சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமர் மேனியினாரும், பிறை பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-uyT0gUSnAc |
5.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, பண் - திருக்குறுந்தொகை (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=05urhAg14Dg |
7.048
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மற்றுப் பற்று எனக்கு இன்றி, பண் - பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=y6YX15hV58I Audio: https://www.youtube.com/watch?v=llZiPGBTX5g |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.069  
பெண் அமர் மேனியினாரும், பிறை
பண் - காந்தாரம் (திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ; (திருத்தலம் அருள்தரு பண்மொழியம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும், கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும், எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும், பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே. | [1] |
தனைக் கன்னி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள் வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்; நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு முடியாரே. | [2] |
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண் நீறு அணிந்தாரும், புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூ இலைச்சூலப் படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே. | [3] |
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த, கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி, மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே. | [4] |
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர் தங்கள் ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப் பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே. | [5] |
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும், பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும், வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு கொள்கையினாரும், படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே. | [6] |
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும், தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும், கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல் பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே. | [7] |
புரந்தரன் தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த நின்றாரும், பெருந்திறல் வாள் அரக்கன்(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும், கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல்மணி உந்திப் பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே. | [8] |
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர் மேலைப் பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர் அழல் ஆகிய பெம்மான் மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரி மாடே பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடு முடியாரே. | [9] |
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழி அல்லால் மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம் பல பலவற்றால் சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு, பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே. | [10] |
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு முடிதன்னைச் சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர் தீர்ந்து, நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ; (திருத்தலம் அருள்தரு பண்மொழியம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர் பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே. | [1] |
பிரமன் மால் அறியாத பெருமையன், தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான், பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே! | [2] |
ஊசலாள் அல்லள்; ஒண் | [3] |
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு; பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக் காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான். | [4] |
நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக் கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே. | [5] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.048  
மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு பண்மொழியாளம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதர் திருவடிகள் போற்றி )
இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார்.
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [1] |
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [2] |
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல் காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப் பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [3] |
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி, கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை, நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [4] |
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்; அஞ்சல்! என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்? பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [5] |
ஏடு வான் இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின் மேல் ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப் பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [6] |
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன; நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டு இடை குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [7] |
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்! வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை கொம்பின் மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [8] |
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன், மாமணி என்று பேர் எண் ஆயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்; நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக் காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. | [9] |
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை, பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை- நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே. | [10] |