Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.001   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
பண் - கொல்லி (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[1]
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[2]
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[3]
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[4]
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[5]
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[6]
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[7]
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[8]
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[9]
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.002   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
பண் - காந்தாரம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[1]
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[2]
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை
[3]
மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை,
குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும்,
இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[4]
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும்,
நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.
[5]
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,
அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[6]
கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும்,
விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[7]
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[8]
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[9]
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.003   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
பண் - காந்தாரம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
[1]
போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[2]
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[3]
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!
[4]
ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[5]
தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[6]
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[7]
விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[8]
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[9]
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[10]
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.004   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.
[1]
நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
[6]
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்;
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்;
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்;
அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
[7]
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
[8]
வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்,
காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
[9]
பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.005   மெய் எலாம் வெண் நீறு
பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!
[2]
பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!
[3]
குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை காணாது, உழிதர் வேனை-
பண்டமாப் படுத்து, என்னைப் பால் தலையில்-தெளித்து, தன் பாதம் காட்டி,
தொண்டு எலாம் இசை பாட- தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டு எலாம் அறியாதே,-பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே!
[4]
துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு, துவர் வாய்க்கொண்டு(வ்)
என்னாகத் திரிதந்து, ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன், ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே,-ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே!
[5]
பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது ஒரு தலையோடே திரிதர் வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து, என் உள்ளத்தினுள் இருந்து, அங்கு உறுதி காட்டி,
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆர் அமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே,-இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே!
[6]
கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத் தலை பறித்து, கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த ஆறே!
[7]
பூவை ஆய்த் தலை பறித்து, பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே,-பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே!
[8]
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!
[9]
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.006   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
பண் - காந்தாரம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[2]
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது என்கின்றாளால்;
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- மணி சேர் மிடற்றவனே! என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[3]
இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்-
சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன் என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[4]
பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன் என்கின்றாளால்;
விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே! என்கின்றாளால்;
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே! என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[5]
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
[6]
முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம் என்கின்றாளால்;
அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம் என்கின்றாளால்;
சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[7]
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[8]
வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[9]
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.007   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
பண் - காந்தாரம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
[2]
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை;
அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,
எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!
[3]
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப்
பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை;
தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!
[4]
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
[5]
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண்
வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம்
ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
[6]
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை,
சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும்
இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
[7]
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
[8]
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!
[9]
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு
தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.008   சிவன் எனும் ஓசை அல்லது,
பண் - பியந்தைக்காந்தாரம் (பொது - சிவனெனுமோசை )
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.
[1]
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.
[2]
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?
[3]
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.
[4]
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.
[5]
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.
[6]
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?
[7]
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.
[8]
மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.
[9]
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம், இயல்பே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.009   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி (பொது - திருஅங்கமாலை )
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள
எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!
[3]
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை,
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!
[4]
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து,
பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!
[5]
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை,
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!
[6]
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!
[7]
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து.
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?
[8]
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?
[9]
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?
[10]
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு,
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?
[11]
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!
[12]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.010   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
பண் - காந்தாரம் (திருவதிகை வீரட்டானம் )
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீா
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.
[1]
ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.
[2]
விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர்-முழுதும் வெண் நிலாப்
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய்புனல்
கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே.
[3]
விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர்
கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர்
கெழு மணி அரவினர்-கெடில வாணரே.
[4]
குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர்-கெடில வாணரே.
[5]
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.
[6]
கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர்! என்று எள்க, வாழ்பவர்-
வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே.
[7]
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற,
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற,
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே,
கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.
[8]
வெறி உறு விரிசடை புரள வீசி, ஓர்
பொறி உறு புலி உரி அரையது ஆகவும்,
நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும்,
கிறி பட உழிதர்வர்-கெடில வாணரே!
[9]
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.011   சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம் (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
[6]
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
[7]
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
[8]
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
[9]
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.012   சொல் மாலை பயில்கின்ற குயில்
பண் - பழந்தக்கராகம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?
[1]
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?
[2]
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்
[3]
புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்! புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்,
மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?
[4]
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?
[5]
பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?
[6]
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்!
பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த
இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?
[7]
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்-
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப்
பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?
[8]
புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?
[9]
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.013   விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[1]
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[4]
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[7]
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[8]
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[9]
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.014   பருவரை ஒன்று சுற்றி அரவம்
பண் - பழம்பஞ்சுரம் (பொது -தசபுராணம் )
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.
[1]
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட, நிலம் நின்று தம்பம் அது அப்
பரம் ஒரு தெய்வம் எய்த, இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்,
பரமுதல் ஆய தேவர், சிவன் ஆயமூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
[2]
காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில்,
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன்,
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
[3]
நீடு உயர்விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர் ஆகி, இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்,
ஓடிய தாருகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம், நமக்கு ஒர் சரணே.
[4]
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி, அரியோடு தேவர் அரணம் புக, தன் அருளால்-
கொலை நலி வாளி, மூள அரவு, அம் கை நாணும், அனல் பாய நீறு புரம் ஆம்-
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
[5]
நீல நல் மேனி, செங்கண், வளை வெள் எயிற்றின், எரிகேசன், நேடி வரும் நாள
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண், வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த, உயிர் வவ்வு பாசம் விடும்-அக்
காலனை வீடு செய்த கழல் போலும், அண்டர் தொழுது ஓது சூடு கழலே.
[6]
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்,-அவி உண்ண வந்த இமையோா
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம் ஆய்-
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.
[7]
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா,
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட, இருள் ஓட, நெற்றி ஒரு கண்
அலர்தர, அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதி போல்
அலர்தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவன், ஆம், நமக்கு ஓர் சரணே.
[8]
கழை படு காடு தென்றல் குயில் கூவ, அஞ்சுகணையோன், -அணைந்து புகலும்
மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ, இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல,
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.
[9]
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக, நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை, எந்தை பெருமான், உகந்து மிகவும்
சுடர் அடியான் முயன்று சுழல் வித்து, அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி, ஆழியவனுக்கு அளித்த அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
[10]
கடுகிய தேர் செலாது, கயிலாயம் மீது; கருதேல், உன் வீரம்; ஒழி, நீ!
முடுகுவது அன்று, தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா,
விடு விடு என்று சென்று விரைவு உற்று, அரக்கன், வரை உற்று எடுக்க, முடிதோள
நெடு நெடு இற்று வீழ, விரல் உற்ற பாதம் நினைவு உற்றது, என் தன் மனனே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.015   பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் (பாவநாசத் திருப்பதிகம் )
பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை,
கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை,
பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய
திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
[6]
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
[7]
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
[8]
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,
நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
[9]
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,
வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,
வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
[10]
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,
எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.016   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
பண் - இந்தளம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.
[1]
மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்,
நாக வளையினர், நாக உடையினர்
போகர்-புகலூர்ப் புரிசடையாரே.
[2]
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
[3]
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.
[4]
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
[5]
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.
[6]
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
[7]
கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும்,
தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண;
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
[8]
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.017   எத் தீப் புகினும் எமக்கு
பண் - இந்தளம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.
[1]
வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்
தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு-
ஆரமும் பூண்பர்-அரநெறியாரே.
[2]
தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்
வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே.
[3]
விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று
இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம்
கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே.
[4]
துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்
தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற
அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.
[5]
கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி
நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள்
பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து
ஆடு அரவத்தர் -அரநெறியாரே.
[6]
கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்;
பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும்
ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி
நாட வல்லார்; வினை வீட வல்லாரே.
[7]
பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை,
மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி
காலையும் மாலையும் கை தொழுவார் மனம்
ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே.
[8]
முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின்
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்;
படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு
அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே.
[9]
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல்,
மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும்
அன்னவர்-ஆரூர் அரநெறியாரே.
[10]
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட
மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து,
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட
அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.018   ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம் (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.
[1]
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்;
இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,
இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு,
இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.
[2]
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;
மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;
மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;
மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.
[3]
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;
நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்;
நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.
[4]
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்;
அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன;
அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை;
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.
[5]
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;
ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;
ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;
ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.
[6]
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;
ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.
[7]
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;
எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;
எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;
எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.
[8]
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை;
ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;
ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.
[9]
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;
பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;
பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;
பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.019   சூலப் படை யானை; சூழ்
பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை,
மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை,
வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின்
ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.
[3]
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.
[4]
தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி,
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.
[5]
எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.
[6]
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ,
ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர்
ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே.
[7]
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து
அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.
[8]
கார முது கொன்றை கடி நாறு தண் என்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்,
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.
[9]
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.
[10]
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால்,
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்-
செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று-
அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.020   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!
[1]
கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!-
முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு,
அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே!
[2]
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!
[3]
பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?-
ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல-
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே!
[4]
நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை
ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே!
[5]
அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும் என்று இ(வ்) வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே!
[6]
திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள
பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே!
[7]
பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்;
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன்
திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே!
[8]
முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள
வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன்
அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே!
[9]
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்,
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை,
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.021   முத்து விதானம்; மணி பொன்
பண் - குறிஞ்சி (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[3]
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[4]
நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[5]
விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[6]
செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[7]
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.022   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
பண் - காந்தாரம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்;
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே!
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!
[2]
சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று;
கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே!
[3]
பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி,
செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே!
ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி,
பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!
பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி,
காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி;
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே-
நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே!
[10]
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி,
நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த,
மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.023   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
பண் - கொல்லி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!
[1]
கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா!
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ!
திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே!
[2]
கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!
[3]
கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!
[4]
சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய,
எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே!
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ!
[5]
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே;
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!
[6]
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
மூர்த்தியே என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன் என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!
[7]
பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்ய,
ஐய! நீ அருளிச் செய்யாய்! ஆதியே! ஆதிமூர்த்தி!
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான், பரம! நான் வந்த ஆறே!
[8]
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பரால்; என் செய்கேனோ? கறை அணி கண்டத்தானே!
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே!
[9]
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ;
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே!
[10]
மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்;
திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.024   இரும்பு கொப்பளித்த யானை ஈர்
பண் - கொப்பளித்ததிருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.
[1]
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே
[2]
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.
[5]
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த,
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்-
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக,
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.
[6]
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.
[7]
நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து,
பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட,
ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே.
[8]
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.025   வெண் நிலா மதியம் தன்னை
பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.
[1]
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.
[2]
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
[3]
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
விருத்தி தான் தருக! என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.
[4]
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.
[5]
வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.
[6]
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.
[7]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
[8]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
[9]
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.
[10]
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.026   நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
[1]
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
[2]
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
[3]
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்;
இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
[4]
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே!
[5]
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!
[6]
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!
[7]
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!
[8]
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே!
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்;
துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!
[9]
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.027   மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம்
செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி,
பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி,
கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே.
[4]
நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த,
தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி,
அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே.
[5]
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே.
[6]
நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர்
கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்;
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.
[7]
காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகார்
ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே.
[8]
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்)
ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.028   முன்பு எலாம் இளைய காலம்
பண் - திருநேரிசை (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!
[1]
கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி
நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்!
பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே!
[2]
நாதனார் என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், இணை அடி தொழுதோம் என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.
[3]
சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்-
படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே
[4]
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே
[5]
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி,
மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து,
கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன
கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே.
[6]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.029   ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
பண் - திருநேரிசை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே
[1]
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்
செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[2]
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[3]
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[4]
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.
[5]
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.
[6]
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்;
எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்;
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.
[7]
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[8]
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.
[9]
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.030   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
பண் - திருநேரிசை (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
[3]
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
[4]
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்)
எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
[9]
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.031   பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
பண் - சாளரபாணி (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.
[1]
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.
[4]
தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி,
விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்;
மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!
[5]
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!
[6]
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!
[7]
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!
[8]
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.
[9]
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.032   உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை)
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.
[1]
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி
பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி,
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே.
[2]
நங்களுக்கு அருளது என்று நால்மறை ஓதுவார்கள்
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன்; தழலன்; தன்னை;
எங்களுக்கு அருள்செய்! என்ன நின்றவன்; நாகம் அஞ்சும்
திங்களுக்கு அருளிச் செய்தார்-திருப் பயற்றூரனாரே.
[3]
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல
தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே.
[4]
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்;
தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே.
[5]
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி,
தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி,
பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான்,
தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே.
[6]
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி,
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி,
காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.
[7]
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி,
எந்தை! எம்பிரானே! என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே.
[8]
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்)
இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச்
சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே.
[9]
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி,
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.033   இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
பண் - திருநேரிசை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று,
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே;
சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.
[3]
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.
[4]
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை-
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.
[5]
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.
[6]
கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்
வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.
[7]
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்;
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.
[8]
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்!
காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.
[9]
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்,
பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே;
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச,
மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.034   தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
பண் - திருநேரிசை (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.
[1]
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.
[2]
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
அகப்படுத்து! என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.
[3]
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
[4]
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.
[5]
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன் என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.
[6]
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.
[7]
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!
[8]
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.
[9]
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.035   காடு உடைச் சுடலை நீற்றார்;
பண் - திருநேரிசை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.
[1]
முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே.
[2]
கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால்
ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த,
பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை;
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை-
ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
[5]
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ,
முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து,
மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும்
ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.
[6]
படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை;
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
[7]
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த,
மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி,
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.
[8]
பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.
[9]
மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.036   ஆடினார் ஒருவர் போலும்; அலர்
பண் - திருநேரிசை (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.
[1]
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.
[2]
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே
[3]
நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
[4]
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.
[5]
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
[6]
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.
[9]
குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.037   காலனை வீழச் செற்ற கழல்
பண் - திருநேரிசை (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.
[1]
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே!
[2]
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.
[3]
வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து
பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்-
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி,
அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே.
[4]
காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி,
பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே!
[5]
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ,
தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்;
தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே!
[6]
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.
[7]
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்
சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே.
[8]
சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார்
ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த,
நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.
[9]
இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து,
சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற
நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.038   கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
பண் - திருநேரிசை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.
[1]
பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
[2]
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
[3]
தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.
[4]
வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
[5]
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
[6]
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.
[7]
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
[8]
பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.
[9]
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.039   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.
[1]
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!
[2]
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.
[3]
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.
[4]
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!
[5]
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!
[6]
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!
[7]
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!
[8]
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.
[9]
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.040   தான் அலாது உலகம் இல்லை;
பண் - திருநேரிசை (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
[1]
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை;
கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை-
பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன் என்று என்று எண்ணி,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.
[4]
எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.
சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை;
நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி,
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
[8]
உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை-
நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை;
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே.
[9]
மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.041   பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!
[1]
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா;
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை-
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே.
[2]
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்!
பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.
[3]
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம்
இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்-
பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்-
துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.
[4]
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்;
பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று
சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.
[5]
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே!
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.
[6]
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன,
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ!
முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி,
செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே.
[7]
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா;
வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்!
அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி-
செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.
[8]
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.
[9]
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.042   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!
[1]
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ!
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
[2]
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!
[3]
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!
[4]
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
[7]
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா;
தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ!
சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும்
தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!
[8]
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்!
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!
[9]
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.043   மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.
[1]
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.
[2]
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.
[3]
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.
[6]
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
[9]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.044   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
பண் - திருநேரிசை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.
[1]
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!
[2]
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்,
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை,
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!
[3]
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!
[4]
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி,
கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை,
கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.
[5]
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!
[6]
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன்,
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்,
எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை,
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.
[7]
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
[8]
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று,
குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை
இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.
[9]
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.045   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
[1]
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
[2]
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
[3]
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
[4]
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.
[5]
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.
[6]
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
[7]
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
[8]
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
[9]
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.046   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
பண் - திருநேரிசை (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!
[1]
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி,
சினம் எனும் சரங்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!
[2]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.047   கனகம் மா வயிரம் உந்தும்
பண் - திருநேரிசை (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[1]
கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[2]
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு,
நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்;
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[3]
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[4]
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[5]
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[6]
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[7]
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[8]
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[9]
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.048   கடல் அகம் ஏழினோடும் பவனமும்
பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை)
கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.
எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின் உள் பொருளும் ஆகி,
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி,
கண் ஒரு நெற்றி ஆகி, கருதுவார் கருதல் ஆகாப்
பெண் ஒரு பாகம் ஆகி, பேணும்-ஆப்பாடியாரே.
[3]
அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை;
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே.
[4]
சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி,
வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி,
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி
அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.
[5]
வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி,
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி,
கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி,
இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே.
மயக்கம் ஆய்த் தெளிவும் ஆகி, மால்வரை வளியும் ஆகி,
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி நின்று(வ்)
இயக்கம் ஆய், இறுதி ஆகி, எண் திசைக்கு இறைவர் ஆகி,
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர்-ஆப்பாடியாரே.
[8]
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.
[9]
திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச,
விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ,
பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.049   ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,
பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்;
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.
[1]
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான்
சாற்றும் நாள் அற்றது என்று, தருமராசற்கு ஆய், வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
[2]
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி,
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீச,
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
[3]
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக,
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே.
[4]
ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்)
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்;
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட;
கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
[5]
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கிய(ன்)னார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்
கொல்லி ஆம் பண் உகந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
[6]
காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது ஓர் இறைச்சிப்பாரம்,
தோல் பெருஞ் செருப்புத் தொட்டு, தூய வாய்க் கலசம் ஆட்டி,
தீப் பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும், பற்றிக் கொண்டார்-குறுக்கை வீரட்டனாரே.
[7]
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
[8]
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி;
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து; நல் அருந்தவத்த
கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
[9]
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து,
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட,
கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.050   நெடிய மால் பிரமனோடு நீர்
பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.
[1]
ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம், எம்பெருமான்! என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
[2]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.051   நெற்றி மேல் கண்ணினானே! நீறு
பண் - திருநேரிசை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!
[1]
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே!
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே!
கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே!
[2]
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!
[3]
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!
[4]
பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!
[5]
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்!
மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்;
கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!
[6]
அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே!
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே!
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே!
[7]
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்!
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!
[8]
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!
[9]
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.052   படு குழிப் பவ்வத்து அன்ன
பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!
[1]
புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை;
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய,
அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!
[2]
பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான்
அஞ்சினேற்கு, அஞ்சல்! என்னீர்-ஆரூர் மூலட்டனீரே!
[3]
கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக்
கண்டு நான் தரிக்ககில்லேன்; காத்துக் கொள்! கறை சேர் கண்டா!
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே!
[4]
தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்)
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்!
வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்)
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!
[5]
மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய,
ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!
[6]
உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக,
துயரமே ஏற்றம் ஆக, துன்பக் கோல் அதனைப் பற்றி,
பயிர் தனைச் சுழிய விட்டு, பாழ்க்கு நீர் இறைத்து, மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே!
[7]
கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப்
பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!
[8]
பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய,
மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும்
அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!
[9]
தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.053   குழல் வலம் கொண்ட சொல்லாள்
பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.
[1]
நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே.
[2]
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.
[3]
நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.
[4]
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த,
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு,
தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.
[5]
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்,
ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்-
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.
[6]
அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கி,
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு(வ்),
அஞ்சு அணை அஞ்சும் ஆடி, ஆடு அரவு ஆட்டுவார் தாம்,
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே.
[7]
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப்
பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல்,
மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.
[8]
நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள் தங்கள்
புகல் இடம் ஆகி வாழும் புகல் இலி-இருவர் கூடி
இகல் இடம் ஆக, நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி,
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே.
[9]
ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.054   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
[1]
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!
[2]
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!
[3]
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
[4]
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
[5]
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
[6]
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!
[7]
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.
[8]
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!
[9]
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.055   தெண் திரை தேங்கி ஓதம்
பண் - திருநேரிசை (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை,
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!
[1]
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை,
பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த,
வடித் தடங்கண்ணி பாகர்-வலம்புரத்து இருந்த ஆறே!
[2]
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி,
ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி,
வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.
[3]
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு, மொய் சடைகள் தாழ,
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி,
புளை கயப் போர்வை போர்த்து, புனலொடு மதியம் சூடி,
வளை பயில் இளையர் ஏத்தும் வலம் புரத்து அடிகள் தாமே.
[4]
சுருள் உறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த,
இருள் உறு கதிர் நுழைந்த இளங் கதிர்ப் பசலைத் திங்கள்
அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த,
மருள் உறு கீதம் கேட்டார் வலம் புரத்து அடிகளாரே.
[5]
நினைக்கின்றேன், நெஞ்சு தன்னால் நீண்ட புன் சடையினானே!
அனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி;
புனை(க்)கின்றேன், பொய்ம்மை தன்னை; மெய்ம்மையைப் புணர மாட்டேன்;
எனக்கு நான் செய்வது என்னே, இனி? வலம் புரவனீரே!
[6]
செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து, தடம் பொய்கை அடைந்து நின்று,
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம் புரத்து அடிகளாரே!
[7]
அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்;
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!
[8]
கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்;
திரு வரை அனைய பூமேல் திசை முகன் அவனும் காணான்;
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார், ஓங்கி வந்து(வ்)
அருமையின் எளிமை ஆனார் அவர், வலம்புரவனாரே.
[9]
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று,
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.056   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்;
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்;
கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.
[3]
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்;
எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்;
தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.
[4]
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.
[5]
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்;
துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்;
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
[6]
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
[7]
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.
[8]
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.
[9]
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.057   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
பண் - கொல்லி (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!
[1]
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!
[2]
கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய்
ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்-
பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்
அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!
[3]
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
[4]
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய்
மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்)
அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!
[5]
கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!
[6]
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!
[7]
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
[8]
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.
[9]
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.058   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
[1]
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
[2]
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.
[3]
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.
[4]
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.
[5]
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.
[6]
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.
[7]
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.
[8]
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.
[9]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.059   தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்
பண் - திருநேரிசை (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, சிக்கெனத் தவிரும்! என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.
[1]
வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று என்று,
செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்! என்ன,
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி,
அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.
[2]
கீழ்ப்படக் கருதல் ஆமோ, கீர்த்திமை உள்ளது ஆகில்?
தோள் பெரு வலியினாலே தொலைப்பன், யான் மலையை என்று
வேள் பட வைத்த ஆறே விதிர் விதிர்த்து அரக்கன் வீழ்ந்து(வ்)
ஆட்படக் கருதிப் புக்கார்-அவளி வணல்லூராரே.
[3]
நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான்,
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்)
அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.
[4]
தவ் வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலே;
மெய்(வ்) வலி உடையன் என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்து
செவ் வலி கூர் விழி(ய்)யான் சிரமத்தான் எடுக்குற்றானை
அவ் வலி தீர்க்க வல்லார்-அவளி வணல்லூராரே.
[5]
நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக்
கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால்
அம்மையோ! என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே.
[6]
கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்! என்று,
மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க,
அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே.
[7]
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை,
ஓடு, மிக்கு! என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே;
பாடு மிக்கு உய்வன் என்று பணிய, நல்-திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.
[8]
ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும்,
ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார்
சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே.
[9]
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.060   மறை அணி நாவினானை, மறப்பு
பண் - திருநேரிசை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)
மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.
[1]
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை,
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே,
[2]
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை,
பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை,
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.
ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை,
வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை,
பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை,
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.
[5]
கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை,
கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை,
பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை,
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே.
[6]
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய
பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை,
மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே.
[7]
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை,
வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை,
பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை,
அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே.
[8]
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்)
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்;
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை
மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே.
[9]
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை,
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.061   பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
பண் - திருநேரிசை (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.
[1]
முற்றின, நாள்கள் என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப்
பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!
[2]
கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.
[3]
குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்-
நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில்,
சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே.
[4]
வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன்
கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத்
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.
[5]
ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!
[6]
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான்
தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.
[7]
பலவும் நாள் தீமை செய்து பார் தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த,
சிலையினான் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம்; தவம் அது ஆமே.
[8]
கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.
[9]
வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.
[10]
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை
விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்-
திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.062   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
பண் - கொல்லி (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[1]
நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி!
என் பொனே! ஈசா! என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்-
அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[2]
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[3]
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[4]
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை;
பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர,
அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[5]
எஞ்சல் இல் புகல் இது என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு
அஞ்சல்! என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[6]
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர்ப்பாதம் காண-தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்து ஆய் உள்
அழகனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[7]
நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும்
அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[8]
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[9]
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.063   ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.
[1]
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.
[2]
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.
[3]
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
[4]
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
[5]
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா!
அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.
[6]
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும்,
உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்!
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே!
பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.
[7]
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.
[8]
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.
[9]
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.064   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
பண் - திருநேரிசை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும்
பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[3]
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக,
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள்
தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட
விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[4]
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர்
கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா
பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[5]
எண் அகத்து இல்லை அல்லர்; உளர் அல்லர்; இமவான் பெற்ற
பெண் அகத்தர்; ஐயர்; காற்றில் பெரு வலி இருவர் ஆகி,
மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீ அதனில் மூவர்
விண் அகத்து ஒருவர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[6]
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்;
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[7]
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்)
ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[8]
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர்
வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[9]
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.065   தோடு உலாம் மலர்கள் தூவித்
பண் - திருநேரிசை (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.
[1]
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி
அடைந்து, நும் சரணம் என்ன, அருள் பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
[2]
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய,
முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த,
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று,
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.
[5]
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்-
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
[6]
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட,
ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே.
[7]
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம்,
துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட,
உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத்
தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.
[8]
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது,
ஒக்கும், என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப,
சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.
[9]
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச,
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.066   கச்சை சேர் அரவர் போலும்;
பண் - திருநேரிசை (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[1]
வேடு உறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்;
காடு உறு பதியர் போலும்; கடிபுனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும்; தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[2]
கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்;
பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்;
சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[3]
கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்;
செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்;
எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே! என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[4]
கடகரி உரியர் போலும்; கனல் மழுவாளர் போலும்;
பட அரவு அரையர் போலும்; பாரிடம் பலவும் கூடிக்
குடம் உடை முழவம் ஆர்ப்ப, கூளிகள் பாட, நாளும்
நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே.
[5]
பிறை உறு சடையர் போலும்; பெண் ஒரு பாகர் போலும்;
மறை உறு மொழியர் போலும்; மால், மறையவன் தன்னோடு,
முறை முறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[6]
வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர் போலும்;
குஞ்சரத்து உரியர் போலும்; கூற்றினைக் குமைப்பர் போலும்;
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[7]
போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்;
வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப்
பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்;
நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[8]
கொக்கரை, தாளம், வீணை, பாணி செய் குழகர் போலும்;
அக்கு அரை அணிவர் போலும்; ஐந்தலை அரவர் போலும்;
வக்கரை அமர்வர் போலும்; மாதரை மையல் செய்யும்
நக்க(அ)ரை உருவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[9]
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்;
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்;
வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே
நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.067   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[3]
கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே!
காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ!
சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[4]
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த,
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[5]
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்;
மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி,
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[6]
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து,
பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ
சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[7]
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து
பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று
கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்;
செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[8]
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.068   வெள்ள நீர்ச் சடையர் போலும்;
பண் - திருநேரிசை (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.
[1]
செந்தழல் உருவர் போலும்; சின விடை உடையர் போலும்;
வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
மந்தம் ஆம் பொழில் பழ(ந்)னை மல்கிய வள்ளல் போலும்;
அந்தம் இல் அடிகள் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.
[2]
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.
[3]
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
தூறு இடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்;
கூறு இடும் உருவர் போலும்; குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.
[4]
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்-
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.
[5]
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்;
பாட்டின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார், அரவம் தன்னை;-ஆலங்காட்டு அடிகளாரே.
[6]
தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்;
நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்;
கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.
[7]
கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு
சூடினார், கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்;
பாடினார், சாம வேதம்; பைம்பொழில் பழனை மேயார்
ஆடினார், காளி காண; ஆலங்காட்டு அடிகளாரே.
[8]
வெற்று அரைச் சமணரோடு விலை உடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்;
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும்;
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே.
[9]
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்;
பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய
அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.069   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
பண் - திருநேரிசை (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!
[1]
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!
[2]
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்-
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!
[3]
சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள
ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி;
கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!
[4]
தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!
[5]
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!
[6]
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!
[7]
பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும்
ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள்
சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!
[8]
நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்;
மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும்
குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!
[9]
விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.070   முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
பண் - திருநேரிசை (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.
[1]
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா,
வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த,
சிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.
[2]
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக்
கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம், திகழும் புன்னை, செழுந் திரள் குரவம், வேங்கை,
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே!
[3]
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி,
கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி,
எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி,
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே.
[4]
துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சு எழுத்து ஓதில், நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்;
வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார், நனிபள்ளி அடிகளாரே.
[5]
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்;
அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்;
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே.
[6]
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.
[7]
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்;
புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை
[8]
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க,
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி,
பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்
பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.071   மனைவி தாய் தந்தை மக்கள்
பண் - திருநேரிசை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!
[1]
வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!
[2]
நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன
கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே!
[3]
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!
[4]
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி,
மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.
[5]
வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய
செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!
[6]
வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை,
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை,
கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே!
[7]
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்-
பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே!
[8]
கரு மலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்;
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க, திண்ணம், நாம் உய்ந்தஆறே!
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.072   விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
பண் - திருநேரிசை (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
[1]
பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்;
துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்;
மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்;
என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
[2]
மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்;
பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்;
செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்;
எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
[3]
விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்;
கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்;
துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்;
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
[8]
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
[9]
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.073   பெருந் திரு இமவான் பெற்ற
பண் - திருநேரிசை (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[1]
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[2]
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[3]
அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[4]
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[5]
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[6]
சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி,
மற்று எமை உயக்கொள்! என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச்
செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[7]
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
எம் தனி நாதனே! என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[8]
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.074   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை )
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
[8]
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
[9]
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.075   தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை )
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!
[1]
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!
[2]
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
[3]
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.
[4]
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!
[5]
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,
உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி
எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?
[6]
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!
[7]
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே!
[8]
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.
[9]
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.076   மருள் அவா மனத்தன் ஆகி
பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை )
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்;
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப்
பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!
[1]
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி,
பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி,
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!
[2]
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு
எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?
[3]
காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக,
வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக,
நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி,
பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.
[4]
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி
அஞ்சல்! என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே!
நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்;
நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?
[5]
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்;
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க,
நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!
[6]
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே
வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே,
உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும்,
கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?
[7]
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்,
ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,-
தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய
ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!
[8]
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்!
சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக்
குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!
[9]
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா;
அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்;
படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை;
கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.077   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை )
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?
[1]
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும்,
தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும்,
பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை,
ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?
[2]
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்;
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்;
விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்;
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே!
[3]
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே!
[4]
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார்
முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
[5]
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்;
அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்-
தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே!
[6]
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்;
ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே!
[7]
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்;
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே.
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.078   வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை )
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[3]
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
[4]
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
[5]
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக்
கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்;
நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!
[6]
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை,
பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[7]
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம்
திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.079   தம் மானம் காப்பது ஆகித்
பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை )
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!
[1]
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்;
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!
[2]
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து
ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்;
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!
[3]
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்;
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை
என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[4]
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்;
பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[5]
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய,
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்-
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
[6]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.080   பாளை உடைக் கமுகு ஓங்கி,
பண் - திருவிருத்தம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?
[1]
பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி, புலி அதளன்,
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
[2]
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான்,
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்,
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
[3]
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
[4]
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
மைஞ் ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றான்,
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
[5]
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?
[6]
தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
[7]
சுற்றும் அமரர், சுரபதி, நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்,
செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன்,
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
[8]
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?
[9]
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து,
அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.081   கரு நட்ட கண்டனை, அண்டத்
பண் - திருவிருத்தம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, வானவர் கோன் என்று வாழ்த்துவனே.
[1]
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
என்று வந்தாய்? என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
[2]
கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!
[3]
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
[4]
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்!
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?
[5]
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?
[6]
முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும்,
துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள்
படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே!
[7]
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!
[8]
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள்
மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்-
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.082   பார் கொண்டு மூடிக் கடல்
பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?
[1]
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி
விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள
அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!
[2]
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு
நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும்
விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே
வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
[3]
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.
[4]
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை!
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை,
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.
[5]
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய்,
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர்,
அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
[6]
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர்
சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம்
தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.
[7]
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து
அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்;
நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள
விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
[8]
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே-
அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
[9]
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத்
தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத்
தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே-
அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.083   படை ஆர் மழு ஒன்று
பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்,
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்-
மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.
[1]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.084   எட்டு ஆம் திசைக்கும் இரு
பண் - வியாழக்குறிஞ்சி (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை! என்று
இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா,
ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[1]
பேழ்வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறிப் பிறங்கு-இலங்கு
தேய் வாய் இளம்பிறை செஞ்சடை மேல் வைத்த தேவர் பிரான்,
மூவான், இளகான், முழு உலகோடு மண் விண்ணும் மற்றும்
ஆவான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[2]
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரி ஆர் இலங்கிய சூலத்தினான், இமையாத முக்கண்
பெரியான், பெரியார் பிறப்பு அறுப்பான், என்றும் தன் பிறப்பை
அரியான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[3]
வடிவு உடை வாள் நெடுங்கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி,
பொடி கொள் அகலத்துப் பொன் பிதிர்ந்தன்ன பைங்கொன்றை அம்தார்
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[4]
பொறுத்தான், அமரர்க்கு அமுது அருளி(ந்); நஞ்சம் உண்டு கண்டம்
கறுத்தான்; கறுப்பு அழகா உடையான்; கங்கை செஞ்சடை மேல்
செறுத்தான்; தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால்
அறுத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[5]
காய்ந்தான், செறற்கு அரியான் என்று, காலனைக் கால் ஒன்றினால்
பாய்ந்தான்; பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால்
மேய்ந்தான்; வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[6]
உளைந்தான், செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால்
களைந்தான், அதனை நிறைய நெடுமால் கண் ஆர் குருதி
வளைந்தான், ஒரு விரலி(ந்)னொடு வீழ் வித்துச் சாம்பர் வெண் நீறு
அளைந்தான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[7]
முந்து இவ் வட்டத்து இடைப் பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள்
பந்தி வட்டத்து இடைப்பட்டு அலைப் புண்பதற்கு அஞ்சிக் கொல்லோ,
நந்தி வட்டம் நறு மா மலர்க் கொன்றையும் நக்க சென்னி
அந்தி வட்டத்து ஒளியான் அடிச் சேர்ந்தது, என் ஆர் உயிரே!
[8]
மிகத் தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய்ம் மருவி,
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்கு உறுப்பான்; வரும் பொன்
முகத்தால் குளிர்ந்திருந்து, உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[9]
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[10]
பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணி செய்யக்
குழலும் முழவொடு மா நடம் ஆடி, உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.085   காலை எழுந்து, கடிமலர் தூயன
பண் - திருவிருத்தம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[1]
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[2]
அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[3]
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!
[4]
கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.
[5]
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!
[6]
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!
[7]
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[8]
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[9]
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.086   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
பண் - திருவிருத்தம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.
[1]
சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!
[2]
பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!
[3]
தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.
[4]
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!
[5]
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.
[6]
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே!
[7]
சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!
[8]
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?
[9]
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.
[10]
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.087   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
பண் - திருவிருத்தம் (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!
[1]
சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில்
மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப்
பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான்
உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[2]
ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும்
கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே-
பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[5]
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[6]
மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[7]
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[8]
போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[9]
அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.088   மாலினை மால் உற நின்றான்,
பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.
[1]
மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால்
குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன்
பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.
[2]
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
அறுத்தனை, ஆல் அதன் கீழனை, ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனை, பூதப்படையனை, பூந்துருத்தி(ய்) உறையும்
நிறுத்தனை, நீலமிடற்றனை-யான் அடி போற்றுவதே.
[3]
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற
திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய
பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும்
கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே.
[4]
தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள
மிக்கன மும்மதில் வீய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
புக்கனன், பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி(ய்) உறையும்
நக்கனை, நங்கள் பிரான்தனை-நான் அடி போற்றுவதே.
[5]
அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும்
திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே.
[6]
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும்
அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.
[7]
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான்,
என் நிறம்? என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும்
எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே.
[8]
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும்
நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.
[9]
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே
வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும்
மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.089   பார் இடம் சாடிய பல்
பண் - திருவிருத்தம் (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
[1]
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!
[2]
கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;-
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல்,
சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!
[3]
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
[4]
கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.
[5]
பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.
[8]
தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.
[9]
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.090   கையது, கால் எரி நாகம்,
பண் - திருவிருத்தம் (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.
[1]
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
[2]
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும்
செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி
அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.
[3]
பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்;
முத்தர்கள் முன்னம் பணி செய்து பார் இடம் முன் உயர்ந்தான்;
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே
[4]
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை
மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடை முடியன்;
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதி குடி,
ஆன் அண் ஐந்து ஆடும், மழுவனை-நாம் அடைந்து ஆடுதுமே.
[5]
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,
பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி
நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
[6]
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.
[7]
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.
[8]
மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த
மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள் படையன்;
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.
[9]
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.091   குறுவித்தவா, குற்றம் நோய் வினை
பண் - திருவிருத்தம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[1]
கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய்
ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[2]
தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய்
நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[3]
தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[4]
இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக்
கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[7]
மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய்
துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[8]
துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய்
இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!
[9]
கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.092   சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
பண் - திருவிருத்தம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
[1]
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க்
கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.
[2]
மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே.
[3]
இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.
[4]
எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[5]
துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை
இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[6]
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.
[7]
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை
வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்-
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
[8]
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[9]
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
[10]
மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.
[11]
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; போற்றி! என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள்
சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும்,
அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[12]
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[13]
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.
[19]
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.
[20]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.093   வானவர் தானவர் வைகல் மலர்
பண் - திருவிருத்தம் (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.
[1]
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.
[2]
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.
[3]
முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்;
கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்;
அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே.
[4]
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.
[5]
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.
[6]
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.
[7]
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.094   ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம் (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?
[3]
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
[4]
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!
[5]
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!
[6]
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.
[7]
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!
[8]
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க்
கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.
[9]
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.095   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
பண் - திருவிருத்தம் (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[3]
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[4]
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[5]
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[6]
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.096   கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்
பண் - திருவிருத்தம் (திருச்சத்திமுற்றம் வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[1]
காய்ந்தாய், அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன்
பாய்ந்தாய், உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய், அடியேற்கு அருளாய்! உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[2]
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப,
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி!
அத்தா! அடியேன் அடைக்கலம் கண்டாய்-அமரர்கள் தம்
சித்தா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[3]
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று
அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்;
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[4]
கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்-
தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி!
உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்-
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[5]
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?-
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
[6]
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
தக்கு ஆர்வம் எய்திச் சமண் தவிர்ந்து உன் தன் சரண் புகுந்தேன்;
எக் காதல், எப் பயன், உன் திறம் அல்லால் எனக்கு உளதே?-
மிக்கார் திலையுள் விருப்பா! மிக வடமேரு என்னும்
திக்கா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.097   அட்டுமின், இல் பலி! என்று
பண் - திருவிருத்தம் (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.
[1]
பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே
பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று,
கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே.
[2]
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து,
நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ?
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே.
[3]
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.
[4]
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.
[5]
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல்
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே.
[6]
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா! என்று சொல்லிக் கிறிபடத் தான்
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே?
[7]
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல்
நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்-
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.
[8]
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும்
துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை,
அன்னியர் அற்றவர், அங்கணனே, அருள் நல்கு! என்பரே.
[9]
திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல்,
குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி,
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர்
உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.
[10]
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான்,
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.098   அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
பண் - திருவிருத்தம் (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
[1]
பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்;
ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.
[2]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.099   ஓதுவித்தாய், முன் அற உரை;
பண் - திருவிருத்தம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!
[3]
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!
[4]
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.
[5]
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்)
உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்;
திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா!
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!
[6]
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?
[7]
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே!
கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள்
சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!
[8]
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, அல்லம் என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!
[9]
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.100   மன்னும் மலைமகள் கையால் வருடின;
பண் - திருவிருத்தம் (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.
[1]
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.
[2]
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.
[3]
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.
[4]
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.
[5]
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.
[6]
போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.
[7]
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; கூட ஒண்ணாச்
சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.
[8]
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.101   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
பண் - திருவிருத்தம் (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[1]
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[2]
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[3]
மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[4]
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[5]
வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[6]
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[7]
கரப்பர்கள், மெய்யை; தலை பறிக்கச் சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[8]
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[9]
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.102   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
பண் - திருவிருத்தம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!
[1]
ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப்
பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்,
நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே!
[2]
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!
[3]
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து,
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி,
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.
[4]
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க,
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை, யாது ஒன்று? நான் உன்னை வேண்டுவனே.
[5]
கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு,
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்-
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே.
[6]
சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்
குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள்
அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.
[7]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.103   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
பண் - திருவிருத்தம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!
[1]
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!
[2]
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!
[3]
பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!
[4]
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.
[5]
பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?
[6]
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!
[7]
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!
[8]
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே.
[9]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.104   மாசு இல் ஒள்வாள் போல்
பண் - திருவிருத்தம் (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.
[1]
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.
மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது
யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின்
தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும்
கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே!
[4]
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.
[5]
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.
[6]
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில
நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.
[7]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.105   தன்னைச் சரண் என்று தாள்
பண் - திருவிருத்தம் (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.
[1]
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!
[2]
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே!
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.106   நெய்தல் குருகு தன் பிள்ளை
பண் - திருவிருத்தம் (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!
[1]
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை,
பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.
[2]
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத்
தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே!
[3]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.107   மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த
பண் - திருவிருத்தம் (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[2]
கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும்,
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[3]
மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை,
கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[4]
குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த,
தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[5]
பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,-
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே.
[6]
படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[7]
வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே
[8]
கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்,
வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்),
ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.
[9]
தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.108   மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
பண் - திருவிருத்தம் (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே;
மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.
[1]
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும்
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால்
வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே.
[2]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.109   பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
பண் - திருவிருத்தம் (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!
[1]
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய்
காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!
[2]
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல்
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!
[3]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.110   சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,
பண் - கொல்லி (பசுபதித் திருவிருத்தம் )
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[1]
உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[2]
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால்
வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப்
பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[3]
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[4]
இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும்
சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி,
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய
அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்-
பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[7]
சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
[8]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.111   விடையும் விடைப் பெரும் பாகா!
பண் - திருவிருத்தம் (பொது -சரக்கறை திருவிருத்தம் )
விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[1]
விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்; மேல் இலங்கு
சங்கக் கலனும், சரி கோவணமும், தமருகமும்,
அந்திப் பிறையும், அனல் வாய் அரவும், விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[2]
வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சாந்து ஆய வெந்ததவள-வெண் நீறும், தகுணிச்சமும்,
பூந்தாமரை மேனி, புள்ளி உழை-மான் அதள், புலித்தோல்,
தாம்தாம் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[3]
வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும், வான்மதியும்,
நஞ்சம் மா நாகம், நகுசிரமாலை, நகுவெண்தலை,
தஞ்சமா வாழும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[4]
வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை,
மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[5]
வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சூழ் இட்டு இருக்கும் நல் சூளாமணியும், சுடலை நீறும்,
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும், அரவும், என்பு, ஆமை ஓடும்,
தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[6]
விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்-
தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[7]
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை,
வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[8]
வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம்,
குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை
தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[9]
வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும்,
பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல்,
சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[10]
விவந்து ஆடிய கழல் எந்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை; தாழ் புலித்தோல்
சிவந்து ஆடிய பொடி-நீறும், சிரமாலை சூடி நின்று
தவம் தான் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
[11]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.112   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் )
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.
[3]
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!
[4]
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.
[5]
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.
[6]
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.
[7]
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.
[8]
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே!
[9]
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!
[10]
Back to Top திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.113   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் )
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால்,
தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!
[2]
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.
[3]
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப்
பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்;
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.
[10]
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து
மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!
[11]
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org