This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 திருமூலர் - திருமந்திரம் -விநாயகர் வணக்கம் ()
2 திருமூலர் - திருமந்திரம் -பாயிரம் ()
3 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் ()
4 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு ()
5 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு ()
6 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 4. உபதேசம் ()
7 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை ()
8 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை ()
9 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை ()
10 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை ()
11 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 9. கொல்லாமை ()
12 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல் ()
13 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை ()
14 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு ()
15 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 13. நல்குரவு ()
16 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம் ()
17 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம் ()
18 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை ()
19 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு ()
20 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு ()
21 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம் ()
22 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம் ()
23 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 21. அன்புடைமை ()
24 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன் ()
25 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 23. கல்வி ()
26 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல் ()
27 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 25. கல்லாமை ()
28 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை ()
29 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை ()
30 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம் ()
31 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு ()
32 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம் ()
33 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி ()
34 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம் ()
35 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு ()
36 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும் ()
37 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல் ()
38 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி ()
39 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 10. திதி ()
40 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் ()
41 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம் ()
42 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம் ()
43 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை ()
44 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம் ()
45 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம் ()
46 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம் ()
47 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை ()
48 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம் ()
49 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம் ()
50 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை ()
51 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை ()
52 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை ()
53 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை ()
54 திருமூலர் - திருமந்திரம் -இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல் ()
55 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம் ()
56 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 2. இயமம் ()
57 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 3. நியமம் ()
58 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம் ()
59 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம் ()
60 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம் ()
61 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 7. தாரணை ()
62 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 8. தியானம் ()
63 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 9. சமாதி ()
64 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு ()
65 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி ()
66 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை ()
67 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம் ()
68 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம் ()
69 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை ()
70 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 16. வார சரம் ()
71 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம் ()
72 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம் ()
73 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம் ()
74 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை ()
75 திருமூலர் - திருமந்திரம் -மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம் ()
76 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 1. அசபை ()
77 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் ()
78 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 3. அருச்சனை ()
79 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் ()
80 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் ()
81 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம் ()
82 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி ()
83 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் ()
84 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் ()
85 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம் ()
86 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம் ()
87 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம் ()
88 திருமூலர் - திருமந்திரம் -நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் ()
89 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம் ()
90 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம் ()
91 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம் ()
92 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம் ()
93 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 5. சரியை ()
94 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை ()
95 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 7. யோகம் ()
96 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம் ()
97 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம் ()
98 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம் ()
99 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம் ()
100 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம் ()
101 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி ()
102 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம் ()
103 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம் ()
104 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம் ()
105 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம் ()
106 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம் ()
107 திருமூலர் - திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம் ()
108 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம் ()
109 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு ()
110 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் ()
111 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 4.துறவு ()
112 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 5.தவம் ()
113 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம் ()
114 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல் ()
115 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம் ()
116 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 9. தவவேடம் ()
117 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 10. திருநீறு ()
118 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம் ()
119 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம் ()
120 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன் ()
121 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 14. பக்குவன் ()
122 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம் ()
123 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம் ()
124 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம் ()
125 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம் ()
126 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம் ()
127 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம் ()
128 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம் ()
129 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம் ()
130 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு ()
131 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 10.அருளொளி ()
132 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை ()
133 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 12. குருபூசை ()
134 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை ()
135 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை ()
136 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 15. போசன விதி ()
137 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி ()
138 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம் ()
139 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி ()
140 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை ()
141 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம் ()
142 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம் ()
143 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன் ()
144 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன் ()
145 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன் ()
146 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன் ()
147 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன் ()
148 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன் ()
149 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 28. புருடன் ()
150 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 29. சீவன் ()
151 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 30. பசு ()
152 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 31. போதன் ()
153 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை ()
154 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை ()
155 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி ()
156 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி ()
157 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம் ()
158 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல் ()
159 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம் ()
160 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம் ()
161 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல் ()
162 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம் ()
163 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை ()
164 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள் ()
165 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம் ()
166 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம் ()
167 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை ()
168 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள் ()
169 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம் ()
170 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் ()
171 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள் ()
172 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை ()
173 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம் ()
174 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம் ()
175 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை ()
176 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல் ()
177 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம் ()
178 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 19. முப்பதம் ()
179 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 20. முப்பரம் ()
180 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம் ()
181 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம் ()
182 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி ()
183 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம் ()
184 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம் ()
185 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி ()
186 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ் ()
187 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி ()
188 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம் ()
189 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை ()
190 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை ()
191 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி ()
192 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம ()
193 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை ()
194 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம் ()
195 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம் ()
196 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம் ()
197 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 38. வாய்மை ()
198 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல் ()
199 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல் ()
200 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை ()
201 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை ()
202 திருமூலர் - திருமந்திரம் -எட்டாம் தந்திரம் - 43. சோதனை ()
203 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம் ()
204 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம் ()
205 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி ()
206 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை ()
207 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம் ()
208 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம் ()
209 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம் ()
210 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம் ()
211 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம் ()
212 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து ()
213 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து ()
214 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து ()
215 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து ()
216 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து ()
217 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து ()
218 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு ()
219 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம் ()
220 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம் ()
221 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம் ()
222 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ் ()
223 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம் ()
224 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம் ()
225 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம் ()
226 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை ()
227 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி ()
228 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி ()
229 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை ()
230 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் ()
231 திருமூலர் - திருமந்திரம் -ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் ()
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.000  
விநாயகர் வணக்கம்
பண் - ( )
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.100  
பாயிரம்
பண் - ( )
கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
| [1] |
நுதலிய பொருள்
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
| [2] |
நூற் சிறப்பு
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும் பக்கம்நின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
| [3] |
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
| [4] |
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத் தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
| [5] |
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
| [6] |
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன் நந்தி அருளாலே மூலனை நாடினேன் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
| [7] |
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ டிந்த எழுவரும் என்வழி யாமே.
| [8] |
நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள் நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
| [9] |
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
| [10] |
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.
| [11] |
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.
| [12] |
செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.
| [13] |
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே பொருந்திய செல்வப் புவனா பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
| [14] |
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.
| [15] |
மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
| [16] |
நேரிழை யாவாள் நிரதி சயானந்தப் பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள் சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
| [17] |
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
| [18] |
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
| [19] |
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
| [20] |
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
| [21] |
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால் ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.
| [22] |
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
| [23] |
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
| [24] |
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.
| [25] |
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான் எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும் தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம் பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.
| [26] |
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
| [27] |
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.
| [28] |
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவ னாயினேன் நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான்இருந் தேனே.
| [29] |
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.
| [30] |
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும் உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.
| [31] |
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும் பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
| [32] |
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன் ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன் நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
| [33] |
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலும் ஆமே.
| [34] |
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக் கிருந்த முனிவருந் தேவரும் ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் பத்திமை யால்இப் பயன்அறி யாரே.
| [35] |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.
| [36] |
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தரும்இவை தானே.
| [37] |
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத் தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.
| [38] |
கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.
| [39] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.101  
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பண் - ( )
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே.
| [1] |
அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
| [2] |
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன் பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
| [3] |
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
| [4] |
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
| [5] |
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
| [6] |
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
| [7] |
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
| [8] |
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
| [9] |
கடந்துநின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன் கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
| [10] |
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
| [11] |
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாள்நுதல் பாகனை யாது குலாவி அமரருந் தேவரும் கோது குலாவிக் குணம்பயில் வாரே
| [12] |
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
| [13] |
அதிபதி செய்து அளகையர் வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி அதுபதி யாதரித் தாக்கம தாக்கின் இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.
| [14] |
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் றானே.
| [15] |
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடிமலர்க் குன்றம் அலையது தானே.
| [16] |
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன் நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர் எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
| [17] |
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம் நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை இல்லென வேண்டா இறையவர் தம்முதல் அல்லும் பகலும் அருளுகின் றானே.
| [18] |
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
| [19] |
காணநில் லாயடி யேற்குற வாருளர் நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக் கோணநில் லாத குணத்தடி யார்மனத் தாணிய னாகி அமர்ந்து நின் றானே.
| [20] |
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
| [21] |
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால் படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும் கடந்துநின் றான்கம லம்மலர் மேலே புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
| [22] |
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத் தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.
| [23] |
இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும் பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் உணங்கிநின் றான்அம ராபதி நாதன் வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.
| [24] |
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் கானக் களிறு கதறப் பிளந்தஎங் கோனைப் புகழுமின் கூடலு மாமே.
| [25] |
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும் தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார் ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே.
| [26] |
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
| [27] |
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருல கேழையும் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான்அருள் பாடலு மாமே.
| [28] |
பதிபல வாயது பண்டிவ் வுலகம் விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
| [29] |
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல் வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
| [30] |
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும் ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
| [31] |
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
| [32] |
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன் வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந் தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
| [33] |
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.
| [34] |
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
| [35] |
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும் மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
| [36] |
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக் கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
| [37] |
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னான்முடி செய்தது வேநல்கும் மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.
| [38] |
அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
| [39] |
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
| [40] |
விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே.
| [41] |
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
| [42] |
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.
| [43] |
அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
| [44] |
பரைபசு பாசத்து நாதனை உள்ளி உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத் திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
| [45] |
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று நாடுவன் நானின் றறிவது தானே.
| [46] |
அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரிஅயற் காமே.
| [47] |
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத் தலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.
| [48] |
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம் பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
| [49] |
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
| [50] |
பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.
| [51] |
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
| [52] |
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந் தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
| [53] |
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.
| [54] |
பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
| [55] |
தானொரு கூறு சதாசிவன் எம்இறை வானொரு கூறு மருவியும் அங்குளான் கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற தானொரு கூறு சலமய னாமே. 2,
| [56] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.102  
முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
பண் - ( )
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
| [1] |
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
| [2] |
இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங் கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.
| [3] |
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
| [4] |
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய் தப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. | [5] |
பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர் ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 3,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.103  
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பண் - ( )
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும் அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
| [1] |
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
| [2] |
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
| [3] |
பரனாய்ப் பராபரங் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.
| [4] |
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.
| [5] |
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.
| [6] |
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும் அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில் எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
| [7] |
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
| [8] |
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ் சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே.
| [9] |
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 4,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.104  
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பண் - ( )
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
| [1] |
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
| [2] |
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
| [3] |
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
| [4] |
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
| [5] |
மலங்களைந் தாமென மாற்றி அருளித் தலங்களைந் தான்நற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.
| [6] |
அறிவைம் புலனுட னேநான் றதாகி நெறியறி யாதுற்ற நீராழம் போல அறிவறி வுள்ளே அழிந்தது போலக் குறியறி விப்பான் குருபரனாமே.
| [7] |
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
| [8] |
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.
| [9] |
சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாரா தவன்பதி போக நவயோகம் நந்தி நமக்களித் தானே.
| [10] |
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
| [11] |
வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
| [12] |
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
| [13] |
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
| [14] |
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங் கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.
| [15] |
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.
| [16] |
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
| [17] |
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.
| [18] |
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
| [19] |
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
| [20] |
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வாரார் ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
| [21] |
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற் கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
| [22] |
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
| [23] |
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
| [24] |
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங் கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே.
| [25] |
திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
| [26] |
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
| [27] |
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.
| [28] |
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
| [29] |
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.5,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.105  
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பண் - ( )
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
| [1] |
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே.
| [2] |
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
| [3] |
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் போலுயிர் மீளப் புகஅறி யாதே.
| [4] |
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.
| [5] |
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
| [6] |
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான் சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
| [7] |
வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
| [8] |
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.
| [9] |
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுற மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
| [10] |
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
| [11] |
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர் செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
| [12] |
மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம தேற்றிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
| [13] |
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர் எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.
| [14] |
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.
| [15] |
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
| [16] |
ஐந்து தலைப்பறி ஆறு கடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே.
| [17] |
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங் கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
| [18] |
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.
| [19] |
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலயமும் அற்ற தறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
| [20] |
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற் கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
| [21] |
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சிரு ளாவ தறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
| [22] |
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர் குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.
| [23] |
குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண் டிடையுமக் காலம் இருந்து நடுவே புடையு மனிதரார் போகும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே.
| [24] |
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 6,
| [25] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.106  
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பண் - ( )
அருளும் அரசனும் ஆனையுந் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந் தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின் மருளும் பினைஅறன் மாதவ மன்றே.
| [1] |
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
| [2] |
தன்னது சாயை தனக்குத வாதுகண் டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
| [3] |
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
| [4] |
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
| [5] |
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
| [6] |
வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள் மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக் கூவுந் துணையொன்று கூடலு மாமே.
| [7] |
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
| [8] |
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.7,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.107  
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பண் - ( )
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
| [1] |
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந் தூண்டு விளக்கின் சுடரறி யாரே.
| [2] |
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
| [3] |
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.
| [4] |
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே.
| [5] |
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.
| [6] |
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.
| [7] |
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார் விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
| [8] |
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருங்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
| [9] |
எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவ தறியாமல் எய்திய நாளில் இருந்துகண் டேனே. 8,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.108  
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பண் - ( )
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.
| [1] |
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.
| [2] |
மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
| [3] |
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
| [4] |
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
| [5] |
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவதும் ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
| [6] |
துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
| [7] |
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே.
| [8] |
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின் ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.
| [9] |
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.9,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.109  
முதல் தந்திரம் - 9. கொல்லாமை
பண் - ( )
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
| [1] |
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.10,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.110  
முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
பண் - ( )
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.11,
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.111  
முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
பண் - ( )
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
| [1] |
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப் பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
| [2] |
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும் இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள் மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.12,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.112  
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
பண் - ( )
இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
| [1] |
மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே.
| [2] |
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும் மயலுறும் வானவர் சார்விது என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.
| [3] |
வையகத் தேமட வாரொடுங் கூடியென் மெய்யகத் தோருளம் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.
| [4] |
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில் ஆழ நடுவார் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.
| [5] |
கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதக மாம்அவை நீக்கத் தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க் கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 13,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.113  
முதல் தந்திரம் - 13. நல்குரவு
பண் - ( )
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ரானார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
| [1] |
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென் றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
| [2] |
கற்குழி தூரக் கனகமுந் தேடுவர் அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.
| [3] |
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித் தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.
| [4] |
அறுத்தன ஆறினும் ஆனின மேவி இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே. 14,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.114  
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பண் - ( )
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையுந் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேதம் முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
| [1] |
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
| [2] |
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத் தியங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.
| [3] |
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.
| [4] |
நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின் றெரியும் வகையறி வார்கட்கு மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும் செய்நின்ற செல்வமும் தீயது வாமே.
| [5] |
பாழி அகலுள் எரியும் திரிபோலிட் டூழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.
| [6] |
பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே.
| [7] |
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
| [8] |
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத் துளங்கிக் குரைகடல் தானே.
| [9] |
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந் தங்கி இருக்கும் தகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 15,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.115  
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பண் - ( )
அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
| [1] |
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.
| [2] |
காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.
| [3] |
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான திருக்கை யிருத்திச் சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.
| [4] |
சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும் எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப் பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.
| [5] |
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.
| [6] |
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
| [7] |
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.
| [8] |
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணுந் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
| [9] |
மறையோ ரவரே மறையவ ரானால் மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென் றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.
| [10] |
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
| [11] |
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.
| [12] |
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட நானே விடப்படு மேதொன்றை நாடாது இப்பாடலின் பின் அடிகள் கிடைக்கவில்லை..
| [13] |
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே இப்பாடலின் பின் அடிகள் கிடைக்கவில்லை. 16,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.116  
முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
பண் - ( )
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.
| [1] |
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால் நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
| [2] |
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.
| [3] |
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந் தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே.
| [4] |
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
| [5] |
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
| [6] |
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும் அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
| [7] |
வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.
| [8] |
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
| [9] |
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.17,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.117  
முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
பண் - ( )
அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.
| [1] |
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் கரையில்லை எந்தை கழுமணி யாறே. 18,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.118  
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
பண் - ( )
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.19,
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.119  
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
பண் - ( )
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர் தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர் தாமறி வார்சில தத்துவ ராவர்கள் தாமறி வார்க்குத் தமன்பர னாமே.
| [1] |
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
| [2] |
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங் கற்றன போதங் கமழ்பவர் மானிடர் உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற் பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.
| [3] |
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.
| [4] |
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங் கின்மை யறியா திளையரென் றோராது வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம் தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.
| [5] |
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே.
| [6] |
தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான்தெய்வம் என்று நமன்வரு வானே.
| [7] |
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன் விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.
| [8] |
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.20,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.120  
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
பண் - ( )
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
| [1] |
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
| [2] |
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.
| [3] |
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந் தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும் உருமிடி நாக முரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே.
| [4] |
பரவப் படுவான் பரமனை ஏத்தீர் இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர் கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர் நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.
| [5] |
வழிநடப் பாரின்றி வானோர் உலகங் கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும் மழிநடக் கும்வினை மாசற வோட்டி ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.
| [6] |
கெடுவது மாவதுங் கேடில் புகழோன் நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யிற் பசுவது வாமே.
| [7] |
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னாலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.
| [8] |
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.
| [9] |
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர் மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 21,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.121  
முதல் தந்திரம் - 21. அன்புடைமை
பண் - ( )
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
| [1] |
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
| [2] |
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.
| [3] |
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே.
| [4] |
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.
| [5] |
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
| [6] |
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார் வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில் அன்படைத் தான்தன் அகலிடத் தானே.
| [7] |
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும் அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
| [8] |
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன் வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று நச்சியே அண்ணலை நாடகி லாரே.
| [9] |
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 22,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.122  
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பண் - ( )
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே.
| [1] |
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே.
| [2] |
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன் துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.
| [3] |
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக் குணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பமதுஇது வாமே.
| [4] |
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
| [5] |
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
| [6] |
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென் றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே.
| [7] |
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி யன்பில் அவனை அறியகி லாரே.
| [8] |
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற் றறிந்து செயலற் றிருந்திட ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.
| [9] |
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 23,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.123  
முதல் தந்திரம் - 23. கல்வி
பண் - ( )
குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
| [1] |
கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
| [2] |
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக் காமே.
| [3] |
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார் எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமு மாமே.
| [4] |
துணையது வாய்வருந் தூயநற் சோதி துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம் துணையது வாய்வருந் தூயநற் கந்தம் துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.
| [5] |
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும் கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.
| [6] |
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே
| [7] |
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.
| [8] |
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.
| [9] |
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத் துடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 24,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.124  
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பண் - ( )
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
| [1] |
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.
| [2] |
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்ப தரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே.
| [3] |
பெருமான் இவனென்று பேசி யிருக்குந் திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
| [4] |
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின் நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
| [5] |
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத் தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விழாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
| [6] |
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில் குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை அறியா திருந்தார் அவராவர் அன்றே.
| [7] |
உறுதுணை யாவ துயிரும் உடம்பும் உறுதுணை யாவ துலகுறு கேள்வி செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.
| [8] |
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
| [9] |
வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 25,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.125  
முதல் தந்திரம் - 25. கல்லாமை
பண் - ( )
கல்லா தவருங் கருத்தறி காட்சியை வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங் கல்லா தவர் இன்பங் காணகி லாரே.
| [1] |
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
| [2] |
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள் எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.
| [3] |
கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன் கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட் கல்லேன் கழியநின் றாடவல் லேனே.
| [4] |
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
| [5] |
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.
| [6] |
கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
| [7] |
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.
| [8] |
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.
| [9] |
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 26,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.126  
முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
பண் - ( )
நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
| [1] |
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.
| [2] |
தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 27,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.127  
முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
பண் - ( )
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே.
| [1] |
சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில் ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச் சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே.
| [2] |
காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும் மாமல முஞ்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.
| [3] |
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
| [4] |
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார் தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார் கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.
| [5] |
மயக்குஞ் சமய மலமன்னும் மூடர் மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார் மயக்குறு மாமாயை மாயையின் வீடும் மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
| [6] |
மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.
| [7] |
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
| [8] |
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம் சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம் சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
| [9] |
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே.
| [10] |
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற் றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.1,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.201  
இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
பண் - ( )
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் றானே.
| [1] |
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதய வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 2,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.202  
இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
பண் - ( )
கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
| [1] |
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.
| [2] |
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும் தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்கச் சுதனை உதிரங்கொண் டானே.
| [3] |
எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை யோதிபாற் பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
| [4] |
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.
| [5] |
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள் அத்தி யுரிஅர னாவ தறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே.
| [6] |
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
| [7] |
இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்திய லிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித் தங்கண் அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 3,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.203  
இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
பண் - ( )
அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.
| [1] |
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே.
| [2] |
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.
| [3] |
தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
| [4] |
உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
| [5] |
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று நாடி இறைவா நமஎன்று கும்பிட ஈடில் புகழோன் எழுகவென் றானே.4,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.204  
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பண் - ( )
தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
| [1] |
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும் எந்தை யிவனல்லம் யாமே உலகினிற் பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே.
| [2] |
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள் அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும் அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
| [3] |
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி சேயவ ராகிய காரணம் அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட் டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
| [4] |
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ உவந்த பெருவழி யோடிவந் தானே.
| [5] |
அரிபிர மன்தக்கன் அற்க னுடனே வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன் சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
| [6] |
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர் அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
| [7] |
நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
| [8] |
நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே. 5,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.205  
இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
பண் - ( )
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.
| [1] |
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண் டுலகார் அழற்கண் டுள்விழா தோடி அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.
| [2] |
தண்கடல் விட்ட தமரருந் தேவரும் எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.
| [3] |
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.
| [4] |
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங் கண்பழி யாத கமலத் திருக்கின்ற நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் விண்பழி யாத விருத்திகொண் டானே.6,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.206  
இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
பண் - ( )
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம் மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி பார்போக மேழும் படைத்துடை யானே.
| [1] |
சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும் சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத் தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.
| [2] |
கூறது வாகக் குறித்தநற் சக்கரம் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே.
| [3] |
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால் தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ் சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 7,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.207  
இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
பண் - ( )
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 8,
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.208  
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
பண் - ( )
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றிநின் றாரே.
| [1] |
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
| [2] |
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந் தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.
| [3] |
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
| [4] |
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
| [5] |
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் றவனும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனும் தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே.
| [6] |
தானக் கமலத் திருந்த சதுமுகன் மானக் கருங் கடல் வாழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொரு ளண்மைய தாமே.
| [7] |
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண் டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.
| [8] |
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன் தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
| [9] |
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது காவெனும் ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 9,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.209  
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பண் - ( )
ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம் தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.
| [1] |
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.
| [2] |
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
| [3] |
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.
| [4] |
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
| [5] |
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப் புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.
| [6] |
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
| [7] |
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. | [8] |
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும் கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும் பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
| [9] |
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
| [10] |
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன் நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும் பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் ஆரண மாய்உல காயமர்ந் தானே.
| [11] |
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும் வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
| [12] |
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.
| [13] |
நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
| [14] |
ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
| [15] |
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
| [16] |
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
| [17] |
ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங் காணியர் காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந் தாணவம் நீங்கா தவரென லாகுமே.
| [18] |
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம் மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
| [19] |
ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
| [20] |
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாம் அவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.
| [21] |
வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.
| [22] |
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே.
| [23] |
ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
| [24] |
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும் ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.
| [25] |
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.
| [26] |
ஓராய மேஉல கேழும் படைப்பதும் ஓராய மேஉல கேழும் அளிப்பதும் ஓராய மேஉல கேழும் துடைப்பதும் ஓராய மேஉல கோடுயிர் தானே.
| [27] |
நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென் றிசையும் இருவருக் காதி இவனே அருளுகின் றானே.
| [28] |
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
| [29] |
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் போதித்த வானொளி பொங்கிய நீர்புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 10,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.210  
இரண்டாம் தந்திரம் - 10. திதி
பண் - ( )
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
| [1] |
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும் தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும் தானே உலகில் தலைவனு மாமே.
| [2] |
உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.
| [3] |
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும் தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும் தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும் தானொரு காலந்தண் மாயனு மாமே.
| [4] |
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.
| [5] |
உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை மற்றும் அவனே வனையவல் லானே.
| [6] |
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம் தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.
| [7] |
தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர் வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.
| [8] |
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும் பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே. 11,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.211  
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பண் - ( )
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ் வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ் வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ் வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
| [1] |
இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம் நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால் உலைதந்த மெல்லரி போலும் உலகம் மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
| [2] |
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
| [3] |
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
| [4] |
நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம் வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம் சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம் உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
| [5] |
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல் வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம் சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல் உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.
| [6] |
நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால் ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல் சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல் உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
| [7] |
நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின் வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில் சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள் உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
| [8] |
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
| [9] |
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர் ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே. 12,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.212  
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
பண் - ( )
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே.
| [1] |
இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.
| [2] |
இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாரே.
| [3] |
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண்படு பொய்கை செயலணை யாரே.
| [4] |
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம் அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும் சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும் இருளும் அறநின் றிருட்டறை யாமே.
| [5] |
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப் பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
| [6] |
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.
| [7] |
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இருங்கரை மேலிருந் தின்புற நாடி வருங்கரை ஓரா வகையினிற் கங்கை அருங்கரை பேணில் அழுக்கது வாமே.
| [8] |
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 13,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.213  
இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
பண் - ( )
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.
| [1] |
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சு மவனே சமைக்கவல் லானே.
| [2] |
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுஇது வாமே.
| [3] |
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேஉல காக்கும் கொடையுடை யான்குணம் எண்குண மாகும் சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
| [4] |
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும் உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம் உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
| [5] |
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும் படைத்துடை யான்பல தேவரை முன்னே படைத்துடை யான்பல சீவரை முன்னே படைத்துடை யான்பர மாகிநின் றானே.
| [6] |
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
| [7] |
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோதமாமே.
| [8] |
ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே. 14,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.214  
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பண் - ( )
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.
| [1] |
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
| [2] |
இன்புறு காலத் திருவர்முன்பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.
| [3] |
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.
| [4] |
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
| [5] |
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே.
| [6] |
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
| [7] |
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் மாற எதிர்க்கில் அரியவன் றானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.
| [8] |
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே.
| [9] |
கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
| [10] |
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.
| [11] |
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன் இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.
| [12] |
ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
| [13] |
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
| [14] |
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும் மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.
| [15] |
பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.
| [16] |
இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன் அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
| [17] |
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண் துன்பக் கலசம் வனைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே.
| [18] |
அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும் பிறியீரதனில் பெருகுங் குணங்கள் செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே.
| [19] |
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
| [20] |
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர் மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன் கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
| [21] |
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
| [22] |
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்று கரணமு மாய்விடும் ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக் கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
| [23] |
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப் பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண்முத லாகவகுத்துவைத் தானே.
| [24] |
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத் தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
| [25] |
வகுத்த பிறவியை மாதுநல் லாளும் தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம் வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
| [26] |
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும் காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை பூண்பது மாதா பிதாவழி போலவே ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.
| [27] |
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்; பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
| [28] |
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.
| [29] |
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.
| [30] |
மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
| [31] |
குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
| [32] |
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடும் கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.
| [33] |
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும் தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
| [34] |
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில் பருவம தாகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடு மாயையி னாலே அருவம தாவதிங் காரறி வாரே.
| [35] |
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே!
| [36] |
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய தொண்புற நாடிநின் றோதலு மாமே
| [37] |
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
| [38] |
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின் அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாய்இன்ப மாவது போல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
| [39] |
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 15,
| [40] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.215  
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பண் - ( )
விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.
| [1] |
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.
| [2] |
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
| [3] |
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.
| [4] |
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம் விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
| [5] |
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய். மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
| [6] |
ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர் காணிய விந்துவாம் நாத சகலாதி ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
| [7] |
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. 16,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.216  
இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
பண் - ( )
திலமத் தனையே சிவஞானிக் கீந்தால் பலமுத்தி சித்தி பரபோக முந்தரும் நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால் பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.
| [1] |
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக் கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
| [2] |
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும் மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன் பொய்விட்டு நானே புரிசடை யானடி நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.
| [3] |
ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவின செய்யும் இலங்கிழை யோனே.17,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.217  
இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
பண் - ( )
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே.
| [1] |
ஈவது யோக இயம நியமங்கள் சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக் கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.
| [2] |
ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன் தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங் காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன் போமா நரகில் புகான்போதங் கற்கவே.
| [3] |
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய் எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும் நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 18,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.218  
இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
பண் - ( )
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
| [1] |
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.
| [2] |
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே.
| [3] |
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள் மறியார் வளைக்க வருபுனற் கங்கைப் பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே.
| [4] |
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல் உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென் றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
| [5] |
கலந்தது நீர துடம்பிற் கறுக்கும் கலந்தது நீர துடம்பிற் சிவக்கும் கலந்தது நீர துடம்பில் வெளுக்கும் கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.19,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.219  
இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
பண் - ( )
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
| [1] |
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
| [2] |
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
| [3] |
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
| [4] |
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.220  
இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
பண் - ( )
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
| [1] |
அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே.
| [2] |
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன் மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.
| [3] |
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்திக் கலந்துட் சிவனென நிற்கும் உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோமுக மாமே.
| [4] |
அதோமுகங் கீழண்ட மான புராணன் அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும் சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும் சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
| [5] |
அதோமுக மாமல ராயது கேளும் அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து அதோமுக மாகிய அந்தமில் சத்தி அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 21,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.221  
இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
பண் - ( )
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளியுறு வார்அம ரர்பதி நாடி எளியனென் றீசனை நீசர் இகழில் கிளியொன்று பூசையின் கீழது வாமே.
| [1] |
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத் தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.
| [2] |
அப்பகை யாலே அசுரருந் தேவரும் நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே.
| [3] |
போகமும் மாதர் புலவி யதும்நினைந் தாகமும் உள்கலந் தங்குள ராதலின் வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 22,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.222  
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பண் - ( )
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
| [1] |
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
| [2] |
மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.
| [3] |
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின் நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
| [4] |
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும் நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக் கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 23,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.223  
இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
பண் - ( )
ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர் ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.
| [1] |
ஈசனடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.
| [2] |
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வா ரவன்வயம் போன போழுதே புகுஞ்சிவ போகமே.
| [3] |
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர் சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 24,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.224  
இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
பண் - ( )
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றா தொழிவது மாகமை யாமே.
| [1] |
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும் கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக் கெல்லையி லாத இலயமுண்டாமே.25,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.225  
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பண் - ( )
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன் தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன் கூடவல் லாரடி கூடுவன் யானே.
| [1] |
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும் நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.
| [2] |
அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.
| [3] |
தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற் போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார் வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங் கோவடைந் தந்நெறி கூடலு மாமே.
| [4] |
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப் படையா ரழலான் பதிசென்று புக்கே கடையார நின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஓலமென் றாரே.
| [5] |
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும் பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும் திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 1,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.301  
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
பண் - ( )
உரைத்தன வற்கரி ஒன்று முடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
| [1] |
செய்த இயம நியமஞ் சமாதிசென் றுய்யப் பராசத்தி உத்தர பூருவம் எய்தக் கவச நியாசங்கள் முத்திரை எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.
| [2] |
அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே.
| [3] |
இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 2,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.302  
மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
பண் - ( )
கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் நியமத் திடையில்நின் றானே. 3,
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.303  
மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
பண் - ( )
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன் நீதி யுணர்ந்து நியமத்த னாமே.
தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமம் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்த னாமே.
| [1] |
தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி, மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.4,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.304  
மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
பண் - ( )
பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே.
| [1] |
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
| [2] |
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே.
| [3] |
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.
| [4] |
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
| [5] |
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும் உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே. 5,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.305  
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
பண் - ( )
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.
| [1] |
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
| [2] |
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்; கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்; துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
| [3] |
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப் பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
| [4] |
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில் ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
| [5] |
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியனும் வெட்ட வெளியனு மாமே.
| [6] |
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனு மாமே.
| [7] |
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
| [8] |
மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப் பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
| [9] |
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
| [10] |
இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப் புட்டி படத்தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டங் கிருக்க நமனில்லை தானே.
| [11] |
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
| [12] |
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.
| [13] |
பன்னிரண் டானை பகல்இர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. 6,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.306  
மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
பண் - ( )
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
| [1] |
நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந் தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர் தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.
| [2] |
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.
| [3] |
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.
| [4] |
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.
| [5] |
மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே.
| [6] |
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.
| [7] |
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே.
| [8] |
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.
| [9] |
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ் சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரனு மாமே. 7,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.307  
மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
பண் - ( )
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே.
| [1] |
மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச் சிலையார் பொதுவில் திருநட மாடும் தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே.
| [2] |
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.
| [3] |
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
| [4] |
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கம் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.
| [5] |
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையு மாமே.
| [6] |
வாழலு மாம்பல காலம் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில் ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற் பாழி பெரியதோர் பள்ளி அறையே.
| [7] |
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
| [8] |
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே. 8,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.308  
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பண் - ( )
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியானம் உன்னும் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
| [1] |
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
| [2] |
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
| [3] |
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.
| [4] |
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே.
| [5] |
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில் கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
| [6] |
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
| [7] |
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே.
| [8] |
மணிகடல் யாஅனை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.
(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)
கடலொடு மேகங் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.
| [9] |
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும் ஓசை அதன்மணம் போல விடுவதோர் ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.
| [10] |
நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவில்நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
| [11] |
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.
| [12] |
பள்ளி அறையில் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது வெள்ளி அறையில் விடிவில்லை தானே.
| [13] |
கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.
| [14] |
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.
| [15] |
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.
| [16] |
முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலமிடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.
| [17] |
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
| [18] |
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று செறிவான மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 9,
| [19] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.309  
மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
பண் - ( )
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே.
| [1] |
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருட் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.
| [2] |
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே.
| [3] |
விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங் கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தானே.
| [4] |
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
| [5] |
பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத் தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.
| [6] |
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.
| [7] |
நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
| [8] |
மூலத்து மேலது முற்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.
| [9] |
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.
| [10] |
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும் குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும் துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.
| [11] |
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே.
| [12] |
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம் சமாதிகள் வேண்டா இறையுட னேகில் சமாதிதா னில்லை தானவ னாகில் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 10,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.310  
மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
பண் - ( )
போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும் மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
| [1] |
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.
| [2] |
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
| [3] |
செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே.
| [4] |
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
| [5] |
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
| [6] |
தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந் தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன் தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.
| [7] |
காரிய மான உபாதியைத் தான்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற வாரிய காரணம் மாயத் தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.11,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.311  
மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி
பண் - ( )
பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.
| [1] |
பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவெளி கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.
| [2] |
குரவன் அருளிற் குறிவழி மூலன் பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.
| [3] |
காயாதி பூதங் கலைகால மாயையில் ஆயா தகல அறிவொன் றனாதியே ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலு மாமே.
| [4] |
இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம் மருவிய கன்மமாம் மாபந்த யோகந் தருமிவை காய உழைப்பாகும் தானே அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.
| [5] |
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் உதய மதுநா லொழியஓ ரெட்டுப் பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈராறு சித்திக ளாமே.
| [6] |
நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால் நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின் நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே.
| [7] |
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம் தாழா நடைபல யோசனை சார்ந்திடும் சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற் றான்பர காயமே.
| [8] |
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ் வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
| [9] |
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும் மானாக் கனமும் பரகாயத் தேகலும் தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.
| [10] |
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக் கோங்கி வரமுத்தி முந்திய வாறே.
| [11] |
முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம் உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.
| [12] |
சித்தந் திரிந்து சிவமய மாகியே முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத்தின் திருநடத் தோரே.
| [13] |
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
| [14] |
இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின் இருக்கு முடலி லிருந்தில தாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
| [15] |
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம் வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.
| [16] |
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.
| [17] |
நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.
| [18] |
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக் கொன்பது வாசல் உலைநல மாமே.
| [19] |
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.
| [20] |
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.
| [21] |
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
| [22] |
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப் பொட்டிட்டு நின்றது பூரண மானதே.
| [23] |
பூரண சத்தி எழுமூன் றறையாக ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே.
| [24] |
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே.
| [25] |
இடையொடு பிங்கலை என்னும் இரண்டும் அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும் தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
| [26] |
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின் மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
| [27] |
நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன் தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
| [28] |
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.
| [29] |
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படும் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுள வாகுமே.
| [30] |
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.
| [31] |
மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே.
| [32] |
முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனும் தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
| [33] |
ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன் கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச் சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.
| [34] |
மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின் சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும் பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
| [35] |
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின் மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.
| [36] |
ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வெளியுற நின்றன தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
| [37] |
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும் தன்வழி யாகத் தழைத்திடும் வையகம் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம் தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.
| [38] |
நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை யெல்லாங் கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.
| [39] |
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம் மேகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவது மில்லையே.
| [40] |
போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.
| [41] |
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் பறிந்தது பூதப் படையவை யெல்லாம் குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில் விரிந்த பரகாயம் மேவலு மாமே.
| [42] |
ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னேயு டையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.
| [43] |
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாம் கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற் பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.
| [44] |
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ னாமே. | [45] |
தானே படைத்திட வல்லவ னாயிடும் தானே அளித்திட வல்லவ னாயிடும் தானேசங் காரத் தலைவனு மாயிடும் தானே சிவனெனுந் தன்மைய னாமே.
| [46] |
தன்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
| [47] |
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
| [48] |
தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் புன்மைய தாகிப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
| [49] |
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப் பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங் கற்கொடி யாகிய காமுக னாமே.
| [50] |
காமரு தத்துவ மானது கண்டபின் பூமரு கந்தம் புவனம தாயிடும் மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம் நாமரு வும்ஒளி நாயக மானதே.
| [51] |
நாயக மாகிய நல்லொளி கண்டபின் தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டுபின் பேயக மாகிய பேரொளி காணுமே.
| [52] |
பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும் பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளி யாகிய காலொளி காணுமே.
| [53] |
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது வக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும் காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே.
| [54] |
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள ஆறது வாயிர மாகும் அருவழி ஆறது வாக வளர்ப்ப திரண்டே.
| [55] |
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.
| [56] |
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.
| [57] |
ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.
| [58] |
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில் முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே.
| [59] |
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.
| [60] |
இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுந்தே.
| [61] |
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய் எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.
| [62] |
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
| [63] |
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத் துந்திச் சமாதி யுடையொளி யோகியே.
| [64] |
அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல் வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல் சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல் நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.
| [65] |
மரணஞ் சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரனன் திருவுரு வாதல்மூ வேழாங் கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.
| [66] |
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே.
| [67] |
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே.
| [68] |
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே.
| [69] |
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே.
| [70] |
கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு நட்டறி வார்க்கு நமனில்லை தானே. 12,
| [71] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.312  
மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
பண் - ( )
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதரும் காதல் வழிசெய்து காக்கலு மாமே.
| [1] |
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும் காக்கலு மாகுங் கலைபதி னாறையும் காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும் காக்கலு மாகுங் கருத்துற நில்லே
| [2] |
நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் மலைவற வாகும் வழியது வாமே.
| [3] |
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.
| [4] |
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே.
| [5] |
சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதக மாக விளைந்து கிடக்குமே.
| [6] |
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே அப் பங்கய மாகத் தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.
| [7] |
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகச் சிவாலய மாகுமே.
| [8] |
திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.
| [9] |
சோதனை தன்னில் துரிசறக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள் சாதன மாகுங் குருவை வழிபட்டு மாதன மாக மதித்துக்கொ ளீரே.
| [10] |
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல் நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
| [11] |
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும் தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள் மாசறு சோதி வகுத்துவைத் தானே. 13,
| [12] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.313  
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
பண் - ( )
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
| [1] |
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
| [2] |
சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித் துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க் கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.
| [3] |
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
| [4] |
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க உடம்பழி யாதே.
| [5] |
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
| [6] |
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம் தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.
| [7] |
திறத்திறம் விந்து திகழும் அகாரம் உறப்பெற வேநினைந் தோதும் சகாரம் மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.
| [8] |
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.
| [9] |
மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே.
| [10] |
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே.
| [11] |
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே.
| [12] |
பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின் வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார் கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே.
| [13] |
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே.
| [14] |
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.
| [15] |
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப்பல் கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 14,
| [16] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.314  
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பண் - ( )
மதிவட்ட மாக வரையைந்தும் நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும் அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.
| [1] |
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும் கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்ற தறியா தழிகின்ற வாறே.
| [2] |
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும் கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே.
| [3] |
திருந்து தினமத் தினத்தி னொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே.
| [4] |
மனைபுகு வீரும் மகத்திடை நாடி எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே.
| [5] |
நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும் பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே.
| [6] |
ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.
| [7] |
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.
| [8] |
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரணம் மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே.
| [9] |
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.
| [10] |
நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும் சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும் உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.
| [11] |
ஓவிய மான உணர்வை அறிமின்கள் பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை; தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
| [12] |
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்; கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.
| [13] |
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.
| [14] |
சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல் கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.
| [15] |
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில் ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே.
| [16] |
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும் சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.
| [17] |
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே.
| [18] |
சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் கோடி யுகமது வாமே.
| [19] |
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டங் குயருறு வாரே.
| [20] |
உயருறு வார்உல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல் கயலுறு கண்ணியைக் காணகி லாரே.
| [21] |
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லார்நயம் பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாம் காணகி லாமற் கழிகின்ற வாறே.
| [22] |
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலுமாகும் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே.
| [23] |
கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.
| [24] |
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே.
| [25] |
கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறும் மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே.
| [26] |
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.
| [27] |
அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை அவன்இவ னாகும் பரிசது கேள்நீ அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும் அவன்இவன் வட்டம தாகிநின் றானே.
| [28] |
வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.
| [29] |
காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 15,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.315  
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பண் - ( )
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம் அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.
| [1] |
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.
| [2] |
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமே உலகில் தலைவனு மாமே.
| [3] |
தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் தலைவன் இடம்வலந் தன்வழி நூறே.
| [4] |
ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தெளிஇவ் வகையே.
| [5] |
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.
| [6] |
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில் எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.
| [7] |
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.
| [8] |
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயிரு நாலும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் ஆயுரு வாறென் றளக்கலு மாமே.
| [9] |
அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் களக்க மறமூன்றிற் காணலு மாமே.
| [10] |
காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே.
| [11] |
கருதும் இருபதிற் காணஆ றாகும் கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம் கருதும் இருப துடன்ஆறு காணில் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.
| [12] |
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.
| [13] |
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே.
| [14] |
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும் சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே.
| [15] |
மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும் சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே.
| [16] |
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியா அறிவறிந் தேனே.
| [17] |
அறிவது வாயுவொ டைந்தறி வாய அறிவா வதுதான் உலகுயிர் அத்தின் பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற் செறிவது நின்று திகழும் அதுவே.
| [18] |
அதுவரு ளும்மரு ளான துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும் மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.
| [19] |
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 16,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.316  
மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
பண் - ( )
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம் தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
| [1] |
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.
| [2] |
செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.
| [3] |
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம் தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
| [4] |
உதித்து வலத்திடம் போகின்ற போது அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும் உதித்தது வேமிக ஓடிடு மாகில் உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.
| [5] |
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.17,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.317  
மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
பண் - ( )
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.
| [1] |
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 18,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.318  
மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
பண் - ( )
கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்துநட்ட மிருக்க நமனில்லை தானே.
| [1] |
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
| [2] |
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட் கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
| [3] |
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
| [4] |
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே.
| [5] |
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியலு மாமே.
| [6] |
மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவும் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
| [7] |
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
| [8] |
தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை ஆடிய தீங்கரும் பாமே.
| [9] |
தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர் ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
| [10] |
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.
| [11] |
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
| [12] |
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
| [13] |
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன் மாவினை யாளர் மதியிலுள் ளானே.
| [14] |
மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப் பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
| [15] |
இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ இருந்தனள் கன்னியும் அந்நடு வாக இருந்தனள் மான்ஏர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
| [16] |
பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில் வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகும் குணமது தானே.
| [17] |
குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே.
| [18] |
இருந்த பிராணனும் உள்ளே எழுமா பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.
| [19] |
மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக் குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 19,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.319  
மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
பண் - ( )
பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காசக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே.
| [1] |
போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந் தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.
| [2] |
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே.
| [3] |
அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.
| [4] |
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம் தலைவனு மாயிடுந் தன்வழி போகம் தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.
| [5] |
அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே.
| [6] |
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.
| [7] |
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில் விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே.
| [8] |
ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம் ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச் சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.
| [9] |
வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே.
| [10] |
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.
| [11] |
வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம் தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம் திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே.
| [12] |
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும் துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.
| [13] |
எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.
| [14] |
வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறிவின் உளிமுறி யாமே தெளிவை அறிந்து செழுநந்தி யாலே வெளியை அறிந்தனன் மேலறி யேனே.
| [15] |
மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள் மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.
| [16] |
மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.
| [17] |
வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம் ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே.
| [18] |
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.
| [19] |
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 20,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.320  
மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
பண் - ( )
உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.
| [1] |
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும் களிதரும் காயம் கனகம தாமே.
| [2] |
நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள் தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே.
| [3] |
கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.
அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் இளகும் மேனி இருளுங் கபாலமே.
| [4] |
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.21,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.321  
மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
பண் - ( )
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.
| [1] |
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள் ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
| [2] |
ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும் மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
| [3] |
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.
| [4] |
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.
| [5] |
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.
| [6] |
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே.
| [7] |
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகும் சசிபானு பங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.
| [8] |
தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே.
| [9] |
தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.
| [10] |
முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச் செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.
| [11] |
அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத் தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.
| [12] |
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
| [13] |
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை தங்கி அதுவே சகலமு மாமே.
| [14] |
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.
| [15] |
காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.
| [16] |
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
| [17] |
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவன் ஈசன் இடமது தானே.
| [18] |
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
| [19] |
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.
| [20] |
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும் பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.
| [21] |
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின் வியந்தரு பூரணை மேவும் சசியே.
| [22] |
சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே.
| [23] |
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே.
| [24] |
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் கண்மதி வீழ்வள விற்கண மின்றே.
| [25] |
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும் தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும் மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.
| [26] |
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில் ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே.
| [27] |
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ் சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே.
| [28] |
உணர்விந்து சோணி உறஇனன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.
| [29] |
அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல் குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.
| [30] |
உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.
| [31] |
மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித் தாறு படாமல்தண் டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.
| [32] |
விடாத மனம்பவ னத்தொடு மேவி நடாவு சிவசங்க நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே. 1,
| [33] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.401  
நான்காம் தந்திரம் - 1. அசபை
பண் - ( )
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
| [1] |
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.
| [2] |
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும் தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.
| [3] |
ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம் ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.
| [4] |
தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத் தாண்டவ மான தனுக்கிர கத்தொழில் தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.
| [5] |
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலந் தானே.
| [6] |
தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன் தராதல வெப்பு நமவா சியஆம் தராதலம் சொல்லின் தான்வா சியஆம் தராதல யோகம் தயாவாசி ஆமே.
| [7] |
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம்என்ப ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே.
| [8] |
ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.
| [9] |
படுவ திரண்டு பலகலை வல்லார் படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே.
| [10] |
வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்துறை பின்னையும் வாறே திருக்கூத்தா கமவ சனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.
| [11] |
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம் அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம் அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.
| [12] |
தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும் தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும் தானே தனக்குத் தனமய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனு மாமே.
| [13] |
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.
| [14] |
இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே.
| [15] |
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
| [16] |
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.
| [17] |
தானே தனக்குத் தகுநட்டந் தானாகும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே.
| [18] |
நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும் நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம் நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.
| [19] |
செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில் செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம் செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச் செம்புபொன் னான திருவம் பலமே.
| [20] |
திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருவம் பலமாக ஈராறு கீறித் திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித் திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.
| [21] |
வாறே சிவாய நமச்சிவா யந்நம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
| [22] |
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும் பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில் பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.
| [23] |
பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும் பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும் பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும் பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.
| [24] |
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவாள் நயந்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.
| [25] |
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல் சூக்கும மான வழிஇடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் சூக்கும மான சிவனதா னந்தமே.
| [26] |
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும் ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.
| [27] |
மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம் மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும் மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.
| [28] |
கூத்தே சிவாய நமமசி யாயிடும் கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும் கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும் கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.
| [29] |
ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே. 2,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.402  
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பண் - ( )
இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன் றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
| [1] |
தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும் தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும் தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும் தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
| [2] |
அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.
| [3] |
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
| [4] |
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.
| [5] |
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே.
| [6] |
இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை இருந்த அதனுள் இரேகைஐந் தாக இருந்த அறைகள் இருபத்தஞ் சாக இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
| [7] |
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி யகாரம் தலையா இருகண் சிகாரமா நகார அகாரம்நற் காலது வாமே.
| [8] |
நாடும் பிரணவம் நடு இரு பக்கமும் ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது நாடும் நடுஉள் முகம்ந மசிவாய வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.
| [9] |
ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசி வயய நமசிவா ஆயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
| [10] |
அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.
| [11] |
அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம் அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம் அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.
| [12] |
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால் சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத் தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.
| [13] |
அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம் அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
| [14] |
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
| [15] |
இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில் செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன் புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.
| [16] |
ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும் ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக் கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
| [17] |
அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
| [18] |
அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
| [19] |
அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.
| [20] |
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.
| [21] |
கூத்தனைக் காணும் குறிபல பேசிடின் கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால் கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
| [22] |
அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
| [23] |
தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதினால் தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.
| [24] |
கல்லொளி யேஎன நின்ற வடதிசைக் கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன் கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.
| [25] |
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும் தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவ னாமே.
| [26] |
மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன் ஆக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.
| [27] |
ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம் ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.
| [28] |
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.
| [29] |
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.
| [30] |
ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.
| [31] |
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப் பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.
| [32] |
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமா யநவசிம பார்க்கில் மவயநசி பரமா யசியநம வாபரத் தோதில் பரமாய வாசி மயநவாய் நின்றதே.
| [33] |
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.
| [34] |
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வா நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியும் குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.
| [35] |
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
| [36] |
வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச் சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம் தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.
| [37] |
அகார உகார சிகாரம் நடுவா வகாரமொ டாறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்துநின் றானே.
| [38] |
அற்ற இடத்தே அகாரம தாவது உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.
| [39] |
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
| [40] |
நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.
| [41] |
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலன் நடுவுற முத்திதந் தானே.
| [42] |
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியஒண் ணாதது தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.
| [43] |
அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.
| [44] |
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும் சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர் அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.
| [45] |
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.
| [46] |
அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகாரம் நடுவாய் உருவிட ஆறும் உறுமந் திரமே.
| [47] |
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடின் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.
| [48] |
ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர் ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.
| [49] |
ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.
| [50] |
விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க் கந்தர வாகரம் கால்உடம் பாயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.
| [51] |
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும் ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.
| [52] |
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.
| [53] |
வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே.
| [54] |
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.
| [55] |
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும் ஐந்தின் பெருமையே ஆலய மாவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
| [56] |
வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும் நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன் சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத் தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.
| [57] |
நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு நாலாம் எழுத்தது நன்னெறி தானே.
| [58] |
இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயந்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.
| [59] |
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன் நாம நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே.
| [60] |
பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின் இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர நட்டம தாடும் நடுவே நிலயங்கொண் டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.
| [61] |
அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில் சிகாரம் சிவமா வகாரம் வடிவா யகாரம் உயிரென் றறையலும் ஆமே.
| [62] |
நகார மகார சிகாரம் நடுவா வகாரம் இரண்டு வளியுடன் கூடி ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே.
| [63] |
அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.
| [64] |
ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகாராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.
| [65] |
மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமு மாகும் தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.
| [66] |
அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின் நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.
| [67] |
சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச் சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும் சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள் சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.
| [68] |
சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஒகார முடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்துநின் றானே.
| [69] |
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முத லாகும் சதாசிவன் றானே. | [70] |
நவமும் சிவமும் உயிர்பர மாகும் தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும் சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச் சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.
| [71] |
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள் தேடி யதனைத் தெளிந்தறி யீரே.
| [72] |
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
| [73] |
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச் சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
| [74] |
தானவர் சிட்டர் சதுரர் இருவர் ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய்சிவ சக்கரந் தானே.
| [75] |
பட்டன மாதவம் ஆற்றும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
| [76] |
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
| [77] |
வித்தாஞ் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும் பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.
| [78] |
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக் கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப் பண்பழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமஎன லாமே.
| [79] |
புண்ணிய வானவர் பூமழை தூவிநின் றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.
| [80] |
ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
| [81] |
எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.
| [82] |
நம்முதல் அவ்வொடு நாவின ராகியே அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு உம்முத லாக உணர்பவர் உச்சிமேல் உம்முத லாயவன் உற்றுநின் றானே.
| [83] |
நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத் தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.
| [84] |
கரண இறலிப் பலகை யமன்திசை மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில் முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.
| [85] |
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பாங்கு படவே பலாசப் பலகையில் காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட் டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.
| [86] |
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில் பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.
| [87] |
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசிஏய்ந்த அகார உகார எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.
| [88] |
எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடாவெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே. 3,
| [89] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.403  
நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
பண் - ( )
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
| [1] |
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம் தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத் தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.
| [2] |
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால் இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.
| [3] |
எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண் டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
| [4] |
நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார் அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம் நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும் மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.
| [5] |
வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.
| [6] |
அறிவரு ஞானத் தெவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
| [7] |
இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம் மருள்அறி யாமையும் மன்னும் அறிவும் அருள் இவை விட்டறியாமை மயங்கும் மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.
| [8] |
தானவ னாக அவனேதா னாயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவன் அன்பிது நாலாம் மரபுறத் தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.
| [9] |
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.
| [10] |
நமஅது ஆசன மான பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமஅற ஆதி நாடுவ தன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.
| [11] |
தெளிவரும் நாளில் சிவஅமு தூறும் ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில் வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே. 4,
| [12] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.404  
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பண் - ( )
நவகுண்ட மானவை நானுரை செய்யின் நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும் நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம் நவகுண்ட மானவை நானுரைப் பேனே.
| [1] |
உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும் வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.
| [2] |
மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள் காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பாரறிந் தண்டம் சிறகற நின்றது நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.
| [3] |
கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.
| [4] |
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.
| [5] |
கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும் பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.
| [6] |
நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில் பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும் நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.
| [7] |
நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.
| [8] |
வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச் சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும் பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.
| [9] |
இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச் சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.
| [10] |
முக்கணன் றானே முழுச்சுட ராயவன் அக்கணன் றானே அகிலமும் உண்டவன் திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன் எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.
| [11] |
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.
| [12] |
மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள் ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.
| [13] |
நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.
| [14] |
நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.
| [15] |
எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக் கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.
| [16] |
அந்தமி லானுக் ககலிடந் தானில்லை அந்தமி லானை அளப்பவர் தாமில்லை அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.
| [17] |
பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
| [18] |
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.
| [19] |
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
| [20] |
முத்திநற் சோதி முழுச்சுட ராயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச் செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.
| [21] |
சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
| [22] |
மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும் உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.
| [23] |
கலந்திரு பாதம் இருகர மாகும் அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.
| [24] |
உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே.
| [25] |
கொடிஆறு சென்று குலாவிய குண்டம் அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏ ழுலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே.
| [26] |
மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதனமாகச் சமைந்த குருஎன்றும் போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.
| [27] |
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை காத்துட லுள்ளே கருதி யிருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.
| [28] |
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே.
| [29] |
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளைவாறு பூநிலை போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம் நாதனை நாடும் நவகோடி தானே. 5,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.405  
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பண் - ( )
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை நாரணி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.
| [1] |
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே.
| [2] |
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே.
| [3] |
நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள் பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை நல்கும் பரை அபிராமி அகோசரி புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.
| [4] |
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
| [5] |
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.
| [6] |
நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
| [7] |
சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள் வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை அத்தகை யாயும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.
| [8] |
அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
| [9] |
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே.
| [10] |
தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன் வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம் கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.
| [11] |
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம் புராசத்தி புண்ணிய மாகிய போகமே.
| [12] |
போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும் பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
| [13] |
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.
| [14] |
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பாரபரச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.
| [15] |
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
| [16] |
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.
| [17] |
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
| [18] |
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.
| [19] |
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித் தெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.
| [20] |
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தன்னொடும் மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.
| [21] |
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
| [22] |
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.
| [23] |
தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.
| [24] |
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல் சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.
| [25] |
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
| [26] |
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.
| [27] |
ஆன வராக முகத்தி பதத்தினில் ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.
| [28] |
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
| [29] |
தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயர்வித்துத் தந்த பதினாலும் மானோர் தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதித் தன்மையு மாமே. 6,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.406  
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பண் - ( )
பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும் சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.
| [1] |
அந்தம் பதினா லதுவே வயிரவி முந்தும் நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
| [2] |
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
| [3] |
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.
| [4] |
தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும் பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
| [5] |
ஓதிய நந்தி உணருந் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெயும் போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச் சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
| [6] |
சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு நாலங் கரம்உள நாகபா சாங்குசம் மாலங் கயன்அறி யாத வடிவற்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
| [7] |
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
| [8] |
பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
| [9] |
பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர் ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
| [10] |
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசத்தி அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
| [11] |
பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும் வாச மிலாத மணிமந் திரயோகம் தேசந் திகழும் திரிபுரை காணே.
| [12] |
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணுந் தலைவிநற் காரணி காணே.
| [13] |
காரண மந்திரம் ஓதும் கமலத்துப் பூரண கும்ப இரேசம் பொருந்திய நாரணி நந்தி நடு அங் குரைசெய்த ஆரண வேதநூல் அந்தமு மாமே.
| [14] |
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே.
| [15] |
உரைத்த நவசக்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே.
| [16] |
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத் திருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை மேவித் தமுதொடு மீண்டது காணே.
| [17] |
காணும் இருதய மந்திரமும் கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.
| [18] |
சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித் தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.
| [19] |
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப் பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
| [20] |
பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
| [21] |
கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
| [22] |
நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
| [23] |
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
| [24] |
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகில் பிறவிகள் நாசமாம் ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.
| [25] |
கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
| [26] |
வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.
| [27] |
கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள் கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
| [28] |
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே.
| [29] |
வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய சடைமுடிச் சூலினி சுந்தரி ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.
| [30] |
இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.
| [31] |
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக் கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி ஊடகம் மேவி உறங்குகின் றேனே.
| [32] |
உறங்கு மளவில் மனோன்மனி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட் டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.
| [33] |
உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத் தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.
| [34] |
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க் கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.
| [35] |
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.
| [36] |
குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
| [37] |
கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.
| [38] |
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
| [39] |
ஆதி அனாதி அகாரணி காரணி சோதி அசோதி சுகபர சுந்தரி மாது சாமாதி மனோன்மனி மங்கலி ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.
| [40] |
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.
| [41] |
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி யருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.
| [42] |
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.
| [43] |
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர் என்னேஇம் மாயை இருளது தானே.
| [44] |
இருளது சத்தி வெளியதெம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.
| [45] |
ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதி பராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மனி மங்கலி ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.
| [46] |
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள் ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.
| [47] |
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
| [48] |
வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித் தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியு மாமே.
| [49] |
ஆதி அனாதி அகாரணி காரணி வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும் பாதி பராபரை பன்னிரண் டாதியே. 7,
| [50] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.407  
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பண் - ( )
அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும் அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.
| [1] |
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.
| [2] |
கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும் இன்பக் கலவி இனிதுறை தையலும் இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.
| [3] |
இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பராசத்தி என்னம்மை தானே.
| [4] |
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன் மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும் பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.
| [5] |
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்ப தொருநூறு தானுள பூமேல் உறைகின்ற போதகி வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.
| [6] |
ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தனாதனன் தானே.
| [7] |
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே.
| [8] |
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத் தறிவான மங்கை அருளது சேரின் பிறியா அறிவறி வாருளம் பேணும் நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.
| [9] |
இரவும் பகலும் இலாத இடத்தே குரவஞ்செய் கின்ற குழலியை நாடி அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப் பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.
| [10] |
பாலனு மாகும் பராசத்தி தன்னொடு மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.
| [11] |
நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும் நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.
| [12] |
மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின்ற போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
| [13] |
சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.
| [14] |
ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.
| [15] |
உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி யிருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத் தடையது வாகிய சாதகர் தாமே.
| [16] |
தாமேல் உறைவிடம் ஆறித ழானது பார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுள பூமேல் உறைகின்ற புண்ணியை வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.
| [17] |
பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகித் திகழ்தரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்த துலகே.
| [18] |
நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய் படர்ந்தது தன்வழிப் பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழிச் சோதி அடுத்தே.
| [19] |
அடுக்கின்ற தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கின்ற தாமரை இல்லகத் துள்ளது மடுக்கின்ற தாமரை மத்தகத் தேசெல முடுக்கின்ற தாமரை முற்சது ரத்ததே.
| [20] |
முற்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே.
| [21] |
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய் பரந்தன வாயு திசைதிசை தோறும் குவிந்தன முத்தின் முகம்ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.
| [22] |
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.
| [23] |
நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி துகிலுழை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து புகலும்முச் சோதி புனையநிற் பாளே.
| [24] |
புனையவல் லாள்புவ னத்திறை எங்கள் வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே புனையவல் லாள்புவ னத்தொளி தன்னை புனையவல் லாளையே போற்றியென் பேனே.
| [25] |
போற்றிஎன் பேன் புவனாபதி அம்மை என் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றந் துரக்கின்ற கோட்பைந் தொடியே.
| [26] |
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தர வடிவார் திரிபுரையாம் மங்கை சங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத் தாதியு மாமே.
| [27] |
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவையைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.
| [28] |
தாவித்த அப்பொருள் தான் அவன் எம்மிறை பாவித் துலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந் தாவிக்கு மப்பொரு ளானது தானே.
| [29] |
அதுஇது என்பார் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே. 8,
| [30] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.408  
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
பண் - ( )
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு நாலித ழானவை நாற்பத்து நாலுள பாலித ழானஅப் பங்கய மூலமாய்த் தானித ழாகித் தரித்திருந் தாளே.
| [1] |
தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும் மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.
| [2] |
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.
| [3] |
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க் கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம் மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.
| [4] |
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.
| [5] |
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந் தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.
| [6] |
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி பாலித் துலகில் பரந்துபெண் ணாகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஓலித் தொருவன் உகந்துநின் றானே.
| [7] |
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம் உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.
| [8] |
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்தது சொல்லகி லேனே.
| [9] |
சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம் செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள் வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி மல்லவொண் ணாத மனோன்மனி தானே.
| [10] |
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரை தண்கடற் கண்ணே.
| [11] |
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
| [12] |
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும் விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.
| [13] |
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.
| [14] |
பராசத்தி என்றென்று பல்வகை யாலும் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங் குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.
| [15] |
உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி இணைந்து பரமென் றிசைந்திது தானே.
| [16] |
இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள் பொதுவக் கலவியுள் போகமு மாகி மதுவக் குழலி மனோன்மனி மங்கை அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.
| [17] |
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும் யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும் யோகநற் சத்தி உதரம் நடுவாகும் யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.
| [18] |
தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும் ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.
| [19] |
தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை தானான வாறும்ஈ ரேழும் சமகலை தானான விந்து சகமே பரமெனும் தானாம் பரவா தனையெனத் தக்கதே.
| [20] |
தக்க பராவித்தை தான்இரு பானேழில் தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.
| [21] |
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள் தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
| [22] |
கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள் அங்குச பாசம்எனும் அகி லம்களி தங்கும் அவள்மனை தானறி வாயே.
| [23] |
வாயும் மனமும் கடந்த மனோன்மனி பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.
| [24] |
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே.
| [25] |
பத்து முகமுடை யாள்நம் பராசக்தி வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.
| [26] |
கூறிய கன்னி குலாய பருவத்தள் சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள் ஆறிய நங்கை அமுத பயோதரி பேறுயி ராளி பிறிவறுத் தாளே.
| [27] |
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.
| [28] |
உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.
| [29] |
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத் திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.
| [30] |
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி நிரந்தர மாகிய நீர்திசை ஓடு பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.
| [31] |
அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.
| [32] |
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.
| [33] |
இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின் உந்திய சோதி இதயத் தெழும் ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே.
| [34] |
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம் மாறுதல் இன்றி மனோவச மாஎழில் தூறது செய்யும் சுகந்தச் சுழியது பேறது செய்து பிறந்திருந் தாளே.
| [35] |
இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத் திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.
| [36] |
மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின் றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.
| [37] |
சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனி னுள்ளே கருதுவ ராயின் தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.
| [38] |
பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம் மூலத்தின் மேலது முத்தது வாமே.
| [39] |
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி சத்தி சதுரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.
| [40] |
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர் மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர் ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.
| [41] |
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள் வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும் கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும் கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.
| [42] |
கொடிய திரேகை குருவுள் ளிருப்பப் படிவது வாருணைப் பைங்கழல் ஈசன் வடிவது ஆனந்தம் வந்து முறையே இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.
| [43] |
ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும் மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
| [44] |
சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்ப தறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போல் கதறுகின் றாரே.
| [45] |
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்! நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக் காரேய் குழலி கமல மலரன்ன சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.
| [46] |
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச் சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.
| [47] |
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச் சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை நவாதியில் ஆக நயந்தது ஓதில் உவாதி அவளுக் குறைவில தாமே.
| [48] |
உறைபதி தோறும் உறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும் இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.
| [49] |
எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.
| [50] |
கருத்துறுங் காலம் கருது மனமும் திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
| [51] |
ஆமைஒன் றேறி அகம்படி யான்என ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூடிநின் றாளே.
| [52] |
சூடிடும் அங்குச பாசத்துளை வழி கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம் ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
| [53] |
ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன் தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம் காமனும் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே.
| [54] |
சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞாளம் உருவநின் றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.
| [55] |
அண்ட முதலா அவனி பரியந்தம் கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது கண்டனும் கண்டியு மாகிய காரணம் குண்டிகை கோளிகை கண்டத னாலே.
| [56] |
ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம் சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும் கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.
| [57] |
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன் மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.
| [58] |
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
| [59] |
நிலாமய மாகிய நீள்படி கத்தி சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி சுலாமய மாகும் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே.
| [60] |
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும் கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
| [61] |
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாகுமே.
| [62] |
பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி ஏக இருதயம் ஈரைந்து திண்புயம் மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும் நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.
| [63] |
நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின் றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின் றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
| [64] |
ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள் ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத் தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
| [65] |
ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம் ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள ஆய மனந்தொ றாறுமுக மாமவற் றேய குழலி இனிதுநின் றாளே.
| [66] |
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும் துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள் ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.
| [67] |
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே மணந்தெழு மாகதி யாகிய தாகும் கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
| [68] |
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும் மாமது மண்டலம் மாருத மாதியும் ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக் கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
| [69] |
ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடப் பரைஅவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
| [70] |
தானிகழ் மோகினி சார்வான யோகி போன மயமுடை யார்அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந் தானாம் பரசிவம் மேலது தானே.
| [71] |
தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு மோனையில் வைத்து மொழிதரு கூறது ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.
| [72] |
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி யார்க்கும் அறிய அரியாள் அவளாகும் வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.
| [73] |
நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.
| [74] |
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும் சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.
| [75] |
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே.
| [76] |
அதுஇது என்றவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
| [77] |
வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
| [78] |
ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமது தாரங் குழலாளும் அப்பதி தானும்முன் சாரும் பதம்இது சத்திய மாமே.
| [79] |
சத்தியி னோடு சயம்புவும் நேர்படில் வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும் சித்தது மேவித் திருந்திடு வாரே.
| [80] |
திருந்து சிவனும் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த அருந்திட அவ்விடம் ஆரமு தாக இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.
| [81] |
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர் தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே.
| [82] |
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.
| [83] |
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.
| [84] |
ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி மாயம தாகி மதோமகி ஆயிடுஞ் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.
| [85] |
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.
| [86] |
ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே.
| [87] |
வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும் வந்தனை செய்யும் வழிநவில் வீரே.
| [88] |
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.
| [89] |
தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
| [90] |
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
| [91] |
விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
| [92] |
தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.
| [93] |
உருவம் பலஉயி ராவல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின் புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
| [94] |
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்கும் சலதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.
| [95] |
உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப் புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.
| [96] |
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர் கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.
| [97] |
தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியா நினைவதென் காரண அம்மையே.
| [98] |
அம்மனை அம்மை அரிவை மனோன்மனி செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும் இம்மனை செய்த இருநில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.
| [99] |
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை அம்மையொ டத்தனும் யானும் உடனிருந் தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே. 9,
| [100] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.409  
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பண் - ( )
ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.
| [1] |
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.
| [2] |
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச் சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.
| [3] |
மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.
| [4] |
ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த எழுத்தே.
| [5] |
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
| [6] |
அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.
| [7] |
ஆகாச அக்கர மாவது சொல்லிடில் ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.
| [8] |
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.
| [9] |
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.
| [10] |
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.
| [11] |
அந்தமும் ஈறும் முதலா னவைஅற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருட மானதே.
| [12] |
ஆஇன மானவை முந்நூற் றறுபதும் ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும் ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும் ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.
| [13] |
வந்திடும் ஆகாச ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்ப திராசியும் வந்திடும் நாளது முந்நூற் றறுபதும் வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.
| [14] |
அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும் கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம் தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.
| [15] |
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.
| [16] |
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.
| [17] |
தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே.
| [18] |
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின் கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.
| [19] |
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
| [20] |
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும் நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே. | [21] |
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம் விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே.
| [22] |
வீசம் இரண்டுள நாதத் தெழுவன வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே.
| [23] |
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத் தளவு விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில் விரிந்தது விந்து விதையது வாமே.
| [24] |
விதையது விந்து விளைந்தன எல்லாம் விதையது விந்து விளைந்த உயிரும் விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம் விதையது விந்து விளைந்தவன் தாளே.
| [25] |
விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம் விளைந்த எழுத்தவை சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே.
| [26] |
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில் தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம் தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.
| [27] |
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.
| [28] |
பார்க்கலு மாகும் பகையறு சக்கரம் காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.
| [29] |
அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.
| [30] |
கூறிய சக்கரத் துள்எழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.
| [31] |
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை மாரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.
| [32] |
கூடிய தம்பனம் மாரணம் வச்சியம் ஆடியல் பாக அமைந்து செறிந்தடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.
| [33] |
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.
| [34] |
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப் பாலித் தெழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.
| [35] |
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டைஉள் நாவில் பகையற விண்டபின் மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி என்றும் இதயத் தெழுந்து நமவே. 10,
| [36] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.410  
நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
பண் - ( )
அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக அறிந்த வலமது வாக நடத்தே.
| [1] |
நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
| [2] |
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு ஆமே தமருக பாசமும் கையது ஆமே சிரத்தொடு வாளது கையே.
| [3] |
கையவை ஆறும் கருத்துற நோக்கிடு மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.
| [4] |
பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம் பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால் பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.
| [5] |
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின் வேண்டிய ஆறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகும் கருத்தே. 11,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.411  
நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
பண் - ( )
சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக் காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும் நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
| [1] |
நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள் கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி ஈடற நாலைந் திடவகை ஆமே.
| [2] |
நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
| [3] |
ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும் வேறுரு வாக விளைந்து கிடந்தது தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
| [4] |
குறைவதும் இல்லை குரைகழல் கூடும் அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில் திறம்அது வாகத் தெளியவல் லாருக் கிறவில்லை என்றென் றியம்பினர் காண.
| [5] |
காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக் காணுங் கனகமும் காரிகை யாமே.
| [6] |
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப் போமே அதுதானும்? போம்வழி யேபோனால் நாமே நினைத்தன செய்யலும் ஆகும் பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
| [7] |
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும் வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை தகையில்லை தானும் சலமது வாமே.
| [8] |
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம் பாரும் விசும்பும் பகலும் மதியதில் ஊரும் உயிரும் உணர்வது மாமே. 12,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.412  
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பண் - ( )
ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும் சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை ககாராதி மூவித்தை காமிய முத்தியே.
| [1] |
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயந் தானே.
| [2] |
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.
| [3] |
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக் கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து) ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
| [4] |
ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.
| [5] |
சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட் டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.
| [6] |
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம் இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.
| [7] |
மேவிய சக்கர மீது வலத்திலே கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத் தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து பூவை புவனா பதியைப்பின் பூசியே.
| [8] |
பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியான மதுசெய்யே.
| [9] |
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும் கையில் படைஅங் குசபாசத் தோடபயம் மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி துய்ய முடியும் அவயவத் தோற்றமே.
| [10] |
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப் பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி நாற்பால \"நாரதா யைசுவா கா` என்று சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.
| [11] |
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால் பாவித் திதய கமலம் பதிவித்தங் கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை நீவைத்துச் சேமி நினைந்த தருமே.13,
| [12] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.413  
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
பண் - ( )
நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக் கரியாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.
| [1] |
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம் கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என் றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.
| [2] |
நவாக் கரியாவதும் நானறி வித்தை நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம் நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.
| [3] |
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச் சிரந்தரு தீவினை செய்வ தகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
| [4] |
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.
| [5] |
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும் நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.
| [6] |
நேர்தரு மந்திர நாயகி யானவள் யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
| [7] |
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் கண்ணிய நாளும் படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.
| [8] |
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
| [9] |
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.
| [10] |
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம் தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக் காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.
| [11] |
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும் மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும் பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர் நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
| [12] |
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை கூறுடை யாளையும் கூறுமின் நீரே.
| [13] |
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல் மாறுமின் வையம் வரும்வழி தன்னையும் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
| [14] |
சேவடி சேர்ந்து செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர் பூவடி இட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே.
| [15] |
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம் ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும் ஐம்முத லாகி யவற்றுடை யாளை மைம்முத லாக வழுத்திடு நீயே.
| [16] |
வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.
| [17] |
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
| [18] |
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச் சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லிய லாக நடந்திடுந் தானே.
| [19] |
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும் கடந்திடும் கல்விக் கரசிவளாகப் படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
| [20] |
பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம் நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம் வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
| [21] |
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கம் துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
| [22] |
தானே கழறித் தணியவும் வல்லனாய்த் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனு மாமே.
| [23] |
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும் தாமேசகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே அவளடி போற்றி வணங்கிடில் போமே வினைகளும் புண்ணிய னாகுமே.
| [24] |
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.
| [25] |
தானது கம்இரீம் கௌமது ஈறாம் நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம் கானது கன்னி கலந்த பராசத்திக் கேனது! வையம் கிளரொளி யானதே.
| [26] |
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின் களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.
| [27] |
அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே எறிந்திடும் வையத் திடரவை காணின் மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான் பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.
| [28] |
புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம் குகையில்லை கொல்வ திலாமையி னாலே வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம் சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.
| [29] |
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர் காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர் பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.
| [30] |
ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம் களியது சக்கரம் கண்டறி வார்க்குத் தெளியது ஞானமும் சிந்தையும் தேறப் பளியது பஞ்சாக் கரமது வாமே.
| [31] |
ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத் துள்அறி வானவள் ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள் ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.
| [32] |
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண் டென்னுளு மாகி இடம்பெற நின்றவள் மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும் கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.
| [33] |
காணலு மாகும் கலந்துயிர் செய்வன காணலு மாகும் கருத்துள் இருந்திடில் காணலு மாகும் கலந்து வழிசெயல் காணலு மாகும் கருத்துற நில்லே.
| [34] |
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக் கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
| [35] |
மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி நற்பொரு ளாக நடுவிருந் தாளே.
| [36] |
தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி காலது கொண்டு கலந்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமும் கேடில்லை காணுமே.
| [37] |
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின் நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின் மாடில்லை காணும் வரும்வழி கண்டபின் காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.
| [38] |
உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக் கற்றிடமெல்லாம் கடுவெளி யானது மற்றிட மில்லை வழியில்லை தானில்லை சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.
| [39] |
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும் நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே.
| [40] |
விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே.
| [41] |
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மெல்லிய லானது வாகும் விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
| [42] |
தானே வெளியென எங்கும் நிறைந்தவள் தானே பரம வெளியது வானவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவள் தானே அனைத்துள அண்ட சகளமே.
| [43] |
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள் பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும் கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.
| [44] |
கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம் உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச் சிலப்பறி யார் சில தேவரை நாடித் தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.
| [45] |
தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்திட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பற ஒன்பதில் தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.
| [46] |
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.
| [47] |
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின் காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும் ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.
| [48] |
பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின் துண்ணென மேயநற் சொக்கனு மாமே.
| [49] |
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய் ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும் சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.
| [50] |
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின் கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத் தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.
| [51] |
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய் எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.
| [52] |
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.
| [53] |
கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க் கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப் பண்டமர் சோதிப் படரித ழானவை உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.
| [54] |
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற் கலந்திருந் தெங்குங் கருணை பொழியும் மணந்தெழும் ஓசை ஒளியது காணும் தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.
| [55] |
தருவழி யாகிய தத்துவ ஞானம் குருவழி யாகுங் குணங்களுள் நின்று கருவழி யாகுங் கணக்கை அறுத்துப் பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.
| [56] |
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.
| [57] |
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.
| [58] |
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை அணிபவ ளன்றி அருளில்லை யாகும் தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப் பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.
| [59] |
பரந்திருந் துள்ளே அறுபது சத்தி கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.
| [60] |
தனமது வாகிய தையலை நோக்கி மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில் கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம் தினகர னாரிடச் செய்திய தாமே.
| [61] |
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர் பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப் போகின்ற பூரண மாக நிறைந்தபின் சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.
| [62] |
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள் ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும் ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.
| [63] |
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா ஆங்கணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.
| [64] |
பாசம தாகிய வேரை அறுத்திட்டு நேசம தாக நினைத்திரும் உம்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில் காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.
| [65] |
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம் மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
| [66] |
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக் கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும் விண்டகத் துள்ளே விளங்கி வருதலால் தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.
| [67] |
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத் தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள் ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட வாங்கிய நாதம் வலியுட னாகுமே.
| [68] |
நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம் பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம் பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.
| [69] |
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை மன்றது காணும் வழியது வாகவே கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.
| [70] |
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக் காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க் காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும் காரணி தன்னரு ளாகிநின் றாளே.
| [71] |
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில் கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில் கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில் மன்றினில் ஆடும் மணியது காணுமே.
| [72] |
கண்டஇச் சத்தி இருதய பங்கயம் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டை அவாவுப் பகையை யறுத்திட இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.
| [73] |
இருந்தஇச் சத்தி இருநாலு கையில் பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள் கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங் குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.
| [74] |
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.
| [75] |
பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய் எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.
| [76] |
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக் காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
| [77] |
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்கண்ணமர் கூபம் கலந்து வருதலால்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.
| [78] |
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள தாபத்துச் சத்தி தயங்கி வருதலால் ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.
| [79] |
சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம் வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.
| [80] |
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன் எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய் எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.
| [81] |
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப் படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.
| [82] |
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு அணிமாதி தானாகிப் பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.
| [83] |
உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.
| [84] |
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன் பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும் கன்மணி தாமரை கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.
| [85] |
பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க் காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர் மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.
| [86] |
தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட ஏரது ஒன்றி எழுந்த மனோமயம் காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.
| [87] |
மண்ணில் எழுந்த மகார உகாரங்கள் விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.
| [88] |
என்றங் கிருந்த அமுத கலையிடைச் சென்றங் கிருந்த அமுத பயோதரி கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க் கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.
| [89] |
அமுதம தாக அழகிய மேனி படிகம தாகப் பரந்தெழும் உள்ளே குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக் கெழுமும தாகிய கேடிலி தானே.
| [90] |
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும் நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும் பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர் நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.
| [91] |
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்துள் இருந்திடக் கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.
| [92] |
விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச் சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.
| [93] |
ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த் தானே உகாரம் தழைத்தெழும் சோமனும் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
| [94] |
பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் போயிடும் மற்கட மாகிய மண்டலந் தன்னுளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
| [95] |
பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும் தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும் மாதை இவளுக்கு மன்னும் திலகமாக் கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.
| [96] |
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.
| [97] |
கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால் இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.
| [98] |
இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார் இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.
| [99] |
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 1,
| [100] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.501  
ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
பண் - ( )
ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடில் ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.
| [1] |
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.
| [2] |
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே சொற்பதம் மேலித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
| [3] |
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம் நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 2,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.502  
ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
பண் - ( )
இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத் திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.
| [1] |
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.
| [2] |
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.
| [3] |
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே. 3,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.503  
ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
பண் - ( )
பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம் நன்மார்க்க சாதன மாஞான சாதனம் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம் சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.
| [1] |
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன் பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.
| [2] |
ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன் றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.
| [3] |
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும் சத்தும் அசத்தும் தணந்த பராபரை உய்த்த பராபரை உள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.
| [4] |
சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர் சித்தியும் அங்கே சிறந்துள தானே.
| [5] |
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
| [6] |
பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத் தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு நேரென ஈராறும் நீடும் நெடும்போகம் காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.
| [7] |
மாறாத ஞானம் மதிப்பற மாயோகம் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.
| [8] |
வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.
| [9] |
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.
| [10] |
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 4,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.504  
ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
பண் - ( )
வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப் பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
| [1] |
உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும் மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.
| [2] |
சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.
| [3] |
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம் தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால் தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.
| [4] |
சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால் ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.505  
ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
பண் - ( )
நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.
| [1] |
உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
| [2] |
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
| [3] |
பத்தர் சரியை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த இயமாதி தூயோகர் சாதகர் சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.
| [4] |
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
| [5] |
கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபம் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே.
| [6] |
சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருளானது நந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
| [7] |
சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே. 6,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.506  
ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
பண் - ( )
பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரண்எனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
| [1] |
கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாய நடுவே உழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழும் ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.
| [2] |
இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம் அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன் எதுபணி மானுடர் செய்பணி? ஈசன் பதிபணி செய்வது பத்திமை யாமே.
| [3] |
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால் சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.
| [4] |
அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன் செம்பொன்செய் மேனி கமலத் திருவடி முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள் என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே. 7,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.507  
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பண் - ( )
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச் சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.
| [1] |
ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரிஅயன் என்றுளார் ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.
| [2] |
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணரவல் லார்கட்கு நாவி அணைந்த நடுதறி ஆமே.
| [3] |
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.
| [4] |
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன் வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.
| [5] |
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
| [6] |
பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கலவியு ளேநிற்கும். நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.
| [7] |
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.
| [8] |
யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற் காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம் தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.
| [9] |
யோகச் சமயமே யோகம் பலஉன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே உற்ற பரோதயம் யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே. 8,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.508  
ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
பண் - ( )
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
| [1] |
சத்தமும் சத்த மனமும் தகுமனம் உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும் சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.
| [2] |
தன்பால் உலகம் தனக்கரு காவதும் அன்பால் எனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.
| [3] |
இருக்குஞ் சேம இடம்பிரம மாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகம் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.
| [4] |
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமும் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.
| [5] |
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள் யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
| [6] |
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம் மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும் தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
| [7] |
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
| [8] |
நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.
| [9] |
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 9,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.509  
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பண் - ( )
சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத் தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.
| [1] |
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத் தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.
| [2] |
தெளிவறி யாதார் சிவனை அறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.
| [3] |
தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும் ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும் தானவ னாய்உற லானசன் மார்க்கமே.
| [4] |
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும் சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
| [5] |
சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.
| [6] |
சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப் பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.
| [7] |
அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமும் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.
| [8] |
பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக் கசியாத நெஞ்சம் கசியக் கசிவித் தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.
| [9] |
மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர் மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே. 10,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.510  
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பண் - ( )
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.
| [1] |
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீடில்லை யாகும் உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.
| [2] |
யோகச் சமாதியி னுள்ளே அகலிடம் யோகச் சமாதியி னுள்ளே உளரொளி யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
| [3] |
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
| [4] |
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
| [5] |
பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயில்மன வாளால் கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன் வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
| [6] |
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 11,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.511  
ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
பண் - ( )
மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.
| [1] |
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
| [2] |
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரைஅன்னம் தாமரை நீலம் குறுகா நறுமலர் கொய்வன கண்டும் சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.
| [3] |
அருங்கரை யாவ தரனடி நீழல் பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.
| [4] |
உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயன்அது வாகும் பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.
| [5] |
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
| [6] |
திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின் கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே. 12,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.512  
ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
பண் - ( )
எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல் அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல் பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
| [1] |
அதுவிது ஆதிப் பரமென் றகல்வர் இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடும் அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே
| [2] |
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
| [3] |
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக் கண்ணவன் என்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
| [4] |
வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை நேசித் திருந்த நினைவறி யாரே. 13,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.513  
ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
பண் - ( )
சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும் சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால் சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம் பாலோக மில்லாப் பரனுறு ஆமே.
| [1] |
சமயம் கிரியையில் தன்மனம் கோயில் சமய மனுமுறை தானே விசேடம் சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம் சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.
| [2] |
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாசம் அருளான தாகும்இச் சாமீபம் பாசம் சிவமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே. 14,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.514  
ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
பண் - ( )
தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம் தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக இழிவற்ற யோகரே.
| [1] |
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலமா தாகும் சராசரம் போலப் பயிலுங் குருவின் பதிபுக்க போதே கயிலை யிறைவன் கதிர்வடி வாமே. 15,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.515  
ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
பண் - ( )
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல் சைவம் தனையறிந் தேசிவம் சாருதல் சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல் சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.
| [1] |
சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல் சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே. 16,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.516  
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பண் - ( )
இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
| [1] |
தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.
| [2] |
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.
| [3] |
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல் மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.
| [4] |
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
| [5] |
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.
| [6] |
செய்யன் கரியன் வெளியன் பசியனென் றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங் கைய னிவனென்று காதல்செய் வீரே.
| [7] |
எய்திய காலங்கள் எத்தனை யாயினும் தையலும் தானும் தனிநா யகம்என்பர் வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக் கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
| [8] |
கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.
| [9] |
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற களியது வாமே.
| [10] |
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.
| [11] |
தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.
| [12] |
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும் பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத ஒருவன் அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.
| [13] |
இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணமல நீக்கித் தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
| [14] |
இரவும் பகலும் இறந்த இடத்தே குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி அரவசெய் யாமல் அவளுடன் சேரப் பரிவொன்றி யாளும் பராபரை தானே.
| [15] |
மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும் சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள் ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந் தூனை விளக்கி உடனிருந் தானே. 17,
| [16] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.517  
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பண் - ( )
ஆயத்துள்நின்ற அருசம யங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில மாயக் குழியில் விழுவ மனைமக்கட் பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.
| [1] |
உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன் வள்ளற் றலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
| [2] |
உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.
| [3] |
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.
| [4] |
சிவமல்ல தில்லை இறையே சிவமாம் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங் கவமல்ல தில்லை அறுசம யங்கள் தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.
| [5] |
அண்ணலை நாடிய ஆறு சமயரும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியும் முயற்றில ராதலின் மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.
| [6] |
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை ஆமே.
| [7] |
நூறு சமயம் உளவாம் நுவலுங்கால் ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.
| [8] |
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான் குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார் பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.
| [9] |
மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை முயங்கி இருவினை மூழை முகப்பா இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில் பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.
| [10] |
சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயக்கிய மானுட ராம்அவர் காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.
| [11] |
வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான வழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவறி வார்நெறி நாடகில் லாரே.
| [12] |
மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப் படும்நந்தி பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.
| [13] |
அரநெறி அப்பனை ஆதிப் பிரானை உரநெறி யாகி உளம்புகுந் தானை பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.
| [14] |
பரிசறி வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழும் துரிசற நீநினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே.
| [15] |
ஆன சமயம் அது இதுநன் றெனும் மான மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த உருவது வாமே.
| [16] |
அந்நெறி நாடி அமரர் முனிவரும் சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
| [17] |
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.
| [18] |
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
| [19] |
வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே. 18,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.518  
ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
பண் - ( )
சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும் கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
| [1] |
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
| [2] |
இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும் அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
| [3] |
தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் தானுண்பர் காரறி வாளர் கரந்து பிறப்பர்கள் நீரறி வாளர் நெடுமுகி லாமே.
| [4] |
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டும் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே.
| [5] |
மன்னும் ஒருவன் மருவு மனோமய னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே.
| [6] |
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவம் கைகூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 19,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.519  
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பண் - ( )
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்த அனாதி புராணன் சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.
| [1] |
ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள என்றது போலும் இருமுச் சமயமும் நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள் குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.
| [2] |
சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.
| [3] |
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில் பவனவன் வைத்த பழவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே.
| [4] |
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங் காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.
| [5] |
அரனெறி யாவ தறிந்தேனும் நானும் சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும் உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
| [6] |
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி ஆமே.
| [7] |
ஈரும் மனத்தை இண்டற வீசும் இய் யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத் தூரும் சுடரொளி தோன்றலு மாமே.
| [8] |
மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரானை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின் அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.
| [9] |
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. | [10] |
சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.
| [11] |
இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும் பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்! ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.
| [12] |
ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க் காமே பிரானுக் கதோமுகம் ஆறுள தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும் நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.
| [13] |
ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ் வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.
| [14] |
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.
| [15] |
அறியஒண் ணாத உடம்பின் பயனை அறியஒண் ணாத அறுவகை ஆக்கி அறியஒண் ணாத அறுவகைக் கோசத் தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 1,
| [16] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.601  
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பண் - ( )
பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச் சுத்த உரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே.
| [1] |
பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத் தாசற்ற சற்குரு அப்பர மாமே.
| [2] |
சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.
| [3] |
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால் சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.
| [4] |
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.
| [5] |
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் தத்தனை நல்கருள் காணா அதிமூடர் பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணி வாரே.
| [6] |
உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால் திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும் அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.
| [7] |
சிவனே சிவஞானி யாதலால் சுத்த சிவனே எனஅடி சேரவல் லார்க்கு நலமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே.
| [8] |
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம்என் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே.
| [9] |
சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும் அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே சித்த மியாவையும் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.
| [10] |
தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை வானந்தி என்று மகிழும் ஒருவற்குத் தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.
| [11] |
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை மருளா அருளும் மயக்கறும் வாய்மைப் பொருளாய வேதாந்த போதமும் நாதன் உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.
| [12] |
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால் முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை சத்தி அருள்தரின் தான்எளி தாமே.
| [13] |
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே.
| [14] |
சிவமான ஞானந் தெளியஒண் சித்தி சிவமான ஞானந் தெளியஒண் முத்தி சிவமான ஞானம் சிவபர தேகம் சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.
| [15] |
அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும் செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.
| [16] |
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.
| [17] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.602  
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பண் - ( )
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.
| [1] |
தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாடந்த ஞான வலியையும் தந்திட்டு வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.
| [2] |
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
| [3] |
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.
| [4] |
குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண் டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற் றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.
| [5] |
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.
| [6] |
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும் விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.
| [7] |
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக் கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.
| [8] |
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
| [9] |
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
| [10] |
கழலார் கமலத் திருவடி யென்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.
| [11] |
முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
| [12] |
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.
| [13] |
அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
| [14] |
மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே. 3,
| [15] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.603  
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பண் - ( )
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலைபெற லாமே.
| [1] |
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.
| [2] |
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம் தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு தானென்ற பூவை அவனடிச் சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
| [3] |
வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
| [4] |
முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல் பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான் தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத் தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
| [5] |
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணா யெனவந்து காட்டினன் நந்தியே.
| [6] |
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
| [7] |
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
| [8] |
மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானம் ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 4,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.604  
ஆறாம் தந்திரம் - 4.துறவு
பண் - ( )
இறப்பும் பிறப்பும் இருமையும நீங்கித் துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.
| [1] |
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்த மலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத் துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.
| [2] |
அறவன் பிறப்பிலி யாரு மிலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.
| [3] |
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.
| [4] |
கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை யண்ணல் திருவடி கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.
| [5] |
உழவன் உழவுழ வானம் வழங்க உழவன் உழவினிற் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு உழவன் அதனை உழவொழிந் தானே.
| [6] |
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.
| [7] |
நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.
| [8] |
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றான் எனநின் றெளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே.
| [9] |
தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும் ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 5,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.605  
ஆறாம் தந்திரம் - 5.தவம்
பண் - ( )
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
| [1] |
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும் செம்மா தவத்துச் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால் இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
| [2] |
பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகியே மாதவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
| [3] |
இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே எவரே எனினும் திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.
| [4] |
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
| [5] |
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.
| [6] |
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.6,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.606  
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பண் - ( )
தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத் தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.
| [1] |
ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால் காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால் சாதலும் வேண்டா சமாதிகை கூடினால் போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.
| [2] |
கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால் சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால் சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால் சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.
| [3] |
விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார் விளைவறி வார்விண் ணின்மிக் காரே.
| [4] |
கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து) ஊடிற் பலஉல கோர்எத் தவரே.
| [5] |
மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித் தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே.
| [6] |
மனத்திடை நின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால் தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.
| [7] |
ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம் சத்தான செய்வது தான்தவந் தானே.
| [8] |
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம் தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.
| [9] |
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.
| [10] |
ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
| [11] |
பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும் குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக் குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.
| [12] |
சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம் சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே. 7,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.607  
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பண் - ( )
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.
| [1] |
தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகர் திரிவார் அவிழும் மனமும் ஆதி யருளும் தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.
| [2] |
புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத் தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.
| [3] |
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
| [4] |
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடிற் சிவலோக மாமே.
| [5] |
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவ ராவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.
| [6] |
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
| [7] |
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
| [8] |
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம் சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம் எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
| [9] |
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல வீடு மளவும் விடுகின் றிலேனே. 8,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.608  
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பண் - ( )
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடி அழுதும் அரற்றியும் தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.
| [1] |
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
| [2] |
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில் மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.
| [3] |
இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
| [4] |
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல் பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம் சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
| [5] |
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே. 9,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.609  
ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
பண் - ( )
தவமிக் கவரே தலையாய வேடர் அவமிக் கவரே அதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம் தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.
| [1] |
பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.
| [2] |
யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன் றாகத்து நீறணி அங்கம் கபாலம் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.
| [3] |
காதணி குண்டலம் கண்டிகை நாதமுன் ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம் ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே. 10,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.610  
ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
பண் - ( )
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே.
| [1] |
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.
| [2] |
அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம் விரவு கனலில் வியன்உரு மாறி நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத ருருவம் பிரம உயர்குல மாமே. 11,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.611  
ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
பண் - ( )
ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர் ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல் ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.
| [1] |
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.
| [2] |
சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.
| [3] |
கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல் கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும் செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
| [4] |
அடியா ரவரே அடியா ரலாதார்? அடியாரு மாகாதவ் வேடமு மாகா அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.
| [5] |
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம் தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.
| [6] |
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம் மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே
| [7] |
தானற்ற தன்மையும் தான் அவ னாதலும் ஏனைய அச்சிவ மான இயற்கையும் தானுறு சாதக முத்திரை சாத்தலும் மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே. 12,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.612  
ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
பண் - ( )
அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பது நாடி இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.
| [1] |
உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா உடல்கழன்றால் வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.
| [2] |
மயலற் றிருளற்று மாமனம் அற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடுந் தாமேதா மாகிச் செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.
| [3] |
ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 13,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.613  
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
பண் - ( )
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழு மாறே.
| [1] |
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனில் நிழலையும் காணார் வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
| [2] |
ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே.
| [3] |
வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.
| [4] |
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும் அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின் பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.
| [5] |
தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே.
| [6] |
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே.
| [7] |
வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப் பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.
| [8] |
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான் துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவான் அதற்சீட னாமே. 14,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.614  
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பண் - ( )
தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப் பழுதறி யாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தாரே.
| [1] |
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
| [2] |
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.
| [3] |
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று தெள்ளி அறியச் சிவபதந் தானே.
| [4] |
சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தான் என்று நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது. ஆதியும் ஏதும் அறியகில் லானே.
| [5] |
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே.
| [6] |
சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே.
| [7] |
சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச் சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.
| [8] |
அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா அடிவைத்த மாமுடி மாயப் பிறவி அடிவைத்த காய அருட்சத்தி யாலே அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.
| [9] |
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல ஆராத காதல் குருபரன் பால் ஆகச் சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன் ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.
| [10] |
உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண் டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.
| [11] |
இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
| [12] |
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.
| [13] |
சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல் அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே. 1,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.701  
ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
பண் - ( )
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
| [1] |
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின் போதா லயத்து அவிகாரந் தனில்போதம் மேதாதி ஆதார மீதான உண்மையே.
| [2] |
மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால் தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும் பாரெங்கு மாகிப் பரந்த பராபரன் காரொன்று கற்பக மாகிநின் றானே.
| [3] |
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கரணம் புந்தி சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.
| [4] |
மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதார மாகவே தான்எழச் சாதித்தால் ஆதாரம் செய்போக மாவது காயமே.
| [5] |
ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில் கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.
| [6] |
ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.
| [7] |
ஆய மலர்இன் அணிமலர் மேலது வாய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே. 2,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.702  
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பண் - ( )
இலிங்கம தாகுவ தியாரும் அறியார் இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம் இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்த துலகே.
| [1] |
உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவா உலகில் எடுத்தது சத்தி குணமா உலகம் எடுத்த சதாசிவன் றானே.
| [2] |
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம் ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே.
| [3] |
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென் றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.
| [4] |
ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி ஒண்சுட ரான இரவியோ டிந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
| [5] |
தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன் மாபரத் துண்மை வபடுவா ரில்லை மாபரத் துண்மை வபடு வாருக்கும் பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.
| [6] |
தூய விமானமும் தூலம தாகுமால் ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
| [7] |
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.
| [8] |
துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம் வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன் தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.
| [9] |
மறையவர் அற்சனை வண்படி கந்தான் இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும் குறைவில் வசியர்க்குக் கோமள மாகும் துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.
| [10] |
போது புனைகழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும் ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.
| [11] |
தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சனச் சாலை வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.
| [12] |
அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.
| [13] |
அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே பகலிட மாம்உளம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே. 3,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.703  
ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
பண் - ( )
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
| [1] |
உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர் நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப் புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.
| [2] |
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.
| [3] |
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.4,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.704  
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பண் - ( )
கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும் தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும் நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.
| [1] |
வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே.
| [2] |
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.
| [3] |
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.
| [4] |
சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள சமயத் தெழுந்த இராசியீ ராறுள சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள சமயத் தெழுந்த சதாசிவந் தானே.
| [5] |
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு நடுவு படிகம்நற் குங்கும வன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.
| [6] |
அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.
| [7] |
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.
| [8] |
தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவ மாகும் சதாசிவந் தானே.
| [9] |
கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும் மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.
| [10] |
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.
| [11] |
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.
| [12] |
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும் தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும் காணும்அ கோரம் இருதயம் குய்யமாம் மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.
| [13] |
நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும் செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.
| [14] |
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.
| [15] |
சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும் சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும் சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் றானே.
| [16] |
மானந்தி எத்தனை காலம் அழைப்பினும் தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும் கானந்தி உந்தி கடந்து கமலத்தின் மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.
| [17] |
ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்றலைக் கேறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.
| [18] |
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம் புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.
| [19] |
ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.
| [20] |
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம் தன்மேனி தானாகும் தற்பரன் றானே.
| [21] |
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.
| [22] |
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 5,
| [23] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.705  
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பண் - ( )
அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம தாமே.
| [1] |
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீடம் நாதமே போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.
| [2] |
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரந் தானே.
| [3] |
தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம் பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தான்நேர் எழுந்த அகாரம தாமே.
| [4] |
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.
| [5] |
சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.
| [6] |
மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந் தின்பம் பொகின்ற போது நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும் இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.
| [7] |
பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்அடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்துறைந் தானே.
| [8] |
பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம் குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.
| [9] |
அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே. 6,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.706  
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பண் - ( )
உருவும் அருவும் உருவோ டருவும் மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும் குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும் தருவென நல்கும் சதாசிவன் தானே.
| [1] |
நாலான கீழ உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகநாப்பண் நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தனே.
| [2] |
தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.
| [3] |
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கண்ணி யுணரினும் ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.
| [4] |
ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
| [5] |
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபேதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
| [6] |
கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும் எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும் பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.
| [7] |
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம் சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.
| [8] |
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில் ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச் சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.
| [9] |
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும் சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 7,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.707  
ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
பண் - ( )
குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும் பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறறி யேனே.
| [1] |
வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.
| [2] |
ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.
| [3] |
மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.
| [4] |
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று) ஆவி யெழுமள வன்றே உடல்உற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித் தடக்கிற் பரகதி தானே. 8,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.708  
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பண் - ( )
உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக் கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.
| [1] |
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியலார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.
| [2] |
பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன் `நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள் உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதம்இது வாய்திற வாதே.
| [3] |
பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.
| [4] |
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.
| [5] |
கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால் பாடல் உடலினிற் பற்றற நீக்கியே கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.
| [6] |
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.
| [7] |
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில் நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.
| [8] |
உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.
| [9] |
காயப் பரத்தின் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத் தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.
| [10] |
நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.
| [11] |
அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன்இவன் ஆமே.
| [12] |
நான்இது தான்என நின்றவன் நாடொறும் ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன் வான்இரு மாமழை போற்பொழி வான்உளன் நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.
| [13] |
பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய் இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும் பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 9,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.709  
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பண் - ( )
இருபத மாவ திரவும் பகலும் உருவது வாவ துயிரும் உடலும் அருளது வாவ தறமும் தவமும் பொருளது வுள்நின்ற போகம தாமே.
| [1] |
காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.
| [2] |
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.
| [3] |
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.
| [4] |
தானே அழியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல் ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின் தேனே அனையன்நம் தேவர் பிரானே.
| [5] |
நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை வானறிந் தார்அறி யாது மயங்கினர் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறி யான்பின்னை யார்அறி வாரே
| [6] |
அருள்எங்கு மான அளவை அறியார் அருளை நுகரமு தானதுந் தேரார் அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார் அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.
| [7] |
அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு) அறிவது வாக்கி அடியருள் நல்கும் செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.
| [8] |
அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு) அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு) அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளால்என் நந்தி அகம்புகுந் தானே
| [9] |
பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில் நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.
| [10] |
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி யந்தணன் ஆதி பராபரன் உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.
| [11] |
அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு) அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.
| [12] |
ஆயும் அறிவோ டறியாத மாமாயை ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள் ஆய பலஇந் திரிய மவற்றுடன் ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.
| [13] |
அருளே சகலமும் ஆய பௌதிகம் அருளே சராசரம் ஆய மலமே இருளே வெளியே எனும்எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.
| [14] |
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவமசை யாகி நடிப்பவன் தானே.
| [15] |
அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.
| [16] |
தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் தானே வியாபித் தலைவனு மாமே.
| [17] |
தலையான நான்கும் தனதரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும் தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.
| [18] |
ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.
| [19] |
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு) ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப் போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே.
| [20] |
விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 10,
| [21] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.710  
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பண் - ( )
அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.
| [1] |
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
| [2] |
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.
| [3] |
உற்ற பிறப்பும் உறுமல மானதும் பற்றிய மாயா படலம் எனப்பண்ணி `அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
| [4] |
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.
| [5] |
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும் ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள் ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.
| [6] |
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.
| [7] |
அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.
| [8] |
கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும் பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர் தேறணி யாம்இது செப்பவல் லீரே. 11,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.711  
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பண் - ( )
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
| [1] |
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
| [2] |
பான்மொழி பாகன் பராபரன் றானாகும் மான சதாசிவன் றன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.
| [3] |
நினைவதும் வாய்மை மொழிவது மல்லால் கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும் கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.
| [4] |
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தர்ச்சித் தார்களே.
| [5] |
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
| [6] |
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப் பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.
| [7] |
மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.
| [8] |
ஆரா தனையும் அமரர் குழாங்களும் நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமே ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.
| [9] |
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர் பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.
| [10] |
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.
| [11] |
வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.
| [12] |
கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள் பழிப்படு வார்பலரும் பழி வீழ வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.
| [13] |
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.
| [14] |
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின் றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன் மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.
| [15] |
தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும் பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
| [16] |
உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
| [17] |
வென்று விரைந்து விரைபணி என்றனர் நின்று பொருந்த நிறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடிற் கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.
| [18] |
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால் மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
| [19] |
ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம் மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.
| [20] |
ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து) ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே. 12,
| [21] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.712  
ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
பண் - ( )
ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப் போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற் போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.
| [1] |
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள வருந்தன்மை யளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.
| [2] |
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
| [3] |
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே.
| [4] |
உச்சியுங் காலையு மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.
| [5] |
இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
| [6] |
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர் விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
| [7] |
மனபவ னங்களை மூலத்தின் மாற்றி அநித உடல்பூத மாக்கி யகற்றிப் புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத் தனிஉறு பூசை சதாசிவற் காமே.
| [8] |
பகலு மிரவும் பயில்கின்ற பூசை இயல்புடை யீசற் கிணைமல ராகா பகலு மிரவும் பயிலாத பூசை சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.
| [9] |
இராப்பக லற்ற இடத்தே யிருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகி இராப்பக லற்ற இறையடி யின்பத்(து) இராப்பகல் மாயை இரண்டடித் தேனே. 13,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.713  
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
பண் - ( )
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின் படமாடக் கோயிற் பகவற்க தாமே.
| [1] |
தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.
| [2] |
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. | [3] |
அகர மாயிர மந்தணர்க் கீயிலென் சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென் பகரு ஞானி பகலுண்பலத் துக்கு நிகரிலை யென்பது நிச்சயந் தானே.
| [4] |
ஆறிடு வேள்வி அருமறை சாலவர் கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில் நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.
| [5] |
ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று வேறணி வார்க்கு வினையில்லை தானே.
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
| [6] |
அழிதக வில்லா அரன்அடி யாரைத் தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும் பழுது படாவண்ணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.
| [7] |
பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம் சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
| [8] |
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே. 14,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.714  
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பண் - ( )
திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும் வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின் பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
| [1] |
கொண்ட குழியும் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும் உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.
| [2] |
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசர முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப் பாதியும் கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.
| [3] |
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள் உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
| [4] |
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாளம் மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
| [5] |
அகம்படி கின்றநம் ஐயனை ஓரும் அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார் அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
| [6] |
கழிவும் முதலுமெங் காதற் றுணையும் அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.
| [7] |
என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம் ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.
| [8] |
துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.
| [9] |
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுல காளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே.
| [10] |
அறியாப் பருவத் தரனடி யாரைக் குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை குறியார் சடைமுடி கூட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.
| [11] |
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பாற் பெருமை இலயம தாமே.
| [12] |
முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள் எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
| [13] |
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோக மின்றி அறிவோருண் டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோக மின்றிப் பரகதி யாமே.
| [14] |
மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன் மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன் மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள் மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே. 15,
| [15] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.715  
ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
பண் - ( )
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.
| [1] |
அச்சிவ னுள்நின் றருளை யறிபவர் உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.16,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.716  
ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
பண் - ( )
விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
| [1] |
பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில் பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப் பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.
| [2] |
பரந்துல கேழும் படைத்த பிரானை `இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
| [3] |
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான் புகலே புகலாக அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே
| [4] |
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.
| [5] |
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார் ஐயம் புகாமல் இருந்த தவசியர் வையக மெல்லாம் வரஇருந் தாரே. 17,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.717  
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பண் - ( )
நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப் பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்க்கக் கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.
| [1] |
துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி, அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி, கேசரி உண்மை பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.
| [2] |
சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம் ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை; ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி; நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.
| [3] |
தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்; ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால் ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
| [4] |
வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்; வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்; வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.
| [5] |
யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்; ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகுவேத கேசரி சாம்பவி; யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
| [6] |
யோகிஎண் சித்தி அருளொளி வாதனை; போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி; ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை; யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
| [7] |
துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்; அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.
| [8] |
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை; ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை; தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை; காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.
| [9] |
தூநெறி கண்ட சுவடு நடுஎழும் பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்; மேனெறி கண்டது வெண்மதி மேதினி, நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே. 18,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.718  
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
பண் - ( )
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.
| [1] |
தானிவை யொக்கும் சமாதிகை கூடாது போனவி யோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.
| [2] |
தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன் ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.
| [3] |
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
| [4] |
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவ னாகும் பரகாயஞ் சாராதே ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.
| [5] |
செத்தார் பெறும்பய னாவதி யாதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.
| [6] |
உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள் பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.
| [7] |
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம் அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல் இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே. 19,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.719  
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
பண் - ( )
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில் நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
| [1] |
எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில் அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
| [2] |
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம் மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.
| [3] |
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
| [4] |
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித் தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே.
| [5] |
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.
| [6] |
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப் பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
| [7] |
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.
| [8] |
நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக் கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
| [9] |
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப் போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதி லிருத்தி விரித்திடு வீரே.
| [10] |
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம்இள நீரும் குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
| [11] |
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார் மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.
| [12] |
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலிற் கோடல் காண்உப சாரமே. 20,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.720  
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பண் - ( )
உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி கதியிற் கரணம் கலைவை கரியே.
| [1] |
செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும் செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும் செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம் செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.
| [2] |
வந்திடு பேத மெலாம் பரவிந்து தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.
| [3] |
விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி வளங்கொள் உகார மகாரத்துள் விந்து களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி உளங்கொள் மனாதி உளமந்த மாமே.
| [4] |
அந்தமு மாதியு மாகிப் பராபரன் வந்த வியாபி யெனலாகு மந்நெறி கந்தம தாகிய காரண காரியம் தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.
| [5] |
வீயம தாகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காயஐம் பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புற மாகுமே.
| [6] |
புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள் திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.
| [7] |
கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின் கண்ட கலாதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.
| [8] |
அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி இதுவித்தி லேயுள வாற்றை உணரார் மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.
| [9] |
வித்தினி லன்றி முளையில்லை அம்முளை வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.
| [10] |
அருந்திய அன்ன மவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம தாகுமே.
| [11] |
இரதம் முதலான ஏழ்தாது மூன்றின் உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல் அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின் மருவிய விந்து வளருங்கா யத்திலே.
| [12] |
காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக் காயத்து டன்மன மாகும் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.
| [13] |
அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே. 21,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.721  
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பண் - ( )
பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
| [1] |
தானே அருளால் சிவயோகம் தங்காது தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும் ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.
| [2] |
மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில் ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள் ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு) ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.
| [3] |
ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம் வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு) ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும் ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.
| [4] |
செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால் நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.
| [5] |
விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல் நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக் கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.
| [6] |
கொண்ட குணனே நலனேநற் கோமளம் பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே மிண்டு தனமே மிடைய விடும்போதில் கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.
| [7] |
விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப் பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.
| [8] |
பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும் மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.
| [9] |
வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.
| [10] |
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும் கருதத்து வித்தாய்க் காரண காரியம் கருத்துறு மாறிவை கற்பனை தானே.
| [11] |
ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலம் சத்தி ஒழியாத புத்திதபம் செபம் மோனம் அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.
| [12] |
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று முற்று மதியத் தமுதை முறைமுறைச் செற்றுண் பவரே சிவயோகி யாரே.
| [13] |
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் போகியும் ஞான புரந்தர னாவோனும் மோக முறினும் முறைஅமிர் துண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே.
| [14] |
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து) உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.
| [15] |
அறியா தழிகின்ற ஆதலால் நாளும் பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.
| [16] |
மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக் காதல தாகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி யாண்டினும் சோதியி னுள்ளே துரிசறும் காலமே.
| [17] |
காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே.
| [18] |
கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல் நலத்தக வேண்டில் அந் நாளி உதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.
| [19] |
மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறிவழி யேசென்று பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.
| [20] |
விந்து விளையும் விளைவின் பயன்முற்றும் அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும் நந்திய நாசமும் நாசத்தால் பேதமும் தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.
| [21] |
விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து) அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச் சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.
| [22] |
அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள அமுதப் புனலோடி அங்கியின் மாள அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.
| [23] |
யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து) ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப் போகம் சிவபோகம் போகிநற் போகமாம் மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.
| [24] |
மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து காதலி னால்விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார் காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.
| [25] |
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு) ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.
| [26] |
விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம் அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச் சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.
| [27] |
வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன் வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன் வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன் வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.
| [28] |
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.
| [29] |
அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம் அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.
| [30] |
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை சென்று பராசத்தி விந்துசயந் தன்னை ஒன்ற உரைக்க உபதேசந் தானே.
| [31] |
தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை வானேய் உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும் தானே சிவகதித் தன்மையு மாமே.
| [32] |
விந்துவுள் நாதம் விளைய விளைந்தது வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே.
| [33] |
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில் பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.
| [34] |
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.
| [35] |
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து) ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர் மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.
| [36] |
உரவடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம் விரவிய கந்தர மேல்வெளி யாமே. 22,
| [37] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.722  
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பண் - ( )
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கு தவமே.
| [1] |
பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம் புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற ஓங்கும் பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.
| [2] |
ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும் சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
| [3] |
தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும் தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும் தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
| [4] |
வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம் துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.
| [5] |
ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில் சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங் கேத மறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.
| [6] |
ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்ககி லீரே.
| [7] |
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
| [8] |
மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம் எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.
| [9] |
பாரை யிடந்து பகலோன் வரும்வழி யாரு மறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ் என்று ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 23,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.723  
ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
பண் - ( )
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
| [1] |
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த னோடே அடங்குகின் றாரே.
| [2] |
உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு) உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 24,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.724  
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
பண் - ( )
எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும், எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப; விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி ஒருகதி ராகில் உவாவது தானே.
| [1] |
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை; அந்த இரண்டும் உபய நிலத்தினில், சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.
| [2] |
ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்; ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.
| [3] |
ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.
| [4] |
ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்; ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை; முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார் இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே. 25,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.725  
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
பண் - ( )
விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து) அந்த அபர பரநாத மாகியே வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து) உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.
| [1] |
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு) உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.
| [2] |
தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
| [3] |
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.
| [4] |
தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க அனித்திடும் மேலை அருங்கனி யூறல் கனிச்சுட ராய கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.
| [5] |
நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வரும் தேரறி யாத திசைஒளி யாயிடும் ஆரறி வார்அது நாயகம் ஆமே.
| [6] |
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும் சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.
| [7] |
நாவிகண் நாசி நயன நடுவினும் தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 26,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.726  
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
பண் - ( )
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால் ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
| [1] |
கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து) அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
| [2] |
தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.
| [3] |
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே. 27,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.727  
ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
பண் - ( )
உன்னு மளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.
| [1] |
அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்; துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந் தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே. 28,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.728  
ஏழாம் தந்திரம் - 28. புருடன்
பண் - ( )
வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.
| [1] |
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு) அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு) அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
| [2] |
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஓட்டி நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.
| [3] |
அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுவற நின்ற கலப்ப துணரார் இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித் தணிவற நின்றனன் சராசரந் தானே. 29,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.729  
ஏழாம் தந்திரம் - 29. சீவன்
பண் - ( )
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.
| [1] |
ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன் வானோ ரறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.
| [2] |
உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.
| [3] |
மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து) ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. 30,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.730  
ஏழாம் தந்திரம் - 30. பசு
பண் - ( )
கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்; மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.
| [1] |
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.31,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.731  
ஏழாம் தந்திரம் - 31. போதன்
பண் - ( )
சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை சீவ னார்சிவ னாரை யறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.
| [1] |
குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பஃறலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாமே.
| [2] |
அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன் அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.
| [3] |
ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.
| [4] |
சிவமா கியஅருள் நின்றறிந் தோரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடகி லாரே.
| [5] |
நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார் நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான் நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே. 32,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.732  
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பண் - ( )
ஆக மதத்தன ஐந்து களிறுகள் ஆக மதத்தறி யோடணை கின்றில பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.
| [1] |
கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன் திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து) எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே.
| [2] |
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி ஒன்பது தானே.
| [3] |
அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.
| [4] |
ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள் ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில் ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.
| [5] |
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.
| [6] |
எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும் எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல் எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.
| [7] |
விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே.33,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.733  
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பண் - ( )
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.
| [1] |
கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம் அடக்க லுறுமவன் றானே அமரன் விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.
| [2] |
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
| [3] |
முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
| [4] |
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
| [5] |
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம் பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
| [6] |
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன் அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின் துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.
| [7] |
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே.
| [8] |
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப் படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.
| [9] |
சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.
| [10] |
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.
| [11] |
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.
| [12] |
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள் எய்தி யவனை இசையினால் ஏத்துமின் ஐவ ருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 34,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.734  
ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
பண் - ( )
உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
| [1] |
மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.
| [2] |
ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.
| [3] |
கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும் முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.
| [4] |
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர் மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக் குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே. 35,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.735  
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பண் - ( )
தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.
| [1] |
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.
| [2] |
கறுத்த இரும்பே கனகம தானால் மறித்திரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
| [3] |
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம்அற நீக்குவோன் ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப் பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.
| [4] |
நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.
| [5] |
பரிசன வேதி பரிசித்த எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
| [6] |
தானே எனநின்ற சற்குரு சந்நிதி தானே எனநின்ற தன்மை வெளிப்படின் தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல் ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.
| [7] |
வரும்வழி போம்வழி மாயா வழியே கருவழி கண்டவர் காணா வழியைப் பெருவழி யாநந்தி பேசும் வழியைக் குருவழி யேசென்று கூடலும் ஆமே.
| [8] |
குருஎன் பவன்வேத ஆகமம் கூறும் பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித் தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.
| [9] |
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.
| [10] |
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்றறும் நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித் தற்பரம் மேவுவோர் சாதக ராமே.
| [11] |
எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம் வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச் சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.
| [12] |
ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித் தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.
| [13] |
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச் சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச் சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.
| [14] |
ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.
| [15] |
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள் ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.
| [16] |
அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.
| [17] |
ஏறு நெறியே மலத்தை யிரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலால் மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக் கூறு பரனே குருவாம் இயம்பிலே. 36,
| [18] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.736  
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பண் - ( )
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
| [1] |
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.
| [2] |
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.
| [3] |
வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை நடக்க உறுவரே ஞானம் இலாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
| [4] |
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
| [5] |
கண்காணி யாகவே கையகத்தே எழும் கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் கண்காணி யாகிய காதலன் றானே.
| [6] |
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்பறி யாரே.
| [7] |
காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே.
| [8] |
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.
| [9] |
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும் பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார் சுராமய முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப் பொழிந் தாரே.
| [10] |
ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு) ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம் ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.
| [11] |
உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும் அயரறி வில்லையால் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.
| [12] |
உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும் உயிரை அறியின் உணர்வறி வாகும் உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.
| [13] |
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும் சிலஆணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை யறிவதே.
| [14] |
தானந்த மாமென நின்ற தனிச் சுடர் ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.
| [15] |
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும் கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால் தன்முத லாகிய தத்துவம் ஆமே. 37,
| [16] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.737  
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பண் - ( )
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.
| [1] |
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
| [2] |
கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.
| [3] |
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
| [4] |
நின்ற புகழும் நிறைதவத் துண்மையும் என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவென்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
| [5] |
இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந் தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென் துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.
| [6] |
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
| [7] |
ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
| [8] |
இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.
| [9] |
கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.
| [10] |
நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர் நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.
| [11] |
மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.
| [12] |
நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை ஆதி அயனென் றமரர் பிரானென்று நாதியே வைத்தது நாடுகின் றேனே
| [13] |
இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே.
| [14] |
கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம் வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.
| [15] |
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.
| [16] |
கரையரு காறாக் கழனி விளைந்தது திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரையரு கூறிய மாதவம் நோக்கின் நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.
| [17] |
வரவறி வானை மயங்கிருள் ஞாலத் திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி 38,
| [18] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.738  
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பண் - ( )
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.
| [1] |
செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.
| [2] |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
| [3] |
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை. நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக் காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.
| [4] |
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே.
| [5] |
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறி வானுளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.
| [6] |
பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.
| [7] |
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப் பாடி உளேநின்று பாதம் பணிமின்கள் ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு நீடிய ஈற்றுப் பசுவது வாமே.
| [8] |
விடுகின்ற சிவனார் மேலெழும் போது நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.
| [9] |
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப் பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.
| [10] |
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.
| [11] |
சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.
| [12] |
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி யதுவிரும் பாரே.
| [13] |
நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகமெத் தனையென் றொருவருந் தேறார் பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால் சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.
| [14] |
இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.
| [15] |
பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.
| [16] |
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டும் குருவை வழிபடிற் கூடலும் ஆமே.
| [17] |
நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக் கருமங்க ளாலே கழிதலின் கண்டு குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால் பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.
| [18] |
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண் டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே. 39,
| [19] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.801  
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பண் - ( )
காயப்பை ஒன்று சரக்குப் பலஉள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
| [1] |
அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில் சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.
| [2] |
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்றும் கரணம தாயிடும் ஒட்டிய பாசம் உணர்வது வாகவே கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
| [3] |
இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடலன்று மானது தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும் முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.
| [4] |
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
| [5] |
ஆரே அறிவார் அடியின் பெருமையை ஆரே அறிவார் அருந்தவம் நின்றது ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.
| [6] |
எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள் கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.
| [7] |
உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன் ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம் கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி அடங்கியே அற்றதிங் காரறி வாரே.
| [8] |
ஆறந்த மாகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும் கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.
| [9] |
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
| [10] |
காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட் டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.
| [11] |
நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம் ஆகும் நனாவில் கனாமறந் தல்லது போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று) ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.
| [12] |
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோல் பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.
| [13] |
தானவ னாகிய தற்பரந் தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும் ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
| [14] |
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ் ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும் மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
| [15] |
விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும் மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
| [16] |
மலமென் றுடம்பை மதியாத ஊமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென் றிதனையே நாடி யிருக்கின் பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
| [17] |
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள் மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே அல்ல செவிசத்த மாதி மனத்தையும் மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.2,
| [18] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.802  
எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
பண் - ( )
பண்ணாரும் காமம், பயிலும் வசனமும், விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும், புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.
| [1] |
அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி, கண், கழிகின்ற கால், அவ் இரதங்கள், தானம், மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி; ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.
| [2] |
இலையாம் இடையில் எழுகின்ற காமம் உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத் தலையாய மின்னுடல் தாங்கித் திரியும் சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே. 3,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.803  
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பண் - ( )
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர் பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.
| [1] |
முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும் செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.
| [2] |
இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும் பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.
| [3] |
பாரது பொன்மைப் பசுமை யுடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கறுப்பை யுடையது வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.
| [4] |
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும் ஏதம் படச்செய் திருந்த புறநிலை ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு) ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
| [5] |
இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. | [6] |
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்போ டுயிரிடை நட்பறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.
| [7] |
இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந் துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.
| [8] |
ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள் ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.
| [9] |
மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும் பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம் மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய் உன்னின் முடிந்த தொருபூ தசயமே.
| [10] |
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை கன்னியைக் கன்னியே காதலித் தானே.
| [11] |
கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும் உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத் தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.
| [12] |
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து) ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
| [13] |
தானம் இழந்து தனிபுக் கிதயத்து மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்திய தாமே.
| [14] |
சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.
| [15] |
தானத் தெழுந்து தருந்துரி யத்தினின் வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத் தெழுந்த கருத்தின் தலையிலே ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.
| [16] |
ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின் ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.
| [17] |
துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.
| [18] |
மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின் வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு) ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து) ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.
| [19] |
உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து) எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.
| [20] |
அதிமூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி இதமான கேவலம் இத்திறம் சென்று பரமாக ஐயவத் தைப்படு வானே.
| [21] |
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல் நேசாய ஈசனும் நீடா ணவத்தரை ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.
| [22] |
மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல் அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.
| [23] |
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை வோரும் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
| [24] |
நேரா மலத்தினை நீடைந் தவத்தையின் நேரான வாறுன்னி நீடு நனவினில் நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 4,
| [25] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.804  
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பண் - ( )
சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம் சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம் சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.
| [1] |
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின் ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத் தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்தச் சகலத் துளானே.
| [2] |
மேவிய அந்தன் விழிகட் குருடனாம் ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.
| [3] |
மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள் ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல் அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.
| [4] |
வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு) உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன் பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.
| [5] |
நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன் வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம் கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன் வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.
| [6] |
ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும் காலங்கொண் டானடி காணலு மாமே.
| [7] |
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும் ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும் கூடிய காமம் குறிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே.
| [8] |
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.
| [9] |
விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான் தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால் வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.
| [10] |
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம் மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.
| [11] |
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு) ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.
| [12] |
தத்துவ மானவை தன்வழி நின்றிடில் ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி தத்துவ மாவ(து) அகார எழுத்தே.
| [13] |
அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி: அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.
| [14] |
சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும் நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.
| [15] |
ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு) ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே. 5,
| [16] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.805  
எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
பண் - ( )
தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.
| [1] |
நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து) ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும் கூடினர் கூடிக் குறிவழி யேசென்று தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.
| [2] |
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே. 6,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.806  
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பண் - ( )
நனவாதி தூலமே சூக்கப் பகுதி அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.
| [1] |
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.
| [2] |
செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி குறிதற் றிருமேனி குணம்பல ஆகும் அறிவில் சராசரம் அண்டத் தளவே.
| [3] |
ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம் ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம் போதம் கலைகா லமேநியதி மாயையும் நீதி அராகம் நிறுத்தினன் என்னே.
| [4] |
தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.
| [5] |
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம் காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும் தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
| [6] |
பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின் பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.
| [7] |
உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம் அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.
| [8] |
தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம் சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம் பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம் மற்றது உண்டி கனாநன வாதலே
| [9] |
நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில் கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.
| [10] |
ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.
| [11] |
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச் சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால் ஆய தனுவின் பயன்இல்லை யாமே.
| [12] |
அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா அதீதத் துரியத் ததனால் புரிந்தால் அதீதத் தெழுந்தறி வாகிய மானன் முதிய அனலின் துரியத்து முற்றுமே.
| [13] |
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில் மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.
| [14] |
புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.
| [15] |
நனவில் நனவு புலனில் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.
| [16] |
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம் கனவினில் கண்டமறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாத காணல் அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.
| [17] |
சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவறி வாலே அழிகை சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.
| [18] |
துரிய நனவாம் இதம்உணர் போதம் துரியக் கனவாம் அகம்உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியத் துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.
| [19] |
அறிவறி கின்ற அறிவு நனவாம் அறிவறி யாமை அடையக் கனவாம் அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி அறிவறி வாயின தான துரியமே.
| [20] |
தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு ஞானம் தனதுரு வாகி நயந்து பின் தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.
| [21] |
ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்திஆம் எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.
| [22] |
ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும் ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென் றறியும் அறிவை யறிந்தபின் ஈதென் றறியும் இயல்புடை யோனே.
| [23] |
உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய் அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதனுல காதி இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.
| [24] |
சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.
| [25] |
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல் சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச் சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.
| [26] |
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.
| [27] |
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.
| [28] |
கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும் விதறு படாமூனம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையும் ஆமே.
| [29] |
நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா கனவகத் தேஉட் கரணங்க ளோடும் உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.
| [30] |
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய் ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச் சென்று துரியாதீ தத்துச் சிலகாலம் நின்று பரனாகி நின்மலன் ஆமே.
| [31] |
ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம் தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி மோன மடைந்தொலி மூலத்த னாமே.
| [32] |
மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக் கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத் தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.
| [33] |
போதறி யாது புலம்பின புள்ளினம் மாதறி யாவகை நின்று மயங்கின வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை சூதறி வார்உச்சி சூடிநின் றானே.
| [34] |
கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.
| [35] |
ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத் தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து) ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு) ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.
| [36] |
உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய விண்ஆட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின் கண்நாடி காணும் கருத்ததென் றானே.
| [37] |
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறி வாகான் அறியாத வற்றை அறிவானைக் கூட்டி அறியா தறிவானை யாரறி வாரே.
| [38] |
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம். அந்நன வாதி பெரியன கால பரம்பிற் றுரியம் அரிய அதீதம் அதீதத்த தாமே.
| [39] |
மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான் மாயையின் மற்றது நீவுதல் மாயையாம் கேவல மாகும் சகலமாய் யோனியுள் தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே. 7,
| [40] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.807  
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பண் - ( )
தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும் பின்ன முறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.
| [1] |
தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே.
| [2] |
ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து) ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக் காமிய மாயேய மும்கல வாநிற்பத் தாமுறு பாசம் சகலத்த தாமே.
| [3] |
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர் நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள் இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.
| [4] |
தாவிய மாயையில் தங்கும் பிரளயர் மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர் ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.
| [5] |
ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர் ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.
| [6] |
ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர் போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு) ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர் தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.
| [7] |
ஓரிருள் மூவகை நால்வகை யும்முள தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.
| [8] |
பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று) எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு) எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.
| [9] |
அனாதி பசுவியாத் தியாகும் இவனை அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு) அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.
| [10] |
அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத் தின்பால் துரியத் திடையே அறிவுறத் தன்பால் தனையறி தத்துவந் தானே.
| [11] |
ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும் மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும் துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.
| [12] |
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபரத் தேகாண எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.
| [13] |
ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர் பேணிய மாயை பிரளயா கலர்க்காகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.
| [14] |
ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப் பேணிய கன்மம் பிரளயா கலருக்கே ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.
| [15] |
கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர் கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால் ஆவயின் கேவலத் தச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.
| [16] |
மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம் மாயச் சகலத்துக் காமியம் மாமாயை ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.
| [17] |
மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர் மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின் அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
| [18] |
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம் மத்த இருள்சிவ னானகதி ராலே தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.
| [19] |
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.
| [20] |
அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன் கிறியன் மலவியாபி கேவலத் தானே.
| [21] |
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.
| [22] |
கேவல மாதியில் பேதம் கிளக் குறின் கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள் ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.
| [23] |
கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம் கேவலத் திற்சக லங்கள் வயந்தவம் கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர் ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.
| [24] |
சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிரா தீதம் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
| [25] |
சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல் சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
| [26] |
சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.
| [27] |
சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.
| [28] |
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும் `அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
| [29] |
எய்திய பெத்தமும் முத்தியும் என்பன எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு) `எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.
| [30] |
ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர் ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர் ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர் ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே
| [31] |
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம் உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து) அரிய கனா தூலம் அந்நன வாமே.
| [32] |
ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம் பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணுங் கனவுமா யேயம் திரோதாயி காணும் நனவில் மலக்கலப் பாகுமே.
| [33] |
அரன்முத லாக அறிவோர் அதீதத்தர் அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக் கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர் அருளும் மறைவார் சகலத்துற் றாரே.
| [34] |
உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.
| [35] |
இருவினை ஒத்திட இன்னருட் சக்தி மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக் குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
| [36] |
ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப் பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின் ஈறார் பரசிவம் ஆதேய மாமே.
| [37] |
தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான் தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான் உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.
| [38] |
சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின் ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
| [39] |
அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில் அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.
| [40] |
அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம் உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம் பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து) உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.
| [41] |
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின் ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே. 8,
| [42] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.808  
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பண் - ( )
அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம் நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
| [1] |
சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன் சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.
| [2] |
ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர் ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர் ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.
| [3] |
அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.
| [4] |
உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம் அரிய துரிய நனாவாதி மூன்றில் பரிய பரதுரி யத்தில் பரன்ஆம் திரிய வரும்துரி யத்தில் சிவமே.
| [5] |
பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப் பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப் பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர் பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.
| [6] |
ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப் போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே.
| [7] |
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு) உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.
| [8] |
நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில் மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன்வடி வாமே.
| [9] |
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை யீடான மாயை பொருந்தும் துரியம் புரியில்தா னாகும் தெரிந்த துரியத்துத் தீதல லாதே.
| [10] |
உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய் உன்னை யறிந்து துரியத் துறநின்றாய் தன்னை யறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.
| [11] |
கருவரம பாகிய காயத் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார் குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.
| [12] |
அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணுஅசை வின்கண் ஆன கனவும் அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி பணியில் பாதுரி யம்பரம் ஆமே.
பரதுரி யத்து நனவும் பரந்து விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவதுரி யத்தனு மாமே.
| [13] |
பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட திரமார் கனவு சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.
| [14] |
சீவன் துரியம் முதலாகச் சீராக ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து) ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.
| [15] |
பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின் பரம்பரன் மேலாம் பரநன வாக விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.
| [16] |
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித் தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.
| [17] |
கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும் உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை அறப்பறிந் திங்கர சாளகி லாதார் குறிப்பது கோல கடலது வாமே.
| [18] |
பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய் தன்னை யறியின் தயாபரன் எம்மிறை முன்னை யறிவு முடிகின்ற ஞானமும் என்னை யறியலுற் றின்புற்ற வாறே.
| [19] |
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம் தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.
| [20] |
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.
| [21] |
ஆறா றகன்று நமவிட் டறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
| [22] |
துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி விரியப் பரையின் மிகுநாதம் மந்தம் புரியப் பரையின் பராவத்தா போதம் திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.
| [23] |
ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.
| [24] |
ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம் பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு) எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.
| [25] |
நின்றான் அருளும் பரமும்முந் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 9,
| [26] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.809  
எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
பண் - ( )
சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 10,
| [1] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.810  
எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
பண் - ( )
பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணலள வாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
| [1] |
ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல் மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த் தானந்த மில்லாத தத்துவ மானவை ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே. 11,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.811  
எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
பண் - ( )
அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம் சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
| [1] |
புருட னுடனே பொருந்திய சித்தம் அருவமொ டாறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும் அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.
| [2] |
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல் நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே. 12,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.812  
எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
பண் - ( )
கேவலந் தன்னில் கலவு சகலத்தின் மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப் பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
| [1] |
வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 13,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.813  
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பண் - ( )
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல் ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.
| [1] |
கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே.
| [2] |
ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது தான்மா மறைஅறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால் ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.
| [3] |
உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து) அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.
| [4] |
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.
| [5] |
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும் தோய்ந்த கருமத் துரிசக லாதே.
| [6] |
ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து தேனை யருள்செய் தெரிசனா வத்தையில் ஆன வகையை விடும் அடைந் தாய்விட ஆன மலாதீதம் அப்பரந் தானே.
| [7] |
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச் சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய் அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.
| [8] |
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.
| [9] |
கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில் நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து) இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.
| [10] |
தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாசபே தங்களும் ஆன குணமும்ப ரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பட ராவே.
| [11] |
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு) அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் றானும் உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.
| [12] |
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு) ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாகுமே.
| [13] |
ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி யெழுகின்ற வேதா கமங்களும் நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.
| [14] |
முன்னை யறிவினில் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப் பின்னை அறிவது பேயறி வாகுமே.
| [15] |
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.
| [16] |
தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து) ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.
| [17] |
தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும் தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.
| [18] |
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.
| [19] |
அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.
| [20] |
தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை வானவர் ஆதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.
| [21] |
ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.
| [22] |
ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில் தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து) ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின் கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.
| [23] |
அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும் அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும் அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.
| [24] |
சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச் சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச் சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.
| [25] |
தானே அறியான் அறிவிலோன் றானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென் றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.
| [26] |
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.
| [27] |
தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும் பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.
| [28] |
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால் மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
| [29] |
உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம் உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.
| [30] |
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு) அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.
| [31] |
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று) ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.
| [32] |
உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.
| [33] |
சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.
| [34] |
எய்தின செய்யும் இருமாயா சத்தியின் எய்தின செய்யும் இருஞான சத்தியின் எய்தின செய்யும் இருஞால சத்தியின் எய்தின செய்யும் இறையருள் தானே.
| [35] |
திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
| [36] |
அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன்அரு ளாமே.
| [37] |
அருளான சத்தி அனல்வெம்மை போலப் பொருள்அவ னாகத்தான் போதம் புணரும் இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும் தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.
| [38] |
ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள் பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.
| [39] |
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் அபோதம் புணர்போதா போதமும் நாதம் அநாத முடன்நாதா நாதமும் ஆதல் அருளின் அருளிச்சை யாமே.
| [40] |
மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப் பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப் பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.
| [41] |
ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன் ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.
| [42] |
தீண்டற் கரிய திருவடி நேயத்தை மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
| [43] |
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
| [44] |
தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம் தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால் தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
| [45] |
தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறியின் தலைப்படும் தன்னினில் தன்னை அறிகில னாயிடில் தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.
| [46] |
அறியகி லேன்என் றரற்றாதே நீயும் நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை இருசுட ராகிய இயற்றவல் லானும் ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.
| [47] |
மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.
| [48] |
ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர் தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர் கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.
| [49] |
குறியறி யார்கள் குறிகாண மாட்டார் குறியறி யார்கடம் கூடல் பெரிது குறியறி ஆவகை கூடுமின் கூடில் அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.
| [50] |
ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்? வானோர் தலைவி மயக்கத் துறநிற்க யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன் தானோ பிறப்போ டிறப்பறி யானே. 14,
| [51] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.814  
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பண் - ( )
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
| [1] |
அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப் பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.
| [2] |
அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளால் அறிந்தேன் அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.
| [3] |
அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு) அறைகின் றனமரை ஈறுகள் தாமே.
| [4] |
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.
| [5] |
அறிவறி வாக அறிந்தன்பு செய்மின் அறிவறி வாக அறியும்அவ் வண்ணம் அறிவறி வாக அணிமாதி சித்தி அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.
| [6] |
அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை அழகிய வாறே.
| [7] |
அறிவறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது அறிவாய வற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.
| [8] |
அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து) அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து) அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.
| [9] |
மாயனு மாகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுத லானவன் சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும் பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.
| [10] |
என்னை யறிகிலேன் இத்தனை காலமும் என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து) என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.
| [11] |
மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனற்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனே.
| [12] |
தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும் நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக் கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.
| [13] |
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள் மன்னிச் சிவமாக வாரா பிறவியே. 15,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.815  
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பண் - ( )
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும் ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.
| [1] |
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு) அந்தமொ டாதி அறியஒண் ணாதே.
| [2] |
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேரச் சிவோகமாய் ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.
| [3] |
நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து) அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.
| [4] |
மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால் மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று) ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.
| [5] |
உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல் எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.
| [6] |
தேடும் இயம நியமாதி சென்றகன்(று) ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
| [7] |
கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு) உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
| [8] |
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று) ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு) அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.
| [9] |
ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே.
| [10] |
தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே.
| [11] |
தானது வாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும் ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.
| [12] |
ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறிஉடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த உண்மையே.
| [13] |
உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து) உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.
| [14] |
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூவி அருளிய கோனைக் கருதுமே.
| [15] |
கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில் வரும்சம யம்புறம் மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
| [16] |
வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம் நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.
| [17] |
வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல் நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம் போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.
| [18] |
அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.
| [19] |
கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.
| [20] |
ஒருவனை உன்னார் உயிரினை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே
| [21] |
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு) உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.
| [22] |
வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம் சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.
| [23] |
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும் சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால் நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.
| [24] |
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
| [25] |
சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும் அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால் நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.
| [26] |
தத்துவ மாகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.
| [27] |
வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம் பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.
| [28] |
பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம் பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.
| [29] |
ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம் ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின் ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே
| [30] |
அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே.
| [31] |
அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம் அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.
| [32] |
உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால் செயலற் றறிவாகி யும்சென் றடங்கி அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.
| [33] |
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே. 16,
| [34] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.816  
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பண் - ( )
அறிவறி வென்ற அறிவும் அனாதி அறிவுக் கறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியின் பிறப்பறுந் தானே.
| [1] |
பசுப்பல கோடி பிரமன் முதலாப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
| [2] |
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும் நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித் தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால் குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
| [3] |
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும் கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம் வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
| [4] |
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான் கட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.
| [5] |
நாடும் பதியுடன் நற்பசு பாசமும் நீடுமா நித்த நிலையறி வார்இல்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.
| [6] |
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
| [7] |
பதிபசு பாசம் பயில்வியா நிற்கப் பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில்நில் லாவே.
| [8] |
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.
| [9] |
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும் அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.
| [10] |
படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப் படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.
| [11] |
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.
| [12] |
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும் மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும் படிபடைப் போன்அரன் மே.
| [13] |
படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்(து) அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
| [14] |
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு) ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.
| [15] |
வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத் தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.
| [16] |
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
| [17] |
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல் ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.
| [18] |
பாசம் பயில்உயிர் தானே பரம்முதல் பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப பாசம் பயிலப் பதிபரம் ஆதலால் பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.
| [19] |
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே. 17,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.817  
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பண் - ( )
காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
| [1] |
தலைஅடி யாவ தறியார்கா யத்தில் தலைஅடி உச்சி உள்ளது மூலம் தலைஅடி யான அறிவை அறிந்தோர் தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.
| [2] |
நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
| [3] |
சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லா னாயின் எந்தையை யானும் அறியகி லேனே.
| [4] |
பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால் என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம் உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ் சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.
| [5] |
பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பதம் ஓதும் நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன் கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.
| [6] |
தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில் தரித்துநின் றான்அம ராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.
| [7] |
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள கன்றாத தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு) இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.
| [8] |
கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப் பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.
| [9] |
பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர் பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச் செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே. 18,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.818  
எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
பண் - ( )
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.
| [1] |
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து) ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. 19,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.819  
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
பண் - ( )
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே. | [1] |
போதந் தனைஉன்னி பூதாதி பேதமும் ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.
| [2] |
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
| [3] |
அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து கணுவொன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால் தேன் அமுதென இன்பத் துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.
| [4] |
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
| [5] |
ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.
| [6] |
நந்தி யறிவும் நடுவில் அதீதமாம் இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால் நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும் நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.
| [7] |
பரதுரி யத்து நனவும் படிஉண்ட விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து) உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே. 20,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.820  
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
பண் - ( )
தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.
| [1] |
மன்று நிறைந்தது மாபரம் ஆயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின் குன்று நிறைந்த குணவிளக் காகுமே.
| [2] |
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம் கூறா வுபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
| [3] |
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம் பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.
| [4] |
பரம்பர மான பதி பாசம் பற்றாப் பரம்பர மாகும் பரம் சிவம் மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்ப தறிவே.
| [5] |
நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந் தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.
| [6] |
தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத் தற்பர கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடக ராதியே. 21,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.821  
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பண் - ( )
அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.
| [1] |
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
| [2] |
துரியங் கடந்து துரியாதீ தத்தே அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.
| [3] |
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல் அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப் பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.
| [4] |
வைச்ச கலாதி வருதத் துவம்கெட வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து) உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
| [5] |
என்னை யறிய இசைவித்த என்நந்தி என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப் பின்னை ஒளியில் சொருபம் புறப்படத் தன்னை யளித்தனன் தற்பர மாகவே.
| [6] |
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள் அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.
| [7] |
சத்தின் நிலையினில் தானான சத்தியும் தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல் உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.
| [8] |
மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள் பாலிய விந்து பரஉட் பரையாகக் கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச் சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.
| [9] |
வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில் ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.
| [10] |
தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும் தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு) அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.
| [11] |
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக் கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.
| [12] |
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து) அளியா கியதற் பரங்காண் அவன்றான் வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற வெளியாய சத்தி அவன்வடி வாமே.
| [13] |
மேருவி னோடே விரிகதிர் மண்டிலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டா பிறிதில்லை தானே. 22,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.822  
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
பண் - ( )
நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதாதி மூன்றில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம் இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.
| [1] |
தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம் தானாம் துரிய நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா வானான மூன்று துரியத் தணுகுமே.
| [2] |
அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சார் முத் துரியக் கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.
| [3] |
ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள் நேரந்த மாக நெறிவழி யேசென்று பாரந்த மான பராபரத் தைக்கியத்(து) ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.
| [4] |
தொட்டே யிருமின் துரிய நிலத்தினை எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப் பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள் தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.
| [5] |
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
| [6] |
நனவில் நனவாதி நாலாம் துரியம் தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யம்தற் பதமே.
| [7] |
தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம் அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 23,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.823  
எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
பண் - ( )
சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.
| [1] |
ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும் ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும் ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று) ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.
| [2] |
சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத் துவமா கியநெறி சோகம்என் பார்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.
| [3] |
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 24,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.824  
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
பண் - ( )
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந் தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு) ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.
| [1] |
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
| [2] |
உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.
| [3] |
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து) அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.
| [4] |
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து அணியென லாய்நின்ற ஆறது போலத் தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
| [5] |
கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல் நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம் சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து) அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.
| [6] |
உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்த இடந்தரு வாசலை மேல்திற வீரே. 25,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.825  
எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
பண் - ( )
இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுறை பேதமும் ஒன்றென லாமே.
| [1] |
ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதந் தானே.
| [2] |
முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக் கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மனி வேறே தனித்தேக ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.26,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.826  
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பண் - ( )
தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம் தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே.
| [1] |
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.
| [2] |
தொந்தத் தசிய வாசியில் தோற்றியே அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து) உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.
| [3] |
வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.
| [4] |
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.
| [5] |
ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம் ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி வாகிய சீவன் பரசிவ னாமே.
| [6] |
தாமத காமிய மாதி தகுகுணம் ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில் தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே. 27,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.827  
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
பண் - ( )
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.
| [1] |
மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன் ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
| [2] |
எதிர்அற நாளும் எருதுவந் தேறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.
| [3] |
துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் அன்றே உதிக்கும் அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.
| [4] |
ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன் ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.
| [5] |
உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும் உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப் பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 28,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.828  
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
பண் - ( )
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை உற்றிடும் காரணம் காரியத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
| [1] |
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நினைவு மிகுத்த நனா கனா ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப் பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.
| [2] |
உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று) அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.
| [3] |
காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு காரணம் ஏழில் கரக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொற்பதப் பாரறு பாழில் பராற்பரந் தானே.29,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.829  
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
பண் - ( )
முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
| [1] |
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும்உப சாந்தப் பரிசிதே.
| [2] |
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத் தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.
| [3] |
ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.
| [4] |
வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய் ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத் தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.
| [5] |
பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த் திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று) உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன் கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே. 30,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.830  
எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
பண் - ( )
பிறையுட் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் `நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.
| [1] |
கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக் கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப் பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.
| [2] |
கருதலர் மாளக் கருவாயில் நின்றே பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.
| [3] |
பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
| [4] |
என்னிலும் என்உயி ராய இறைவனை பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.
| [5] |
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும் வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து) ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.
| [6] |
நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப் பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.
| [7] |
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற உள்ளே கருதிடில் காலையே எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர் பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.
| [8] |
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே.
| [9] |
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம் காற்றின் விளக்கது காயம் மயக்குறல் மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
| [10] |
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண் மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே
| [11] |
ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும் தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு) ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே
| [12] |
மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர் தூமதி யாகும் சுடர்பர மானந்தம் தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு) ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.
| [13] |
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு) இதமுற்ற பாச இருளைத் துரந்து மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே
| [14] |
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர் முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 31,
| [15] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.831  
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பண் - ( )
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன் நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.
| [1] |
ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும் மருங்கியல் மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
| [2] |
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ் எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில் பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே
| [3] |
ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
| [4] |
திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும் அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.
| [5] |
ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில் வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில் தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.
| [6] |
பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள் செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள் அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.
| [7] |
புரியும் உலகினைப் பூண்டஎட் டானை திரியும் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வளியும் பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.
| [8] |
ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.
| [9] |
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவுடை யோரே.32,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.832  
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
பண் - ( )
தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன் பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன் பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.
| [1] |
நவமாம் அவத்தை நனவாதி பற்றின் பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.
| [2] |
சிவமான சிந்தையில் சீவன் சிதையப் பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதம் தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.
| [3] |
முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம் தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.
| [4] |
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை ஈடறுத் தானே.
| [5] |
நலம்பல காலம் தொகுத்தன நீளம் குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும் பலம்பல பன்னிரு காலம் நினையும் நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.
| [6] |
ஆதி பராபரம் ஆகும் பராபரை சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.
| [7] |
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
| [8] |
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.33,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.833  
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பண் - ( )
நாசி நுனியினின் நான்மூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை அம்மறை கூசி யிருக்கும் குணம் அது வாமே.
| [1] |
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து) உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக் கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற் புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.
| [2] |
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
| [3] |
மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக் கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில் ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே.
| [4] |
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.
| [5] |
ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு) ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு) ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு) ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
| [6] |
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
| [7] |
தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
| [8] |
தூயது வாளாக வைத்தது தூநெறி தூயது வாளாக நாதன் திருநாமம் தூயது வாளாக அட்டமா சித்தியாம் தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.
| [9] |
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.
| [10] |
வினையால் அசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார் வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவறி யாரே.34,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.834  
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பண் - ( )
பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
| [1] |
பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன் இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.
| [2] |
திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல் அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.
| [3] |
தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும் போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர் காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள் தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.
| [4] |
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையும் கழனி கடல்தொறும் ஊடும் உருவினை உன்னகி லாரே.
| [5] |
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறிவ நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி வேவது செய்து விளங்கிடு வீரே.
| [6] |
மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவனை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே. 35,
| [7] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.835  
எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
பண் - ( )
விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும் விட்டும் விடாதது மேவும்சத் தாதியில் சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.
| [1] |
வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின் சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே. 36,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.836  
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பண் - ( )
சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார் பாவு பரதுரி யத்தினில் தற்பதம் மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம் ஓவி விடும்தத் துவமசி உண்மையே.
| [1] |
ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே.
| [2] |
துவம்தத்தசியே தொந்தத் தசியும் அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச் சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.
| [3] |
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார் உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே.
| [4] |
தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ யும்பத மும்பத மாகும் `உயுர்பரம் செம்பொறா ளான சிவம்`என லாமே.
| [5] |
வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து) உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர் வைத்த படியே அடைந்துநின் றானே.
| [6] |
நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப் பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.
| [7] |
பூரணி யாவது புறம்பொன் றிலாமையால் பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால் ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
| [8] |
நீஅது ஆனாய் எனநின்ற பேரூரை ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.
| [9] |
உயிர்பரம் ஆக உயர்பர சீவன் அரிய பரம்ஆக அச்சிவம் வேதத் திரயிலும் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.
| [10] |
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்`` தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள் சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.
| [11] |
அறிவறி யாமை இரண்டும் அகற்றிச் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாத பிரான்` என்று பேணார் குறியறி யாதவர் கொள்ளறி யாரே.
| [12] |
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே.
| [13] |
அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம் கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.
| [14] |
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.
| [15] |
துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாஎன்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.
| [16] |
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து) ஐவாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால் கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே. 37,
| [17] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.837  
எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
பண் - ( )
அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.
| [1] |
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின் படரும் சிவசத்தி தானே பரமாம் உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
| [2] |
செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்தும் குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.
| [3] |
பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும் திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும் உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும் வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.
| [4] |
அளந்த துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக் கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
| [5] |
இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.
| [6] |
கரிஉண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமும்முன் ஓதும் சிவமும் அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெரு மானே.
| [7] |
அந்தமும் ஆதியும ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன் நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே. 38,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.838  
எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
பண் - ( )
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.
| [1] |
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே.
| [2] |
தானே உலகின் தலைவன் எனத்தகும் தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.
| [3] |
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.
| [4] |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
| [5] |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக் கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே.
| [6] |
எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன் மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில் ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.
| [7] |
எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.
| [8] |
கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப் பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.
| [9] |
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப் பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு) அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.
| [10] |
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.
| [11] |
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து) அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில் செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே
| [12] |
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான் உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.
| [13] |
மனமது தானே நினையவல் லாருக்(கு) இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல் தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 39,
| [14] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.839  
எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
பண் - ( )
முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர் பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
| [1] |
தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த திருவரு ளாலே.
| [2] |
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால் தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே. 40,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.840  
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பண் - ( )
வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.
| [1] |
மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன் கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன் வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
| [2] |
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
| [3] |
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
| [4] |
உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து) உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
| [5] |
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.
| [6] |
உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம் பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.
| [7] |
அவன் இவன் ஈசன் என்(று) அன்புற நாடிச் `சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார் பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப் புவன் இவன் போவது பொய்கண்ட போதே.
| [8] |
கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே. 41,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.841  
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பண் - ( )
முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரானைச் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.
| [1] |
அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு) அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட்ட `அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.
| [2] |
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர் பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன் ஊரில் உமாபதி யாகிநின் றானே.
| [3] |
ஒத்துல கேழும் அறியா ஒருவன்என் றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப் பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.
| [4] |
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.
| [5] |
பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால் முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால் பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.
| [6] |
பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக் குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.
| [7] |
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப் பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து) உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.
| [8] |
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரம் சென்ற தலைவனை கானவன் என்றும் கருவரை யான்என்றும் ஊனத னுள்நினைந் தொன்று படாரே.
| [9] |
நிலைபெற கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே. 42,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.842  
எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
பண் - ( )
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.
| [1] |
வளங்கனி தேடிய வன்தாட் பறவை உளங்கனி தேடி உழிதரும் போது களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே. 43,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.843  
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பண் - ( )
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து) அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.
| [1] |
அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடும் கூடுவன் நானே.
| [2] |
குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து) அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும் செறியாச் செறிவே சிவம்என லாமே.
| [3] |
காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை காவலன் எங்கும் கலந்துநின் றானே.
| [4] |
விருப்பொடு கூடி விகிர்தரை நாடில் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.
| [5] |
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள `எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும் சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
| [6] |
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய் தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே
| [7] |
தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.
| [8] |
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும் செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும் இவ்வழி நந்தி யியல்பது தானே.
| [9] |
எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச் செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப் பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.
| [10] |
ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின் வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம் ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.
| [11] |
அந்தக் கருவை அருவை வினைசெய்தற் பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.
| [12] |
உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத் திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகும்தற் பரனே. 1,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.901  
ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
பண் - ( )
பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
| [1] |
இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும் அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.
| [2] |
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரிய சிறப்பில்லி எம்மிறை ஓடும் உலகுயி ராகிநின் றானே.
| [3] |
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் மடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.
| [4] |
முகம்பீட மாம்மட முன்னிய தேகம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.
| [5] |
அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும் சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும் செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 2,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.902  
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பண் - ( )
மாயை இரண்டு மறைக்க மறைவுறும் காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.
| [1] |
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலா அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.
| [2] |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையு மாகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே.
| [3] |
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.
| [4] |
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
| [5] |
தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும் மான்ற அறிவும் மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
| [6] |
சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர் பந்தம் அறுத்த பரம்குரு பற்று.
| [7] |
மனம்புகு தான்உல கேழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே
| [8] |
தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும் தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில் தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.
| [9] |
மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும் கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு) அருவினை சோரும் அழிவார் அகத்தே.
| [10] |
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு நிலைப்பட நாடி நினைப்பற உள்கின் தலைப்பட லாகும் தருமமுந் தானே.
| [11] |
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.
| [12] |
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.
| [13] |
நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
| [14] |
வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச் சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம் இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.
| [15] |
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய் விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.
| [16] |
பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால் பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு) உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.
| [17] |
அம்பர நாதன் அகலிட நீள்பொழில் தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
| [18] |
கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 3,
| [19] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.903  
ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
பண் - ( )
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
| [1] |
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
| [2] |
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.
| [3] |
வருக்கம் சுகமாம் பிரமமு மாகும் அருக்கச் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.
| [4] |
மலையுமனோ பாவம் மருள்வன வாவ நிலையின் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம் சித்த மாகும் நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.
| [5] |
சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு) ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து) ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே. 4,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.904  
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பண் - ( )
ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் அருவம் அறியில் அருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன்இருந் தானே.
| [1] |
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில் இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.
| [2] |
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி அருள வளங்கொளி பெற்றது பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே.
| [3] |
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.
| [4] |
மேலொளிக் கீழதின் மேவிய மாருதம் பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும் ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.
| [5] |
மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய ஆறொளி ஒத்தது தானே.
| [6] |
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.
| [7] |
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருதது மாமே.
| [8] |
இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன் துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.
| [9] |
உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.
| [10] |
விளங்கொளி யான விகிர்தன் இருந்த துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.
| [11] |
போது கருங்குழல் போல்நவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.
| [12] |
உண்டில்லை என்னும் உலகத் தியல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
| [13] |
சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசி உடலுறு ஞானத் துறவிய னாமே.
| [14] |
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.
| [15] |
ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.
| [16] |
தானே இருக்கும் அவற்றின் தலைவனும் தானே இருக்கும் அவன்என நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பாவலும் ஆமே. 5,
| [17] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.905  
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
பண் - ( )
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
| [1] |
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி உகாரம் முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.
| [2] |
அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம் உகராதி சத்தி உள்ளொளி ஈசன் சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம் நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.
| [3] |
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.
| [4] |
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும் மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும் அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.
| [5] |
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும் வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.
| [6] |
குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வருவழி மாள மறுக்கவல் லார்கட் கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.
| [7] |
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.
| [8] |
நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.
| [9] |
பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 6,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.906  
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
பண் - ( )
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளியவே ஓதின் சிவாயநம என்னும் குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.
| [1] |
தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று) உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும் வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போற் சூழல்கின்ற வாறே.
| [2] |
சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
| [3] |
சிவனரு ளாய சிவன்திரு நாமம் சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச் சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ னாமே.
| [4] |
நமாதி நனாதி திரோதாயி யாகித் தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாகம் ஆக நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே. 7,
| [5] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.907  
ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
பண் - ( )
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ் ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி தீதில் சிவஞான யோகமே சித்தக்கும் ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.
| [1] |
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும் அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.
| [2] |
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அ தற்றால் அவமதி தீரும அறும்பிறப் பன்றே. 8,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.908  
ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
பண் - ( )
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச் சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள் சிவசிவ மாகும் திருவரு ளாமே.
| [1] |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
| [2] |
செஞ்சுடர் ண்டலத் தூடுசென் றப்புறம் மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 9,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.909  
ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
பண் - ( )
அங்கமும் ஆகம வேதமும் ஓதினும் எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.
| [1] |
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.
| [2] |
சிவாய நம`எனச் சித்த ஒருக்கி அவாய3ம் அறவே அடிமைய தாகிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.
| [3] |
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே. 10,
| [4] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.910  
ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
பண் - ( )
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
| [1] |
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 11,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.911  
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
பண் - ( )
தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு) ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
| [1] |
ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
| [2] |
ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருத்துறை அந்தத் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
| [3] |
ஆன நடமைந்(து) அகள சகளத்தன் ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம் ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
| [4] |
பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம் மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து) ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
| [5] |
வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக் கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப் பூதங்க ளாடப் புவனம் முழுதாட நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
| [6] |
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
| [7] |
தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சாத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே. 12,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.912  
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
பண் - ( )
அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல் கண்டங் கரியான் கருணைத் திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே. | [1] |
பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம் பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன் பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம் பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
| [2] |
அங்குசம் என்ன எழுமார்க்கப் போதத்தில் தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
| [3] |
ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக் காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
| [4] |
சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும் சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
| [5] |
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும் ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே. 13,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.913  
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பண் - ( )
கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம் நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும் திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
| [1] |
தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில் அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
| [2] |
அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர் அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர் அடிஆர் பவரே அடியவ ராவர் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
| [3] |
அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து) இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன் படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
| [4] |
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
| [5] |
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
| [6] |
விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும் தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
| [7] |
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
| [8] |
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.
| [9] |
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும் சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
| [10] |
பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே. 14,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.914  
ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
பண் - ( )
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
| [1] |
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
| [2] |
ஆதி பரன்ஆட அங்கை அனலாட ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப் பாதி மதியாடப் பாராண்டம் மீதாட நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.
| [3] |
கும்பிட அம்பலத் தாடிய கோநடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால் உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.
| [4] |
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம் பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
| [5] |
இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.
| [6] |
ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும் பேறான வேதா கமமே பிறங்கலால் மாறான தென்திசை வையகம் சுத்தமே.
| [7] |
நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப் போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
| [8] |
தேவரொ டாடித் திருவம் பலத்தாடி மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக் கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
| [9] |
ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும் கூறு சமயக் குருபரன் தான் `என்றும் தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.
| [10] |
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி உம்பர மாம் நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
| [11] |
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
| [12] |
இருதயந் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே. 15,
| [13] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.915  
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பண் - ( )
குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம் அருஉரு ஆவதும் அந்த உருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாளும் உமையவள் தானே.
| [1] |
திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
| [2] |
நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து) ஆடும் இடம்திரு அம்பலத் தானே.
| [3] |
வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.
| [4] |
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடம்செய்யு மாறே.
| [5] |
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.
| [6] |
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
| [7] |
சத்தி வடிவு சகலஆ னந்தமும் ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு) ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
| [8] |
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.
| [9] |
அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம் தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே` கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
| [10] |
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றது தான்இரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
| [11] |
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.
| [12] |
ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.
| [13] |
அம்பல மாவ அகில சராசரம் அம்பல மாவன ஆதிப் பிரானடி அம்பல மாவன அப்புத்தீ மண்டலம் அம்பல மாவன அஞ்செழுத் தாமே.
| [14] |
கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள் பாடிய வாறொரு பாண்டரங் காமே.
| [15] |
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.
| [16] |
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.
| [17] |
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
| [18] |
அங்கி தமருகம் அக்கமாலை பாசம் அங்குசம் சூலம் கபால முடன் ஞானம் தங்கு பயமுன் தருநீல மும்முடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.
| [19] |
ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக் கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர தேயத்தே ஆடிய நந்தி புறம்அகத் தானே.
| [20] |
ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
| [21] |
ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
| [22] |
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
| [23] |
தாமுடி வானவர் தம்முடி மேல்உறை மாமணி ஈசன் மலரடித் தாளிணை யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும் காமணி ஞாலம் கடந்துநின் றானே.
| [24] |
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.
| [25] |
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர் ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
| [26] |
ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து) அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.
| [27] |
தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட வைத்த சராசரம் ஆட மறைஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
| [28] |
இருவரும் காண எழில்அம் பலத்தே உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த் திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருளுரு வாகநின் றாடலுற் றானே.
| [29] |
சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின் அவம் ஆட ஆடாத அம்பர ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
| [30] |
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும் தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும் நாதப் பிரம சிவநட மாமே.
| [31] |
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.
| [32] |
கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள் வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத் தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.
| [33] |
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நீதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
| [34] |
ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார் ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின் ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.
| [35] |
திருந்தநற் `சீ` என் றுதறிய கையும் அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும் பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும் திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
| [36] |
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவு மமைப்பு அனலுடைக் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமஎன ஓதே.
| [37] |
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம் அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம் அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
| [38] |
நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக் கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன் மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
| [39] |
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து) அந்தர வானத்தின் அப்புரத் தப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
| [40] |
சீய குருநந்தி திருவம் பலத்திலே ஆயுறு மேனி யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே.
| [41] |
தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும் தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே. 16,
| [42] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.916  
ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
பண் - ( )
உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.
| [1] |
பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
| [2] |
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.
| [3] |
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு) உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
| [4] |
அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும் அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.
| [5] |
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து) ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.
| [6] |
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
| [7] |
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து) அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே.
| [8] |
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறி யேசென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.
| [9] |
புறத்துள்ஆ காசம் புவனம் உலகம் அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே. 17,
| [10] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.917  
ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
பண் - ( )
மன சந்தியில் கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தங் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.
| [1] |
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால் கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.
| [2] |
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.
| [3] |
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
| [4] |
விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே அசும்பினின் நூறும் ஆரமு தாகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.
| [5] |
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.
| [6] |
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்று தானென் றிரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
| [7] |
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல் ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.
| [8] |
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம் உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.
| [9] |
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.
| [10] |
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே. 18,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.918  
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
பண் - ( )
எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத் தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.
| [1] |
மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
| [2] |
சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வருகுரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
| [3] |
உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில் மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின் சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.
| [4] |
நினையும் அளவில் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே.
| [5] |
பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபட உள்புகச் சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
| [6] |
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்துப் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
| [7] |
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச் சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.
| [8] |
சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானனந் தத்தே துவமார் துரியம் சொரூபம தாமே. 19,
| [9] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.919  
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பண் - ( )
பரம குரவன் பரம்எங்கும் ஆகி திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே.
| [1] |
குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
| [2] |
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர் தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.
| [3] |
சமையச் சுவடும் தனைஅறி யாமல் கமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர் அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
| [4] |
மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.
| [5] |
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
| [6] |
உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
| [7] |
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப் பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
| [8] |
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக் குரவன் சுகோயத் தானே.
| [9] |
உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன் கரையற்ற சத்திஆதி காணில் அகாரம் மருவுற் றுகாரம் மகாரம தாகி உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.
| [10] |
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை நாமாம் முதல்வனும் நாமென லாமே. 20,
| [11] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.920  
ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
பண் - ( )
செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என் மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
| [1] |
தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.
| [2] |
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.
| [3] |
வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என் கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என் தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என் நானொன்றி நாதனை நாடுவன் நானே.
| [4] |
ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என் கானத் துழுவை கலந்து வளைக்கில்என் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவினை நான்உழு வேனே.
| [5] |
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும் பாடது நந்தி பரிசறி வார்கட்கே. 21,
| [6] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.921  
ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
பண் - ( )
சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
| [1] |
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
| [2] |
பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று) உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர் தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 22,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.922  
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பண் - ( )
ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.
| [1] |
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
| [2] |
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு முன்னி யவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.
| [3] |
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற் றறிவானான் என்விழித் தானே.
| [4] |
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.
| [5] |
பரனல்லன் நீடும் பராபரன் அல்லன் உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன் தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும் அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.
| [6] |
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.
| [7] |
துரிய அதீதமும் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன் உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே. 23,
| [8] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.923  
ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
பண் - ( )
ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ நாதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.
| [1] |
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 24,
| [2] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.924  
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பண் - ( )
காயம் பலகை கவறைந்து கண்மூன்று ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
| [1] |
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு) ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.
| [2] |
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனைஉள ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.
| [3] |
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
| [4] |
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.
| [5] |
பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.
| [6] |
மூவணை ஏரும் உழுவது முக்காணி தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும் நாவணை கோலி நடுவிற் செறுஉழார் காலணை கோலிக் களர்உழு வார்களே.
| [7] |
ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர் பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின் கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
| [8] |
பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.
| [9] |
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில் மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.
| [10] |
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
| [11] |
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித் திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன் விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
| [12] |
இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக் கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
| [13] |
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுக் காதமே.
| [14] |
களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லை களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
| [15] |
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.
| [16] |
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
| [17] |
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
| [18] |
ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும் தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும் தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.
| [19] |
எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெளிந்திருந் தோத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.
| [20] |
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் தருங்கனி ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.
| [21] |
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
| [22] |
பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.
| [23] |
இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின் இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.
| [24] |
ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.
| [25] |
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுக லுறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
| [26] |
குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
| [27] |
காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி கூடுபுக் கானது ஐந்து குதிரையும் மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவணை யாமே.
| [28] |
கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
| [29] |
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான் ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.
| [30] |
பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
| [31] |
கூடு பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும் சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.
| [32] |
இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
| [33] |
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
| [34] |
கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.
| [35] |
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.
| [36] |
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும் கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.
| [37] |
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.
| [38] |
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.
| [39] |
ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே.
| [40] |
கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.
| [41] |
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.
| [42] |
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்தது முன்பின் வழியே.
| [43] |
கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
| [44] |
கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.
| [45] |
கோரை யெழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார் பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.
| [46] |
கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு) ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.
| [47] |
உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து) எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி தழுவி வினைசென்று தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யானே.
| [48] |
பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
| [49] |
தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து) ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.
| [50] |
முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.
| [51] |
அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில் கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.
| [52] |
பன்றியும் பாம்பும்பசு முசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள் குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
| [53] |
மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.
| [54] |
நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம் யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.
| [55] |
கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில் மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
| [56] |
வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.
| [57] |
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன் விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
| [58] |
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.
| [59] |
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
| [60] |
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.
| [61] |
பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.
| [62] |
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள் வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.
| [63] |
வீணையும் தண்டும் வரிவி இசைமுரல் தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
| [64] |
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து) அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
| [65] |
போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.
| [66] |
கோமுற் றமரும் குடிகளும் தம்முளே காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.
| [67] |
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால் நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும் மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
| [68] |
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பி னவளோடும் போகம் நுகரும் புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.
| [69] |
தோணிஒன் றுண்டு துறையில் விடுவது ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை ஆணி கலங்கின் அதுஇது ஆமே.
| [70] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.925  
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பண் - ( )
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.
| [1] |
ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச் சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள் மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
| [2] |
நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச் சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம் மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.
| [3] |
காட்டும் குறியும் கடந்தஅக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.
| [4] |
மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன் பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன் சிறப்புடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.
| [5] |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.
| [6] |
உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.
| [7] |
கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம் தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
| [8] |
தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன் நிட்கள மல்லன் சகள நிலையல்லன் அற்புத மாகி அனுபவக் காமம்போல் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
| [9] |
முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.
| [10] |
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
| [11] |
கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம் தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டான் நிரம்பி மடவிய ளானால் கொண்டான் அறிவன் குணம்பல தானே.
| [12] |
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
| [13] |
விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
| [14] |
வாடா மலர்புணை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று நாடா அமுதுற நாடார் அமுதமே.
| [15] |
அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின் மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.
| [16] |
தானும் அழிந்து தனமும் அழிந்து ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும் அழிந்தமை நானறி யேனே.
| [17] |
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல் பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல் சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
| [18] |
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.
| [19] |
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 26,
| [20] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.926  
ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
பண் - ( )
தான்வரை வற்றபின் ஆரை வரைவது தான்அவன் ஆனபின் ஆரை நினைவது காமனை வென்றகண் ஆரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.
| [1] |
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.
| [2] |
மனமாயை மாயைஇம் மாயை மயக்க மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே. 27,
| [3] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.927  
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பண் - ( )
மலமில்லைமாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.
| [1] |
ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
| [2] |
ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும் சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.
| [3] |
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச் சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.
| [4] |
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.
| [5] |
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும் நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
| [6] |
சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன் வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.
| [7] |
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின் துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.
| [8] |
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை? அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து) அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.
| [9] |
கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.
| [10] |
நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.
| [11] |
சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர் சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.
| [12] |
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.
| [13] |
சிவபெரு மானென்று நானழைத் தேத்தத் தவபெரு மானென்று தான்வந்து நின்றான் அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.
| [14] |
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன் அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.
| [15] |
என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.
| [16] |
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும் கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப் பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.
| [17] |
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப் பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு) அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.
| [18] |
கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில் அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.
| [19] |
உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால் கைவளமின்றிக் கருக்கடந் தேனே.
| [20] |
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.
| [21] |
அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. 28,
| [22] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.928  
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பண் - ( )
மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக் காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
| [1] |
மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவர் யாரெனின் முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றேதம் பாடறி வீரே.
| [2] |
முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர் பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.
| [3] |
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன் புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.
| [4] |
பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும் நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.
| [5] |
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள் ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
| [6] |
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்டவன் தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
| [7] |
வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள் இந்திர னாதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது அந்தர வானத்தின் அப்புற மாமே.
| [8] |
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.
| [9] |
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.
| [10] |
அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம் சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.
| [11] |
வள்ளல் தலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று) உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.
| [12] |
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.
| [13] |
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகம் திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும் வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.
| [14] |
வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில் தானகம் இல்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.
| [15] |
விதியது மேலை யமரர் உறையும் பதியது பாய்புனற் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.
| [16] |
மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.
| [17] |
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி ஆழும் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.
| [18] |
உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும் நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல் செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.
| [19] |
பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன் பரிசறித் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.
| [20] |
அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும் பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள் தந்த உலகெங்குந் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
| [21] |
முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும் அத்தன் உருவம் உலகே ழெனப்படும் அத்தன்பா தாள அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.
| [22] |
ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
| [23] |
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன் பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன் கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.
| [24] |
உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன் பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.
| [25] |
பராபர னாகிப்பல் லூழிகள் தோறும் பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே.
| [26] |
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம் காற்றது ஈசன் கலந்துநின் றானே.
| [27] |
திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின் மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும் முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.
| [28] |
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகி நவின்றா உலகுறு நம்பனு மாமே.
| [29] |
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.
| [30] |
படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.
| [31] |
ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவிநின் றானே.
| [32] |
இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.
| [33] |
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும் வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.
| [34] |
விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன் கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.
| [35] |
உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.
| [36] |
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே.
| [37] |
இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய் எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.
| [38] |
உணர்வது வாயுமே உத்தம மாயும் உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.
| [39] |
தன்வலி யால்உல கேழும் தரித்தவன் தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன் தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன் தன்வலி யாலே தடங்கட லாமே.
| [40] |
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.
| [41] |
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே. | [42] |
முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும் திதமுறு கொம்பு செவி துதிக் கை கால் மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.
| [43] |
ஆறு சமயம் முதலாம் சமயங்கள் ஊற தெனவும் உணர்க உணர்பவர் வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.
| [44] |
ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின் முத்தி விளைக்கும் முதல்வனு மாமே. 29,
| [45] |
Back to Top
திருமூலர் திருமந்திரம்
10 -ஆம் திருமுறை பதிகம் 10.929  
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பண் - ( )
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியுந் தனைஎய்தும் சாயும் தனது வியாபகந் தானே.
| [1] |
நானறிந் தப்பொருள் நாட இடமில்லை வானறிந் தங்கே வழியுற விம்மிடும் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.
| [2] |
கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து) உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின் உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலு மாமே.
| [3] |
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம் பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.
| [4] |
உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும் இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.
| [5] |
பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.
| [6] |
தேவனு மாகுந் திசைதிசை பத்துளும் ஏவனு மாய்விரி நீருல கேழையும் ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும் நாவனு மாகி நவிற்றுகின் றானே.
| [7] |
நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புரணவல் லானே.
| [8] |
செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.
| [9] |
புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை நலமையில் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே.
| [10] |
விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன் மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.
| [11] |
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாமே.
| [12] |
புவனா பதி மிகு புண்ணியன் எந்தை அவனேய உலகின் அடற்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறைஎன மாலுற்ற வாறே.
| [13] |
உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும் கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.
| [14] |
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.
| [15] |
இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம் உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம் கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.
| [16] |
அதுஅறி வானவன் ஆதி புராணன் எதுஅறி யாவகை நின்றவன் ஈசன் பொதுஅது வான புவனங்கள் எட்டும் இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.
| [17] |
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை ஊரும் சகலன் உலப்பிலி தானே.
| [18] |
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும் தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.
| [19] |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய் முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.
| [20] |
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
| [21] |