்ட தோளிரண் டாயிரம் என்றுநெஞ்சே படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே. | [27] |
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் செவ்வான் உருவிற் பையர வார்த்துச் சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை மூவா முதல்வ முக்கட் செல்வ தேவ தேவ திருவிடை மருத மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை ஆடும் அப்ப கயிலாய வாண கௌரி நாயக நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும் மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும் அமரர்த் தாங்கும் குமர வேளும் சுரிசங் கேந்திய திருநெடு மாலும் வான்முறை படைத்த நான்முகத் தொருவனும் தாருகற் செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும் ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும் வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும் சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும் நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும் வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் எட்டு நாகமும் அட்ட வசுக்களும் மூன்று கோடி ஆன்ற முனிவரும் வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் அத்தகு செல்வம் அவமதித் தருளிய சித்த மார்சிவ வாக்கிய தேவரும் (1) வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் (2) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப் பாடின என்று படாம்பல அளித்தும் (3) குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் (4) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும் (5) மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்இத் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் (6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் (7) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் (8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் இனைய தன்மையர் எண்ணிறந் தோரே அனையவர் நிற்க யானும் ஒருவன் பத்தி என்பதோர் பாடும் இன்றிச் சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும் கருதி யிருப்பன் கண்டாய் பெரும நின்னுல கனைத்தினும் நன்மை தீமை ஆனவை நின்செய லாதலின் நானே அமையும் நலமில் வழிக்கே. | [28] |
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் பொழில்சூழ் மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா கருதிடத்தாம் நில்லா கரந்து. | [29] |
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றுமில்லேன் சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும் தரத்தினு மாயது நின்னடி யாந்தெய்வத் தாமரையே. | [30] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.056  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
பண் - காந்தாரம் (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்! எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த, இடைமருதில், மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [1] |
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்! போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்! ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில், சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. | [2] |
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம் அவை பாட, சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்! எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த, இடைமருதில், பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே. | [3] |
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்! வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்! எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில், செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. | [4] |
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த, திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில், பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே. | [5] |
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்! வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்! இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில், புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே. | [6] |
புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு ஆர்ந்த சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்! இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில், கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே. | [7] |
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்! திறல் அரக்கன் தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்! இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில், நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே. | [8] |
மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்! கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்! அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில், நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே. | [9] |
சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும், துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே, இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில், அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே. | [10] |
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன் | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.035  
காடு உடைச் சுடலை நீற்றார்;
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல் பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில் தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே. | [1] |
முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார் சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார் சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார் எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே. | [2] |
கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால் ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே. | [3] |
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம், பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும் கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே. | [4] |
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த, பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை; பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை- ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. | [5] |
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ, முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து, மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும் ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே. | [6] |
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை; அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள் இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே. | [7] |
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும் தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த, மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி, எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே. | [8] |
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம், மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார் இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே. | [9] |
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத் தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி, சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்- இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும், ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே. | [1] |
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்- முறையினால் முனிகள் வழிபாடு செய் இறைவன், எம்பெருமான், இடைமருதினில் உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே. | [2] |
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன், என்றும் எந்தைபிரான், இடைமருதினை நன்று கைதொழுவார் வினை நாசமே. | [3] |
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே பிறவித்துயர் நீத்திடும், எம்மை ஆளும், இடைமருதன் கழல் செம்மையே தொழுவார் வினை சிந்துமே. | [4] |
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார், எண் திசைக்கும் இடைமருதா! என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே. | [5] |
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார், கூறுவார் வினை தீர்க்கும் குழகனார், ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே. | [6] |
விண் உளாரும் விரும்பப்படுபவர்; மண் உளாரும் மதிக்கப்படுபவர்; எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே. | [7] |
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார், கந்தமாலைகள் சூடும் கருத்தனார், எந்தை, என் இடை மருதினில் ஈசனைச் சிந்தையால் நினைவார் வினை தேயுமே. | [8] |
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார், பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே. | [9] |
கனியினும், கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும், தனி முடீ கவித்து ஆளும் அரசினும், இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே. | [10] |
முற்றிலா மதி சூடும் முதல்வனார்; ஒற்றினார், மலையால் அரக்கன் முடி; எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப் பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம், இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே. | [1] |
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை, புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை, எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை, நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே. | [2] |
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை எண்திசைக்கும் இடைமருதா! என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே. | [3] |
துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா, இணை இலா இடைமா மருதில்(ல்) எழு பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே. | [4] |
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி; விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி; மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல் பண்ணை ஆயமும் தானும் பயிலுமே. | [5] |
மங்கை காணக் கொடார், மணமாலையை; கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை; நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே? | [6] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.016  
சூலப்படை உடையார் தாமே போலும்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த திங்கள் கண்ணி உடையார் போலும்; மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்; வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்; மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்; ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [1] |
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்; கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்; பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல் ஊழி பரந்தார் போலும்; சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும் ஆய், மற்றும் ஆனார் போலும்; ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே!. | [2] |
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்; விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்; பூதங்கள் ஆய புராணர் போலும்; புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்; பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்; ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [3] |
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்; விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி, வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்; பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் பரங்குன்றம் மேய பரமர் போலும்; எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [4] |
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும், பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி, படுவெண் தலையில் பலி கொள்வாரும், மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும், மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும், ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது மேவிய ஈசனாரே. | [5] |
ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும், நால்-மூன்றும் ஆனார் போலும்; செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்; கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து ஆட வல்ல குழகர் போலும்; எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [6] |
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய், பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய், விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்; விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்; தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும், எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [7] |
தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய் அரவு அசைத்த சோதி போலும்; ஆலம் அமுதுஆக உண்டார்போலும்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்; காலனையும் காய்ந்த கழலார் போலும்; கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்; ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [8] |
பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்; படைக்கணாள் பாகம் உடையார் போலும்; அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்; அணி நீலகண்டம் உடையார் போலும்; வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்; எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [9] |
கொன்றை அம் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும், நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவம் ஆய் நின்ற நிமலனாரும், அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ அரு வரையைக் காலால் அழுத்தினாரும், என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது மேவிய ஈசனாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.017  
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம் பொன்தோள் மேல் நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலி கொள்வர்; மொய்த்த பூதம் கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள் தால வேடத்தர்; கொள்கை சொல்லின், ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [1] |
மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான் இடம் உடையர்; மாதராளைப் பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்; பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்; சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பல உடையர்; தன்மை சொல்லின், எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. | [2] |
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்; காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்; கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு; கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்; கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்; ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. | [3] |
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்; திரு ஆரூர் என்றும் உள்ளார்; வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்; மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்; நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும் ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [4] |
கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்; தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள் சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம் இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [5] |
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர் கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்; அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார்; அமரர் போற்ற இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [6] |
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்; கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும் பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர் இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [7] |
கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல் பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்; பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [8] |
புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில் பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில் எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால் இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [9] |
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்; மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்; சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால் இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.060  
கழுதை குங்குமம் தான் சுமந்து
பண் - தக்கேசி (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசுவரர் திருவடிகள் போற்றி )
கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப் பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்! அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! . | [1] |
நரைப்பு மூப்பொடு பிணி வரும், இன்னே; நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்; அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்; அஞ்சினேன், நமனார் அவர் தம்மை; உரைப்பன், நான் உன சேவடி சேர; உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே!. | [2] |
புல்-நுனைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை; நாளும் என் எனக்கு? இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன்; எந்தாய்! முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; இன்னம் என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! . | [3] |
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்; சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்; சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்; அந்தி வெண்பிறை சூடும் எம்மானே! ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா! எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! . | [4] |
அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு, கழித்து, கால் பெய்து, போயின பின்னை, கடை முறை உனக்கே பொறை ஆனேன்; விழித்துக் கண்டனன், மெய்ப் பொருள் தன்னை; வேண்டேன், மானுட வாழ்க்கை, ஈது ஆகில்; இழித்தேன்; என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! . | [5] |
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண் இடையாரொடு மயங்கி, கற்றிலேன், கலைகள் பல ஞானம்; கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்; பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன்; பாவியேன் பல பாவங்கள் செய்தேன்; எற்று உளேன்? எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தைபிரானே!. | [6] |
கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை; குற்றம் செற்றம் இவை முதல் ஆக, விடுக்க கிற்றிலேன், வேட்கையும் சினமும்; வேண்டில், ஐம்புலன் என் வசம் அல்ல; நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த, நமன்தமர் நரகத்து இடல் அஞ்சி; இடுக்கண் உற்றனன்; உய்வகை அருளாய்- இடைமருது(வ்)உறை எந்தைபிரானே!. | [7] |
ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்; அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ! எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!. | [8] |
ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர் வயப்பட்டு இருந்து, இன்னம் வாழை தான் பழுக்கும், நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு, கூழை மாந்தர் தம் செல்கதிப் பக்கம், போகமும் பொருள் ஒன்று அறியாத ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே! . | [9] |
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது(வ்) உறை எந்தைபிரானை, உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை, உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள், நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே. . | [10] |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.017  
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
பண் - (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே. | [1] |
இந்திர லோக முழுவதும் பணிகேட் டிணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாக மேகலை யரையா அகந்தொறும் பலிதிரி யடிகள் தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதிகின் னரங்கலந் தொலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடந் திருவிடை மருதே. | [2] |
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென் றிங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல கொழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமக ளுடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்தென் மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே. | [3] |
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங் கடியனே னுள்கலந் தடியேன் பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடமிடற் றடிகள் துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை சுடர்உமிழ் தரஅத னருகே மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப மருவிடந் திருவிடை மருதே. | [4] |
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற் படிவழி சென்றுசென் றேறிச் சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி தெரியினுந் தெரிவுறா வண்ணம் எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிக ளுடனாய் வந்தணு காது நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே. | [5] |
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண் டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த் துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந் தூங்கிருள் நடுநல்யா மத்தே அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப அந்திபோன் றொளிர்திரு மேனி வரியர வாட ஆடும்எம் பெருமான் மருவிடந் திருவிடை மருதே. | [6] |
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந் துருகி அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங் காதனேன் மாதரார் கலவித் தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடந் திருவிடை மருதே. | [7] |
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின் பென்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே. | [8] |
கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடைய புலங்கலந் தவனே என்றுநின் றுருகிப் புலம்புவார் அவம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான் மருவிடந் திருவிடை மருதே. | [9] |
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர் கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங் கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே. | [10] |