This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 திரு ஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம் -திருமுகப் பாசுரம் ()
2 காரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1 -திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் (திருவாலங்காடு (பழையனூர்))
3 காரைக்கால் அம்மையார் - திரு இரட்டை மணிமாலை -திரு இரட்டை மணிமாலை ()
4 காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி -அற்புதத் திருவந்தாதி ()
5 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா சேத்திரத் -திருக்கோயில் திருவெண்பா சேத்திரத் ()
6 சேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி -பொன்வண்ணத்தந்தாதி (கோயில் (சிதம்பரம்))
7 சேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை -திருவாரூர் மும்மணிக்கோவை (திருவாரூர்)
8 சேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞான உலா -திருக்கயிலாய ஞான உலா (திருக்கயிலாயம்)
9 நக்கீரதேவ நாயனார் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி -கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (திருக்கயிலாயம்)
10 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது -திருஈங்கோய்மலை எழுபது (திருஈங்கோய்மலை)
11 நக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை -திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (திருவலஞ்சுழி)
12 நக்கீரதேவ நாயனார் - திருஎழு கூற்றிருக்கை -திருஎழு கூற்றிருக்கை ()
13 நக்கீரதேவ நாயனார் - பெருந்தேவ பாணி -பெருந்தேவ பாணி ()
14 நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம் -கோபப் பிரசாதம் ()
15 நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு -கார் எட்டு ()
16 நக்கீரதேவ நாயனார் - போற்றித் திருக்கலி வெண்பா -போற்றித் திருக்கலி வெண்பா ()
17 நக்கீரதேவ நாயனார் - திருமுருகாற்றுப்படை -திருமுருகாற்றுப்படை (ஆறுபடை வீடு)
18 நக்கீரதேவ நாயனார் - திருக்கண்ணப்பதேவர் திருமறம் -திருக்கண்ணப்பதேவர் திருமறம் ()
19 கல்லாடதேவ நாயனார் - திருக்கண்ணப்பதேவர் திருமறம் -திருக்கண்ணப்பதேவர் திருமறம் ()
20 கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை -மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை ()
21 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை -சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை ()
22 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி -சிவபெருமான் திருவந்தாதி ()
23 பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி -சிவபெருமான் திருவந்தாதி ()
24 இளம்பெருமான் அடிகள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை -சிவபெருமான் திருமும்மணிக்கோவை ()
25 அதிராவடிகள் - மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை -மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ()
26 பட்டினத்துப் பிள்ளையார் - கோயில் நான்மணிமாலை -கோயில் நான்மணிமாலை (கோயில் (சிதம்பரம்))
27 பட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை -திருக்கழுமல மும்மணிக் கோவை (சீர்காழி)
28 பட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை -திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (திருவிடைமருதூர்)
29 பட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி -திருஏகம்பமுடையார் திருவந்தாதி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
30 பட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது -திருவொற்றியூர் ஒருபா ஒருபது (திருவொற்றியூர்)
31 நம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை -திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை (திருநாரையூர்)
32 நம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் -கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (கோயில் (சிதம்பரம்))
33 நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி -திருத்தொண்டர் திருவந்தாதி ()
34 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி -ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி ()
35 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் -ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ()
36 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை -ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை ()
37 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை -ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை ()
38 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் -ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் ()
39 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருத்தொகை -ஆளுடையபிள்ளையார் திருத்தொகை ()
40 நம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை -திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை ()
Back to Top
திரு ஆலவாய் உடையார் திருமுகப் பாசுரம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.001  
திருமுகப் பாசுரம்
பண் - ( )
மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
[1]
Back to Top
காரைக்கால் அம்மையார் திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
11 -ஆம் திருமுறை பதிகம் 11.002  
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
பண் - (திருவாலங்காடு (பழையனூர்) )
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.
[1]
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே.
[2]
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித் தோட வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்ட கத்தே ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடம் திரு ஆலங் காடே.
[3]
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னே கண்டிலோம் என்று கனன்று பேய்கள் கையடித் தொ டிடு காட ரங்கா மண்டலம் நின்றங் குளாளம் இட்டு, வாதித்து, வீசி எடுத்த பாதம் அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[4]
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக் கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப் புழதி துடைத்து, முலைகொ டுத்துப் போயின தாயை வரவு காணா தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே
[5]
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டில் பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாயநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[6]
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித் தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் தான் தடி தின்றணங் காடு காட்டில் கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம் அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[7]
நாடும், நகரும் திரிந்து சென்று, நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்ட மாடே, முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக் காடும், கடலும், மலையும், மண்ணும், விண்ணும் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[8]
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[9]
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
[10]
ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி, ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து, பப்பினை யிட்டுப் பகண்டை ஆட, பாடிருந் தந்நரி யாழ மைப்ப, அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம் அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.
[11]
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.
[12]
நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய் துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும் கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய் அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
[13]
புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும் பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.
[14]
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக் கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
[15]
முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
[16]
வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில் தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய் கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே.
[17]
நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச் சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின் முந்தி அமரர் முழவின் ஒசை முறைமை வழுவாமே அந்தி நிருத்தம் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
[18]
வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள் ஒயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில் மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.
[19]
கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் இடுவெண் டலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில் கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே.
[20]
குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய் இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
[21]
சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவம் நாசமே.
[22]
Back to Top
காரைக்கால் அம்மையார் திரு இரட்டை மணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.003  
திரு இரட்டை மணிமாலை
பண் - ( )
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே.
[1]
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமை காக்கும் பிரான்.
[2]
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண் டிரான்என நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப் பொராநின்ற கொன்றை பொதும்பர்க் கிடந்துபொம் மென்துறைவாய் அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.
[3]
அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே என்கண்டாய் நெஞ்சே இனி.
[4]
இனிவார் சடையினில் கங்கையென் பாளைஅங் கத்திருந்த கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகையிற் சிலையால் முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயின்மூழ்கத் தனிவார் கணையொன்றி னால்மிகக் கோத்தஎம் சங்கரனே.
[5]
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள் ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும் ஒவாது நெஞ்சே உரை.
[6]
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கின்செவ் வான்தொடைமேல் இரைக்கின்ற பாம்பினை என்றுந் தொடேல்இழிந் தோட்டத்தெங்கும் திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல் விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே.
[7]
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக் காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான் வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது கில்லேன மாஎன்றான் கீழ்.
[8]
கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர் விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டன் எண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே.
[9]
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட கண்டத்தான் செம்பொற் கழல்.
[10]
கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார் நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா வினைநிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த் தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்அடுந் தொல்வினையே.
[11]
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர் கூற்றானைக் கூற்றுருவங்காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை.
[12]
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர் தஞ்சமென்று மனையா ளையும்மக்கள் தம்மையுந் தேறிஓர் ஆறுபுக்கு நனையாச் சடைமுடி நம்பன் நந் தாதைநொந் தாதசெந்தீ அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே.
[13]
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும் முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின் ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின் நீறாடி நெய்யாடி நீ.
[14]
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் திரங்குவல்வாய்ப் பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம் போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே.
[15]
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த அம்மானுக் காட்பட்ட அன்பு.
[16]
அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோ ராடரவம் தன்பால் ஒருவரைச் சாரவொட் டா ததுவேயுமன்றி முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே.
[17]
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான் ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர் படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
[18]
தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள் எமக்கென்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச் சுமக்கின்ற பிள்ளைவெல் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய் உமைக்கென்று தேடிப் பொறாதுட னேகொண்ட உத்தமரே.
[19]
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
[20]
Back to Top
காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.004  
அற்புதத் திருவந்தாதி
பண் - ( )
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
[1]
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்நெஞ் சவர்க்கு.
[2]
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
[3]
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
[4]
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.
[5]
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான்.
[6]
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன்.
[7]
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள்.
[8]
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு.
[9]
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று.
[10]
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது.
[11]
அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும் அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.
[12]
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லே பாவந் தான்.
[13]
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான், தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து.
[14]
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி.
[15]
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்.
[16]
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.
[17]
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத் தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று.
[18]
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு.
[19]
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்.
[20]
அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து.
[21]
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை.
[22]
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது.
[23]
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
[24]
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று.
[25]
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு.
[26]
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண்.
[27]
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக, இவர்.
[28]
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்.
[29]
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
[30]
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு.
[31]
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
[32]
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம்.
[33]
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை யடும்.
[34]
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு.
[35]
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி.
[36]
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
[37]
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு.
[38]
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து.
[39]
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
[40]
ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
[41]
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ, இளங்குழவித் திங்கள் இது
[42]
திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே யறிவான் தனக்கு.
[43]
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான்.
[44]
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது.
[45]
எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற் றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம்.
[46]
திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு.
[47]
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா தது மதியொன் றில்லா அரா.
[48]
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே ஒப்பான் சடை.
[49]
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின் குலப்பாவை நீலக் குழல்.
[50]
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
[51]
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர்.
[52]
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
[53]
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.
[54]
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.
[55]
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம் நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
[56]
நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவம் மேல்ஆட மிக்கு.
[57]
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
[58]
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.
[59]
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று.
[60]
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது
[61]
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு.
[62]
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா.
[63]
நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று.
[64]
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு.
[65]
மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
[66]
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன் உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு.
[67]
சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி.
[68]
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவலம் உண்டோ எமக்கு.
[69]
எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
[70]
இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண்.
[71]
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங் கண்ணாளா ஈதென் கருத்து.
[72]
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி உள்ளமே எப்போதும் ஒது.
[73]
ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கலம்.
[74]
கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு.
[75]
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து, பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து, எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.
[76]
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்; அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
[77]
அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து.
[78]
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.
[79]
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால்.
[80]
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து.
[81]
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
[82]
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது.
[83]
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக் கண்டாலும் முக்கணாங் கண்.
[84]
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின்.
[85]
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்.
[86]
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள்.
[87]
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி.
[88]
ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்இதனைக் கூறு.
[89]
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை.
[90]
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென்
[91]
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க் கருளாக வைத்த அவன்.
[92]
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
[93]
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள்.
[94]
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமினிங் கார்.
[95]
ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து.
[96]
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் களைந்தெழுந்த செந்தீ யழல்.
[97]
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு.
[98]
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தாய் ஆடுன் நடம்.
[99]
நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ றுருமேறோ ஒன்றா உரை.
[100]
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து.
[101]
Back to Top
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.005  
திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
பண் - ( )
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர்.
[1]
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
[2]
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை.
[3]
காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய் நாளும் அணுகி நலியாமுன் பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க் கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
[4]
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.
[5]
காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர் பருக்கோடி மூடிப் பலரழா முன்னம் திருக்கோடி காஅடைநீ சென்று.
[6]
மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த் தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம் நின்னிடைவாய் வைத்து நினை.
[7]
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை.
[8]
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற் குழித்தண் டலையானைக் கூறு.
[9]
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும்.
[10]
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும் என்னானைக் காவா இதுதகா தென்னாமுன் தென்னானைக் காஅடைநீ சென்று.
[11]
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத் திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யங்காந் திளைத்து.
[12]
காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும் பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள் ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை மாகாளங் கைதொழுது வாழ்த்து.
[13]
இல்லும் பொருளும் இருந்த மனையளவே சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
[14]
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
[15]
இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச் சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில் திருவாச்சி ராமமே சேர்.
[16]
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.
[17]
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை.
[18]
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின் தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும் தன்திருவாய்ப் பாடியான் தாள்.
[19]
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன் கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய் மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி ஏகம்பத் தானை இறைஞ்சு.
[20]
கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர் மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந் தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
[21]
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட் டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங் கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி இரந்துண் டிருக்கப் பெறின்.
[22]
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான் ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன் பாடரவம் கேட்ட பகல்.
[23]
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார் கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே செழுந்திரும யானமே சேர்.
[24]
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.006  
பொன்வண்ணத்தந்தாதி
பண் - (கோயில் (சிதம்பரம்) )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
[1]
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென்றான்இமை விண்டன வாட்கண்களே.
[2]
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம் இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே.
[3]
பரமனை யே பலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யே சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
[4]
தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்தவெல்லாம் சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே.
[5]
இடம்மால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பாலொண்கொன்றை வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர் குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.
[6]
கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளங்கொலாம் ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற திமையவர்தம் ஓத்துக் கொலாமிவர் கண்ட திண் டைச்சடை உத்தமரே.
[7]
உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே.
[8]
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.
[9]
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால் அணிபதங் கன்பற் கொள்அப்பனை அத்தவற் கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீயென் தனிநெஞ்சமே.
[10]
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே.
[11]
வானகம் ஆண்டு மந் தாகினி ஆடிநந் தாவனஞ்சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோருஞ் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போருங் கனகவண்ணப் பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே.
[12]
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிதும் எழு நெஞ்ச மேயெரி ஆடியெம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேனிவ் வுலகினுள்ளே.
[13]
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம் பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் நாள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.
[14]
அலையார் புனலனல் ஞாயி றவனி மதியம்விண்கால் தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கனென்னே கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே.
[15]
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார்யார் போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.
[16]
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் றானே களையுநம் தீவினையே.
[17]
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும் ஒவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.
[18]
பாதம் புவனி சுடர்நய னம்பவ னமுயிர்ப் போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேயுடம்பு வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதமென்ன போதம் இவற்கோர் மணிநிறந் தோற்பது பூங்கொடியே.
[19]
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தின் நீறும்ஐ வாய்அரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.
[20]
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.
[21]
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான் செல்வம் ஆவதென் றேன் மேல் நினைப்பு வண்டேர் ஒதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.
[22]
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் அறுபகை ஒங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.
[23]
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்உரைத் தாருரைத்த கள்ளிய புக்காற் கவிகளொட் டார் கடல் நஞ்சயின்றாய் கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல் ஆயினுங் கொண்டருளே.
[24]
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.
[25]
விரிகின்ற ஞாயிறு போன்ற மேனியஞ் ஞாயிறுசூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக்கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெந்தை ஒண்பொடியே.
[26]
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம் குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.
[27]
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும் விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தம் செறியச்செய்த கரைவளர் வொத்துள தால்சிர மாலையெம் கண்டனுக்கே.
[28]
கண்டங் கரியன் கரிஈர் உரியன் விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான் பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரமரிந்த புண்தங் கயிலன் பயிலார மார்பனெம் புண்ணியனே.
[29]
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக் கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும் விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள் பண்ணியன் பண்ணியல் பாடல நாடற் பசுபதியே.
[30]
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர் கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண் டிறை கூத்துமுண்டு மதியார் சடையுள மாலுள தீவது மங்கையர்க்கே.
[31]
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் குந்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான் கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்ணர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.
[32]
பண்டங்கன் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன் அண்டங் கடந்தவன் அன்னமென் றான்அயன் ஊர்தியென்றேன் கொண்டிங் குன்னையம்பெய் என்றான் கொடித்தேர் அனங்கனென்றேன் உண்டிற் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.
[33]
உற்றடி யாருல காளவோர் ஊணும் உறக்குமின்றிப் பெற்றம தாவதென் றேறும் பிரான் பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகவென் னுக்கு மெலிக்கின்றதே.
[34]
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு தலிக்கின்ற காமங் கரதலம் மெல்லி துறக்கம்வெங்கூற் றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.
[35]
பல்லுயிர் பாகம் உடல் தலை தோல்பக லோன்மறல்பெண் வில்லியோர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான்புகழே சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.
[36]
துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந் தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ இங்ஙனே மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.
[37]
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள் பலிகொடு சென்று நகும்நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க்கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.
[38]
தாழுஞ் சடைசடை மேலது கங்கைஅக் கங்கைநங்கை வாழுஞ் சடைசடை மேலது திங்களத் திங்கட்பிள்ளை போழுஞ் சடை சடை மேலது பொங்கர வவ்வரவம் வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.
[39]
முனியே முருகலர் கொன்றையி னாயென்னை மூப்பொழித்த கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் இனியேல் இருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.
[40]
சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றியஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தானென் றெழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.
[41]
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண் திணிந்த கல்லாம் நினையா மனம் வணங் காத்தலை யும்பொறையும் அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே.
[42]
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால் மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக்கொன்றை யானரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும் எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.
[43]
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும் தண்ணம் பிறைசடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உண்ணன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே.
[44]
காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள் நாம்முனஞ் செற்றதன் றாரையென் றேற்கிரு வர்க்குமஞ்சி ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே.
[45]
அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே.
[46]
கொட்டும் சிலபல சூழநின் ரார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும் வட்டம் வருமருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டான் பூதங்களே.
[47]
பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ்சொற்கள் நும்மேல் ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே.
[48]
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான் மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத் தமும்அமைத்தான் அப்பனை அம்மனை நீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.
[49]
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும்ஐ வாயரவும் ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே. [50]
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்சரவார் சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்து அலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.
[51]
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால் இழிகின்ற சங்கம் இருந்த முலைமேற் கிடந்தனபீர் பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார் மொழிகின்ற தென்னினி நான்மறை முக்கண் முறைவனுக்கே.
[52]
முறைவனை மூப்புக்கும் நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந் தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே.
[53]
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாளவர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழியினி ஆரணங்கே.
[54]
ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம் அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலையிவை காணப் புரிசடையெம் காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே.
[55]
கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள் ஒருதின மும்உள ளாகவொட் டாதொடுங் காரொடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றையின்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழிருளே.
[56]
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால் பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பௌவந் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாஅரன் ஆயினனே.
[57]
ஆயின அந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள் போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல் ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டவெம் ஆயிழைக்கே.
[58]
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால் பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம் கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள் குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.
[59]
கூடிய தன்னிடத் தானுமை யாளிடத் தானைஐயா றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்து கூற்றைப் படர்புரஞ்சுட் டாடிய நீறுசெஞ் சாந்திவை யாமெம் அயனெனவே.
[60]
அயமே பலியிங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப் பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால் புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா நயமே மொழியினும் நக்காம மாவும்மை நாணுதுமே.
[61]
நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாமெழுக ஏணார் இருந்தமி ழார்மற வேனுந் நினைமினென்றும் பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால் காணா விடேன்கண் டிரவா தொழியேன் கடிமலரே.
[62]
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன் அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க் கழ கல்லவென்பேன் தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே.
[63]
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்குமன்றிக் கிடங்கின்றி பட்ட கராவனை யார்பல கேவலரே.
[64]
வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலம்நீ றிடம்சாந்து எரிவலம் பந்திடமென்பு அலர்ந்தார் வலமிடம் ஆடகம் வேல்வலம் ஆழியிடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடம் சங்கரற்கே.
[65]
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின் தொண் டீர்நமனார் கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே இங்கரம் ஆயிரம் ஈரவென் நெஞ்சம் எரிகின்றதே.
[66]
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்றகத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே.
[67]
அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழலுமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தார் பரவும் புகழண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடரின்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே.
[68]
பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும் நீறும் மருவலுற்றோ கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாயர வாடலுற்றோ குறைக்கொண் டிவளரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே.
[69]
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெரியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே.
[70]
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமக ளாயணைந்தே எமையா ளுடையான் தலை மகளாவங் கிருப்பவென்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.
[71]
உறைகின் றனரைவர் ஒன்பது வாயிலோர் மூன்றுளவால் மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை பறைகின்ற தோல்போர் குரம்பை பயனில்லை போயடைமின் அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.
[72]
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைக் கடிக்கண்ணி யாயெமக்கோரூர் இரண்டகங் காட்டினையால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.
[73]
குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற அன்றடர்த் தற்றுகச் செற்றவன் அற்றவர்க் கற்றசிவன் மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய் ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.
[74]
குழிகண் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடையூன் உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த் தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற் கழுதுக் குறைவிடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே.
[75]
அரம்கா மணியன்றில் தென்றலோர் கூற்றம் மதியம்அந்தீச் சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள் தளர்ந்தாள் இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம் சிரம்கா முறுவான் எலும்புகொள் வானென்றன் தேமொழிக்கே.
[76]
மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம் அழியக்கண் டானன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்னுயிர்மேற் கழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும் கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.
[77]
கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம் உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக் கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.
[78]
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோளிழைத்தீர் வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல் உறைக்கொன்றை யோவுடைத் தோலோ பொடியோ உடைகலனோ கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே.
[79]
கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தாற் கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட்கவ லங்கொடுத்தான் தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.
[80]
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லுஞ்சடைமேற் செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாமென்று பாவிப்பனே.
[81]
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கமெங்கும் காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக் கண்ணில் தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல் லோதிக்குச் சந்தித்தவே.
[82]
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற அந்திக்கண் ஆடியி னானடி யார்களுக் காவனவே.
[83]
ஆவன யாரே அழிக்கவல் லாரமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் புராபுரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேனிழந் தேன்கலை யோடு செறிவளையே.
[84]
செறிவளை யாய்நீ வரையல் குலநலம் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோருமேத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால் கறைவளர் கண்டனைக் காணப் பெரிதுங் கலங்கியதே.
[85]
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண் மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய் இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்அவிந்தார் அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே.
[86]
எம்மிறை வன்னிமை யோர்தலை வன்உமை யாள்கணவன் மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற் கெம்முறை யாளிவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான் இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே.
[87]
கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி சிலையிவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொல்செய்கை நிலைபிழை யாதுகுற் றேவல்செய் தார்நின்ற மேருவென்னும் மலைபிழை யாரென்ப ராலறிந் தோர் இந்த மாநிலத்தே.
[88]
மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையவத் தேவரெல்லாம் ஆநலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார் பாநலத் தாற்கவி யாமெங்ங னேயினிப் பாடுவதே.
[89]
பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்த தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெம் கொற்றவற்கே.
[90]
கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால் நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி யென்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக னேயென்றும் மன்மதனைச் செற்றவ னேயென்றும் நாளும் பரவுமென் சிந்தனையே.
[91]
சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழவமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன் வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.
[92]
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை குங்குமக் குன்றனைய பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
[93]
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத் துஞ்சும் பொழுதும் உறத்தொழு தேன்சொரி மாலருவி அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்வியண் ணாந்தனைய வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.
[94]
வீரன் அயனரி, வெற்பலர் நீரெரி பொன்னெழிலார் காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை பேரொண் பதிநிறம் தாரிவர் ஊர்திவெவ் வேறென்பரால் ஆரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.
[95]
பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க் குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனவடியார்க் கரியான் இவனென்று காட்டுவன் என்றென் றிவையிவையே பிரியா துறையுஞ் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.
[96]
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதைநல்லாள் காய்சின வேட்கை அரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால் இவையொன்றும் பொய்யலவே.
[97]
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங் குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பவென்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.
[98]
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப் பாண்டின அச்சம் வெகுளி அவா வழுக் காறிங்ஙனே மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.
[99]
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின ஆனை வளரும் கனக மலையருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.
[100]
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல் வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலைஅரன்முன் சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான் மன்றிடை ஓதுபொன் வண்ணத் தந்தாதி வழங்கிதுவே.
[101]
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.007  
திருவாரூர் மும்மணிக்கோவை
பண் - (திருவாரூர் )
விரிகடல் பருகி அளறுபட் டன்ன கருநிற மேகம் கல்முக டேறி நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி பொலங்குழை மின்னப் புருவ வில்லிட் டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக் கைத்தலம் என்னும் காந்தள் மலர முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக் குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக் கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத் தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா மணியும் பொன்னும் மாசறு வயிரமும் அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக் கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப் பொங்குபுயல் காட்டி யோளே கங்கை வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல் ஆரூர் எல்லையில் இரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே.
[1]
மனம்மால் உறாதேமற் றென்செய்யும் வாய்ந்த கனமால் விடையுடையான் கண்டத் - தினமாகித் தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்; கான்றனநீர் ஏந்திழையாள் கண்.
[2]
கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனவிருண்ட விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட மண்ணார் மலைமேல் இளமயில் ஆல்மட மான் அனைய பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே.
[3]
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும் அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய் வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும் மின்சரந் துரந்தது வானே நிலனே கடிய வாகிய களவநன் மலரொடு கொடிய வாகிய தளவமும் அந்தண் குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு காயா வெந்துயர் தருமே அவரே பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக் கங்குலும் பகலும் காவல் மேவி மாசறு வேந்தன் பாசறை யோரே யானே இன்னே அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான் றுலவா நல்வரம் அருளிய உத்தமன் அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா மயரிய மாக்களைப் போலத் துயருழந் தழியக் கண்துயி லாவே.
[4]
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற மயிலால வந்ததால் மாதோ - அயலாய அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான் கண்டத்துக் கொப்பாய கார்.
[5]
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம் தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது சில்வளைகள் சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன துன்னருநஞ் சாரும் மிடற்றண்ணல் ஆரூரன் ஐய அணங்கினுக்கே.
[6]
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது மணங்கமழ் தெரியல் சூடி வைகலும் விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக் கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல் வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத் தானாக் காத லாகுவர் என்று புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள் கலைபிணை திரியக் கையற வெய்தி மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து அல்லியங் கோதை அழலுற் றாஅங் கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார் திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த அரிவை பாகத் தண்ண லாரூர் வளமலி கமல வாள்முகத் திளமயிற் சாயல் ஏந்திழை தானே.
[7]
இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின் உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர் அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த கைம்மாநேர் அன்ன களிறு.
[8]
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா வெளிறு விரவ வருதிகண் டாய்விண்ணினின் றிழிந்து பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூங்கழல்மாட் டொளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே.
[9]
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும் மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக் கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி என்னிது விளைந்த வாறென மற்றி தன்னது அறிகிலம் யாமே செறிபொழில் அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன் முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி மராமரச் சோலைச் சிராமலைச் சாரல் சுரும்பிவர் நறும்போது கொய்யப் பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
[10]
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர் முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான் மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.
[11]
வந்தார் எதிர்சென்று நின்றேற்கு ஒளிரும்வண் தார்தழைகள் தந்தார் அவையொன்றும் மாற்றகில் லேன் தக்கன் வேள்விசெற்ற செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க் கொந்தார் பொழிலணி நந்தா வனத்துக் குளிர்புனத்தே.
[12]
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை மனைமலி செல்வம் மகிழா ளாகி ஏதிலன் ஒருவன் காதலன் ஆக விடுசுடர் நடுவண்நின் றடுதலின் நிழலும் அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும் வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில் கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப் பாசந் தின்ற தேய்கால் உம்பர் மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர் விருந்தா யினள்கொல் தானே திருந்தாக் கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச் செய்வளர் கமலச் சீறடிக் கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
[13]
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான் தண்ணாரூர் சூழ்ந்த தடம்.
[14]
தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்து மடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇ இடப்பால் திரியின் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால் படப்பா லனஅல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே.
[15]
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் பரல்முரம் பதரும் அல்லது படுமழை வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத் தேன்இவர் கோதை செல்ல மானினம் அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம் பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும் அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன் கலையமர் கையன் கண்ணுதல் எந்தை தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த கொங்கலர் கண்ணி யாயின குரவே.
[16]
குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின் விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம் சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக் கடைக்கணித்த தீயிற் கடிது.
[17]
கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கண் முடிமலர் ஆக்கிய முக்கணக் கன்மிக்க செக்கரொக்கும் படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல் அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே.
[18]
மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக் கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும் பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை வருபுனல் ஊரன் பார்வை யாகி மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப் படிற்று வாய்மொழி பலபா ராட்டி உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி எம்மில் லோயே பாண அவனேல் அமரரும் அறியா ஆதிமூர்த்தி குமரன் தாதை குளிர்சடை இறைவன் அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத் துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக் கண்ணடி அனைய நீர்மைப் பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
[19]
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே ஏலா இங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும் பூந்தண் புனலூரன் பொய்.
[20]
பொய்யால் தொழவும் அருளும் இறைகண்டம் போல்இருண்ட மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன் கையால் அடிதொடல் செல்வனில் புல்லல் கலையளையல் ஐயா இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியவே.
[21]
அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத் தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த் தொருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப் பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக் குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால் உடைய வாகிய தடமென் கொங்கை வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன் பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப் பெருமடம் உடையை வாழி வார்சடைக் கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும் சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத் தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த சிறைகெழு செழும்புனல் போல நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
[22]
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே, நீளிருட்கண் ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத் தைவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த செய்வான தூரன் திறம்.
[23]
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயின எங்கையர்க்கே மறவலி வேலோன் அருளுக வார்சடை யான்கடவூர்த் துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேயெழினும் நறைமலி தாமரை தன்னதன் றோசொல்லும் நற்கயமே.
[24]
கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர் நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத் தால வட்டம் ஏய்ப்ப மீமிசை முடிகெழு தருவலை வீசி முந்நீர்க் குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும் எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை உருவது காட்டும் உலவாக் காட்சித் தண்ணந் துறைவன் தடவரை அகலம் கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக் காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக் கோளிழைத் திருக்குங் கொள்கை போல மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர் ஆர்கலி விழவின் அன்னதோர் பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே.
[25]
ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம் மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப் பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
[26]
புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி நள்நென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள் துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத்தொழு வார்மனம்போன் றுள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத்தருமே.
[27]
உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த பூத நாதன் ஆதி மூர்த்தி திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன் அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல் வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ் பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத் திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில் திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே விருந்தின் அடியேற் கருளுதி யோஎன முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின் நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி பொங்குபுனல் உற்றது போலஎன் அங்க மெல்லாந் தானா யினனே.
[28]
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன் கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
[29]
தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போல்அய் வேற்கிரங்கிச் சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே.
[30]
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா
11 -ஆம் திருமுறை பதிகம் 11.008  
திருக்கயிலாய ஞான உலா
பண் - (திருக்கயிலாயம் )
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண் அருமால் உற அழலாய் நின்ற பெருமான்
[1]
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்
[2]
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்
[3]
ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் ஆதி
[4]
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய
[5]
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே
[6]
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
[7]
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத
[8]
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து
[9]
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்
[10]
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்
[11]
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்
[12]
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா
[13]
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்
[14]
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த
[15]
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும்
[16]
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா
[17]
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய
[18]
ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய
[19]
எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு
[20]
கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்
[21]
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்
[22]
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த
[23]
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
[24]
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்
[25]
நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம்
[26]
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர்
[27]
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய
[28]
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த
[29]
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய
[30]
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக
[31]
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத் துருமு முரசறையப் போகம்சேர்
[32]
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்
[33]
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்
[34]
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய
[35]
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத
[36]
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய
[37]
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய
[38]
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்
[39]
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர்
[40]
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்
[41]
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய
[42]
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்
[43]
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத்
[44]
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்
[45]
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாம் தடாரி படகம் இடவிய
[46]
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே
[47]
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய
[48]
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த
[49]
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி மேலை
[50]
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி எமைஆளும்
[51]
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்
[52]
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்
[53]
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய
[54]
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி
[55]
போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக்
[56]
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்
[57]
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே
[58]
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில்
[59]
வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா
[60]
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய
[61]
மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்
[62]
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்
[63]
கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய
[64]
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற்
[65]
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய
[66]
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர்
[67]
சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின்
[68]
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு
[69]
தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்
[70]
ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும்
[71]
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்
[72]
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித் தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த
[73]
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்
[74]
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த
[75]
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில்
[76]
இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும்
[77]
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர்
[78]
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும்
[79]
பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்
[80]
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத்
[81]
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர்
[82]
பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர்
[83]
ஈசன் எரியாடி என்ன அவனைஓர் காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன
[84]
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய
[85]
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய
[86]
தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு
[87]
முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த
[88]
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின் கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல்
[89]
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில் சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து
[90]
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட
[91]
மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்
[92]
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா
[93]
மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த
[94]
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் காமன்
[95]
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்
[96]
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர
[97]
நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்
[98]
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட
[99]
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய
[100]
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்
[101]
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி
[102]
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர்
[103]
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்
[104]
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்
[105]
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு
[106]
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்
[107]
தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான்
[108]
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான்
[109]
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது
[110]
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய
[111]
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்
[112]
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய
[113]
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும் மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்
[114]
புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும் உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய
[115]
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல்
[116]
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித்
[117]
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய
[118]
முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால்
[119]
கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய
[120]
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும்
[121]
தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்
[122]
தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்
[123]
விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல
[124]
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல
[125]
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த
[126]
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்
[127]
எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே
[128]
செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய் சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம்
[129]
காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்
[130]
புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள்
[131]
தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி
[132]
செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல்
[133]
திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர்
[134]
மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்
[135]
இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே
[136]
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்
[137]
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல்
[138]
பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்
[139]
பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்
[140]
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே
[141]
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய
[142]
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர்
[143]
இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன்
[144]
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல்
[145]
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும் சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச்
[146]
சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய
[147]
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி
[148]
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா
[149]
மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே
[150]
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந்
[151]
தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்
[152]
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்
[153]
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்
[154]
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்
[155]
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு முறைமையால்
[156]
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல் ஓரா தகலல் உறாதென்று சீராலே
[157]
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே
[158]
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர்
[159]
நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும்
[160]
காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும்
[161]
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்
[162]
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந்
[163]
துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய
[164]
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார்
[165]
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும்
[166]
தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய
[167]
நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை ஏணார் ஒழிக எழிலொழிக பேணும்
[168]
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய
[169]
தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல்
[170]
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு
[171]
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல்
[172]
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்
[173]
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம்
[174]
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத
[175]
பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்
[176]
சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த
[177]
கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால்
[178]
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே
[179]
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு
[180]
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து
[181]
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய
[182]
தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த
[183]
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப
[184]
யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்
[185]
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த
[186]
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்
[187]
கண்அவனை அல்லாது காணா செவியவன தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல்
[188]
கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய
[189]
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்
[190]
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்
[191]
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்
[192]
வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே
[193]
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்
[194]
கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர்
[195]
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி
[196]
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின் உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா.
[197]
Back to Top
நக்கீரதேவ நாயனார் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.009  
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
பண் - (திருக்கயிலாயம் )
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
[1]
பெற்ற பயன்இதுவே யன்றே பிறந்தியான் கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் கொற்றவர்க்குத் தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக் காளாகப் பெற்றேன் அடைந்து.
[2]
அடைந்துய்ம்மின் அம்மானை உம் ஆவி தன்னைக் குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு அடைந்துநும் கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத் தண்ணலே கண்டீர் அரண்.
[3]
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ முரணம்பு கோத்த முதல்வன் சரணமே காணுமால் உற் றன்றன் காளத்தி கைதொழுது பேணுமால் உள்ளம் பெரிது.
[4]
பெரியவர் காணீர்என் உள்ளத்தின் பெற்றி தெரிவரிய தேவாதி தேவன் பெரிதும் திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை இருத்தத்தான் போந் திடம்.
[5]
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை தன்டிவே யானால் விடப்பாற் கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க் கொருவடிவே அன்றால் உரு.
[6]
உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை மருவினிய பூக்கயிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும் மாக்கயிலை என்னும் மலை.
[7]
மலைவரும்போர் வானவரும் தானவரும் எல்லாம் அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி நிலைதளரக் கண்டமையால் தண்சாரற் காலத்தி ஆள்வார்நஞ் சுண்டமையால் உண்டிவ் வுலகு.
[8]
உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலக மெனப்பெறினும் சீசீ இலகியசீர் ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு.
[9]
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும் சிறப்புடை ரானாலும் சீசீ இறப்பில் கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார் அடியாரைப் பேணாதவர்.
[10]
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி எவரும் தொழுதேத்தும் எந்தை சிவம்மன்னு தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே போக்குவார் வாளா பொழுது.
[11]
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கோளர்கொல் அந்தோ கிறிப்பட்டார் கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை.
[12]
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் சென்று சிதையாச்சீர்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
[13]
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண் டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து.
[14]
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண இருத்தி திருக்கயிலை என்றால் ஒருத்தர் அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ நெறிவார் சடையாய் நிலை
[15]
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ தடுமாறு கின்றேன் தொலைவின்றிப் போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர் வேந்தே இப் பாசத்தை விட்டு.
[16]
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே என் நேசத்தை வைக்க நினைகண்டாய் பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக் காக்குமா றித்தனையே காண்.
[17]
காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப் பூணார மார்பன்றன் பொற்பாதம் நாணாதே கண்டிடுவான் யான்இருந்தேன் காணீர் கடல்நஞ்சை உண்டிடுவான் றன்னை ஒருங்கு.
[18]
ஒருங்கா துடனேநின் றொர்ஐவர் எம்மை நெருங்காமல் நித்தம் ஒருகால் நெருங்கிக் கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான் வருங்கொலோ நம்பால் மதித்து.
[19]
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பார் மலர்தூய் வணங்காதே நம்பா நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன் காலங்கள் போன கழிந்து.
[20]
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாது ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் மொழிந்தசீர்க் கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை நண்ணுதலாம் நன்மை நமக்கு.
[21]
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர் தமக்கழகு தாமே யறிவார் அமைப்பொதும்பின் கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை வல்லவா நெஞ்சமே வாழ்த்து.
[22]
வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்டு ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே யாழ்த்தகைய வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே கண்டாய் அடியேன் கடன்.
[23]
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை இடம்நாடி இந்நாட்டிற் கேவந்திங் தீண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு.
[24]
மாறிப் பிறந்து வழியிடை யாற்றிடை ஏறி யிழியும் இதுவல்லால் தேறித் திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது.
[25]
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக் கனிதேர் கடுவன்கள் தம்மில் முனிவாய்ப் பிணிங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
[26]
மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் திகழ்ந்திலங்கும் விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என் பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
[27]
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானா ளேபாவம் மாசுனைநீர் காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
[28]
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா யான்காணக் காட்டு. [29]
காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப் போய் நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் ஓட்டுண்பார் ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து.
[30]
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல் கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல் பால்உகுத்த மாணிக்குப் பண்டு.
[31]
பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு கொண்டிலிங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்பு.
[32]
செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும் சென்றடைந்து கைதொழுவார்க் கெந்தை கயிலாயர் - நொய்தளவில் காலற்காய்ந் தாரன்றே காணீர் கழல்தொழுத பாலற்காய் அன்று பரிந்து.
[33]
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர் நாதா வா காளத்தி நம்பா வா என்றென்றென் மாதாவா உற்ற மயல்.
[34]
மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒரு மூன் றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப் பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே யிருப்பதவா வுற்றாள் இவள்.
[35]
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள் தீரும் துயர்.
[36]
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர் ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ மேற்றான் இதற்கு விளைவு
[37]
விளையும் வினை அரவின் வெய்ய விடத்தைக் களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில் திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும் மருந்தினைநீர் வாயிலே வைத்து.
[38]
வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத் தெம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.
[39]
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகா ளாவனவும் அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி.
[40]
நெறிவார் சடையாய் நிலையின்மை நீஒன் றறியாய்கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியில் கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை நினைத்தருவி கண்சோர நின்று.
[41]
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம் என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன் தாள்வா னவர் இறைஞ்சும் தண்சாரற் காளத்தி ஆள்வான் அருளாத வாறு.
[42]
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந் திம்மையே தீர்க்கும் இடர்.
[43]
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க் கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
[44]
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய் புணருங்கால் ஆரமுதே போலும் - இணரில் கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய், இனியவா காண்நின் இயல்பு.
[45]
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால் மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில் வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவுமா னால் உரை.
[46]
உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச் சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து.
[47]
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய் பணியாயால் என்முன் பரிசு.
[48]
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும் புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும் பரமா அடியேற்குப் பற்று.
[49]
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம் கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன்.
[50]
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம் பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற தென்செய்வான் எந்தாய் இயம்பு.
[51]
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால் ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து.
[52]
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம் அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தானாளும் பிச்சை புகும்போலும் தன் அடியார் வானாள மண்ணாள வைத்து.
[53]
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால் எக்காலத் தெப்பிறவி யான்.
[54]
யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண் டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான் மாயங்கள் செய்து.
[55]
மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு.
[56]
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக் காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற் சூலத்தான் பாதம் தொழு.
[57]
தொழுவாள் பெறாளே தோள்வளையும் தோற்றாள் மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள் நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப் பெறுமாறு காணீர்என் பெண்.
[58]
பெண்இன் றயலார்முன் பேதை பிறைசூடி கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத் தாமம்தா மற்றிவளைச் சார்ந்து.
[59]
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல்.
[60]
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன் சலன் என் றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத் தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ கூத்தாடல் மேவியவா கூறு.
[61]
கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீறாவும் மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடைஎம் ஈசன் திறம்.
[62]
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல் மாசில் நிறத்த மடக்குருகே - கூசி இருத்தியாய் நீயும் இருங்கயிலை மேயாற் கருத்தியாய்க் காமுற்றா யாம்.
[63]
காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே யாமுற்ற துற்றாய் இருங்கடலே யாமத்து ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சும் நள்ளிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண்.
[64]
கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென் றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் நண்ணும் பொறியா டரவசைத்த பூதப் படையார் அறியார்கொல் நெஞ்சே அவர்.
[65]
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார் நஞ்சேயும் கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர் அண்டத்தார் சூடும் அலர்.
[66]
அலரோன்நெடுமால் அமரர்கோன் மற்றும் பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத் தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான் குன்றாத சீர்க்கயிலைக் கோ.
[67]
கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக் கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் -பார்த்தலுமே பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
[68]
வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஒர் செந்தறுகண் கேழல் திறம்புரிந்து வந்தருளும் கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா வானவர்தம் கோமானே வா.
[69]
வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல் தாமார் உலகில் தவமுடையார் தாம்யார்க்கும் காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத் தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.
[70]
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய் என்றும் அடியார்க்கு முன்னிற்பர் நன்று கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார் இனியவா பத்தர்க் கிவர்.
[71]
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார் இவர் அல்லர் என்றிருக்க வேண்டா கவராதே காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி யாள்வார்நீர் ஆதரித்த தெய்வமே யாம்.
[72]
ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே தாம்இன்று வீழ்தல் தவமன்று - யாமென்றும் இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை அம்மானைச் சேர்வ தறிவு.
[73]
அறியாம லேனும் அறிந்தேனும் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகலி ஆடுதலும் போம்.
[74]
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும் ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால் உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய் விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.
[75]
வேறேயும் காக்கத் தகுவேனே மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும் அன்பா அடியேற் கருளா தொழிகின்ற தென்பாவ மேயன்றோ இன்று.
[76]
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக் கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என் னுட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய்.
[77]
செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது.
[78]
போது நெறியனவே பேசி நின் பொன்வாயால் ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந் தென்குழற்கே வா.
[79]
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக் கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஒவாதே பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வர ஒருகாற் கூவு.
[80]
கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுக என் றேவினான் பொறிகயிலை எம்பெருமான் - மேவியசீர் அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பால்பால் வேண்டுதலும் தான்.
[81]
தானே உலகாள்வான் தான்கண்ட வா வழக்கம் ஆனான்மற் றார்இதனை அன் றென்பார் - வானோர் களைகண்தா னாய்நின்ற காளத்தி யாள்வார் வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
[82]
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற் கிடந்தார் வலியெலாங் கெட்டு.
[83]
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல் பட்டதுவும் ஒராது பண்டொருநாள் - ஒட்டக் கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று சலந்தரனார் பட்டதுவும் தாம்.
[84]
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரே காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார் தூரத்தே போவார் தொழுது.
[85]
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும் வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள் எத்தனையும் சேய்த்தாக என்று.
[86]
வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை மானுடையான் என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள்.
[87]
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில் தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால் திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம்.
[88]
நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான் படம்ஆடும் பாம்பணையான் காணான் - விடம்மேவும் காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை யாரே அறிவார் இசைந்து.
[89]
இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேல் காட்டிக் காலந்தென்னைத் தன்னோடும் கூட்டுமேல் கூடவே கூடு.
[90]
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில் அடகயில ஆரமுதை விட்டு.
[91]
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயிற் பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம் கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற வள்ளலைச்சென் றேத்த மனம்.
[92]
மனம்முற்றும் மையலாய் மாதரார் தங்கள் கனம்உற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற் றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான் றனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
[93]
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும் சூழ்ந்த புலிஅதளும் சூழ்அரவும் - சேர்ந்து நெருக்கி வானோர் இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க் கிருக்கும் மா கோலங்கள் ஏற்று.
[94]
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.
[95]
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல படுகின்ற வண்ணம் பணி.
[96]
பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா கணியாது காலங் கழித்தேன் - அணியும் கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள் பெருமான தில்லை பிழை.
[97]
பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும் என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி மன்னா தருவாய் வரம்.
[98]
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா உன் பாதார விந்தம் - சிரம்ஆர ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும் வாய்த்திடுநீ வேண்டேன்யான் மற்று.
[99]
மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல்.
[100]
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருஈங்கோய்மலை எழுபது
11 -ஆம் திருமுறை பதிகம் 11.010  
திருஈங்கோய்மலை எழுபது
பண் - (திருஈங்கோய்மலை )
அடியும் முடியும் அரியும் அயனும் படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால், இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம் மன்னதென நின்றான் மலை.
[1]
அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக் கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின் இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு மலைவளைக்கை வில்லி மலை.
[2]
அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச் செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி கொம்பின் இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல் மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
[3]
அரிகரியக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப் பிரிவரிய தன் பிடியைப் பேணிக் கரிபெரிதும் கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே மையடுத்த கண்டன் மலை.
[4]
அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம் திரியாமற் செற்றான் சிலம்பு.
[5]
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
[6]
இடுதினைதின் வேழங் கடியக் குறவர் வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற நெடுநெடென நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி பூண்டகழை யேறி பொருப்பு.
[7]
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத் தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
[8]
ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல் நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல் வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
[9]
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப் பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே பூமயிலி தாதை பொருப்பு.
[10]
ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள் நாடிக் களிறு நயந்தெடுத்துக் கூடிக் குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர் குணமருட்டுங் கோளரவன் குன்று.
[11]
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் பையப்போ என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள் சென்றன்று வென்றான் சிலம்பு.
[12]
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று கூழை முதுவேடன் கொண்டுபோய் வேழ வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம் வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
[13]
ஏனம் உழுத புழுதி இன மணியைக் கானவர்தம் மக்கள் கனலென்னக் கூனல் இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல் மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
[14]
ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி யானை இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல் வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.
[15]
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில் இருகணையும் ஆனைமேல் எய்ய அருகணையும் ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே கோளரிக்கும் காண்பரியான் குன்று.
[16]
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று.
[17]
ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி மாடுபுக வான்கை மிகமடுத்து நீடருவி மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே கோச்சீயம் காண்பரியான் குன்று.
[18]
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர் உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு மறைக்கீறு கண்டான் மலை.
[19]
கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப வருங்குறவன் கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே மைக்கொணருங் கண்டன் மலை.
[20]
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க நனைய கலத்துரத்தில் ஏந்தி மனைகள் வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார் குரவரும்பு செஞ்சடையான் குன்று.
[21]
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச் சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு மடக்கிளிகள் கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால் வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.
[22]
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே செறுத்த கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த விடமிடற்றி னான்மருவும் வெற்பு.
[23]
கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் பொங்கும் உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
[24]
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென் றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
[25]
கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி அன்னைக் குடிவரலா றஞ்சியே பின்னரே ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத மான் தரித்த கையான் மலை.
[26]
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் துள்ளி இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம் மனக்கவலை தீர்ப்பான் மலை.
[27]
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக் கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லை அங்கண் பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும் கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
[28]
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி வல்லே இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப் பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.
[29]
கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் தண்கோ டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம் விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
[30]
காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு.
[31]
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் சிறுகுறவர் கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே மைந்நீட்டுங் கண்டன் மலை.
[32]
கூழை முதுமந்தி கோல்கொண்டுதேன்பாய ஏழை யிளமந்தி சென்றிருந்து வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு.
[33]
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் டொல்லை இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய் வருங்கைக் களைவான் மலை.
[34]
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் செவ்வை எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர் குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
[35]
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி நெடுநாகம் தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல் வண்டூன்றுந் தாரான் மலை.
[36]
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு வரவதனைக் காப்பான் மலை.
[37]
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
[38]
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின் வளமகளிர் பாகன் மலை.
[39]
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து வீரத் தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே வெற்பின் குமரன்முது தாதையார் குன்று.
[40]
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம் வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் தீயோங்கிக் கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கொன்றைத் தாரான் வரை.
[41]
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப் பிடிபட்ட மாக்களிறு போந்து கடம்முட்டி என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற் பொன்னேர் அனையான் நெபாருப்பு.
[42]
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப் புனைநீடு பொன்னிறத்த வண்டு மனைநீடி மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம் சென்னி அணிந்தான் சிலம்பு.
[43]
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத் தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே மாக்கலைகள் வைத்தான் மலை.
[44]
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள் இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே கோக்குரவை ஆடிகொழுங் குன்று.
[45]
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத் தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் தாமரையின் ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும் வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
[46]
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய் வள்ளவட்டப்பாழி மடலேறி வெள்ளகட்ட காராமை கண் படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச் சேராமைச் செற்றான் சிலம்பு.
[47]
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள் பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர் சீராட்ட நின்றான் சிலம்பு.
[48]
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின் கானமர்கற் பேரழுகு கண்குளிர மேனின் றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர் வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
[49]
தோகை மயிலினங்கள் சூழந்து மணிவரைமேல் ஒகை செறிஆயத் தோடாட நாகம் இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல் வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
[50]
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம் இறவி லியங்குவான் பார்த்துக் குறவர் இறைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
[51]
நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில் நாகம் விழுங்க நடுக்குற்று நாகந்தான் மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே ஓங்கிசெந் தீக்கையால் ஏந்தி சிலம்பு.
[52]
நாகங் களிறுநுங்க நல்லுழுவை தாமரையின் ஆகந் தழுவி அசைவெய்த மேகங் கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
[53]
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை.
[54]
பன்றிபருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி மணிகிடப்பத் தீயென்று கன்றிக் கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர் மருவரியான் மன்னும் மலை.
[55]
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண் டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும் வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
[56]
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப் படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் டிடரா இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர் குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
[57]
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் கருமந்தி முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும் திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
[58]
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம் இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று வளவெயில்தீ யீட்டான் மலை.
[59]
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
[60]
மரையதளும் ஆடும் மயிலிறகும் வேய்ந்த புரையிதணம் பூங்கொடியார்புக்கு நுரைசிறந்த இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
[61]
மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள் வருவனகள் கண்டு சிலையை இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப் புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
[62]
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர் முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று.
[63]
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி இருந்து முறைமுறையே நந்தி அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம் வளைந்தோடச் செற்றான் மலை.
[64]
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண் முந்திப் பறித்த முறியதனுள் சிந்திப்போய்த் தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை.
[65]
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் ஒள்ளார் எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
[66]
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல் எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
[67]
வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித் தானங் கிருந்துயரக் கைநாட்டும் ஈங்கோயே நம்மேல் வருந்துயரம் தீர்ப்பான் மலை.
[68]
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப வேயணைத்து மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைகலிக்கும் பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
[69]
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
[70]
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.011  
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பண் - (திருவலஞ்சுழி )
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன் பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற் படஅர வொடுங்க மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்திழி அருவி குணகடல் மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் உடுத்த மணிநீர் வலஞ்சுழி அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.
[1]
அடிப்போது தம் தலைவைத் தவ்வடிகள் உன்னிக் கடிப்போது கைக்கொண்டார் கண்டார் முடிப்போதா வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும் காணாத செம்பொற் கழல்.
[2]
கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத் தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர் அந் தாமரையின் நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம் அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.
[3]
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற் கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப் பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும் திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த் திருந்திருங் குழலியைக் கண்டு வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.
[4]
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத் தாதெலாம் தன்மேனி தைவருமால் தீதில் மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப் பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.
[5]
பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம் பெரு மான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான் மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன
[6]
முகிற்கணம் முழங்க முனிந்த வேழம் எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும் சாரல் தண்பொழில் அணைந்து சேரும் தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த தேனுகு தண்தழை தெய்வம் நாறும் சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த மணிநீர்க் குவளை அன்ன அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
[7]
பொருள்தக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும் அருள்தக்கீர் யாதுநும்ஊர் என்றேன் மருள்தக்க மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார் தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.
[8]
சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன் பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய
[9]
பாவை ஆடிய துறையும் பாவை மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித் திருவடி அடியேன் தீண்டிய திறனும் கொடியேன் உளங்கொண்ட சூழலுங் கள்ளக் கருங்கண் போன்ற காவியும் நெருங்கி அவளே போன்ற தன்றே தவளச் சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி வண்டினம் பாடுஞ் சோலைக் கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.
[10]
தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல் தேனேறு கொன்றைத் திறம்பேசேன் வானேறு மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என் கையார் வளைகவர்ந்த வாறு.
[11]
ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக் கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார் சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.
[12]
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண பொய்கை யூரன் புதுமணம் புணர்தர மூவோம் மூன்று பயன்பெற் றனமே நீ அவன் புனைதார் மாலை பொருந்தப் பாடி இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள வாசகம் வழாமற் பேச வன்மையில் வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை அவரேல் எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ விழையா இன்பம் பெற்றனர் யானேல் அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச் சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின் தீநீர் அன்ன வாய்நீர் சோரும் சிலம்புகுரற் சிறுபறை பூண்ட அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.
[13]
தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய் மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ இனமேறிப் பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான் கோடாலம் கண்டணைந்த கொம்பு.
[14]
கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று நம்பா என வணங் கப்பெறு வானை நகர்எரிய அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானையண் ணாமலைமேல் வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.
[15]
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருஎழு கூற்றிருக்கை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.012  
திருஎழு கூற்றிருக்கை
பண் - ( )
ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந் தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை மூவிலைச் சூலம் ஏந்தினை சுடருஞ் சென்னி மீமிசை இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை: ஒருகணை இருதோள் செவியுற வாங்கி மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை ஆற்ற முன்னெறி பயந்தனை செறிய இரண்டும் நீக்கி ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை அந்நெறி ஒன்று மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி நான்கென ஊழிதோற்றினை சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை நூன்முக முப்புரி மார்பில் இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய ஒருவநின் ஆதி காணா திருவர் மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை ஏழில் இன்னரம் பிசைத்தனை ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை ஆல நீழல் அன்றிருந் தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக் கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன் தாதை ஒருடல் திருவடி வாயினை தருமம் மூவகை உலகம் உணரக் கூறுவை நால்வகை இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை ஏழின் ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன் நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென் றேற்ற பூதம் மூன்றுடன் பாட இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண நட்டம் ஆடிய நம்ப அதனால் சிறியேன் சொன்ன அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே. பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல் மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே ஐயுறவொன் றின்றி அமர்ந்து.
[1]
Back to Top
நக்கீரதேவ நாயனார் பெருந்தேவ பாணி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.013  
பெருந்தேவ பாணி
பண் - ( )
சூல பாணியை சுடர்தரு வடிவனை நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை கீதம் பாடியை கிளர்பொறி அரவனை போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை சாதி வானவர் தம்பெரு மான்தனை வேத விச்சையை விடையுடை அண்ணலை ஓத வண்ணனை உலகத் தொருவனை நாத னாகிய நன்னெறிப் பொருளினை மாலை தானெரி மயானத் தாடியை வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை ஆயிர நூற்றுக் கறி வரியானை பேயுருவு தந்த பிறையணி சடையனை மாசறு சோதியை மலைமகள் கொழுநனை கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்றருள் சிவனை பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை பீடுடை யாற்றை பிராணி தலைவனை நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை ஈசனை இறைவனை ஈறில் பெருமையை நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை தாதணி மலரனை தருமனை பிரமனை காதணி குழையனை களிற்றின் உரியனை சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை வித்தக விதியனை தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை பிரமன் பெருந்தலை நிறைவ தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை வேதமும் நீயே வேள்வியும் நீயே நீதியும் நீயே நிமலன் நீயே புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதற்பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே. விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே ஆற்றவும்நீ செய்யும் அருள்.
[1]
Back to Top
நக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.014  
கோபப் பிரசாதம்
பண் - ( )
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும் அண்ட வாணனுக் காழிஅன் றருளியும் உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும் கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியம் கடிபடி பூங்கணைக் காம னாருடல் பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த மானுட னாகிய சண்டியை வானவன் ஆக்கியும் மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும் கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும் கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும் பருவரை சிலையாப் பாந்தள் நாணாத் திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும் கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும் கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும் தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும் நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும் நற்றா நந்தீச் சுவரற் கருளியும் அறிவினை ஓரா அரக்க னாருடல் நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும் திருவுரு வத்தொடு செங்கண் ஏறும் அரியன திண்திறல் அசுரனுக் கருளியும் பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும் தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும் செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும் பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும் கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும் நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும் சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும் மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும் தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும் சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும் கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும் ஆலின் கீழிருந் தறநெறி அருளியும் இன்னவை பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதங் கூறுங் காலைக் கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன் புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன் உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர் அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர் ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக் கிருமி நாவாற் கிளத்தும் தரமே அதாஅன்று ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும் மூவகைக் குணமும் நால்வகை வேதமும் ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும் எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும் ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும் பத்தின் வகையும் ஆகிய பரமனை இன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச் செம்பொனை மணியினைத் தேனினைப்பாலினைத் தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம் நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர் செந்தழற் பவளச் சேணுறு வரையனை முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக் கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக் கலந்து கசிந்துதன் கழலினை யவையே நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத் தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப் பாவ நாசனைப் படரொளி உருவனை வேயார் தோளி மெல்லியல் கூறனைத் தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச் சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக் கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத் தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை வாக்கும் மனமும் இறந்த மறையனைப் பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை இனைய தன்மையன் என்றறி வரியவன் தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர் மாமுயல் விட்டுக் காக்கைப் பின்போம் கலவர் போலவும் விளக்கங் கிருக்க மின்மினி கவரும் அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும் கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக் கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப் பிச்சரைப் போலஓர் ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று வட்டணை பேசுவர் மானுடம் போன்று பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன் தலைமீன் தலைஎண் பலமென்றால் அதனை அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின் மத்திர மாகுவர் மாநெறி கிடப்பவோர் சித்திரம் பேசுவர் தேவ ராகில் இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர் என்றறிய உலகின் முன்னே உரைப்ப தில்லை ஆகிலும் மாடு போலக் கூடிநின் றழைத்தும் மாக்கள் போல வேட்கையீ டுண்டும் இப்படி ஞானம் அப்படி அமைத்தும் இன்ன தன்மையன் என்றிரு நிலத்து முன்னே அறியா மூர்க்க மாக்களை இன்னேகொண் டேகாக் கூற்றம் தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.
[1]
Back to Top
நக்கீரதேவ நாயனார் கார் எட்டு
11 -ஆம் திருமுறை பதிகம் 11.015  
கார் எட்டு
பண் - ( )
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்குங் கார்.
[1]
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார்.
[2]
ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக் குழற்சடையும் கொல்லேறும் போல்வ இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம் கருண்டொன்று கூடுதலின் கார்.
[3]
இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் சுருள்கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே காம்பினங்கள் தோள்ஈயக் கார்.
[4]
கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான் றாடரவம் எல்லாம் அளையடைய நீடரவப் பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே கற்பகலம் காண்புற்ற கார்.
[5]
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும் ஆரும் இருள்கீண்டு மின்விலகி ஊரும் அரவம் செலஅஞ்சும் அஞ்சொலார் காண்பார் கரவிந்தம் என்பார்அக் கார்.
[6]
செழுந்தழல் வண்ணன் செஞ்சடைபோல் மின்னி அழுந்தி அலர்போல் உயர எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே காவிசேர் கண்ணாய்அக் கார்.
[7]
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார்.
[8]
Back to Top
நக்கீரதேவ நாயனார் போற்றித் திருக்கலி வெண்பா
11 -ஆம் திருமுறை பதிகம் 11.016  
போற்றித் திருக்கலி வெண்பா
பண் - ( )
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த
[1]
குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து
[2]
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி அன்றியும்
[3]
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள்
[4]
காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும்
[5]
பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் காண
[6]
வரத்திற் பெரிய வலிதொலையக் காலன் உரத்தில் உதைத்தவுதை போற்றி கரத்தான்மே
[7]
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் பொற்புடைய
[8]
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி தூமப்
[9]
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்
[10]
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தவடர் போற்றி நடுங்கத்
[11]
திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற
[12]
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப்
[13]
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் வீரம்
[14]
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து
[15]
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த
[16]
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி அத்தகைத்த
[17]
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக்
[18]
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து
[19]
வாலுகத்தால் மாவிலங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங்
[20]
கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண்
[21]
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி நிற்க
[22]
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச்
[23]
சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஃதன் றீந்த விறல்போற்றி அக்கணமே
[24]
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த
[25]
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்
[26]
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப்
[27]
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு வரமன் றளித்தவலி போற்றி புரமெரித்த
[28]
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று
[29]
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி விடைகாவல்
[30]
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் கோனவனைச்
[31]
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி மேனாள்
[32]
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் துதித்தங்
[33]
கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி கவைமுகத்த
[34]
பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு மெற்பா சறைப்போக மேல்விலகி நிற்பால
[35]
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண் வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி விம்மி
[36]
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி தொடுத்தமைத்த
[37]
நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ் வாள்மாலை ஆகும் வகையருளித் தோள்மாலை
[38]
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி
[39]
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசையா உடல்திரியா நின்று வசையினால்
[40]
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால்
[41]
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் தூயசீர்க்
[42]
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல்
[43]
காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோ
[44]
டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. [45]
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.017  
திருமுருகாற்றுப்படை
பண் - (ஆறுபடை வீடு )
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5 மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் உள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத் திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் 10 துருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் 15 பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20 செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25 துவர முடித்த துகள்அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30 வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35 வேங்கை நுண்தா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40 சூர்அர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45 சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட் 50 டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55 நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத் 60 தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய் இரவலன் நிலைசேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும் செவ்வநீ நயந்தனை ஆயின் பலவுடன் நன்னர் நெஞ்சத் தின்நசை வாய்ப்ப 65 இன்னே பெறுதிநீ முன்னிய வினையே திருப்பரங்குன்றம்செருப்புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70 மாடம்மலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75 அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன் றமர்ந் துறைதலும் உரியன் அதாஅன்று. திருச்சீரலைவாய்வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஒடையொடு துயல்வரப் 80 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண் டைவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85 மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90 மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் 95 மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100 கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105 செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை 110 அசைஇய தொருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை 115 கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடின் படுமணி இரட்ட ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் 120 பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ 125 விசும் பாறாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று திருஆவினன்குடிசீரை தைஇய உடுக்கையர் சீரொடு 130 வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசற விளங்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 135 செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவனர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 140 துனியில் காட்சி முனிவர் முன்புகப் புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 145 மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் 150 மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பலவரிக் கொழுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு 155 வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் 160 தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் 165 பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் பகலில் தோன்றும் இகலில் காட்சி 170 நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந்த தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட 175 உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன் 180 அதா அன்று திருஏரகம்இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் டாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புல உடீஇ உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190 தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந் தேரகத் துறைதலும் உரியன் அதாஅன்று குன்றுதோறாடல்பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் 195 அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் 200 குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் 205 முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 210 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் 215 கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி 220 மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று பழமுதிர்சோலைசிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 225 ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறி அயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் 230 சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 235 முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொ விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் 240 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 245 இமிழிசை அருவியோ டின்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் 250 ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 255 ஆண்டாண் டாயினும் ஆக காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 260 அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 265 வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே 270 வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக 275 நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெஎழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 280 சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு 285 புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் குறித்தது மொழியா அளவையில் குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் 290 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 295 மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன் றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய 300 பெறலரும் பரிசில் நல்கும்மதி பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந் தாரம் முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 305 தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 310 முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 315 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொ டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம் பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட் 320 டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின் றிழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. 323
[1]
குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை. 1 குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். 2 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை. 3 இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். 4 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. 5 அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும் வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன் றோதுவார் முன். 6 முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். 7 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. 8 பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். 9 நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான்நினைத்த எல்லாம் தரும். 10
[2]
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.018  
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பண் - ( )
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே பிறந்தது தேன்அழித் தூனுண் கானவர் குலத்தே திரிவது பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது செங்கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய அந்தமில் படைக்கலம் அவையே உறைவது குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக் கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார் இரவும் பகலும் இகழா முயற்றியொடும் அடைத்த தேனும் வல்நாய் விட்டும் சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும் பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் தொல்லுயிர் கொல்லுந் தொழிலே வடிவே மறப்புலி கடித்த வன்திரள் முன்கை திறற்படை கிழித்த திண்வரை அகலம் எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி அயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண் கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத் தடுபடை பிரியாக் கொடுவிற லதுவே மனமே மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள் அகப்படு துயருக் ககனமர்ந் ததுவே இதுவக் கானத் தலைவன் தன்மை கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே அதாஅன்று கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற் சுட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத் தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து எய்து துணித்திடும் துணித்த விடக்கினை விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு அண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத் தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால் மஞ்சன மாக முகந்து மலரெனக் குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும் வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில் திருக்கா ளத்தி எய்தி சிவற்கு வழிபடக் கடவ மறையோன் முன்னம் துகிலிடைச் சுற்றியில் தூநீர் ஆட்டி நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும் பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித் தருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித் திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி மந்திரம் எண்ணி வலம்இடம் வந்து விடைகொண் டேகின பின்தொழில் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா அன்பொடு கானகம் அடையும் அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி ஆத ரிக்கும் அந்தணன் வந்து சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும் இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று கரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப் பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று வந்தவன் செய்து போயின வண்ணம் சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு மற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ உற்றது கேட்டருள் உன்தனக் கழகா நாடொறும் நான்செய் பூசனை தன்னை ஈங்கொரு வேடுவன் நாயொடும் புகுந்து மிதித் துழக்கித் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை நின்திருக் கோயிலில் இட்டுப் போமது என்றும் உன்தனக் கினிதே எனையுருக் காணில் கொன்றிடும் யாவ ராலும் விலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன் திருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக் கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச் சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன் பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக் கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக ஒற்றை மால்விடை உமையொரு மருங்கில் திருவுருக் காட்டி அருளிப் புரிவொடு பூசனை செய்யும் குனிசிலை வேடன் குணமவை ஆவன உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர் அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே அவன் செருப்படி யாவன விருப்புறு துவலே எழிலவன் வாயது தூயபொற் குடமே அதனில் தங்குநீர் கங்கையின் புனலே புனற்கிடு மாமணி அவன் நிறைப் பல்லே அதற்கிடு தூமலர் அவனது நாவே உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப் புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே அவன்தலை தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த அங்குலி கற்பகத் தலரே அவனுகந் திட்ட இறைச்சி எனக்குநன் மாதவர் இட்ட நெய்பால் அவியே இதுவெனக் குனக்கவன் கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று இறைவன் எழுந் தருளினன் அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து மனமிகக் கூசி வைகறைக் குளித்துத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும் வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக் கடும்பகல் வேட்டையிற் காதலித் தடிந்த உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின் மூன்று கண்ணாய் ஆங்கொரு கண்ணில் உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப் பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் கையில் ஊனொடு கணைசிலை சிந்த நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச் சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர் அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு இன்மை கண்டு நன்மையில் தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும் நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென் அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என் றன்பொடுங் கனற்றி இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன் அப்பலுங் குருதி நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும் நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன் றின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித் தருளினன் அருளலும் விண்மிசை வானவர் மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம் துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே. தனி வெண்பா தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப் பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும் திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக் கண்ணப்ப னாய்நின்றான் காண்.
[1]
Back to Top
கல்லாடதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.019  
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பண் - ( )
பரிவின் தன்மை உருவுகொண் டனையவன் போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எஃகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன் தோல்நெடும் பையில் குறுமயிர் திணித்து வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன் உழுவைக் கூனுகிர்க் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன் நீலப் பீலி நெற்றி சூழ்ந்த கானக் குஞ்சிக் கவடி புல்லினன் முடுகு நாறு குடிலை யாக்கையன் வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் றன்இனத் தலைவன் ஒங்கிய வில்லும் அம்பும் நல்லன ஏந்தி ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன்தலைச் செருக்கிய தண்பளித் தாமும் வாய்க்கல சத்து மஞ்சன நீரும் கொண்டு கானப் பேருறை கண்ணுதல் முடியிற் பூசை அடியால் நீக்கி நீங்காக் குணத்துக் கோசரிக் கன்றவன் நேசங் காட்ட முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம் தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழு தெழுந் தரற்றிப் புன்மருந் தாற்றப் போகா தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய் நல்லை நல்லை எனப்பெறும் திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.
[1]
Back to Top
கபிலதேவ நாயனார் மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.020  
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
பண் - ( )
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
[1]
கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில் எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
[2]
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம் இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில் தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
[3]
வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டையெல் லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான் வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.
[4]
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
[5]
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க் கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.
[6]
யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார் மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என் உள்ளக் கருத்தின் உளன்.
[7]
உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத் திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.
[8]
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பணங்கொண்ட பாந்தட் சடைமேல் மணங்கொண்ட தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம்.
[9]
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல் நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்த மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர் ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.
[10]
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கை முக்கட் கடாயானை முன்
[11]
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத் தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள் தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.
[12]
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் திரள்நெடுங்கோட் டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர் பண்டத்தான் தாள்பணியாய் பண்டு.
[13]
பண்டம்தம் ஆதரத் தான்என் றினியன வேபலவும் கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூர்உணர்வில் கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றைஒற்றை வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.
[14]
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்து ஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள் காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை வேந்தா உடைத்தமரர் விண்.
[15]
விண்ணுதல் நுங்கிய விண்ணும்மண் ணும்செய் வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமாக் கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண் டார்கரு மாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.
[16]
பெருங்காதல் என்னோடு பென்னோடை நெற்றி மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர வருவான்தன் நாமம் வரும்.
[17]
வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள் அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும் ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே.
[18]
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்.
[19]
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.
[20]
Back to Top
கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.021  
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
பண் - ( )
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான் அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின் தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான் வீங்கிருள்சேர் நீல மிடறு.
[1]
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள் மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால் அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக் கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.
[2]
கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில் திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி எங்கள் இமையோர் இறைக்கு.
[3]
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப் பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும் குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
[4]
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற் சடையானைச் சாராதார் தாம்.
[5]
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத் தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத் தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர் தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.
[6]
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம் பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல் பெரியர்ஆ வாரோ பிறர்.
[7]
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின் சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன் றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய் மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.
[8]
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில் அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர் எம்மானுக் கெய்தா திடம்.
[9]
இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும் விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.
[10]
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும் நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல் பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா வாங்கொன்றை இன்றே மதித்து.
[11]
மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம் பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ் அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே
[12]
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப் பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து போகப் பெறுமோ புறம்.
[13]
புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும் நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ் சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால் அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.
[14]
அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும் நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை ஒற்றியூர் ஆக்கிற் றுரை.
[15]
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால் நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித் திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள் வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.
[16]
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
[17]
நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம் குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின் கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக் குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.
[18]
கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும் புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
[19]
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம் அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச் செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.
[20]
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப் புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன் தெண்ணீர் சடைக்கரந்த தே.
[21]
தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப் பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.
[22]
நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில் கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள் தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல் எம்பெருமான் என்னா இயல்பு.
[23]
இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப் புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.
[24]
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர் ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே ஆரூரன் செல்லுமா றங்கு.
[25]
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள் தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின் கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின் செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.
[26]
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம் கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக் கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த கொடுங்குன்ற பேயின் கொடிறு.
[27]
கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென் றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர் படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம் மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.
[28]
விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல் தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.
[29]
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம் அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.
[30]
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால் எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர் வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக் குடதிருவீ ரட்டானங் கூறு.
[31]
கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத் தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.
[32]
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன் படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக் கொடுமுடியாய் என்றன் கொடி.
[33]
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம் பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின் இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால் கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.
[34]
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ் சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார் கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை பேசுவரே மற்றொருவர் பேச்சு.
[35]
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும் கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.
[36]
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன் துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத் திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான் திருச்சத்தி முற்றாத்தான் தேசு.
[37]
Back to Top
கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.022  
சிவபெருமான் திருவந்தாதி
பண் - ( )
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் தொன்றும் மனிதர் உயிரையுண் டொன்றும் மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த மதியான் இடப்பக்கம் மால்.
[1]
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை மாலை ஒருபால் முடியானை மாலை ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற் கொளியானை ஏத்தி உளம்.
[2]
உளம்மால்கொண் டோடி ஒழியாது யாமும் உளமாகில் ஏத்தாவா றுண்டோ உளம்மாசற் றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும் அங்கமல வண்ணன் அடி.
[3]
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை அடியால் அருவாகச் செற்றான் அடியார்தம் அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி அந்தரத்தார் சூடும் அலர்.
[4]
அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற் கலராகி யானும் அணிவன் அலராகி ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர் ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
[5]
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே ஊரும் விடையொன் றுடைதோலே ஊரும் படநாகம் மட்டார் பணமாலை ஈதோ படநாகம் அட்டார் பரிசு.
[6]
பரியானை ஊராது பைங்கண் ஏறூரும் பரியானைப் பாவிக்க லாகாப் பரியானைக் கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
[7]
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும் கண்டங் கரியன் கரிகாடன் கண்டங்கள் பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம் பாடியாக் கொண்ட பதி.
[8]
பதியார் பழிதீரா பைங்கொன்றை தாவென் பதியான பலநாள் இரக்கப் பதியாய அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல் அம்மானார் கையார் அறம்
[9]
அறமான நோக்கா தநங்கனையும் செற்றங் கறமாநஞ் சுண்ட அமுதன் அறல்மானும் ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே ஓதியான் தோற்றேன் ஒளி.
[10]
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற் கொளியான் உலகெல்லாம் ஏத்த ஒளியாய கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே கள்ளேற்றான் கொன்றை கடிது.
[11]
கடியரவர் அக்கர் இனிதாடு கோயில் கடியரவர் கையதுமோர் சூலம் கடியரவ ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
[12]
யாமானம் நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட யாமானங் கொண்டங் கலர்தந்தார் யாமாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.
[13]
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து யானென்றங் கையறிவும் குன்றுவித்து யானென்றங் கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை ஆர்த்தானேல் உய்வ தரிது.
[14]
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான் அரியாரும் பாகத் தமுதன் அரியாரும் வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் வேங்கடத்து நோயால் வியந்து.
[15]
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய் வியந்தாசை யுள்மெலிய வேண்டா வியந்தாய கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக் கண்ணுதலாம் நம்பாற் கடன்.
[16]
கடனாகம் ஊராத காரணமும் கங்கை கடனாக நீகவர்ந்த வாறும் கடனாகப் பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி பாரிடந்தான் மேயாய் பணி.
[17]
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம் பணியாத பத்தர்க்குஞ் சேயன் பணியாய ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன் ஆகத்தான் செய்யும் அரன்.
[18]
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும் அரன்காயும் அந்தியுமற் றந்தோ அரங்காய வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
[19]
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்பூந் தாரார் விமலன் வெறியார்தம் அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ நெஞ்சே அயன்.
[20]
அயமால்ஊண் ஆடரவம் நாண ததள தாடை அயமாவ தானேறார் ஆரூர் அயமாய என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி என்னக்கன் றாழும் இவள்.
[21]
ஆழும் இவளையுங் கையலஆற் றேனென் றாழும் இவளை அயராதே ஆழும் சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய் சலமுடியா தின்றருள்வாய் தார்.
[22]
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் தாராதே சங்கஞ் சரிவித்தான் தாராவல் லானைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல் லானையும் வானோர்க் கரசு.
[23]
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான் அரசுமாம் அங்கொன்றும் மாலுக் கரசுமான் ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன் ஊர்தி எரித்தான் உறா.
[24]
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத் துறாவேதீ உற்றனகள் எல்லாம் உறாவேபோய்க் காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள் காவாலி தாம்நின் கலை.
[25]
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின் கலைசேர் நுதலிர்நாண் காமின் கலையாய பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன் பால்மதியன் போந்தான் பலிக்கு.
[26]
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப் பலிக்கு மனைபுகுந்து பாவாய் பலிக்குநீ ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல் ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
[27]
ஆயம் அழிய அலர்கொறைத் தார்வேண்டி ஆயம் அழிய அயர்வேன்மேல் ஆயன்வாய்த் தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும் தீங்குழலும் என்னையே தேர்ந்து.
[28]
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால்வெந்தெழுபேய்த் தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ தேராதே கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே கூடற்கா வாலிதரக் கூர்.
[29]
கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக் கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே கூரார் பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
[30]
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது பாயிற் புகுதப் பணை முலைமேல் பாயிலன்நற் கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே கொன்றாய் இதுவோ குணம்
[31]
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் குணக்கோடித் தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரிரவில் வாழும் திறம்.
[32]
திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் திறங்காட்டின் ஊரரவம் ஆர்த்தானோ டென்னை யுடன்கூட்டின் ஊரரவஞ் சால உடைத்து.
[33]
உடைஓடு காடாடி ஊர்ஐயம் உண்ணி உடைஆடை தோல்பொடிசந் தென்னை உடையானை உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே உன்மத் தகமுடிமேல் உய்.
[34]
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும் உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை உய்யாம் இறையானே ஈசனே எம்மானே நின்னை இறையானும் காண்கிடாய் இன்று.
[35]
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும் இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே இன்றியாம் காட்டாநஞ் சேற்றான் காமரு வெண்காட்டான் காட்டானஞ் சேற்றான் கலந்து.
[36]
கலம்பெரியார்க் காஞ்சிரம்காய் வின்மேரு என்னும், கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை கலம்பிரியா மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ மாக்கடனஞ் சேரும் வகை.
[37]
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம் கையாறு செஞ்சடையான் காப்பென்னும் கையாறு மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய் மற்றிரண்ட தோளான் மனை.
[38]
மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனைஆ சறச்செற்ற வானோன் மனைஆய என்பாவாய் என்றேனுக் யானல்லேன் நீதிருவே என்பாவாய் என்றான் இறை.
[39]
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறைஆகம் இன்றருளாய் என்னும் இறையாய் மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
[40]
மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல் மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து மாதரங்கத் தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரானை யூரானைத் தேர்.
[41]
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும் அருகில் சிராமலையெங் கோமான் விரியுலகில் செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின் செல்லுமெழில் நெஞ்சே தெளி.
[42]
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் தெளியாய பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற் பூவாய வாசம் புனைந்து.
[43]
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான் புனைகடுக்கை மாலைப் புராணன் புனைகடத்து நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம் நட்டங்க மாட்டினேன் நக்கு.
[44]
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர் நக்கரை வக்கரையோம் நாமென்ன நக்குரையோம் வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய் வண்டாழங் கொண்டாள் மதி.
[45]
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும் மதியாதே வைதுரைப்பர் என்னும் மதியாதே மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல் மாதெய்வங் கொண்ட வனப்பு.
[46]
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும் வனப்பார் வளர்சடையான் கொள்ள வனப்பால் கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட் கடற்றிரையும் ஈருங் கனன்று.
[47]
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் கனன்றார் களிற்றுரிமால் காட்டக் கனன்றார் உடம்பட்ட நாட்டத்தன் என்னையுந்தன் ஆளா உடம்பட்ட நாட்டன் உரு.
[48]
உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில் உருவியலுஞ் சூலம் உடையன் உருவியலும் மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய் மாலேற்றாற் கீதோ வடிவு
[49]
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி வடிவார் வடம்புனைந்தும் பொல்லா வடிவார்வேல் முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார் முற்கூட மாட்டா முலை.
[50]
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும் முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் முலைநலஞ்சேர் மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர மாதேவா சோரல் வளை.
[51]
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் வளையாழி நன்னெஞ்சே காணில் வளையாழி வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த வன்னஞ்சக் கண்டன் வரில்.
[52]
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் வரிநீர் வலம்புரிகள் உந்தி வரிநீர் இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான் இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
[53]
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந் தக்காரந் தீர்ந்தேன் அடியேனுக் கக்காரம் பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப் பண்டரங்கன் எங்கள் பவன்.
[54]
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப் பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் பவனஞ்சேர் காலங்கள் ஊழி அவனே கரிகாட்டில் காலங்கை ஏந்தினான் காண்.
[55]
காணங்கை இன்மை கருதிக் கவலாதே காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே காணங்கை பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி பாவனையாய் நின்ற பதம்.
[56]
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு பதங்கன் எயிறு பறித்தான் பதங்கையால் அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந் தஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.
[57]
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன் ஆக்கூர் அலர்தான் அழகிதா ஆக்கூர் மறையோம்பு மாடத்து மாமறையோன் நான்கு மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
[58]
வந்தியான் சீறினும் வாழி மடநெஞ்சே வந்தியா உள்ளத்து வைத்திராய் வந்தியாய் நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை நம்பரனை நாள்தோறும் நட்டு.
[59]
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால் நட்டமா நன்னீர்மை வாடினேன் நட்டமா டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை ஈயானேல் உய்வ திலம்.
[60]
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே இலமலரே ஆயினும் ஆக இலமலரும் ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன் ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.
[61]
ஆளானம் சேர்களிலும் தேரும் அடல்மாவும் ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே ஆளான்போய் நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம் நாடகங்கள் ஆடி நயந்து.
[62]
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை நயந்தநாள் நன்னீர்மை வாட நயந்தநாள் அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள் அம்பகலன் பாயும் அலர்ந்து.
[63]
அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை அலங்கார வண்ணற் கழகார் அலங்காரம் மெய்காட்டும் வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான் மெய்காட்டும் வீடாம் விரைந்து.
[64]
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா விரையார் பொழிலுறந்தை மேயான் விரையாநீ றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி என்பணிந்தான் ஈசன் எனக்கு.
[65]
எனக்குவளை நில்லா எழிலிழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான் இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக் கண்டத்தால் நெஞ்சேகாக் கை.
[66]
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்குரக்குக் காக்கைவளை ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன் ஆடானை யான தமைவு.
[67]
அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங் கமையாநோய் செய்தான் அணங்கே எமையாளும் சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன் சாமத்தன் இந்நோய்செய் தான்.
[68]
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத் தானக் களிற்றுரியன் தண்பழனன் தானத் தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும் அரையன் உடையான் அருள்.
[69]
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான் அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால் ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை ஓராழி நெஞ்சே உவ.
[70]
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி உவவா மனமகிழும் வேட்கை உவவா றெழுமதிபோல் வாள்முகத் தீசனார்க் கென்னே எழுமதிபோல் ஈசன் இடம்.
[71]
இடமால் வலமாலை வண்ணமே தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி இடமாய மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான் மூவா மதியான் முனி.
[72]
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னுமர் முனிவன்மால் செய்துமுன் நிற்கும் முனிவன்மால் போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள் போற்றாநாள் இன்று புலர்ந்து.
[73]
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் புலர்ந்தாய மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம் மண்டளியன் பின்போம் மனம்.
[74]
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான் மனமாய உள்ளார வாரான் மனமாயப் பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப் பொன்மாலை சேர்சடையான் போந்து.
[75]
போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை போந்தார் ஒழியார் புரமெரித்தார் போந்தார் இலங்கோல வாள்முகத் தீசனார்க் கெல்லே இலங்கோலந் தோற்ப தினி.
[76]
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார் இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் இனியானைத் தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய தாளங்கை யால்தொழுவார் தாம்.
[77]
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார் தாமரைசேர் பாம்பர் சாடமகுடர் தாமரைசேர் பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார் பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
[78]
பார்கால்வான் நீர்தீப்ப பகலோன் பனிமதியன் பார்கோல மேனிப் பரனடிக்கே பார்கோலக் கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே கோகரணத் தானாய கோ.
[79]
கோப்பாடி ஓடாதே நெஞ்சே மொழி கூத்தன் கோப்பாடிக் கோகரணங் குற்றம் கோப்பாடிப் பின்னைக்காய் நின்றாற் கிடம்கொடுக்கும் பேரருளான் பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
[80]
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண் பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ் சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும் உண்டாம்நா ளல்ல உயிர்.
[81]
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத் துயிராய ஒண்மலர்த்தால் ஊடே உயிரான் பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப் பகர்மனமே ஆசைக்கட் பட்டு.
[82]
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி பட்டார் எலும்பணியும் பாசுபதன் பட்டார்ந்த கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே கோவணத்து நம்பனையே கூறு.
[83]
கூற்றம் பொருளும்போற் காட்டியெற் கோல்வளையைக் கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் கூற்றின் செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே செருக்கழியா முன்னமே செய்.
[84]
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ் செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன் நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே நாட்டூணாய் நின்றானை நாம்.
[85]
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன் நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே நாவாயால் துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள் துய்க்கப் படுவதாஞ் சூது.
[86]
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே சூதன் சொலற்கரிய சோதியான் சூதின் கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக் கொழுந்தே இழந்தேன் குருகு.
[87]
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக் குருகிளையார் கோடு கொடாமே குருகிளரும் போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும் போதாநின் பொன்முடிக்கட் போது.
[88]
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே போதங்க நீர்கரந்த புண்ணியற்குப் போதரங்கக் கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும் கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
[89]
கற்றானஞ் சாடுகா வாலி களந்தைக்கோன் கற்றானைக் கல்லாத நாளெல்லாம் கற்றான் அமரர்க் கமரர் அரக்கடிமை பூண்டார் அமரர்க் கமரரா வார்.
[90]
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும் ஆவார்போற் காட்டி அழிகின்றார் ஆவா பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப் பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
[91]
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோடாட் டெல்லி பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி பகனாட்டந் தாங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான் தம்முடைய தாங்கால் தொழுதல் தலை.
[92]
தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும் தலையாலங் காடர்தாம் என்னும் தலையாய பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர் பாகீ ரதிவளரும் பண்பு.
[93]
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான் பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் பண்பால் திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான் திருமாலு மங்கைச் சிவன். [94]
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும் சிவன்மேய செங்குன்றூர் என்னும் சிவன்மாட்டங் காலிங் கனம்நினையும் ஆயிழைஈர் அங்கொன்றை யாலிங் கனம்நினையு மாறு.
[95]
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங் காறார் சடையீர்க் கமையாதே ஆறாத ஆனினர்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.
[96]
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார் ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் ஆட்டுமோர் போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று போரேற்றான் போந்தான் புறம்.
[97]
புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி புறந்தாழ்பொன் மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்டுடர்போல் மேனியான் மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
[98]
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல் மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் வெய்ய துணையகலான் நோக்கலான் போற்றிகலா நெஞ்சே துணையிகலா கூறுவான் நூறு.
[99]
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து நூறா நொடிவதனின் மிக்கதே நூறா உடையான் பரித்தவெரி உத்தமனை வெள்ளே றுடையானைப் பாடலால் ஒன்று.
[100]
Back to Top
பரணதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.023  
சிவபெருமான் திருவந்தாதி
பண் - ( )
ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவும் பூணும் பிரான்.
[1]
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப் பிரானிடபம் பேரொலிநா ணாகம் பிரானிடபம் பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து பேணும் உமையிடவம் பெற்று.
[2]
பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே பெற்றும் பிறவி பிறந்தொழிமின் பெற்றும் குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக் குழையணிந்த கோளரவ நீ.
[3]
நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே நீயேயா ளாவாயும் நீள்வாளின் நீயேயேய் ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா ஏறூர் புனற்சடையா என்று.
[4]
என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம் என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் என்றும் இப்பாடல் கிடைக்கவில்லை. புகலூரா புண்ணியனே என்.
[5]
என்னே இவளுற்ற மால்என்கொல் இன்கொன்றை என்னே இவளொற்றி யூரென்னும் என்னே தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும் தவளப் பொடியானைச் சார்ந்து.
[6]
சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் சார்ந்துரைத்த ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும் ஆதிஏன் றென்பால் அருள்.
[7]
அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய் அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப் பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப் பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.
[8]
பேச்சுப் பெருக்குவதென் பெண் ஆண் அலியென்று பேச்சுக் கடந்த பெருவெளியைப் பேச்சுக் குரையானை ஊனுக்கு உயிரானை ஒன்றற் குரியானை நன்நெஞ்சே உற்று.
[9]
உற்றுரையாய் நன்நெஞ்சே ஓதக் கடல்வண்ணன் உற்றுரையா வண்ணம்ஒன் றானானை உற்றுரையா ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும் ஆனையுரித் தானை அடைந்து.
[10]
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித் தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் கடைந்துன்பால் அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று அவ்வமுத மாக்கினாய் காண்.
[11]
காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக் காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் காணா உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி உடைதலைகொண் டூரூர் திரி.
[12]
திரியும் புரம்எரித்த சேவகனார் செவ்வே திரியும் புரம்எரியச் செய்தார் திரியும் அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி அரிஆன் றிருக்கயிலை யாம்.
[13]
(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை) ஆம்பரிசே செய்தங் கழியாக்கை ஆம்பரிசே ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை ஏத்தித் திரிந்தானை ஏத்து.
[14]
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல் ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் ஏத்துற்றுப் பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான் பாசுபதம் இன்றளியென் பால்.
[15]
பாலார் புனல்பாய் சடையானுக் கன்பாகிப் பாலார் புனல்பாய் சடையானாள் பாலாடி ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ ஆடுவான் என்றென்றே ஆங்கு.
[16]
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை ஆங்குரைத்த அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற அம்பரத்தும் அண்டத்தும் ஆம்
[17]
மாயனைஒர் பாகம் அமர்ந்தானை வானவரும் மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை மாய உருவானை மாலை ஒளியானை வானின் உருவானை ஏத்தி உணர்.
[18]
உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம் உணரா வளைகழல ஒட்டி உணரா அளைந்தான மேனி அணியாரூ ரேசென் றளைந்தானை ஆமாறு கண்டு.
[19]
கண்டிறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக் கண்டிறந்து காமன் பொடியாகக் கண்டிறந்து கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான் கானின்உகந் தாடுங் கருத்து.
[20]
கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன் கருத்துடைய கங்காள வேடன் கருத்துடைய ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர் ஆனேற்றான் ஏற்றான் எரி.
[21]
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி எரியாடி யேகம்ப மாகும் எரியாடி ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப ஈமத் திடுங்காடு தான்.
[22]
தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில் தானயன் மாலாய தன்மையான் தான்அக் கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக் கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
[23]
சாராவார் தாமுளரேல் சங்கரன் தன்மேனிமேல் சாராவார் கங்கை உமைநங்கை சார்வாம் அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி அரவமது செஞ்சடையின் மேல்.
[24]
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம் மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் மேலாய மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும் அங்கை உமைவந் தடுத்து.
[25]
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள் அடுத்த திருநட்டம் அஃதே அடுத்ததிரு ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும் ஆனைக்கா வான்தன் அமைவு.
[26]
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றுஆங் கமைவும் பரமான ஆதி அமையும் திருவால வாய்சென்று சேராது மாக்கள் திருவால வாய்சென்று சேர்.
[27]
சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் சென்றுதன் கண்இடந் தன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான் கண்இடந் தப்பாமைப் பார்த்து.
[28]
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே பார்த்திட் டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட் டுடையானஞ் சோதாதார் ஊண்.
[29]
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின் ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் ஊணென்றும் விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர் விட்டானே புன்சடைமேல் வேறு
[30]
வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம் வேறுரைத்த மேனி விரிசடையாய் வேறுரைத்த பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும் பாதத்தாய் என்னும் மலர்.
[31]
மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத மலர்அணைந்து மால்நயன மாகும் மலர்அணைந்து மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால் வன்சக்கர் அம்பரனே வாய்த்து.
[32]
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால் வாய்த்த அடிமுடி யுங்காணார் வாய்த்த சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ சலந்தரனாய் நின்றவா தாம்.
[33]
தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில் தாம்என்னை வேறாத் தனித்திருந்து தாமென் கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ கழிப்பாலை சேருங் கடன்.
[34]
கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல் கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம் மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய் மாளவிரித் தாடுவான் வந்து.
[35]
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார் வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் வந்தார் சரிதருவார் பைங்கொன்றைத் தாராரைக் கண்டு சரிதருவார் பைங்கொன்றத் தார்.
[36]
தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன்அம் தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் தாராய நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே வாளுங் கொடுத்தான் மதித்து.
[37]
மதியாருஞ் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான் மதியாரும் மாலுடைய பாகன் மதியாரும் அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி அண்ணா மலைசேர்வ ரால்.
[38]
ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம் ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ ஆலந் துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத் துறையுடையான் சோராத சொல்லு.
[39]
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண் சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் சொல்லாய வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட வீரட்டத் தானை விரை.
[40]
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும் நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார் நஞ்சுண்ட வாதி நலம்.
[41]
நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல் நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய் தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந் தார்த்தார்க்கும் அண்ணா மலை.
[42]
மலையார் கலையோட வார்ஓடக் கொங்கை மலையார் கலைபோய்மால் ஆனாள் மலையார் கலையுடையான் வானின் மதியுடையான் காவாத் தலையுடையான் என்றுதொழு தாள்.
[43]
தாளார் கமல மலரோடு தண்மலரும் தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து தாளார் சிராமலையாய் சேமத் துணையேஎன் றேத்தும் சிராமலையார் சேமத் துளார்.
[44]
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம் பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய் பூவணத்தாய் என்னின் புகல்.
[45]
புகலூர் உடையாய் பொறியரவும் பூணி புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே புகலூராய் வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடா என்பேனோ நான்.
[46]
நானுடைய மாடே என்ஞானச் சுடர்விளக்கே நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய காடுடையாய் காலங்கள் ஆனார் கனலாடும் காடுடையாய் காலமா னாய்
[47]
ஆயன் றமரர் அழியா வகைசெய்தான் ஆயன் றமரர் அழியாமை ஆயன் திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி திருத்தினான் சேதுக் கரை.
[48]
கரையேனும் மாதர் கருவான சேரும் கரையேனும் ஆது கரையாம் கரையேனும் கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல் கோளிலியெம் மாதி குறி.
[49]
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக் குறியாகி நின்ற குணமே குறியாகும் ஆலங்கா டெய்தா அடைவேன் மேல் ஆடவரம் ஆலங்கா டெய்தா அடை.
[50]
அடையும் படைமழுவும் சூலமும் அங்கி அடையும் பிறப்பறுப்ப தானால் அடைய மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார் மறைக்காடு சேர்மக்கள் தாம்.
[51]
தாமேய ஆறு சமய முதற்பரமும் தாமேய ஆறு தழைக்கின்றார் தாமேல் தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட தழலுருவர் சங்காரர் என்பார்.
[52]
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர் பார்மேவு கின்ற படுதலையர் பார்மேல் வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார் வலஞ்சுழியைச் சேரவரு வார்.
[53]
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா வாரணிந்த கொன்றை மலர்சூடி வாரணிந்த செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய் செஞ்சடையாய் செல்ல நினை.
[54]
நினைமால் கொண்டோடி நெறியான தேடி நினைமாலே நெஞ்சம் நினைய நினைமால்கொண் டூர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன் டூர்தேடி என்றுரைப்பான் ஊர்.
[55]
ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும் ஊர்வதுவும் மேல்லுரகம் ஊடுவர்கொல் ஊர்வதுவும் ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க் கேகம்ப மாய்நின்ற ஏறு.
[56]
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான் ஏறேறி யூரும் எரியாடி ஏறேய ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே ஆதிவிடங் காஉமைதன் மாட்டு.
[57]
மாட்டும் பொருளை உருவு வருகாலம் வாட்டும் பொருளை மறையானை மாட்டும் உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம் உருவானைச் சோதி உரை.
[58]
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனில் உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் உரையாய அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற அம்பொனே சோதியே ஆய்ந்து.
[59]
ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும்என்மேல் ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன் பாலணையச் செய்த பரமா பரமேட்டி பாலணையச் செய்த பரம்.
[60]
பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட பரமாய பைங்கண் சிரமே பரமாய ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய் ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.
[61]
அன்பே உடைய அரனே அணையாத அன்பே உடைய அனலாடி அன்பே கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே கழுமலத்து ளாடுங் கரி.
[62]
கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே கரியார்தாஞ் சேருங் கவாலி கரியாகி நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம் நின்ற கழிப்பாலை சேர்.
[63]
சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல் சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் சேரும் மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான் மலையான் மகளை மகிழ்ந்து.
[64]
மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர் மகிழ்ந்தம் பரமாகி நின்றார் மகிழ்ந்தங்கம் ஒன்றாகி நின்றபங்கர் ஒற்றியூர் ஒன்றாகி நின்ற உமை.
[65]
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும் உமைகங்கை என்றிருவர் காணார் உமைகங்கை கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று கார்மிடற்றம் மேனிக் கினி.
[66]
இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம் இனியவா ஆகாமை யற்றும் இனியவா றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை ஆக்கை பலசெய்த அன்று.
[67]
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி அன்றவுணர் வீட அருள்செய் தான் அன்றவுணர் சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச் சேராமல் நின்ற சிவம்.
[68]
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும் சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் சிவனந்தம் சேரும் உருவுடையீர் செங்காட் டங்குடிமேல் சேரும் உருவுடையீர் செல்.
[69]
செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின் செல்லும் அளவும் சிவன்உம்மைச் செல்லும் திருமீச்சூர்க் கேறவே செங்கண்ஏ றூரும் திருமீச்சூர் ஈசன் திறம்.
[70]
திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும் திறமென்னும் சிந்தைக்கும் ஆமே திறமென்னும் சித்தத்தீர் செல்வத் திருகடுவூர் சேர்கின்ற சித்தத்தீரே செல்லும் நீர்.
[71]
நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே நெடுவானில் நின்றீரும் நீரேய் நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர் நெருப்பாய தோற்றம் நிலைத்து.
[72]
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர் நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக் கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர் கானப்பே ரீர்கங்கை யீர்.
[73]
ஈரம் உடைய இளமதியம் சூடினீர் ஈரம் உடைய சடையினீர் ஈர வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம் வருங்காலம் ஆயினீர் வாழ்வு.
[74]
வாழ்வார் மலரணைவார் வந்த அருநாகம் வாழ்வார் மலரணைவார் வண்கங்கை வாழ்வாய தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார் தீயாட வானாளு மாறு.
[75]
மாறாத ஆனையின் தோல் போர்த்து வளர்சடைமேல் மாறாத நீருடைய மாகாளர் மாறா இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே இடுங்கையர் சேர்வாக ஈ.
[76]
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே இடுகாட்டின் ஈயும் படநாகம் பூணும் பரலோகீர் என்னீர் படநாகம் பூணும் படி.
[77]
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப் பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய் பாருடையாய் யானுன் பரம்.
[78]
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன் பரமாய ஆதிப் பரனே பரமாய நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும் நீதியே செய்தாய் நினை.
[79]
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம் நினையடைந்தேன் சித்த நிமலா நினையடைந்தேன் கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும் கண்டத்தாய் காவாலி கா.
[80]
காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம் காவாய்ப் பொலிந்த கடுவெளியே காவாய ஏறுடையாய் என்னை இடைமருதிலேஎன்றும் ஏறுடையாய் நீயே கரி.
[81]
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண கரியாருங் கூற்றங் கனியே கரியாரும் காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும் காடுடையாய் காலமா னாய்.
[82]
ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன் ஆனாய னாவமுத மேயானாய் ஆனாய் கவர்எலும்போ டேந்தி கதநாகம் பூணி கவலெலும்பு தாகை வளை.
[83]
வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே வளைகொண்டாய் மாசற்ற சோதி வளைகொண்டாய் மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற மாற்றார் ஊர்கின்ற மயல்.
[84]
மயலான தீரும் மருந்தாகும் மற்றும் மயலானார் ஆரூர் மயரார் மயலான் கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக் கண்ணியன்றன் பாதமே கல்.
[85]
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின் கலைமான் கறைகாண் கவாலி கலைமான ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள் ஆடுவதும் ஆடான் அரன்.
[86]
அரனே அணியாரூர் மூலட்டத் தானே அரனே அடைந்தார்தம் பாவம் அரனே அயனார்தம் அங்கம் அடையாகக்கொண்டார் அயனாக மாக அடை.
[87]
அடையுந் திசைஈசன் திண்டோளா காசம் அடையுந் திருமேனி அண்டம் அடையும் திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
[88]
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே மூன்றரண மாய்நின்ற முக்கணனே மூன்றரண மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற ஆய்நின்ற சோதி அறம்.
[89]
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர அறமானார் அங்கம் அணிவர் அறமாய வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன வல்வினைகள் வாராத வாறு.
[90]
ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர் ஆறுடையர் காலம் அமைவுடையர் ஆறுடைய சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
[91]
சேர்வும் உடையார் செழுங்கொன்றைத் தாரார்நஞ் சேர்வும் உடையர் உரவடையர் சேரும் திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும் திருச்சாய்க்காட் டேநின் உருவு.
[92]
உருவு பலகொண் டொருவராய் நின்றார் உருவு பலவாம் ஒருவர் உருவு பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார் பலவல்ல ஒன்றாப் பகர்.
[93]
பகரப் பரியானை மேல்ஊரா தானைப் பகரப் பரிசடைமேல் வைத்த பகரப் பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம் பரியானைச் சேருகலம் பண்.
[94]
பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும் பண்ணாகச் செய்த பரமேட்டி பண்ணா எருத்தேறி ஊர்வாய் எழில்வஞ்சி எங்கள் எருத்தேறி ஊர்வாய் இடம்.
[95]
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார் இடமானார்க் கீந்த இறைவர் இடமாய ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார் ஈங்கோய் மலையார் எமை.
[96]
எமையாள வந்தார் இடரான தீர எமையாளும் எம்மை இமையோர் எமையாறும் வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர் வீதிவிடங் கர்விடையூர் தீ.
[97]
தீயான மேனியனே செம்பவளக் குன்றமே தீயான சேராமற் செய்வானே தீயான செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச் செம்பொற் சிவலோகஞ் சேர்.
[98]
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே சேர்கின்ற சிந்தை சிதையாமல் சேர்கின்றோம் ஒற்றியூ ரானே உறவாரும் இல்லைஇனி ஒற்றியூ ரானே உறும்.
[99]
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம் உறுமுந்த முன்னே யுடையா உறுமும்தம் ஒரைந் துரைத்துஉற்று உணர்வோ டிருந்தொன்றை ஒரைந் துரக்கவல்லார்க் கொன்று. தனி வெண்பா ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல ஒன்றைப் பகரில் ஒருகோடி ஒன்றைத் தவிராது உரைப்பார் தளரா உலகில் தவிரார் சிவலோகந் தான்.
[100]
Back to Top
இளம்பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.024  
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
பண் - ( )
முதல்வன் வகுத்த மதலை மாடத்து இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற் பள்ளிச் செம்புயல் உள்விழு தூறீஇப் புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின் அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை இலங்குவளைத் தனிபோது விரித்த அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
[1]
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின் கீறு தடுப்பக் கிடக்குமே நீறடுத்த செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி எந்தாய்நின் சென்னி இடை.
[2]
இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத் தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின் தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.
[3]
சடையே நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே மிடறே நஞ்சகம் துவன்றி அமிர்துபிலிற் றும்மே வடிவே மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே அடியே மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே அஃதான்று இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத் தலைமூன்று வகுத்த தனித்தாள் கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
[4]
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் மாலைப் பிறைக்கீறா கண்முதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட் கிது.
[5]
இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள் செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.
[6]
வண்ணம் அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே என்னை பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள் நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே அஃதான்று முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும்கொடும்பிறைத் தேமுறு முதிர்சடை இறைவ மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
[7]
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ சடைமுடிமேல் முன்னாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா இன்னநாள் கண்டதிவள்.
[8]
இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல் அவள்அப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை எவளுக்கு நீநல்ல தாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண் தவளப்பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.
[9]
கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து அயில்வழங்கு முடுமிக் கயிலை நாடநின் அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல் யாமே கண்டதும் இலமே தாமா மூவா எஃகமும் முரணும் ஒவாது பயிற்றும் உலகம்மால் உளதே.
[10]
உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத வளரொளிதேய்ந்து உள்வளைந்த தொக்கும் கிளரொளிய பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார் கோதைப் பிறையின் கொழுந்து.
[11]
கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின் செழுந்திரள் குன்றகஞ் சென்றடைந் தால்ஒக்குந் தெவ்வர்நெஞ்சத் தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர் எழுந்திரள் சோதி பிழம்பும்என் உள்ளத் திடங்கொண்டவே.
[12]
கொண்டல் காரெயிற்றுச் செம்மருப் பிறாலின் புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி வரையோன் மருக புனலாள் கொழுந இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின் நீறாடு பொலங்கழல் பரவ வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
[13]
நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் பொறிபிதிர ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண் ஏற்றரால் தீரும் இடர்.
[14]
இடர்தரு தீவினைக் கெள் கிநை வார்க்குநின் ஈரடியின் புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப் படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங் கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.
[15]
அந்த ணாளர் செந்தொடை ஓழுக்கமும் அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும் அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக் குறுநெடுந் தானை பரப்பித் தறுகண் மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க காய்சின அரவுநாண் பற்றி நீயோர் நெடுவரை நெறிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
[16]
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம் ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ மீதூரக் கண்சிவந்த வேந்து.
[17]
வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி ஏந்தற்கு மைத்துனத் தோழனின் தேன்மொழி வள்ளியென்னும் கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.
[18]
கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின் ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம் தவழ்தரு புனல்தலைப் படுநர் அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
[19]
இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென் றுலகெலாஞ் சென்றுழல்வ ரேனும் மலர்குலாம் திங்கட் குறுந்தெரியல் தேவர்காட் செய்வதே எங்கட் குறும் தெரியின் ஈண்டு.
[20]
ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள் வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார் பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும் நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே.
[21]
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ யாதா கியதோ எந்தை நீதியென் றுடைதலை நெடுநிலா வெறியல் கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
[22]
பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும் அருளான்மற் றல்லாதார் வேண்டின் தெருளாத பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான் தான்மறான் பைங்கொன்றைத் தார்.
[23]
தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக்கெற் றேயிவனோர் பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின் ஒரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.
[24]
உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும் இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும புகர்முகத் ததுளைக்கை உரவோன் தாதை நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க் கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
[25]
எளியமென் றெள்கி இகழாது நாளும் அளியம்ஆட் செய்தாலும் ஐயோ தெளிவரிய வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய் கொள்கயிலை எம்பாற் குறை.
[26]
குரையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும் திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில் பொறையாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த இறைவா இடுபிணக் காடசெம் மேனியெம் வேதியனே.
[27]
வேதியர் பெரும விண்ணோர் தலைவ ஆதி நான்முகத் தண்ட வாண செக்கர் நான்மறைப் புத்தேள் நாட காய்சின மழவிடைப் பாகநின் மூவிலை நெடுவேல் பாடுதும் நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
[28]
எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச நனவே பலிதிரிதி நாளும் சினவேங்கைக் கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற் போர்க்கையிலை பேசல்நீ பொய்.
[29]
பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச் செய்வதென்னே செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.
[30]
Back to Top
அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.025  
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
பண் - ( )
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர் மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக் குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன் மதலை மாமதந் துவன்றிய கதனுடைக் கடதடக் கபோலத் தோரிட மருப்பின் கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன் சேவடி யுகளம் அல்லது யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.
[1]
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான் தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்துளங்கொள் காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து மாமாரி ஈன்ற மணி.
[2]
மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர் அணிசிந்த வென்றஎம் ஐயர்க்க கிளங்கன்றை அங்கரும்பின் துனிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவித் பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறலே.
[3]
பேதுறு தகையம் அல்லம் தீதுறச் செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கன் நாப்பண் புக்கவண் இரும்பொறித் தடக்கையும் முரணிய பெருந்தோள் கொட்ட நாவி தேவிதன் மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
[4]
மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை ஒய மணியூசல் ஆடின்றே பாய மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
[5]
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச் சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர் விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின் மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.
[6]
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல் பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது மேருச் சிமையத்து மீமிசை வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
[7]
மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழிய வருபொருளே கண்ணே செழிய கலாலயனே எங்கள் கணபதியே நின்னை அலாலையனே சூழாதென் அன்பு.
[8]
அன்பு தவச்சுற்றத் தாரழல் கொண்டெயில் மூன்றெரிய வன்புத வத்துந்தை மாட்டுகின் றான்மதஞ் சூழ்மருப்பிற் கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட் கின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.
[9]
கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின் புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை வரைநனி கீறி மூரி அஞ்செறு புலர்த்தும் என்பர் மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
[10]
மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத் தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் கலைசூழ் திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க் கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.
[11]
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர் மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம் பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண் வேலது வாளது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.
[12]
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல் சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக் கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த ஒங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி அள்ளல் தீஞ்சுவை அருந்திய வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.
[13]
இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள் திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை புக்கியங்கு தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே வானாடன் பெற்ற வரை.
[14]
பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக் கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.
[15]
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப் பெருந்திரட் புழைக்கை மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின் பனையடர்ப் பாகன் றனதி ணையடி நெடும்பொற் சரணம் ஏத்த இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.
[16]
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி விலங்கல் மிசையிழிவ தொக்கும் பலன்கனிகள் உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து வண்டணைந்து சோரும் மதம்.
[17]
மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்றை மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல் மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.
[18]
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப் பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும் பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர் இட்ட மாங்கனி முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை எந்தை அல்லது மற்று யாவுள சிந்தை செய்யும் தேவதை நமக்கே.
[19]
கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண் வாளுற்ற கேயூர வாளரக்கர் தோளுற் றறுத்தெறிந்து கொன்றழித்தவ் அங்கயங்கண் மீண்டே இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
[20]
ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால் வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.
[21]
சிரமே விசும்பு போத உயரி இரண் டசும்பு பொழி யும்மே கரமே வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே புயமே திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்குமே அடியே இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே ஆயினும் அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.
[22]
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து வார்தந் தெழுமதியம் மன்னுமே சீர்தந்த மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த கோமதலை வாண்மதியங் கொம்பு.
[23]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.026  
கோயில் நான்மணிமாலை
பண் - (கோயில் (சிதம்பரம்) )
பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் பாமேவும் ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை.
[1]
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற்கொன்றைத் தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே.
[2]
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால் விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும் உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால் எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண் டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
[3]
உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப் பட்ட எல்லையும் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாணா நீடு குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீல மேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின் தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில் வீர வெள்விடைக் கொடியும் போரில் தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித் தெய்வக் கங்கை ஆறும்பொய்நீர் விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் வைதிகப் புரவியும் வான நாடும் மையறு கனக மேருமால் வரையும் செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும் உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும் கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.
[4]
ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே காதலித்த நாயேற்குங் காட்டுமே போதகத்தோற் கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி.
[5]
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப் பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.
[6]
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட நாயகரே நான்மறையோர் தங்க ளோடும் திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட செல்வரே உமதருமை தேரா விட்டீர் இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால் என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர் தஞ்சுண்டா யங்கருநீர் நஞ்சுண்டீரே.
[7]
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வி யாங்கி யான்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங் கருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று எண்டோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
[8]
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம் கலவி கடைக்கணித்தும் காணேன் இலகுமொளி ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும் நாடகங்கண் டன்பான நான்.
[9]
நானே பிறந்த பயன்படைத் தேன் அயன் நாரணனெம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. 1
[10]
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிரையொடு பண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள் நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில் அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதல் எதிர்இன்று வரையுமே.
[11]
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க் கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள் கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ டுலகு குழைத் தொரு நாள் உண்டதும் உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே இனைய னாகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு ஆகி ஆழத் தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச் சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி ஏவருங் காண ஆடுதி அதுவெனக் கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம் விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப வான்பொய் அச்சம் மாயா ஆசை மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும் புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப கூடும் வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது பெரியதிற் பெரியை என்றும் அன்றே சிறியதிற் சிறியை என்றும் அன்றே நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே
[12]
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத் துழவரும்போய் ஒயுமா கண்டோம் மொழிதெரிய வாயினால் இப்போதே மன்றில் நடமாடும் நாயனார் என்றுரைப்போம் நாம்.
[13]
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர் தாமத்தி னாலுன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான் வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய் சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.
[14]
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள் நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள் அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள் அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செய மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர் மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர் செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர் சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே.
[15]
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும் இனையன பலசரக் கேற்றி வினையெனும் தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும் துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனும் கூம்பு முரிந்து குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக தொல்லெயில் உடுத்த தில்லை காவல வம்பலர் தும்பை அம்பல வாண நின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்துதமா செய்யே.
[16]
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென் தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர் சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே தாயே நமதுகையில் சங்கு.
[17]
சங்கிடத் தானிடத் தான்தன தாகம் சமைந்தொருத்தி அங்கிடத் தாள் தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல் கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாயெங்கை நீயுமொரு பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேலுன் பசப்பொழியே.
[18]
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள் விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார் சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந் தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே.
[19]
அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக் கைத்தேர் உழந்து கார்வரும் என்று வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் அருளா வயவர் அம்பிடை நடந்தும் இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த் துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும் ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும் தாள்உழந் தோடியும் வாளுழந் துண்டும் அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும் சொற்பல புனைந்தும் கற்றன கழறியும் குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில் பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும் நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும் தெய்வ வேதியர் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த பாதப் போதும் பாய்புலிப் பட்டும் மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும் சேயுயர் அகலத் தாயிரங் குடுமி மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும் அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் கங்கை வழங்கும் திங்கள் வேணியும் கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங் குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன் நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான் உறுதற் கரியதும் உண்டோ பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.
[20]
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் சுற்றோட ஓடித் தொழாநிற்கும் ஒற்றைக்கைம் மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம் கோமறுகிற் பேதை குழாம்.
[21]
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத் தாதை தன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான் கோதையந் தாமத்தண் கொன்றை கொடான் நின்று கொல்லவெண்ணி ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவி யவே.
[22]
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாவென நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி யொருவர் ஆழிய புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர் புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர் கலவ மயில னார்கருள் கரிய குழலி னார்குயில் கருதுமொழியி னார்கடை நெடிய விழியி னாரிதழ் இலவின் அழகி யாரிடை கொடியின் விடிவி னார்வடி வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.
[23]
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழிவழி வந்த மரபினம் மொழிவதுன் ஐந்தெழுத் தவையெம் சிந்தையிற் கிடத்தி நனவே போல நாடொறும் பழகிக் கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக் கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன் ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில் கைகொடு குயிற்றுவ தைய நின்னது கோயில் பல்பணி குறித்தே ஒயாது உருகி நின்னினைந் தருவி சோரக் கண்ணிற் காண்பதெவ் வுலகினும்காண்பனவெல்லாம் நீயே யாகி நின்றதோர் நிலயை நாயேன் தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால் அலைகடல் பிறழினும் அடாதே அதனால் பொய்த்தவ வேடம் கைத்தகப் படுத்தற்கு வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச் சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின் மானுட மாக்களை வலியப் புகுத்தும் ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும் வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய் நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச் செம்பொன் தில்லை மூதூர் அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.
[24]
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் தாயனைய னாயருளும் தம்பிரான் தூயவிரை மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மணி.
[25]
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம் மன்றுக்கெல்லாம் அணிவாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப் பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப் பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணமென்னவே.
[26]
என்நாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம் தன்னா லல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறி மின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே.
[27]
பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர் கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர் பேரும் நின்றில போலுந் தேரின் நீயுமஃ தறிதி யன்றே மாயப் பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் தன்மயர் இழிவு சார்ந்தனை நீயும் நன்மையில் திரிந்த புன்மையை யாதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும் பன்மீன் போலவும் மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் ஆசையாம் பரிசத் தியானை போலவும் ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மணத்தின் வண்டு போலவும் உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும் அறிவில் கீடத்து நுந்தழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது குடர்கெவு சிறையறைக் குறங்குபு கிடத்தி கறவை நினைந்த கன்றென இரங்கி மறவா மனத்து மாசறும் அடியார்க் கருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை மறையவர் தில்லை மன்று ளாடும் இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
[28]
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப் புனைவார்க்குக் கொன்றை பொதுவோ அனைவீரும் மெச்சியே காண வியன்தில்லை யானருளென் பிச்சியே நாளைப் பெறும்.
[29]
பெறுகின்ற எண்ணிலித் தாயரும் பேறுறும் யானுமென்னை உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென் றிறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம்அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே.
[30]
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக் கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென் கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக் கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.
[31]
அருளு வாழி அருளு வாழி புரிசடைக் கடவுள் அருளு வாழி தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும் புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினுங் கடிதே கதுமென மரணம் வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காக் கூற்றும் இனைய தன்மைய திதுவே யிதனை எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே யவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி அவைதாம் ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும் ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே அறியை சாலவெம் பெரும தெரிவுறில் உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே கண்டனை அவைநினைக் காணா அதுதான் நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை மாயாய் மன்னினை நீயே வாழி மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை மறைப்பினும் அதுவும் நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று நினைப்பருங் காட்சி நின்னிலை யிதுவே நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும் நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின் நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் நீயே அருளல் வேண்டும் வேய்முதிர் கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக இம்ப ருய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
[32]
வானோர் பணிய மணியா சனத்திருக்கும் ஆனாத செல்வத் தரசன்றே மாநாகம் பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே வந்திப்பார் வேண்டாத வாழ்வு.
[33]
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாயுன்னை அன்றியொன்றைத் தாழ்வார் அறியார் சடிலநஞ் சுண்டிலை யாகிலன்றே மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே.
[34]
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ டுணங்கியிவள் தானுமெலியப் பெறும் இடர்க்கே ஊதையெரி தூவியுல வப்பெறும் அடுத்தே பிணங்கியர வோடுசடை ஆடநடமாடும் பித்தெரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர் அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும் மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
[35]
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள் கங்கை மதியின்மீ தசைய வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ ஒருபால் தோடும் ஒருபால் குழையும் இருபாற் பட்ட மேனி எந்தை ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையா நாட்டத் தொருபெருங் கடவுள் வானவர் வணங்கும் தாதை யானே மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய தெய்வ மண்டபத் தைவகை அமளிச் சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர் இமையா நாட்டத் தமையா நோக்கம் தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் ஆனாச் செல்வத்து வானோர் இன்பம் அதுவே எய்தினும் எய்துக கதுமெனத் தெறுசொ லாளர் உறுசினந் திருகி எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும் செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும் புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப் பன்னெடுங் காலம் அழுந்தி இன்னா வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை ஏனோர் என்னை ஆனாது விரும்பி நல்லன் எனினும் என்க அவரே அல்லன் எனினும் என்க நில்லாத் திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத் துன்பந் துதையினும் துதைக முன்பின் இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது என்றும் இருக்கினும் இருக்கவன்றி இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும் வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித் தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும் அடையவும் அணுகவும் பெற்ற கிடையாச் செல்வங் கிடைத்த லானே.
[36]
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே வானோங்கு வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு.
[37]
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத் தண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக் கன்பு செய்யா மிண்டர்மிண் டித்திரி வாரெனக் கென்னினி நானவன்றன் தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே. [38]
தொடர நரைத்தங்க முன்புள்ள வாயின தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு களிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேனினி மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனொரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
[39]
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி கொடுத்த பேரருள் போற்றி முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத் தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய செல்வங் கொடுத்த செல்வம் போற்றி தாள்நிழல் அடைந்த மாணிக் காக நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட் பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க உதைத்துயிர் அளித்த உதவி போற்றி குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்று விலக்கிக் கடல்விடம் அருந்தன கருணை போற்றி தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட வில்லொன்று வளைத்த வீரம் போற்றி பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக் கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக் கொண்டு நடந்த கோலம் போற்றி விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த தொண்டர் மனையில் உண்டல் போற்றி வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த தாவுபல் எலிக்கு மூவுல காள நொய்தினில் அளித்த கைவளம் போற்றி பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச் சிங்கங் கொன்ற சேவகம் போற்றி வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய் உரகம் பூண்ட ஒப்பனை போற்றி கங்கையுங் கடுக்கையுங் கலந்துழி ஒரு பால் திங்கள் சூடிய செஞ்சடை போற்றி கடவுளர் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி ஆலம் பில்குநின் சூலம் போற்றி கூறுதற் கரியநின் ஏறு போற்றி ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப் பாகங் கொடுத்த பண்பு போற்றி தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் தாடும் நாடகம் என்றாங் கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ ஆற்றல் இல்லை ஆயினும் போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
[40]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருக்கழுமல மும்மணிக் கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.027  
திருக்கழுமல மும்மணிக் கோவை
பண் - (சீர்காழி )
திருவளர் பவளப் பெருவரை மணந்த மரகத வல்லி போல ஒருகூ றிமையச் செல்வி பிரியாது விளங்கப் பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக் கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும் முதிரா இளமுறை முற்றாக் கொழுந்தின் திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின் தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின் செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின் செங்கைக் கமலம் மங்கை வனமுலை அமிர்த கலசம் அமைவின் ஏந்த மலைமகள் தனாது நயனக் குவளைநின் பொலிவினொடு மலர மறையோர் கழுமலம் நெறிநின்று பொலிய நாகர் நாடு மீமிசை மிதந்து மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங் கொன்றா வந்த குன்றா வெள்ளத் துலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித் தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னா யோவென் றழைப்பமுன் நின்று ஞான போனகம் அருளட்டிக் குழைத்த ஆனாத் திரளை அவன்வயின் அருள அந்தணன் முனிந்து தந்தார் யார் என அவனைக் காட்டுவன் அப்ப வானார் தோஒ டுயை செவியன் என்றும் பீஇ டுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
[1]
அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு பொருளின் திரள்புகலி நாதன் இருள்புகுதுங் கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க் கண்டத்தார் தாமார் அதற்கு.
[2]
ஆரணம் நான்கிற்கும் அப்பா லவனறி யத்துணிந்த நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும் காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.
[3]
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந் தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல் மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித் துன்ப இருளைத் துரந்து முன்புறம் மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி செந்தைநீ இருக்க இட்டனன் இந்த நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும் அடையப் பரந்த ஆதிவெள் ளத்து நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப மாலும் பிரமனும் முதலிய வானவர் காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் மிகநனி மிதந்த புகலி நாயக அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி இமயக் கொழுந்தையும் உடனே கொண்டிங் கெழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
[4]
மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள் தானும் பிறையுந் தரித்திருக்கும் வானவர்க்கு வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென் உள்ளத்தே நின்ற ஒளி.
[5]
ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கவென் உள்ளம்வெள்ளம் தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத் தெளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே .
[6]
அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி ஆரா இன்பத் தீராக் காதல் அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை மாடக் கோபுரத் தாடகக் குடுமி மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் வழுவாக் காட்சி முதிரா இளமுலைப் பாவையுடன் இருந்த பரம யோகி யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள் அகில லோகமும் அனந்த யோனியும் நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாய ராகியுந் தந்தைய ராகியும் வந்தி லாதவர் இல்லை யான் அவர் தந்தைய ராகியுந் தாய ராகியும் வந்தி ராததும் இல்லை முந்து பிறவா நிலனும் இல்லை அவ்வயின் இறவா நிலனும் இல்லை பிறிதில் என்னைத் தின்னா உயிர்களும் இல்லை யான் அவை தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே காலமும் சென்றது யான்இதன் மேல்இனி இளைக்குமா றிலனே நாயேன் நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந் தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம் பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச் சொன்னது மந்திர மாக என்னையும் இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின் கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.
[7]
கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம் அடலாம் உபாயம் அறியார் உடலாம் முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான் கழுமலத்தைக் கைதொழா தார்.
[8]
தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண் டெழுவாள் எழுகின்ற தென்செய வோஎன் மனத்திருந்தும் கழுமா மணியைக் கழுமல வாணனைக் கையிற்கொண்ட மழுவா ளனைக் கண்டு வந்ததென் றாலொர் வசையில்லையே.
[9]
வசையில் காட்சி இசைநனி விளங்க முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப் புகலி நாயக இகல்விடைப் பாக அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந குன்று குனிவித்து வன்தோள் அவுணர் மூவெயில் எரித்த சேவகத் தேவ இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின் நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் காமனை விழித்த மாமுது தலைவ வானவர் அறியா ஆதி யானே கல்லா மனத்துப் புல்லறிவு தொடர மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக் காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை யாயினும் பிறவும் என்னதும் பிறரதும் ஆவன பலவும் அழிவன பலவும் போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித் தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும் எண்ணில் கோடி எனைப்பல வாகி இல்லன உளவாய் உள்ளன காணாப் பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும் அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின் கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக் குழிவழி யாகி வழிகுழி யாகி ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற வந்தாற் போல வந்த தெந்தைநின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ஒவியப் புலவன் சாயல்பெற எழுதிய சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித் தவிராது தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றனவே.
[10]
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம் சினவேறு காட்டுதிரேல் தீரும் இனவேகப் பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம் பூம்புகலி யான்இதழிப் போது.
[11]
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனலுண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேஇணை யாகச் செப்பும் சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின் தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே.
[12]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.028  
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
பண் - (திருவிடைமருதூர் )
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற் றாது வலம்புரி நெடுமால் ஏன மாகி நிலம்புக் காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத் தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து நச்செயிற் றரவக் கச்சையாப் புறத்துப் பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி அரத்த ஆடை விரித்துமீ துறீஇ இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங் கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம் வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் பொற்றா மரையின் முற்றா முகிழென உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம் அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து மூவிலை வேலும் பூவாய் மழுவுந் தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும் தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் பாலிற் கிடந்த நீலம் போன்று குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும் கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் அரவும் மதியமும் விரவத் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு நான்முகம் கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணங் கருத்தையுங் கடந்து சேணிகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் கைவைத்துப் புனைந்த தெய்வமாலை நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத் திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி இனைய வண்ணத்து நினைவருங் காட்சி இருவயின் உருவும் ஒருவயிற்றாகி வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க வாணுதல் பாகம் நாணுதல் செய்ய வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங் குலகம் ஏழும் பன்முறை ஈன்று மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள் நின் திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயம் சேரா மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
[1]
பொருளுங் குலனும் புகழுந் திறனும் அருளும் அறிவும் அனைத்தும் ஒருவர் கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை மருதாவென் பார்க்கு வரும்.
[2]
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே.
[3]
ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத் தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக் குயிலென மொழியும் மயிலியல் சாயல் மான்மற விழிக்கும் மானார் செல்வத் திடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல் ஆரணந் தொடாராப் பூரணபுராண நாரணன் அறியாக் காரணக் கடவுள் சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள் ஏக நாயக யோக நாயக யானொன் றுணர்த்துவ துளதே யான்முன் நனந்தலை யுலகத் தனந்த யோனியில் பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து யாயுறு துயரமும் யானுறு துயரும் இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும் நீயல தறிகுநர் யாரே அதனால் யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான் றுற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா உள்ளமொன் றுடைமை வேண்டும் அஃதன்றி ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று தானல தொன்றைத் தானென நினையும் இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம் கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர் எற்பிற ருளரோ இறைவ கற்பம் கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி உரையெயிற் றுரகம் பூண்ட கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.
[4]
கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும் எண்ணென்றும் மூல எழுத்தென்றும் ஒண்ணை மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றுக் கருதவப்பால் உண்டோ கதி.
[5]
கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேபரத்தின் பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர் விதியாம் எனச்சிலர் நோவதல் லாலிதை வேண்டுநர்யார் மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே.
[6]
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி அவியடு நர்க்குச் சுவைபலபகர்ந்தேவி ஆரா உண்டி அயின்றன ராகித் தூராக் குழியைத் தூர்த்துப் பாரா விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக் கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ் சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும் மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத் தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச் சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் மேவுழி மேவல் செய்யாது காவலொடு கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும் அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின் கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப் பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும் நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம் விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் அகமலர்ந் தீவார் போல முகமலர்ந் தினிது மொழிந்தாங் குதவுதல் இன்றி நாளும் நாளும் நாள்பல குறித்தவர் தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேளிகழ்ந்து இகமும் பரமும் இல்லை என்று பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித் தன்னையும் ஒருவ ராக உன்னும் ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து யோசனை கமழும் உற்பல வாவியில் பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமும் சூழ்ந்த மருத வாண சுருதியும் தொடராச் சுருதி நாயக பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும் முத்தித் தாள மூவா முதல்வநின் திருவடி பிடித்து வெருவரல் விட்டு மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும் பொருளென நினையாதுன் னருளினை நினைந்து இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச் சின்னச் சீரை துன்னல் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனைந்து சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங் கிடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஒவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின் செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும் பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக் குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் இருவகைப் பொருளும் ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க் கடிமை பூண்டு நெடுநாட் பழகி முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர் காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக் கண்டது காணின் அல்லதொன் றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே.
[7]
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் அறிந்தேன் அநங்கவேள் அம்பில் செறிந்த பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன் மருதவட்டம் தன்னுளே வந்து.
[8]
வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே சிந்திக்கண் டாயரன் செம்பொற் கழல்திரு மாமருதைச் சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய் உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.
[9]
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையுற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற மெய்யெனும் எருவை விரித் தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக் குரோதக் களையறக் களைந்து சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட் டம்மெனக் கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து. புண்ணிய அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி காள கண்டமும் கண்ணொரு மூன்றும் தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும் சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி பையப் பையப் பழுத்துக் கைவர எம்ம னோர்கள் இனிதினி தருந்திச் செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக் காமக் காடு மூடித் தீமைசெய் ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக் கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவா திமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
[10]
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம் படமொடுங்கப் பையவே சென்றங் கிடைமருதர் ஐயம் புகுவ தணியிழையார் மேல் அநங்கன் கையம் புகவேண்டிக் காண்.
[11]
காணீர் கதியொன்றுங் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம் பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப் பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர் வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே.
[12]
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர் பாவிய தோலின் பரப்போ தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ கூறுசெய் திடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின் றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை வைத்த மலத்தின் குவையோ வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா தின்ன தியானென் றறியேன் என்னை ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம் வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக் கண்படை யாகக் காமனை ஒருநாள் நுண்பொடி யாக நோக்கியண் டத்து வீயா அமரர் வீயவந் தெழுந்த தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி இருவர் தேடி வெருவர நிமிர்ந்து பாலனுக் காகக் காலனைக் காய்ந்து சந்தன சரள சண்பக வகுள நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப் புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த திருவிடை மருத பொருவிடைப் பாக மங்கை பங்க கங்கைநா யகநின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலங் கீறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே நின்னைக் காணா மாந்தர் தம்மையுங் காணாத் தன்மை யோரே.
[13]
ஒராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம்.
[14]
நாமே இடையுள்ள வாறறி வாமினி நாங்கள்சொல்லல் ஆமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப் பூமேல் அணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே.
[15]
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக சிமையச் செங்கோட் டிமையச் செல்வன் மணியெனப் பெற்ற அணியியல் அன்னம் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன மதரரி நெடுங்கண் மானின் கன்று வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி வையம் ஏழும் பன்முறை ஈன்ற ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி எமையா ளுடைய உமையாள் நங்கை கடவுட் கற்பின் மடவரல் கொழுந பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை பூவலர் குடுமிச் சேவலம் பதாகை மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த் தாங்குங் குமரன் தாதை பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும் மருதிடங் கொண்ட மருத வாண நின்னது குற்றம் உளதோ நின்னினைந் தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் பாவிகள் தமதே பாவம் யாதெனின் முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத் தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி வாலுகங் கிடந்த சோலை கிடப்ப வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப அடிபெயர்த் திடுவான் ஒருவன் நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.
[16]
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும்.
[17]
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலால் தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள் ஓக்கிற்றுத் தக்கன் தலையுருண் டோடச் சலந்தரனைப் போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே.
[18]
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக காள கண்ட கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந பூத நாத பொருவிடைப் பாக வேத கீத விண்ணோர் தலைவ முத்தி நாயக மூவா முதல்வ பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும் திருவிடை மருத திரிபு ராந்தக மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ மனையும் பிறவும் துறந்து நினைவரும் காடும் மலையும் புக்குக் கோடையில் கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று மாரி நாளிலும் வார்பனி நாளிலும் நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும் காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங் களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் அம்மை முத்தி அடைவதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர் ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம் பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ் செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந் தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந் தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் பூவிரி தரங்க வாரிக் கரையிலும் மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட மருப்பின் இயன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அணைமேல் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச் சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப் பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம் கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல் மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள் வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங் கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக் காலன் வேலும் காம பாணமும் ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர மதியென மாசறு வதனம் விளங்கப் புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும் அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் நின்னது பெருமை அன்றோ என்னெனின் வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும் மாட்டா ஒருவன் வாளா எறியினும் நிலத்தின் வழாஅக் கல்லேபோல் நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.
[19]
நாமம் நவிற்றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து காமம் நவிற்றிக் கழிந்தொழியல் ஆமோ பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள் மருதவனத் தானை வளைந்து.
[20]
வளையார் பசியின் வருந்தார் பிணியின்மதன னம்புக் கிளையார் தனங்கண் டிரங்கிநில் லாரிப் பிறப்பினில்வந் தளையார் நரகினுக் கென்கட வார்பொன் னலர்ந்தகொன்றைத் தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே.
[21]
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம் மூலமும் நடுவும் முடிவும் இகந்து காலம் மூன்றையும் கடந்த கடவுள் உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத் துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர் எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது உறுப்பில் நின் றெழுதரும் உள்ளத் தோசை வைத்த நாவின் வழிமறுத் தகத்தே தித்தித் தூறும் தெய்வத் தேறல் துண்டத் துளையில் பண்டைவழி யன்றி அறிவில் நாறும் நறிய நாற்றம் ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும் தானே ஆகி நின்ற தத்துவ தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித் தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும் இருள்விரி கண்டத் தேக நாயக சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர மருதிடம் கொண்ட மருதமா ணிக்க உமையாள் கொழுந ஒருமூன் றாகிய இமையா நாட்டத் தென்தனி நாயக அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில் குடரெனும் சங்கிலி பூண்டுதொடர்ப்பட்டுக் கூட்டுச் சிறைப்புழுவின் ஈட்டுமலத் தழுந்தி உடனே வருந்தி நெடுநாட் கிடந்து பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந் தண்ட லாளர் மிண்டவந் தலைப்ப உதர நெருப்பில் பதைபதை பதைத்தும் வாதமத் திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா திடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் பாவப் பகுதியில் இட்டுக் காவல் கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பாசப் படுத்திப் பையென விட்டபின் யானும் போந்து தீதினுக் குழன்றும் பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும் பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும் வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள் வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன் நின்னை அடைந்த அடியார் அடியார்க் கென்னையும் அடிமையாகக் கொண்டே இட்டபச் சிலைகொண் டொட்டிநன் கறிவித் திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
[22]
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல் ஒருத்தி பொலிய இடையேபோய்ச் சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப தெங்கே இருக்க இவள்.
[23]
இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவொட்டாத் திருக்கும் அறுத்தைவர் தீமையுந் தீர்த்துச்செவ் வேமனத்தை ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே.
[24]
சுடர்விடு சூலப் படையினை என்றும் விடையுகந் தேறிய விமல என்றும் உண்ணா நஞ்சம் உண்டனை என்றும் கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும் திரிபுரம் எரித்த சேவக என்றும் கரியுரி போர்த்த கடவுள் என்றும் உரகம் பூண்ட உரவோய் என்றும் சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும் வலந்தரு காலனை வதைத்தனை என்றும் சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும் வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும் தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும் உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும் ஏனமும் அன்னமும் எட்டா தலமர வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும் செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும் அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும் இனையன இனையன எண்ணிலி கோடி நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின் அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும் என்தன் வாயில் புன்மொழி கொண்டு நின்னை நோக்குவன் ஆதலின் என்னை இடுக்கண் களையா அல்லல் படுத்தா தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவ போல நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத் துயிலின் நீங்கிப் பயிலும் வீதித் திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன் நின்நினைந் தெறிந்த அதனால் அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.
[25]
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய புன்தலை மாக்கள் புகழ்வரோ வென்றிமழு வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை ஆளுடையான் செம்பொன் அடி.
[26]
அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர் முடியா யிரங்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த தொடியா யிரங்கொண்ட தோளிரண் டாயிரம் என்றுநெஞ்சே படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
[27]
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் செவ்வான் உருவிற் பையர வார்த்துச் சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை மூவா முதல்வ முக்கட் செல்வ தேவ தேவ திருவிடை மருத மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை ஆடும் அப்ப கயிலாய வாண கௌரி நாயக நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும் மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும் அமரர்த் தாங்கும் குமர வேளும் சுரிசங் கேந்திய திருநெடு மாலும் வான்முறை படைத்த நான்முகத் தொருவனும் தாருகற் செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும் ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும் வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும் சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும் நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும் வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் எட்டு நாகமும் அட்ட வசுக்களும் மூன்று கோடி ஆன்ற முனிவரும் வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் அத்தகு செல்வம் அவமதித் தருளிய சித்த மார்சிவ வாக்கிய தேவரும் (1) வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் (2) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப் பாடின என்று படாம்பல அளித்தும் (3) குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் (4) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும் (5) மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்இத் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் (6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் (7) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் (8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் இனைய தன்மையர் எண்ணிறந் தோரே அனையவர் நிற்க யானும் ஒருவன் பத்தி என்பதோர் பாடும் இன்றிச் சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும் கருதி யிருப்பன் கண்டாய் பெரும நின்னுல கனைத்தினும் நன்மை தீமை ஆனவை நின்செய லாதலின் நானே அமையும் நலமில் வழிக்கே.
[28]
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் பொழில்சூழ் மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா கருதிடத்தாம் நில்லா கரந்து.
[29]
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல வரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றுமில்லேன் சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும் தரத்தினு மாயது நின்னடி யாந்தெய்வத் தாமரையே.
[30]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருஏகம்பமுடையார் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.029  
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பண் - (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேயுன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே.
[1]
ஏகம்ப னேயென்னை ஆள்பவ னேயிமை யோர்க்கிரங்கி போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே.
[2]
தரித்தேன் மனத்துன் திகழ்திரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேயென்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே.
[3]
தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச்செக்கர் ஒளிதரு மேனியெம் ஏகம்ப னேயென் றுகந்தவர்தாள் தளிதரு தூளியென் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே.
[4]
பெற்றுகந் தேனென்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் கற்றுகந் தேனென் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின் பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின் சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே.
[5]
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின் முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின் இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாமெங்ஙனே வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே.
[6]
வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடினல்லால் கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே.
[7]
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்களன்பு கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம் நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே.
[8]
மின்களென் றார்சடை கொண்டலென் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்களென் றார்வெளிப் பாடுதம் பொன்னடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றாருல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே.
[9]
தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும் வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப் பொன்மயிற் சாயலுஞ் சேயரிக் கண்ணும் புரிகுழலும் மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே.
[10]
தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம்மடியார் மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச் சினம்விட் டகலாக் களிறு வினாவியொர் சேயனையார் புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே.
[11]
பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சியே கம்பர்பொற்பார் கோங்கத் திருந்த குடுமிக் கயிலையெம் பொன்னொருத்தி பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே.
[12]
வருத்தந் தரும்மெய்யுங் கையில் தழையும்வன் மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனம் காக்கும் தொழிலெமக்கே.
[13]
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர் தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கம் கவர்கவென்றோ அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே.
[14]
அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலைஎம் ஐயர்அம்பு இருளைக் கரிமறிக் கும்மிவர் ஐயர் உறுத்தியெய்ய வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு மருளைத் தருசொல்லி எங்கோ விலையுண்டிவ் வையகத்தே.
[15]
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் ஐயார் வருகலை ஏனங் கரிதொடர் வேட்டையெல்லாம் பொய்யான ஐயர் மனத்ததெம் பூங்கொடி கொங்கைபொறாப் பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே.
[16]
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட் டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப் பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப்புனத்துள் தருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே.
[17]
அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர் அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங் கரிதென் றிப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே.
[18]
அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக் குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும் வெஞ்சரத் தாரன வோவல்ல வோவிவ் வியன்முரசே.
[19]
சேய்தந்த அம்மை உமைகண வன்திரு ஏகம்பத்தான் தாய்தந்தை யாயுயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய் வேய்தந்த தோளிநம் ஊச லொடும்விரை வேங்கைதன்னைப் பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே.
[20]
வந்தும் மணம்பெறிற் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேனிழிச்சித் தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயுங் கிளிகடிந்தும் சிந்தும் புகர் மலை கைச்சுமிச் சாரல் திரிகுவனே.
[21]
திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக் கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம் விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து விரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்னங்குப் பேசுமினே.
[22]
பேசுக யாவர் உமைக்கணி யாரென்று பித்தரெங்கும் பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத் தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக் கூசுகை யாதுமில் லார்க்குலை வேங்கைப் பெயர்நும்மையே.
[23]
பெயரா நலத்தெழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின் துயரால் வருந்தி மனமுமிங் கோடித் தொழுதுசென்ற தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே.
[24]
தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும் மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தருந் தண்புனமே எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே.
[25]
இயங்குந் திரிபுரம் எய்தவே கம்பர் எழிற்கயிலைத் தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள் முயங்கு மணியறை காள்மொழி யீரொழி யாதுநெஞ்சம் மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே.
[26]
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய் நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர் தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலையிச் சூழ்புனத்தே.
[27]
புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால் மனங்குழை யாவரும் கண்கனி பண்பல பாடுந்தொண்டர் இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே.
[28]
உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம் கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும் வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்ணரணம் தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே.
[29]
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதவருவிக் குன்றும் பதாதியுந் தேருங் குலவிக் குடைநிழற்கீழ் நின்றும் பொலியினுங் கம்பர்நன் நீறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.
[30]
நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியார் எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பங் கூடித்தொழும் நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே.
[31]
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நாண்சிறி தின்றிநகும் குலத்தில் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற்கன்ப ரேலவர் யாவர்க்கும் உத்தமரே.
[32]
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி பத்துங்கை யான இருபதுஞ் சோர்தர வைத்திலயம் ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள் எத்துங்கை யானென் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே.
[33]
அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு வம்பரங் கொள்வதொர் வேழத் துரியவன் தன்னுருவாம் எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தானிடை யாதடைவான் நம்பரன் தன்னடி யாரறி வார்கட்கு நற்றுணையே.
[34]
துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும் பணைத்தோள் அகலமுங் கண்டத்து நீலமும் அண்டத்துமின் பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத் தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே.
[35]
அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம் பழகறி விற்பெரி யோரதமைப் பற்றலர் பற்றுமன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம் கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே.
[36]
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம் தொடக்குண் டிலங்கும் மலங்குந் திரைக்கங்கை சூடுங்கொன்றை வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர் கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே.
[37]
கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார் முற்றுற் றிலாமதி யின் கொழுந் தேகம்பர் மொய்குழலாம் மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர் தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே.
[38]
தருமருட் டன்மை வலப்பாற் கமலக்கண் நெற்றியின்மேல் திருமலர்க் கண்பிள விற்றிக ழுந்தழல் செல்வக்கம்பர் கருமலர்க் கண்ணிடப் பாலது நீலங் கனிமதத்து வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே.
[39]
மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ் செஞ்சுடர் மாமணிவிட் டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும் நலந்திரு நீல்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள் கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே.
[40]
காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம் தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே.
[41]
தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப் புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே.
[42]
உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல் தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்துகில் அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே.
[43]
அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந் திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின் அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே.
[44]
தருக்கவற் றான் மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும் பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின் திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே.
[45]
கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத் தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே.
[46]
நடனம் பிரானுகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக் கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலங் காளத்தியாம் இடமெம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே.
[47]
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத் தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டியன்புக் கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே.
[48]
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் வரவித் தனைஉள்ள எங்கறிந் தேன்முன் அவர்மகனார் புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாவிரவில் அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே.
[49]
இடவம் கறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் டிடவஞ் சுவர்மட வாரிரி கின்றனர் ஏகம்பத்தீர் படமஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற் படமஞ் சுவரெங்ங னேபலி வந்திடும் பாங்குகளே.
[50]
பாங்குடை கோள்புலி யின்னதள் கொண்டீர்நும் பாரிடங்கள் தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடக்கமலம் பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர் ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைகுமின்றே.
[51]
இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதியார்கள் தஞ்சொல் கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும் விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே.
[52]
கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக் குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள நெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில் செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே.
[53]
தேடுற் றிலகள்ள நோக்கந் தெரிந்தில சொற்கள்முடி கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறுமிவள் மாடுற் றிலமணி யின்மட வல்குலும் மற்றிவள்பால் நாடுற் றிலவெழில் ஏகம்ப னார்க்குள்ளம் நல்கிடத்தே.
[54]
நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக் கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங் கூற்றம் குளிர்திரைகள் மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள்தான் புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே.
[55]
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை நிலையத் தமரர் தொழவிருந் தான்நெடு மேருவென்னும் சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர் அலையத் தடம்பொன்னி சூழ்திரு வையாற் றருமணியே.
[56]
மணியார் அருவித் தடமிம யங்குடக் கொல்லிகல்லின் திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள் அணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம் பணிவார் அருவினை தீர்க்குமே கம்பர் பருப்பதமே.
[57]
பருப்பதம் சார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை மருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம்வில்லார் நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில் இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே.
[58]
இறைத்தார் புரமெய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னற்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றமென் தீவினைகள் குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே.
[59]
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர் தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம் ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆரூர் இடைமருதென் றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே.
[60]
நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம் புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர்ப் பனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே.
[61]
நண்ணிப் பரவுந் திருவா வடுதுறை நல்லம்நல்லூர் மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர் எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின்சென்றே.
[62]
சென்றே விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ வின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழிலழுந்தூர் வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதிலொற்றியூர் நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே.
[63]
நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர் சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர் குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால் அலாயென் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே.
[64]
ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க சோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை மாலையன் வாழ்திரு வாலங்கா டேகம்பம் வாழ்த்துமினே.
[65]
வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர் தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழாதவர்போய் வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழலெம் ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே.
[66]
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப் பெறுகின்ற வண்மையி னாலைய பேரருள் ஏகம்பனார் துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற் கச்சியைச் சூழ்ந்திளையோர் குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே.
[67]
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேயுலறி விள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே தெள்ளும் புனற்கச்சி யுற்திரு ஏகம்பர் சேவடியை உள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே. [68]
பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல் தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே வரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே.
[69]
வனவரித் திண்புலி யின்னதள் ஏகம்ப மன்னருளே எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும் தனவரிப் பந்துங் கெடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே இனவரிக்கல்லதர் செல்வதெங் கேயொல்லும் ஏழைநெஞ்சே.
[70]
நெஞ்சார் தரவின்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள் பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த வெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற அஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே.
[71]
இலவவெங் கான்உனை யல்லால் தொழேஞ்சரண் ஏகம்பனார் நிலவுஞ் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச் செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்கரத்துன் உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே.
[72]
துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தொன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.
[73]
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும் நென்னலிப் பாக்கைவந் தெய்தின ரேலெம் மனையிற்கண்டீர் பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர் மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே.
[74]
உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார் அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும் துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல் கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினுங் கார்மயிலே.
[75]
கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய் ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோரொலி பொன்மலைபோல் போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி நீர்மிக்க மாக்கட லின்னொலி யேயொக்கும் நேரிழையே.
[76]
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப் பார்த்தமை யாலிமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை போர்த்தமை யாலுமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள் சேர்த்தமை யாலிமைப் போதணி சீதஞ் சிறந்தனவே.
[77]
சிறைவண்டு பாடுங் கமலம் கிடங்கிவை செம்பழுக்காய் நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழிலிவை தீங்கனியின் பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார் நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே.
[78]
நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ் வாயுமிவ் வாறெனப்போய் மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை என்னவெ லாமொப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார் பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே.
[79]
உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர் வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களையாட் கொள்வார் பிறவி கொடாதவே கம்பர் குளிர்குவளை கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே.
[80]
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர் தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச் சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னு கராவொருத்தல் பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே.
[81]
கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும் வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர் விச்சா தரர்தொழு கின்ற விமானமுந் தன்மமறா அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே.
[82]
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம் பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள் தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே.
[83]
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கலுன்னும் நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத் தழையார் பொழில்உது பொன்னே நமக்குத் தளர்வில்லையே.
[84]
தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்ததழுவக் கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார் வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி உளரா வதுபடைத் தோம்மட வாயிவ் வுலகத்துளே.
[85]
உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால் சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே.
[86]
நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென் றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச் சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி தானன்பர் தேர்வரவே.
[87]
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய் பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின் கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே.
[88]
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம் ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே.
[89]
உயிரா யினவன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம் தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல் கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே.
[90]
கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப் போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனவண்டர் போதவிட்டார் தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன்நன்பூண் மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
[91]
விடைபாய் கொடுமையெண் ணாதுமே லாங்கன்னி வேல்கருங்கண் கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி மடைபாய் வயலிள முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம் கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போற் கலந்தெழுமே.
[92]
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க் கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே செழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல முழுமலர்க் கூரம்பின் ஓரிரண் டாலும் முகத்தனவே.
[93]
முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை உகம்பார்த் திரேலென் நலமுயர் ஏகம்பர் கச்சிமுன்நீர் அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச்செவ்வாய் நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே.
[94]
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம் இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார் துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல் முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.
[95]
மேயிரை வைகஅக் குருகுண ராமது உண்டுபுன்னை மீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப் பாயிரை நாகம்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர் தூயிரை கானல்மற் றாரறி வார்நந் துறைவர்பொய்யே.
[96]
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க் கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம்வந் தார்ப்ப அணைகின்றதே.
[97]
இன்றுசெய் வோமித னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும் நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில் சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடாதடிமை நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.
[98]
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம் ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதவெம்மைப் பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாட்டிவைத் தார்பர வித்தொழு வாமவர் பாதங்களே.
[99]
பாதம் பரவியொர் பித்துப் பிதற்றினும் பல்பணியும் ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தெனவே போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும் வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
[100]
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது
11 -ஆம் திருமுறை பதிகம் 11.030  
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
பண் - (திருவொற்றியூர் )
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த ஒற்றி மாநகர் உடையோய் உருவின் பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே பாவகன் பரிதி பனிமதி தன்னொடும் மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம் தண்ணொளி ஆரம் தாரா கணமே விண்ணவர் முதலா வேறோர் இடமாக் கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம் எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே அணியுடை அல்குல் அவனிமண் டலமே மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி வானவர் முதலா மன்னுயிர் பரந்த ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும் இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ டொன்றிய துப்புரு இருவகை ஆகி முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ டேழுல காகி எண்வகை மூர்த்தியோ டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி எவ்வகை அளவினில் கூடிநின்று அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
[1]
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும் புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும் பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும் அருவமும் உருவமும் ஆனாய் என்றும் திருவமர் மாலொடு திசைமுகன் என்றும் உளனே என்றும் இலனே என்றும் தளரான் என்றும் தளர்வோன் என்றும் ஆதி என்றும் அசோகினன் என்றும் போதியிற் பொலிந்த புராணன் என்றும் இன்னவை முதலாத் தாமறி அளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிப் பற்றிய அடையின் பளிங்கு போலும் ஒற்றி மாநகர் உடையோய் உருவே.
[2]
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின் முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும் ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும் பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை எல்லாம் நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதனின் உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.
[3]
பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர் உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும் திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும் வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம் மன்னிய வேலையுள் வான்திரை போல நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும் விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர மூவா மேனி முதல்வ நின்னருள் பெற்றவர் அறியின் அல்லது மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.
[4]
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை துயக்க நின்திறம் அறியாச் சூழலும் உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது கறைபட ஆங்கே கரந்த கள்ளமும் செய்வினை உலகினிற் செய்வோய் எனினும் அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும் இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர் மனத்திடை வாரி ஆகிய வனப்பும் அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச் சேய்மையும் நாள்தோறும் என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின் கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல் உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர மன்னிய பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.
[5]
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி ஆமதி யானென அமைத்த வாறே அறனுரு வாகிய ஆனே றேறுதல் இறைவன் யானென இயற்று மாறே அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் பொதுநிலை யானென உணர்த்திய பொருளே முக்கணன் என்பது முத்தீ வேள்வியில் தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே வேத மான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நானென நவிற்று மாறே மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில் உண்மை யானென உணர்த்திய வாறே நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும் பொருநற் பூதப் படையோய் என்றும் தெருளநின் றுககினில் தெருட்டு மாறே ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும் ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க் காதி ஆகிய அறுதொழி லாளர் ஓதல் ஒவா ஒற்றி யூர சிறுவர்தம் செய்கையிற் படுத்து முறுவலித் திருத்திநீ முகப்படு மளவே.
[6]
அளவினில் இறந்த பெருமையை ஆயினும் எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும் வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே கைவலத் திலைநீ எனினும் காதல் செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே சொல்லிய வகையால் துணையலை ஆயினும் நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை தங்கிய அவரைச் சாராய் நீயே அஃதான்று பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை அகலா அகற்சியை அணுகா அணிமையை செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை வெய்யை தணியை விழுமியை நொய்யை செய்யை பசியை வெளியை கரியை ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள் நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி ஏனைய வாகிய எண்ணில் பல்குணம் நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின் ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம் சொல்நிலை சுருங்கின் அல்லது நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.
[7]
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்தொன் றாக ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத் திரையுடைத் தோலே செழுந்திரை யாகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஓசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக் கால்கையின் நரம்பே கண்ட மாக மேதகு நிணமே மெய்ச்சா லாக முழக்குடைத் துளையே முகங்க ளாக வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங் காவா என்றுநின் அருளினைப் பெற்றவர் நாவா யாகிய நாதநின் பாதம் முந்திச் சென்று முறைமையின் வணங்கிச் சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப் பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத் துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக் காமப் பாரெனுங் கடுவெளி அற்றத் தூமச் சோதிச் சுடருற நிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும் ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.
[8]
ஒற்றி யூர உலவா நின்குணம் பற்றி யாரப் பரவுதல் பொருட்டா என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின் ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை கேவலம் சேய்மையிற் கேளான் ஆயினும் பிரித்தற் கரிய பெற்றிய தாகிக் குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின் மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம் வாய்தலை அறியா மயக்குறும் வினையேன் மல்கிய இன்பத் தோடுடன் கூடிய எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக் கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன் துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி வெள்ளிடை காண விருப்புறு வினையேன் தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும்நம் சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும் துன்பமுந் துறவுந் தூய்மையும் அறிவும் இன்பமும் புகழும் இவைபல பிறவும் சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும் என்றிவை முதலா விளங்குவ எல்லாம் ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி அல்லது சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச் சேர்விட மதனைத் திறப்பட நாடி எய்துதற் கரியோய் யானினிச் செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.
[9]
காலற் சீறிய கழலோய் போற்றி மூலத் தொகுதி முதல்வ போற்றி ஒற்றி மாநகர் உடையோய் போற்றி முற்றும் ஆகிய முதல்வ போற்றி அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி இணைபிறி தில்லா ஈச போற்றி ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி விரிகடல் வையக வித்தே போற்றி புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி காண முன்பொருள் கருத்துறை செம்மைக் காணி யாகிய அரனே போற்றி வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும் தீப மாகிய சிவனே போற்றி மாலோய் போற்றி மறையோய் போற்றி மேலோய் போற்றி வேதிய போற்றி சந்திர போற்றி தழலோய் போற்றி இந்திர போற்றி இறைவ போற்றி அமரா போற்றி அழகா போற்றி குமரா போற்றி கூத்தா போற்றி பொருளே போற்றி போற்றி என்றுனை நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.
[10]
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.031  
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
பண் - (திருநாரையூர் )
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான்.
[1]
முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான் உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே.
[2]
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய் பின்னவலம் செய்வதென்னோ பேசு.
[3]
பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென் றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத் தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே.
[4]
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும் பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர் மன்நாரை யூரான் மகன்.
[5]
மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும் சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின் அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.
[6]
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை வருந்தவெண்ணு கின்ற மலம்.
[7]
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேபுன்னை வாழ்த்துவனே.
[8]
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத் தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும் நாரையூர் நம்பர்மக னாம்.
[9]
நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.
[10]
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய் கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.
[11]
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன் காவில் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண் ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.
[12]
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி எடுத்த மதமுகத்த ஏறு.
[13]
ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழும் நாரைப் பதியுள் விநாயகனே.
[14]
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு மாசார மோசொல்லு வான்.
[15]
வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும் கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின் மானிற் பிறந்த களிறென் றுரைப்பரிவ் வையகத்தே.
[16]
வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர் மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான் ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.
[17]
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின் றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.
[18]
அவம்தியா துள்ளமே அல்லற நல்ல தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம் கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர் நம்பன் சிறுவன்சீர் நாம்.
[19]
நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும் நாண்மலரால் தாந்தனமாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே சேர்ந்தன னேயைந்து செங்கைய னேநின் திரள்மருப்பை ஏந்தின னேயென்னை ஆண்ட னேயெனக் கென்னையனே.
[20]
Back to Top
நம்பியாண்டார் நம்பி கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.032  
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பண் - (கோயில் (சிதம்பரம்) )
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணா வருட் கியானினி யாரென்பனே.
[1]
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேயெழுந்த அன்பின் வழிவந்த வாரமிர் தேயடி யேனுரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.
[2]
அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியான்அழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேயிட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம் சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.
[3]
பயல்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார் முயல்கின் றிலேன்நின் திருவடிக் கேயப்ப முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துளெந் தாய்இங்ஙனே அயர்கின்ற நானெங்ங னேபெறு மாறுநின் னாரருளே.
[4]
அருதிக்கு விம்ம நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு பருதிக் குழவி யுமிழ்கின்றதே யொக்கும் பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும் மெய்த்த சுருதிப் பதமுழங் குந்தில்லை மேய சுடரிருட்கே.
[5]
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தவென்பும் மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும் அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே.
[6]
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள் நாத னவனெச்சன் நற்றலை யும் தக்க னார்தலையுங் காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று மாதவ ரென்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.
[7]
வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டுவன் பாம்புதன்னின் கழுத்தரு கேதுயின் றான்உட்கப் பாந்தளைக் கங்கணமாச் செழுந்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கையிட அழுத்திய கல்லொத் தன்ஆய னாகிய மாயவனே.
[8]
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ் சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழலெவர்க்குந் தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே.
[9]
நிழல்படு பூண்நெடு மாலயன் காணாமை நீண்டவரே தழல்படு பொன்னக லேந்தித் தமருகம் தாடித்தமைத் தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை யம்பலத்தே குழல்படு சொல்வழி யாடுவர் யாவர்க்குங் கூத்தினையே.
[10]
கூத்தனென் றுந்தில்லை வாணனென் றுங்குழு மிட்டிமையோர் ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே யிடுதுணங்கை மூத்தவன் பெண்டிர் குணலையிட் டாலும் முகில்நிறத்த சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.
[11]
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின் மன்னிநின்ற விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் னுடல்முழுதும் கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள் கற் றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோவெனக் கிப்பிறப்பே.
[12]
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர் நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடக மாடுகின்ற துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர் உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.
[13]
உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே கண்டேன் எடுத்த கழலுங் கனலுங் கவித்தகையும் ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கு மொளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை யம்பலத் தாடும் மணியினையே.
[14]
மண்யொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத் தணியொப் பனவவன் தன்முடி மேலடி யேனிடர்க்குத் துணியச் சமைத்தநல் ஈர்வா ளனையன சூழ்பொழில்கள் திணியத் திகழ்தில்லை யம்பலத் தான்தன் திருந்தடியே.
[15]
அடியிட்ட கண்ணினுக் கோஅவ னன்பினுக் கோ அவுணர் செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோ தில்லை யம்பலத்து முடியிட்ட கொன்றை நன் முக்கட் பிரான்அன்று மூவுலகும் அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.
[16]
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல் விடைபடு கேதுக விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளூகண்டாய் புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே.
[17]
புகவிகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணியற் கங்கண னென்றனன்றும் தகவு கொலாம்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.
[18]
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன் செங்கோல விந்திரன் தோள்தலை யூர்வேள்வி சீருடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால் எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.
[19]
ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை யம்பலத்து மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.
[20]
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே.
[21]
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் வந்திக் கவும்மனம் வாய்கர மென்னும் வழிகள்பெற்றுஞ் சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை யம்பலத்துள் அந்திக் கமர்திரு மேனியெம் மான்ற னருள்பெறவே.
[22]
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம் சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்துற விக்குநன்றாம் இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.
[23]
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற் றம்பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம் உரைப்புள வோவயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே.
[24]
அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக் கூத்த அடியமிட்ட முகிழ்சூ ழிலையும் முகைகளு மேயுங்கொல் கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப் புகழ்சூ ழிமையவர் போற்றித் தொழுநின் பூங்கழற்கே.
[25]
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமேல் ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச் சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
[26]
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான் வேகம் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல் மோகங் கலந்தன் றுலந்ததன் றோவிந்த மூவுலகே.
[27]
மூவுலக கத்தவ ரேத்தித் தொழுதில்லை முக்கட்பிராற் கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த் தாவு தொழிற்பட் டெடுத்தனன் மாலயன் சாரதியா மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.
[28]
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை யம்பலத்து மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப் போதகப் போர்வைப் பொறிவா ளரவரைப் பொங்குசினச் சாதகப் பெண்பிளை தன்ஐயன் தந்த தலைமகனே.
[29]
தலையவன் பின்னவன் தாய்தந்தை யிந்தத் தராதலத்து நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்அடு வாகிநின்ற கொலையவன் சூலப் படையவன் ஆலத் தெழுகொழுந்தின் இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே.
[30]
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை யம்பலத்துள் அறையும் புனல்சென்னி யோனரு ளாலன் றடுகரிமேல் நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்ப்பரிமேல் நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.
[31]
நல்வழி நின்றார் பகைநன்று நொய்ய ருறவிலென்னும் சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை யம்பலத்து வில்வழி தானவ ரூரெரித் தோன்வியன் சாக்கியனார் கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.
[32]
கதியே யடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த நிதியே நிமிர்புன் சடையமிர் தேநின்னை யென்னுள்வைத்த மதியே வளர்தில்லை யம்பலத் தாய்மகிழ் மாமலையாள் பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே.
[33]
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில் நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே புழையார் கரியுரித் தோய் தில்லை நாத பொறுத்தருளே.
[34]
பொறுத்தில னேனும்பல் நஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச் செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரானத் திரிபுரங்கள் கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.
[35]
அடுக்கிய சீலைய ராய்அக லேந்தித் தசையெலும்பில் ஒடுக்கிய மேனியோ டூணிரப் பாரொள் ளிரணியனை நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல இடுக்கிய பாதன்றன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
[36]
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய் மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை யம்பலத்துப் போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.
[37]
புண்ணிய னேயென்று போற்றி செயாது புலன்வழியே நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல் என்னுள் வந்திட் டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர் திங்கள் வைத்த கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.
[38]
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை செறுத்தசிந் தாமணி யேதில்லை யாயென்னைத் தீவினைகள் ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ பிறர்என் னுறுதுயரை அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ வருஞ்சொ லரும்பழியே.
[39]
பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும் அழித்திட் டிறைச்சி கலைய னளித்த விருக்குழங்கன் மொழித்தக்க சீரதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும் இழித்தக்க வென்னா தமிர்துசெய் தானென் றியம்புவரே.
[40]
வரந்தரு மாறிதன் மேலுமுண் டோவயல் தில்லைதன்னுள் புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே நிரந்தர மாய்நின்ற வென்னையும் மெய்ம்மையின் தன்னடியார் தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மையிதே.
[41]
தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான் குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடையுடையோன் மன்றா டவும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கியங்கே ஒன்றார் இரண்டில் விழுவரந் தோசில வூமர்களே.
[42]
களைக கணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும் துளைக ணிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையாம் தளைக ணிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரனென்றேன் வளைக ணிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.
[43]
வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம் தரித்தவன் தன்மக னென்பதோர் பொற்புந் தவநெறிகள் தெரித்தவன் தில்லையுட் சிற்றம் பலவன் திருப்புருவம் நெரித்தலும் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.
[44]
நின்றில வேவிச யன்னொடுஞ் சிந்தை களிப்புறநீள் தென்தில்லை மாநட மாடும் பிரான்தன் திருமலைமேல் தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர் கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.
[45]
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன் விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன் இருப்புரு வச்சிந்தை யென்னைவந் தாண்டது மெவ்வணமோ பொருப்புரு வப்புரி சைத்தில்லை யாடல் புரிந்தவனே.
[46]
புரிந்தஅன் பின்றியும் பொய்மையி லேயும் திசைவழியே விரிந்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பின் வியன்நமனார் பரிந்தவ னூர்புக லில்லை பதிமூன் றெரியவம்பு தெரிந்தவெங் கோன்தன் திரையார் புனல்வயற் சேண்தில்லையே.
[47]
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு பூண்டிலை நின்னை மறந்திலை யாங்கவன் பூங்கழற்கே மாண்டிலை யின்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான் மீண்டனை யென்னையென் செய்திட வோசிந்தை நீவிளம்பே.
[48]
விளவைத் தளர்வித்த விண்டுவுந் தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற வன்றும் அடுக்கல்பெற்ற தளர்வில் திருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க் களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.
[49]
கங்கை வலம்இடம் பூவலங் குண்டலம் தோடிடப்பால் தங்குங் கரம்வலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம் சங்க மிடம்வலம் தோலிட மாடை வலம்அக்கிடம் அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா ணிடமணங்கே.
[50]
அணங் காடகக்குன்ற மாதற ஆட்டிய வாலமர்ந்தாட் கிணங்கா யவன்தில்லை யெல்லை மிதித்தலு மென்புருகா வணங்கா வழுத்தா விழாவெழும் பாவைத் தவாமதர்த்த குணங்காண் இவளென்ன வென்றுகொ லாம்வந்து கூடுவதே.
[51]
கூடுவ தம்பலக் கூத்த னடியார் குழுவுதொறும் தேடுவ தாங்கவ னாக்கமச் செவ்வழி யவ்வழியே ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்டசுட ரைப்பிறவி வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.
[52]
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத்தெண்தோள் மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம் சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமியர்க்கல்லால் புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.
[53]
பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர் புயல்மறந்த கன்னன்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர் மன்னு மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே.
[54]
நேசனல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ் வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேனென்தன் வாயதனால் தேசனென் னானைபொன் னார்திருச் சிற்றம் பலம்நிலவும் ஈசனென் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே.
[55]
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன் தக்கன் வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடலூர் சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர் இனந்தலை வன்னரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.
[56]
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும் தவமதித் தொப்பில ரென்னவிண் ணாளுந் தகைமையரும் நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும் சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே.
[57]
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
[58]
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல் விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும் தீத் தரித்திட்ட வங்கையும் சங்கச் சுருளுமென் நெஞ்சினுள்ளே தெரித்திட்ட வாதில்லை சிற்றம் பலத்துத் திருநடனே.
[59]
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செயும் காமனன்று கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண் விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை ஒடுங்கிய காலனந் நாள்நின் றுதையுணா விட்டனனே.
[60]
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில் இட்டங் கரியன்நல் லானல்லன் அம்பலத் தெம்பரன்மேல் கட்டங் கியகணை யெய்தலுந் தன்னைப்பொன் னார்முடிமேல் புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.
[61]
பொடிஏர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா வடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்தன் முடி ஏர்தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே.
[62]
கழலும் பசுபாசர் ஆம்இமை யோர்தங் கழல்பணிந்திட் டழலு மிருக்குந் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால் தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச் சுழலு மொருகா லிருகால் வரவல்ல தோன்றல்களே.
[63]
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத் தான்தலை பாதங்கள் சார்எரி யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத் தேன்றலை யான்பா லதுகலந் தாலன்ன சீரனைச்சீர் வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே.
[64]
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து மின்றங் கிடைக் குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம் துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக் கன்றங் கடைசடை மேலடை யாவிட்ட கைதவமே.
[65]
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்னடி யெற்குதவும் சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச்செய்ய அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே.
[66]
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள் செற்றறு மாமணிக் கோயிலின் நின்றது தேவர்கணம் சுற்றரு நின்புக ழேத்தித் திரிவது சூழ்சடையோய் புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
[67]
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற அல்லெறி மாமதிக் கண்ணியனைப் போலருளுவரே கல்லெறிந் தானுந்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.
[68]
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத் தெண்ணினை நீக்கி இமையோ ருகலத் திருக்கலுற்றீர் பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக் கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.
[69]
கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று கண்குழியல் பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட் கேயென்றும் பொன்றலில்லா அச்செல்வ மெய்திட வேண்டுதி யேல்தில்லை யம்பலத்துள் இச்செல்வன் பாதங் கருதிரந் தேனுன்னை யென்னெஞ்சமே.
[70]
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.033  
திருத்தொண்டர் திருவந்தாதி
பண் - ( )
பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்குமந் தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.
[1]
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர் ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.
[2]
சொல்லச் சிவன்திரு வாணைதன் தூமொழி தோள்நசையை ஒல்லைத் துறந்துரு மூத்தர் பின்னுமை கோனருளால் வில்லை புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.
[3]
செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன் தவனாய்க் கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந் தெய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே.
[4]
இயலா விடைச் சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச் செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்குமவன் செழுநீர்க் கயலார் இளையான் குடியுடை மாறனெங் கற்பகமே.
[5]
கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய் மற்றவன் தத்தாநமரே யெனச் சொல்லி வானுலகம் பெற்றவன் சேதிபன் மெயப்பொரு ளாமென்று பேசுவரே.
[6]
பேசும் பெருமையவ் வாரூ ரனையும் பிரானவனாம் ஈசன் தனையும் புறகுதட் டென்றவ னீசனுக்கே நேச னெனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல் வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே.
[7]
மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர் கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன் துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.
[8]
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்றாங் கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங் காட்டி யெனக்குன்குடி முழுதும் அடிமைவந் தாட்செ யெனப்பெற்ற வன்முரல்தேன் ஒழுகும் மலரின்நற் றாரெம்பி ரான்நம்பி யாரூரனே.
[9]
ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற் கென் றோருயர்தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொள்ளும் பாக ருடல்துணி யாக்குமவன் ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.
[10]
பத்தனை யேனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள் அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும் நித்தனை யீழக் குலதீப னென்பரிந் நீள்நிலத்தே.
[11]
நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணில் குருதிகண் டுள்நடுங்கி வலத்திற் கடுங்கணை யால்தன் மலர்க்கண் ணிடந்தப்பினான் குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.
[12]
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள் சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிர் கலயனையே.
[13]
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும் அலசு மெனக்கரு தாதவள் கூந்தல் அரிந்தளித்தான் மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாற னென்னும் வள்ளலே.
[14]
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே வெள்ளச் சடையா யமுதுசெய் யாவிடி லென்தலையைத் தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன்காண் அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே.
[15]
தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த தூயவன் பாதம் தொடர்ந்து தொல்சீர்த்துளை யாற்பரவும் வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன் ஆயவன் ஆனாய னென்னை யுவந்தாண் டருளினனே.
[16]
அருட்டுறை யத்தற் கடிமைபட் டேனினி யல்லனென்னும் பொருட்டுறை யாவதென் னேயென்ன வல்லவன் பூங்குவளை இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரானடைந்தோர் மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.
[17]
அவந்திரி குண்டம ணாவதின் மாள்வனென் றன்றாலவாய்ச் சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை உவந்தொளிர் பறையில் தேய்த்துல காண்டவொண் மூர்த்திதன்னூர் நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.
[18]
பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர் மதியஞ் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து துதியங் கழல்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டனம்பொன் அதிகம் பெறும்புக லூர்முரு கன்னெனும் அந்தணனே.
[19]
அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும்நின் றாதரத்தால் உந்தாத அன்பொடு ருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே.
[20]
நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப் போவா னாவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான் மாவார் பொழில்திக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே.
[21]
மண்டும் புனற்சடை யாந்தமர் தூசெற்றி வாட்டுவகை விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவனென்னா முண்டம் படர்பாறை முட்டு மெழிலார் திருக்குறிப்புத் தொண்டன் குலங்கச்சி யேகா லியர்தங்கள் தொல்குலமே.
[22]
குலமே றியசேய்ஞலூரிற் குரிசில் குரைகடல்சூழ் தலமே றியவிறற் சண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும் வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமேல் நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.
[23]
நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று துதியா வருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண் நதியார் புனல்வயல் நாவலர் கோனென்னும் நற்றவனே.
[24]
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள் உற்றவ னுற்ற விடம்அடை யாரிட வொள்ளமுதாத் துற்றவன் ஆமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே.
[25]
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலில் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே.
[26]
அருந்தமி ழாகரன் வாதி லமணைக் கழுநுதிமேல் இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோனெழிற் சங்கம்வைத்த பெரும்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசமல்கு குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.
[27]
சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக் கிறைநன் கழல்நாளை யெய்து மிவனருள் போற்றவின்றே பிறைநன் முடிய னடியடை வேனென் றுடல்பிரிந்தான் பிறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்ப னெனுநம்பியே.
[28]
நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலும் செம்பொன் னுருவனெ ன்அம்மை யெனப்பெற் றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே.
[29]
தனமா வதுதிரு நாவுக்கரசின் சரண மென்னா மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே இனமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள் பிரான் அனமார் வயல்திங்க ளூரினில் வேதியன் அப்பூதியே.
[30]
பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலுமஞ்சி ஊதித் துமிந்த மனைவியை நீப்பவுப் பாலவெல்லாம் பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் கேட்டுமவன் நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்னெனும் வேதியனே.
[31]
வேத மறிகரத் தாரூர் அரற்குவிளக்கு நெய்யைத் தீது செறியமண் கையரட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக வருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழிலேமப் பேறூ ரதிபன் நமிநந்தியே.
[32]
நந்திக்கும் நம்பெரு மாற்குநல் லாரூரில் நாயகற்குப் பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலில் சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே வந்திப் பவன்பெயர் வன்றொண்ட னென்பரிவ் வையகத்தே.
[33]
வைய மகிழயாம் வாழ வமணர்வலி தொலைய ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய் பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே.
[34]
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த அந்தாதி கொண்ட பிரானருட் காழியர் கொற்றவனே.
[35]
கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேம்திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவாள்உருவி யந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே.
[36]
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற வங்கணனே.
[37]
கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறு பிடித்தரற்குத் தண்ணார் புனல்தடம் தொட்டலுந் தன்னை நகுமமணர் கண்ணாங் கிழப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண் விண்ணா யகனிடைப் பெற்றவ னாரூர் விறல்தண்டியே.
[38]
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தகுகவற்றால் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள் முண்டநல் நீற்ற னடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர் நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.
[39]
சூதப்பொழி லம்ப ரந்தணன் சோமாசி மாறனென்பான் வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான் நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும் மாதுக்குக் காந்தன்வன் றொண்டன் தனக்கு மகிழ்துணையே.
[40]
துணையு மளவுமில் லாதவன் தன்னரு ளேதுணையாக் கணையுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையும் மவன்திரு வாரூர னாகின்ற அற்புதனே.
[41]
தகடன வாடையன் சாக்கியன் மாக்கல் தடவரையின் மகள்தனம் தாக்கக் குழைந்ததிண் டோளர்வண் கம்பர்செம்பொன் திகழ்தரு மேனியில் செங்க லெறிந்து சிவபுரத்துப் புகழ்தரப் புக்கவ னூர்சங்க மங்கை புவனியிலே.
[42]
புவனியில் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம் அவனியில் கீர்த்தித்தெ னாக்கூ ரதிப னருமறையோன் சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே.
[43]
புலியி னதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர் ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வ னுடல் துணித்துக் கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர் மலியும் பொழிலொண்செங் காட்டங் குடியவர் மன்னவனே.
[44]
மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநீறார் தன்னர் பிரான்தமர் போல வருதலுந் தான்வணங்க என்னர் பிரானடி வண்ணா னெனவடிச் சேரனென்னுந் தென்னர் பிரான்கழ றிற்றறி வானெனும் சேரலனே.
[45]
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த வீரக் கடகரி முன்புதன் பந்தி யிவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாயின்று தொண்டுபட்டே.
[46]
தொண்டரை யாக்கி யவரவர்க் கேற்ற தொழில்கள்செய்வித் தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண் கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள்தொறும் கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே.
[47]
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப ஒதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே.
[48]
கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக் கோற்றொத்து கூனனுங் கூன்போய்க் குருடனுங் கண்பெற்றமை சாற்றித் திரியும் பழமொழி யாமித் தரணியிலே. [49]
தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர் பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள்நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.
[50]
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடுபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியவெறி பத்தனுக் கீந்ததொர் வண்புகழே.
[51]
புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன் இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும் நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன் இட்டவன்நீள் திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.
[52]
திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென் றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம் புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே.
[53]
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான் சைவத் திருவுரு வாய்வரத் தானவன் தாள்கழுவ வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
[54]
கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன் உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடலிலனாய்க் கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றுங்கொள் கூலியினால் நம்பற் கெரித்த கலியொற்றி மாநகர்ச் சக்கிரியே.
[55]
கிரிவில் லவர்தம் மடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன திருவில் லவரையந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும் வரிவில் லவன்வயல் செங்கழு நீரின் மருவுதென்றல் தெருவில் விரைமக ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.
[56]
சத்தித் தடக்கைக் குமரன்நற் றாதைதன் தானமெல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மைநன் தாளரற் காயயம் ஏற்றலென்னும் பத்திக் கடல் ஐயடிகளா கின்றநம் பல்லவனே.
[57]
பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ் சொல்லவன் தென்புக லூரரன் பால்துய்ய செம்பொன்கொள்ள வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு நல்லவன் தன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே.
[58]
நன்னக ராய விருக்குவே ளூர்தனில் நல்குரவாய்ப் பொன்னக ராயநல் தில்லை புகுந்து புலீச்சரத்து மன்னவ ராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான் கன்னவில் தோளெந்தை தந்தை பிரானெம் கணம்புல்லனே.
[59]
புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைப்புக் கானென்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினில் காரியையே.
[60]
கார்த்தண் முகிற்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய் ஆர்த்த வமண ரழிந்தது கண்டுமற் றாங்கவரைக் கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவ னென்றுரைக்கும் வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.
[61]
மாறா வருளரன் தன்னை மனவா லயத்திருத்தி ஆறா வறிவா மொளி விளக் கேற்றி யகமலர்வாம் வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தங்கொடுத்தான் வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவரே.
[62]
என்று விளம்புவர் நீடூ ரதிபன் முனையடுவோன் என்று மமரு ளழிந்தவர்க் காக்கூலி யேற்றெறிந்து வென்று பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங் குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.
[63]
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவியவி நாசியை வேடர்சுற்றம் படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன் மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே.
[64]
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை யரியப்பொற்கை காதிவைத் தன்றோ வரிவதென் றாங்கவள் கைதடிந்தான் நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே.
[65]
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வ மெனப்பறைபோக் கெங்கட் கிறைவ னிருக்குவே ளூர்மன் இடங்கழியே.
[66]
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால் செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.
[67]
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா வுருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா தருவரை வில்லி யருளும் நிதியது பெற்றனனே.
[68]
பெற்ற முயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது சுற்ற மறுக்குந் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்ற மறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற வருட்கட் லென்றுல கேத்தும் பெருந்தகையே.
[69]
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன்தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளாலிவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூரரசே.
[70]
அரசினை யாரூ ரமரர் பிரானை அடிபணிந்திட் டுரைசெய்த வாய்தடு மாறி யுரோம புளகம்வந்து கரசர ணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி சொரிதரு மங்கத்தி னோர்பத்த ரென்று தொகுத்தவரே.
[71]
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த வியலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி வகுத்த மதில்தில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல் உகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்ப ருத்தமரே.
[72]
உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக்கீழ்ச் சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.
[73]
செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார் செல்வன் திருக்கணத் துள்ளவ ரேயத னால்திகழச் செல்வம் பெருகுதென் னாரூர்ப் பிறந்தவர் சேவடியே செல்வ நெறியுறு வார்க்கணித் தாய செழுநெறியே.
[74]
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின் அறிவால் வணங்கியர்ச் சிப்பவர் நம்மையு மாண்டமரர்க் கிறையாய்முக் கண்ணுமெண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும் உறைவார் சிவபெரு மாற்குறை வாய வுலகினிலே.
[75]
உலகு கலங்கினும் மூழி திரியினு முள்ளொருகால் விலகுத லில்லா விதியது பெற்றநல வித்தகர்காண் அலகில் பெருங்குணத் தாரூ ரமர்ந்த வரனடிக்கீழ் இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியு மிறைவர்களே.
[76]
வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழால் பெருக்கு மதுரத் தொகையிற் பிறைசூடி பெய்கழற்கே ஒருக்கு மனத்தொடப் பாலடிச் சார்ந்தவ ரென்றுலகில் தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நஞ் செழுந்தவரே.
[77]
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய மழுநீள் தடக்கைய னீந்தபொன் னாங்குக்கொள் ளாதுவந்தப் பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன் கெழுநீள் புகழ்த்திரு வாரூர னென்றுநாம் கேட்பதுவே.
[78]
பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான் கதுமெனச் செய்குவ தென்றுகொலா லாமென்று கண்துயிலா ததுமனத் தேயெல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர் புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனிற் பூசலையே.
[79]
பூச லயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர் தேசம் விளங்கத் தமிழா கரர்க்கறி வித்தவரால் நாசம் விளைத்தா ளருகந் தருக்குத்தென் னாட்டகத்தே.
[80]
நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந் தாட்டரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவரரையில் கூட்டுமக் கப்படம் கோவணம் நெய்து கொடுத்துநன்மை ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
[81]
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத் தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள் செய்வித்த வந்திருக் கோச்செங்க ணானென்னுஞ் செம்பியனே.
[82]
செம்பொ னணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுத லென்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணானென்னும் நித்தனையே.
[83]
தனையொப் பருமெருக் கத்தம் பூலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள் சினையொப் பலர்பொழில் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரனருள் பெற்றவ னென்பரிப் பூதலத்தே.
[84]
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையனென்னுங் குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தில் நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின் பலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே.
[85]
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக் கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங் கபாலங்கைக்கொண் டயந்தான் புகுமர னாரூர்ப் புனிதன் அரன்திருத்தாள் நயந்தாள் தனதுள்ளத் தென்று முரைப்பது ஞானியையே.
[86]
ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோம் மானவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக் கோனவன் கோயில் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.
[87]
கூட்டமொன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத்தோரெழு பத்திரண் டாம்வினையை வாட்டுந் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப் பாட்டுந் திகழ்திரு நாவலூ ராளி பணித்தனனே.
[88]
பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை யிலைமலிந்த அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர் இணைத்தநல் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின் மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே.
[89]
ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென் னூழ்வினைகள் வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர் சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையினுள்ள சேடர்தஞ் செல்வப் பெரும்புக ழந்தாதி செப்பிடவே.
[90]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.034  
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
பண் - ( )
பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளான் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
[1]
பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்க னருள்பெற வைத்தஎங்கள் நிதியைப் பிரமா புரநகர் மன்னனை யென்னுடைய கதியைக் கருதவல் லோரம ராவதி காவலரே.
[2]
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகையிருப் பேன்என்ன, மாரனென்னே! பூப்பயில் வாளிக ளஞ்சுமென் நெஞ்சுரங் கப்புகுந்த; வேப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் மீண்டிரவே.
[3]
இரவும் பகலும்நின் பாதத் தலரென் வழிமுழுதும் பரவும் பரிசே யருளுகண் டாயிந்தப் பாரகத்தே விரவும் பரமத கோளரி யே!குட வெள்வளைகள் தரளஞ் சொரியுங் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே.
[4]
மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப் பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய பொன்னியல் பாடகம் கிங்கிணிப் பாத நிழல்புகுவோர் துன்னிய காஅமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.
[5]
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர, வண்டினஞ் சூழ வருமிவன் போலும், மயிலுகுத்த கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம் போக்கழு வாவுடலம் விண்டினஞ் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
[6]
வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டும் முறுவல்நல் லார்தம் மனம்அணைய, உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு பொத்தகம் போலும்! முதுமுலைப் பாணன் புணர்க்கின்றதே.
[7]
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியின் சிறகொதுக்கி உணர்ந்தனர் போல விருந்தனை யால்உல கம்பரசும் குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதில் கொச்சையின்வாய் மணந்தவர் போயின ரோசொல்லு, வாழி! மடக்குருகே.
[8]
குருந்தலர் முல்லையங் கோவல ரேற்றின் கொலைமருப்பால் அருந்திற லாகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன் பெருந்திற மாமதில் சண்பை நகரன்ன பேரமைத்தோள் திருந்திழை ஆர்வம் . . . . . . . . . முரசே.
[9]
முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின் பரிசங் கொணர்வா னமைகின் றனர்பலர்; பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருது, அரு காசனிதன் சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.
[10]
மொழிவது, சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது, மற்றவன் தூமலர்ப் பாதங்கள்; தாமங்கமழ்ந் தெழுவது, கூந்தல் பூந்தா மரையினி யாதுகொலோ! மொழிவது, சேரி முப்புதை மாதர் முறுவலித்தே.
[11]
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன், கடலுடுத்த ஒலிதரு நீர்வை யகத்தை யுறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்,மட மாதினை வாட்டுவதே.
[12]
வாட்டுவர் தத்தந் துயரை;வன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால், தோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல்திற மானவை கற்றவரே.
[13]
அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு அன்னை யருகர்தம்மைத் தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பையென்னப் பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக் கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றுங் கடிநகரே.
[14]
நகரங் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று, நான்மறைகள் பகரங் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம் மகரங் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரானென்பர், நீணிலத்தே.
[15]
நிலம் ஏறியமருப் பின்திரு மாலும், நிலம்படைத்த குலம் ஏறியமலர்க் கோகனை தத்தய னுங்கொழிக்குஞ் சலம் ஏறியமுடி தாள்கண் டிலர்,தந்தை காணவன்று நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.
[16]
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிஃதே போதின் மலிவய லாக்கிய கோனமர் பொற்புகலி மேதை நெடுங்கடல் வாருங் கயலோ? விலைக்குளது காதி னளவும் மிளிர்கய லோ?சொல்லு; காரிகையே.
[17]
கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர் வன்மைய னேயென்னும் வண்ணம் நடித்து, விழுப்பொருளோ(டு) இம்மையில் யானெய்து மின்பங் கருதித் திரிதருமத் தன்மையி னேற்கும் அருளுதி யோ!சொல்லு சம்பந்தனே.
[18]
பந்தார் அணிவிரற் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர் நந்தா விளக்கினைக் கண்டது நானெப்பொழுது முன்னுஞ் சந்தார் அகலத் தருகா சனிதன் தடவரையே.
[19]
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல் நிரைகொண்டு வானோர் கடைந்ததின் நஞ்ச நிகழக்கொலாம், நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ் சுழலநொந் தோரிரவும் திரைகொண் டலமரு மிவ்வகல் ஞாலஞ் செறிகடலே.
[20]
கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் திடநம னேவுதற் கெவ்விடத் தானிருஞ் செந்தமிழால் திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன்செந் தாமரையின் வடமன்னு நீள்முடி யானடிப் போதவை வாழ்த்தினமே.
[21]
வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர் ஆழ்த்திய காலத்து மாழா தது,வரன் சேவடியே ஏத்திய ஞானசம் பந்தற் கிடமிசைத் தும்பிகொம்பர்க் காத்திகழ் கேதகம், போதக மீனுங் கழுமலமே.
[22]
மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி நீண்முடி வண்கமலப் பலர்மயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவரென்னத் தலைபயில் பூம்புனங் கொய்திடு மே?கணி யார்புலம்ப அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.
[23]
அரும்பின அன்பில்லை யர்ச்சனை யில்லை யரன்நெறியே விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன் பொய்க்கமைந்த இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால் கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.
[24]
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பில் கமிர்தமின்(று)இக் கொடியா னொடும்பின் நடந்ததெவ் வா(று)அலர் கோகனதக் கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்போல் வெடியா விடுவெம் பரல்சுறு நாறு வியன்கரத்தே.
[25]
சுரபுரத் தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும் அரபுரத் தானடி எய்துவ னென்ப, அவனடிசேர் சிரபுரத் தானடி யாரடி யேனென்றும் திண்ணனவே.
[26]
திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர் கண்ணென வோங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீன,மற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து) ஓடி எழுமுகிலே.
[27]
எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள், தனக்கின் றருளுங் கொலாந்,தொழு நீரவைகைக் குழுவா யெதிர்ந்த உறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா வுடலம் கழுவின வாக்கிய கற்பகமே.
[28]
கற்பா நறவம் மணிகொழித் துந்தும் அலைச்சிலம்பா! நற்பா மொழியெழில் ஞானசம் பந்தன் புறவமன்ன விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்(டு) இற்பா விடும்வண்ண மெண்ணுகின் றாளம்ம! வெம்மனையே.
[29]
எம்மனை யா,எந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்! வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று) உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே.
[30]
ஒளிறு மணிப்பணி நாட்டும், உலகத்தும் உம்பருள்ளும் வெளிறு படச்சில நிற்பதுண் டே?மிண்டி மீனுகளும் அளறு பயற்சண்பை நாத னமுதப் பதிகமென்னுங் களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.
[31]
கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம் செவிக்குத் தருவன, சிந்தைக் குரியன பைந்தரளம் நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.
[32]
கழல்கின்ற ஐங்கணை, யந்தியும், அன்றிலுங் கால்பரப்பிட்(டு) அழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்ப,வன் றாயிழைக்காச் சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய் உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ, இனிஇன் றுறுகின்றதே.
[33]
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப் பெறுகின்ற வின்பும், பிறைநுதல் முண்டமுங் கண்டவரைத் தெறுகின்ற வாறென்ன செய்தவ மோ!வந்தென் சிந்தையுள்ளே துறுகின்ற பாதன் கழுமலம் போலுந் துடியிடைக்கே.
[34]
இடையு மெழுதா தொழியலும் ஆம்;இன வண்டுகளின் புடையு மெழுதினும் பூங்குழ லொக்குமப் பொன்னனையாள் நடையும் நகையுந் தமிழா கரன்தன் புகலிநற்றேன் அடையும் மொழியு மெழுதிடின், சால அதிசயமே.
[35]
மேனாட் டமரர் தொழவிருப் பாரும், வினைப்பயன்கள் தாநாட் டருநர கிற்றளர் வாருந் தமிழர்தங்கள் கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் பூநாட்டு அடிபணிந் தாருமல் லாத புலையருமே.
[36]
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் மலைமடப் பாவைக்கு மாநட மாடும் மணியையென்தன் தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா, முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந் தாளென்தன் மொய்குழலே.
[37]
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் கழலியல் பாதம் பணிந்தே னுனையுங் கதிரவனே! தழலியல் வெம்மை தணித்தருள் நீ;தணி யாதவெம்மை அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற வாரணங்கே.
[38]
அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை பெண்பனை யாக்கி,அமண் கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின, வெண்பிறையோ(டு) இணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.
[39]
இருந்தண் புகலி,கோ லக்கா, வெழிலா வடுதுறை,சீர் பொருந்தும் அரத்துறை போனகம், தாளம்,நன் பொன், சிவிகை அருந்திட ஒற்ற,முத் தீச்செய வேற வரனளித்த பெருந்தகை சீரினை யெம்பர மோ!நின்று பேசுவதே.
[40]
பேசுந் தகையதன் றேயின்று மன்றும் தமிழ்விரகன் தேசம் முழுதும் மழைமறந்(து) ஊண்கெடச் செந்தழற்கை ஈசன் திருவரு ளாலெழில் வீழி மிழலையின்வாய்க் காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே.
[41]
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால் வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானவர் பொன்னுலகே.
[42]
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை, யருகர்தங்கள் தென்னாட் டரணட்ட சிங்கத் தினை,யெஞ் சிவனிவனென்(று) அந்நாள் குதலைத் திருவாய் மொழிக ளருளிச்செய்த என்னானை யைப்பணி வார்க்கில்லை, காண்க யமாலயமே.
[43]
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று, மணிகுறுக்கி வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில் மன்மதன் வில்குனித்த கோலையெப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ் சோலையைக் காழித் தலைவன் மலரின்று சூடிடினே.
[44]
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள் கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை நீயுங் கொடும்பகைநின்(று) ஆடுதற் கேயத்த னைக்குனை யே,நின்னை யாடரவம் வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.
[45]
மதிக்க தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித் துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்தண் தேனுண்டு, மிண்டிவரால் குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே.
[46]
குறுமனம் உள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன நறுமலர் மென்குழ லாயஞ்ச லெம்மூர் நகுமதிசென்(று) உறுமனை யொண்சுவ ரோவியக் கிள்ளைக்கு நும்பதியிற் சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை நீட்டுவர்; சேயிழையே.
[47]
இழைவள ராகத்து ஞான சம்பந்த னிருஞ்சுருதிக் கழைவளர் குன்று கடத்தலுங் காண்பீர் கடைசியர்,நீள் முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும் மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவளலே.
[48]
வயலார் மருகல் பதிதன்னில், வாளர வாற்கடியுண்(டு) அயலா விழுந்த அவனுக் கிரங்கி யறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையி னைனென்னத் தோன்றிடும் புண்ணியமே.
[49]
புண்ணிய நாடு புகுவதற் காகக் புலனடக்கி, எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல் லாருமின் றியானெனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க் கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.
[50]
கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை இரதக் கிளிமொழி மாதே! கலங்கல் இவருடலம் பொருதக் கழுநிரை யாக்குவன்; நுந்தமர் போர்ப்படையேல் மருதச் சினையில் பொதும்பரு ளேறி மறைகுவனே.
[51]
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட, வயற்கடைஞர் பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல துறைமுழங் குங்கரி சீறி, மடங்கள் சுடர்ப்பளிங்கின் அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே.
[52]
பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப் பிறைபல் கதிர்விழுந்த வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும் மொழிக்கே விரும்பி முளரிக் கலமரு மோவியர்தம் கிழிக்கே தருமுரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.
[53]
கீளரிக் குன்றத் தரவ முமிழ்ந்த கிளர்மணியின் வாளரிக் கும்வைகை மாண்டன ரென்பர் வயற்புகலித் தாளரிக் கும்அரி யானருள் பெற்ற பரசமய கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.
[54]
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்றன் குன்றகஞ்சேர் வண்டக மென்மலர் வல்லியன் னீர்!வரி விற்புருவக் கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும் புண்தகக் கேழல் புகுந்ததுண் டோ?நுங்கள் பூம்புனத்தே.
[55]
புனத்தெழு கைம்மதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய், வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்,வந்து வந்தடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொஞ்சையன்னாள் கனத்தெழு கொங்கைக ளாயல்கு லாய்த்திவர் கட்டுரையே.
[56]
கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை இட்டது வேயன்றி, யெட்டனைத் தானிவ ளுள்ளுறுநோய் விட்டது வே?யன்றி வெங்குரு நாதன்றன் பங்கயத்தின் மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின், பேதை மகிழ்வுறவே.
[57]
உறவும், பொருளுமொண் போகமுங் கல்வியுங் கல்வியுற்ற துறவும், துறவிப் பயனு மெனக்குச் சுழிந்தபுனல் புறவும், பொழிலும் பொழில்சூழ் பொதும்புந் ததும்பும்வண்டின் நறவும், பொழிலெழிற் காழியர் கோன்திரு நாமங்களே.
[58]
நாமுகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல் ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி யிடிபடுக்கத் தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவம் முகையரும்பக் காமுகம் பூமுகங் காட்டிநின் ரார்த்தன காரினமே.
[59]
கார்அங்(கு) அணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச் சீர்அங்(கு) அணைநற் பெருமணந் தன்னில் சிவபுரத்து, வார்அங்(கு) அணைகொங்கை மாதொடும் புக்குறும் போது,வந்தார் ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல் லால்,அவ் அரும்பதமே.
[60]
அரும்பத மாக்கு மடயரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய பெரும்பத மெய்தலுற் றீர்!வந் திறைஞ்சுமின், பேரரவம் வரும்ப நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத் தரும்பத ஞானசம் பந்தனென் னானைதன் தாளிணையே.
[61]
தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் கீளின் மலங்க விலங்கே புகுந்திடும், கெண்டைகளும், வாளுந் தொலைய மதர்த்திரு காதி னளவும்வந்து மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.
[62]
நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை; விரவலரூர் புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றி; புறவமன்கைத் தகுகின்ற கோடல்கள்; அன்பரின் றெய்துவர் கார்மயிலே.
[63]
மயிலேந் தியவள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த எயிலேந் தியசண்பை நாத னுலகத்(து) எதிர்பவர்யார்? குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பி னம்புதழீஇ அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே.
[64]
அண்ணல் மணிவளைத் தோளரு காசனி சண்பையன்ன பெண்ணி னமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடுபூஞ் சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட துண்டுகொல்? தூங்கொலிநீர்த் தண்ணம் பொழிலெழிற் காசினி பூத்தமென் தாதுகளே.
[65]
தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந் யார்சட லம்படுத்துத் தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்; பேதியிற் புத்தர்கள்! வம்மின்; புகலியர் கோனன்னநாட் காதியிட் டேற்றும் கழுத்திறம் பாடிக் களித்திடவே.
[66]
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் வெளியுறு ஞாலம் பகலிழுந் தால்,விரை யார்கமலத்(து) அளியுறு மென்மலர்த் தாதளைந்(து) ஆழி யழைப்பவரும் துளியுறு வாடையி தாம்மட மானைத் துவளவிப்பதே.
[67]
தேறும் புனல்தில்லைச் சிற்றம் பலத்துச் சிறந்துவந்துள் ஊறு மமிர்தைப் பருகிட் டெழுவதொ ருட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித் தவன்கொழுந்தேன் நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.
[68]
நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம் துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரினைய நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச லெனவண்ண லன்றோவெனா மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
[69]
மன்னங் கனை!செந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர் அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர் வேழத் திடைவிலங்கிப் பொன்னங் கலைசா வகையெடுத் தாற்கிவள் பூணழுந்தி இன்னந் தழும்புள வாம்பெரும் பாலுமவ் வேந்தலுக்கே.
[70]
ஏந்தும் உலகுறு வீரெழில் நீலநக் கற்குமின்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக் காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய் வேந்தின் துயர்தவிர்த் தானையெப் போதும் விரும்புமினே.
[71]
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய வின்னமிர்தம் அரும்பும் புனற்சடை யாய்உண் டருளென் றடிபணிந்த இரும்பின் சுடர்களிற் றான்சிறுத் தொண்டனை யேத்துதிரேல் சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே.
[72]
எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்துணையாங் கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின் ஞான வமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்ற னாரருளே.
[73]
அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச் சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்(து) உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு வானை யருளியன்றே மருளின் மொழிமட வாள்பெய ரென்கண் வருவிப்பதே.
[74]
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும் திருவார் இருந்த செழுநகரச் செவ்வித் திருவடிக்காள் தருவான் தமிழா கரகரம் போற்சலம் வீசக்கண்டு வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
[75]
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காணிறையே மன்னார் பரிசனத் தார்மேல் புகலு மெவர்க்குமிக்க நன்னா வலர்பெரு மானரு காசனி நல்கிடவே.
[76]
நல்கென் றடியி னிணைபணி யார்;சண்பை நம்பெருமான் பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு) ஒல்கு முடம்பின ராய்,வழி தேடிட் டிடறிமுட்டிப் பில்கு மிடமறி யார்கெடு வாருறு பேய்த்தனமே.
[77]
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல் மனமே புகுந்த மடக்கொடி யே!மலர் மேலிருந்த அனமே! யமிர்தக் குமுதச்செவ் வாயுங்க ளாயமென்னும் இனமே பொலியவண் டாடெழிற் சோலையு ளெய்துகவே.
[78]
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத் தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால், பகட்டில் பொலியினும் வேண்டேன், ஒருவரைப் பாடுதலே.
[79]
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில் பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான் நாடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக் கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே.
[80]
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி, மனைப்புறத்து நிலையெத் தனைபொழு தோகண்ட(து) ஊரனை நீதிகெட்டார் குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன சிலையொத்த வாள்நுதல்! முன்போல் மலர்க திருக்கண்களே.
[81]
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால் பண்ணார் தரப்பாடு சண்பையர் கோன்பாணி நொந்திடுமென்(று) எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன் தாளங்க ளீயக்கண்டும் மண்ணார் சிலர்சண்பை நாதனை யேத்தார் வருந்துவதே.
[82]
வருந்துங் கொலாங்கழல், மண்மிசை யேகிடில் என்றுமென்றார்த் திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள் பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்;புண ரித்திகழ்நஞ்(சு) அருந்தும் பிரான்நம் மரத்துறை மேய வரும்பொருளே.
[83]
பொருளென வென்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்(கு) அருளிய சீர்த்திரு ஞானசம் பந்த னருளிலர்போல் வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின் திரளினை யாதரித் தால்நன்று சாலவென் சிந்தனைக்கே.
[84]
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும் எந்தையைப் பாட லிசைத்துத் தொலையா நிதியமெய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல் நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந் தேகரம் நீட்டுவரே.
[85]
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித் தோடுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரின் வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு) உண்ணீ ருணக்குழித்த காட்டுவ ரூறல் பருகும் கொலாமெம் கனங்குழையே.
[86]
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம் அழைக்கின்ற கொண்ட லியம்புஒன் றிலையகன் றார்வரவு பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்(து) இழைக்கின்ற கூடல் முடயஎண் ணாத இளங்கொடிக்கே.
[87]
கொடித்தே ரவுணர் குழாமன லூட்டிய குன்றவில்லி அடித்தேர் கருத்தி னருகா சனியை யணியிழையார் முடித்தேர் கமலர் கவர்வான், முரிபுரு வச்சிலையால் வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே.
[88]
வளைபடு தண்கடற் கொச்சை வயவன் மலர்க்கழற்கே வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரில்அம்கு வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறுமிந்த வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே.
[89]
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி, முறைவழுவா(து) எத்தனை காலம்நின்று ஏத்து மவரினு மென்பணிந்த பித்தனை, யெங்கள் பிரானை, யணைவ தெளிதுகண்டீர்; அத்தனை, ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.
[90]
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற்கதவினை அன்று உடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை யுரகவிடம் துடைத்தது தோணி புரத்துக்கு இறைவன் சுடரொளிவாய் படைத்தது தண்மையை நள்ளாற்று அரசு பணித்திடவே.
[91]
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதமென்று தணிபடு மின்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழலுமிழ்கான் மணிபடு பொற்கழல் ஞானடம் பந்தன் மருவலர்போல் துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே.
[92]
தோன்றல்தன் னோடுட னேகிய சுந்தரப் பூண்முலையை ஈன்றவ ரேயிந்த வேந்திழை யார் இவ்வளவில் வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே.
[93]
பொருந்திய ஞானத் தமிழா கரன்பதி, பொற்புரிசை திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால் கருந்தடம் நீரெழு காலையிற் காகூ கழுமலமென்(று) இருந்திட வாமென்று வானவ ராகி யியங்கியதே.
[94]
இயலா தனபல சிந்தைய ராயிய லுங்கொலென்று முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழியழுந்திச் செயலார் வரைமதிற் காழியர் கோன்திரு நாமங்களுக்(கு) அயலா ரெனப்பல காலங்கள் போக்குவ ராதர்களே.
[95]
ஆதர வும்,பயப் பும்மிவ ளெய்தின ளென்றபலார் மாத ரவஞ்சொல்லி யென்னை நகுவது! மாமறையின் ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே தீதர வம்பட வன்னையென் னோபல செப்புவதே.
[96]
செப்பிய வென்ன தவம்முயன் ரேன்நல்ல செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழா கரனை, யுணர்வுடையோர் கற்புடை வாய்மொழி யேத்தும் படிதக றிட்டிவர மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்மிடையே.
[97]
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும் கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத் திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.
[98]
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யானுரைத்த பேருந் தமிழ்ப்பா வினவவல் லவர்பெற்ற வின்புலகங் காருந் திருமுடற் ராயரு ளாயென்று கைதொழுவர் நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.
[99]
பிரமா புரம்வெங் குரு,சண்பை, தோணி, புகலி,கொச்சை சிரமார் புரம்,நற் புறவந், தராய்,காழி, வேணுபுரம் வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க பரமார் கழுமலர் பன்னிரு நாமமிப் பாரகத்தே.
[100]
பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும் ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின் தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன் நாமஞ் செவிக்கிசையா நாள்.
[101]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.035  
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
பண் - ( )
பாலித் தெழில்தங்கு பாரகம் உய்யப் பறிதலையோர் மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத் தாலித் தலர்மிசை யன்னம் நடப்ப, வணங்கிதென்னாச் சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
[1]
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப் பொங்குவங் கப்புனல் சேர்த புதுமணப் புன்னையின்கீழ்ச் சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[2]
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பந் தவிரவன்று துவளத் தொடுவிடந் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன் திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சென்னியின் வாய்த் தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.
[3]
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கட மாக்கியஃதே வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன், வெண்குருகு புள்ளொண் தவளப் புரிசங்கொ டலாக் கயலுகளத் தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[4]
ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன், மென்கிளிமாந் தேறல்கோ தித்துறு சண்பகந் தாவிச் செழுங்கமுகின் தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[5]
அந்தமுந் தும்பிற வித்துயர் தீர வரனடிக்கே பந்தமுந் துந்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன் வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[6]
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புதவடைக்கும் ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனியும்பர் பம்பிமின்னுங் கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடுங் தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[7]
எண்டலைக் குந்தலை வன்கழல் சூடியெ னுள்ளம்வெள்ளங் கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம் விண்டலைப் பத்தியி லோடும் விரவி மிளிர்பவளம் தண்டலைக் குங்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[8]
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி யமண்முழுதும் பாறுமண் டக்கண்டு சைவ சிகாமணி பைந்தடத்த சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச் சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[9]
விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின் வடந்திளைத் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக் கடந்திளைத் துக்கழு நீர்புல்கி யொல்கிக் கரும்புரிஞ்சித் தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
[10]
பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து வாலிப்ப வாறதே றுங்கழ னிச்சண்பை யந்தமுந்து மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் எண்டலைக் குந்தலைவன் கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே.
[11]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.036  
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
பண் - ( )
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங் கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின் இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப் புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன் திருவருள் பெற்ற இருபிறப் பாளன் முத்தீ வேள்வு நான்மறை வளர ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன் ஏழிசை யாழை யெண்டிசை யறியத் துண்டப் படுத்த தண்டமிழ் விரகன் காழி நாடன் கவுணியர் தலைவன் மாழை நோக்கி மலைமகள் புதல்வன் திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந் நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
[1]
அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந் தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர் தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள் என்தலையின் மேலிருக்க வென்று.
[2]
என்று மடியவ ருள்ளத் திருப்பன விவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன வொண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.
[3]
அடுசினக் கடகரி யாதுபடி உரித்த படர்சடைக் கடவுள்தன் திருவரு ளாதனால் பிறந்தது கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது 5 தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது குழகனைப் பாடிக் கோலக்காப்புக் கழகுடைச் செம்பொன் தாளம் அவையே 10 தீர்த்தது தாதமர் மருகற் சடையனைப் பாடிப் பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்த தரசோ டிசையா அணிமறைக் காட்டுக் 15 குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற் றத்தியும் மாவும் தவிர அரத்துறை முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே பாடிற் 20 றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப் பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே 25 கண்டது உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணைப் பலகழு மிசையே நீத்த தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் 30 தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே நினைந்த தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர் 35 ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல ஞானசம் பந்தனிந் நானிலத் திடையே. 37
[4]
நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித் தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன் பத்தர்கள்போய் வாழும் பதி.
[5]
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு அதிக மணுக்க னமணர்க்குக் காலன் அவதரித்த மதியந் தவழ்மாட மாளிகைக் காழியென் றால்வணங்கார் ஒதியம் பணைபோல் விழுவரந் தோசில வூமர்களே.
[6]
தவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத் தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும் பெருவளம் தழீஇத் திருவளர் புகலி விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன் கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில் தேமரு தினைவளர் காமரு புனத்து மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா மூரி மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து முற்பட வந்து முயன்றங் குதவிசெய் வெற்பனுக் கல்லது சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.
[7]
பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத் துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம் நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.
[8]
நினையா தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள் தனையாவ வென்றின் றருளுதி யேதடஞ் சாலிவயல் கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் காழ்வழிபால் நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.
[9]
தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத் தாடக மாடம் நீடுதென் புகலிக் காமரு கவினார் கவுணியர் தலைவ பொற்பமர் தோள நற்றமிழ் விரக மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.
[10]
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ்.
[11]
ஞானந் திரளையி லேயுண் டனையென்று நாடறியச் சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப் பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.
[12]
அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச் சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப் படவர வுச்சிப் பருமணி பிதுங்கப் பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில் பொறியென விழுவன பொங்கொளி மின்னே உறுசின வரையா லுந்திய கலுழிக் கரையா றுழல்வன கரடியின் கணனே நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும் பழனக் கழனிக் கழுமல நாடன் வைகையி லமணரை வாதுசெய் தறுத்த சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான் நெறியினில் வரலொழி நீமலை யோனே.
[13]
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும் முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன் சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித் தம்பந்தந் தீராதார் தாம்.
[14]
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல் காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து நாமரு வாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே நீர்மரு வாத சுரத் தெங்ங னேகுமென் நேரிழையே.
[15]
இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத் தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர் கனைகுடைந் தேறித் துகிலது புனையநின் றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும் பாய்கிளி யிரியப் பையவந் தேறி ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே இன்புறு சிறுசொ லவைபல வியற்றி அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன் நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் பூம்புன மதனிற் காம்பன தோளி பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.
[16]
வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம் ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ் வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற் சாய்ந்தது வண்தழையோ தான்.
[17]
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய் அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன கோடலம் பெய்திடுவான் இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் னெண்ணமொன்றும் பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.
[18]
வளைகால் மந்தி மாமரப் பொந்தில் விளைதே னுண்டு வேணுவின் துணியால் பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு என்னைய ரிங்கு வருவர் பலரே அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார் சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி சேவடி புல்லிச் சில்குர லியற்றி அமுதுண் செவ்வா யருவி தூங்கத் தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச் சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகன் பற்றலர் போல இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று பருதியுங் குடகடல் பாய்ந்தனன் கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.
[19]
தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன் வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால் தொழுதகன்றா ளென்றுநீ சொல்.
[20]
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்லமணர் பற்செறி யாவண்ணங் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில் கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடுங் கனங்குழையை இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி யிரும்புனமே.
[21]
புனலற வறந்த புன்முளி சுரத்துச் சினமலி வேடர் செஞ்சர முரீஇப் படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத் தாடு மரவி னகடு தீயப் பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ் தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப் பையர வசைத்ததெய்வ நாயகன் தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம் மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல் வினையே னிருக்கும் மனைபிரி யாத வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை ஆதலின் புறவே யுறவறலை நீயே
[22]
அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும் வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.
[23]
ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில் கூரு மிருளொடு கோழிகண் தூஞ்சா கொடுவினையேற் காரு முணர்ந்திலர் ஞானசம் பந்தனந் தாமரையின் தாருந் தருகில னெங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.
[24]
தேமலி கமலப் பூமலி படப்பைத் தலைமுக டேறி யிளவெயிற் காயும் கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச் சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத் துன்னி யெழுந்து செந்நெல் மோதுங் காழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன் தெண்டிரைக் கடல்வாய்க் காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே வாடை யடிப்ப வைகறைப் போதில் தனிநீ போந்து பனிநீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசா திருந்து மேனி வெளுத்த காரண முரையாய் இங்குத் தணந்தெய்தி நுமரும் இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.
[25]
குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும் பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர் முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம் புன்கலங்கள் வைகைப் புனல்.
[26]
புனமா மயில் சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா இனமான் விழியொக்கும் மென்றுவிட் டேகா விருநிலத்துக் கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடல்மலைவாய்த் தினைமா திவள்காக்க வெங்கே விளையுஞ் செழுங்கதிரே.
[27]
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத் தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கை யுருப்பசி தானோ வாருணக் கொம்போ மதனன் கொடியோ ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும் ஏந்திள முலையுங் காந்தளங் கையும் ஒவியர் தங்க லொண்மதி காட்டும் வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
[28]
வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப் பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு .
[29]
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள் பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே திருந்துந் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே.
[30]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.037  
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பண் - ( )
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர் இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
[1]
புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக் கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்
[2]
குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்
[3]
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த் தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த
[4]
காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய
[5]
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள் துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய
[6]
வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள
[7]
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம் இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய
[8]
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய
[9]
பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன் தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்
[10]
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும் தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த
[11]
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித் திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்
[12]
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
[13]
கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட
[14]
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு
[15]
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்
[16]
றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும் கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு
[17]
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு
[18]
மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும் இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத
[19]
கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும் வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்
[20]
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும் கேதையும் எங்கும் கெழீஇப் போதின் [21]
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்
[22]
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும் சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்
[23]
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்
[24]
நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும் அந்தமில் சீரார் அழகினால் முந்திப்
[25]
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ
[26]
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர
[27]
இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில் மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்
[28]
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும் காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்
[29]
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்
[30]
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய
[31]
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர் பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
[32]
உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய
[33]
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும் நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்
[34]
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்
[35]
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது
[36]
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்
[37]
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை
[38]
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்
[39]
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி
[40]
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும் காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
[41]
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து
[42]
காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார் ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்
[43]
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
[44]
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார் ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு
[45]
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்
[46]
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார் பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்
[47]
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும் பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
[48]
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்
[49]
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்
[50]
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும் கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய
[51]
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு
[52]
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர் மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
[53]
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர் வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து
[54]
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்
[55]
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்
[56]
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
[57]
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற
[58]
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர் ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா
[59]
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும் மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்
[60]
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய
[61]
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய
[62]
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்
[63]
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
[64]
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்
[65]
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர் அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை
[66]
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்
[67]
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்
[68]
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்
[69]
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே
[70]
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும் தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய
[71]
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய
[72]
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் காதலால்
[73]
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு
[74]
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து
[75]
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த
[76]
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும் சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்
[77]
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும் துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்
[78]
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்
[79]
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக் காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய
[80]
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில் ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்
[81]
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்
[82]
நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள் நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய
[83]
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி
[84]
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு
[85]
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்
[86]
ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண் கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்
[87]
புகலி வளநகருட் பூசுரர் புக் காங் கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்
[88]
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம் ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்
[89]
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்
[90]
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே
[91]
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப் பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்
[92]
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய
[93]
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத் தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்
[94]
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற் போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்
[95]
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில் இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்
[96]
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம் வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த
[97]
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்
[98]
தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும் சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற
[99]
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில் ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
[100]
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்
[101]
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்
[102]
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த
[103]
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித் திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி
[104]
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத் திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்
[105]
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய
[106]
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்
[107]
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய
[108]
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம் மாடணையக் கொண்டு வருதலுமே கூடி
[109]
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த
[110]
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங் கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த
[111]
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு
[112]
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத் தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்
[113]
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்
[114]
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த
[115]
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு
[116]
வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்
[117]
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும் சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய
[118]
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்
[119]
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்
[120]
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே
[121]
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்
[122]
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார் காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து
[123]
வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்
[124]
காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்
[125]
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்
[126]
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப் பாராமை சாலப் பயன் என்பார் நேராக
[127]
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்
[128]
ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள் வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்
[129]
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்
[130]
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்
[131]
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார் கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்
[132]
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்
[133]
இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற
[134]
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்
[135]
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே
[136]
பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின் நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற
[137]
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல் ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்
[138]
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன் பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்
[139]
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார் மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்
[140]
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த
[141]
கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு
[142]
பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான் ஒங்கொலிசேர் வீதி உலா.
[143]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.038  
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
பண் - ( )
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய் ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.
[1]
செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால் வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.
[2]
தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும் தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை அந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி உந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனையே.
[3]
(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)
[4]
வளமலி தமிழிசை வடகலை மறைவல முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
[5]
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை அடல்கரி உரியனை அறிவுடை அளவினை.
[6]
(இவை இரண்டும் அராகம்)
[7]
கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல் பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.
[8]
பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.
[9]
(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)
[10]
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ
[11]
(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)
[12]
மறையவர்க் கொருவன் நீ மருவலர்க் குருமு நீ நிறைகுணத் தொருவன் நீ நிகரில்உத் தமனும் நீ
[13]
(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)
[14]
அரியை நீ. எளியை நீ. அறவன் நீ. துறவன் நீ. பெரியை நீ உரியை நீ. பிள்ளை நீ. வள்ளல் நீ.
[15]
(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)
[16]
எனவாங்கு (இது தனிச்சொல்)
[17]
அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும் உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர் சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத் தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)
[18]
கற்றொகு புரிசைக் காழியர் நாத நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த நின்பெருங் கருணையை நீதியின் அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.
[19]
(இது சுரிதகம்) 1 பதிக வகை: வெண்பா
[20]
எனவே இடர்அகலும் இன்பமே எய்தும் நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன் கொங்கமலத் தண்காழிக் கோ. 2 பதிக வகை: கட்டளைக் கலித்துறை
[21]
கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார் ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ் ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. 3 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[22]
போற்று வார்இடர் பாற்றிய புனிதன் பொழில்சு லாவிய புகலியர் பெருமான் ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன் எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச் சேற்று வார்புனங் காவல் புரிந்தென் சிந்தை கொள்வதும் செய்தொழி லானால் மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால் வாசி யோகுற மாதுந லீரே. 4 பதிக வகை: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[23]
நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி பனிமதி அணைந்த பொழில்சூழ் பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு புனிதகுணன் எந்தம் இறைவன் பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு பரசமய வென்றி அரிதன் சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது தகுவினைகள் பொன்றும் வகையே. 5 பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[24]
வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன் வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள் விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள் நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. 6
[25]
வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன் சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத் திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல் நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன் நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற் கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக் கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. 7 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[26]
அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில் நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. 8 பதிக வகை: பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[27]
பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம் பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம் கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக் கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம் கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக் கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட வேணுபுர நாதன்மிகு வேதியர் சிகாமணி பிரானே. 9 பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[28]
பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக் குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித் தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக் கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. 10 பதிக வகை: பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[29]
ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான் ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர் தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர் சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார் ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள் தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. 11 பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[30]
ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென் வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன தேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை கார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. 12 பதிக வகை: கலிவிருத்தம்
[31]
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன் தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல் திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[32]
ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன் உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ் எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ் இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின் பொழியா நின்றன துளிதார் கொன்றைகள் புலமே துன்றின கலைமான் ஒன்றின பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும் அருகே வந்தது அதுகாண் மங்கையே. 14 பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[33]
மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய் தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன் துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென் கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. 15 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[34]
மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு மணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச் சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே நன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும் இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா என்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. 16 பதிக வகை: சம்பிரதம்
[35]
எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன் எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில் முழுதும் ஒளித்திர வியையிந் நிலத்திடை முடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள் கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல் கவுணிய நற்குல திலகன் இணைக்கழல் தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு துயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. 17 பதிக வகை: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[36]
சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன் வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன் கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன் இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. 18 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[37]
மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத வேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம் நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும் மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. 19
[38]
வன்பகை யாமக் குண்டரை வென்றோய் மாமலர் வாளிப் பொருமத வேளைத் தன்பகை யாகச் சிந்தையுள் நையும் தையலை உய்யக் கொண்டருள் செய்யாய் நின்புகழ் பாடிக் கண்பனி சோரா நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட் டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா அம்பொழில் மாடச் சண்பையர் கோவே. 20 பதிக வகை: மறம்
[39]
கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர குளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி மீசம் மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன் பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன் பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள் தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின் தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. 21 பதிக வகை: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[40]
இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு தொழிலும் மிடுகுர வையுமெல்லாம் நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர் நசையுண் டதுநரை முதுபெண்டீர் புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ் விரகன் புயமுறும் அரவிந்தம் பனிமென் குழலியை அணிமின் துயரொடு மயலுங் கெடுவது சரதம்மே. 22 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[41]
சரத மணமலி பரிசம் வருவன தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ் மருவு சுருதிநன் மலையின் அமர்தரு விரத முடையைநின டையின் அவள்மனம் விரைசெய் குழலியை அணைவ தரிதென இரதம் அழிதர வருதல் முனம்இனி எளிய தொருவகை கருது மலையனே. 23
[42]
அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன் அருளினொடு நீடவனி இடர்முழுது போயகல வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர் பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர் பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. 24
[43]
அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர் அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால் தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச் சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச் சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன் வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும் வயற்புகலிப் பதியினிது மருவ லாமே. 25 பதிக வகை: ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை
[44]
ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய் மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம் கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. 26 பதிக வகை: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[45]
கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி வீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச் சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத் தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. 27 பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[46]
சதுரன் புகலியர் அதிபன்கூர்தவசுந் தரகவு ணியர்தஞ்சீர் முதல்வன் புகலியர் அதிபன்தாள்முறைவந் தடையலர் நகரம்போல் எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்எரிவெங் கணைசொரி புரிமின்கார் அதிர்கின் றனஇது பருவஞ்சேரலர்தம் பதிமதில் இடிமின்னே. 28 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[47]
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன் துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள் பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள் இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. 29 பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[48]
மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும் வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும் ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும் ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும் வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான் வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும் தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. 30 பதிக வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[49]
கைதவத்தால் என்னிடைக்கு நீவந்ததறியேனோ கலதிப் பாணா மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை வேணுக் கோனைச் செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய செம்பொன் திண்டோள் எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய் இசைக்கின் றாயே. 31 பதிக வகை: மதங்கியார் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[50]
இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன் இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ் சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன் நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின் வசைதகு மென்குல மவைமுழு துங்கொள மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. 32
[51]
வருகின் றனன்என் றனதுள் ளமும்நின் வசமே நிறுவிக் குறைகொண் டுதணித் தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும் மதுநீ இறையுன் னினையா தெனின்முன் கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக் கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப் பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற் பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. 33
[52]
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன் அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன் அணியான புகலிநகர் அணையான கனைகடலின் முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர் முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. 34
[53]
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக உடையன நதிப்புனலின் எதிர்பஃறி உய்த்தனபுன் நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. 35 பதிக வகை: பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[54]
தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார் தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர் மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார் விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம் மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய் வரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. 36 பதிக வகை: பாணாற்றுப்படை நேரிசை ஆசிரியப்பா
[55]
கருமங் கேண்மதி கருமங் கேண்மதி துருமதிப் பாண கருமங் கேண்மதி நிரம்பிய பாடல் நின்கண் ணோடும் அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக் காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)
[56]
தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம் மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)
[57]
சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந் தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன துள்ளத் துள்ள தாயின் மதுமலர் வண்டறை சோலை வளவயல் அகவ (15)
[58]
ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம் உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக் கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக் கனகப் பருமுரட் கணையக் கபாட விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)
[59]
நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய மாளிகை ஓளிச் சூளிகை வளாகத் தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)
[60]
நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச் செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக் கழுமல நாதன் கவுணியர் குலபதி (30)
[61]
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி பண்டிதர் இன்பன் பரசமய கோளரி என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத் தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ் குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)
[62]
நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. 37 பதிக வகை: வஞ்சித் துறை
[63]
நீதியின் நிறைபுகழ் மேதகு புகலிமன் மாதமிழ் விரகனை ஓதுவ துறுதியே. 38 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[64]
உறுதி முலைதாழ எனையி கழுநீதி உனது மனமார முழுவ துமதாக அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும் அழகி தினியானுன் அருள்பு னைவதாகப் பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு பெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும் நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. 39 பதிக வகை: ஆசிரியத் துறை
[65]
நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே காமதிக் கார்பொழிற் காழி நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு பூமதிக் குங்கழல் போற்றே. 40 பதிக வகை: கட்டளைக் கலிப்பா
[66]
போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே புந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே மாற்றி யிட்டது வல்விட வாதையே மன்னு குண்டரை வென்றது வாதையே ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே ஆன தன்பதி யாவதந் தோணியே நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே நல்ல நாமமும் ஞானசம் பந்தனே. 41 பதிக வகை: கைக்கிளை மருட்பா
[67]
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும் வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன் காமரு கழுமலம் அனையாள் ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42 பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[68]
தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச் சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன் கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக் கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப் புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச் சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார் சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. 43 பதிக வகை: இன்னிசை வெண்பா
[69]
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத் தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும் கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. 44 பதிக வகை: பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[70]
அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல் அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய் செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த் திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர் எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய் இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால் உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல் உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. 45 பதிக வகை: கலி விருத்தம்
[71]
குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும் அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின் தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன் கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. 46
[72]
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. 47 பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
[73]
முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில் வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர் சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர் தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48 பதிக வகை: வஞ்சித் துறை
[74]
வழிதரு பிறவியின்உறு தொழில்அமர் துயர்கெடுமிகு பொழிலணி தருபுகலிமன் எழிலிணை அடிஇசைமினே. 49
[75]
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.039  
ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
பண் - ( )
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத் தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான் வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான் பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர் யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம் ஆழி உலகத் தழியாமற் - காட்டினான். ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும் தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத் திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன் றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென் கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில் முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள் மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும் திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும் பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல் மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும் செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான் முத்திப் பகவ முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான் கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான் பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும் அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப் பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான் வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான் அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான் துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும் அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும் சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும் முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம் சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத் தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
[1]
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.040  
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
பண் - ( )
புலனொ டாடித் திரிமனத்தவர் பொறிசெய் காமத் துரிசடக்கிய புனித நேசத் தொடுதமக்கையர் புணர்வி னால்உற் றுரைசெயக்குடர் சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர் சுடுவெ ணீறிட் டமண கற்றிய துணிவி னான்முப் புரமெ ரித்தவர் சுழலி லேபட் டிடுத வத்தினர் உலகின் மாயப் பிறவி யைத்தரும் உணர்வி லாவப் பெரும யக்கினை ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல உபரி யாகப் பொருள்ப ரப்பிய அலகில் ஞானக் கடலி டைப்படும் அமிர்த யோகச் சிவவொ ளிப்புக அடிய ரேமுக் கருளி னைச்செயும் அரைய தேவத் திருவ டிக்களே.
[1]
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல் வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய் உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண் உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ் குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர் குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
[2]
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார் அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
[3]
இலைமா டென்றிடர் பரியா ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும் நிலையா திச்செல்வம் எனவே கருதுவர் நீள்சன் மக்கட லிடையிற்புக் கலையார் சென்றரன் நெறியா குங்கரை யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண் சிலைமா டந்திகழ் புகழா மூருறை திருநா வுக்கர சென்போரே.
[4]
என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குப்பையை இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும் முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர் அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர் அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.
[5]
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர் கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம் முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல் கற்றுணையில் வரும்ஆதி பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
[6]
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி பரசுநா வரசான பரமகா ரணவீசன் அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர் அவர்செய்வா தைகள்தீரு மனகன்வார் குழல்சூடின் நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால மதியரா குவரீச னடியரா குவர்வானம் உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே
[7]
தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை யனையன சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை யுடையன தூமதியினை யொருபது கொடுசெய்த சோதியின்மிகு கதிரினை யுடையன தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடுதொடர் வரியன ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்த புகழ் ஆமரசுய ரகம்நெகு மவருளன் ஆரரசதி கையினர னருளவன் ஆமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுத னடியிணை மலர்களே.
[8]
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங் கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற் பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப் பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும் செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற் றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
[9]
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து திரியும் பத்தியிற் சிறந்தவர் திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர் திகழும் பைம்பொடித் தவண்டணி கவசம் புக்குவைத் தரன்கழல் கருதுஞ் சித்தனிற் கவன்றியல் கரணங் கட்டுதற் கடுத்துள களகம் புக்கநற் கவந்தியன் அவசம் புத்தியிற் கசிந்து கொ டழுகண் டசத்துவைத் தளித்தனன் அனகன் குற்றமற் றபண்டிதன் அரசெங் கட்கொர்பற் றுவந்தறு பவசங் கைப்பதைப் பரஞ்சுடர் படிறின் றித்தனைத் தொடர்ந்தவர் பசுபந் தத்தினைப் பரிந்தடு பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.
[10]
நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி நளினம்வைத் துயினல்லால் ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற் ருள்ளன வேண்டோமால் என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத் திடைப்பட்டுப் பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில் பொறியில்ஐம் புலனோடே.
[11]
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000