Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.001   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே
[1]
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
[2]
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
[3]
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
[4]
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
[5]
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே.
[6]
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே.
[7]
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.
[8]
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
[9]
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
[10]
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், சதுரன், சிற்றம்பலவன், திருமலை அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.002   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
பண் - திருக்குறுந்தொகை (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்- வானை; வானவர்தாங்கள் வணங்கவே, தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா, ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.
[7]
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி; மேலைவானவர் வந்து விரும்பிய, சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே, ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.
[8]
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த் திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்; கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
[9]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்- அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற, பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை, அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.009   ஓதம் மால் கடல் பரவி
பண் - திருக்குறுந்தொகை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம் மாதரார் வலம்கொள் மறைக்காடரைக் காதல்செய்து, கருதப்படுமவர் பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.
[1]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ! ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.
அட்டமாமலர் சூடி, அடும்பொடு, வட்டப்புன்சடை மா மறைக்காடரோ! நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,! இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.
[4]
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும், மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ! தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப் பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?
[5]
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார் வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ! பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.
[6]
திருவினார் செல்வம் மல்கு விழா அணி, மருவினார் வலம்கொள், மறைக்காடரோ! உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய், மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.
[7]
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய் வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ! கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?
[8]
குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும் மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்; இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.010   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
பண் - திருக்குறுந்தொகை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!
[1]
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ! மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ! ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்! நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!
[2]
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ! துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ! பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ! சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!
[3]
அரிய நால்மறை ஓதிய நாவரோ! பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ! விரிகொள் கோவண ஆடை விருத்தரோ! பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!
[4]
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ! கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ! விலை இல் மா மணிவண்ண உருவரோ!- தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே மண் உளார் வணங்கும் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!
[10]
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே! சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ! சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.011   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
பண் - திருக்குறுந்தொகை (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.
[1]
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன், சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே.
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும், பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று; மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர், இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.
[6]
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன், சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன், விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர், இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.
[7]
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும், கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர், ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.
[8]
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர், பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே; கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர், ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
[9]
கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற, விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர், இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.012   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
பண் - திருக்குறுந்தொகை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கரைந்து கை தொழுவாரையும் காதலன்; வரைந்து வைது எழுவாரையும் வாடலன்; நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் விரைந்து போவது, வீழிமிழலைக்கே.
[1]
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை, நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார், வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.
[2]
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்; வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்; நினைய நின்றவன், ஈசனையே எனா;- வினை இலார் தொழும் வீழிமிழலையே.
[3]
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர், கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர், பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர் வேடத்தார், தொழும் வீழிமிழலையே.
[4]
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை; விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.
[5]
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்! தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்: மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர் பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழும் வீழிமிழலையே!
[8]
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி; காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்; வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்; மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.
[9]
பாலையாழொடு செவ்வழி பண் கொள மாலை வானவர் வந்து வழிபடும், ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி வேலையார் தொழும், வீழிமிழலையே!
[10]
மழலை ஏற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக் கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும், மிழலையான் அடி வாழ்க! என, விட்டதே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.013   என் பொனே! இமையோர் தொழு
பண் - திருக்குறுந்தொகை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்; செம்பொனே! திரு வீழிமிழலையுள் அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே! காலமே! கருத்தே! கருத்தால்-தொழும் சீலமே! திரு வீழிமிழலையுள் கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!
[3]
முத்தனே! முதல்வா! முகிழும் முளை ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய சித்தனே! திரு வீழிமிழலையுள் அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!
[4]
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம் ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற திருவனே! திரு வீழிமிழலையுள் குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!
[5]
காத்தனே, பொழில் ஏழையும்! காதலால் ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை சேர்த்தனே! திரு வீழிமிழலையுள் கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!
[6]
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர் வேதியா! விகிர்தா! திரு வீழியுள் ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!
[7]
பழகி நின் அடி சூடிய பாலனைக் கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய அழகனே! அணி வீழிமிழலையுள் குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!
[8]
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்; விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!
[9]
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம் வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய திருத்தனே! திரு வீழிமிழலையுள் அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.014   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும், ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.
[1]
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்- முறையினால் முனிகள் வழிபாடு செய் இறைவன், எம்பெருமான், இடைமருதினில் உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.
[2]
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன், என்றும் எந்தைபிரான், இடைமருதினை நன்று கைதொழுவார் வினை நாசமே.
[3]
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே பிறவித்துயர் நீத்திடும், எம்மை ஆளும், இடைமருதன் கழல் செம்மையே தொழுவார் வினை சிந்துமே.
[4]
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார், எண் திசைக்கும் இடைமருதா! என, விண்டுபோய் அறும், மேலைவினைகளே.
[5]
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார், கூறுவார் வினை தீர்க்கும் குழகனார், ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
[6]
விண் உளாரும் விரும்பப்படுபவர்; மண் உளாரும் மதிக்கப்படுபவர்; எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.
[7]
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார், கந்தமாலைகள் சூடும் கருத்தனார், எந்தை, என் இடை மருதினில் ஈசனைச் சிந்தையால் நினைவார் வினை தேயுமே.
[8]
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார், பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
[9]
கனியினும், கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும், தனி முடீ கவித்து ஆளும் அரசினும், இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.015   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம், இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.
[1]
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை, புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை, எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை, நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய, வார் உலாம் வனமென்முலையாளொடும், பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.
[9]
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்; தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்; மாணியாய் மண் அளந்தவன், நான்முகன், பேணியார் அவர் பேரெயிலாளரே.
[10]
மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம் சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு, பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.017   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
பண் - திருக்குறுந்தொகை (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப் பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர் நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
[1]
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர் கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்; எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்) அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.
[2]
காற்றினை; கனலை; கதிர் மா மணி நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும், கூற்றினை உதைத்திட்ட குணம் உடை, வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.
[3]
நல்லனை, திகழ் நால்மறைஓதியை, சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர் கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
[4]
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை, அடரும் சென்னியில் வைத்த அமுதனை, படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை, இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.
[5]
பூதநாதனை, பூம் புகலூரனை, தாது எனத் தவழும் மதி சூடியை, நாதனை, நல்ல நால்மறை ஓதியை, வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
[6]
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும் பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக் கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல் நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.
[7]
சடையனை; சரி கோவண ஆடை கொண்டு உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும் படையனை, மழுவாளொடு; பாய்தரும் விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்; கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!
[7]
பூ மென்கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்! காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.
[8]
பார் அணங்கி வணங்கிப் பணி செய நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே
[9]
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.019   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்- கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக் களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்- வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
[6]
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும் விண்ணினார்கள் வியக்கப்படுமவன் கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[7]
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன், மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக் கங்கையான், உறையும் கரக்கோயிலைத் தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.
[8]
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன், தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே.
[9]
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும், மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன், பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்- கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.
[10]
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார், திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.020   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
ஒருவராய் இரு மூவரும் ஆயவன், குரு அது ஆய குழகன், உறைவு இடம்- பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.
[1]
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர் கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்; பொன்னின் மல்கு புணர்முலையாளொடும் மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.
[2]
இல்லக் கோலமும், இந்த இளமையும், அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே! ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!
[3]
வேறு சிந்தை இலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவு இடம்- ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[4]
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர் மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்- பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும், தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[5]
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்- கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை, நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[6]
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது- கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக் களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[7]
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்- முற்றார் மும்மதில் எய்த முதல்வனார், கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.
[8]
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்- பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான், கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.
[9]
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன் உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற, இரக்கம் இன்றி இறை விரலால்-தலை அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.021   என்னில் ஆரும் எனக்கு இனியார்
பண் - திருக்குறுந்தொகை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை; என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்; என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன் புனலும், கொன்றையும், சூடும் புரிசடை; அனலும், சூலமும், மான்மறி, கையினர் எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.
[3]
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை; குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.
[4]
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்; மன்னவன்; மதி அம் மறை ஓதியான்; முன்னம் அன்னவன் சேரலன், பூழியான், இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.
[5]
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்; அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை; குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.
[6]
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர் கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள் படைக்கணால் பருகப்படுவான் நமக்கு இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.
[7]
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.
[8]
விரியும் தண் இளவேனில் வெண்பிறை புரியும் காமனை வேவ, புருவமும் திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!
[9]
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடிபத்து உடையான் தனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.022   பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
பண் - திருக்குறுந்தொகை (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு ஆவணத்து உடையான், அடியார்களை;- தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர் கோவணத்து உடையான், குடமூக்கிலே.
[1]
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர், தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!- வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.
[2]
நங்கையாள் உமையாள் உறை நாதனார்- அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக் கங்கையாள் அவள், கன்னி எனப்படும் கொங்கையாள், உறையும் குடமூக்கிலே.
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்! பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-! மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் குறவனார் உறையும் குடமூக்கிலே.
[6]
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ, பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!- விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.
[7]
காமியம் செய்து காலம் கழியாதே, ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!- சாமியோடு, சர(ச்) சுவதி அவள், கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.
[8]
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப் பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!- பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் உறையும் குடமூக்கிலே.
[9]
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச் சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும் நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின் கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.023   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
பண் - திருக்குறுந்தொகை (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப் படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்- நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.
[1]
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை நீதியே கொளப்பாலது?-நின்றியூர் வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய், காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.024   ஒற்றி ஊரும் ஒளி மதி,
பண் - திருக்குறுந்தொகை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை; ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.
[1]
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள் ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்- காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர் ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்- மாது தாழ்சடை வைத்த மணாளனார்; ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
[6]
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும், கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும், உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர் நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!
[7]
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று; ஒன்று போலும் உதைத்துக் களைந்தது; ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று; ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.
[8]
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர், சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர், உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர் அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.
[9]
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம், திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர், உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.025   முந்தி மூ எயில் எய்த
பண் - திருக்குறுந்தொகை (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என் நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்; அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை இறைவநென்னை உடையவன் என்னுமே.
[8]
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய் மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்; ஐயன்; ஆவடுதண்துறையா! என, கையில் வெள்வளையும் கழல்கின்றதே.
[9]
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்; மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்; அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.030   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
பண் - திருக்குறுந்தொகை (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.
[1]
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்; சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத் தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.
திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து, பருகி ஊறலை, பற்றிப் பதம் அறிந்து, உருகி, நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே அருகு நின்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
[2]
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர், இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்! என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.
[3]
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம் ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
[4]
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும் வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம், அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
[5]
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே; படைகள் போல் வரும், பஞ்சமா பூதங்கள்; தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும், ஆனைக்கா அண்ணலே.
[6]
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று, அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.
[7]
உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்! தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே! இருள் அறுத்து நின்று, ஈசன் என்பார்க்கு எலாம் அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை கீதம் கின்னரம் பாட, கெழுவினான், பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர் ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.032   கொடி கொள் செல்வ விழாக்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக் கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார், பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர் அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
[1]
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப் பார்த்தனோடு படை தொடும் ஆகிலும், பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த் தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப் பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம் பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப் படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.033   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
பண் - நாட்டைக்குறிஞ்சி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார், தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
[1]
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை; அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை; தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
[2]
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை கட்டி நின்ற கழிந்து அவை போய் அற, தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
[3]
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும், நின்மலனே என்றும், சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
[4]
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!
[5]
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப் பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்! தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத் தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!
[6]
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்; ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும், தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
[7]
பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்? புற்றில் ஆடு அரவே அது பூணில் என்? சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!
[8]
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்- பள்ளியான், அறியாத பரிசு எலாம் சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!
[9]
மிண்டரோடு விரவியும் வீறு இலாக் குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!
[10]
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான், சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.034   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
பண் - திருக்குறுந்தொகை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன், நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச் சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன், பங்கன், என்றும் பழனன், உமையொடும் தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.036   கான் அறாத கடி பொழில்
பண் - திருக்குறுந்தொகை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான், ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி- தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!
[1]
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச் செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.
[2]
வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்; கீறு கோவண ஐ துகில் ஆடையர்; தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி ஆறு சூடிய அண்ணல் அவனையே.
[3]
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து இருவராய், இடுவார் கடை தேடுவார், தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்; ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!
[4]
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான், ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்- தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்; மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.
[5]
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர் ஆவதன் காரணம் என்கொலோ- திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார், குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?
[6]
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர் செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.
[7]
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்; அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.
[8]
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர் நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச் சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான், நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.
[9]
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால் எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்; அரிய வானம் அவர் அருள்செய்வரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.037   மலைக் கொள் ஆனை மயக்கிய
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே! கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால், கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.
[1]
வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்; உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்; கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்; கள்ள ஆனைகண்டீர்- கடவூரரே.
[2]
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்; ஊனை வேவ உருக்கிய ஆனையார்; வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே, கான ஆனைகண்டீர்-கடவூரரே.
[3]
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்; நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்; கோலம் ஆய கொழுஞ் சுடர் ஆனையார்; கான ஆனைகண்டீர்-கடவூரரே.
[4]
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்; வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார் எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்; களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.
[5]
விடுத்த மால்வரை விண் உற ஆனையார்; தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்; கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்; கடுத்த ஆனைகண்டீர்-கடவூரரே.
[6]
மண் உளாரை மயக்கு உறும் ஆனையார்; எண் உளார் பலர் ஏத்திடும் ஆனையார்; விண் உளார் பலரும்(ம்) அறி ஆனையார்; கண்ணுள் ஆனைகண்டீர்-கடவூரரே.
வேதம் ஆகிய வெஞ் சுடர் ஆனையார்; நீதியால் நிலன் ஆகிய ஆனையார்; ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்; காதல் ஆனைகண்டீர்-கடவூரரே.
[9]
நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய், காண்டும் என்று புக்கார்கள் இருவரும் ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்; காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே.
[10]
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்; கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்; கடுக்கை ஆனைகண்டீர்-கடவூரரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.038   குழை கொள் காதினர், கோவண
பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
குழை கொள் காதினர், கோவண ஆடையர், உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்; பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.
[1]
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்; தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னை என்னார், பெருமான் அடிகளே.
[2]
சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர், ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர், காலகாலர்-கடவூர் மயானத்தார்; மாலை மார்பர், பெருமான் அடிகளே.
[3]
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல் மறவனார்-கடவூரின் மயானத்தார்; அறவனார், அடியார் அடியார் தங்கள் பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.
[4]
கத்து காளி கதம் தணிவித்தவர், மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்; ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு பித்தர்காணும், பெருமான் அடிகளே.
[5]
எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர், கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்; அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்; பெரியர்காணும், பெருமான் அடிகளே.
[6]
அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்; வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும் பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.
[7]
அரவு கையினர், ஆதி புராணனார்- மரவு சேர் கடவூரின் மயானத்தார்; பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர், பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.039   கொள்ளும் காதன்மை பெய்து உறும்
பண் - திருக்குறுந்தொகை (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.
[1]
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்; பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி வைத்த மா மயிலாடுதுறை அரன் கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.
[2]
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும், கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் வண்டு சேர் மயிலாடுதுறை அரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.
பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும் வரத்தினான், மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.040   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
பண் - திருக்குறுந்தொகை (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே!
[1]
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான், திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள், பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.
[2]
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்; குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ: அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே! இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே.
[3]
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்; கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம் ஐயனே அறிவான், இவள் தன்மையே.
[4]
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை, அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.
[5]
கங்கையைச் சடை வைத்து மலைமகள்- நங்கையை உடனே வைத்த நாதனார், திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான், இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.
[6]
ஐயனே! அழகே! அனல் ஏந்திய கையனே! கறை சேர்தரு கண்டனே! மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் ஐயனே, விதியே, அருள்! என்னுமே.
[7]
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை, முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை, அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம் சித்தனை, சென்று சேருமா செப்புமே!
[8]
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை- அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன் என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான் துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.041   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
பண் - திருக்குறுந்தொகை (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்- படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்; சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.
[1]
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார் சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்; பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.
[2]
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை, கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்; பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர்தம் வினை தூளியே.
[3]
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே.
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான், கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம் அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.
[6]
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி- உரிப்பை மூடிய உத்தமனார் உறை திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.
[7]
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார், பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்- ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.
[8]
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான், வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன், தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!
[9]
தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம், இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.042   நன்று நாள்தொறும் நம் வினை
பண் - திருக்குறுந்தொகை (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே!
[1]
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்; விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.
[2]
வேட்களத்து உறை வேதியன், எம் இறை; ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்; பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.
[3]
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை- மல்கு வெண்பிறை சூடும் மணாளனார், செல்வனார், திரு வேட்களம் கைதொழ வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!
[4]
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி நம்பன் ஆகிய நல் மணிகண்டனார், என் பொனார், உறை வேட்கள நன்நகர் இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.
[5]
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர், சிட்டனார் திரு வேட்களம் கைதொழ பட்ட வல்வினை ஆயின பாறுமே.
[6]
வட்ட மென் முலையாள் உமை பங்கனார், எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார், சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!
[7]
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும் இட்டத்தால் இனிது ஆக நினைமினோ- வட்டவார் முலையாள் உமை பங்கனார், சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!
[8]
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.
[9]
சேடனார் உறையும் செழு மாமலை ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.043   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
பண் - திருக்குறுந்தொகை (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர், செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்; சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ, நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!
[8]
காலம் ஆன கழிவதன் முன்னமே, ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின் மாலும், மா மலரானொடு, மாமறை- நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!
[9]
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி, நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.044   மா மாத்து ஆகிய மால்
பண் - திருக்குறுந்தொகை (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி; ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.047   பண்டு செய்த பழவினையின் பயன்
பண் - திருக்குறுந்தொகை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே! வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய கையனை, கச்சி ஏகம்பம் மேவிய ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
[9]
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம், தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.049   பண் காட்டிப் படிஆய தன்
பண் - திருக்குறுந்தொகை (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
[1]
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார், ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார், வெள்ளியன், கரியன், பசு ஏறிய தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
[2]
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே, வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ! தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்- தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!
[3]
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின் உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே; பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம் திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
[4]
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன் உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள் கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால் செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.050   எங்கே என்ன, இருந்த இடம்
பண் - திருக்குறுந்தொகை (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?
[1]
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி, என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?
[2]
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்; அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்; உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்; வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?
[3]
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்; ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்; வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?
[4]
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க் கள்ளியார் அவர் போல, கரந்ததே!
[5]
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில், ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்- போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?
[6]
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்- தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா, ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?
[7]
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்; மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப் பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!
[8]
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும், நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா, புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?
[9]
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை; வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.051   நீல மா மணிகண்டத்தர்; நீள்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக் கோல மா மதி கங்கையும் கூட்டினார்; சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப் பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்; கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல் படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.
[8]
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல் போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்- பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.
[9]
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்; அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்; செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்; பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.
[10]
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும் இரக்கமா அருள்செய்த பாலைத்துறை கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.052   நல்லர்; நல்லது ஓர் நாகம்
பண் - திருக்குறுந்தொகை (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்; வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்; பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.
[1]
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி, வினையொடு பாவம் ஆயின பற்று அறுவித்திடும் தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.
[2]
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்; ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்; மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.
[3]
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன் வந்து சீர் வழிபாடுகள் செய்தபின், ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள் மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.
[4]
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை அது கெட, தண்டமா, விதாதாவின் தலை கொண்ட செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.
[5]
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர் கம்ப யானை உரித்த கரத்தினர்; செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.
[6]
மானை ஏந்திய கையினர்; மை அறு ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான் ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும் தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.
[7]
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்; தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.
[8]
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண் சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.053   கோணல் மா மதி சூடி,
பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கோணல் மா மதி சூடி, ஓர் கோவண நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை; பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[1]
பண்ணினை, பவளத்திரள் மா மணி அண்ணலை, அமரர்தொழும் ஆதியை, சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம் நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[2]
உற்றவர்தம் உறு நோய் களைபவர், பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர், சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[3]
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ, வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம் கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[4]
பல்லாரும் பலதேவர் பணிபவர், நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன், வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம் கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
[5]
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக் கொண்டான்,-கோல மதியோடு அரவமும்; விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[6]
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம் திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை- விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால் கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.
[7]
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன், ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம் கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
[8]
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம், கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?
[9]
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்; நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால், பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
[10]
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம் திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
[11]
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே, வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச் சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?
[12]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.054   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
பண் - திருக்குறுந்தொகை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்- கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ- ரட்டனார் அடி சேருமவருக்கே.
[1]
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர் கோள வல்வினையும் குறைவிப்பரால்- வாளமா இழியும் கெடிலக் கரை, வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.
[2]
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு, உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்- தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை, வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.
[3]
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்- வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை, வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.
[4]
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்- மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை, வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.
[5]
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்- பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை, வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.
[6]
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட, திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்- வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை, விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.
[7]
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால் காலை ஏத்த வினையைக் கழிப்பரால்- ஆலி வந்து இழியும் கெடிலக் கரை, வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.
[8]
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால் பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்- மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை, வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.
[9]
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு, அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து, அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ- ரட்டனார் அடி சேருமவர்களே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.055   வீறு தான் உடை வெற்பன்
பண் - திருக்குறுந்தொகை (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்- கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும், நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும், அம்ம அழகிதே!
[1]
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும், வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்,- நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை அள்ளி உண்டலும், அம்ம அழகிதே!
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை மின் புரிந்த சடைமேல் விளங்கவே, நன் பகல் பலி தேரினும், நாரையூர் அன்பனுக்கு அது அம்ம அழகிதே!
[8]
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே, இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான் நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு- அரவும் பூணுதல், அம்ம அழகிதே!
[9]
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும் நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல் அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.056   மைக் கொள் கண் உமை
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத் தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன், கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை, தொழ நம்வினை நாசமே.
[1]
முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை, விளைவு ஆய விகிர்தனை, கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.
[2]
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர் கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை, கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.058   தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
பண் - திருக்குறுந்தொகை (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!
[1]
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு ஆக்கினான் அணி ஆறை வடதளி நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.
முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை, கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்- படையரை; பழையாறை வடதளி உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.
[4]
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை, அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை, புகழத் துயர் வாடுமே.
[5]
நீதியைக் கெட நின்று அமணே உணும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன், ஆதியை, பழையாறை வடதளிச் சோதியை, தொழுவார் துயர் தீருமே.
[6]
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை, அருள்-திறத்து அணி ஆறை வடதளித் தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.
[7]
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண் வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை பாதனை, பழையாறை வடதளி நாதனை, தொழ நம் வினை நாசமே.
[8]
வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான் பாய் இரும் புனல் ஆறை வடதளி மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.
[9]
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.059   பொரும் ஆற்றின் படை வேண்டி,
பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.
[1]
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக் கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.
[2]
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி, அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.
[3]
தீது அவை செய்து தீவினை வீழாதே, காதல் செய்து கருத்தினில் நின்ற நல் மா தவர் பயில் மாற்பேறு கைதொழப் போதுமின்! வினை ஆயின போகுமே.
[4]
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன், வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு- வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.
[5]
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர் வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு கண்டு கைதொழ, தீரும், கவலையே.
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால் எடுத்தானைத் தகரவே வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.060   ஏதும் ஒன்றும் அறிவு இலர்
பண் - திருக்குறுந்தொகை (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
[1]
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய், வினை போய் அற! கச்ச மா விடம் உண்ட கண்டா! என, வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.
[2]
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.
[3]
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்; பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.
[4]
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.
[5]
ஈட்டும் மா நிதி சால இழக்கினும், வீட்டும் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.
[6]
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்; செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.
[7]
உந்திச் சென்று மலையை எடுத்தவன் சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என, அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.061   முத்து ஊரும் புனல் மொய்
பண் - திருக்குறுந்தொகை (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம் மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.
உம்பரானை, உருத்திர மூர்த்தியை, அம்பரானை, அமலனை, ஆதியை, கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.
[7]
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள் நேசம் ஆகிய நித்த மணாளனை, பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே.
[8]
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே, கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்- படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.
[9]
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை, திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.063   இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும், பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.066   ஓதம் ஆர் கடலின் விடம்
பண் - திருக்குறுந்தொகை (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன், பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை, மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை, பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
[1]
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன், மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப் பயில்கிலார்சிலர் - பாவித்தொழும்பரே.
[2]
இளைய காலம் எம்மானை அடைகிலாத் துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல் வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக் களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!
[3]
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க் குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன், மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான், மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.
[6]
நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன், மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன் ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.
[7]
தேடுவார், பிரமன் திருமால் அவர்; ஆடு பாதம் அவரும் அறிகிலார்; மாட வீதி வலஞ்சுழி ஈசனைத் தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.
[8]
கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்; வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!
[9]
இலங்கை வேந்தன் இருபது தோள் இற நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான், மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.067   படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
பண் - திருக்குறுந்தொகை (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.
[1]
பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி, கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!
[2]
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி, சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.
[3]
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர், செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம் தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.
[4]
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு சூடும் அடிகள் உறை பதி, மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம் தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.
[5]
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு உற்ற நல்-துணை ஆவான் உறை பதி, தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே.
[6]
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும் சேவடியான் திகழும் நகர் ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம் அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.
[7]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.068   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
பண் - திருக்குறுந்தொகை (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், தெள் ஆறாச் சிவசோதித்திரளினை, கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை நள்ளாறா! என, நம் வினை நாசமே.
[1]
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார் வாரணத்து உரி போர்த்த மணாளனார்- நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்; காரணக் கலைஞானக் கடவுளே.
[2]
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில் சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன் பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு, நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.
[3]
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார், நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம் வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.
[4]
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்; இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன் நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்; மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!
[5]
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்; நக்கர்-அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்; வக்கரன்(ன்) உயிர் வவ்விய மாயற்குச் சக்கரம்(ம்) அருள் செய்த சதுரரே.
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,- வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்; நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.
[8]
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும், பூம் பணைப் பொலிகின்ற புராணனும், தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்- நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.
[9]
இலங்கை மன்னன் இருபது தோள் இற மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர், நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும் வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.069   மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர், கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!
[1]
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும் ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர், காலனார் வருதல் முன், கருவிலி, கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
[2]
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர், மங்குமா நினையாதே, மலர்கொடு, கங்கை சேர் சடையான்தன் கருவிலி, கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
[3]
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!- வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்- காடனார் உறைகின்ற கருவிலி, கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
[4]
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்! பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக் கையினான், உறைகின்ற கருவிலி, கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!
[5]
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர், தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி, காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி, கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!
[6]
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா ஆறு செயப் புரியாது, நீர், கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி, கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!
[7]
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர- கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி, குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!
[8]
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும் எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ- கம்பனார் உறைகின்ற கருவிலி, கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!
[9]
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன், கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி, கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.070   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
[1]
சுற்றமும், துணை நல் மடவாளொடு, பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்; குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார் பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.
[2]
மாடு தான் அது இல் எனின், மானுடர் பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால் கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப் பாடுமின்! பரலோகத்து இருத்துமே.
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன், கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.
[5]
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை, கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை, எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.
[6]
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா நினையாதே, கனை குரல் கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.
[7]
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி, மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக் கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.
[8]
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன், குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப் பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.
[9]
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.071   குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
பண் - திருக்குறுந்தொகை (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ் வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே, இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!
[1]
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர் பூதநாதன்; புலி அதள் ஆடையன்; வேதநாதன் விசயமங்கை உளான்; பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான் விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி விசையின் மங்கி விழுந்தனன், காலனே.
[4]
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள் விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான், உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.
[5]
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச் செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை- எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.
[6]
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.
[7]
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து, வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால் காண்டலே கருத்து ஆகி இருப்பனே.
[8]
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்! வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!
[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும், நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.072   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.
[1]
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- நெய் அது ஆடிய நீலக்குடி அரன், மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம் கையில் ஆமலகக்கனி ஒக்குமே.
[2]
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான்; அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே.
[3]
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல் ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் நீலன் -நீலக்குடி உறை நின்மலன்; காலனார் உயிர் போக்கிய காலனே.
[4]
நேச நீலக்குடி அரனே! எனா நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், நாசம் ஆனார், திரிபுரநாதரே.
[5]
கொன்றை சூடியை, குன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே! எனீர்- என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?
[6]
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!
[7]
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால் ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே, நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!
[8]
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.
[9]
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.073   தங்கு அலப்பிய தக்கன் பெரு
பண் - திருக்குறுந்தொகை (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே.
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன், தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து, அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.074   விரும்பி ஊறு விடேல், மட
பண் - திருக்குறுந்தொகை (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்- பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
[3]
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை; மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா, அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
[4]
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான் உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
[5]
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்; திறம்பி ஊர்வன மற்றும் பல உள; குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
[6]
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும் திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே! புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
[7]
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான் அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.
[8]
கண் நிறைந்த கன பவளத்திரள்; விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்; உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன் எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.
[9]
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும், நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட, மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.075   மரக் கொக்குஆம் என வாய்விட்டு
பண் - திருக்குறுந்தொகை (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.
[1]
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா, முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.
[2]
கை அனைத்தும் கலந்து எழு காவிரி, செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல் கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
[3]
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனல் கரை, கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா நக்கனை நவில்வார் வினை நாசமே.
[4]
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட, கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.
[5]
மேலை வானவரோடு, விரி கடல் மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்- பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார், அக்கு அரையர், எம் ஆதிபுராணனார், கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா நக்கனை, தொழ, நம் வினை நாசமே.
[8]
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர், கரிய கண்டன் கழல் அடி தன்னையே! குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!
[9]
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.076   திருவின் நாதனும், செம்மலர் மேல்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!
[1]
பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி, உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்! கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை, புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!
[2]
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம் மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்! காயத்தே உளன், கானூர் முளையினை வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!
[3]
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண் நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்: அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன் செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!- மின்னுவார் சடை வேத விழுப்பொருள், செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.
[2]
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி, இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்- சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.
[3]
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர், ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்! சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!
[4]
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன் துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்; திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?
[5]
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்? ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்? செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
[6]
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்? சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
[7]
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ? துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே! இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
[8]
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா; திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!
[9]
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.078   சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.
[1]
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால் ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும் கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்: பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.
[2]
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார், கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
[3]
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல் ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால், கோமளஞ்சடைக் கோடிகாவா! என, ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.
[4]
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல், கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?
[5]
நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி ஏசறவும், தெரியாதது ஓர் கோடிகாவனைக் கூறாத நாள் எலாம் பாடிகாவலில் பட்டுக் கழியுமே.
[6]
வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர், குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.
[7]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.079   வெள் எருக்கு அரவம் விரவும்
பண் - திருக்குறுந்தொகை (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
வெள் எருக்கு அரவம் விரவும் சடைப் புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர், நள் இருப்பர், நரகக்குழியிலே.
[1]
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க் கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே, போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர், சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!
[2]
அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக உண்ட எம் கண்டனை, புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர், உருகி நைபவர் உள்ளம் குளிருமே.
[3]
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை, பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.
[4]
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர் பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர் மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.
[5]
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை, புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே.
[6]
கையினோடு கால் கட்டி, உமர் எலாம், ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர், பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர், மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!
[7]
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று, மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே; புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!
[8]
அரக்கனார் தலைபத்தும் அழிதர நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.080   வானம் சேர் மதி சூடிய
பண் - திருக்குறுந்தொகை (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை; ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக் கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!
நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக் கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.
[5]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.082   விண்ட மா மலர் கொண்டு
பண் - திருக்குறுந்தொகை (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர், அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்! பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும், வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக் குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர், சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர், வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.
[7]
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய், பாதி பெண் உருஆய பரமன் என்று ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர் வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.
[8]
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில், வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.
[9]
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச் சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்; ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும், வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.083   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பண் - திருக்குறுந்தொகை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்; காணத் தான் இனியான் கடல் நாகைக்கா- ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.
[1]
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை, விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை, கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை, கண்டலும், வினை ஆன கழலுமே.
[2]
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை நனையும் மா மலர் சூடிய நம்பனை, கனையும் வார்கடல் நாகைக்காரோணனை, நினையவே, வினை ஆயின நீங்குமே.
[3]
கொல்லை மால்விடை ஏறிய கோவினை, எல்லி மாநடம் ஆடும் இறைவனை, கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை, சொல்லவே, வினை ஆனவை சோருமே.
[4]
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக் கையனை, கடல் நாகைக்காரோணனை, மை அனுக்கிய கண்டனை, வானவர் ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
[5]
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை, விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை, கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை, வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
[6]
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை, இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை, கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை, மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
[7]
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து, எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை, கந்த வார் பொழில் நாகைக்காரோணனை, சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.
[8]
கருவனை, கடல் நாகைக்காரோணனை, இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை, ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த செருவனை, தொழத் தீவினை தீருமே.
[9]
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன், வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை அடர ஊன்றிய, பாதம் அணைதர, தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.084   மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
பண் - திருக்குறுந்தொகை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
[1]
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்! கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
[2]
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே, கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!
[3]
அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும் கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!
[4]
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார், அவர் என்று என்றே, கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப் பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!
[5]
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்; கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.
[6]
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார், பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்! கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம் ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!
[7]
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர், சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்! காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை நீலகண்டனை நித்தல் நினைமினே!
[8]
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!
[9]
எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன், கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.085   மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
பண் - திருக்குறுந்தொகை (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
தாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய், பேயனேனையும் ஆண்ட பெருந்தகை; தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார் என, நம் வினை நாசமே.
[4]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.086   காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பண் - திருக்குறுந்தொகை (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்தபோது பயன் இலை-பாவிகாள்! அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!
[2]
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,- அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்- சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.
[3]
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே? ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால் ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!
[4]
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர் வேறு வேறு படுப்பதன் முன்னமே, ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
[5]
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர் தானமோடு தலை பிடியாமுனம், ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார், ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.
[6]
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர் கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே, ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!
[7]
நாடி வந்து, நமன் தமர் நல் இருள் கூடி வந்து, குமைப்பதன் முன்னமே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.
[8]
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே, அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!
[9]
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே, அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார் கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.087   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
பண் - திருக்குறுந்தொகை (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.088   பெருகல் ஆம், தவம்; பேதைமை
பண் - திருக்குறுந்தொகை (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
[1]
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.
[2]
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.
[3]
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, பாதுகாத்துப் பலபல கற்பித்து, மாதுதான், மருகல் பெருமானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
[4]
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.
[5]
சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான், மருகல் பெருமான் வரும் அங்கவீதி அருகு அணையா நிற்கும்; நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?
[6]
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே மீட்சி ஒன்று அறியாது மிகுவதே? மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத் தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.
[7]
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.
[8]
கந்தவார் குழல் கட்டிலள், காரிகை அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக வந்திடாய், மருகல் பெருமான்! என்று சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!
[9]
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் ஆதியான், மருகல் பெருமான், திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.089   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை )
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்; ஒன்று கீள் உமையோடும் உடுத்தது- ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.
[1]
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்; இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்; இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து, இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.
[2]
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில் மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்; மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்; மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.
[3]
நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல் நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம் நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.
[4]
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம் அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்; அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.
[5]
ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்; ஆறு சூடிய அண்ட முதல்வனார்; ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள் ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.
[6]
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்- ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு- ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல், ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.
[7]
எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில், எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே; எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.
[8]
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு; ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே, ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை; ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.
[9]
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்; பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை; பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.090   மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை (பொது -தனித் திருக்குறுந்தொகை )
மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே; புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை; புழுவினும் கடையேன் புனிதன் தமர்- குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?
[4]
மலையே வந்து விழினும், மனிதர்காள்! நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே? தலைவன் ஆகிய ஈசன் தமர்களை, கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?
[5]
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள; இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள; கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்; எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?
[6]
மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்; கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே? புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.
[7]
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்; தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்; என்னைத் தன் அடியான் என்று அறிதலும், தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.
[8]
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர் உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி; கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்- வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.092   கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
[1]
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!
[2]
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!
[9]
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!
[10]
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.093   காசனை, கனலை, கதிர் மா
பண் - திருக்குறுந்தொகை (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )
காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
[1]
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை, அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை, வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?
[2]
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
[3]
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,- ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
முற்றினானை; இராவணன் நீள் முடி ஒற்றினானை, ஒருவிரலால் உற; பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச் சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.095   புக்கு அணைந்து புரிந்து அலர்
பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )
இள எழுந்த இருங்குவளை(ம்) மலர் பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்; களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன் அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.
[9]
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்; விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்; அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக் கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
[10]
செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்; இங்கு உற்றேன்! என்று இலிங்கத்தே தோன்றினான், பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.096   பொன் உள்ளத் திரள் புன்சடையின்
பண் - திருக்குறுந்தொகை (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )
பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!
[1]
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர் தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
[2]
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும், தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது; இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!
[3]
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!
[4]
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள் ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!
[5]
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு- மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும் அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
[6]
வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
[7]
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும், நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என் புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!
[8]
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள் அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன் எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
[9]
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம், எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது, எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார், எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.097   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
பண் - திருக்குறுந்தொகை (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.
[1]
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
[2]
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன் பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்- சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.
[3]
இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர், அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.
[4]
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்- நீறு பூசி நிலாமதி சூடிலும், வீறு இலாதன செய்யினும், விண்ணவர், ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.
[5]
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப் பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம் பிச்சையே புகும் ஆகிலும், வானவர், அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.
[6]
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா! கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.
[7]
எந்தையே! எம்பிரானே! என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்; வெந்தநீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார், அடைந்தார்களே.
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார், வளமை போய், பிணியோடு வருதலால், உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே.
[28]
தன்னில்-தன்னை அறியும் தலைமகன் தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்; தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில், தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.
[29]
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.
[30]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.098   நீறு அலைத்தது ஓர் மேனி,
பண் - திருக்குறுந்தொகை (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை; தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர் ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
[1]
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை, சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர் எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
[2]
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார், கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.
[3]
அம்மானை,- அமுதின் அமுதே! என்று- தம்மானை, தத்துவத்து அடியார் தொழும் செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.
[4]
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய், ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர், பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம் ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.
[5]
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார், தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்; வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே? என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.
[6]
வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை கொன்றானை; குணத்தாலே வணங்கிட நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.
[7]
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும் குருவினை, குணத்தாலே வணங்கிடும் திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
[8]
தேசனை, திருமால் பிரமன் செயும் பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.099   பாவமும் பழி பற்று அற
பண் - திருக்குறுந்தொகை (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே.
[1]
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
[2]
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்? எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
[3]
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்? நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.
[4]
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? வேலை தோறும் விதிவழி நிற்கில் என்? ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.
[5]
கானம், நாடு, கலந்து திரியில் என்? ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்? ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.
[6]
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்? வாடி ஊனை வருத்தித் திரியில் என்? ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.
[7]
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்? சென்று நீரில் குளித்துத் திரியில் என்? என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.
[8]
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை- ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல், ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.
[9]
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்? பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக் குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
5 -ஆம் திருமுறை பதிகம் 5.100   வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )