This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 சேக்கிழார் - திருமலைச் சருக்கம் -பாயிரம் ()
2 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -தில்லை வாழ் அந்தணர் ()
3 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -திருநீலகண்ட நாயனார் புராணம் ()
4 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -இயற்பகை நாயனார் புராணம் ()
5 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -இளையான் குடி மாற ()
6 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -மெய்ப் பொருள் நாயனார் ()
7 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -விறன்மிண்ட நாயனார் புராணம் ()
8 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -அமர் நீதி நாயனார் ()
9 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -எறி பத்த நாயனார் ()
10 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -ஏனாதிநாத நாயனார் புராணம் ()
11 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -கண்ணப்ப நாயனார் புராணம் ()
12 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -குங்குலியக் கலய நாயனார் ()
13 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -மானக்கஞ்சாற நாயனார் புராணம் ()
14 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -அரிவாட்டாய நாயனார் புராணம் ()
15 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -ஆனாய நாயனார் புராணம் ()
16 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -மூர்த்தி நாயனார் புராணம் ()
17 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -முருக நாயனார் புராணம் ()
18 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -உருத்திர பசுபதி நாயனார் ()
19 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -திரு நாளைப் போவர் ()
20 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -திருக் குறிப்புத் தொண்ட ()
21 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -சண்டேசுர நாயனார் புராணம் ()
22 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் ()
23 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -குலச்சிறை நாயனார் புராணம் ()
24 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -பெரு மிழலைக் குறும்ப ()
25 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -காரைக்கால் அம்மையார் புராணம் ()
26 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -அப்பூதி அடிகள் நாயனார் ()
27 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -திரு நீல நக்க ()
28 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -நமிநந்தி அடிகள் நாயனார் ()
29 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -திருஞான சம்பந்த சுவாமிகள் ()
30 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -ஏயர்கோன் கலிக்காம நாயனார் ()
31 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -திரு மூல நாயனார் ()
32 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -தண்டியடிகள் புராணம் ()
33 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -மூர்க்க நாயனார் புராணம் ()
34 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -சோமாசி மாற நாயனார் ()
35 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சாக்கிய நாயனார் புராணம் ()
36 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சிறப்புலி நாயனார் புராணம் ()
37 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சிறுத்தொண்ட நாயனார் புராணம் ()
38 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கழற்றி அறிவார் நாயனார் ()
39 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கணநாத நாயனார் புராணம் ()
40 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கூற்றுவ நாயனார் புராணம் ()
41 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -பொய்யடிமை யில்லாத புலவர் ()
42 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -புகழ்ச் சோழ நாயனார் ()
43 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -நரசிங்க முனையரைய நாயனார் ()
44 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -அதிபத்த நாயனார் புராணம் ()
45 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -கலிக்கம்ப நாயனார் புராணம் ()
46 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -கலிய நாயனார் புராணம் ()
47 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -சத்தி நாயனார் புராணம் ()
48 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ()
49 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -கணம்புல்ல நாயனார் புராணம் ()
50 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -காரிநாயனார் புராணம் ()
51 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -நின்ற சீர் நெடுமாற ()
52 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -வாயிலார் நாயனார் புராணம் ()
53 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -முனையடுவார் நாயனார் புராணம் ()
54 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -கழற்சிங்க நாயனார் புராணம் ()
55 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -இடங்கழி நாயனார் புராணம் ()
56 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -செருத்துணை நாயனார் புராணம் ()
57 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -புகழ்த்துணை நாயனார் புராணம் ()
58 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -கோட்புலி நாயனார் புராணம் ()
59 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -பத்தாராய்ப் பணிவார் புராணம் ()
60 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -பரமனையே பாடுவார் புராணம் ()
61 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் ()
62 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -திருவாரூர் பிறந்தார் புராணம் ()
63 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -முப்போதும் திருமேனி தீண்டுவார் ()
64 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -முழுநீறு பூசிய முனிவர் ()
65 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் ()
66 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -பூசலார் நாயனார் புராணம் ()
67 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம் ()
68 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -நேச நாயனார் புராணம் ()
69 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -கோச்செங்கட் சோழ நாயனார் ()
70 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ()
71 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -சடைய நாயனார் புராணம் ()
72 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -இசை ஞானியார் புராணம் ()
73 சேக்கிழார் - வெள்ளானைச் சருக்கம் -வெள்ளானைச் சருக்கம் ()
74 கடவுண்மாமுனிவர் - திருவாதவூரர் புராணம் - (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)
Back to Top
சேக்கிழார் திருமலைச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.000  
பாயிரம்
பண் - ( )
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ,
| [1] |
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.
| [2] |
அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.
| [3] |
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
| [4] |
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம்.
| [5] |
பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.
| [6] |
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
| [7] |
நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால்.
| [8] |
காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன் காலம்பார்த் திருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று வெண்சுட ரானதென் றதன் கீழ்
ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென் றதனைவந் தணைதருங் கலுழன்.
| [9] |
அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின் அருவிகள் எதிரெதிர் முழங்க
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ மதுமல ரிருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமானசோ பான நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு.
| [10] |
வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம் கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவில்நின் றாடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தியெம் பெருமான்.
| [11] |
நெற்றியிற் கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனியர் அனேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாந் தலைமையாம் பணியும்
மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினாற் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான்.
| [12] |
கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும் அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும் வென்றிவெண் குடைஅந பாயன்
செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந் திருக்கயி லாயநீள் சிலம்பு.
| [13] |
அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து
இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்
தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.
| [14] |
யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.
| [15] |
அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
| [16] |
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
| [17] |
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.
| [18] |
கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.
| [19] |
சம்பு வின்அடித் தாமரைப் போதலால்
எம்பி ரான்இறைஞ் சாயிஃ தென்னெனத்
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன் நாம்தொழுந் தன்மையான்.
| [20] |
என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.
| [21] |
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
| [22] |
அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு
இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத்
துன்னி னான்நந் தனவனச் சூழலில்.
| [23] |
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
| [24] |
அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென.
| [25] |
மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
| [26] |
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.
| [27] |
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.
| [28] |
கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
| [29] |
அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.
| [30] |
அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.
| [31] |
பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.
| [32] |
அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.
| [33] |
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.
| [34] |
எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
| [35] |
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர்ஐ யாறுந் திகழ்வது.
| [36] |
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்தும் இடம்பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.
| [37] |
என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
| [38] |
மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்
புற்றி டத்தெம் புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.
| [39] |
அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
| [40] |
உலகம் உய்யவும் சைவம்நின் றோங்கவும்
அலகில் சீர்நம்பி ஆருரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
| [41] |
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.
| [42] |
ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு
பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
| [43] |
சையமால் வரைபயில் தலைமை சான்றது
செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.
| [44] |
மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்
சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.
| [45] |
திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில்
பொங்குவெண் டலைநுரை பொருது போதலால்
எங்கள்நா யகன்முடி மிசைநின் றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
| [46] |
வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
| [47] |
வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.
| [48] |
வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்
பூசு குங்கும மும்புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னும்தெளி வில்லதே.
| [49] |
மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.
| [50] |
ஒண்து றைத்தலை மாமத கூடுபோய்
மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
| [51] |
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.
| [52] |
உழுத சால்மிக வூறித் தெளிந்தசே
றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதந்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
| [53] |
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழலசைய மடநடையின் வரம்பணைவார்.
| [54] |
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத் தயல்வண்டும் வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.
| [55] |
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம்.
| [56] |
கயல்பாய்பைந் தடநந்தூன் கழிந்தபெருங் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.
| [57] |
காடெல்லாங் கழைக்கரும்பு காவெல்லாங் குழைக்கரும்பு
மாடெல்லாங் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாங் கடலன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனையொவ்வா நலமெல்லாம்.
| [58] |
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
| [59] |
அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
| [60] |
காவி னிற்பயி லுங்களி வண்டினம்
வாவி யிற்படிந் துண்ணும் மலர்மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழி லிற்கனி சாடுமால்.
| [61] |
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த வாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.
| [62] |
பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா மன்பர்
தத்தமிற் கூடி னார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்.
| [63] |
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
| [64] |
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல்வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்க தன்றே.
| [65] |
வைதெரிந் தகற்றி யாற்றி மழைப்பெயல் மானத் தூற்றிச்
செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
| [66] |
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண் டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்.
| [67] |
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வரும்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவு மெங்கும். ,
| [68] |
சூதபா டலங்கள் எங்குஞ் சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந் தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும் பூகபுன் னாகம் எங்கும்.
| [69] |
மங்கல வினைகள் எங்கும் மணஞ்செய்கம் பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்குஞ்
செங்கயல் பழனம் எங்குந் திருமகள் உறையுள் எங்கும்.
| [70] |
மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும்
யாகமுஞ் சடங்கு மெங்கும் இன்பமும் மகிழ்வு மெங்கும்
யோகமுந் தவமு மெங்கும் ஊசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும் புண்ணிய முனிவ ரெங்கும்.
| [71] |
பண்டரு விபஞ்சி எங்கும் பாதசெம் பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளரிசைக் குழல்கள் எங்கும்
தொண்டர்த மிருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை யெங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவு மெங்கும்.
| [72] |
மாடுபோ தகங்கள் எங்கும் வண்டுபோ தகங்கள் எங்கும்
பாடுமம் மனைகள் எங்கும் பயிலுமம் மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள் எங்கும் நிதிநிகே தனங்கள் எங்குந்
தோடுசூழ் மாலை எங்குந் துணைவர்சூழ் மாலை எங்கும்.
| [73] |
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.
| [74] |
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்குங்
கொற்றவன் அநபா யன்பொற் குடைநிழற் குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ.
| [75] |
சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
| [76] |
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே.
| [77] |
பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.
| [78] |
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள்
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.
| [79] |
அங்கு ரைக்கென் னளவப் பதியிலார்
தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாள்திருச் சேடி பரவையாம்
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.
| [80] |
படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.
| [81] |
செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்கு மத்தின் குழம்பை அவர்குழல்
பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.
| [82] |
உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
| [83] |
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
| [84] |
ஆர ணங்களே அல்ல மறுகிடை
வார ணங்களும் மாறி முழங்குமால்
சீர ணங்கிய தேவர்க ளேயலால்
தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.
| [85] |
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.
| [86] |
நிலம கட்கழ கார்திரு நீள்நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
| [87] |
அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
| [88] |
மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்
கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண இயற்றினான்.
| [89] |
கொற்ற வாழி குவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.
| [90] |
பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.
| [91] |
அறம்பொரு ளின்ப மான அறநெறி வழாமற் புல்லி
மறங்கடிந் தரசர் போற்ற வையகங் காக்கும் நாளில்
சிறந்தநல் தவத்தால் தேவி திருமணி வயிற்றில் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேரரிக் குருளை அன்னான்.
| [92] |
தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ்
சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.
| [93] |
அளவில்தொல் கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவர சென்னுந் தன்மை எய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்.
| [94] |
திங்கள்வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று
மங்குல்தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமங் குலவு தோளான்
பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
| [95] |
பரசுவந் தியர்முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி.
| [96] |
தனிப்பெருந் தருமம் தானோர் தயாவின்றித் தானை மன்னன்
பனிப்பில்சிந் தையினில் உண்மைப் பான்மைசோ தித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணமோர் வண்ணம் நல்ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகி னூடே.
| [97] |
அம்புனிற் றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினாற் செல்லப் பட்டங்
கும்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந் தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந்நடுக் குற்று வீழும்.
| [98] |
மற்றது கண்டு மைந்தன் வந்ததிங் கபாயம் என்று
சொற்றடு மாறி நெஞ்சில் துயருழந் தறிவ ழிந்து
பெற்றமுங் கன்றும் இன்றென் உணர்வெனும் பெருமை மாளச்
செற்றஎன் செய்கேன் என்று தேரினின் றிழிந்து வீழ்ந்தான்
| [99] |
அலறுபேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி நிற்கும்
மலர்தலை உலகங் காக்கும் மனுவெனும் எங்கோ மானுக்கு
உலகில்இப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ னென்பான்.
| [100] |
வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவ தறமே யாகில்
எந்தைஈ தறியா முன்னம் இயற்றுவ னென்று மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான் திருமறை யவர்முன் சென்றான்.
| [101] |
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தஆத் தரியா தாகி
முன்நெருப் புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின்பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்த தன்றே.
| [102] |
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
| [103] |
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவல ரெதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந் தெய்தி இறைவநின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கிய தென்று சொன்னார்.
| [104] |
மன்னவ னதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.
| [105] |
வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்.
| [106] |
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயர மெய்தி
வெவ்விடந் தலைக்கொண் டாற்போல் வேதனை யகத்து மிக்கிங்கு
இவ்வினை விளைந்த வாறென் றிடருறு மிரங்கு மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந் தெருமருந் தெளியுந் தேறான்.
| [107] |
மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும் என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற துயரமோர் அளவிற் றன்றால்.
| [108] |
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடிவணங்கிச்
சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய் தார்க்குமறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறமென்றார்.
| [109] |
வழக்கென்று நீர்மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலறுங் கோவுறுநோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன் றெல்லீருஞ் சொல்லியஇச்
சழக்கின்று நானியைந்தால் தருமந்தான் சலியாதோ.
| [110] |
மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ.
| [111] |
என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியனோர் உயிர்கொன்றால் அவனைக்கொல் வேனானால்
தொன்மனுநூற் றொடைமனுவால் துடைப்புண்ட தெனும்வார்த்தை
மன்னுலகில் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்.
| [112] |
என்றரசன் இகழ்ந்துரைப்ப எதிர்நின்ற மதியமைச்சர்
நின்றநெறி உலகின்கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால்
பொன்றுவித்தன் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ தொல்நிலங்கா வலஎன்றார்.
| [113] |
அவ்வண்ணந் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர் என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல் முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.
| [114] |
அவ்வுரையில் வருநெறிகள் அவைநிற்க அறநெறியின்
செவ்வியவுண் மைத்திறநீர் சிந்தைசெயா துரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.
| [115] |
போற்றிசைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர்கொன்றான் ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவுமற் றவற்கொல்லும் அதுவேயா மெனநினைமின்.
| [116] |
எனமொழிந்து மற்றிதனுக் கினியிதுவே செயல்இவ்ஆன்
மனமழியுந் துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபே ரிடர்யானுந் தாங்குவதே கருமமென
அனகன்அரும் பொருள்துணிந்தான் அமைச்சருமஞ் சினரகன்றார்.
| [117] |
மன்னவன்தன் மைந்தனையங் கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகணைந்தான்.,
| [118] |
தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங் கப்பெருமான்.
| [119] |
சடைமருங்கில் இளம்பிறையுந் தனிவிழிக்குந் திருநுதலும்
இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன் கண்டரசன் போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும் விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.
| [120] |
அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடனெழலும்
இன்னபரி சானானென் றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ.
| [121] |
அடிபணிந்த திருமகனை ஆகமுற எடுத்தணைத்து
நெடிதுமகிழ்ந் தருந்துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும் பருவரல்நீங் கியதன்றே.
| [122] |
பொன்தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும்.
| [123] |
இனையவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்
புனையுமுரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ
அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில்.
| [124] |
பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.
| [125] |
பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முத லானவர்
ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.
| [126] |
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்றொளி யால்நிறை தூய்மையால்
புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலால்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.
| [127] |
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகமும் ஆளற் குரியரென்று
அகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.
| [128] |
அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.
| [129] |
மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.
| [130] |
பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்.
| [131] |
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
| [132] |
ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.
| [133] |
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.
| [134] |
இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.
| [135] |
கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந் திருமுனைப் பாடி நாடு.
| [136] |
பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவ மோங்க அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தான் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடுந் திருநாவ லூரா மன்றே.
| [137] |
மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரஞ் செய்தார்.
| [138] |
தம்பிரா னருளி னாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பியா ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படைச் சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொன்நாண் அரையில் மின்னத் தெருவில்தேர் உருட்டு நாளில்.
| [139] |
நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூர பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
| [140] |
பெருமைசா லரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.
| [141] |
தந்தையார் சடைய னார்தம் தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக் கேற்ப
வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்
செந்திரு வனைய கன்னி மணத்திறஞ் செப்பி விட்டார்.
| [142] |
குலமுத லறிவின் மிக்கார் கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.
| [143] |
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று சொன்னபின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்துநாள் ஓலை விட்டார்.
| [144] |
மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணி னாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
| [145] |
மகிழ்ச்சியால் மணமீக் கூறி மங்கல வினைக ளெல்லாம்
புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப் போற்றிய தொழில ராகி
இகழ்ச்சியொன் றானும் இன்றி ஏந்துபூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள்முளை சாத்தி னார்கள்.
| [146] |
மணவினைக் கமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளி னானைப்
புணர்மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியி னாலே
பணைமுர சியம்ப வாழ்த்திப் பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார்.
| [147] |
மாமறை விதிவ ழாமல் மணத்துறைக் கடன்க ளாற்றித்
தூமறை மூதூர்க் கங்குல் மங்கலந் துவன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலங் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவ னுதயஞ் செய்தான்.
| [148] |
காலைசெய் வினைகள் முற்றிக் கணிதநூற் புலவர் சொன்ன
வேலைவந் தணையு முன்னர் விதிமணக் கோலங் கொள்வான்
நூலசைந் திலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான்.
| [149] |
வாசநெய் யூட்டி மிக்க மலர்விரை யடுத்த தூநீர்ப்
பாசனத் தமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன் திண்கால்
ஆசனத் தணிநீ ராட்டி அரிசனஞ் சாத்தி யன்பால்
ஈசனுக் கினியான் மேனி எழில்பெற விளக்கி னார்கள்.
| [150] |
அகில்விரைத் தூப மேய்ந்த அணிகொள்பட் டாடை சாத்தி
முகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த
துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன் தூய செங்கை
உகிர்நுதி முறையில் போக்கி ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.
| [151] |
தூநறும் பசுங்கர்ப் பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி யமைத்தசந் தனச்சே றாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.
| [152] |
தூமலர்ப் பிணையல் மாலை துணரிணர்க் கண்ணி கோதை
தாமமென் றினைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
மாமணி யணிந்த தூய வளரொளி இருள்கால் சீக்கும்
நாமநீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலங் கொண்டான்.
| [153] |
மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.
| [154] |
இயம்பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க் கின்பஞ் செய்தே
உயர்ந்தவா கனயா னங்கள் மிசைக்கொண்டார் உழைய ரானார்.
| [155] |
மங்கல கீத நாத மறையவர் குழாங்க ளோடு
தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த மைந்தருந் துவன்றிச் சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந் தணியின் மிக்க
குங்கும முலையி னாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.
| [156] |
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்தவெள் வளைக ளாலும்
இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீலநீர்த் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக் காட்சியிற் பொலிந்த தன்றே.
| [157] |
நெருங்குதூ ரியங்கள் ஏங்க நிரைத்தசா மரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்குபூங் கொடிக ளாட
அருங்கடி மணம்வந் தெய்த அன்றுதொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம்வந்த புத்தூ ராமால்.
| [158] |
நிறைகுடந் தூபம் தீபம் நெருங்குபா லிகைக ளேந்தி
நறைமல ரறுகு சுண்ணம் நறும்பொரி பலவும் வீசி
உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணமெதிர் கொள்ள வந்தார்.
| [159] |
கண்களெண் ணிலாத வேண்டுங் காளையைக் காண என்பார்
பெண்களி லுயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
மண்களி கூர வந்த மணங்கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடு வார்கள்.
| [160] |
ஆண்டகை யருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால் தகுதியில் நடந்த தென்பார்
பூண்டயங் கிவனே காணும் புண்ணிய மூர்த்தி யென்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார்.
| [161] |
வருமணக் கோலத் தெங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு சென்றுவெண் சங்க மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
| [162] |
ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து
மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.
| [163] |
கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ்
புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத்
தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.
| [164] |
காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச்
சோதிமணி மார்பினசை நூலினொடு தோளின்
மீதுபுனை யுத்தரிய வெண்டுகில் நுடங்க
ஆதப மறைக்குடை அணிக்கரம் விளங்க.
| [165] |
பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக்
கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.
| [166] |
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.
| [167] |
வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.
| [168] |
என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும்
மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே
நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.
| [169] |
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான்.
| [170] |
நெற்றிவிழி யான்மொழிய நின்றநிக ரில்லான்
உற்றதொர் வழக்கெனிடை நீயுடைய துண்டேல்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்
முற்றவிது சொல்லுகென வெல்லைமுடி வில்லான்.
| [171] |
ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந்
நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான்
தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.
| [172] |
என்றான் இறையோன் அதுகேட்டவ ரெம்ம ருங்கும்
நின்றார் இருந்தார் இவனென்னினைந் தான்கொ லென்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான்
நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்.
| [173] |
நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று
அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால்
இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.
| [174] |
மாசிலா மரபில் வந்த வள்ளல்வே தியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியாற் சிரிப்பு நீங்கி
ஆசிலந் தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை யாதல்
பேசஇன் றுன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்.
| [175] |
பித்தனு மாகப் பின்னும் பேயனு மாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய் யாதுமற் றவற்றால் நாணேன்
அத்தனைக் கென்னை யொன்றும் அறிந்திலை யாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டு மென்றார்.
| [176] |
கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய் துருகா நிற்குங்
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமு முடனே யாக்கும்
உண்டொராள் ஓலை யென்னும் அதனுண்மை யறிவே னென்று
தொண்டனா ரோலை காட்டு கென்றனர் துணைவ னாரை.
| [177] |
ஓலைகாட் டென்று நம்பி யுரைக்கநீ யோலை காணற்
பாலையோ அவைமுன் காட்டப் பணிசெயற் பாலை யென்ற
வேலையில் நாவ லூரர் வெகுண்டுமேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்துபின் தொடர லுற்றார்.
| [178] |
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்த ணாளன்
காவணத் திடையே யோடக் கடிதுபின் தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்.
| [179] |
மறைகளா யினமுன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி யெழுதுமா ளோலை வாங்கி
அறைகழ லண்ணல் ஆளாய் அந்தணர் செய்த லென்ன
முறையெனக் கீறி யிட்டார் முறையிட்டான் முடிவி லாதான்.
| [180] |
அருமறை முறையிட் டின்னும் அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர் எங்குளீர் செப்பு மென்றார்.
| [181] |
என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தா றின்றி
வன்றிறல் செய்தென் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினா னடிமை யென்றான்.
| [182] |
குழைமறை காதி னானைக் கோதிலா ரூரர் நோக்கிப்
பழையமன் றாடி போலு மிவனென்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய்நல் லூரா யேலுன்
பிழைநெறி வழக்கை யாங்கே பேசநீ போதா யென்றார்.
| [183] |
வேதிய னதனைக் கேட்டு வெண்ணெய்நல் லூரி லேநீ
போதினும் நன்று மற்றப் புனிதநான் மறையோர் முன்னர்
ஆதியின் மூல வோலை காட்டிநீ யடிமை யாதல்
சாதிப்ப னென்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.
| [184] |
செல்லுநான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும் பணையு மாபோல் வள்ளலுங் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத் தாரு மிதுவென்னா மென்று செல்ல
நல்லவந் தணர்கள் வாழும் வெண்ணெய்நல் லூரை நண்ணி.
| [185] |
வேதபா ரகரின் மிக்கார் விளங்குபே ரவைமுன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூ ரன்றான்
காதலென் அடியான் என்னக் காட்டிய வோலை கீறி
மூதறி வீர்முன் போந்தா னிதுமற்றென் முறைப்பா டென்றான்.
| [186] |
இசைவினா லெழுது மோலை காட்டினா னாகி லின்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி யாமோ
தசையெலா மொடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்
அசைவில்ஆ ரூரர் எண்ணம் என்னென்றார் அவையின் மிக்கார்.
| [187] |
அனைத்துநூல் உணர்ந்தீர் ஆதி சைவனென் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை யென்றிவ் வந்தணன் சாதித் தானேல்
மனத்தினா லுணர்தற் கெட்டா மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணா தென்றனன் எண்ணம் மிக்கான்.
| [188] |
அவ்வுரை யவையின் முன்பு நம்பியா ரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற திருமறை முனியை நோக்கி
இவ்வுல கின்கண் நீயின் றிவரையுன் னடிமை யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற வேண்டுமென் றுரைத்து மீண்டும்.
| [189] |
ஆட்சியில் ஆவ ணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
காட்சியில் மூன்றி லொன்று காட்டுவா யென்ன முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை படியோலை மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்.
| [190] |
வல்லையேற் காட்டிங் கென்ன மறையவன் வலிசெய் யாமற்
சொல்லநீர் வல்லீ ராகில் காட்டுவே னென்று சொல்லச்
செல்வநான் மறையோர் நாங்கள் தீங்குற வொட்டோ மென்றார்
அல்லல்தீர்த் தாள நின்றார் ஆவணங் கொண்டு சென்றார்.
| [191] |
இருள்மறை மிடற்றோன் கையி லோலைகண் டவையோ ரேவ
அருள்பெறு கரணத் தானும் ஆவணந் தொழுது வாங்கிச்
சுருள்பெறு மடியை நீக்கி விரித்ததன் தொன்மை நோக்கித்
தெருள்பெறு சபையோர் கேட்ப வாசகஞ் செப்பு கின்றான்.
| [192] |
அருமறை நாவல் ஆதி சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன் இதற்கிவை யென்னெ ழுத்து.
| [193] |
வாசகங் கேட்ட பின்னர் மற்றுமே லெழுத்திட் டார்கள்
ஆசிலா வெழுத்தை நோக்கி யவையொக்கு மென்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா மற்றுங்கள் பேர னார்தந்
தேசுடை எழுத்தே யாகில் தெளியப்பார்த் தறிமின் என்றார்.
| [194] |
அந்தணர் கூற வின்னு மாளோலை யிவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்தவா வணத்தி னோடு மெழுத்துநீ ரொப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்.
| [195] |
திரண்டமா மறையோர் தாமுந் திருநாவ லூரர் கோமுன்
மருண்டது தெளிய மற்ற மறையவ னெழுத்தால் ஓலை
அரண்டரு காப்பில் வேறொன் றழைத்துடன் ஒப்பு நோக்கி
இரண்டுமொத் திருந்த தென்னே யினிச்செயல் இல்லை யென்றார்.
| [196] |
நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர் தோற்றீர்
பான்மையி னேவல் செய்தல் கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன இசையுமோ வென்று நின்றார்.
| [197] |
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியே யாகப் பேசிய துமக்கிவ் வூரில்
வருமுறை மனையு நீடு வாழ்க்கையுங் காட்டு கென்றார்.
| [198] |
பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவ ரென்னை
ஒருவரும் அறியீ ராகில் போதுமென் றுரைத்துச் சூழ்ந்த
பெருமறை யவர்கு ழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.
| [199] |
எம்பிரான் கோயில் நண்ண இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி அவர்தமக் குணர்த்த லுற்றார்.
| [200] |
முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவ லாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம் என்றார்.
| [201] |
என்றெழு மோசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி கரசர ணாதி யங்கந்
துன்றிய புளக மாகத் தொழுதகை தலைமே லாக
மன்றுளீர் செயலோ வந்து வலியஆட் கொண்ட தென்றார்.
| [202] |
எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி யாண்டவ ரருளிச் செய்வார்.
| [203] |
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.
| [204] |
தேடிய அயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும்
பாடிய பொருளா யுள்ளான் பாடுவாய் நம்மை யென்ன
நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று.
| [205] |
வேதிய னாகி யென்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதிய மறியா தேனுக் குணர்வுதந் துய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன் குணப்பெருங் கடலை நாயேன்
யாதினை யறிந்தென் சொல்லிப் பாடுகேன் எனமொழிந்தார்.
| [206] |
அன்பனை யருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்த னென்றே மொழிந்தனை யாத லாலே
என்பெயர் பித்த னென்றே பாடுவா யென்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாட லுற்றார்.
| [207] |
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ் வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல கெல்லாமுய வெடுத்தார்.
| [208] |
முறையால்வரு மருதத்துடன் மொழியிந்தள முதலிற்
குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால்
நிறைபாணியி லிசைகோள்புணர் நீடும்புகல் வகையால்
இறையான்மகி ழிசைபாடின னெல்லாநிக ரில்லான்.
| [209] |
சொல்லார்தமி ழிசைபாடிய தொண்டன்தனை இன்னும்
பல்லாறுல கினில்நம்புகழ் பாடென்றுறு பரிவின்
நல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய நம்பன்
எல்லாவுல குய்யப்புரம் எய்தானருள் செய்தான்.
| [210] |
அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமணம் அழியும்
செயலால்நிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்.
| [211] |
நாவலர்கோன் ஆரூரன் தனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.
| [212] |
சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருளென்று தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
| [213] |
புலனொன்றும் படிதவத்திற் புரிந்தநெறி கொடுத்தருள
அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்தருளும்
நிலவுந்தண் புனலுமொளிர் நீள்சடையோன் திருப்பாத
மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்றொண்டர்.
| [214] |
திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் அமர்ந்தருளும்
பொருத்தமா மிடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான் மனங்கொண்டார்.
| [215] |
மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை யாறுகடந் தேறியபின்
இலகுபசும் புரவிநெடுந் தேர்இரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத் திருவதிகைப் புறத்தணைந்தார்.
| [216] |
உடையவர சுலகேத்து முழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவனென் றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற் சித்தவட மடம்புகுந்தார்.
| [217] |
வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண் வன்றொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப் புடையெங்கு மிடைகின்ற
பரிசனமுந் துயில்கொள்ளப் பள்ளியமர்ந் தருளினார்.
| [218] |
அதுகண்டு வீரட்டத் தமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய் முன்னொருவ ரறியாமே
பொதுமடத்தி னுட்புகுந்து பூந்தாரான் திருமுடிமேற்
பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் போல்பயின்றார்.
| [219] |
அந்நிலைஆ ரூரனுணர்ந் தருமறையோ யுன்னடியென்
சென்னியில்வைத் தனையென்னத் திசையறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண் என்றருள அதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.
| [220] |
அங்குமவன் திருமுடிமேல் மீண்டுமவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவ லூராளி
இங்கென்னைப் பலகாலும் மிதித்தனைநீ யாரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா னறிந்திலையோ எனக்கரந்தான்.
| [221] |
செம்மாந்திங் கியானறியா தென்செய்தே னெனத்தெளிந்து
தம்மானை யறியாத சாதியா ருளரே யென்று
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக் கழல்பணிந்து பாடினார்.
| [222] |
பொன்றிரளும் மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனுந் திருக்கெடிலம் திளைத்தாடி.
| [223] |
அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன் மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.
| [224] |
பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின் நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி அறாத்தில்லை மருங்கணைந்தார்.
| [225] |
தேம லங்கலணி மாமணி மார்பில் செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண் பூம லங்கவெதிர் பாய்வன மாடே புள்ள லம்புதிரை வெள்வளை வாவித் தாம லங்குகள் தடம்பணை சூழுந் தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை மாம லங்களற வீடருள் தில்லை மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.
| [226] |
நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ் நாளி கேரமில வங்க நரந்தம் பூக ஞாழல்குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி மீது கோகில மிடைந்து மிழற்றப் போக பூமியினு மிக்கு விளங்கும் பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்.
| [227] |
வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம் மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங் கன்னி காரங்குர வங்கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிள மோங்கித் துன்னு சாதிமரு மாலதி மௌவல் துதைந்த நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
| [228] |
இடம ருங்குதனி நாயகி காண ஏழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து
நடந வின்றருள் சிலம்பொலி போற்றும் நான்ம றைப்பதியை நாளும் வணங்கக்
கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங் காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந்
தடம ருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித் தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.
| [229] |
மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார். ,
| [230] |
அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியார் அவர்க ளோநம்பி யாரூரர் தாமோ முன்பி றைஞ்சினர் யாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி மகிழ்ந்து பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து பெருகு நாவனக ரார்பெரு மானும் பொன்பி றங்குமணி மாளிகை நீடும்
பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.
| [231] |
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆட ரம்பையர் அரங்கு முழங்கும் மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளின் வண்டு முழங்கும் பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும் திங்கள் தங்குசடை கங்கை முழங்கும் தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
| [232] |
போக நீடுநிதி மன்னவன் மன்னும் புரங்க ளொப்பன வரம்பில வோங்கி மாக முன்பருகு கின்றன போலும் மாளி கைக்குல மிடைந்த பதாகை யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும் ஓம தூமமுயர் வானி லடுப்ப மேக பந்திகளின் மீதிடை எங்கும் மின்னு டங்குவன வென்ன விளங்கும்.
| [233] |
ஆடு தோகைபுடை நாசிகள் தோறும் அரணி தந்தசுட ராகுதி தோறும் மாடு தாமமணி வாயில்கள் தோறும் மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ் சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ் செந்நெ லன்னமலை சாலைகள் தோறும் நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.
| [234] |
எண்ணில் பேருல கனைத்தினு முள்ள எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம் மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன மங்க லம்பொலி வளத்தன வாகிப் புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு
புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும் அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
| [235] |
மால யன்சத மகன்பெருந் தேவர் மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச் சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித் திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக் காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக்
காத லன்பர்கண நாதர் புகும்பொற் கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக் குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.
| [236] |
பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின் பிறங்குபே ரம்பல மேரு வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் அருமறை முதலில் நடுவினில் கடையில்
அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன் திருவணுக் கன்திரு வாயில்.
| [237] |
வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான் திருக்களிற் றுப்படி மருங்கு.
| [238] |
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
| [239] |
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக் கைம்மல ருச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
| [240] |
தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப்பெருந் தாண்டவம் புரிய
எடுத்தசே வடியா ரருளினால் தரளம் எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில் வருகநம் பாலென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம் கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.
| [241] |
ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த அப்பணி சென்னிமேற் கொண்டு
சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோல் நிலையெழு கோபுரங் கடந்து.
| [242] |
நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து நெடுந்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூ டேகி மன்னிய திருப்பதி யதனில்
தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றைவார் சடையா னருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.
| [243] |
புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர்
அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர்தாம்
பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகிற்
சிறந்தபுகழ்க் கழுமலமாந் திருப்பதியைச் சென்றணைந்தார்.
| [244] |
பிள்ளையார் திருவவதா ரஞ்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேனென் றூரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள.
| [245] |
மண்டியபே ரன்பினால் வன்றொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்டிரைவே லையின்மிதந்த திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று
பண்டருமின் னிசைபயின்ற திருப்பதிகம் பாடினார்.
| [246] |
இருக்கோல மிடும்பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள
வெருக்கோளுற் றதுநீங்க ஆரூர்மேற் செலவிரும்பிப்
பெருக்கோதஞ் சூழ்புறவப் பெரும்பதியை வணங்கிப்போய்த்
திருக்கோலக் காவணங்கிச் செந்தமிழ்மா லைகள்பாடி.
| [247] |
தேனார்க்கு மலர்ச்சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால்
ஆனாப்பே ரன்புமிக அடிபணிந்து தமிழ்பாடி
மானார்க்குங் கரதலத்தார் மகிழ்ந்தஇடம் பலவணங்கிக்
கானார்க்கு மலர்த்தடஞ்சூழ் காவிரியின் கரையணைந்தார்.
| [248] |
வம்புலா மலரலைய மணிகொழித்து வந்திழியும்
பைம்பொன்வார் கரைப்பொன்னிப் பயில்தீர்த்தம் படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு துறைவணங்கித் தாவில்சீர்
அம்பர்மா காளத்தின் அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.
| [249] |
மின்னார்செஞ் சடையண்ணல் விரும்புதிருப் புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன்தன் அருள்நினைந்து
பொன்னாரும் உத்தரியம் பு ரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி திருவாரூர் சென்றணைந்தார்.
| [250] |
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாமழைக்க
வாராநின் றானவனை மகிழ்ந்தெதிர்கொள் வீரென்று
நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்தார் அருள்செய்தார்.
| [251] |
தம்பிரா னருள்செய்யத் திருத்தொண்ட ரதுசாற்றி
எம்பிரா னார்அருள்தான் இருந்தபரி சிதுவானால்
நம்பிரா னாராவார் அவரன்றே யெனுநலத்தால்
உம்பர்நா டிழிந்ததென எதிர்கொள்ள வுடனெழுந்தார்.
| [252] |
மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங் கொடிநெருங்கத்
தாளின்நெடும் தோரணமுந் தழைக்கமுகுங் குழைத்தொடையும்
நீளிலைய கதலிகளும் நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயில் தொறும்நிரைத்தார்.
| [253] |
சோதிமணி வேதிகைகள் தூநறுஞ்சாந் தணிநீவிக்
கோதில்பொரி பொற்சுண்ணங் குளிர்தரள மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து
வீதிகள்நுண் துகள்அடங்க விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.
| [254] |
மங்கல கீதம்பாட மழைநிகர்தூ ரியமுழங்கச்
செங்கயற்கண் முற்றிழையார் தெற்றிதொறும் நடம்பயில
நங்கள்பிரான் திருவாரூர் நகர்வாழ்வார் நம்பியைமுன்
பொங்கெயில்நீள் திருவாயில் புறமுறவந் தெதிர்கொண்டார்.
| [255] |
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி எந்தை யிருப்பதும் ஆரூ ரவர் எம்மையு மாள்வரோ கேளீர் என்னும் சந்த விசைப்பதி கங்கள் பாடித் தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.
| [256] |
வானுற நீள்திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித்
தேனுறை கற்பக வாச மாலைத் தேவா சிரியன் தொழுதி றைஞ்சி
ஊனு முயிரும் உருக்கு மன்பால் உச்சி குவித்த செங்கைக ளோடும்
தூநறுங் கொன்றை யான்மூலட் டானம் சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.
| [257] |
புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
பற்றிட மாய பரம்பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
| [258] |
அன்பு பெருக உருகியுள்ளம் அலையஅட் டாங்கபஞ் சாங்க மாக
முன்பு முறைமையி னால்வணங்கி முடிவிலாக் காதல் முதிர வோங்கி
நன்புல னாகிய ஐந்தும்ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்பவெள் ளத்திடை மூழ்கிநின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட.
| [259] |
வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவ னாரரு ளாலோர் வாக்குத்
தோழமை யாக வுனக்குநம்மைத் த ந்தனம் நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்றுநீ கொண்டகோலம் என்றும் புனைந்துநின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடுவாயென் றாரூரர் கேட்க எழுந்த தன்றே.
| [260] |
கேட்க விரும்பிவன் றொண்டரென்றும் கேடிலா தானை யிறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே ஆரூ ரமர்ந்த அருமணி யே
வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா மற்றுன் பெரிய கருணை யன்றே
நாட்கம லப்பதந் தந்ததின்று நாயினே னைப்பொரு ளாக என்றார்.
| [261] |
என்று பலமுறை யால்வணங்கி எய்திய உள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போல்நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்துவாழ்ந்து திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்
அன்று முதலடி யார்களெல்லாம் தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.
| [262] |
மைவளர் கண்ட ரருளினாலே வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையுந் தாரு மாகி
மெய்வளர் கோலமெல் லாம்பொலிய மிக்க விழுத்தவ வேந்த ரென்னத்
தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித் திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.
| [263] |
இதற்குமுன் எல்லை யில்லாத் திருநகர் இதனுள் வந்து
முதற்பெருங் கயிலை யாதி முதல்வர்தம் பங்கி னாட்குப்
பொதுக்கடிந் துரிமை செய்யும் பூங்குழற் சேடி மாரிற்
கதிர்த்தபூ ணேந்து கொங்கைக் கமலினி அவத ரித்தாள்.
| [264] |
கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றிப் பரவையா ரென்னு நாமம்
விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோ ரான்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாத்தி.
| [265] |
பரவினர் காப்புப் போற்றிப் பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும் விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத் தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
| [266] |
மானிளம் பிணையோ தெய்வ வளரிள முகையோ வாசத்
தேனிளம் பதமோ வேலைத் திரையிளம் பவள வல்லிக்
கானிளங் கொடியோ திங்கட் கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவங் கற்குந் தனியிளந் தனுவோ வென்ன.
| [267] |
நாடுமின் பொற்பு வாய்ப்பு நாளுநாள் வளர்ந்து பொங்க
ஆடுமென் கழங்கும் பந்தும் அம்மனை ஊச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள் பனிமலை வல்லி பாதங்
கூடுமன் புருகப் பாடுங் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
| [268] |
பிள்ளைமைப் பருவ மீதாம் பேதைமைப் பருவ நீங்கி
அள்ளுதற் கமைந்த பொற்பால் அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ளமெய்த் தன்மை முன்னை உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.
| [269] |
பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசந் திசையெலாஞ் சென்று சூழ
ஓங்குபூங் கோயி லுள்ளார் ஒருவரை யன்பி னோடும்
பூங்கழல் வணங்க வென்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.
| [270] |
அணிசிலம் படிகள் பார்வென் றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல் வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப் பரவையார் போதும் போதில்.
| [271] |
புற்றிடம் விரும்பி னாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிச னங்கள் சூழஆ ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந் திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்.
| [272] |
கற்பகத்தின் பூம்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
| [273] |
ஓவியநான் முகனெழுத வொண்ணாமை யுள்ளத்தால்
மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ
மூவுலகின் பயனாகி முன்னின்ற தெனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.
| [274] |
தண்டரள மணித்தோடும் தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடுங் கண்வியப்பக் கிளரொளிப்பூ ணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப் பரவையா ருங்கண்டார்.
| [275] |
கண்கொள்ளாக் கவின்பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப
விண்கொள்ளாப் பேரொளியா னெதிர்நோக்கு மெல்லியலுக்கு
எண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடம்அச் சம்பயிர்ப்பை வலிந்தெழலும்.
| [276] |
முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த இவன்யாரோ வெனநினைந்தார்.
| [277] |
அண்ணலவன் தன்மருங்கே அளவிறந்த காதலினால்
உண்ணிறையுங் குணநான்கும் ஒருபுடைசாய்ந் தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல் மடக்கொடியை வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு செலவுய்ப்ப.
| [278] |
பாங்கோடிச் சிலைவளைத்துப் படையனங்கன் விடுபாணம்
தாங்கோலி யெம்மருங்கும் தடைசெய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க்குழல்மேல் சிறைவண்டு கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான் பொற்கோயில் போய்ப்புகுந்தாள்.
| [279] |
வன்றொண்ட ரதுகண்டுஎன் மனங்கொண்ட மயிலியலின்
இன்றொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யாரென்ன
அன்றங்கு முன்நின்றார் அவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ் சேர்வரியார் எனச்செப்ப.
| [280] |
பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.
| [281] |
என்றினைய பலவுநினைந் தெம்பெருமான் அருள்வகையான்
முன்றொடர்ந்து வருங்காதல் முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனையாட் கொண்டவர்பால் நண்ணுவனென் றுள்மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான் கோயில்புக.
| [282] |
பரவையார் வலங்கொண்டு பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின் றொருமருங்கு புறப்பட்டார்
விரவுபெருங் காதலினால் மெல்லியலார் தமைவேண்டி
அரவின்ஆ ரம்புனைந்தார் அடிபணிந்தார் ஆரூரர்.
| [283] |
அவ்வாறு பணிந்தேத்தி யணியாரூர் மணிப்புற்றின்
மைவாழுந் திருமிடற்று வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என் இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவா ராயினார்.
| [284] |
பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்
ஆசை மேலுமொ ராசை யளிப்பதோர்
தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய
ஈச னாரரு ளெந்நெறிச் சென்றதே.
| [285] |
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.
| [286] |
பந்தம் வீடு தரும்பர மன்கழல்
சிந்தை யார்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானென வேவிழித்து
எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே.
| [287] |
என்று சாலவு மாற்றல ரென்னுயிர்
நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.
| [288] |
காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான்
யாவ ரோடு முரையியம் பாதிருந்து
ஆவி நல்குவர் ஆரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந்தெனும் போழ்தினில்.
| [289] |
நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.
| [290] |
எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு
பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் பனிப்புற.
| [291] |
பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர்
நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்.
| [292] |
மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்
இறும ருங்குலார்க் கியார்பிழைப் பாரென்று
நறும லர்க்கங்குல் நங்கைமுன் கொண்டபுன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.
| [293] |
அரந்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர்
வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்
பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.
| [294] |
தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா.
| [295] |
வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையு மாயினார் .
| [296] |
தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு
வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே
எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.
| [297] |
ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
| [298] |
அடுத்து மேன்மேல் அலைத்தெழு மாழியே
தடுத்து முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டுநீ யென்னைஇன் றென்செயாய்.
| [299] |
பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.
| [300] |
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதல னாகிய வள்ளல்பால்
தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.
| [301] |
கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக் கணவனைமுன் பெறுவாள் போல
இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெருங் காதலோடும்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன் றொண்டர்பால் தனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.
| [302] |
சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல் சிறிதளவே யொலிப்ப முன்னர்
வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி வேதிகையில் நலங்கொள் பொற்கால்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா முன்றின்மருங் கிருந்தாள் வந்து.
| [303] |
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம் மறுகெதிர்வந் தவரா ரென்ன
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே டொருவர்தா மெதிர்நின் றாண்ட
சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி யென்றாள்.
| [304] |
என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ வென்னா முன்னம்
வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கவுயி ரொன்றுந் தாங்கி
மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து மெல்லணைமேல் வீழ்ந்த போது.
| [305] |
ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை யருகு வீசி
ஈரவிளந் தளிர்க்குளிரி படுத்துமட வார்செய்த விவையு மெல்லாம்
பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற் றதன்மீது சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி சொரிந்தான் வந்து. ,
| [306] |
கந்தங் கமழ்மென் குழலீர் இதுவென் கலைவாண் மதியங் கனல்வா னெனையிச்
சந்தின் தழலைப் பனிநீ ரளவித் தடவுங் கொடியீர் தவிரீர் தவிரீர்
வந்திங் குலவுந் நிலவும் விரையார் மலயா னிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவுஞ் சடையா னருள்பெற் றுடையார் அருளார்.
| [307] |
புலரும் படியன் றிரவென் னளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெருவாழ் வுரையீர்
பலரும் புரியுந் துயர்தா னிதுவோ படைமன் மதனார் புடைநின் றகலார்
அலரும் நிலவு மலரு முடியார் அருள்பெற் றுடையா ரவரோ வறியார். ,
| [308] |
என்றின் னனவே பலவும் புகலும் இருளா ரளகச் சுருளோ தியையும்
வன்றொண் டரையும் படிமேல் வரமுன்பு அருள்வா னருளும் வகையார் நினைவார்
சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத் திருவா ரூர்வாழ் பெருமா னடிகள்
அன்றங் கவர்மன் றலைநீர் செயுமென்று அடியா ரறியும் படியா லருளி. ,
| [309] |
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்
யாமத் திருளும் புலரக் கதிரோன் எழுகா லையில்வந் தடியார் கூடிச்
சேமத் துணையா மவர்பே ரருளைத் தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகுநீர் மையினால் நிகழச் செய்தார்.
| [310] |
தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனு மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்.
| [311] |
தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர்
சென்னியிலுஞ் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை பலசாத்திப் பரவையெனும்
மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்.
| [312] |
மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப்
போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
நாதர்பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.
| [313] |
அந்தரத் தமரர் போற்றும் அணிகிள ராடை சாத்திச்
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம் எழில்பெற விளங்கித் தோன்ற.
| [314] |
கையினிற் புனைபொற் கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியின் விளங்கு நீறும்
ஐயனுக் கழகி தாமென் றாயிழை மகளிர் போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந் தழைப்பவீ தியினைச் சார்ந்தார்.
| [315] |
நாவலூர் வந்த சைவ நற்றவக் களிறே யென்றும்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க் கன்ப வென்றுந்
தாவில்சீர்ப் பெருமை யாரூர் மறையவர் தலைவ வென்றும்
மேவினர் இரண்டுபாலும் வேறுவே றாயம் போற்ற.
| [316] |
கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப்
பக்கமுன் போது வார்கள் பயில்மொழி பயிற்றிச் செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப் பையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள் மறுகநீண் மறுகில் வந்தார்.
| [317] |
பொலங்கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்றோள் இடையிடை மிடைந்து தொங்கல்
நலங்கிளர் நீழற் சூழ நான்மறை முனிவ ரோடும்
அலங்கலம் தோளி னான்வந் தணைந்தனன் அண்ணல் கோயில்.
| [318] |
கண்ணுதல் கோயில் தேவா சிரியனாங் காவ ணத்துள்
விண்ணவ ரொழிய மண்மேன் மிக்கசீ ரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில் இவர்க்கியா னடியான்ஆகப்
பண்ணுநா ளெந்நா ளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்.
| [319] |
அடியவர்க் கடிய னாவேன் என்னும்ஆ தரவு கூரக்
கொடிநெடுங் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார்
கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தா ரவர்க்கெதிர் காணக் காட்டும்
படியெதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.
| [320] |
மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
என்த ரத்து மளித்தெதிர் நின்றன.,
| [321] |
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
ஆதி மாலயன் காணா வளவின.
| [322] |
வேத வாரண மேற்கொண் டிருந்தன
பேதை யேன்செய் பிழைபொறுத் தாண்டன
ஏத மானவை தீர்க்க இசைந்தன
பூத நாதநின் புண்டரீ கப்பதம்.
| [323] |
இன்னவா றேத்து நம்பிக் கேறுசே வகனார் தாமும்
அந்நிலை யவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னுசீ ரடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப்
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.
| [324] |
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனமே லொன்று மில்லார்
அருமையாம் நிலையி னின்றார் அன்பினா லின்ப மார்வார்
இருமையுங் கடந்து நின்றார் இவரைநீ யடைவா யென்று.
| [325] |
நாதனா ரருளிச் செய்ய நம்பியா ரூரர் நானிங்கு
ஏதந்தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற
நீதியா லவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொன் மாலை
கோதிலா வாய்மை யாலே பாடென வண்ணல் கூற.
| [326] |
தன்னையா ளுடைய நாதன் தானருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர்
இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன் அதற்கி யானார்
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய் யென்ன.
| [327] |
தொல்லைமால் வரைபயந்த தூயாள்தன் திருப்பாகர்
அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேனென்று
எல்லையில்வண் புகழாரை யெடுத்திசைப்பா மொழியென்றார்.
| [328] |
மன்னுசீர் வயலாரூர் மன்னவரை வன்றொண்டர்
சென்னியுற அடிவணங்கித் திருவருள்மேல் கொள்பொழுதின்
முன்னமால் அயனறியா முதல்வர்தா மெழுந்தருள
அந்நிலைகண் டடியவர்பாற் சார்வதனுக் கணைகின்றார்.
| [329] |
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே றடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப்பதிக மருள்செய்தார்.
| [330] |
தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத் தமிழ்மாலைச்
செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகம்
உம்பர்பிரான் தானருளும் உணர்வுபெற உலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ ரெதிர்பணிந்தார்.
| [331] |
உம்பர்நா யகர்அடியார் பேருவகை தாமெய்த
நம்பியா ரூரர்திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழரவர் தாமொழிந்த தமிழ்முறையே
எம்பிரான் தமர்கள்திருத் தொண்டேத்தல் உறுகின்றேன். ]"
| [332] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.010  
தில்லை வாழ் அந்தணர்
பண் - ( )
ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.
| [1] |
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
| [2] |
போற்றிநீள் தில்லை வாழந்
தணர்திறம் புகல லுற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால்
அடித்தவம் புரிந்து வாழ்வார்.
| [3] |
பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்.
| [4] |
வருமுறை எரிமூன் றோம்பி
மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ
றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந்
திருவினாற் சிறந்த சீரார்.
| [5] |
மறுவிலா மரபின் வந்து
மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறுதொழி லாட்சி யாலே
யருங்கலி நீக்கி யுள்ளார்
உறுவது நீற்றின் செல்வம்
எனக்கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன்பா லன்பாம்
பேறெனப் பெருகி வாழ்வார்.
| [6] |
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்.
| [7] |
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.
| [8] |
இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள
திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை
யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த
முதற்பொரு ளானா ரென்றால்.
| [9] |
அகலிடத் துயர்ந்த தில்லை
யந்தண ரகில மெல்லாம்
புகழ்திரு மறையோ ரென்றும்
பொதுநடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீல கண்டக்
குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர்
செய்தவங் கூற லுற்றாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.020  
திருநீலகண்ட நாயனார் புராணம்
பண் - ( )
வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.
| [1] |
பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.
| [2] |
அளவிலா மரபின் வாழ்க்கை
மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி
மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க
ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத்
துறையினில் எளிய ரானார்.
| [3] |
அவர்தங்கண் மனைவி யாரும்
அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்ட மென்பார்.
| [4] |
ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார்.
| [5] |
மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.
| [6] |
ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.
| [7] |
கற்புறு மனைவி யாரும்
கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற்
பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண்
இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை
அயலறி யாமை வாழ்ந்தார்.
| [8] |
இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.
| [9] |
இந்நெறி யொழுகு நாளில்
எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன்
தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று
ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால்
அருட்சிவ யோகி யாகி.
| [10] |
கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.
| [11] |
நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.
| [12] |
நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.
| [13] |
பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.
| [14] |
எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
| [15] |
தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.
| [16] |
தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.
| [17] |
வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.
| [18] |
சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.
| [19] |
வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.
| [20] |
என்றவர் விரைந்து கூற
இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார்
கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்
நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் உரைப்பதொன் றின்றி நின்றார்.
| [21] |
மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
| [22] |
இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.
| [23] |
சென்னியால் வணங்கி நின்ற
தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ
யான்வைத்த மண்ணோ டன்றிப்
பொன்னினா லமைத்துத் தந்தாய்
ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே
கொண்டுவா வென்றான் முன்னோன்.
| [24] |
கேடிலாப் பெரியோய் என்பால்
வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு
நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று
தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன்
உணர்வெலா மொழித்த தென்ன.
| [25] |
ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.
| [26] |
வளத்தினான் மிக்க ஓடு
வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக்
கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான்
காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென்
றருளினான் கொடுமை யில்லான்.
| [27] |
ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
| [28] |
கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.
| [29] |
தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.
| [30] |
நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.
| [31] |
அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.
| [32] |
நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.
| [33] |
நீணிதியாம் இதுவென்று
நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம்
பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர்
புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத்
திருத்தொண்டர் உரைசெய்தார்.
| [34] |
திருவுடை யந்த ணாளர்
செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த
வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித்
தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு
மூழ்குதல் வழக்கே யென்றார்.
| [35] |
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
| [36] |
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.
| [37] |
தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.
| [38] |
வாவியின் மூழ்கி ஏறுங்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ்
சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற.
| [39] |
அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.
| [40] |
கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.
| [41] |
மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
| [42] |
விறலுடைத் தொண்ட னாரும்
வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்
மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து
சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப்
பேரின்பம் உற்றா ரன்றே.
| [43] |
அயலறி யாத வண்ணம்
அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை
யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும்
பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த
திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
| [44] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.030  
இயற்பகை நாயனார் புராணம்
பண் - ( )
சென்னி வெண்குடை நீடந பாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.
| [1] |
அக்கு லப்பதிக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்.
| [2] |
ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
| [3] |
ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
| [4] |
வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்.
| [5] |
என்று கூறிய இயற்பகை யார்முன்
எய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கும்
உண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தனன் அதனுக்கு
இசைய லாமெனில் இயம்பலா மென்றார்.
| [6] |
என்ன அவ்வுரை கேட்டியற் பகையார்
யாதும் ஒன்றுஎன் பக்கலுண் டாகில்
அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை
ஐய மில்லைநீ ரருள்செய்யு மென்ன
மன்னு காதலுன் மனைவியை வேண்டி
வந்த திங்கென அந்தண ரெதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து
தூய தொண்டனார் தொழுதுரை செய்வார்.
| [7] |
இதுவெ னக்குமுன் புள்ளதே வேண்டி
எம்பி ரான்செய்த பேறெனக் கென்னாக்
கதுமெனச் சென்று தம்மனை வாழ்க்கைக்
கற்பின் மேம்படு காதலி யாரை
விதிம ணக்குல மடந்தைஇன் றுனைஇம்
மெய்த்த வர்க்குநான் கொடுத்தனன் என்ன
மதும லர்க்குழல் மனைவியார் கலங்கி
மனந்தெ ளிந்தபின் மற்றிது மொழிவார்.
| [8] |
இன்று நீரெனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீ ருரைத்தது
ஒன்றை நான்செயு மத்தனை யல்லால்
உரிமை வேறுள தோவெனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
| [9] |
மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்.
| [10] |
என்றவர் அருளிச் செய்ய
யானேமுன் செய்குற் றேவல்
ஒன்றிது தன்னை யென்னை
யுடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையா மென்று
நினைந்துவே றிடத்துப் புக்குப்
பொன்றிகழ் அறுவை சாத்திப்
பூங்கச்சுப் பொலிய வீக்கி.
| [11] |
வாளொடு பலகை யேந்தி
வந்தெதிர் வணங்கி மிக்க
ஆளரி யேறு போல்வார்
அவரைமுன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே யாகப்
போயினார் துன்னி னாரை
நீளிடைப் படமுன் கூடி
நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
| [12] |
மனைவியார் சுற்றத் தாரும்
வள்ளலார் சுற்றத் தாரும்
இனையதொன் றியாரே செய்தார்
இயற்பகை பித்தன் ஆனால்
புனையிழை தன்னைக் கொண்டு
போவதா மொருவ னென்று
துனைபெரும் பழியை மீட்பான்
தொடர்வதற் கெழுந்து சூழ்வார்.
| [13] |
வேலொடு வில்லும் வாளுஞ்
சுரிகையு மெடுத்து மிக்க
காலென விசையிற் சென்று
கடிநகர்ப் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கு மீண்டிப்
பரந்தஆர்ப் பரவம் பொங்க
மால்கடல் கிளர்ந்த தென்ன
வந்தெதிர் வளைத்துக் கொண்டார்.
| [14] |
வழிவிடுந் துணைபின் போத
வழித்துணை யாகி யுள்ளார்
கழிபெருங் காதல் காட்டிக்
காரிகை யுடன்போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ்
வருங்குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீபோ வென்று
பகர்ந்தெதிர் நிரந்து வந்தார்.
| [15] |
மறைமுனி யஞ்சி னான்போல்
மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டா
இயற்பகை வெல்லு மென்ன
அறைகழ லண்ணல் கேளா
அடியனே னவரை யெல்லாம்
தறையிடைப் படுத்து கின்றேன்
தளர்ந்தருள் செய்யே லென்று.
| [16] |
பெருவிறல் ஆளி என்னப்
பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்.
| [17] |
ஏடநீ யென்செய் தாயால்
இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார்
நகையையும் நாணாய் இன்ற பாடவம் உரைப்ப துன்றன்
மனைவியைப் பனவற் கீந்தோ
கூடவே மடிவ தன்றிக்
கொடுக்கயாம் ஒட்டோ மென்றார்.
| [18] |
மற்றவர் சொன்ன மாற்றம்
கேட்டலும் மனத்தின் வந்த
செற்றமுன் பொங்க உங்கள்
உடற்றுணி யெங்குஞ் சிந்தி
முற்றுநும் உயிரை யெல்லாம்
முதல்விசும் பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக
விடுவன்என் றெழுந்தார் நல்லோர்.
| [19] |
நேர்ந்தவர் எதிர்ந்த போது
நிறைந்தவச் சுற்றத் தாரும்
சார்ந்தவர் தம்முன் செல்லார்
தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல
உற்றெதிர் உடன்று பொங்கி
ஆர்ந்தவெஞ் சினத்தால் மேற்சென் றடர்ந்தெதிர் தடுத்தா ரன்றே.
| [20] |
சென்றவர் தடுத்த போதில்
இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச்
சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந்
தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன
அமர்விளை யாட்டின் மிக்கார்.
| [21] |
மூண்டுமுன் பலராய் வந்தார்
தனிவந்து முட்டி னார்கள்
வேண்டிய திசைகள் தோறும்
வேறுவே றமர்செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே
அனைவர்க்கும் அனைவ ராகிக்
காண்டகு விசையிற் பாய்ந்து
கலந்துமுன் துணித்து வீழ்த்தார்.
| [22] |
சொரிந்தன குடல்க ளெங்குந்
துணிந்தன உடல்க ளெங்கும்
விரிந்தன தலைக ளெங்கும்
மிடைந்தன கழுகு மெங்கும்
எரிந்தன விழிக ளெங்கும்
எதிர்ப்பவ ரொருவ ரின்றித்
திரிந்தனர் களனில் எங்குஞ்
சிவன்கழல் புனைந்த வீரர்.
| [23] |
மாடலை குருதி பொங்க
மடிந்தசெங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோ டணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார்
ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளுந் தாமும்
நின்றவர் தாமே நின்றார்.
| [24] |
திருவுடை மனைவி யாரைக்
கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
விடுவனென் றுடனே போந்தார்.
| [25] |
இருவரால் அறிய வொண்ணா
ஒருவர்பின் செல்லும் ஏழை
பொருதிறல் வீரர் பின்பு
போகமுன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்கா
டதன்மருங் கணைய மேவித்
திருமலி தோளி னானை
மீளெனச் செப்பி னானே.
| [26] |
தவமுனி தன்னை மீளச் சொன்னபின் தலையால் ஆர
அவன்மலர்ப் பதங்கள் சூடி
அஞ்சலி கூப்பி நின்று
புவனமூன் றுய்ய வந்த
பூசுரன் தன்னை யேத்தி
இவனருள் பெறப்பெற் றேன்என்
றியற்பகை யாரும் மீண்டார்.
| [27] |
செய்வதற் கரிய செய்கை
செய்தநற் றொண்டர் போக
மைதிகழ் கண்டன் எண்டோள்
மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய்தரும் உள்ளம் இல்லான்
பார்க்கிலன் போனா னென்று
மெய்தரு சிந்தை யாரை
மீளவும் அழைக்க லுற்றார்.
| [28] |
இயற்பகை முனிவா ஓலம்
ஈண்டுநீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தானே ஓலம்
அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த
தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறைஓ லிட்டு
மாலயன் தேட நின்றான்.
| [29] |
அழைத்தேபே ரோசை கேளா
அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவ ருளரே லின்னும்
பெருவலித் தடக்கை வாளின்
இழைத்தவ ராகின் றாரென்
றியற்பகை யார்வந் தெய்தக்
குழைப்பொலி காதி னானும்
மறைந்தனன் கோலங் கொள்வான்.
| [30] |
சென்றவர் முனியைக் காணார்
சேயிழை தன்னைக் கண்டார்
பொன்றிகழ் குன்று வெள்ளிப்
பொருப்பின்மேல் பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானில்
தலைவனை விடைமேற் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார்
நிலத்தினின் றெழுந்தார் நேர்ந்தார்.
| [31] |
சொல்லுவ தறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந் தருளி யென்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம் பலத்து ளாடுஞ்
சேவடி போற்றி யென்ன.
| [32] |
விண்ணிடை நின்ற வெள்ளை
விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு
மகிழ்ந்தனம் பழுதி லாதாய்
நண்ணிய மனைவி யோடு
நம்முடன் போது கென்று.
| [33] |
திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
| [34] |
வானவர் பூவின் மாரி
பொழியமா மறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற
நலமிகு சிவலோ கத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்
டுடனுறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும்
வானிடை யின்பம் பெற்றார்.
| [35] |
இன்புறு தாரந் தன்னை
ஈசனுக் கன்ப ரென்றே
துன்புறா துதவுந் தொண்டர்
பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன்
அடியவர்க் கன்பு நீடும்
மன்புகழ் இளைசை மாறன்
வளத்தினை வழுத்த லுற்றேன்.
| [36] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.040  
இளையான் குடி மாற
பண் - ( )
அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.
| [1] |
ஏரின் மல்குவ ளத்தி னால்வரும்
எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணி யார்அடி
யார்தி றத்துநி றைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை
திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்கவி ரும்பி மற்றவை
பெற்ற நீடுப யன்கொள்வார்.
| [2] |
ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.
| [3] |
கொண்டு வந்தும னைப்பு குந்துகு
குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலின் ஆத னத்திடை
வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறுசு
வைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்யஅ ளித்துளார்.
| [4] |
ஆளு நாயகர் அன்பர் ஆனவர்
அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநு
கர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெ
ருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய
தோழ னாரென வாழுநாள்.
| [5] |
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
| [6] |
இன்ன வாறுவ ளஞ்சு ருங்கவும்
எம்பி ரான்இளை யான்குடி
மன்னன் மாறன்ம னஞ்சு ருங்குத
லின்றி யுள்ளன மாறியுந்
தன்னை மாறியி றுக்க உள்ளக
டன்கள் தக்கன கொண்டுபின்
முன்னை மாறில்தி ருப்ப ணிக்கண்மு
திர்ந்த கொள்கைய ராயினார்.
| [7] |
மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.
| [8] |
மாரிக் காலத் திரவினில் வைகியோர்
தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம் அடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.
| [9] |
ஈர மேனியை நீக்கி இடங்கொடுத்
தார வின்னமு தூட்டுதற் காசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்னென்று.
| [10] |
நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.
| [11] |
மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.
| [12] |
செல்லல் நீங்கப் பகல்வித்தி யசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகுமற்
றல்ல தொன்றறி யேனென் றயர்வுற.
| [13] |
மற்றம் மாற்ற மனைவியார் கூறமுன்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத்தொ டங்குவார்.
| [14] |
பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.
| [15] |
எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
துண்ணெ னும்படி தோன்றமுன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாம்என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து.
| [16] |
உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லார்இளை யான்குடி மாறனார்.
| [17] |
காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.
| [18] |
வந்தபின் மனைவி யாரும்
வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில்
சேற்றினை யலம்பி யூற்றி
வெந்தழல் அடுப்பின் மூட்ட
விறகில்லை யென்ன மேலோர்
அந்தமின் மனையில் நீடும்
அலக்கினை யறுத்து வீழ்த்தார்.
| [19] |
முறித்தவை அடுப்பின் மாட்டி
முளைவித்துப் பதமுன் கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி
வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசி லாக்கி
மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கினி யென்செய் கோமென்
றிறைஞ்சினார் கணவ னாரை.
| [20] |
வழிவரும் இளைப்பி னோடும்
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க.
| [21] |
மனைவியார் கொழுநர் தந்த
மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
திருவமு தமைத்து நின்று.
| [22] |
கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.
| [23] |
அழுந்திய இடருள் நீங்கி
அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
தொண்டருந் திகைத்து நின்றார்.
| [24] |
மாலயற் கரிய நாதன்
வடிவொரு சோதி யாகச்
சாலவே மயங்கு வார்க்குச்
சங்கரன் தான்ம கிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோ
டிடபவா கனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த
திருத்தொண்டர் தம்மை நோக்கி.
| [25] |
அன்பனே அன்பர் பூசை
அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி
யிருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந் திருக்க என்றே
அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்.
| [26] |
இப்பரி சிவர்க்குத் தக்க
வகையினால் இன்பம் நல்கி
முப்புரஞ் செற்றா ரன்பர்
முன்பெழுந் தருளிப் போனார்
அப்பெரி யவர்தந் தூய
அடியிணை தலைமேற் கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன்
செயலினை விளம்ப லுற்றேன்.
| [27] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.050  
மெய்ப் பொருள் நாயனார்
பண் - ( )
சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
| [1] |
அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.
| [2] |
மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
| [3] |
தேடிய மாடும் நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்
காவன ஆகும் என்று
நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவறக் கொடுத்து வந்தார்.
| [4] |
இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்.
| [5] |
இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.
| [6] |
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
| [7] |
மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்.
| [8] |
கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.
| [9] |
என்றவன் கூறக் கேட்டே
யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல்மென் சாயல்
மாதேவி இருப்பக் கண்டான்.
| [10] |
கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று.
| [11] |
மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
| [12] |
பேறெனக் கிதன்மேல் உண்டோ பிரானருள் செய்த இந்த
மாறில்ஆ கமத்தை வாசித்
தருள்செய வேண்டு மென்ன
நாறுபூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறிடத் திருத்தல் வேண்டும்
என்றவன் விளம்ப வேந்தன்.
| [13] |
திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.
| [14] |
கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்.
| [15] |
மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.
| [16] |
வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.
| [17] |
அத்திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.
| [18] |
அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.
| [19] |
மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.
| [20] |
சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.
| [21] |
அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.
| [22] |
தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.
| [23] |
இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
| [24] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.060  
விறன்மிண்ட நாயனார் புராணம்
பண் - ( )
விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.
| [1] |
வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.
| [2] |
என்னும் பெயரின் விளங்கியுல
கேறும் பெருமை யுடையதுதான்
அன்னம் பயிலும் வயலுழவின்
அமைந்த வளத்தா லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகும்
தூய குடிமைத் தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூல்
மரபிற் பெரியோர் வாழ்பதியாம்.
| [3] |
அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
| [4] |
நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.
| [5] |
பொன்தாழ் அருவி மலைநாடு
கடந்து கடல்சூழ் புவியெங்கும்
சென்றா ளுடையார் அடியவர்தம்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி
வன்தாள் மேருச் சிலைவளைத்துப்
புரங்கள் செற்ற வைதிகத்தேர்
நின்றா ரிருந்த திருவாரூர்
பணிந்தார் நிகரொன் றில்லாதார்.
| [6] |
திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
| [7] |
சேணார் மேருச் சிலைவளைத்த
சிவனா ரடியார் திருக்கூட்டம்
பேணா தேகும் ஊரனுக்கும்
பிரானாந் தன்மைப் பிறைசூடிப்
பூணா ரரவம் புனைந்தார்க்கும்
புறகென் றுரைக்க மற்றவர்பாற்
கோணா வருளைப் பெற்றார்மற்
றினியார் பெருமை கூறுவார்.
| [8] |
ஞால முய்ய நாமுய்ய
நம்பி சைவ நன்னெறியின்
சீல முய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பாடச் செழுமறைகள்
ஓல மிடவும் உணர்வரியார்
அடியா ருடனாம் உளதென்றால்
ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.
| [9] |
ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.
| [10] |
வேறு பிறிதென் திருத்தொண்டத்
தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம்
பிரானார் விறன்மிண் டரின்பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே
அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி
அன்பர் திருத்தொண் டறைகுவாம்.
| [11] |
Back to Top
சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.070  
அமர் நீதி நாயனார்
பண் - ( )
சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
| [1] |
மன்னு மப்பதி வணிகர்தங் குலத்தினில் வந்தார்
பொன்னு முத்துநன் மணிகளும் பூந்துகில் முதலா
எந்நி லத்தினும் உள்ளன வருவளத் தியல்பால்
அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார்.
| [2] |
சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
| [3] |
முக்கண் நக்கராம் முதல்வனா ரவர்திரு நல்லூர்
மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர் தூயோர்.
| [4] |
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்
திருவி ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகும் இன்பமோ டமுதுசெய் திடஅருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை ஒருநாள்.
| [5] |
பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
| [6] |
செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
| [7] |
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள்நிலம் பொலிய.
| [8] |
கண்ட வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத்
தொண்டர் அன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்த்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக.
| [9] |
வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
| [10] |
பேணும் அன்பரை நோக்கிநீர் பெருகிய அடியார்க்
கூணும் மேன்மையில் ஊட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல்கேட் டும்மைக்
காண வந்தனம் என்றனன் கண்ணுதற் கரந்தோன்.
| [11] |
என்று தம்பிரா னருள்செய இத்திரு மடத்தே
நன்று நான்மறை நற்றவர் அமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீருமிங் கமுதுசெய் தருளுமென் றிறைஞ்ச.
| [12] |
வணங்கும் அன்பரை நோக்கிஅம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப்பொன்னி ஆடிநான் வரமழை வரினும்
உணங்கு கோவணம் வைத்துநீர் தாருமென் றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினில் அவிழ்த்தது கொடுப்பார்.
| [13] |
ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
| [14] |
கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்
கடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.
| [15] |
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
| [16] |
போன வேதியர் வைத்தகோ வணத்தினைப் போக்கிப்
பான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ
தூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ
வான நீர்மழை பொழிந்திட நனைந்துவந் தணைந்தார்.
| [17] |
கதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்
முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி
எதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.
| [18] |
தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.
| [19] |
ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
| [20] |
பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்
சங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்
எங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.
| [21] |
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து
நினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்
புனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார்.
| [22] |
அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.
| [23] |
வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன்
கீறு கோவண மன்றுநெய் தமைத்தது கிளர்கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்து
மாறு சாத்தியென் பிழைபொறுப் பீரென வணங்க.
| [24] |
நின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்
இன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே
றொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.
| [25] |
நல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்
சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.
| [26] |
மறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்
பொறிக லங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்து
சிறிய என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர் அடியேன்
அறிய வந்ததொன் றன்றென அடிபணிந் தயர்வார்.
| [27] |
செயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி
நயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்
உயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.
| [28] |
பணியும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்
தணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த
மணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய
அணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.
| [29] |
மலர்ந்த சிந்தைய ராகிய வணிகரே றனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்குநே ராக
இலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள்செய்யீர்
நலங்கொள் கோவணந் தரும்பரி சியாதென நம்பர்.
| [30] |
உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.
| [31] |
நன்று சாலவென் றன்பரும் ஒருதுலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்
நின்ற தொண்டருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை கண்டார்.
| [32] |
நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த
நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடஇடக் கொண்டெழுந் ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி.
| [33] |
உலகில் இல்லதோர் மாயையிக் கோவண மொன்றுக்
கலகில் கோவணம் ஒத்தில வென்றதி சயித்துப்
பலவும் மென்துகில் பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை யெடுத்துமே லிட்டார்.
| [34] |
முட்டில் அன்பர்தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டுந்துகி லநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
| [35] |
ஆன தன்மைகண் டடியவர் அஞ்சியந் தணர்முன்
தூந றும்துகில் வருக்கநூல் வருக்கமே முதலா
மான மில்லன குவிக்கவும் தட்டின்மட் டிதுவால்
ஏனை யென்தனம் இடப்பெற வேண்டுமென் றிறைஞ்ச.
| [36] |
மங்கை பாகராம் மறையவர் மற்றதற் கிசைந்தே
இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ தென்கொல்
அங்கு மற்றுங்கள் தனங்களி னாகிலும் இடுவீர்
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ தென்றார்.
| [37] |
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்
பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை யில்தனம் சுமந்தவர் இடஇடக் கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது வியந்தனர் மண்ணோர்.
| [38] |
தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.
| [39] |
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.
| [40] |
பொச்ச மில்லடி மைத்திறம் புரிந்தவ ரெதிர்நின்
றச்ச முன்புற உரைத்தலும் அங்கண ரருளால்
நிச்ச யித்தவர் நிலையினைத் துலையெனுஞ் சலத்தால்
இச்ச ழக்கினின் றேற்றுவார் ஏறுதற் கிசைந்தார்.
| [41] |
மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனைம லர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனைஇ டக்கொடு தனித்துலை வலங்கொண்டு தகவால்
இனைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து.
| [42] |
இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.
| [43] |
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துடன் ஏற
அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவண மதுவும்
கொண்ட அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றதத் துலைதான்.
| [44] |
மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர்
துதிசெய் தெங்கணும் அதிசய முறவெதிர் தொழுதார்
கதிர்வி சும்பிடைக் கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
| [45] |
அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.
| [46] |
தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.
| [47] |
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
| [48] |
மலர்மிசை அயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமைகாட்டி
உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம்உன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை யாகும்.
| [49] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.080  
எறி பத்த நாயனார்
பண் - ( )
மல்லல்நீர் ஞாலந் தன்னுள்
மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை
உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க
எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும்
ஆசையாற் சொல்ல லுற்றாம்.
| [1] |
பொன்மலைப் புலிவென் றோங்கப்
புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும்
சுடர்மணி வீதி மூதூர்.
| [2] |
மாமதில் மஞ்சு சூழும்
மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும் சதமகன் நகரம் தாழ.
| [3] |
கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்.
| [4] |
மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
| [5] |
பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார் அவர்எறி பத்த ராவார்.
| [6] |
மழைவளர் உலகில் எங்கும்
மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க்
கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி
முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய
பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.
| [7] |
அண்ணலார் நிகழும் நாளில்
ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த
சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம்
பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும்
ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.
| [8] |
வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல
கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும்
திருப்பள்ளித் தாமங் கொய்து.
| [9] |
கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.
| [10] |
மற்றவ ரணைய இப்பால்
வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்.
| [11] |
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும்
பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக
எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்த தன்றே.
| [12] |
வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
| [13] |
மேல்கொண்ட பாகர் கண்டு
விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக்
கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர்
நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு
தண்டுகொண் டடிக்க வந்தார்.
| [14] |
அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்.
| [15] |
களியா னையின்ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா.
| [16] |
ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல்
ஏறும் மலரைக் கரிசிந் துவதே
வேறுள் நினைவார் புரம்வெந் தவியச்
சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.
| [17] |
தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய் சிவதா சிவதா.
| [18] |
நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.
| [19] |
என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
| [20] |
வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்.
| [21] |
இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்.
| [22] |
கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
| [23] |
பாய்தலும் விசைகொண் டுய்க்கும்
பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம்
திரிந்துமேற் கதுவ அச்சம்
தாய்தலை யன்பின் முன்பு
நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ
மழுவினால் துணித்தார் தொண்டர்.
| [24] |
கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்.
| [25] |
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
| [26] |
மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.
| [27] |
வளவனுங் கேட்ட போதில்
மாறின்றி மண்காக் கின்ற
கிளர்மணித் தோள லங்கல்
சுரும்பினங் கிளர்ந்து பொங்க
அளவில்சீற் றத்தி னாலே
யார்செய்தா ரென்றுங் கேளான்
இளவரி யேறு போல
எழின்மணி வாயில் நீங்க.
| [28] |
தந்திரத் தலைவர் தாமும்
தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை
வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம்
அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும்
இடையிடை களிறு மாகி.
| [29] |
வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்.
| [30] |
சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க.
| [31] |
தூரியத் துவைப்பும் முட்டுஞ்
சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ
முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும்
மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும்
கடலெனக் கலித்த வன்றே.
| [32] |
பண்ணுறும் உறுப்பு நான்கில்
பரந்தெழு சேனை யெல்லாம்
மண்ணிடை யிறுகான் மேன்மேல்
வந்தெழுந் ததுபோல் தோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேல்கொண்
டரசமா வீதி சென்றான்.
| [33] |
கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்.
| [34] |
பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்.
| [35] |
அரசனாங் கருளிச் செய்ய
அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின்
விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர்
யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற
இவரெனப் பணிந்து சொன்னார்.
| [36] |
குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
| [37] |
மைத்தடங் குன்று போலும்
மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது
வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன்
அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன் என்கொலோ பிழையென் றஞ்சி.
| [38] |
செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்.
| [39] |
மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
| [40] |
மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்.
| [41] |
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
| [42] |
வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
| [43] |
வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி.
| [44] |
வன்பெருங் களிறு பாகர்
மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே
யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு
நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து
முடிப்பதே முடிவென் றெண்ணி.
| [45] |
புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன் என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.
| [46] |
வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப.
| [47] |
தொழுந்தகை யன்பின் மிக்கீர்
தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று
சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும்
யானையும் எழுந்த தன்றே.
| [48] |
ஈரவே பூட்டும் வாள்விட்
டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல்
விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக
எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர்
பனிமலர் மாரி தூர்த்தார்.
| [49] |
இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
| [50] |
மட்டவிழ் அலங்கல் வென்றி
மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பி னோடும்
உறங்கிய தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலென முழங்கிப் பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு
பாகரும் அணைய வந்தார்.
| [51] |
ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்.
| [52] |
அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்.
| [53] |
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்.
| [54] |
மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
| [55] |
ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.
| [56] |
தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.
| [57] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.090  
ஏனாதிநாத நாயனார் புராணம்
பண் - ( )
புண்டரிகம் பொன்வரைமேல்
ஏற்றிப் புவியளிக்கும்
தண்தரள வெண்கவிகைத்
தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலைவயல்
மருதத் தண்பணைசூழ்ந்
தெண்திசையும் ஏறியசீர்
எயின்மூதூர் எயினனூர்.
| [1] |
வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார் ஏனாதி நாதனார்.
| [2] |
தொன்மைத் திருநீற்றுத்
தொண்டின் வழிபாட்டின்
நன்மைக்கண் நின்ற
நலமென்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி
வடிவாள் படைபயிற்றும்
தன்மைத் தொழில்
விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.
| [3] |
வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால் நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும் காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
| [4] |
நள்ளார் களும்போற்றும்
நன்மைத் துறையின்கண்
எள்ளாத செய்கை
இயல்பின் ஒழுகுநாள்
தள்ளாத தங்கள்
தொழிலுரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன்
என்பான் உளனானான்.
| [5] |
மற்றவனும் கொற்ற
வடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்கள் தன்னில்
கடந்துள்ளார் இல்லையெனும்
பெற்றிமையால் மாநிலத்து
மிக்க பெருமிதம்வந்
துற்றுலகில் தன்னையே
சால மதித்துள்ளான்.
| [6] |
தானாள் விருத்திகெடத்
தங்கள்குலத் தாயத்தின்
ஆனாத செய்தொழிலாம்
ஆசிரியத் தன்மைவளம்
மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர்திறத்
தேலா இகல்புரிந்தான்.
| [7] |
கதிரோன் எழமழுங்கிக்
கால்சாயுங் காலை
மதிபோல் அழிந்துபொறா
மற்றவனும் சுற்றப்
பதியோ ருடன்கூடப்
பண்ணியமர் மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே
எண்ணித் துணிந்தெழுந்தான்.
| [8] |
தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
| [9] |
வெங்கட் புலிகிடந்த
வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே
போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து போர்குறித்து நேர்நின்றே
அங்கட் கடைநின்
றழைத்தா னொலிகேளா.
| [10] |
ஆர்கொல் பொரவழைத்தார்
என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில்
செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி
வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி
நாதர் புறப்பட்டார்.
| [11] |
புறப்பட்ட போதின்கண்
போர்த்தொழில்வாள் கற்கும்
விறற்பெருஞ்சீர்க் காளையர்கள்
வேறிடத்தி னின்றார்
மறப்படைவாள் சுற்றத்தார்
கேட்டோடி வந்து
செறற்கரும்போர் வீரர்க்
கிருமருங்குஞ் சேர்ந்தார்கள்.
| [12] |
வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
| [13] |
என்றுபகைத் தோனுரைப்ப
ஏனாதி நாதரது
நன்றுனக்கு வேண்டுமேல்
நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப் போர்குறிப்பக்
கன்றி யிருபடையும்
கைவகுத்து நேர்மலைவார்.
| [14] |
மேக வொழுங்குகள் முன்கொடு
மின்னிரை தம்மிடை யேகொடு
மாக மருங்கினும் மண்ணினும்
வல்லுரு மேறெதிர் செல்வன
வாக நெடும்பல கைக்குல
மாள்வினை வாளுடை யாடவர்
காக மிடைந்த களத்திரு
கைகளின் வந்து கலந்தனர்.
| [15] |
கால்கழல் கட்டிய மள்ளர்கள்
கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட
வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன
மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள்
நாநிமிர் கின்றன வொத்தன.
| [16] |
வெங்கண் விறற்சிலை வீரர்கள்
வேறிரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின
தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை
போகு கொடிக்கள் வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய
சீறு பொறிச்செல வொத்தன.
| [17] |
வாளொடு நீள்கை துடித்தன
மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன
தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார்கழ லிற்றன
தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர்
நாடிய போர்செய் களத்தினில்.
| [18] |
குருதியின் நதிகள் பரந்தன
குறையுடல் ஓடி யலைந்தன
பொருபடை அறுதுணி சிந்தின
புடைசொரி குடருடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின
விசியறு துடிகள் புரண்டன
இருபடை தனினும் எதிர்ந்தவர்
எதிரெதிர் அமர்செய் பறந்தலை.
| [19] |
நீளிடை முடுகி நடந்தெதிர்
நேரிரு வரில்ஒரு வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர்
சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுமுடல் வென்றவன்
மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியி னவனு மறிந்தனன்
ஆயினர் பலருள ரெங்கணும்.
| [20] |
கூர்முனை அயில்கொடு முட்டினர் கூடிமுன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன்
நேர்பட எதிரெதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர்
ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொ டளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.
| [21] |
பொற்சிலை வளைய வெதிர்ந்தவர்
புற்றர வனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர்
வெற்றிகொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும்
முற்படு கொடைநிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர்
ஒத்தனர் உளர்சில கண்டர்கள்.
| [22] |
அடல்முனை மறவர் மடிந்தவர்
அலர்முகம் உயிருள வென்றுறு
படர்சிறை சுலவு கருங்கொடி
படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய்
வினைஞர்தம் உலையின் முகம்பொதி
புடைமிடை கரியிடை பொங்கிய
புகைவிடு தழலை நிகர்த்தன.
| [23] |
திண்படை வயவர் பிணம்படு
செங்கள மதனிடை முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர்
பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன்செயல் குன்றுத லிலர்தலை நின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில்
விஞ்சையர் குமரரை வென்றனர்.
| [24] |
இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
| [25] |
வெஞ்சினவாள் தீயுமிழ
வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர்
தாமெதிர்ந்த ஞாட்பின்கண்
எஞ்சியெதிர் நின்ற
இகல்முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும்
தாளும் விழத்துணித்தார்.
| [26] |
தலைப்பட்டார் எல்லாரும்
தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார்
கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு
நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல்
குற்றம்போ லாயினார்.
| [27] |
இந்நிலைய வெங்களத்தில்
ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல்படைஞர்
மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி
விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென்
றதிசூரன் நேரடர்ந்தான்.
| [28] |
மற்றவர்தஞ் செய்கை
வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில்
தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில்
தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க்
குடைந்து புறகிட்டான்.
| [29] |
போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்படுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
| [30] |
சேட்டாருங் கங்குல்
புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே
நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர்
மலைக்க வருகவெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச்
சொல்லி வரவிட்டான்.
| [31] |
இவ்வாறு கேட்டலுமே
ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்த லழகி
தெனவமைந்து
கைவாள் அமர்விளைக்கத்
தான்கருதும் அக்களத்தே
வெவ்வாள் உரவோன்
வருகவென மேற்கொள்வார்.
| [32] |
சுற்றத்தார் யாரும்
அறியா வகைசுடர்வாள்
பொற்பலகை யுந்தாமே
கொண்டு புறம்போந்து
மற்றவன்முன் சொல்லி
வரக்குறித்த அக்களத்தே
பற்றலனை முன்வரவு
பார்த்துத் தனிநின்றார்.
| [33] |
தீங்கு குறித்தழைத்த
தீயோன் தீருநீறு
தாங்கிய நெற்றியினார்
தங்களையே எவ்விடத்தும்
ஆங்கவருந் தீங்கிழையார்
என்ப தறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு
பண்டு பயிலாதான்.
| [34] |
வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
| [35] |
வென்றி மடங்கல்
விடக்குவர முன்பார்த்து
நின்றாற் போல்நின்றார்
நிலைகண்டு தன்னெற்றி
சென்று கிடைப்பளவும்
திண்பலகை யால்மறைத்தே
முன்தனிவீ ரர்க்கெதிரே மூண்டான் மறம்பூண்டான்.
| [36] |
அடல்விடையே றென்ன
அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும்
ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான்
பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல்
வெண்ணீறு தாங்கண்டார்.
| [37] |
கண்டபொழு தேகெட்டேன்
முன்பிவர்மேற் காணாத
வெண்திருநீற் றின்பொலிவு
மேற்கண்டேன் வேறினியென்
அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமனங்
கொண்டிவர்தங் கொள்கைக்
குறிவழிநிற் பேனென்று.
| [38] |
கைவா ளுடன்பலகை
நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக்
கொன்றா ரெனுந்தீமை
எய்தாமை வேண்டும்
இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து
நேர்வார்போல் நேர்நின்றார்.
| [39] |
அந்நின்ற தொண்டர்
திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும்
தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை
யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார்
தாமே வெளிநின்றார்.
| [40] |
மற்றினிநாம் போற்றுவதென்
வானோர் பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால்
பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும்
உடன்பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம் பலமணைந்தார்.
| [41] |
தம்பெருமான் சாத்தும்
திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான் ஏனாதி
நாதர் கழலிறைஞ்சி
உம்பர்பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம்பெருமான் செய்தபணி
நாம்தெரிந்த வாறுரைப்பாம்.
| [42] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.100  
கண்ணப்ப நாயனார் புராணம்
பண் - ( )
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக்
கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும்
நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு.
| [1] |
இத்திரு நாடு தன்னில்
இவர்திருப் பதியா தென்னில்
நித்தில அருவிச் சாரல்
நீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு
வன்றொடர் வேலி கோலி
ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த
முதுபதி உடுப்பூர் ஆகும்.
| [2] |
குன்றவர் அதனில் வாழ்வார்
கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு
வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும்
கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில்
ஐவனம் உணங்கு மெங்கும்.
| [3] |
வன்புலிக் குருளை யோடும்
வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள்
புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர
அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும்
எயிற்றியர் மகளி ரெங்கும்.
| [4] |
வெல்படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்எறி குத்தென் றார்த்துக்
குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்பும்
சிறுகண்ஆ குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலும்
கறங்கிசை யருவி யெங்கும்.
| [5] |
ஆறலைத் துண்ணும் வேடர்
அயற்புலங் கவர்ந்து கொண்ட
வேறுபல் உருவின் மிக்கு
விரவும்ஆன் நிரைக ளன்றி
ஏறுடை வானந் தன்னில்
இடிக்குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும்
மதக்கைமா நிரைக ளெங்கும்.
| [6] |
மைச்செறிந் தனைய மேனி
வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும்
அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊனின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்க்
கதிபதி நாக னென்பான்.
| [7] |
பெற்றியால் தவமுன் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை யென்பாள்.
| [8] |
அரும்பெறல் மறவர் தாயத்
தான்றதொல் குடியில் வந்தாள்
இரும்புலி எயிற்றுத் தாலி
இடையிடை மனவு கோத்துப்
பெரும்புறம் அலையப் பூண்டாள் பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச்
சூரரிப் பிணவு போல்வாள்.
| [9] |
பொருவருஞ் சிறப்பின் மிக்கார்
இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவருங் கூற
அதற்படு காத லாலே
முருகலர் அலங்கற் செவ்வேல்
முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும்
பராய்க்கடன் நெறியில் நிற்பார்.
| [10] |
வாரணச் சேவ லோடும்
வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப்
புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை.
| [11] |
பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற
எந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி
வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி
அண்ணலார் அருளி னாலே.
| [12] |
கானவர் குலம்வி ளங்கத்
தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி
உறுகடன் வெறியாட் டோடும்
ஆனஅத் திங்கள் செல்ல
அளவில்செய் தவத்தி னாலே
பான்மதி உவரி ஈன்றால்
எனமகப் பயந்த போது.
| [13] |
கரிப்பரு மருப்பின் முத்தும்
கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர்
பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த தெங்கும்
அரிக்குறுந் துடியே யன்றி
அமரர்துந் துபியும் ஆர்த்த.
| [14] |
அருவரைக் குறவர் தங்கள்
அகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா எடுத்து மிக்க
பெருங்களி கூருங் காலைக்
கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை யெடுத்துக் கொண்டான்.
| [15] |
கருங்கதிர் விரிக்கு மேனிக் காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுள ரளவே யன்றி
அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந்
தன்மையில் பொலிந்து தோன்ற.
| [16] |
அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.
| [17] |
வரையுறை கடவுட் காப்பும்
மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக்
கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி
வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி
அழகுற வளர்க்கும் நாளில்.
| [18] |
வருமுறைப் பருவந் தோறும்
வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க
பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச்
செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.
| [19] |
ஆண்டெதிர் அணைந்து செல்ல
இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப்
புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண்
முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி
நலங்கிளர் மார்பில் தூங்க.
| [20] |
பாசொளி மணியோ டார்த்த
பன்மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக்
கலன்புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை
செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலங் காட்டி
மறுகிடை யாடும் நாளில்.
| [21] |
தண்மலர் அலங்கல் தாதை
தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில்
புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி
ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய்
குதட்டியே வளரா நின்றார்.
| [22] |
பொருபுலிப் பார்வைப் பேழ்வாய்
முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு
பைந்தழை கைக்கொண் டோச்ச
இருசுடர்க் குறுகண் தீர்க்கும்
எழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய்
வாய்முத்தங் கொள்ள மாற்றி.
| [23] |
துடிக்குற டுருட்டி யோடித்
தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப்
பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி
அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும்
குறுநடைக் குறும்பு செய்து.
| [24] |
அனையன பலவும் செய்தே
ஐந்தின்மே லான ஆண்டில்
வனைதரு வடிவார் கண்ணி
மறச்சிறு மைந்த ரோடும்
சினைமலர்க் காவு ளாடிச்
செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப்
புறச்சிறு கானிற் போகி.
| [25] |
கடுமுயற் பறழி னோடும்
கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய்
கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித்
தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி
வளர்ப்பன எண்ணி லாத.
| [26] |
அலர்பகல் கழிந்த அந்தி
ஐயவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக்
கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப்
புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச்
சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.
| [27] |
தந்தையும் மைந்த னாரை
நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச்
சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க
முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம்
மறவர்க்குச் சொல்லி விட்டான்.
| [28] |
வேடர்தங் கோமான் நாகன்
வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி
யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும்
மறக்குலத் தலைவ ரெல்லாம்.
| [29] |
மலைபடு மணியும் பொன்னும்
தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு
திசைதொறும் நெருங்க வந்தார்.
| [30] |
மல்கிய வளங்கள் எல்லாம்
நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம்
ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப்
பராய்க்கடன் பலவும் நேர்ந்து
வில்விழா எடுக்க வென்று
விளம்பினன் வேடர் கோமான்.
| [31] |
பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.
| [32] |
சிலையினைக் காப்புக் கட்டும்
திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள்
நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின்
கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம்
வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.
| [33] |
ஐவன அடிசில் வெவ்வே
றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு
மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக்
கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும்
கலந்தனர் சினவில் வேடர்.
| [34] |
செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்தஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி
நசையொடும் மிசைவார் வெவ்வே
றந்தமி லுணவின் மேலோர்
ஆயினர் அளவி லார்கள்.
| [35] |
அயல்வரைப் புலத்தின் வந்தார்
அருங்குடி யிருப்பின் உள்ளார்
இயல்வகை உணவி லார்ந்த
எயிற்றியர் எயின ரெல்லாம்
உயர்கதி ருச்சி நீங்க
ஒழிவில்பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி
வரிசிலை விழவு கொள்வார்.
| [36] |
பாசிலைப் படலை சுற்றிப்
பன்மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக்
கவடிமெய்க் கலன்கள் பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா
வருந்துறைக் கண்ணி சூடி
ஆசில்ஆ சிரியன் ஏந்தும்
அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.
| [37] |
தொண்டக முரசும் கொம்பும்
துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம
எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச்
சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக்
குறிச்சியை வலங்கொண் டார்கள்.
| [38] |
குன்றவர் களிகொண் டாடக்
கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும்
சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்றை.
| [39] |
வெங்கதிர் விசும்பின் உச்சி
மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத்
தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள்.
| [40] |
பொற்றட வரையின் பாங்கர்ப்
புரிவுறு கடன்முன் செய்த
விற்றொழிற் களத்தில் நண்ணி
விதிமுறை வணங்கி மேவும்
அற்றைநாள் தொடங்கி நாளும்
அடற்சிலை யாண்மை முற்றக்
கற்றன ரென்னை யாளும்
கானவர்க் கரிய சிங்கம்.
| [41] |
வண்ணவெம் சிலையு மற்றப்
படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக்
கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி
எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல்
வளர்வதன் பொலிவு போல்வார்.
| [42] |
இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.
| [43] |
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
| [44] |
சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
| [45] |
இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி
இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும்
அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால்
அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி
மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால
மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள்
வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.
| [46] |
சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.
| [47] |
கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப் பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப் போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.
| [48] |
நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும் நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.
| [49] |
கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.
| [50] |
மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.
| [51] |
தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி
மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில்
செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.
| [52] |
முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.
| [53] |
தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
| [54] |
நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.
| [55] |
செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப்
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.
| [56] |
நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.
| [57] |
முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.
| [58] |
கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.
| [59] |
மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்
தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச்
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.
| [60] |
அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.
| [61] |
வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.
| [62] |
அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.
| [63] |
பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.
| [64] |
மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.
| [65] |
நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.
| [66] |
அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை
யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர்
செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை
மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண்
டெழுந்து போந்தார்.
| [67] |
தாளில்வாழ் செருப்பர்தோல்
தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும் அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்
மிக்குமேல் எழுந்ததே.
| [68] |
வன்தொடர்ப்பி ணித்தபாசம் வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின்
மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல்
ஓடுநாய்கள் மாடெலாம்.
| [69] |
போர்வலைச் சிலைத்தொழிற் புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொடக்கறுக்க ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து வந்தவெற்பர் முந்தினார்.
| [70] |
நண்ணிமாம றைக்குலங்கள்
நாடவென்று நீடுமத்
தண்ணிலா அடம்புகொன்றை தங்குவேணி யார்தமைக்
கண்ணினீடு பார்வையொன்று கொண்டு காணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும் ஏகினார்.
| [71] |
கோடுமுன் பொலிக்கவும்
குறுங்கணா குளிக்குலம்
மாடுசென் றிசைப்பவும் மருங்குபம்பை கொட்டவும்
சேடுகொண்ட கைவிளிச் சிறந்தவோசை செல்லவும்
காடுகொண் டெழுந்தவேடு கைவளைந்து சென்றதே.
| [72] |
நெருங்குபைந் தருக்குலங்கள்
நீடுகாடு கூடநேர்
வருங்கருஞ் சிலைத்தடக்கை மானவேடர் சேனைதான்
பொருந்தடந் திரைக்கடல் பரப்பிடைப் புகும்பெருங்
கருந்தரங்க நீள்புனல்
களிந்திகன்னி யொத்ததே.
| [73] |
தென்றிசைப் பொருப்புடன்
செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம்
துன்றிநின்ற வென்றடிச்
சுவட்டின்ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடெம் மருங்கும் வேடரோடினார்.
| [74] |
ஒடியெறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பெலாம்
நெடியதிண் வலைத்தொடக்கு
நீளிடைப் பிணித்துநேர்
கடிகொ ளப் பரந்தகாடு காவல்செய் தமைத்தபின்
செடிதலைச் சிலைக்கைவேடர் திண்ணனார்முன் நண்ணினார்.
| [75] |
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடிமுன்
மஞ்சலைக்கு மாமலைச் சரிப்புறத்து வந்தமா
அஞ்சுவித் தடர்க்குநாய்கள் அட்டமாக விட்டுநீள்
செஞ்சரத்தி னோடுசூழல் செய்தகானுள் எய்தினார்.
| [76] |
வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.
| [77] |
ஏனமோடு மானினங்கள் எண்குதிண் கலைக்குலம்
கானமேதி யானைவெம் புலிக்கணங்கள் கான்மரை
ஆனமாவ னேகமா வெருண்டெழுந்து பாயமுன்
சேனைவேடர் மேலடர்ந்து
சீறிஅம்பில் நூறினார்.
| [78] |
தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர
மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட
நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே.
| [79] |
வெங்கணைபடு பிடர்கிழிபட விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடுகணை
செறியமுன்இரு கருமா
அங்கெழுசிர முருவியபொழு தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன
புரைவனசில புலிகள்.
| [80] |
பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர்
குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர்
தலையனபல கலைகள்.
| [81] |
கருவரையொரு தனுவொடுவிசை
கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர்
கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை
புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன
எனமிடையுமவ் வனமே.
| [82] |
நீளிடைவிசை மிசைகுதிகொள நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு
சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற
வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை
கொளவுளவெதிர் பலவே.
| [83] |
கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு
விழுவனவன மேதி.
| [84] |
பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற
உறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை
நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த
பொறிகளின்அள வுளவே.
| [85] |
துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்.
| [86] |
இவ்வகைவரு கொலைமறவினை
எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை
கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு
பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற
முடுகியகடு விசையில்.
| [87] |
போமதுதனை அடுதிறலொடு பொருமறவர்கள் அரியே
றாமவர்தொடர் வுறும்விசையுடன்
அடிவழிசெலும் அளவில்
தாமொருவரு ம் அறிகிலரவர் தனிதொடர்வுழி அதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைகள் இருவர்கள்அடி பிரியார்.
| [88] |
நாடியகழல் வயவர்களவர்
நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு
நீழலின்விரை கேழல்.
| [89] |
குன்றியைநிகர் முன்செறஎரி
கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு
படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை
சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி தெருமரமரம் நிரையில்.
| [90] |
அத்தருவளர் சுழலிடையடை அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது
கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை
முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி
குலமறவர்கள் தலைவர்.
| [91] |
வேடர்தங் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ
என்றவர் அடியில் தாழ்ந்தார்.
| [92] |
மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும் தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார்.
| [93] |
என்றவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள தென்றுரை செய்ய நாணன்
நின்றவிப் பெரிய தேக்கின்
அப்புறஞ் சென்றால் நீண்ட
குன்றினுக் கயலே ஓடும்
குளிர்ந்தபொன் முகலி என்றான்.
| [94] |
பொங்கிய சினவில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார்
காவதம் அரையிற் கண்டார்
செங்கண்ஏ றுடையார் வைகும்
திருமலைச் சாரற் சோலை.
| [95] |
நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
| [96] |
ஆவதென் இதனைக் கண்டிங் கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர்
விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே
போகென்றார் திண்ண னார்தாம்.
| [97] |
உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும்
காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த திருமுக லியினைச் சார்ந்தார்.
| [98] |
ஆங்கதன் கரையின் பாங்கோர் அணிநிழற் கேழ லிட்டு
வாங்குவிற் காடன் தன்னை
மரக்கடை தீக்கோல் பண்ணி
ஈங்குநீ நெருப்புக் காண்பாய் இம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ மென்று
நாணனும் தாமும் போந்தார்.
| [99] |
அளிமிடை கரைசூழ் சோலை
அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை
தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.
| [100] |
கதிரவ னுச்சி நண்ணக்
கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும் ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க் கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கெழும் ஒலிகொல் என்றான்.
| [101] |
முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வ
ள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத்
தெழுபெரு வேட்கை யோடும்.
| [102] |
நாணனும் அன்பும் முன்பு
நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்.
| [103] |
திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.
| [104] |
மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள
எகநா யகரைக் கண்டார்
எழுந்தபே ருவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு
மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.
| [105] |
நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாய
அடியனேற் கிவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படியிலாப் பரிவு தானோர்
படிவமாம் பரிசு தோன்ற.
| [106] |
வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை
அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே என்று நைந்தார்.
| [107] |
கைச்சிலை விழுந்த தோரார்
காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும்
நான் இது அறிந்தேன் என்பான்.
| [108] |
வன்திறல் உந்தை யோடு மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி
ஊட்டிமுன் பறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன்செய்தா னாகு மென்றான்.
| [109] |
உண்ணிறைந் தெழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்கா ளத்தி
நாயனார்க் கினிய செய்கை
எண்ணிய இவைகொ லாமென்
றிதுகடைப் பிடித்துக் கொண்டவ்
அண்ணலைப் பிரிய மாட்டா தளவில் ஆதரவு நீட.
| [110] |
இவர்தமைக் கண்டே னுக்குத்
தனியராய் இருந்தார் என்னே
இவர்தமக் கமுது செய்ய இறைச்சியும் இடுவா ரில்லை
இவர்தமைப் பிரிய ஒண்ணா
தென்செய்கேன் இனியான் சால
இவர்தமக் கிறைச்சி கொண்டிங்
கெய்தவும் வேண்டு மென்று.
| [111] |
போதுவர் மீண்டு செல்வர்
புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
கொண்டிங்கு வருவே னென்பார்.
| [112] |
ஆர்தம ராக நீரிங்
கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார்.
| [113] |
முன்புநின் றரிதில் நீங்கி
மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும்
அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப் புதுமலர்க் காவிற் புக்கார்.
| [114] |
காடனும் எதிரே சென்று
தொழுதுதீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள்
குறிப்படி உறுப்பை யெல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும்
மறித்துநாம் போகைக் கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ என்றலும் நின்ற நாணன்.
| [115] |
அங்கிவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன
இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான்
நலப்பட்டான் தேவர்க் கென்றான்.
| [116] |
என்செய்தாய் திண்ணா நீதான் என்னமால் கொண்டாய் எங்கள்
முன்பெரு முதலி யல்லை யோவென முகத்தை நோக்கார்
வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு.
| [117] |
கோலினிற் கோத்துக் காய்ச்சிக்
கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவா ரானார்.
| [118] |
மருங்குநின் றவர்கள் பின்னும்
மயல்மிக முதிர்ந்தான் என்னே
அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவே றுமிழா நின்றான்
பெரும்பசி யுடைய னேனும்
பேச்சிலன் எமக்கும் பேறு
தரும்பரி சுணரான் மற்றைத் தசைபுறத் தெறியா நின்றான்.
| [119] |
தேவுமால் கொண்டான் இந்தத்
திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ
ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு போதுமென் றெண்ணிப் போனார்.
| [120] |
கானவர் போன தோரார் கடிதினில் கல்லை யின்கண்
ஊனமு தமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.
| [121] |
தனுவொரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல
போனகம் ஒருகை யேந்தி
இனியஎம் பிரானார் சாலப் பசிப்பரென் றிரங்கி யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை நண்ணினார் திண்ண னார்தாம்.
| [122] |
இளைத்தனர் நாய னார்என் றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி
வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.
| [123] |
தலைமிசைச் சுமந்த பள்ளித்
தாமத்தைத் தடங்கா ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத்
திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின் திருவமு தெதிரே வைத்து.
| [124] |
கொழுவிய தசைக ளெல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற்
பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி சால
அழகிது நாய னீரே அமுதுசெய் தருளும் என்றார்.
| [125] |
அன்னவிம் மொழிகள் சொல்லி அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும் எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.
| [126] |
அவ்வழி யந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி
மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்.
| [127] |
சார்வருந் தவங்கள் செய்தும் முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார்.
| [128] |
கழைசொரி தரளக் குன்றில் கதிர்நில வொருபாற் பொங்க
முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால் மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதியோடும
சந்திரன் தலைஉ வாவில்
குழையணி காதர் வெற்பைக்
கும்பிடச் சென்றால் ஒக்கும்.
| [129] |
விரவுபன் மணிகள் கான்ற
விரிசுடர்ப் படலை பொங்க
மரகதம் ஒளிகொள் நீல
மணிகளும் இமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவிரு ளொதுங்கி னாலே போன்றுள தெங்கும் எங்கும்.
| [130] |
செந்தழல் ஒளியில் பொங்கும்
தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த
மணிவிளக் கொளிக ளாலும்
ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி
மலையினில் இரவொன் றில்லை.
| [131] |
வருங்கறைப் பொழுது நீங்கி
மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின்
சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க்
கமுதுகொண் டணைய வேண்டி.
| [132] |
ஏறுகாற் பன்றி யோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித் துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு
வள்ளலைத் தொழுது போந்தார்.
| [133] |
மொய்காட்டும் இருள்வாங்கி
முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய
வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க
இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக்
கதிர்காட்டி யெழும்பொழுதில்.
| [134] |
எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.
| [135] |
வந்துதிரு மலையின்கண்
வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும் செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும்
கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன்
யார்செய்தார் என்றழிவார்.
| [136] |
மேவநேர் வரஅஞ்சா
வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம்
புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி அழுதுவிழுந் தலமந்தார்.
| [137] |
பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்கநான்
இருப்பதினி என்என்றவ் இறைச்சியெலும் புடன்இலையும்
செருப்படியும் நாயடியும் திருவலகால் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப் புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.
| [138] |
பழுதுபுகுந் ததுதீரப்
பவித்திரமாம் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு
தூயபூ சனைதொடங்கி
வழுவில்திரு மஞ்சனமே முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து
முதல்வனார் கழல்பணிந்தார்.
| [139] |
பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே
துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்
தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.
| [140] |
இவ்வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி
வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன்
தீவினையின் திறம்ஒழிவேன்.
| [141] |
திருமலையின் புறம்போன
திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில்
பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து
மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை
ஒளிநின்று கொன்றருளி.
| [142] |
பயில்விளியால் கலையழைத்துப்
பாடுபெற ஊடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி
அடியொற்றி மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து தொடர்ந்துகட மைகளெய்து
வெயில்படுவெங் கதிர்முதிரத்
தனிவேட்டை வினைமுடித்தார்.
| [143] |
பட்டவன விலங்கெல்லாம்
படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல்
இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும்
மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை மருங்குபுடை படவமைத்தார்.
| [144] |
இந்தனத்தை முறித்தடுக்கி
எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவன வக்குவித்து.
| [145] |
வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்தவற்றின்
ஆயவுறுப் பிறைச்சியெலாம்
அரிந்தொருகல் லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக் கனலின்கண் உறக்காய்ச்சித்
தூயதிரு அமுதமைக்ககச் சுவைகாணல் உறுகின்றார்.
| [146] |
எண்ணிறந்த கடவுளருக்
கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண்
வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு
தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில்
அமைத்தார்ஊன் திருவமுது.
| [147] |
நல்லபத முறவெந்து
நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித்
தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல்
உடன்கொண்டு வந்தணைந்தார்.
| [148] |
வந்துதிருக் காளத்தி மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர்
தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை
முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய
பூசனையின் செயல்முடிப்பார்.
| [149] |
ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள் மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கும் எனமொழிந்தார்.
| [150] |
இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய்
தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந் தெழும்அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்லுறங்கார்
பகல்வேட்டை யாடுவார்.
| [151] |
மாமுனிவர் நாள்தோறும்
வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென அதுநீக்கிச்
செப்பியஆ கமவிதியால்
ஆமுறையில் அருச்சனைசெய்
தந்நெறியில் ஒழுகுவரால்.
| [152] |
நாணனொடு காடனும்போய்
நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும்உறக் கமுமின்றி
அணங்குறைவா ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி வாராமற் கைவிட்டார்.
| [153] |
முன்புதிருக் காளத்தி
முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு
பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார்
அவர்கருத்தின் அளவினரோ.
| [154] |
அந்நிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால்
மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால்
ஒழித்தருள வேண்டுமென.
| [155] |
அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.
| [156] |
அவனுடைய வடிவெல்லாம்
நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார்.
| [157] |
உனக்கவன்தன் செயல்காட்ட
நாளைநீ யொளித்திருந்தால்
எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிகென்று மறைமுனிவர்க் கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியார்
எழுந்தருளிப் போயினார்.
| [158] |
கனவுநிலை நீங்கியபின் விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர் புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல்
தோன்றுவான் கதிர்தோன்ற.
| [159] |
முன்னைநாள் போல்வந்து
திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான்
அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்.
| [160] |
கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லி யார்தாம்
வருமுறை ஆறாம் நாளில்
வரும்இர வொழிந்த காலை
அருமறை முனிவ னார்வந்
தணைவதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை யாடி.
| [161] |
மாறில்ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுகவந் தணையா நின்றார்.
| [162] |
இத்தனை பொழுதுந் தாழ்த்தேன்
எனவிரைந் தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லாம்
முறைமுறை தீங்கு செய்ய
இத்தகு தீய புட்கள் ஈண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்ததென் றணையும் போதில்.
| [163] |
அண்ணலார் திருக்கா ளத்தி அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத் திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு
வல்விரைந் தோடி வந்தார்.
| [164] |
வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
| [165] |
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வ
தொழிந்திடக் காணார் செய்வ தறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி
யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைக ளெங்கும்
பார்த்தனர் எடுத்தார் வில்லும்.
| [166] |
வாளியுந் தெரிந்து கொண்டிம்
மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார்
உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள
விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல்
நெடிதிடை நேடிச் சென்றார்.
| [167] |
வேடரைக் காணார் தீய
விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும்
நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு
நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு
கதறினார் கண்ணீர் வார.
| [168] |
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான்
என்செய்கேன் என்று பின்னும்.
| [169] |
என்செய்தால் தீரு மோதான் எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன்
மொய்கழல் வேட ரென்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள்
தீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு
வருவன்நான் என்று போனார்.
| [170] |
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கும்
இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறென வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு
பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
| [171] |
மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ
இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக்
கூனெனும் உரைமுன் கண்டார்.
| [172] |
இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப.
| [173] |
நின்றசெங் குருதி கண்டார் நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார்.
| [174] |
வலத்திருக் கண்ணில் தங்கண்
அப்பிய வள்ள லார்தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில்செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.
| [175] |
கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
| [176] |
கண்ணுதல் கண்ணில் தங்கண் இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன் திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும் ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத்
தரித்திலர் தேவ தேவர்.
| [177] |
செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.
| [178] |
கானவர் பெருமா னார்தங்
கண்ணிடந் தப்பும் போதும்
ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார்
நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி
பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.
| [179] |
பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று மன்னுபே ரருள்பு ரிந்தார்.
| [180] |
மங்குல்வாழ் திருக்கா ளத்தி
மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற
தலைவர்தாள் தலைமேற் கொண்டே
கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரிற் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகல லுற்றேன்.
| [181] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.110  
குங்குலியக் கலய நாயனார்
பண் - ( )
வாய்ந்தநீர் வளத்தா லோங்கி
மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும்
எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு
தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி
யிருப்பது கடவூ ராகும்.
| [1] |
வயலெலாம் விளைசெஞ் சாலி
வரம்பெலாம் வளையின் முத்தம்
அயலெலாம் வேள்விச் சாலை
அணையெலாங் கழுநீர்க் கற்றை
புயலெலாங் கமுகின் காடப்
புறமெலாம் அதன்சீர் போற்றல்
செயலெலாந் தொழில்க ளாறே
செழுந்திருக் கடவூ ரென்றும்.
| [2] |
குடங்கையின் அகன்ற உண்கண்
கடைசியர் குழுமி யாடும்
இடம்படு பண்ணை தோறும்
எழுவன மருதம் பாடல்
வடம்புரி முந்நூல் மார்பின்
வைதிக மறையோர் செய்கைச்
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
| [3] |
துங்கநீள் மருப்பின் மேதி
படிந்துபால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக்
கமலமும் தீம்பால் நாறும்
மங்குல்தோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும்
ஆகுதிப் புகைப்பால் நாறும்.
| [4] |
மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
| [5] |
பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்.
| [6] |
கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
| [7] |
இந்நெறி ஒழுகு நாளில்
இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப்
பயில்மனை வாழ்க்கை தன்னின்
மன்னிய சுற்றத் தோடு
மக்களும் வருந்தி னார்கள்.
| [8] |
யாதொன்றும் இல்லை யாகி
இருபக லுணவு மாறிப்
பேதுறும் மைந்த ரோடும்
பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய் மனைவி யார்தங் கணவனார் கலய னார்கைக்
கோதில்மங் கலநூல் தாலி
கொடுத்துநெற் கொள்ளு மென்றார்
| [9] |
அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்.
| [10] |
ஆறுசெஞ் சடைமேல் வைத்த
அங்கணர் பூசைக் கான
நாறுகுங் குலியம் ஈதேல்
நானின்று பெற்றேன் நல்ல
பேறுமற் றிதன்மே லுண்டோ
பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினிக் கொள்வ தென்னென்
றுரைத்தெழும் விருப்பின் மிக்கார்.
| [11] |
பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
| [12] |
விடையவர் வீரட் டானம்
விரைந்துசென் றெய்தி என்னை
உடையவர் எம்மை யாளும்
ஒருவர்தம் பண்டா ரத்தில்
அடைவுற ஒடுக்கி யெல்லாம்
அயர்த்தெழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி
இருந்தனர் தமக்கொப் பில்லார்.
| [13] |
அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
| [14] |
மற்றவர் மனைவி யாரும்
மக்களும் பசியால் வாடி
அற்றைநா ளிரவு தன்னில்
அயர்வுறத் துயிலும் போதில்
நற்றவக் கொடிய னார்க்குக்
கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து செல்வங்
கண்டபின் சிந்தை செய்வார்.
| [15] |
கொம்பனா ரில்ல மெங்கும்
குறைவிலா நிறைவிற் காணும்
அம்பொனின் குவையும் நெல்லும்
அரிசியும் முதலா யுள்ள
எம்பிரான் அருளாம் என்றே
இருகரங் குவித்துப் போற்றித்
தம்பெருங் கணவ னார்க்குத்
திருவமு தமைக்கச் சார்ந்தார்.
| [16] |
காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக வென்றார்.
| [17] |
கலயனார் அதனைக் கேளாக்
கைதொழு திறைஞ்சிக் கங்கை
அலைபுனற் சென்னி யார்தம்
அருள்மறுத் திருக்க அஞ்சித்
தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலைநிகர் மாட வீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார்.
| [18] |
இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த
விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான்
அருள்தர வந்த தென்றார்.
| [19] |
மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
| [20] |
பதுமநற் றிருவின் மிக்கார்
பரிகலந் திருத்திக் கொண்டு
கதுமெனக் கணவ னாரைக்
கண்ணுதற் கன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி
மேவும்இன் அடிசில் ஊட்ட
அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார்
அருமறைக் கலய னார்தாம்.
| [21] |
ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க் குதவும் நாளில்.
| [22] |
செங்கண்வெள் ளேற்றின் பாகன்
திருப்பனந் தாளின் மேவும்
அங்கணன் செம்மை கண்டு
கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித்தன் வேழம் எல்லாம்
பூட்டவும் நேர்நில் லாமைக்
கங்குலும் பகலும் தீராக்
கவலையுற் றழுங்கிச் செல்ல.
| [23] |
மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்.
| [24] |
மழுவுடைச் செய்ய கையர்
கோயில்கள் மருங்கு சென்று
தொழுதுபோந் தன்பி னோடும்
தொன்மறை நெறிவ ழாமை
முழுதுல கினையும் போற்ற
மூன்றெரி புரப்போர் வாழும்
செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.
| [25] |
காதலால் அரசன் உற்ற
வருத்தமுங் களிற்றி னோடும்
தீதிலாச் சேனை செய்யும்
திருப்பணி நேர்ப டாமை
மேதினி மிசையே எய்த்து
வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும்
மனத்தினில் வருத்தம் எய்தி.
| [26] |
சேனையும் ஆனை பூண்ட
திரளுமெய்த் தெழாமை நோக்கி
யானுமிவ் விளைப்புற் றெய்க்கும்
இதுபெற வேண்டு மென்று
தேனலர் கொன்றை யார்தம்
திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்த லுற்றார்.
| [27] |
நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
| [28] |
பார்மிசை நெருங்க எங்கும்
பரப்பினர் பயில்பூ மாரி
தேர்மலி தானை மன்னன்
சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போலக்
களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர்
மலரடி தலைமேல் வைத்து
| [29] |
விண்பயில் புரங்கள் வேவ
வைதிகத் தேரின் மேருத்
திண்சிலை குனிய நின்றார்
செந்நிலை காணச் செய்தீர்
மண்பகிர்ந் தவனுங் காணா
மலரடி யிரண்டும் யாரே
பண்புடை யடியார் அல்லால்
பரிந்துநேர் காண வல்லார்.
| [30] |
என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி.
| [31] |
சிலபகல் கழிந்த பின்பு
திருக்கட வூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி
நிகழுநாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளை யாரும்
தாண்டகச் சதுர ராகும்
அலர்புகழ் அரசும் கூட
அங்கெழுந் தருளக் கண்டு.
| [32] |
மாறிலா மகிழ்ச்சி பொங்க
எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்
கின்னமு தேற்கும் ஆற்றால்
ஆறுநற் சுவைகள் ஓங்க
அமைத்தவர் அருளே அன்றி
நாறுபூங் கொன்றை வேணி
நம்பர்தம் அருளும் பெற்றார்.
| [33] |
கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
| [34] |
தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்
கூனல்தண் பிறையி னார்க்குக்
குங்குலி யங்கொண் டுய்த்த
பான்மைத்திண் கலய னாரைப்
பணிந்தவர் அருளி னாலே
மானக்கஞ் சாறர் மிக்க
வண்புகழ் வழுத்த லுற்றேன்.
| [35] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.120  
மானக்கஞ்சாற நாயனார் புராணம்
பண் - ( )
மேலாறு செஞ்சடைமேல்
வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர்
தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன்பொழியக்
கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்
கமழ்சாறூர் கஞ்சாறூர்.
| [1] |
கண்ணீலக் கடைசியர்கள்
கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண்
உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத்
தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த
வளவயல்கள் உளஅயல்கள்.
| [2] |
புயல்காட்டுங் கூந்தல்சிறு
புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி இடைஒதுங்க
இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல்காட்டும் மதிதோற்கும்
முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல
கதிர்காட்டுந் தடம்பணைகள்.
| [3] |
சேறணிதண் பழனவயல்
செழுநெல்லின் கொழுங்கதிர்போய்
வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலைவளைப்ப
வண்டலைதண் டலையுழவர்
தாறரியும் நெடுங்கொடுவாள்
அனையவுள தனியிடங்கள்.
| [4] |
பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம்
ஞாங்கரணி துகிற்கொடியும்
நகிற்கொடியும் உளவரங்கம்
ஓங்குநிலைத் தோரணமும்
பூரணகும் பமும்உளவால்
பூங்கணைவீ தியில்அணைவோர்
புலமறுகுஞ் சிலமறுகு.
| [5] |
மனைசாலும் நிலையறத்தின்
வழிவந்த வளம்பெருகும்
வினைசாலும் உழவுதொழில்
மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயல் மயிலனையார்
நடம்புரியப் புகல்முழவங்
கனைசாறு மிடைவீதிக்
கஞ்சாறு விளங்கியதால்.
| [6] |
அப்பதியிற் குலப்பதியாய்
அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத்
திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார்
விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார்
மானக்கஞ் சாறனார்.
| [7] |
பணிவுடைய வடிவுடையார்
பணியினொடும் பனிமதியின்
அணிவுடைய சடைமுடியார்க்
காளாகும் பதம்பெற்ற
தணிவில்பெரும் பேறுடையார்
தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே
ஏவல்செயுந் தொழில்பூண்டார்.
| [8] |
மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை
அந்தணர்தம் அடியாராம்
ஈறில்பெருந் திருவுடையார்
உடையாரென் றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தம்
குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.
| [9] |
விரிகடல்சூழ் மண்ணுலகில்
விளக்கியஇத் தன்மையராம்
பெரியவர்க்கு முன்சிலநாள்
பிள்ளைப்பே றின்மையினால்
அரியறியா மலர்க்கழல்கள்
அறியாமை யறியாதார்
வருமகவு பெறற்பொருட்டு
மனத்தருளால் வழுத்தினார்.
| [10] |
குழைக்கலையும் வடிகாதில்
கூத்தனார் அருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின்
மனைக்கிழத்தி யார்தம்பால்
இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப்
பெண்கொடியைப் பெற்றெடுத்தார்.
| [11] |
பிறந்தபெரு மகிழ்ச்சியினால்
பெருமூதூர் களிசிறப்பச்
சிறந்தநிறை மங்கலதூ
ரியம்முழங்கத் தேவர்பிரான்
அறந்தலைநின் றவர்க்கெல்லாம்
அளவில்வளத் தருள்பெருக்கிப்
புறந்தருவார் போற்றிசைப்பப்
பொற்கொடியை வளர்க்கின்றார்.
| [12] |
காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின்
பூப்பயிலும் சுருட்குழலும்
பொலங்குழையும் உடன்தாழ
யாப்புறுமென் சிறுமணிமே
கலையணிசிற் றாடையுடன்
கோப்பமைகிண் கிணியசையக்
குறுந்தளிர்மெல் லடியொதுங்கி.
| [13] |
புனைமலர்மென் கரங்களினால்
போற்றியதா தியர்நடுவண்
மனையகத்து மணிமுன்றில்
மணற்சிற்றில் இழைத்துமணிக்
கனைகுரல்நூ புரம்அலையக்
கழல்முதலாப் பயின்றுமுலை
நனைமுகஞ்செய் முதற்பருவம்
நண்ணினள்அப் பெண்ணமுதம்.
| [14] |
உறுகவின்மெய்ப் புறம்பொலிய
ஒளிநுசுப்பை முலைவருத்த
முறுவல்புறம் அலராத
முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்குல்
நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு
மணப்பருவம் வந்தணைய.
| [15] |
திருமகட்கு மேல்விளங்குஞ்
செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில்
ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார்
தமராய கழல்ஏயர்
பெருமகற்கு மகட்பேச
வந்தணைந்தார் பெருமுதியோர்.
| [16] |
வந்தமூ தறிவோரை
மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின்விரும்பி
மொழிந்தமணத் திறங்கேட்டே
எந்தமது மரபினுக்குத்
தகும்பரிசால் ஏயுமெனச்
சிந்தைமகிழ் வுறஉரைத்து
மணநேர்ந்து செலவிட்டார்.
| [17] |
சென்றவருங் கஞ்சாறர்
மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர்
கோனாரும் மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு
திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல்வினை மங்கலநாள்
மதிநூல்வல் லவர்வகுத்தார்.
| [18] |
மங்கலமாம் செயல்விரும்பி
மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாம்
தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து
பொலங்கலங்கள் இடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழில்மூதூர்
வதுவைமுகங் கோடித்தார்.
| [19] |
கஞ்சாறர் மகட்கொடுப்பக்
கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப்பெருமை
ஏயர்குலப் பெருமானும்
தஞ்சால்பு நிறைசுற்றந்
தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலும் மலர்ச்சோலைக்
கஞ்சாற்றின் மருங்கணைய.
| [20] |
வள்ளலார் மணமவ்வூர்
மருங்கணையா முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தம்
திருமனையில் ஒருவழியே
தெள்ளுதிரை நீருலகம்
உய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய
உம்பர்பிரான் தாமணைவார்.
| [21] |
முண்டநிறை நெற்றியின்மேல்
முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின்கண்
கோத்தணிந்த எற்புமணி
பண்டொருவன் உடலங்கம்
பரித்தநாள் அதுகடைந்த
வெண்தரளம் எனக்காதின்
மிசையசையுங் குண்டலமும்.
| [22] |
அவ்வென்பின் ஒளிமணிகோத்
தணிந்ததிருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவொழியத்
தோளிலிடும் பட்டிகையும்
மைவந்த நிறக்கேச
வடப்பூணு நூலும்மனச்
செவ்வன்பர் பவமாற்றுந்
திருநீற்றுப் பொக்கணமும்.
| [23] |
ஒருமுன்கைத் தனிமணிகோத்
தணிந்தவொளிர் சூத்திரமும்
அருமறைநூற் கோவணத்தின்
மிசையசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசைதோய்ந்த
எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச
முத்திரையுந் திகழ்ந்திலங்க.
| [24] |
பொடிமூடு தழலென்னத்
திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின்
பரப்பணிந்த பான்மையராய்க்
கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத்
தடிநீடும் மனத்தன்பர்
தம்மனையி னகம்புகுந்தார்.
| [25] |
வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.
| [26] |
நற்றவராம் பெருமானார்
நலமிகும்அன் பரைநோக்கி
உற்றசெயல் மங்கலமிங்
கொழுகுவதென் எனஅடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன்
வதுவையெனப் பெருந்தவரும்
மற்றுமக்குச் சோபனம்ஆ
குவதென்று வாய்மொழிந்தார்.
| [27] |
ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.
| [28] |
தஞ்சரணத் திடைப்பணிந்து
தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த
மலர்க்கூந்தற் புறம்நோக்கி
அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப்
பஞ்சவடிக் காமென்றார்
பரவஅடித் தலங்கொடுப்பார்.
| [29] |
அருள்செய்த மொழிகேளா
அடற்சுரிகை தனையுருவிப்
பொருள்செய்தா மெனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியிலரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தி னிடைநீட்ட.
| [30] |
வாங்குவார் போல்நின்ற
மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன்
பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார்
ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி
தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.
| [31] |
விழுந்தெழுந்து மெய்ம்மறந்த
மெய்யன்பர் தமக்குமதிக்
கொழுந்தலைய விழுங்கங்கை
குதித்தசடைக் கூத்தனார்
எழும்பரிவு நம்பக்கல்
உனக்கிருந்த பரிசிந்தச்
செழும்புவனங் களிலேறச்
செய்தோமென் றருள்செய்தார்.
| [32] |
மருங்குபெருங் கணநாதர்
போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்கவிடை மேல்கொண்டு
நின்றவர்முன் நின்றவர்தாம்
ஒருங்கியநெஞ் சொடுகரங்கள்
உச்சியின்மேற் குவித்தையர்
பெருங்கருணைத் திறம்போற்றும்
பெரும்பேறு நேர்பெற்றார்.
| [33] |
தொண்டனார் தமக்கருளிச்
சூழ்ந்திமையோர் துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியார்
எழுந்தருளிப் போயினார்
வண்டுவார் குழற்கொடியைக்
கைப்பிடிக்க மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக்
கலிக்காம னார்புகுந்தார்.
| [34] |
வந்தணைந்த ஏயர்குல
மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல்
செறிந்தவர்பால் கேட்டருளிப்
புந்தியினில் மிகவுவந்து
புனிதனார் அருள்போற்றிச்
சிந்தைதளர்ந் தருள்செய்த
திருவாக்கின் திறங்கேட்டு.
| [35] |
மனந்தளரும் இடர்நீங்கி
வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
எயின்மூதூர் சென்றணைந்தார்.
| [36] |
ஒருமகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமைஎன் அளவிற் றாமே
மருவிய கமரிற் புக்க
மாவடு விடேலென் னோசை
உரிமையால் கேட்க வல்லார்
திறமினி யுரைக்க லுற்றேன்.
| [37] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.130  
அரிவாட்டாய நாயனார் புராணம்
பண் - ( )
வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.
| [1] |
செந்நெ லார்வயற் கட்டசெந் தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்
துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுளார்.
| [2] |
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பா லுடையோர் முகத்தினும்
களத்தின் மீதுங் கயல்பாய் வயல்அயல்
குளத்தும் நீளுங் குழையுடை நீலங்கள்.
| [3] |
அக்கு லப்பதி தன்னில் அறநெறித்
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
| [4] |
தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.
| [5] |
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.
| [6] |
இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வ ரவர்வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
| [7] |
மேவு செல்வங் களிறுண் விளங்கனி
ஆவ தாகி அழியவும் அன்பினால்
பாவை பாகர்க்கு முன்பு பயின்றஅத்
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.
| [8] |
அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்.
| [9] |
சாலி நேடி அறுத்தவை தாம்பெறும்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்.
| [10] |
நண்ணிய வயல்கள் எல்லாம்
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.
| [11] |
வைகலும் உணவி லாமை
மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா அன்பின்
நங்கையார் அடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித் தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந்
திருப்பணி செய்யும் நாளில்.
| [12] |
மனைமருங் கடகு மாள
வடநெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க
அமுதுசெய் தன்ப னாரும்
வினைசெயல் முடித்துச் செல்ல
மேவுநா ளொருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு
நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.
| [13] |
முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.
| [14] |
போதரா நின்ற போது
புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார்
மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாங்
கமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர்
போவதங் கினிஏன் என்று.
| [15] |
நல்லசெங் கீரை தூய
மாவடு அரிசி சிந்த
அல்லல்தீர்த் தாள வல்லார்
அமுதுசெய் தருளும் அப்பே
றெல்லையில் தீமை யேனிங்
கெய்திடப் பெற்றி லேனென்
றொல்லையி லரிவாள் பூட்டி
ஊட்டியை அரிய லுற்றார்.
| [16] |
ஆட்கொள்ளும் ஐயர் தாமிங்
கமுதுசெய் திலர்கொ லென்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப்
புரையற விரவு மன்பு
காட்டிய நெறியி னுள்ளந்
தண்டறக் கழுத்தி னோடே
ஊட்டியும் அரியா நின்றார்
உறுபிறப் பரிவார் ஒத்தார்.
| [17] |
மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே.
| [18] |
திருக்கைசென் றரிவாள் பற்றுந்
திண்கையைப் பிடித்த போது
வெருக்கொடங் கூறு நீங்க
வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத்
தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி
அஞ்சலி கூப்பி நின்று.
| [19] |
அடியனேன் அறிவி லாமை
கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்
கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான
தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப்
புரிசடைப் புராண போற்றி.
| [20] |
என்றவர் போற்றி செய்ய
இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை
நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய்
என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர்
மழவிடை உகைத்துச் சென்றார்.
| [21] |
பரிவுறு சிந்தை யன்பர்
பரம்பொரு ளாகி யுள்ள
பெரியவ ரமுது செய்யப்
பெற்றிலே னென்று மாவின்
வரிவடு விடேலெ னாமுன்
வன்கழுத் தரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட் டாயர்
ஆயினார் தூய நாமம்.
| [22] |
முன்னிலை கமரே யாக
முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச்
செவியுற வடுவி னோசை
அந்நிலை கேட்ட தொண்டர்
அடியிணை தொழுது வாழ்த்தி
மன்னும்ஆ னாயர் செய்கை
அறிந்தவா வழுத்த லுற்றேன்.
| [23] |
Back to Top
சேக்கிழார் இலை மலிந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.140  
ஆனாய நாயனார் புராணம்
பண் - ( )
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.
| [1] |
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.
| [2] |
வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்
பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.
| [3] |
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்
துங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.
| [4] |
அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.
| [5] |
கண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத்
தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.
| [6] |
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.
| [7] |
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
| [8] |
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
| [9] |
ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்
டூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.
| [10] |
கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்
புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.
| [11] |
ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.
| [12] |
முந்தைமறை நூன்மரபின்
மொழிந்தமுறை யெழுந்தவேய்
அந்தமுதல் நாலிரண்டில்
அரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி
வாயுமுதல் வழங்குதுளை
அந்தமில்சீ ரிடையீட்டின்
அங்குலியெண் களின்அமைத்து.
| [13] |
எடுத்தகுழற் கருவியினில்
எம்பிரான் எழுத்தைந்தும்
தொடுத்தமுறை யேழிசையின்
சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாம்
தங்கவருந் தங்கருணை
அடுத்தஇசை யமுதளித்துச்
செல்கின்றார் அங்கொருநாள்.
| [14] |
வாசமலர்ப் பிணைபொங்க
மயிர்நுழுதி மருங்குயர்ந்த
தேசுடைய சிகழிகையில்
செறிகண்ணித் தொடைசெருகிப்
பாசிலைமென் கொடியின்வடம்
பயிலநறு விலிபுனைந்து
காசுடைநாண் அதற்கயலே
கருஞ்சுருளின் புறங்கட்டி.
| [15] |
வெண்கோடல் இலைச்சுருளிற்
பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த
வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல்
திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்தாராக்
கவின்விளங்க மிசையணிந்து.
| [16] |
நிறைந்தநீ றணிமார்பின்
நிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத்
திரள்தோளின் புடையலங்கல்
அறைந்தசுரும் பிசையரும்ப
அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப்
பூம்பட்டுப் பொலிந்தசைய.
| [17] |
சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.
| [18] |
எம்மருங்கும் நிரைபரப்ப
எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத்
தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை
அலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல்
செழுங்கொன்றை மருங்கணைந்தார்.
| [19] |
சென்றணைந்த ஆனாயர்
செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர்த் துணர்தூக்கி
மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை
நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையிலன்பை
உடையவர்பால் மடைதிறந்தார்.
| [20] |
அன்பூறி மிசைப்பொங்கும்
அமுதஇசைக் குழலொலியால்
வன்பூதப் படையாளி
எழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின்
முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கும்
இன்னிசைவேய்ங் கருவிகளில்.
| [21] |
ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.
| [22] |
முத்திரையே முதலனைத்தும்
முறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை ஆராய்ச்சி
வக்கரனை வழிபோக்கி
ஒத்தநிலை யுணர்ந்ததற்பின்
ஒன்றுமுதல் படிமுறையால்
அத்தகைமை ஆரோசை
அமரோசை களின்அமைத்தார்.
| [23] |
மாறுமுதற் பண்ணின்பின்
வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும்
கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார்
அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங்
கொடிப்பாலை யினில்நிறுத்தி.
| [24] |
ஆயஇசைப் புகல்நான்கின்
அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன
விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயவொளி யிடையலையத்
திருவாள னெழுத்தஞ்சுந்
தூயஇசைக் கிளைகொள்ளுந்
துறையஞ்சின் முறைவிளைத்தார்.
| [25] |
மந்தரத்தும் மத்திமத்தும்
தாரத்தும் வரன்முறையால்
தந்திரிகள் மெலிவித்தும்
சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல்தொழில்கள்
அளவுபெற அசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண.
| [26] |
எண்ணியநூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.
| [27] |
வள்ளலார் வாசிக்கும்
மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறைஅஞ் செழுத்தாக
ஓங்கியெழும் மதுரவொலி
வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும்
மேலமரர் தருவிளைதேன்
தெள்ளமுதின் உடன்கலந்து
செவிவார்ப்ப தெனத்தேக்க.
| [28] |
ஆனிரைகள் அறுகருந்தி
அசைவிடா தணைந்தயரப்
பானுரைவாய்த் தாய்முலையில் பற்றுமிளங் கன்றினமும்
தானுணவு மறந்தொழியத்
தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாம் கான்விலங்கும்
மயிர்முகிழ்த்து வந்தணைய.
| [29] |
ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.
| [30] |
பணிபுவனங் களிலுள்ளார்
பயில்பிலங்கள் வழியணைந்தார்
மணிவரைவாழ் அரமகளிர்
மருங்குமயங் கினர்மலிந்தார்
தணிவிலொளி விஞ்சையர்கள்
சாரணர்கின் னரர்அமரர்
அணிவிசும்பில் அயர்வெய்தி
விமானங்கள் மிசையணைந்தார்.
| [31] |
சுரமகளிர் கற்பகப்பூஞ்
சோலைகளின் மருங்கிருந்து
கரமலரின் அமுதூட்டுங்
கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய
விமானங்கள் விரைந்தேறிப்
பரவியஏழ் இசையமுதஞ்
செவிமடுத்துப் பருகினார்.
| [32] |
நலிவாரும் மெலிவாரும்
உணர்வொன்றாய் நயத்தலினால்
மலிவாய்வெள் ளெயிற்றரவம்
மயில்மீது மருண்டுவிழும்
சலியாத நிலைஅரியுந்
தடங்கரியும் உடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும்
புல்வாய புல்வாயும்.
| [33] |
மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.
| [34] |
இவ்வாறு நிற்பனவுஞ்
சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண
மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை
முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த
திருக்குழல்வா சனையுருக்க.
| [35] |
மெய்யன்பர் மனத்தன்பின்
விளைத்தஇசைக் குழலோசை
வையந்தன் னையும்நிறைத்து
வானந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத
பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்தன் திருச்செவியின்
அருகணையப் பெருகியதால்.
| [36] |
ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.
| [37] |
திசைமுழுதுங் கணநாதர்
தேவர்கட்கு முன்நெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது
வேற்றொலிகள் விரவாமே
அசையவெழுங் குழல்நாதத்
தஞ்செழுத்தால் தமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனார்
எழுந்தருளி யெதிர்நின்றார்.
| [38] |
முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.
| [39] |
விண்ணவர்கள் மலர்மாரி
மிடைந்துலக மிசைவிளங்க
எண்ணிலரு முனிவர்குழாம்
இருக்குமொழி எடுத்தேத்த
அண்ணலார் குழற்கருவி
அருகிசைத்தங் குடன்செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொற்பொதுவின் இடைப்புக்கார்.
| [40] |
தீதுகொள் வினைக்கு வாரோம்
செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசும்
கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க
மனையிடை இருகாற் செல்லத்
தூதுகொள் பவராம் நம்மைத்
தொழும்புகொண் டுரிமை கொள்வார்.
| [41] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.150  
மூர்த்தி நாயனார் புராணம்
பண் - ( )
சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
| [1] |
சாயுந் தளிர்வல்லி மருங்குல்
நெடுந்த டங்கண்
வேயும் படுதோளியர் பண்படும்
இன்சொற் செய்ய
வாயும் படும்நீள்கரை மண்பொரும்
தண்பொ ருந்தம்
பாயுங் கடலும்படும் நீர்மை
பணித்த முத்தம்.
| [2] |
மொய்வைத்த வண்டின் செறிசூழல்
முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர
வந்த மந்த
மெய்வைத்த காலும் தரும்ஞாலம்
அளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி
மணஞ்செய் ஈரம்.
| [3] |
சூழுமிதழ்ப் பங்கய மாகஅத்
தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத்
தையல் ஒப்பார்
யாழின் மொழியிற் குழலின்னிசை
யுஞ்சு ரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி
என்ப தாகும்.
| [4] |
சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய
அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை
மேதி பாயப்
பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம்
பாய எங்கும்
சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக் கேறு சங்கம்.
| [5] |
மந்தாநிலம் வந்தசை பந்தரின்
மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச்
செங்கை தாங்கும்
சந்தார்முலை மேலன தாழ்குழை
வாள்மு கப்பொற்
செந்தாமரை மேலன நித்திலம்
சேர்ந்த கோவை.
| [6] |
மும்மைப் புவனங்களின் மிக்கதன்
றேஅம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின்
விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளுந் தருவார்திரு
வால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம்
இருந்த தென்றால்.
| [7] |
அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.
| [8] |
நாளும் பெருங்கா தல்நயப்புறும்
வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில் பதங்க ளெல்லாம்
ஆளும் பெருமான் அடித்தாமரை
அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார்
மூர்த்தி யார்தாம்.
| [9] |
அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்.
| [10] |
கானக் கடிசூழ் வடுகக்கரு
நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து
நிலங்கொள் வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை
வீரர் திண்தேர்
சேனைக் கடலும் கொடுதென்றிசை
நோக்கி வந்தான்.
| [11] |
வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.
| [12] |
வல்லாண் மையின்வண் டமிழ்நாடு
வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறமேவிய
நீற்றின் சார்பு
செல்லா தருகந்தர் திறத்தினில்
சிந்தை தாழ்ந்தான்.
| [13] |
தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய்
யென்று சார்ந்து
வீழுங் கொடியோன் அதுவன்றியும்
வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவஞ்சுடர்த்
திங்க ளோடும்
வாழுஞ் சடையா னடியாரையும்
வன்மை செய்வான்.
| [14] |
செக்கர்ச் சடையார் விடையார்திரு
வால வாயுள்
முக்கட் பரனார் திருத்தொண்டரை
மூர்த்தி யாரை
மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன்
வெஞ்ச மண்பேர்
எக்கர்க் குடனாக இகழ்ந்தன
செய்ய எண்ணி.
| [15] |
அந்தம் இலவாம் மிறைசெய்யவும்
அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர்
செய்து வந்தார்
தந்தம் பெருமைக் களவாகிய
சார்பில் நிற்கும்
எந்தம் பெருமக் களையாவர்
தடுக்க வல்லார்.
| [16] |
எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில்
லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக்
காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங்
கோன்மை செய்வான்
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும்
சிந்தை நொந்து.
| [17] |
புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.
| [18] |
காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன்
காப்ப வுஞ்சென்
றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை
அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும்
பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
| [19] |
நட்டம்புரி வார்அணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.
| [20] |
கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.
| [21] |
அன்பின்துணி வால்இது செய்திடல் ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.
| [22] |
இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல் லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர் மூர்த்தி யார்தாம்.
| [23] |
அந்நாள்இர வின்கண் அமண்புகல்
சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை
யாமை வெல்ல.
| [24] |
இவ்வா றுலகத்தின் இறப்ப
உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை
வார்க ளேபோல்
அவ்வா றரனார் அடியாரை
அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத் திடைவீழ
விரைந்து வீந்தான்.
| [25] |
முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.
| [26] |
அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள்
கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன்
காலை முற்றி
வைவேலவன் தன்குல மைந்தரும்
இன்மை யாலே
செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை
செய்து தேர்வார்.
| [27] |
தாழுஞ் செயலின் றொருமன்னவன் தாங்க வேண்டும்
கூழுங் குடியும் முதலாயின
கொள்கைத் தேனும்
சூழும் படைமன் னவன்தோளிணைக்
காவ லின்றி
வாழுந் தகைத்தன் றிந்தவையகம்
என்று சொன்னார்.
| [28] |
பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து
ஞாலங் காப்பான்
தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில்
சரித்து வாழும்
மன்னரை யின்றி வைகும் மண்ணுல கெண்ணுங் காலை
இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை
ஒக்கும் என்பார்.
| [29] |
இவ்வகை பலவும் எண்ணி
இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று
தெளிபவர் சிறப்பின் மிக்க
மைவரை யனைய வேழங்
கண்கட்டி விட்டால் மற்றக்
கைவரை கைக்கொண் டார்மண்
காவல்கைக் கொள்வார் என்று.
| [30] |
செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை
செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை
யேந்து கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு கோடை நெற்றிக்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண்
கட்டி விட்டார்.
| [31] |
கண்கட்டி விடுங்களி யானைஅக்
காவல் மூதூர்
மண்கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு
வால வாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுரம்
முன்பு மேவி.
| [32] |
நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது
கண்ட தொண்டர்
ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில்
இந்த வையம்
தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம் தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற் புறத்தின் நிற்ப.
| [33] |
வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.
| [34] |
மாதங்கம் எருத்தினில் வைத்தவர்
தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை
அமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீது பணிந்தெழுந்
தார்கள் அப்போ
தோதங்கிளர் வேலையை ஒத்தொலி
மிக்க தவ்வூர்.
| [35] |
சங்கங்கள் முரன்றன தாரைகள்
பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம்
எல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி
அம்பொற் கொம்பின்
பங்கன்அரு ளால்உல காள்பவர்
பாங்கர் எங்கும்.
| [36] |
வெங்கட்களிற் றின்மிசை நின்றும்
இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி
சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத்
தேற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல்
சூழ்ந்து செய்வார்.
| [37] |
மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.
| [38] |
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
| [39] |
அவ்வாறு மொழிந்தது கேட்ட
அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு
மாந்தர் தாமும்
எவ்வாறருள் செய்தனை மற்றவை
யன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச்சேவடி
தாழ்ந்து செப்ப.
| [40] |
வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.
| [41] |
என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன்திண்மதி நூல்வளர் வாய்மை
அமைச்சர் தாமும்
நன்றிங்கருள் தானென நற்றவ
வேந்தர் சிந்தை
ஒன்றும்அர சாள்உரி மைச்செய
லான உய்த்தார்.
| [42] |
மாடெங்கும் நெருங்கிய மங்கல
ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர்
தொல்லை ஏனம்
தேடுங்கழ லார்திரு வாலவாய்
சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீள்மறு
கூடு போந்தார்.
| [43] |
மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி
மண்ட பத்திற்
பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக்
காமர் பூங்கால்
மன்னுங்குடை நீழல் இருந்தனர்
வையந் தாங்கி.
| [44] |
குலவுந்துறை நீதி யமைச்சர்
குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின
கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்று நெறித்துறை
நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம்
உயர்ந்து மன்ன.
| [45] |
நுதலின்கண் விழித்தவர் வாய்மை
நுணங்கு நூலின்
பதமெங்கும் நிறைந்து விளங்கப்
பவங்கள் மாற
உதவுந்திரு நீறுயர் கண்டிகை
கொண்ட வேணி
முதன்மும்மையி னால்உல காண்டனர்
மூர்த்தி யார்தாம்.
| [46] |
ஏலங்கமழ் கோதையர் தந்திறம்
என்றும் நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன்
வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி
நலங்கொள் ஊழிக்
காலம்உயிர் கட்கிட ரான கடிந்து காத்து.
| [47] |
பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.
| [48] |
அகல்பாறையின் வைத்து முழங்கையை
அன்று தேய்த்த
இகலார்களிற் றன்பரை யேத்தி
முருக னாராம்
முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி மாட வீதிப்
புகலூர்வரும் அந்தணர் தந்திறம்
போற்ற லுற்றாம்.
| [49] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.160  
முருக நாயனார் புராணம்
பண் - ( )
தாது சூழுங் குழல்மலையாள்
தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை
வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழும் மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப்
பொய்கை சூழும் பூம்புகலூர்.
| [1] |
நாம மூதூர் மற்றதனுள்
நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின்
சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளியாக்கும்
இரவே யல்ல விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங்
களங்க மின்றி விளங்குமால்.
| [2] |
நண்ணும் இசைதேர் மதுகரங்கள்
நனைமென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன்பொழிவ
வாச மலர்வா யேயல்ல
தண்ணென் சோலை எம்மருங்கும்
சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும்
பதிகச் செழுந்தேன் பொழியுமால்.
| [3] |
வண்டு பாடப் புனல்தடத்து
மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
துளித்த கண்ணீர் அரும்புமால்.
| [4] |
ஆன பெருமை வளஞ்சிறந்த
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
| [5] |
அடைமேல் அலவன் துயிலுணர
அலர்செங் கமல வயற்கயல்கள்
மடைமே லுகளுந் திருப்புகலூர்
மன்னி வாழுந் தன்மையராய்
விடைமேல் வருவார்க் காளான
மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச்
சடைமேல் அணியத் திருப்பள்ளித்
தாமம் பறித்துச் சாத்துவார்.
| [6] |
புலரும் பொழுதின் முன்னெழுந்து
புனித நீரில் மூழ்கிப்போய்
மலருஞ் செவ்வித் தம்பெருமான்
முடிமேல் வான்நீர் ஆறுமதி
உலவு மருங்கு முருகுயிர்க்க
நகைக்கும் பதத்தின் உடன்பறித்த
அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை களில்அமைப்பார்.
| [7] |
கோட்டு மலரும் நிலமலரும்
குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின்
தோட்டு மலரும் மாமலருஞ்
சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவலரக்
கனக வரையிற் பன்னகநாண்
பூட்டும் ஒருவர் திருமுடிமேல்
புனைய லாகும் மலர்தெரிந்து.
| [8] |
கொண்டு வந்து தனியிடத்தில்
இருந்து கோக்குங் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமமுடன்
இணைக்கும் வாச மாலைகளுந்
தண்டிற் கட்டுங் கண்ணிகளும்
தாளிற் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டா திறைக்குந் தொடையல்களும்
சமைத்து நுடங்கு நூன்மார்பர்.
| [9] |
ஆங்கப் பணிகள் ஆனவற்றுக் கமைத்த காலங் களில்அமைத்துத்
தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ்
சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார்
பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும்
ஓவா நாவின் உணர்வினார்.
| [10] |
தள்ளும் முறைமை ஒழிந்திடஇத்
தகுதி யொழுகு மறையவர்தாம்
தெள்ளு மறைகள் முதலான
ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்றளித்த
அம்மை முலைப்பால் உடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம்
பெருமை யுடையா ராயினார்.
| [11] |
அன்ன வடிவும் ஏனமுமாய்
அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை
வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள
நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும்
பயின்றே பணிந்து பரவினார்.
| [12] |
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
| [13] |
அரவம் அணிந்த அரையாரை
அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார்
மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக்
கரவில் அவர்பால் வருவாரைக்
கருத்தில் உருத்தி ரங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார்
பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
| [14] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.170  
உருத்திர பசுபதி நாயனார்
பண் - ( )
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.
| [1] |
வான்அ ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீ
தேன்அ ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை
ஆன்அ ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர்
தான்அ ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.
| [2] |
அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
| [3] |
ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு
மாய னார்அறி யாமலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சின ராகிஅத் தொழில்தலை நின்றார்.
| [4] |
கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழும்
நிரைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி.
| [5] |
தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்.
| [6] |
அரும றைப்பய னாகிய உருத்திர மதனை
வருமு றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே
திரும லர்ப்பொகுட் டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
| [7] |
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம்
தீதி லாநிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.
| [8] |
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
| [9] |
அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால்
பயில்உ ருத்திர பசுபதி யார்திறம் பரசி
எயில்உ டைத்தில்லை யெல்லையில் நாளைப்போ வாராம்
செயல்உ டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.180  
திரு நாளைப் போவர்
பண் - ( )
பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு
மேற்கானாட் டாதனுர்.
| [1] |
நீற்றலர்பே ரொளிநெருங்கும்
அப்பதியில் நிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற்
தகட்டுவரால் எழப்பகட்டேர்
ஆற்றலவன் கொழுக்கிழித்த
சால்வழிபோய் அசைந்தேறிச்
சேற்றலவன் கருவுயிர்க்க
முருகுயிர்க்கும் செழுங்கமலம்.
| [2] |
நனைமருவும் சினைபொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
தினகரமண் டலம்வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனமருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல்மழையோ மதுமழையோ
பொழிவொழியா பூஞ்சோலை.
| [3] |
பாளைவிரி மணங்கமழும்
பைங்காய்வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசைமுட்டித்
தடங்கிடங்கின் எழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த பழம்மிதப்ப வண்பலவின்
நீளமுதிர் கனிகிழிதேன்
நீத்தத்தில் எழுந்துகளும்.
| [4] |
வயல்வளமுஞ் செயல்படுபைந்
துடவையிடை வருவளமும்
வியலிடம்எங் கணும்நிறைய மிக்கபெருந் திருவினவாம்
புயலடையும் மாடங்கள்
பொலிவெய்த மலிவுடைத்தாய்
அயலிடைவே றடிநெருங்கக்
குடிநெருங்கி யுளதவ்வூர்.
| [5] |
மற்றவ்வூர்ப் புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றியபைங் கொடிச்சுரைமேற்
படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல
நிறைந்துளதோர் புலைப்பாடி.
| [6] |
கூருகிர்மெல் லடியளகின்
குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயில்முன் றிலில்நின்ற
வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக்
கருஞ்சிறார் கவர்ந்தோட
ஆர்சிறுமென் குரைப்படக்கும்
அரைக்கசைத்த இருப்புமணி.
| [7] |
வன்சிறுதோல் மிசையுழத்தி
மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல்
மென்சினைய வஞ்சிகளும்
விசிப்பறைதூங் கினமாவும்
புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
| [8] |
செறிவலித்திண் கடைஞர்வினைச்
செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங்
குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி
விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர்
நெற்குறுபாட் டொலிபரக்கும்.
| [9] |
புள்ளுந்தண் புனற்கலிக்கும்
பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத்
தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும்.
| [10] |
இப்படித்தா கியகடைஞர்
இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்தஉணர் வொடும்வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை
யான்றதொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார்
எனவொருவர் உளரானார்.
| [11] |
பிறந்துணர்வு தொடங்கியபின்
பிறைக்கண்ணிப் பெருத்தகைபால்
சிறந்தபெருங் காதலினால்
செம்மைபுரி சிந்தையராய்
மறந்தும்அயல் நினைவின்றி
வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே
அடித்தொண்டின் நெறிநின்றார்.
| [12] |
ஊரில்விடும் பறைத்துடவை உணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார்
தலைநின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப்
படையண்ணல் கோயில்தொறும்
பேரிகையே முதலாய
முகக்கருவி பிறவினுக்கும்.
| [13] |
போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.
| [14] |
இவ்வகையால் தந்தொழிலின்
இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார் அந்நாளில்.
| [15] |
திருப்புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டங்
காதனூர் தனில்நின்றும்
வருத்தமுறுங் காதலினால்
வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
| [16] |
சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.
| [17] |
சிவலோகம் உடையவர்தம்
திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம்
பணிவிட்டுப் பணிந்தெழுந்து
சுவலோடு வாரலையப்
போவார்பின் பொருசூழல்
அவலோடும் அடுத்ததுகண்
டாதரித்துக் குளந்தொட்டார்.
| [18] |
வடங்கொண்ட பொன்னிதழி
மணிமுடியார் திருவருளால்
தடங்கொண்ட குளத்தளவு
சமைத்ததற்பின் தம்பெருமான்
இடங்கொண்ட கோயில்புறம்
வலங்கொண்டு பணிந்தெழுந்து
நடங்கொண்டு விடைகொண்டு
தம்பதியில் நண்ணினார்.
| [19] |
இத்தன்மை ஈசர்மகிழ்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து
விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத்
திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர்
வொழியாது வந்துதிப்ப.
| [20] |
அன்றிரவு கண்துயிலார்
புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை
உறுகுலத்தோ டிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான்
ஏவலெனப் போக்கொழிவார்
நன்றுமெழுங் காதல்மிக
நாளைப்போ வேன்என்பார்.
| [21] |
நாளைப்போ வேன்என்று
நாள்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த
பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத் தெழும்பழனம்
சூழ்தில்லை மருங்கணைவார்.
| [22] |
செல்கின்ற போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடையோதும்
மடங்கள்நெருங் கினவுங்கண்
டல்குந்தங் குலம்நினைந்தே
அஞ்சியணைந் திலர்நின்றார்.
| [23] |
நின்றவர்அங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ்
எயில்திருவா யிலைப்புக்கால்
குன்றனைய மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரம்அங்
குளவென்பார் ஆகுதிகள்.
| [24] |
இப்பரிசா யிருக்கவெனக்
கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின்
ஆராத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க
உள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை
வலங்கொண்டு செல்கின்றார்.
| [25] |
இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார்.
| [26] |
இன்னல்தரும் இழிபிறவி
இதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
முறுவலொடும் அருள்செய்வார்.
| [27] |
இப்பிறவி போய்நீங்க
எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன்னணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி
அம்பலத்தே மேவினார்.
| [28] |
தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில்
முன்பச்ச முடன்ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த
பணிசெய்வோம் என்றேத்தித்
தம்பரிவு பெருகவருந்
திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
| [29] |
ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.
| [30] |
மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.
| [31] |
கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.
| [32] |
செந்தீமேல் எழும்பொழுது
செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார்
அந்தரதுந் துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்
வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர்மந் தாரத்தின்
பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.
| [33] |
திருவுடைய தில்லைவாழ்
அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும்
பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றில்
ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
போவாராம் மறைமுனிவர்.
| [34] |
தில்லைவாழ் அந்தணரும்
உடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார்
கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லைபோய் உள்புகுந்தார்
உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார்
யாவர்களுங் கண்டிலரால்.
| [35] |
அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
| [36] |
மாசுடம்பு விடத்தீயில்
மஞ்சனஞ்செய் தருளிஎழுந்
தாசில்மறை முனியாகி
அம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித்
திருக்குறிப்புத் தொண்டர்வினைப்
பாசம்அற முயன்றவர்தம்
திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.
| [37] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.190  
திருக் குறிப்புத் தொண்ட
பண் - ( )
ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
| [1] |
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.
| [2] |
நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.
| [3] |
ஆணை யாமென நீறுகண் டடிச்சேரன் என்னும்
சேணு லாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.
| [4] |
கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால்
பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.
| [5] |
தாவில் செம்மணி அருவியா றிழிவன சாரல்
பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம்
வாவி நீள்கயல் வரம்பிற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
| [6] |
குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம்
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ்
சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
| [7] |
கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
| [8] |
தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி
தூநெ லன்னம்நெய் கன்னலின் கனியதண் டுறையூர்
மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.
| [9] |
குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
| [10] |
மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும்
பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவுஞ் சுரிகுழல் தோகை.
| [11] |
அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
| [12] |
பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும்
ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமுங்
கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி.
| [13] |
அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.
| [14] |
கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள்
நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப்
பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.
| [15] |
சொல்லும் எல்லையின் புறத்தன
துணர்ச்சுரும் பலைக்கும்
பல்பெ ரும்புனல் கானியா
றிடையிடை பரந்து
கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல்
படர்ந்தபூம் பந்தர்
முல்லை மென்புதல் முயலுகைத்
தடங்குநீள் முல்லை.
| [16] |
பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத்
தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.
| [17] |
மங்கை யர்க்குவாள் விழியிணை
தோற்றமான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கிடை
மலர்க்கொடி யெங்கும்
அங்கண் முல்லையின் தெய்வமென்
றருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால்தொழும் சிவன்மகிழ்
திருமுல்லை வாயில்.
| [18] |
நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே
ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
| [19] |
வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம்
வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப்
பாச டைத்தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
| [20] |
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலஞ் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி.
| [21] |
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
| [22] |
அனைய வாகிய நதிபரந்
தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
வழங்குவ வியன்கால்.
| [23] |
மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான
வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.
| [24] |
வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
| [25] |
தளைத்த டம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின்
இளைத்த சூல்வளை கண்படுப் பனஇடை யெங்கும்
விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை யூர்கோள்
வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.
| [26] |
ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு
பூங்க ரும்பயல் மிடைவன பூகம்அப் பூகப்
பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு
தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை.
| [27] |
நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும்
மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.
| [28] |
தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி
இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த
மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும்
செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.
| [29] |
தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
| [30] |
அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம்
பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் பூம்பணை மருதம்.
| [31] |
விரும்பு மேன்மையென் பகர்வது விரிதிரை நதிகள்
அருங்க ரைப்பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர்
மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோமற்ற மருதம்.
| [32] |
பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை உடன்தட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலும்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
| [33] |
தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
| [34] |
கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம்
வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.
| [35] |
சுழிப்பு னற்கடல் ஓதமுன் சூழ்ந்துகொண் டணிய
வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரைமலர்க் கண்சுரும் புண்ணக்
கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை.
| [36] |
காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும்முண் டகங்கள்
ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னந்
தாய முன்துறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது.
| [37] |
வாம்பெ ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில்
தாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக்
காம்பின் நேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய்
தேம்பொ திந்தசின் மழலைமென் மொழியசெவ் வழியாழ்.
| [38] |
மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கலென் றெழுதும்
ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த
திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.
| [39] |
மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப்
பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால்
நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.
| [40] |
கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.
| [41] |
மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான்
கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய்
அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.
| [42] |
புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
| [43] |
கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச்
சிவலுஞ் சேவலும் மாறியுஞ் சிறுகழிச் சியர்கள்
அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும்
உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள ஒழுக்கம்.
| [44] |
அயல்ந றும்புற வினில்இடைச் சியர்அணி நடையும்
வியன்நெ டும்பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிரெதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.
| [45] |
மீளும் ஓதம்முன் கொழித்தவெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென்
தோளு ழத்தியர் மகளிர்மா றாடிமுன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.
| [46] |
ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித்
தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத்
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.
| [47] |
இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.
| [48] |
ஆன தொன்னகர் அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட்
டூன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
| [49] |
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.
| [50] |
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.
| [51] |
நங்கை உள்நிறை காதலை நோக்கி
நாய கன்திரு வுள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற
அடுத்த தென்கொல்நின் பாலென வினவ
இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின்
இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றதென் னாசையென் றிறைஞ்சிப்
போக மார்த்தபூண் முலையினாள் போற்ற.
| [52] |
தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால் யாவ ருந்தனை யடைவது மண்மேல்
என்று முள்ளது காஞ்சிமற் றதனுள்
மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென்
றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா
விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.
| [53] |
ஏத மில்பல யோனிஎண் பத்து
நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந் தருளும்அக் கருணைப்
பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப் போது நீர்மையில் தொழுதனள் போதப்
பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி
மாத வம்புரிந் தருளுதற் கமைந்த
வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
| [54] |
துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர்வரும் பதுமமா நாகந் தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே
அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய்
அடிய னேன்உறை பிலமத னிடையே
மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன
மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.
| [55] |
அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத்
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால்
ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
| [56] |
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்த ரந்திரு வாக்கினில் நிகழ்வ
தஞ்செ ழுத்துமே யாகஆ ளுடைய
அம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித்
தஞ்ச மாகிய அருந்தவம் புரியத்
தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில்
வந்து தோன்றினார் மலைமகள் காண.
| [57] |
கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம்
கம்பம் மேவிய தம்பெரு மானை
வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ
வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக் கொண்ட காதலின் விருப்பள வின்றிக்
குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு
தொண்டை யங்கனி வாயுமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
| [58] |
உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே தலைநின்
றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்
கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
| [59] |
கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
| [60] |
கரந்த ரும்பயன் இதுவென உணர்ந்து கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால்
நிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி
நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி
மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால்
சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந்
திருவு ளங்கொளப் பெருகிய தன்றே.
| [61] |
நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில்
காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில்
கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.
| [62] |
அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்
மீது வந்துறும் எனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காதல்
உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை
தண்ணி லாமலர் வேணி யினாரைத்
தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
| [63] |
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.
| [64] |
கம்பர் காதலி தழுவமெய் குழையக் கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான
உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம்
உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி
எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார்
என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த
வம்பு லாமலர் நிறையவிண் பொழியக்
கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.
| [65] |
பூதி யாகிய புனிதநீ றாடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செய்
அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
| [66] |
கோதி லாஅமு தனையவள் முலைக்குக்
குழைந்த தம்மண வாளநற் கோலம்
மாது வாழவே காட்டிமுன் நின்று
வரங்கள் வேண்டுவ கொள்கஎன் றருள
வேத காரண ராயஏ கம்பர்
விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த
தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி.
| [67] |
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக் கொண்ட இற்றையென் பூசனை யின்னும்
குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள வண்டு வார்குழல் மலைமகள் கமல வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல் முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும் முடிவ தில்லைநம் பாலென மொழிய.
| [68] |
மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி
ஈறி லாதஇப் பதியினு ளெல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத் தருளப்
பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.
| [69] |
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகப ரத்திரு நாழிநெல் லளித்துக்
கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங்
காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந் தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம்
தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.
| [70] |
எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
மனைய றம்பெருக் குங்கரு ணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.
| [71] |
அலகில் நீள்தவத் தறப்பெருஞ் செல்வி
அண்ட மாந்திரு மனைக்கிடுந் தீபம்
உலகில் வந்துறு பயனறி விக்க
ஓங்கும் நாண்மலர் மூன்றுட னொன்று
நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும்
நீடு தொன்மையால் நிறைந்தபே ருலகம்
மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.
| [72] |
தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ்
சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின்
பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி
வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ்
வைய கந்தனக் கெய்திய படியாய்
ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும்
உள்ள தொன்றுல காணியென் றுளதால்.
| [73] |
அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும்
அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது
வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால்
சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ்
சாயை மாறிய தன்றிசை மயக்கம்
இந்த மாநிலத் தவரெலாங் காண
என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.
| [74] |
கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு
சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும்
திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங்கதிர் மீதெழும் போதும் மறித்து மேல்கடல் தலைவிழும் போதும்
தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித்
தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
| [75] |
மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து
மாறி லாநிய மந்தலை நின்று
முறைமை யால்வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய
நீடு காமங்கள் அவரவர்க் கருளி
இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள்
எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.
| [76] |
மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும்
தான மன்றியும் தனுவெழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
| [77] |
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம் நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
| [78] |
தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
தமனி யச்செழுந் தாமரைத் தடமும்
நீள வார்புனல் குடதிசை யோடி
நீர்க ரக்குமா நதியுடன் நீடு
நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம்
நண்ப கல்தரும் பாடலம் அன்றிக்
காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற்
கண்ப டாதகா யாப்புளி உளதால்.
| [79] |
சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
டனைய ஆகிய அதிசயம் பலவால்.
| [80] |
அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரையிருள் திரியும்
மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப
நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின்
நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை
எஞ்ச லின்றிமுன் திரியவுங் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
| [81] |
சத்தி தற்பர சித்தயோ கிகளும்
சாத கத்தனித் தலைவ ரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள்
நீடு வாழ்திருப் பாடியும் அனேகஞ் சித்தர் விஞ்சையர் இயக்கர்கந் தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி
வித்த கக்கரி மேல்கொளுங் காரி
மேவு செண்டணை வெளியுமொன் றுளதால்.
| [82] |
வந்த டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது
சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள்
சேரும் யோகபீ டமும்உள தென்றும்
அந்த மில்அறம் புரப்பவள் கோயில்
ஆன போகபீ டமும்உள தாகும்
எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை
எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.
| [83] |
தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும்
சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை
வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும்
மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித்
தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர் சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால்
ஆண்ட நாயகி சமயங்க ளாறும்
அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.
| [84] |
என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.
| [85] |
தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப்
பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும் திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ
வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க
வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.
| [86] |
கொந்தலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர்
கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க
மந்திரமா மதிலகழி அவர்தாந் தந்த
வாய்மைஆ கமவிதியின் வகுப்புப் போலும்
அந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி
அடைகளங்கம் அறுப்பரிதென் றறிந்து சூழ
வந்தணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.
| [87] |
ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல
ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால்
தீங்குநெறி அடையாத தடையு மாகிச்
செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும்
தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.
| [88] |
மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு
மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த
ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும் அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக் கூறுபடு நவகண்ட மன்றி மல்கக்
கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன
வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன
விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.
| [89] |
பாகமருங் கிருபுடையும் உயர்ந்து நீண்ட
படரொளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல்
தோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின்
சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி
மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு
மருங்குதா ரகைஅலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை
மேல்நதிகள் பலமண்மேல் விளங்கி ஓங்கும்.
| [90] |
கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு
கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக்
கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை
குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே
அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி
அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி
வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும்
மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்.
| [91] |
மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட
மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும்
புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால்
வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர்
வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட்
டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகி லாத.
| [92] |
முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகும்
முழுப்பளிங்கின் மாளிகைக்கள் முற்றுஞ் சுற்றும் நிகரில்சரா சரங்களெல்லாம் நிழலி னாலே
நிறைதலினால் நிறைதவஞ்செய் இமயப் பாவை
நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட
நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோ னிகளெல்லாம் அமைத்து வைத்த
அரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்.
| [93] |
பொற்களப மாளிகைமேல் முன்றில் நின்று
பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி யாடும்
விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவுதுணை மேவு மாதர்
அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்தும்
அணிமணிச்சே டியர்தொகுக்கும் அவையு மாகி
நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை நவமணிமா ரியும்பொழியும் நாளும் நாளும்.
| [94] |
பூமகளுக் குறையுளெனுந் தகைய வான
பொன்மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மாமகரக் குழைமகளிர் மைந்தர் அங்கண்
வந்தேறு முன்நறுநீர் வண்ட லாடத்
தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும்
சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த
காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில்க ளாகிக் காட்டும்.
| [95] |
இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல
இலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச்
சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணும்
தெரிவரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடைநின் றிழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே றறிவரிதாந் தகைமையன அனேகம் அங்கண்.
| [96] |
அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத்
தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட
விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை
விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங்
குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும்
குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம் பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும்
பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.
| [97] |
வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத
அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும்
அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர்
உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ
உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.
| [98] |
அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான
ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப்
பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும்
பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும்
வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில்
திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத்
தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
| [99] |
அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்
தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண்
புரசைமதக் கரிகளொடு புரவி யேறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும்
விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும்
வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர்
நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும்
நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
| [100] |
வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க
வயினிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம்
வனப்புடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவுங்
கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப் பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப்
பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
| [101] |
விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி மழஇளவெண் திங்கள்புனை கம்பர் செம்பொன் மலைவல்லிக் களித்தவள ருணவின் மூலந்
தொழவுலகு பெறுமவள்தான் அருளப் பெற்றுத்
தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை
உழவுதொழி லாற்பெருக்கி உயிர்க ளெல்லாம்
ஓங்கவருந் தருமவினைக் குளரால் என்றும்.
| [102] |
ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்வில் தம்மில்
உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாம்
தந்தகைமைக் கேற்றதனி யிடங்கள் மேவி
ஆங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற
அடுத்தவினைத் தொழில்முறைமை வழாமை நீடு
பாங்குவளர் இருக்கைநிலை பலவும் எல்லாம்
பண்புநீ டியவுரிமைப் பால அன்றே.
| [103] |
ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய
சோதி நீள்மணித் தூபமுந் தீபமும்
கோதில் பல்லிய முங்கொடி யும்பயில்
வீதி நாளும் ஒழியா விழாவணி.
| [104] |
வாயில் எங்கணுந் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ்முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர்சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.
| [105] |
வேத வேதியர் வேள்வியே தீயன
மாத ரோதி மலரே பிணியன
காதல் வீதிவி லக்கே கவலைய
சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.
| [106] |
சாய லார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன.
| [107] |
அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன
வண்ண நீள்மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
| [108] |
வென்றி வானவர் தாம்விளை யாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.
| [109] |
புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்
பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெலாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.
| [110] |
அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.
| [111] |
மண்ணின்மிசை வந்ததற்பின்
மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவிப்பார்
புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத்
தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
| [112] |
தேரொலிக்க மாவொலிக்கத்
திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி
ஊரொலிக்கும் பெருவண்ணார்
எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அராவிரைக்க
நிலாமுகிழ்க்குந் திருமுடியார்
பேரொலிக்க உருகுமவர்க்
கொலிப்பர்பெரு விருப்பினொடும்.
| [113] |
. தேசுடைய மலர்க்கமலச்
சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள்மாசு
கழிப்பார்போல் தொல்லைவினை
ஆசுடைய மலம்மூன்றும்
அணையவரும் பெரும்பிறவி
மாசுதனை விடக்கழித்து
வருநாளில் அங்கொருநாள்.
| [114] |
பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.
| [115] |
சீதமலி காலத்துத்
திருக்குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்துமிக
அழுக்கடைந்த கந்தையுடன்
மாதவவே டந்தாங்கி
மாலறியா மலரடிகள்
கோதடையா மனத்தவர்முன்
குறுநடைகள் கொளக்குறுகி.
| [116] |
திருமேனி வெண்ணீறு
திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனஅழுக்குக்
கந்தையுடன் எழுந்தருளி
வருமேனி அருந்தவரைக்
கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண்
டுருமேவும் மயிர்ப்புளகம்
உளவாகப் பணிந்தெழுந்தார்.
| [117] |
எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.
| [118] |
இக்கந்தை அழுக்கேறி
எடுக்கவொணா தெனினும்யான்
மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து
விடமாட்டேன் மேல்கடற்பால்
அக்குன்றம் வெங்கதிரோன்
அணைவதன்முன் தருவீரேல்
கைக்கொண்டு போய்ஒலித்துக்
கொடுவாருங் கடிதென்றார்.
| [119] |
தந்தருளும் இக்கந்தை
தாழாதே ஒலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னம்
தருகின்றேன் எனஅவரும்
கந்தையிது ஒலித்துணக்கிக்
கடிதின்றே தாரீரேல்
இந்தவுடற் கிடர்செய்தீர்
என்றுகொடுத் தேகினார்.
| [120] |
குறித்தபொழு தேயொலித்துக்
கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண்
மாசெறிந்து மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவில்
பெரும்பகல்போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால்
மழையெழுந்து பொழிந்திடுமால்.
| [121] |
திசைமயங்க வெளியடைத்த
செறிமுகிலின் குழாமிடைந்து
மிசைசொரியும் புனல்தாரை
விழிநுழையா வகைமிடைய
அசைவுடைய மனத்தன்பர்
அறிவுமறந் தருந்தவர்பால்
இசைவுநினைந் தழிந்தினியான்
என்செய்கேன் எனநின்றார்.
| [122] |
ஓவாதே பொழியுமழை
ஒருகால்விட் டொழியுமெனக்
காவாலி திருத்தொண்டர்
தனிநின்றார் விடக்காணார்
மேவார்போல் கங்குல்வர
மெய்குளிரும் விழுத்தவர்பால்
ஆஆ என் குற்றேவல்
அழிந்தவா எனவிழுந்தார்.
| [123] |
விழுந்தமழை ஒழியாது
மெய்த்தவர்சொல் லியஎல்லை
கழிந்ததுமுன் பொலித்துமனைக்
காற்றேற்க அறிந்திலேன்
செழுந்தவர்தந் திருமேனி
குளிர்காணுந் தீங்கிழைத்த
தொழும்பனேற் கினியிதுவே
செயலென்று துணிந்தெழுவார்.
| [124] |
கந்தைபுடைத் திடஎற்றுங்
கற்பாறை மிசைத்தலையைச்
சிந்தவெடுத் தெற்றுவன்என்
றணைந்துசெழும் பாறைமிசைத்
தந்தலையைப் புடைத்தெற்ற
அப்பாறை தன்மருங்கு
வந்தெழுந்து பிடித்ததணி
வளைத்தழும்பர் மலர்ச்செங்கை.
| [125] |
வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.
| [126] |
முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.
| [127] |
சீர்நிலவு திருக்குறிப்புத்
தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள்
அறஎறிந்தார் பரிசுரைக்கேன்
பேரருளின் மெய்த்தொண்டர்
பித்தனெனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதனுண்மை
அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
| [128] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.200  
சண்டேசுர நாயனார் புராணம்
பண் - ( )
பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையில்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
| [1] |
செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந்
தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
| [2] |
கோதில் மான்தோல் புரிமுந்நூல்
குலவும் மார்பில் குழைக்குடுமி
ஓது கிடைசூழ் சிறுவர்களும்
உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்குந் தாரகையும்
மதியும் போலப் புணர்மடங்கள்
மீது முழங்கு முகிலொதுங்க
வேத ஒலிகள் முழங்குவன.
| [3] |
யாகம் நிலவும் சாலைதொறும்
மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வருமாலும்
அயனும் ஊரும் படர்சிறைப்புள்
மாகம் இகந்து வந்திருக்கும்
சேக்கை யெனவும் வானவர்கோன்
நாகம் அணையுங் கந்தெனவும்
நாட்டும் யூப ஈட்டமுள.
| [4] |
தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்
ஓம தேனுச் செல்வனவும்
தாம்பா டியசா மங்கணிப்போர்
சமிதை யிடக்கொண் டணைவனவும்
பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி
மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம்பான் மையினில் விளங்குவன
அணிநீள் மறுகு பலவுமுள.
| [5] |
வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு
மண்ணித் திரைகள் வயல்வரம்பின்
தாழ்வில் தரளஞ் சொரிகுலைப்பால்
சமைத்த யாகத் தடஞ்சாலை
சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள
தொடங்கு சடங்கு முடித்தேறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள்
விண்ணோர் ஏறும் விமானங்கள்.
| [6] |
மடையில் கழுநீர் செழுநீர்சூழ்
வயலில் சாலிக் கதிர்க்கற்றை
புடையில் சுரும்பு மிடைகமுகு
புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலுந் தாமரைநீள்
அலரில் துயிலும் கயல்கள்வழி
நடையில் படர்மென் கொடிமௌவல்
நனையில் திகழுஞ் சினைக்காஞ்சி.
| [7] |
சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக் கியவளவர்
போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்
வருந்தொல் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதிஐந்தின்
ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.
| [8] |
பண்ணின் பயனாம் நல்லிசையும்
பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகொளியும்
கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும்போல்
மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்புடைத்தோ.
| [9] |
பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்
அருமை மணியும் அளித்ததுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளனானான்.
| [10] |
மற்றை மறையோன் திருமனைவி
வாய்ந்த மரபின் வந்துதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத்
தொழிலாள் உலகில் துணைப்புதல்வற்
பெற்று விளங்குந் தவஞ்செய்தாள்
பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள்
பற்றை யெறியும் பற்றுவரச்
சார்பா யுள்ள பவித்திரையாம்.
| [11] |
நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
| [12] |
ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த
சந்த மறைகள் உட்படமுன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை யறிவின் தொடர்ச்சியினால்
முகைக்கும் மலரின் வாசம்போல்
சிந்தை மலர உடன்மலரும்
செவ்வி யுணர்வு சிறந்ததால்.
| [13] |
நிகழும் முறைமை ஆண்டேழும்
நிரம்பும் பருவம் வந்தெய்தப்
புகழும் பெருமை உபநயனப்
பொருவில் சடங்கு முடித்தறிவின்
இகழு நெறிய அல்லாத
எல்லாம் இயைந்த வெனினும்தம்
திகழு மரபின் ஓதுவிக்கும்
செய்கை பயந்தார் செய்வித்தார்.
| [14] |
குலவு மறையும் பலகலையும்
கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவும் உணர்வின் திறங்கண்டு
நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை
ஆடுங் கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில்
தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
| [15] |
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும்மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின்கண்
ஒழியா தூறும் வழியன்பின்
கடனே இயல்பாய் முயற்றிவருங்
காதல் மேன்மேல் எழுங்கருத்தின்
திடநேர் நிற்குஞ் செம்மலார்
திகழு நாளில் ஆங்கொருநாள்.
| [16] |
ஓது கிடையின் உடன்போவார்
ஊர்ஆன் நிரையின் உடன்புக்க
போது மற்றங் கொருபுனிற்றா
போற்றும் அவன்மேன் மருப்போச்ச
யாது மொன்றுங் கூசாதே
யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப
மீது சென்று மிகும்பரிவால்
வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.
| [17] |
பாவுங் கலைகள் ஆகமநூல்
பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அருமறைகள்
மூல மாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருளின்நிலையே
எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி
அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
| [18] |
தங்கும் அகில யோனிகட்கும்
மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள்
எல்லா மென்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர்
கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்துந் தாமுடைய
அல்ல வோநல் ஆனினங்கள்.
| [19] |
ஆய சிறப்பி னால்பெற்ற
அன்றே மன்றுள் நடம்புரியும்
நாய னார்க்கு வளர்மதியும்
நதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல்
விரும்பி யாடி அருளுதற்குத்
தூய திருமஞ் சனம்ஐந்தும்
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
| [20] |
சீலம் உடைய கோக்குலங்கள்
சிறக்குந் தகைமைத் தேவருடன்
கால முழுதும் உலகனைத்தும்
காக்கும் முதற்கா ரணராகும்
நீல கண்டர் செய்யசடை
நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதா ரஞ்செய்யும்
மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
| [21] |
உள்ளுந் தகைமை இனிப்பிறவே
றுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின்
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம்
பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர்
குலமன் றோஇச் சுரபிகுலம்.
| [22] |
என்றின் னனவே பலவும்நினைந்
திதத்தின் வழியே மேய்த்திந்தக்
கன்று பயில்ஆன் நிரைகாக்கும்
இதன்மே லில்லை கடனிதுவே
மன்றுள் ஆடுஞ் சேவடிகள்
வழுத்து நெறியா வதும்என்று
நின்ற ஆயன் தனைநோக்கி
நிரைமேய்ப் பொழிக நீயென்பார்.
| [23] |
யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
| [24] |
கோலும் கயிறும் கொண்டுகுழைக்
குடுமி அலையக் குலவுமான்
தோலும் நூலுஞ் சிறுமார்பில்
துவள அரைக்கோ வணஞ்சுடரப்
பாலும் பயனும் பெருகவரும்
பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவைவேண்டுந்
தனையும் மிசையுந் தலைச்சென்று.
| [25] |
பதவு காலங் களின்மேய்த்தும்
பறித்தும் அளித்தும் பரிவகற்றி
இதமுண் துறையுள் நற்றண்ணீர்
ஊட்டி அச்சம் எதிர்நீக்கி
அதர்நல் லனமுன் செலநீழல்
அமர்வித் தமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல்
உடையோர் இல்லந் தொறுமுய்த்தார்.
| [26] |
மண்ணிக் கரையின் வளர்புறவின்
மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித் திலநீர் மருதத்தண்
டலைசூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச்
சமிதை யுடன்மேல் எரிகொண்டு
நண்ணிக் கங்குல் முன்புகுதும்
நன்னாள் பலவாம் அந்நாளில்.
| [27] |
ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி
மேய இனிய புல்லுணவும்
விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி
எய்த இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடிபெருகிச்
சொரிய முலைகள் சுரந்தனவால்.
| [28] |
பூணுந் தொழில்வேள் விச்சடங்கு
புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவில் முன்னையினும்
அனேக மடங்கு கறப்பனவாய்ப்
பேணுந் தகுதி அன்பால்இப்
பிரம சாரி மேய்த்ததற்பின்
மாணுந் திறத்த வானவென
மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
| [29] |
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள்
அணைந்த மகிழ்ச்சி அளவின்றி
மனைக்கண் கன்று பிரிந்தாலும்
மருவுஞ் சிறிய மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித்
தாயாந் தன்மை நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள்
கறவா மேபால் பொழிந்தனவால்.
| [30] |
தம்மை அணைந்த ஆன்முலைப்பால்
தாமே பொழியக் கண்டுவந்து
செம்மை நெறியே உறுமனத்தில்
திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே
எம்மை உடைய வள்ளலார்
எய்த நினைந்து தெளிந்ததனில்
மெய்ம்மைச் சிவனார் பூசனையை
விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
| [31] |
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
| [32] |
ஆத்தி மலரும் செழுந்தளிரும்
முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து
புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித்
தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில்
கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார்.
| [33] |
நல்ல நவகும் பங்கள்பெற
நாடிக் கொண்டு நாணற்பூங்
கொல்லை இடத்துங் குறைமறைவும்
மேவுங் கோக்கள் உடன்கூட
ஒல்லை யணைந்து பாலாக்கள்
ஒன்றுக் கொருகா லாகவெதிர்
செல்ல அவையுங் கனைத்துமுலை
தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
| [34] |
கொண்டு மடுத்த குடம்நிறையக்
கொணர்ந்து விரும்புங் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல்ஆ
லயத்துள் அவைமுன் தாபித்து
வண்டு மருவுந் திருப்பள்ளித்
தாமங் கொண்டு வரன்முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப்
பாலின் திருமஞ் சனமாட்டி.
| [35] |
மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.
| [36] |
பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான்
உவக்கும் பூசை உறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றில்
தேடா தனஅன் பினில்நிரப்பி
வரும்அந் நெறியே அர்ச்சனைசெய்
தருளி வணங்கி மகிழ்கின்றார்.
| [37] |
இறையோன் அடிக்கீழ் மறையவனார்
எடுத்துத் திருமஞ் சனமாட்டும்
நிறைபூ சனைக்குக் குடங்கள்பால்
நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள்
குறைபா டின்றி மடிபெருகக்
குவிந்த முலைப்பால் குறைவின்றி
மறையோர் மனையின் முன்புதரும்
வளங்கள் பொலிய வைகுமால்.
| [38] |
செயலிப் படியே பலநாளும்
சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற் றதுவே திருவிளையாட்
டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்றிதனைக்
கண்டித் திறத்தை யறியாத
அயல்மற் றொருவன் அப்பதியில்
அந்த ணாளர்க் கறிவித்தான்.
| [39] |
அச்சொற் கேட்ட அருமறையோர்
ஆயன் அறியான் என்றவற்றின்
இச்சை வழியே யான்மேய்ப்பேன்
என்றெம் பசுக்கள் தமைக்கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன்
பொல்லாங் குரைக்க அவன்தாதை
எச்ச தத்தன் தனையழைமின்
என்றார் அவையில் இருந்தார்கள்.
| [40] |
ஆங்கு மருங்கு நின்றார்கள்
அவ்வந் தணன்தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை
அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த
ஓங்கு சபையோர் அவனைப்பார்த்
தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய்
தீங்கு தன்னைக் கேளென்று
புகுந்த பரிசு செப்புவார்.
| [41] |
அந்தண் மறையோர் ஆகுதிக்குக்
கறக்கும் பசுக்க ளானவெலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால்
திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல்
கந்தம் மலிபூம் புனல்மண்ணி
மணலில் கறந்து பாலுகுத்து
வந்த பரிசே செய்கின்றான்
என்றான் என்று வாய்மொழிந்தார்.
| [42] |
மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.
| [43] |
அந்த ணாளர் தமைவிடைகொண்
டந்தி தொழுது மனைபுகுந்து
வந்த பழியொன் றெனநினைந்தே
மகனார் தமக்கு வாய்நேரான்
இந்த நிலைமை அறிவேனென்
றிரவு கழிந்து நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின்
மறைந்து சென்றான் மறைமுதியோன்.
| [44] |
சென்ற மறையோன் திருமகனார்
சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய்
மன்றல் மருவும் புறவின்கண்
மேய்ப்பார் மண்ணி மணற்குறையில்
அன்று திரளக் கொடுசென்ற
அதனை யறிந்து மறைந்தப்பால்
நின்ற குரவின் மிசையேறி
நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
| [45] |
அன்பு புரியும் பிரமசா
ரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணற்கோயில்
ஆக்கி முகைமென் மலர்கொய்து
பின்பு வரும்ஆன் முலைபொழிபால்
பெருகுங் குடங்கள் பேணுமிடந்
தன்பாற் கொணர்ந்து தாபித்துப்
பிறவும் வேண்டு வனசமைத்தார்.
| [46] |
நின்ற விதியின் விளையாட்டால்
நிறைந்த அரும்பூ சனைதொடங்கி
ஒன்றும் உள்ளத் துண்மையினால்
உடைய நாதன் திருமுடிமேல்
மன்றல் விரவுந் திருப்பள்ளித்
தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறைதீம் பாற்குடங்கள்
எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
| [47] |
பரவ மேன்மேல் எழும்பரிவும்
பழைய பான்மை மிகும்பண்பும்
விரவ மேதக் கவர்தம்பால்
மேவும் பெருமை வெளிப்படுப்பான்
அரவம் மேவுஞ் சடைமுடியார்
அருளாம் என்ன அறிவழிந்து
குரவு மேவும் முதுமறையோன்
கோபம் மேவும் படிகண்டான்.
| [48] |
கண்ட போதே விரைந்திழிந்து
கடிது சென்று கைத்தண்டு
கொண்டு மகனார் திருமுதுகில்
புடைத்துக் கொடிதாம் மொழிகூறத்
தொண்டு புரியுஞ் சிறியபெருந்
தோன்ற லார்தம் பெருமான்மேல்
மண்டு காதல் அருச்சனையில்
வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
| [49] |
மேலாம் பெரியோர் பலகாலும்
வெகுண்டோன் அடிக்க வேறுணரார்
பாலார் திருமஞ் சனமாட்டும்
பணியிற் சலியா ததுகண்டு
மாலா மறையோன் மிகச்செயிர்த்து
வைத்த திருமஞ் சனக்குடப்பால்
காலா லிடறிச் சிந்தினான் கையாற்
கடைமைத் தலைநின்றான்.
| [50] |
சிந்தும் பொழுதில் அதுநோக்கும்
சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை யெனவே அறிந்தவன்தன்
தாள்கள் சிந்துந் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்தகோல்
எடுத்தார்க் கதுவே முறைமையினால்
வந்து மழுவா யிடஎறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
| [51] |
எறிந்த அதுவே அர்ச்சனையில்
இடையூ றகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும்
துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூ றகற்றினராய்
முன்போல் அருச்சித் திடப்புகலும்
செறிந்த சடைநீள் முடியாரும்
தேவி யோடும் விடையேறி.
| [52] |
பூத கணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்தேத்த
விமல மூர்த்தி திருவுள்ளம்
காதல் கூர வெளிப்படலும்
கண்டு தொழுது மனங்களித்துப்
பாத மலர்கள் மேல்விழுந்தார்
பத்தி முதிர்ந்த பாலகனார்.
| [53] |
தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம்பொருட்டால்
ஈன்ற தாதை விழவெறிந்தாய்
அடுத்த தாதை இனியுனக்கு
நாம்என் றருள்செய் தணைத்தருளி
மடுத்த கருணை யால்தடவி
உச்சி மோந்து மகிழ்ந்தருள.
| [54] |
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்க அமரர் துதிசெய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
| [55] |
அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
| [56] |
எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப
எங்கும் மலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர்
பாடி ஆடிக் களிபயிலச்
சொல்லார் மறைகள் துதிசெய்யச்
சூழ்பல் லியங்கள் எழச்சைவ
நல்லா றோங்க நாயகமாம்
நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
| [57] |
ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப்
பிள்ளை யார்தந் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்.
| [58] |
வந்து மிகைசெய் தாதைதாள்
மழுவால் துணித்த மறைச்சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்
ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே
தவமா மன்றோ சாற்றுங்கால்.
| [59] |
நேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத்
தீசன் அடியார் பெருமையினை
எல்லா உயிரும் தொழவெடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல்வணங்க
வந்த பிறப்பை வணங்குவாம்
| [60] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.210  
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
பண் - ( )
திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.
| [1] |
தொன்மைமுறை வருமண்ணின்
துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்தின்
நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர்
மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு
முனைப்பாடி வளநாடு.
| [2] |
புனப்பண்ணை மணியினொடும்
புறவின்நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரைசுமந்து
கரைமருங்கு பெரும்பகட்டேர்
இனப்பண்ணை உழும்பண்ணை
எறிந்துலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும்பெண்ணை
மாநதிபாய் வளம்பெருகும்.
| [3] |
காலெல்லாந் தகட்டுவரால்
கரும்பெல்லாங் கண்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி
பரப்பெல்லாங் குலைக்கமுகு
சாலெல்லாந் தரளநிரை
தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லாம் அகில்தூபம்
விருந்தெல்லாந் திருந்துமனை.
| [4] |
கடைஞர்மிடை வயற்குறைத்த
கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய
இழிந்தொழுகு நீத்தமுடன்
புடைபரந்து ஞிமிறொலிப்பப்
புதுப்புனல்போல் மடையுடைப்ப
உடைமடையக் கரும்படுகட்
டியினடைப்ப ஊர்கள்தொறும்.
| [5] |
கருங்கதலிப் பெருங்குலைகள்
களிற்றுக்கைம் முகங்காட்ட
மருங்குவளை கதிர்ச்செந்நெல்
வயப்புரவி முகங்காட்டப்
பெருஞ்சகடு தேர்காட்ட வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க
நெருங்கியசா துரங்கபல
நிகர்ப்பனவாம் நிறைமருதம்.
| [6] |
நறையாற்றுங் கமுகுநவ
மணிக்கழுத்தி னுடன்கூந்தல்
பொறையாற்றா மகளிரெனப்
புறம்பலைதண் டலைவேலித்
துறையாற்ற மணிவண்ணச் சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை
நிறையாற்று நீர்க்கொழுந்து
படர்ந்தேறு நிலைமையதால்.
| [7] |
மருமேவு மலர்மேய
மாகடலின் உட்படியும்
உருமேகம் எனமண்டி உகைத்தகருங் கன்றுபோல்
வருமேனிச் செங்கண்வரால்
மடிமுட்டப் பால்சொரியுங்
கருமேதி தனைக்கொண்டு
கரைபுரள்வ திரைவாவி.
| [8] |
மொய்யளிசூழ் நிரைநீல
முழுவலயங் களின்அலையச்
செய்யதளிர் நறுவிரலிற்
செழுமுகையின் நகஞ்சிறப்ப
மெய்யொளியின் நிழற்காணும்
ஆடியென வெண்மதியை
வையமகள் கையணைத்தால்
போலுயர்வ மலர்ச்சோலை.
| [9] |
எயிற்குலவும் வளம்பதிகள்
எங்குமணந் தங்கும்வயல்
பயிர்க்கண்வியல் இடங்கள்பல
பரந்துயர்நெற் கூடுகளும்
வெயிற்கதிர்மென் குழைமகளிர்
விரவியமா டமும்மேவி
மயில்குலமும் முகிற்குலமும்
மாறாட மருங்காடும்.
| [10] |
மறந்தருதீ நெறிமாற
மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால்
நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித்
திறம்பாடுஞ் சீர்ப்பாடு.
| [11] |
இவ்வகைய திருநாட்டில்
எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும் மேன்மையன ஆங்கவற்றுள்
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்குந்
திருவாமூர் திருவாமூர்.
| [12] |
ஆங்குவன முலைகள்சுமந்
தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள்
இரங்குவன மணிக்காஞ்சி
ஓங்குவன மாடநிரை
யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி
நெருங்குவன பெருங்குடிகள்.
| [13] |
மலர்நீலம் வயல்காட்டும்
மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும்
அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்.
| [14] |
தலத்தின்கண் விளங்கியஅத்
தனிப்பதியில் அனைத்துவித
நலத்தின்கண் வழுவாத
நடைமரபிற் குடிநாப்பண்
விலக்கின்மனை ஒழுக்கத்தின்
மேதக்க நிலைவேளாண்
குலத்தின்கண் வரும்பெருமைக்
குறுக்கையர்தங் குடிவிளங்கும்.
| [15] |
அக்குடியின் மேல்தோன்றல்
ஆயபெருந் தன்மையினார்
மிக்கமனை அறம்புரிந்து
விருந்தளிக்கும் மேன்மையினார்
ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின்
உளரானார் உளரானார்
திக்குநில வும்பெருமை
திகழவரும் புகழனார்.
| [16] |
புகழனார் தமக்குரிமைப்
பொருவில்குலக் குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த
மாதினியார் மணிவயிற்றில்
நிகழுமலர்ச் செங்கமல
நிரையிதழின் அகவயினில்
திகழவருந் திருவனைய
திலகவதி யார்பிறந்தார்.
| [17] |
திலகவதி யார்பிறந்து
சிலமுறையாண் டகன்றதற்பின்
அலகில்கலைத் துறைதழைப்ப
அருந்தவத்தோர் நெறிவாழ
உலகில்வரும் இருள்நீக்கி
ஒளிவிளங்கு கதிர்போல்பின்
மலருமருள் நீக்கியார்
வந்தவதா ரஞ்செய்தார்.
| [18] |
மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனார்
காதலனார் உதித்ததற்பின் கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப
விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற
இளங்குழவிப் பதங்கடந்தார்.
| [19] |
மருணீக்கி யார்சென்னி
மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
கலைபயிலத் தொடங்குவித்தார்.
| [20] |
தந்தையார் களிமகிழ்ச்சி
தலைசிறக்கும் முறைமையினால்
சிந்தைமலர்ந் தெழும்உணர்வில்
செழுங்கலையின் திறங்களெல்லாம்
முந்தைமுறை மையிற்பயின்று
முதிரஅறி வெதிரும்வகை
மைந்தனார் மறுவொழித்த
இளம்பிறைபோல் வளர்கின்றார்.
| [21] |
அந்நாளில் திலகவதி
யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக ஒத்தகுல
முதல்வேளாண் குடித்தலைவர்
மின்னார்செஞ் சடையண்ணல்
மெய்யடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணிமவுலிப்
புரவலன்பால் அருளுடையார்.
| [22] |
ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.
| [23] |
அணங்கனைய திலகவதி
யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக்
கோதில்சீர்ப் புகழனார்
பணங்கொளர வகல்அல்குல் பைந்தொடியை மணம்நேர்ந்தார்.
| [24] |
கன்னிதிருத் தாதையார்
மணமிசைவு கலிப்பகையார்
முன்னணைந்தார் அறிவிப்ப
வதுவைவினை முடிப்பதன்முன்
மன்னவற்கு வடபுலத்தோர் மாறேற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான்
அவ்வினைமேல் அவரகன்றார்.
| [25] |
வேந்தற்குற் றுழிவினைமேல்
வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையும்
உடன்கொண்டு சிலநாளில்
காய்ந்தசினப் பகைப்புலத்தைக்
கலந்துநெடுஞ் சமர்க்கடலை
நீந்துவார் நெடுநாள்கள்
நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.
| [26] |
ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார் தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து விண்ணுலகில் சென்றடைந்தார்.
| [27] |
மற்றவர்தாம் உயிர்நீப்ப
மனைவியார் மாதினியார்
சுற்றமுடன் மக்களையும் துகளாக வேநீத்துப்
பெற்றிமையால் உடனென்றும்
பிரியாத உலகெய்தும்
கற்புநெறி வழுவாமல்
கணவனா ருடன்சென்றார்.
| [28] |
தாதையா ரும்பயந்த
தாயாரும் இறந்ததற்பின்
மாதரார் திலகவதி
யாரும்அவர் பின்வந்த
காதலனார் மருணீக்கி
யாரும்மனக் கவலையினால்
பேதுறுநற் சுற்றமொடும்
பெருந்துயரில் அழுந்தினார்.
| [29] |
ஒருவாறு பெருங்கிளைஞர்
மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச்
செய்கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்கா
மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.
| [30] |
வெம்முனைமேற் கலிப்பகையார் வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி
அமருலகம் ஆள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த
பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேல் திருவனைய
திலகவதி யார்கேட்டார்.
| [31] |
எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.
| [32] |
அந்நிலையில் மிகப்புலம்பி
அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட்
டேகுவீர் எனில்யானும்
முன்னம் உயிர் நீப்பனென
மொழிந்திடரின் அழுந்தினார்.
| [33] |
தம்பியார் உளராக
வேண்டுமென வைத்ததயா
உம்பருல கணையவுறு
நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்கா
தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து
திலகவதி யாரிருந்தார்.
| [34] |
மாசின்மனத் துயரொழிய
மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை
கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேல் புகழ்விளங்க
நிதியளித்துக் கருணையினால்
ஆசில்அறச் சாலைகளும்
தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்.
| [35] |
காவளர்த்தும் குளந்தொட்டும்
கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன
மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக
நல்கியும்நா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத
ஈகைவினைத் துறைநின்றார்.
| [36] |
நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.
| [37] |
பாடலிபுத் திரமென்னும்
பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர்
மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறியிதுவே
எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக்
குறிபலவுங் கொளுவினார்.
| [38] |
அங்கவரும் அமண்சமயத்
தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே
அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுறும் உடற்சமணர்
சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாந்தரும
சேனரெனும் பெயர்கொடுத்தார்.
| [39] |
அத்துறையின் மீக்கூரும்
அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தவுணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.
| [40] |
அந்நெறியின் மிக்கார்
அவரொழுக ஆன்றதவச்
செந்நெறியின் வைகும்
திலகவதி யார்தாமும்
தொன்னெறியின் சுற்றத்
தொடர்பொழியத் தூயசிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன்தாள் நண்ணுவார்.
| [41] |
பேராத பாசப் பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.
| [42] |
சென்றுதிரு வீரட்டா
னத்திருந்த செம்பவளக்
குன்றை அடிபணிந்து
கோதில் சிவசின்னம்
அன்று முதல்தாங்கி
ஆர்வமுறத் தம்கையால்
துன்று திருப்பணிகள்
செய்யத் தொடங்கினார்.
| [43] |
புலர்வதன்முன் திருவலகு
பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால்
நன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து
மாலைகளும் தொடுத்தமைத்துப்
பலர்புகழும் பண்பினால்
திருப்பணிகள் பலசெய்தார்.
| [44] |
நாளும்மிகும் பணிசெய்து
குறைந்தடையும் நன்னாளில்
கேளுறும்அன் புறவொழுகுங் கேண்மையினார் பின்பிறந்தார்
கோளுறுதீ வினைஉந்தப்
பரசமயங் குறித்ததற்கு
மூளுமனக் கவலையினால்
முற்றவரும் துயருழந்து.
| [45] |
தூண்டுதவ விளக்கனையார்
சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில்
அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக்
குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும்
விண்ணப்பஞ் செய்தனரால்.
| [46] |
தவமென்று பாயிடுக்கித்
தலைபறித்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வான்
வீழாமே அருளுமெனச்
சிவமொன்று நெறிநின்ற
திலகவதி யார்பரவப்
பவமொன்றும் வினைதீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார்.
| [47] |
மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் எனஅருளி.
| [48] |
பண்டுபுரி நற்றவத்துப்
பழுதினள விறைவழுவும்
தொண்டரைஆ ளத்தொடங்கும்
சூலைவே தனைதன்னைக்
கண்தருநெற் றியரருளக்
கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைஅவர்
வயிற்றினிடைப் புக்கதால்.
| [49] |
அடைவில்அமண் புரிதரும
சேனர்வயிற் றடையும்அது
வடஅனலுங் கொடுவிடமும்
வச்சிரமும் பிறவுமாம்
கொடியவெலாம் ஒன்றாகும்
எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கிஅமண்
பாழியறை யிடைவீழ்ந்தார்.
| [50] |
அச்சமயத் திடைத்தாம்முன்
அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால் தடுத்திடவும்
மேன்மேலும் மிகமுடுகி
உச்சமுற வேதனைநோய்
ஓங்கியெழ ஆங்கவர்தாம்
நச்சரவின் விடந்தலைக்கொண்
டெனமயங்கி நவையுற்றார்.
| [51] |
அவர்நிலைமை கண்டதற்பின்
அமண்கையர் பலர்ஈண்டிக்
கவர்கின்ற விடம்போல்முன்
கண்டறியாக் கொடுஞ்சூலை
இவர்தமக்கு வந்ததினி
யாதுசெயல் என்றழிந்தார்
தவமென்று வினைபெருக்கிச்
சார்பல்லா நெறிசார்வார்.
| [52] |
புண்தலைவன் முருட்டமணர்
புலர்ந்துசெயல் அறியாது
குண்டிகைநீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டுமிகப் பீலிகொடு
கால்அளவுந் தடவிடவும்
பண்டையினும் நோவுமிகப்
பரிபவத்தால் இடருழந்தார்.
| [53] |
தாவாத புகழ்த்தரும
சேனருக்கு வந்தபிணி
ஓவாது நின்றிடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆஆநாம் என்செய்கோம்
என்றழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இதுநம்மால்
போக்கரிதாம் எனப்புகன்று.
| [54] |
குண்டர்களுங் கைவிட்டார்
கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக மேன்மேலும்
முடுகுதலால் மதிமயங்கிப்
பண்டையுற வுணர்ந்தார்க்குத்
திலகவதி யார்உளராக்
கொண்டவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்புணர்த்த.
| [55] |
ஆங்கவன்போய்த் திருவதிகை
தனையடைய அருந்தவத்தார்
பூங்கமழ்நந் தனவனத்தின்
புறத்தணையக் கண்டிறைஞ்சி
ஈங்கியான் உமக்கிளையார்
ஏவலினால் வந்ததெனத்
தீங்குளவோ எனவினவ
மற்றவனும் செப்புவான்.
| [56] |
கொல்லாது சூலைநோய்
குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்
இதுசெயல்என் முன்பிறந்த
நல்லாள்பால் சென்றியம்பி
நான்உய்யும் படிகேட்டிங்
கல்லாகும் பொழுதணைவாய்
என்றார்என் றறிவித்தான்.
| [57] |
என்றவன்முன் கூறுதலும்
யான்அங்குன் னுடன்போந்து
நன்றறியார் அமண்பாழி
நண்ணுகிலேன் எனும்மாற்றம்
சென்றவனுக் குரையென்று
திலகவதி யார்மொழிய
அன்றவனும் மீண்டுபோய்ப்
புகுந்தபடி அவர்க்குரைத்தான்.
| [58] |
அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென.
| [59] |
எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்.
| [60] |
பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்.
| [61] |
சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.
| [62] |
வந்தணைந்து திலகவதி
யார்அடிமே லுறவணங்கி
நந்தமது குலஞ்செய்த
நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தவுடல் கொடுஞ்சூலைக்
கிடைந்தடைந்தேன் இனிமயங்கா
துய்ந்துகரை யேறுநெறி
உரைத்தருளும் எனவுரைத்து.
| [63] |
தாளிணைமேல் விழுந்தயருந்
தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான்
அருள்நினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்
குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர்
எழுந்திரீர் எனமொழிந்தார்.
| [64] |
மற்றவ்வுரை கேட்டலுமே
மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி
எழுந்துதொழ உயர்தவத்தோர்
கற்றைவே ணியர்அருளே
காணுமிது கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து
பணிசெய்வீர் எனப்பணித்தார்.
| [65] |
என்றபொழு தவரருளை
எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்றதபோ தனியாரும்
நின்மலன்பேர் அருள்நினைந்து
சென்றுதிரு வீரட்டம்
புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை
அஞ்செழுத்தோ திக்கொடுத்தார்.
| [66] |
திருவாளன் திருநீறு
திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்தேற்றங்
குருவார அணிந்துதமக்
குற்றவிடத் துய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.
| [67] |
நீறணிந்தார் அகத்திருளும்
நிறைகங்குல் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி
எழுச்சியினில் மாதவஞ்செய்
சீறடியார் திருவலகுந்
திருமெழுக்குந் தோண்டியுங்கொண்
டாறணிந்தார் கோயிலினுள்
அடைந்தவரைக் கொடுபுக்கார்.
| [68] |
திரைக்கெடில வீரட்டா
னத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில்
தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து
தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்தும்
உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.
| [69] |
நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.
| [70] |
மன்னும்பதி கம்அது பாடியபின்
வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
| [71] |
அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்
புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின் தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத்
தகுமோவென இன்னன தாமொழிவார்.
| [72] |
பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
றறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும் இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்
கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.
| [73] |
மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின் நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.
| [74] |
இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள் சித்தந்திகழ் தீவினை யேன்அடையுந்
திருவோஇது என்று தெருண்டறியா
அத்தன்மைய னாய இராவணனுக்
கருளுங்கரு ணைத்திற மானஅதன்
மெய்த்தன்மை யறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
| [75] |
பரசுங்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந் தரசிங்கருள் பெற்றுல குய்ந்ததெனா
அடியார்புடை சூழதி கைப்பதிதான்
முரசம்பட கந்துடி தண்ணுமையாழ்
முழவங்கிளை துந்துபி கண்டையுடன்
நிரைசங்கொலி எங்கும் முழங்குதலால் நெடுமாகடல் என்ன நிறைந்துளதே.
| [76] |
மையற்றுறை யேறி மகிழ்ந்தலர்சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்யுற்ற திருப்பணி செய்பவராய்
விரவுஞ்சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறாவுணர்வும் ஈறின்றி எழுந்திரு வாசகமும்
கையில்திக ழும்உழ வாரமுடன் கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
| [77] |
மெய்ம்மைப்பணி செய்த விருப்பதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில் தம்மிச்சை நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்சம யப்பிணி விட்டவர்முன்
போதும்பிணி விட்டரு ளிப்பொருளா
எம்மைப்பணி கொள்கரு ணைத்திறமிங்
கியார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
| [78] |
இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை யெய்தி
மன்னு பேரருள் பெற்றிடர்
நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி
புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்.
| [79] |
தரும சேனர்க்கு வந்தஅத்
தடுப்பருஞ் சூலை
ஒருவ ராலும்இங் கொழிந்திடா மையின்அவர் உயப்போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்துதம் பிணியொழித் துய்ந்தார்
மருவு நம்பெருஞ் சமயம்வீழ்ந்
ததுவென மருள்வார்.
| [80] |
மலையும் பல்சம யங்களும்
வென்றுமற் றவரால்
நிலையும் பெற்றஇந் நெறிஇனி
அழிந்ததென் றழுங்கிக்
கொலையும் பொய்ம்மையும் இலமென்று
கொடுந்தொழில் புரிவோர்
தலையும் பீலியும் தாழவந்
தொருசிறை சார்ந்தார்.
| [81] |
இவ்வ கைப்பல அமணர்கள்
துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில்
வேந்தனும் வெகுண்டு
சைவ னாகிநம் விருத்தியும்
தவிர்க்கும்மற் றினிநாம்
செய்வ தென்னென வஞ்சனை
தெரிந்துசித் திரிப்பார்.
| [82] |
தவ்வை சைவத்து நிற்றலின்
தருமசே னருந்தாம்
பொய்வ குத்ததோர் சூலைதீர்ந்
திலதெனப் போயிங்
கெவ்வ மாகஅங் கெய்திநஞ்
சமயலங் கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச்சொலத் தெளிந்தார்.
| [83] |
சொன்ன வண்ணமே செய்வது
துணிந்ததுன் மதியோர்
முன்னம் நாஞ்சென்று முறைப்படு
வோமென முயன்றே
இன்ன தன்மையில் இருட்குழாஞ் செல்வது போல
மன்ன னாகிய பல்லவன்
நகரில்வந் தணைந்தார்.
| [84] |
உடையொ ழிந்தொரு பேச்சிடை
யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா
வலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்
கறிவியும் என்ன
இடைய றிந்துபுக் கவருந்தம்
இறைவனுக் கிசைப்பார்.
| [85] |
அடிகண்மார் எல்லாரும்,
ஆகுலமாய் மிகவழிந்து
கொடிநுடங்கு திருவாயில்
புறத்தணைந்தார் எனக்கூற
வடிநெடுவேல் மன்னவனும்
மற்றவர்சார் பாதலினால்
கடிதணைவான் அவர்க்குற்ற
தென்கொல்எனக் கவன்றுரைத்தான்.
| [86] |
கடைகாவல் உடையார்கள்
புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார்
நண்ணித்தாம் எண்ணியவா
றுடையாரா கியதரும
சேனர்பிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்நின்
சமயம்அழித் தாரென்றார்.
| [87] |
விரையலங்கல் பல்லவனும்
அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப்
போவதற்குப் பொய்ப்பிணிகொண்
டுரைசிறந்த சமயத்தை
அழித்தொழியப் பெறுவதே
கரையில்தவத் தீர்இதனுக்
கென்செய்வ தெனக்கனன்றான்.
| [88] |
தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.
| [89] |
அருள்கொண்ட உணர்வின்றி
நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன
தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால்
கொடுவாரும் எனப்புகன்றான்.
| [90] |
அரசனது பணிதலைநின்
றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு
முன்சென்று முகில்சூழ்ந்து
விரைசெறியுஞ் சோலைசூழ்
திருவதிகை தனைமேவிப்
பரசமயப் பற்றறுத்த
பான்மையினார் பாற்சென்றார்.
| [91] |
சென்றணைந்த அமைச்சருடன்
சேனைவீ ரருஞ்சூழ்ந்து
மின்தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்றுநுமை அரசன்அழைத்
தெமைவிடுத்தான் போதுமென
நின்றவரை நேர்நோக்கி
நிறைதவத்தோர் உரைசெய்வார்.
| [92] |
நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.
| [93] |
ஆண்டஅர சருள்செய்யக்
கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கெம் பிரானுளனென் றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன்
முன்னணைந்தங் கறிவித்தார்.
| [94] |
பல்லவனும் அதுகேட்டுப்
பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி
மற்றவனைச் செய்வதினிச்
சொல்லுமென அறந்துறந்து
தமக்குறுதி அறியாத
புல்லறிவோர் அஞ்சாது
நீற்றறையில் இடப்புகன்றார்.
| [95] |
அருகணைந்தார் தமைநோக்கி
அவ்வண்ணஞ் செய்கவெனப்
பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை
உருகுபெருந் தழல்வெம்மை
நீற்றறையின் உள்ளிருத்தித்
திருகுகருந் தாட்கொளுவிச்
சேமங்கள் செய்தமைத்தார்.
| [96] |
ஆண்டஅர சதனகத்துள்
அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந்
தாள்நிழலைத் தலைக்கொண்டே
ஈண்டுவருந் துயருளவோ
ஈசனடி யார்க்கென்று
மூண்டமனம் நேர்நோக்கி
முதல்வனையே தொழுதிருந்தார்.
| [97] |
வெய்யநீற் றறையதுதான்
வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து
முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல்
அருளாகிக் குளிர்ந்ததே.
| [98] |
மாசில்மதி நீடுபுனல்
மன்னிவளர் சென்னியனைப்
பேசஇனி யானையுல
காளுடைய பிஞ்ஞகனை
ஈசனைஎம் பெருமானை
எவ்வுயிருந் தருவானை
ஆசையில்ஆ ராவமுதை
அடிவணங்கி இனிதிருந்தார்.
| [99] |
ஓரெழுநாள் கழிந்ததற்பின்
உணர்வில்அம ணரையழைத்துப்
பாருமினி நீற்றறையை
எனவுரைத்தான் பல்லவனுங்
காரிருண்ட குழாம்போலும்
உருவுடைய காரமணர்
தேருநிலை இல்லாதார்
நீற்றறையைத் திறந்தார்கள்.
| [100] |
ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.
| [101] |
அதிசயம்அன் றிதுமுன்னை
அமண்சமயச் சாதகத்தால்
இதுசெய்து பிழைத்திருந்தான்
எனவேந்தற் குரைசெய்து
மதிசெய்வ தினிக்கொடிய
வல்விடம்ஊட் டுவதென்று
முதிரவரும் பாதகத்தோர்
முடைவாயால் மொழிந்தார்கள்.
| [102] |
ஆங்கதுகேட் டலுங்கொடிய
அமண்சார்பாற் கெடுமன்னன்
ஓங்குபெரு மையலினால்
நஞ்சூட்டும் எனவுரைப்பத்
தேங்காதார் திருநாவுக்
கரசரைஅத் தீயவிடப்
பாங்குடைய பாலடிசில்
அமுதுசெயப் பண்ணினார்.
| [103] |
நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.
| [104] |
பொடியார்க்குந் திருமேனிப்
புனிதர்க்குப் புவனங்கள்
முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய
பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுதம்
ஆவதுதான் அற்புதமோ.
| [105] |
அவ்விடத்தை ஆண்டஅர
சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற்
றெனஅமணர் வெருக்கொண்டே
இவ்விடத்தில் இவன்பிழைக்கில்
எமக்கெல்லாம் இறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங்
காவலற்குச் செப்புவார்.
| [106] |
நஞ்சுகலந் தூட்டிடவும்
நஞ்சமயத் தினில்விடந்தீர்
தஞ்சமுடை மந்திரத்தால்
சாதியா வகைதடுத்தான்
எஞ்சும்வகை அவற்கிலதேல்
எம்முயிரும் நின்முறையும்
துஞ்சுவது திடமென்றார்
சூழ்வினையின் துறைநின்றார்.
| [107] |
மற்றவர்தம் மொழிகேட்டு
மதிகெட்ட மன்னவனும்
செற்றவனை இனிக்கடியும்
திறமெவ்வா றெனச்செப்ப
உற்றவரு மந்திரசா தகநாங்கள்
ஒழித்திடநின்
கொற்றவயக் களிறெதிரே விடுவதெனக் கூறினார்.
| [108] |
மாபாவிக் கடைஅமணர்
வாகீசத் திருவடியாங்
காபாலி அடியவர்பாற்
கடக்களிற்றை விடுகென்னப்
பூபாலர் செயன்மேற்கொள்
புலைத்தொழிலோன் அவர்தம்மேற்
கோபாதி சயமான
கொலைக்களிற்றை விடச்சொன்னான்.
| [109] |
கூடத்தைக் குத்தியொரு
குன்றமெனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு
மண்டபங்கள் எடுத்தெற்றித்
தாடத்திற் பரிக்காரர்
தலையிடறிக் கடக்களிற்றின்
வேடத்தால் வருங்கூற்றின்
மிக்கதொரு விறல்வேழம்.
| [110] |
பாசத்தொடை நிகளத்தொடர்
பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம்
வெருவத்துணி விலகா
ஊசற்கரம் எதிர்சுற்றிட
உரறிப்பரி உழறா
வாசக்கட மழைமுற்பட
மதவெற்பெதிர் வருமால்.
| [111] |
இடியுற்றெழும் ஒலியில்திசை
இபமுட்கிட அடியில்
படிபுக்குற நெளியப்படர்
பவனக்கதி விசையில்
கடிதுற்றடு செயலிற்கிளர்
கடலிற்படு கடையின்
முடிவிற்கனல் எனமுற்சினம்
முடுகிக்கடு கியதே.
| [112] |
மாடுற்றணை இவுளிக்குலம்
மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு
குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில்தெற்றிகள்
சரியப்புடை அணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ்
வடர்கைக்குல வரையே.
| [113] |
பாவக்கொடு வினைமுற்றிய
படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு
நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி
யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழல்
தெளிவுற்றனர் பெரியோர்.
| [114] |
அண்ணல் அருந்தவ வேந்தர்
ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை
விடையுகந் தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து
மகிழ்வுட னேபாடு கின்றார்.
| [115] |
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி அறைந்தார்.
| [116] |
தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.
| [117] |
ஆண்ட அரசை வணங்கி
அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர்
தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல்
மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களை யேகொன் றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.
| [118] |
ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையுங் கொன்று
நகரங் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடுமந் தரகிரி போல
ஆடியல் யானைஅம் மன்னற்
காகுலம் ஆக்கிய தன்றே.
| [119] |
யானையின் கையிற் பிழைத்த
வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் தாளில்
தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன்
வெகுண்டினிச் செய்வதென் என்றான்.
| [120] |
நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிரே றழிய
யானையால் இவ்வண்ணம் நின்சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவந் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன்பின்
புகையகன் றாலென என்றார்.
| [121] |
அல்லிருள் அன்னவர் கூற
அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச்செய்வ தென்னச்
சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக்
கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.
| [122] |
ஆங்கது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான்.
| [123] |
அவ்வினை செய்திடப் போகும்
அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று
மேவிட நாவுக் கரசர்
செவ்விய தம்திரு உள்ளஞ்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னவன் சொன்ன
படிமுடித் தார்அப் பதகர்.
| [124] |
அப்பரி சவ்வினை முற்றி
அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க
உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரி சாயினு மாக
ஏத்துவன் எந்தையை யென்று
செப்பிய வண்டமிழ் தன்னால்
சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.
| [125] |
சொற்றுணை வேதியன்
என்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா
நமச்சி வாயவென்
றற்றமுன் காக்கும்அஞ்
செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால்
பதிகம் பாடினார்.
| [126] |
பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முதல்
அமரர் வாழ்த்துதற்
கரியஅஞ் செழுத்தையும்
அரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட்
கல்மி தந்ததே.
| [127] |
அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.
| [128] |
இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ்
மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத்
தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல்
உரைக்க வேண்டுமோ.
| [129] |
அருள்நயந் தஞ்செழுத்
தேத்தப் பெற்றஅக்
கருணைநா வரசினைத்
திரைக்க ரங்களால்
தெருள்நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனுஞ் செய்தனன்
முன்பு மாதவம்.
| [130] |
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
| [131] |
அத்திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம்
மேவி ஆர்த்தெழ
எத்திசை யினும்அர
வென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே.
| [132] |
தொழுந்தகை நாவினுக்
கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையரைக்
கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி
விளங்கப் பாடுவார்.
| [133] |
ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
மாலைகள் சாத்தினரே.
| [134] |
மற்றும் இனையன வண்டமிழ்
மாலைகள் பாடிவைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம்மிக நினைவில்
உற்றதொர் காதலின் அங்குநின் றேகிஒன் னார்புரங்கள்
செற்றவர் வாழுந் திருவதி
கைப்பதி சென்றடைவார்.
| [135] |
தேவர் பிரான்திரு மாணி
குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய
சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி
லத்தைக் கடந்தணைந்தார்.
| [136] |
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இன்றமிழ்
ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி
கைப்பதி வாணர்எல்லாந்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி
மங்கலஞ் சாற்றலுற்றார்.
| [137] |
மணிநெடுந் தோரணம் வண்குலைப்
பூகம் மடற்கதலி
இணையுற நாட்டி எழுநிலைக்
கோபுரந் தெற்றியெங்குந்
தணிவில் பெருகொளித் தாமங்கள்
நாற்றிச்செஞ் சாந்துநீவி
அணிநகர் முன்னை அணிமேல்
அணிசெய் தலங்கரித்தார்.
| [138] |
மன்னிய அன்பின் வளநகர்
மாந்தர் வயங்கிழையார்
இன்னிய நாதமும் ஏழிசை
ஓசையும் எங்கும்விம்மப்
பொன்னியல் சுண்ணமும் பூவும்
பொரிகளுந் தூவியெங்குந்
தொன்னக ரின்புறஞ் சூழ்ந்தெதிர்
கொண்டனர் தொண்டரையே.
| [139] |
தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே.
| [140] |
கண்டார்கள் கைதலை மேற்குவித்
திந்தக் கருணைகண்டால்
மிண்டாய செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச்செற்றம்
உண்டா யினவண்ணம் எவ்வண்ணம்
என்றுரைப் பார்கள்பின்னுந்
தொண்டாண்டு கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.
| [141] |
இவ்வண்ணம் போல எனைப்பல
மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும்
குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்தெய்தி அம்பவளச்
செவ்வண்ணர் கோயில் திருவீரட்
டானத்தைச் சேர்ந்தனரே.
| [142] |
உம்பர்தங் கோனை உடைய
பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன்
நான்பண் டிகழ்ந்ததென்று
தம்பரி வால்திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
| [143] |
அரிஅயனுக் கரியானை
அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை
வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத்
திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்
பலபாடிப் பணிசெயுநாள்.
| [144] |
புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.
| [145] |
வீடறியாச் சமணர்மொழி
பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை
நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில்அமண்
பள்ளியொடு பாழிகளுங்
கூடஇடித் துக்கொணர்ந்து
குணபரவீச் சரம்எடுத்தான்.
| [146] |
இந்நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன்றமிழ்க்கு
மன்னான வாகீசத்
திருமுனியும் மதிச்சடைமேல்
பன்னாகம் அணிந்தவர்தம்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ்புனைந்து
தொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார்.
| [147] |
திருவதிகைப் பதிமருங்கு
திருவெண்ணெய் நல்லூரும்
அருளுதிரு ஆமாத்தூர்
திருக்கோவ லூர்முதலா
மருவுதிருப் பதிபிறவும்
வணங்கிவளத் தமிழ்பாடிப்
பெருகுவிருப் புடன்விடையார்
மகிழ்பெண்ணா கடம்அணைந்தார்.
| [148] |
கார்வளரும் மாடங்கள்
கலந்தமறை ஒலிவளர்க்குஞ்
சீருடைஅந் தணர்வாழுஞ்
செழும்பதியின் அகத்தெய்தி
வார்சடையார் மன்னுதிருத்
தூங்கானை மாடத்தைப்
பார்பரவுந் திருமுனிவர்
பணிந்தேத்திப் பரவினார்.
| [149] |
புன்னெறியாம் அமண்சமயத்
தொடக்குண்டு போந்தவுடல்
தன்னுடனே உயிர்வாழத்
தரியேன்நான் தரிப்பதனுக்
கென்னுடைய நாயகநின்
இலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை
முன்னின்று பாடுவார்.
| [150] |
பொன்னார்ந்த திருவடிக்கென்
விண்ணப்பம் என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும்
முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங்
கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம்
நலஞ்சிறக்கப் பாடுதலும்.
| [151] |
நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.
| [152] |
ஆங்கவர்தந் திருத்தோளில்
ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாங்கண்டு மனங்களித்துத்
தம்பெருமான் அருள்நினைந்து
தூங்கருவி கண்பொழியத்
தொழுதுவிழுந் தார்வத்தால்
ஓங்கியசிந் தையராகி
உய்ந்தொழிந்தேன் எனவெழுந்தார்.
| [153] |
தூங்கானை மாடத்துச்
சுடர்க்கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத்தொண்டு
செய்துபயின் றமருநாள்
பூங்கானம் மணங்கமழும்
பொருவில்திரு அரத்துறையுந்
தேங்காவின் முகிலுறங்குந்
திருமுதுகுன் றமும்பணிந்து.
| [154] |
வண்டமிழ்மென் மலர்மாலை
புனைந்தருளி மருங்குள்ள
தண்டுறைநீர்ப் பதிகளிலுந்
தனிவிடையார் மேவியிடங்
கொண்டருளுந் தானங்கள்
கும்பிட்டுக் குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த
நிவாக்கரையே போதுவார்.
| [155] |
ஆனாத சீர்த்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடைபரக்கும்
மலர்ச்சடையார் அடிவணங்கி
ஊனாலும் உயிராலும்
உள்ளபயன் கொளநினைந்து
தேனாரும் மலர்ச்சோலைத்
திருப்புலியூர் மருங்கணைந்தார்.
| [156] |
நாவுக் கரசரும் இருவர்க் கரியவர்
நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலமுற மெய்யில் தொழுதபின்
மேன்மேல் எழுதரும் விழைவோடுங்
காவிற் களிமயில் மகிழ்வுற் றெதிரெதிர் ஆடக் கடிகமழ் கமலஞ்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழிவந்தார்.
| [157] |
முருகிற் செறியிதழ் முளரிப் படுகரில்
முதுமே திகள்புது மலர்மேயும்
அருகிற் செறிவன மெனமிக் குயர்கழை
அளவிற் பெருகிட வளரிக்குப்
பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன
பெரியோர் அவர்திரு வடிவைக்கண் டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன
எனமுன் புளவள வயலெங்கும்.
| [158] |
அறிவிற் பெரியவர் அயல்நெற் பணைவயல்
அவைபிற் படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற் றிடஅணை யுமின்என் றிருபுடை பயில்சூழ் சினைமிசை குயில்கூவுஞ்
செறிவிற் பலதரு நிலையிற் பொலிவுறு
திருநந் தனவனம் எதிர்கண்டார்.
| [159] |
அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற
அணிகொம் பரின்மிசை அருகெங்கும்
தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை
தலைநின் றுயர்தமிழ் இறையோராம்
இவர்தந் திருவடி வதுகண் டதிசயம் எனவந் தெதிர்அர கரவென்றே சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர் சிறைமென் கிளியொடு சிறுபூவை.
| [160] |
அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
அவருந் தொழுதுமுன் அருள்கூரும்
நெஞ்சிற் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறைஅன் பொடும்உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில் தில்லைத் திருநகர் எல்லைப்பால்
மஞ்சிற் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
மணிவா யிற்புறம் வந்துற்றார்.
| [161] |
அல்லல் பவம்அற அருளுந் தவமுதல் அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
சிவமே நிலவிய திருவீதி.
| [162] |
நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு
மலர்மா லையுநிறை திருவீதிப்
புவனங் களின்முதல் இமையோர் தடமுடி பொருதுந் தியமணி போகட்டிப் பவனன் பணிசெய வருணன் புனல்கொடு
பணிமா றவுமவை பழுதாமென்
றெவருந் தொழுதெழும் அடியார் திருவல
கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்.
| [163] |
மேலம் பரதலம் நிரையுங் கொடிகளில்
விரிவெங் கதிர்நுழை வரிதாகுங்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலந் திகழ்திரு மறையின் பெருகொலி
நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலையேழ் கோபுரம்
உறமெய் கொடுதொழு துள்புக்கார்.
| [164] |
வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.
| [165] |
நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி
நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலுந் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவொன்றா
ஆடுங் கழல்புரி அமுதத் திருநடம்
ஆரா வகைதொழு தார்கின்றார்.
| [166] |
கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
| [167] |
இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ
என்றெய் தினையென மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின்
அருள்பெற் றிடவரும் ஆனந்தம்
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
| [168] |
பத்தனாய்ப் பாட மாட்டேன்
என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
அத்தாஉன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறென்
றித்திறம் போற்றி நின்றே
இன்தமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங்
காதலிற் பணிந்து போந்தார்.
| [169] |
நீடிய மணியின் சோதி
நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுயர் கொடிசூழ் பொற்றேர்
அணிதிரு வீதி யுள்ளுங்
கூடிய பணிகள் செய்து
கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார்.
| [170] |
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம்பா லிக்கும் என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித்
திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும்
பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டல் ஆட.
| [171] |
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்றுமுன் வணங்கிப் பாடிக்
காவியங் கண்டர் மன்னுந்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ.
| [172] |
சினவிடைஏ றுகைத்தேறும் மணவாள
நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின் றாள்என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்
டமிழ்பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப்
புலியூரை நினைந்து மீள்வார்.
| [173] |
மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியுங்
கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு
வழிக்கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும்
அம்பலத்து நிருத்த னாரைத் தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
| [174] |
அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்
அம்பலத்து மேவி ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
ழாற்பின்னும் போற்றல் செய்வார்.
| [175] |
செஞ்சடைக் கற்றைமுற்றத் திளநிலா
எறிக்குமெனுஞ் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும்
பரவியசொல் நிறைந்த வாயும்
தஞ்செயலியன் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்.
| [176] |
கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங்
குழைத்தூட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
| [177] |
ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண் டமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே
அதிசயமாங் காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப.
| [178] |
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
புரண்டுவலங் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.
| [179] |
தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்
கருணைபுறம் பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்
திருநாவுக் கரசர் தாமும்
வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
| [180] |
நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்தருளி நேரே முன்னாள்
ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி
ஆளுடைய பிள்ளை யாருங்
காண்தகைய பெருவிருப்புக் கைம்மிக்க
திருவுள்ளக் கருத்தி னோடு
மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ
எழுந்தருளி முன்னே வந்தார்.
| [181] |
தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.
| [182] |
அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக் கரசரெனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்
அரனடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
| [183] |
பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு வரிற்கலந்த உண்மை யோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
| [184] |
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனம் உய்ய
இருட்கடுவுண் டவர்அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித்
தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.
| [185] |
பண்பயில்வண் டறைசோலை சூழுங் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானந் தன்னை
வலங்கொண்டு தொழுதுவிழுந் தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரா னாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.
| [186] |
பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தி யோடும்
பார்கொண்டு மூடியெனும் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்
திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல்
வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
| [187] |
அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில் திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு
விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.
| [188] |
ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
வேதநா யகர்விரும்பும் பதிக ளான
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
| [189] |
மேவுபுனற் பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்
கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்
பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்
அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.
| [190] |
ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து
மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த
விருத்தங்க ளானவையும் வேறு வேறு
பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம்
பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப்
புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
| [191] |
எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
| [192] |
சென்று சேர்ந்து திருச்சத்தி
முற்றத் திருந்த சிவக்கொழுந்தைக்
குன்ற மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை கொண்டருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்துதமிழ்
மொழிமா லைகளும் சாத்துவார்.
| [193] |
கோவாய் முடுகி என்றெடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவார் அடிகள் என்தலைமேற்
பொறித்து வைப்பாய் எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வாவா என்றே அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
| [194] |
நன்மைபெரு கருள்நெறியே
வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார்
வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான்.
| [195] |
நனைந்தனைய திருவடிஎன்
தலைமேல்வைத் தார்என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதர்அருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து
நிறைந்துமலர்ந் தொழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த
வறியோன்போல் மனம்தழைத்தார்.
| [196] |
நாவுக்கு மன்னர்திரு
நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள்
மேவுறநா ளும்செய்து
பாவுற்ற தமிழ்மாலை
பலபாடிப் பணிந்தேத்தித்
தேவுற்ற திருத்தொண்டு
செய்தொழுகிச் செல்லுநாள்.
| [197] |
கருகாவூர் முதலாகக்
கண்ணுதலோன் அமர்ந்தருளும்
திருவாவூர் திருப்பாலைத்
துறைபிறவும் சென்றிறைஞ்சிப்
பெருகார்வத் திருத்தொண்டு
செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே
உள்ளுருகிப் பணிகின்றார்.
| [198] |
ஆளுடைய நாயகன்தன்
அருள்பெற்றங் ககன்றுபோய்
வாளைபாய் புனற்பழனத்
திருப்பழன மருங்கணைந்து
காளவிடம் உண்டிருண்ட
கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார்
கழல்வணங்க நேர்பெற்றார்.
| [199] |
அப்பதியைச் சூழ்ந்ததிருப்
பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள்
உள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளூர் திங்களூர்.
| [200] |
அந்தணரின் மேம்பட்ட
அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை
கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல ஆண்டஅர
செனும்பெயரால் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர்
கேட்டவர்தம் மனைநண்ண.
| [201] |
மற்றவரும் மனமகிழ்ந்து
மனைவியார் மைந்தர்பெருஞ்
சுற்றமுடன் களிகூரத்
தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக்
கொற்றவரை அமுதுசெயக்
குறைகொள்வார் இறைகொள்ளப்
பெற்றபெருந் தவத்தொண்டர்
திருவுள்ளம் பெறப்பெற்றார்.
| [202] |
காண்டகைமை இன்றியும்முன்
கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன்
போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு
விதங்கள்பெற விருப்பினால்
ஆண்டஅர சமுதுசெயத்
திருவமுதாம் படிஅமைத்து.
| [203] |
திருநாவுக் கரசமுது
செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியஅப்
பிள்ளைதனை அழைத்தன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குருநாளக் குருத்தரிந்து
கொண்டுவரத் தனிவிட்டார்.
| [204] |
ஆங்கவனும் விரைந்தெய்தி
அம்மருங்கு தாழாதே
பூங்கதலிக் குருத்தரியப்
புகும்அளவில் ஒருநாகம்
தீங்கிழைக்க அதுபேணான்
திருவமுது செய்தருள
ஓங்குகத லிக்குருத்துக்
கொண்டொல்லை வந்தணைந்தான்.
| [205] |
தீயவிடந் தலைக்கொள்ளத்
தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினில்நீட்டித்
தளர்ந்துதனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்
விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவரிங் கமுதுசெயத்
தொடங்கார்என் றதுஒளித்தார்.
| [206] |
தம்புதல்வன் சவம்மறைத்துத்
தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய
வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர்பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர்திரு வருளாலே
அறிந்தருளி நவைதீர்ப்பார்.
| [207] |
அன்றவர்கள் மறைத்ததனுக்
களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தங்
கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம்
எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப்
பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
| [208] |
அருந்தனயன் உயிர்பெற்ற
அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி
இடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து
வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி
விருப்பினுடன் மேவுநாள்.
| [209] |
திங்களூர் தனில்நின்றும்
திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடுந்
தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியஅன் பொடுவணங்கி
முன்னின்று போற்றிசைப்பார்.
| [210] |
புடைமாலை மதிக்கண்ணிப்
புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை
அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து
நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொல்மாலை பாடினார்.
| [211] |
எழும்பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம்மருங்குந்
தொழும்பணிமேற் கொண்டருளித்
திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்புறுகேண் மையில்நண்ணித்
தானங்கள் பலபாடிச்
செழும்பழனத் திறைகோயில்
திருத்தொண்டு செய்திருந்தார்.
| [212] |
சாலநாள் அங்கமர்ந்து
தந்தலைமேல் தாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றார்
அணிமலர்ச்சே வடிநினைந்து
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று
கோலநீள் மணிமாடத்
திருநல்லூர் குறுகினார்.
| [213] |
அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.
| [214] |
நல்லூரில் நம்பரருள்
பெற்றுப்போய்ப் பழையாறை
பல்லூர்வெண் தலைக்கரத்தார்
பயிலுமிடம் பலபணிந்து
சொல்லூர்வண் டமிழ்பாடி
வலஞ்சுழியைத் தொழுதேத்தி
அல்லூர்வெண் பிறையணிந்தார்
திருக்குடமூக் கணைந்திறைஞ்சி.
| [215] |
நாலூர்தென் திருச்சேறை
குடவாயில் நறையூர்சேர்
பாலூரும் இன்மொழியாள்
பாகனார் கழல்பரவி
மேலூர்தி விடைக்கொடியார்
மேவுமிடம் பலபாடிச்
சேலூர்தண் பணைசூழ்ந்த
தென்திருவாஞ் சியம்அணைந்தார்.
| [216] |
பெருவாச மலர்ச்சோலைப்
பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க்கொன்றை
முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன்
சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர்தந்
திருவாரூர் வந்தடைந்தார்.
| [217] |
ஆண்டஅர செழுந்தருள
ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால்
நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங்
கவின்சிறந்தோங் கிடஎங்குஞ்
சேண்திகழ்வீ திகள்பொலியத்
திருமலிமங் கலஞ்செய்தார்.
| [218] |
வல்அமண் குண்டர்தம் மாயை
கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனுங்களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறஞ்
சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுதுரை செய்தணைவார்.
| [219] |
பற்றொன் றிலாவரும் பாதகர்
ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந்
தேன்பெற லாவதொன்றே
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமென்
றற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள்ளணைந்தார்.
| [220] |
சூழுந் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில்நண்ணி
வாழி திருநெடுந் தேவா
சிரியன்முன் வந்திறைஞ்சி
ஆழி வரைத்திரு மாளிகை
வாயில் அவைபுகுந்து
நீள்சுடர் மாமணிப் புற்றுகந்
தாரைநேர் கண்டுகொண்டார்.
| [221] |
கண்டு தொழுது விழுந்து
கரசர ணாதிஅங்கங்
கொண்ட புளகங்க ளாக
எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத்
திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித்
திருத்தாண் டகம்புனைந்து.
| [222] |
காண்ட லேகருத் தாய்நினைந்
தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன்
நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ
வலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு
வாயிற் புறத்தணைந்தார்.
| [223] |
செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
| [224] |
மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளுஞ் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.
| [225] |
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடிளம்பூ தத்தினான் எனும்பதிகம்
முதலான பலவும் பாடி
நாடியஆர் வம்பெருக நைந்துமனங்
கரைந்துருகி நயந்து செல்வார்.
| [226] |
நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி
அடிகள்திருத் தொண்டின் நன்மைப்
பான்மைநிலை யால்அவரைப் பரமர்திரு
விருத்தத்துள் வைத்துப் பாடித் தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்
அரனெறியில் திகழுந் தன்மை
ஆனதிற மும்போற்றி அணிவீதிப்
பணிசெய்தங் கமரும் நாளில்.
| [227] |
நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று
வாராரு முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக்
காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர்
கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
| [228] |
மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங் கப்பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும்
அடியார்க ளுடன்சே வித்து
மூவுலகுங் களிகூர வரும்பெருமை
முறைமையெலாங் கண்டு போற்றி
நாவினுக்குத் தனியரசர் நயக்குநாள்
நம்பர்திரு அருளி னாலே.
| [229] |
திருப்புகலூர் அமர்ந்தருளுஞ் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட் டேத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவியெழுங்
காதல்புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு
தொழுதகன்றங் குள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்
பதிபிறவும் பணிந்து போந்தார்.
| [230] |
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண் நின்றும்
பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப்
பதிபலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணங்கமழும் பூம்புகலூர்
வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி
மின்னாரும் புரிமுந்நூல் முருகனார்
திருமடத்தில் மேவுங் காலை.
| [231] |
ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர்
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர் நோக்கி
மீண்டருளி னாரென்று கேட்டருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ
வெழுந்தருளி எதிரே சென்றார்.
| [232] |
கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன்
எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்
வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம்
இருதிறமுஞ் சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி
அணைந்தனபோல் இசைந்த அன்றே.
| [233] |
திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சத்
சிரபுரத்துத் தெய்வ வாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்ப ரேநீர்
வருநாளில் திருவாரூர் நிகழ்பெருமை
வகுத்துரைப்பீர் என்று கூற
அருநாமத் தஞ்செழுத்தும் பயில்வாய்மை அவரு மெதிர் அருளிச் செய்வார்.
| [234] |
சித்தம் நிலாவுந் தென்திரு
வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி
கேனென் றுரைசெய்தார்
முத்து விதான மணிப்பொற்
கவரி மொழிமாலை.
| [235] |
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர்
பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு
வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர் வேன்என் றுரைசெய்தார்.
| [236] |
மாமதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர்
நாதன் தான்ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை சூழும் புகலூரில்.
| [237] |
அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி
நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி
வாரைப் பணிவுற்றார்.
| [238] |
தேவர் பிரானைத் தென்புக
லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ்
பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும்
விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்தங் குறைகின்றார்.
| [239] |
சீர்தரு செங்காட் டங்குடி
நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு
சாந்தை அயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு
பாகன் திருமருகல்
ஏர்தரும் அன்பால் சென்று
வணங்கி இன்புற்றார்.
| [240] |
அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத
லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும்
வந்தார் புகலூரில்.
| [241] |
பிள்ளையார் எழுந்தருளப்
பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங்
குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர்
மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர்
தாமும்எழுந் தருளினார்.
| [242] |
ஆங்கணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்குபுகழ் முருகனார்
திருமடத்தில் உடனாகப்
பாங்கில்வரும் சீரடியார்
பலருமுடன் பயில்கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின்
நிலையுணர்ந்து நிகழ்கின்றார்.
| [243] |
திருப்பதிகச் செழுந்தமிழின்
திறம்போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பரையன் மடப்பாவை
இடப்பாகர் பொற்றாளில்
விருப்புடைய திருத்தொண்டர்
பெருமையினை விரித்துரைத்தங்
கொருப்படுசிந் தையினார்கள்
உடனுறைவின் பயன்பெற்றார்.
| [244] |
அந்நாளில் தமக்கேற்ற திருத்தொண்டின் நெறியாற்ற
மின்னார்செஞ் சடைஅண்ணல்
மேவுபதி எனைப்பலவும்
முன்னாகச் சென்றேத்தி
முதல்வன்தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணிமாடப்
பூம்புகலூர் தொழுதகன்றார்.
| [245] |
திருநீல நக்கடிகள்
சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள்
பிறரும்விடை கொண்டேக
ஒருநீர்மை மனத்துடைய
பிள்ளையா ருடன்அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார்
திருஅம்பர் வணங்கினார்.
| [246] |
செங்குமுத மலர்வாவித்
திருக்கடவூர் அணைந்தருளிப்
பொங்கியவெங் கூற்றடர்த்த
பொன்னடிகள் தொழுதேத்திக்
குங்குலியக் கலயனார்
திருமடத்தில் குறைவறுப்ப
அங்கவர்பால் சிவனடியா
ருடன்அமுது செய்தார்கள்.
| [247] |
சீர்மன்னுந் திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும் இன்னிசைப்பாப்
பலபாடி இனிதமர்ந்து
கார்மன்னுங் கறைக்கண்டர்
கழலிணைகள் தொழுதகன்று
தேர்மன்னும் மணிவீதித்
திருவாக்கூர் சென்றணைந்தார்.
| [248] |
சார்ந்தார்தம் புகலிடத்தைத்
தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்தார்வம் உறப்பணிந்து
கோதில்தமிழ்த் தொடைபுனைந்து
வார்ந்தாடுஞ் சடையார்தம்
பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான்
திருவீழி மிழலையினை.
| [249] |
வீழி மிழலை வந்தணைய
மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார்.
| [250] |
மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.
| [251] |
சென்றுள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் வலமா வந்துதிரு
முன்றில் வணங்கி முன்னெய்தி
முக்கட் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
| [252] |
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.
| [253] |
முன்னாள் அயனுந் திருமாலும் முடியும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப்
பூநீர் மிழலை யினில்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட் டிருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
| [254] |
சீரின் விளங்குந் திருத்தொண்டர்
இருந்து சிலநாள் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி
நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில்
படர்கூர் வறுமை பரந்ததால்.
| [255] |
வையம் எங்கும் வற்கடமாய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன்
காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
மிழலை உடையார் அருள்செய்வார்.
| [256] |
கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.
| [257] |
விண்ணின் றிழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியா ருடன்அமுது
செய்தங் கிருந்தார் இருவர்களும்.
| [258] |
அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.
| [259] |
ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.
| [260] |
ஆறு சடைமேல் அணிந்தருளும்
அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய
இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளுந் தொண்டர்மகிழ்ந்
துண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
இன்புற் றிருக்கும் அந்நாளில்.
| [261] |
காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.
| [262] |
வாய்ந்த மிழலை மாமணியை
வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னாலிறைஞ்சி
இசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா
டெல்லை இல்லாச் சீர்த்தியினார்.
| [263] |
மன்றல் விரவு மலர்ப்புன்னை
மணஞ்சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த
கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக்
கோவும் அரசுந் திருமுன்பு.
| [264] |
பரவை ஓதக் கழிக்கானற்
பாங்கு நெருங்கும் அப்பதியில்
அரவச் சடைஅந் தணனாரை
அகில மறைகள் அர்ச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச்
செய்த அந்நாள் முதல்இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற
மணிநீள் வாயில் வணங்குவார்.
| [265] |
தொல்லை வேதந் திருக்காப்புச்
செய்த வாயில் தொடர்வகற்ற
வல்ல அன்பர் அணையாமை
மருங்கோர் வாயில் வழியெய்தி
அல்லல் தீர்ப்பார் தமையருச்சிப்
பார்கள் தொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழார்
இதனை அங்குக் கேட்டறிந்தார்.
| [266] |
ஆங்கப் பரிசை அறிந்தருளி
ஆழித் தோணி புரத்தரசர்
ஓங்கு வேதம் அருச்சனைசெய்
உம்பர் பிரானை உள்புக்குத்
தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத்
திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பரென
நீடுந் திருநா வுக்கரசர்.
| [267] |
உண்ணீர் மையினால் பிள்ளையார்
உரைசெய் தருள அதனாலே
பண்ணி னேரு மொழியாள்என்
றெடுத்துப் பாடப் பயன்துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
பெண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும்.
| [268] |
வேத வனத்தின் மெய்ப்பொருளின்
அருளால் விளங்கு மணிக்கதவங்
காதல் அன்பர் முன்புதிருக்
காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கெழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறையொலியும்.
| [269] |
அன்பர் ஈட்டங் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும்
இன்ப வெள்ளத் திடைமூழ்கி
எழுந்துள் புகுந்து தம்பெருமான்
முன்பு பணிந்து போற்றிசைத்துப்
பரவி மொழிமா லைகள்பாடி
என்பு கரைய உள்ளுருகி
இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.
| [270] |
புறம்பு நின்ற வாகீசர்
புனிதர் அருளால் இக்கதவந்
திறந்தும் அடைத்துஞ் செல்லுநெறி
திருந்த மலையாள் திருமுலையிற்
கறந்த ஞானங் குழைத்தமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும்வகை நீரும் பாடி அருளுமென.
| [271] |
சண்பை ஆளுந் தமிழ்விரகர்
தாமும் திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த உரைகொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண்பொற் பமைந்த நுதற்காள
கண்டர் அருளால் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச்
செய்த தெடுத்த திருப்பாட்டில்.
| [272] |
அதுகண் டுடைய பிள்ளையார்
தாமும் ஆண்ட அரசும்மகிழ்ந்
திதுநம் பெருமான் அருள்செய்யப்
பெற்றோம் என்றங் கிறைஞ்சியபின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார்
பாடித் தொழுது பணிவுற்றார்
எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.
| [273] |
அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.
| [274] |
அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.
| [275] |
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு
மணியின் பாதம் மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்கண்
உமையோர் பாகம் உடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி அவர்க்கு வாய்மூரில்
இருப்போந் தொடர வாவென்றார்.
| [276] |
போதம் நிகழ வாஎன்று
போனார் என்கொல் எனப்பாடி
ஈதெம் பெருமான் அருளாகில்
யானும் போவேன் என்றெழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு
விரைந்து போக அவர்முன்னே
ஆதி மூர்த்தி முன்காட்டும்
அவ்வே டத்தால் எழுந்தருள.
| [277] |
சீரார் பதியி னின்றெழுந்து
செல்லுந் திருநா வுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம்
உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள
நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் தொடர்ந்தணையப்
பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
| [278] |
அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.
| [279] |
அழைத்துக் கொடுபோந் தணியார்போல்
காட்டி மறைந்தார் எனஅயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தால் கதவந்தொண்
டுறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார்
தாமிங் கெப்பால் மறைவதென.
| [280] |
மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.
| [281] |
பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு
பரமர் தாமும் எழுந்தருள
நீடுந் திருவாய் மூரடைந்து
நிலவுங் கோயில் வலஞ்செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றித் துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க
நயந்தந் நகரில் உடனுறைந்தார்.
| [282] |
ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட் டெய்தி விமலர் தாள்பணிந்தார்.
| [283] |
ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.
| [284] |
வந்து சிவனார் திருமறைக்கா
டெய்தி மன்னு வேணுபுரி
அந்த ணாளர் தமக்கறிவித்
தவர்பால் எய்தி அடிவணங்கச்
சிந்தை மகிழ்ந்து தீதின்மை
வினவத் தீங்கும் முளவாமோ
இந்த உலகம் உயவந்தீர்
இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.
| [285] |
சைவ நெறிவை திகம்நிற்கச்
சழக்கு நெறியைத் தவமென்னும்
பொய்வல் அமணர் செயல்தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக்கேட்டே
அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி
ஆதி சைவ நெறிவிளங்கத்
தெய்வ நீறு நினைந்தெழுந்தார்
சீர்கொள் சண்பைத் திருமறையோர்.
| [286] |
ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.
| [287] |
என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.
| [288] |
போமா துணிந்து நீர்அங்குப்
போதப் போதா அவ்வமணர்
தீமா யையினை யானேபோய்ச்
சிதைத்து வருகின் றேன்என்ன
ஆமா றெல்லாம் உரைத்தவரை
மறுக்க மாட்டா தரசிருப்பத்
தாமா தரவால் தமிழ்நாட்டில்
போனார் ஞானத் தலைவனார்.
| [289] |
வேணு புரக்கோன் எழுந்தருள
விடைகொண் டிருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில்
புனிதர் தம்மைப் போற்றிசைத்துப்
பேணி இருந்தங் குறையுநாள்
பெயர்வார் வீழி மிழலையமர்
தாணு வின்தன் செய்யகழல்
மீண்டுஞ் சார நினைக்கின்றார்.
| [290] |
சோலை மறைக்காட் டமர்ந்தருளுஞ்
சோதி அருள்பெற் றகன்றுபோய்
வேலை விடமுண் டவர்வீழி
மிழலை மீண்டுஞ் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவுந் தாம்பணிந்து
சாலு மொழிவண் டமிழ்பாடித்
தலைவர் மிழலை வந்தடைந்தார்.
| [291] |
வீழி மிழலை தனைப்பணிந்து
வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியஅரியால்
ஆகா சத்தின் நின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழும் நாளிற் பிறபதியும்
பணியுங் காதல் தலைநிற்பார்.
| [292] |
பூவிற் பொலியும் புனற்பொன்னிக்
கரைபோய்ப் பணிவார் பொற்பமைந்த
ஆவுக் கருளும் ஆவடுதண்
டுறையார் பாதம் அணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ
னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார்.
| [293] |
செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப் பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.
| [294] |
அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.
| [295] |
வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.
| [296] |
அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து
நீக்கிப் போக்கென் றருள்புரியச்
செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்
செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.
| [297] |
கண்ட வியப்பு மந்திரிகட்
கியம்பிக் கூடக் கடிதெய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின் வழிகண்டு
குண்டர் செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை அடிவணங்கித் தொக்க அமணர் தூர்அறுத்தான்.
| [298] |
ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.
| [299] |
தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.
| [300] |
பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.
| [301] |
சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச்
செஞ்சொல் மாலை பலபாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதி திருச்சிராப்
பள்ளி மலையுங் கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையுந் தொழுவான் நண்ணினார்.
| [302] |
மற்றப் பதிகள் முதலான
மருங்குள் ளனவுங் கைதொழுது
பொற்புற் றமைந்த திருப்பணிகள்
செய்து பதிகங் கொடுபோற்றி
உற்ற அருளால் காவிரியை
ஏறி ஒன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
லியினைச் சென்று சேர்கின்றார்.
| [303] |
வழிபோம் பொழுது மிகஇளைத்து
வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந் தருமுன் எழுந்தருள
முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந்
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
| [304] |
காவுங் குளமும் முன்சமைத்துக்
காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய்
விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே
நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.
| [305] |
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
| [306] |
நண்ணுந் திருநா வுக்கரசர்
நம்பர் அருள்என் றறிந்தார்போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோ றளித்தலுமே
எண்ண நினையா தெதிர்வாங்கி
இனிதா அமுது செய்தினிய
தண்ணீர் அமுது செய்தருளித்
தூய்மை செய்து தளர்வொழிந்தார்.
| [307] |
எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர்போவ
தென்றார் அரசும் அவர்க்கெதிரே
செப்பு வார்யான் திருப்பைஞ்ஞீ
லிக்குப் போவ தென்றுரைப்ப
ஒப்பி லாரும் யான்அங்குப்
போகின் றேன்என் றுடன்போந்தார்.
| [308] |
கூட வந்து மறையவனார்
திருப்பைஞ் ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப்
பொருளா அளித்த கருணைஎனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து
கண்ணீர் மாரி பயில்வித்தார்.
| [309] |
பைஞ்ஞீ லியினில் அமர்ந்தருளும்
பரமர் கோயில் சென்றெய்தி
மைஞ்ஞீ லத்து மணிகண்டர்
தம்மை வணங்கி மகிழ்சிறந்து
மெய்ஞ்ஞீர் மையினில் அன்புருக
விரும்புந் தமிழ்மா லைகள்பாடிக்
கைஞ்ஞீ டியதந் திருத்தொண்டு
செய்து காதல் உடனிருந்தார்.
| [310] |
நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
| [311] |
செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
| [312] |
அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
| [313] |
பணியார் வேணிச் சிவபெருமான்
பாதம் போற்றிப் பணிசெயுநாள்
மணியார் கண்டத் தெம்பெருமான்
மண்மேல் மகிழும் இடமெங்கும்
தணியாக் காதல் உடன்சென்று
வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார்.
| [314] |
காதல் செய்யுங் கருத்தினுடன்
காடும் மலையும் கான்யாறும்
சூத மலிதண் பணைப்பதிகள்
பலவுங் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெருந்தொண்டை
நன்னாட் டெய்தி முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ்
திருவோத் தூரில் சென்றடைந்தார்.
| [315] |
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த்
தேவர் பிரானார் தங்கோயில்
புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண் டகங்கள் முதலாகத்
தக்க மொழிமா லைகள்சாத்திச்
சார்ந்து பணிசெய் தொழுகுவார்.
| [316] |
செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.
| [317] |
ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.
| [318] |
மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
| [319] |
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேட்கைப் பொலிவினொடுங்
குலவும் வீதிப் பணிசெய்யும்
அண்டர் அறிதற் கரியதிரு
அலகு முதலாம் அவையேந்தி
இண்டை புனைந்த சடைமுடியார்க்
கன்பர் தம்மை எதிர்கொண்டார்.
| [320] |
எதிர்கொண் டிறைஞ்சுஞ் சீரடியார்
தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர்
மறுகுட் போந்து வானநதி
குதிகொண் டிழுந்த சடைக்கம்பர்
செம்பொற் கோயில் குறுகினார்
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா வுக்கரசர்.
| [321] |
திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.
| [322] |
வார்ந்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம் பாடுவார்.
| [323] |
கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானை என்றெடுத்துப்
பரவாய சொல்மாலைத்
திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம் புரம்எரித்த
விடையவனார் வெள்ளெயிற்றின்
அரவாரம் புனைந்தவர்தந்
திருமுன்றிற் புறத்தணைந்தார்.
| [324] |
கையார்ந்த திருத்தொண்டு
கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச்
செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு
மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது
விருப்பினொடு மேவுநாள்.
| [325] |
சீர்வளரு மதில்கச்சி
நகர்த்திருமேற் றளிமுதலா
நீர்வளருஞ் சடைமுடியார்
நிலவியுறை ஆலயங்கள்
ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தித்
தகுந்தொண்டு செய்திருந்தார்.
| [326] |
அந்நகரில் அவ்வண்ணம்
அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
தொடர்ந்தபெருங் காதலினால்.
| [327] |
ஏகம்பன் காண்அவனென்
எண்ணத்தான் எனப்போற்றிப்
பாகம்பெண் ணுருவானைப்
பைங்கண்விடை உயர்த்தானை
நாகம்பூண் உகந்தானை நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை
அணைந்துபணிந் தின்புற்றார்.
| [328] |
திருக்கச்சி ஏகம்பம்
பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தார்
நீடுபதி தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன்
வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார்
கழுக்குன்றின் பாங்கணைந்தார்.
| [329] |
நீடுதிருக் கழுக்குன்றில்
நிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து
பாங்குபல பதிகளிலுஞ்
சூடுமிளம் பிறைமுடியார்
தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த
வான்மியூர் வந்தணைந்தார்.
| [330] |
திருவான்மி யூர்மருந்தைச்
சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி
அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல
சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை
மயிலாப்பூர் வந்தடைந்தார்.
| [331] |
வரைவளர்மா மயிலென்ன
மாடமிசை மஞ்சாடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள்வணங்கி
உரைவளர்மா லைகள்அணிவித்
துழவாரப் படையாளி
திரைவளர்வே லைக்கரைபோய்த்
திருவொற்றி யூர்சேர்ந்தார்.
| [332] |
ஒற்றியூர் வளநகரத்
தொளிமணிவீ திகள்விளக்கி
நற்கொடிமா லைகள்பூகம்
நறுங்கதலி நிரைநாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள்
தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு
கொடுபுக்கார் வழித்தொண்டர்.
| [333] |
திருநாவுக் கரசரும்அத்
திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார்
கோபுரத்தை இறைஞ்சிப்புக்
கொருஞானத் தொண்டருடன்
உருகிவலங் கொண்டடியார்
கருநாமந் தவிர்ப்பாரைக்
கைதொழுது முன்வீழ்ந்தார்.
| [334] |
எழுதாத மறைஅளித்த
எழுத்தறியும் பெருமானைத்
தொழுதார்வ முறநிலத்தில்
தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின்
முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க
விழுதாரை கண்பொழிய
விதிர்ப்புற்று விம்மினார்.
| [335] |
வண்டோங்கு செங்கமலம்
எனஎடுத்து மனமுருகப்
பண்தோய்ந்த சொற்றிருத்தாண்
டகம்பாடிப் பரவுவார்
விண்தோய்ந்த புனற்கங்கை
வேணியார் திருவுருவங்
கண்டோங்கு களிசிறப்பக்
கைதொழுது புறத்தணைந்தார்.
| [336] |
விளங்குபெருந் திருமுன்றில்
மேவுதிருப் பணிசெய்தே
உளங்கொள்திரு விருத்தங்கள்
ஓங்குதிருக் குறுந்தொகைகள்
களங்கொள்திரு நேரிசைகள்
பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதியதனில்
பலநாள்கள் வைகினார்.
| [337] |
அங்குறையு நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி
ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப்
பாசூராம் பதியணைந்தார்.
| [338] |
திருப்பாசூர் நகரெய்திச்
சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வம் மேற்கொள்ள
வேயிடங்கொண் டுலகுய்ய
இருப்பாரைப் புரமூன்றும்
எரித்தருள எடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத்
தொழுதெழுந்து போற்றுவார்.
| [339] |
முந்திமூ வெயில்எய்த
முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக்
குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற்
றேகுவார் வாகீசர்.
| [340] |
அம்மலர்சீர்ப் பதியைஅகன்
றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை
வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத
வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
திருஆல வனம்பணிந்தார்.
| [341] |
திருவாலங் காடுறையுஞ்
செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி
வடதிசைமேல் வழிக்கொள்வார்.
| [342] |
பல்பதியும் நெடுங்கிரியும்
படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந்
திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர்
தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி
மாமலைவந் தெய்தினார்.
| [343] |
பொன்முகலித் திருநதியின்
புனிதநெடுந் தீர்த்தத்தில்
முன்முழுகிக் காளத்தி
மொய்வரையின் தாழ்வரையில்
சென்னியுறப் பணிந்தெழுந்து
செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னுமலை மிசையேறி
வலங்கொண்டு வணங்குவார்.
| [344] |
காதணிவெண் குழையானைக்
காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை
விழுந்திறைஞ்சி எழுந்துபெருங்
காதல்புரி மனங்களிப்பக்
கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான்
எனுந்திருத்தாண் டகம்நவின்றார்.
| [345] |
மலைச்சிகரச் சிகாமணியின்
மருங்குறமுன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழுங் கண்ணருவி
ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த்
தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.
| [346] |
சேணிலவு திருமலையில்
திருப்பணியா யினசெய்து
தாணுவினை அம்மலைமேல்
தாள்பணிந்த குறிப்பினால்
பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலம்
காணுமது காதலித்தார்
கலைவாய்மைக் காவலனார்.
| [347] |
அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
| [348] |
மான விஞ்சையர் வான நாடர்கள்
வான்இ யக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்ன காதிபர்
காம சாரிக ளேமுதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்தி றைஞ்சி நலம்பெறுந்
தான மான திருச்சி லம்பை
வணங்கி வண்டமிழ் சாற்றினார்.
| [349] |
அம்ம ருங்குக டந்து போமவர் ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.
| [350] |
கருந டங்கழி வாகஏகிய
பின்க லந்தவ னங்களும்
திருந தித்துறை யாவை
யும்பயில் சேண்நெ டுங்கிரி வட்டையும் பெருந லங்கிளர்
நாடும் எண்ணில பிற்ப
டச்செறி பொற்பினால் வருநெ
டுங்கதிர் கோலு சோலைய
மாள வத்தினை நண்ணினார்.
| [351] |
அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்
றெங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.
| [352] |
அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.
| [353] |
மாக மீதுவ ளர்ந்த கானக
மாகி எங்கும் மனித்தரால்
போக லாநெறி யன்றி யும்புரி
கின்ற காதல் பொலிந்தெழச்
சாக மூலப லங்கள் துய்ப்பன
வுந்த விர்ந்து தனித்துநேர்
ஏகி னாரிர வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி எய்துவார்.
| [354] |
ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.
| [355] |
வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
| [356] |
இங்ங னம்இர வும்ப கற்பொழு
தும்ம ருஞ்சுரம் எய்துவார்
பங்க யம்புரை தாள்ப ரட்டள
வும்ப சைத்தசை தேயவும்
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை
வைத்த சிந்தை மறப்பரோ
தங்க ரங்க ளிரண்டு மேகொடு
தாவி ஏகுதல் மேவினார்.
| [357] |
கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.
| [358] |
மார்ப முந்தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடுநீடு
ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும்
உடம்ப டங்கவும் ஊன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர்.
| [359] |
அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.
| [360] |
அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற்
பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன்
றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர்
முனிவராம் படியால்.
| [361] |
வந்து மற்றவர் மருங்குற
அணைந்துநேர் நின்று
நொந்து நோக்கிமற் றவர்எதிர்
நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ்வுறுப் பழிந்திட
வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய
தென்என இசைத்தார்.
| [362] |
மாசில் வற்கலை ஆடையும்
மார்பில்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியும்
நீறும்மெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின்
றவர்தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வுற
விளம்புவார் பெரியோர்.
| [363] |
வண்டு லாங்குழல் மலைமக
ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப்
பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங்
காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி
யேஎனக் கூற.
| [364] |
கயிலை மால்வரை யாவது
காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர்
அடைவதற் கெளிதோ
அயில்கொள் வேற்படை அமரரும்
அணுகுதற் கரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர்
வந்தென விளம்பி.
| [365] |
மீளும் அத்தனை உமக்கினிக்
கடன்என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந்
நூல்முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில்
இருக்கைகண் டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ
ளேன்என மறுத்தார்.
| [366] |
ஆங்கு மற்றவர் துணிவறிந்
தவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக்
கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக் கரசனே
எழுந்திர்என் றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்
டெழுந்தொளி திகழ்வார்.
| [367] |
அண்ண லேஎனை ஆண்டுகொண்
டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி
வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில்
இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள்
புரிஎனப் பணிந்தார்.
| [368] |
தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.
| [369] |
ஏற்றி னார்அருள் தலைமிசைக்
கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின்
றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார்
அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்.
| [370] |
ஆதி தேவர்தந் திருவருள்
பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ
யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர்
உலகெலாம் வியப்ப.
| [371] |
வம்பு லாமலர் வாவியின்
கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட்
பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல்
இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற்
படிந்தெழும் படியார்.
| [372] |
மிடையும் நீள்கொடி வீதிகள்
விளங்கிய ஐயா
றுடைய நாயகர் சேவடி
பணியவந் துறுவார்
அடைய அப்பதி நிற்பவுஞ்
சரிப்பவு மான
புடைஅ மர்ந்ததந் துணையொடும்
பொலிவன கண்டார்.
| [373] |
பொன்ம லைக்கொடி யுடன்அமர்
வெள்ளியம் பொருப்பில்
தன்மை யாம்படி சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான்
கோயில்முன் வந்தார்.
| [374] |
காணும் அப்பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன்
முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்
தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந்
தனித்தனி முழங்க.
| [375] |
தேவர் தானவர் சித்தர்விச்
சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர்
கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும்
பெருகொலி தழைப்ப.
| [376] |
கங்கை யேமுதல் தீர்த்தமாங்
கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந்
தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண
நாதர்கள் இறைஞ்சப்
பொங்கி யங்களால் பூதவே
தாளங்கள் போற்ற.
| [377] |
அந்தண் வெள்ளிமால் வரையிரண்
டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால்
விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு
முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை
யாடிமுன் நணுக.
| [378] |
வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற்
பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன்
கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர்
வாக்கின்மன் னவனார்.
| [379] |
கண்ட ஆனந்தக் கடலினைக்
கண்களால் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந்
தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார்
பாடினார் அழுதார்
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன
யார்சொல வல்லார்.
| [380] |
முன்பு கண்டுகொண் டருளின்ஆர்
அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா
ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப்
போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர்.
| [381] |
ஆய வாறுமற் றவர்மனங்
களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும்
வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர்
நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா
றமர்ந்தமை திகழ.
| [382] |
ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.
| [383] |
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால்
குலவு திருப்பதி கங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில்
விரவுஞ் சராசரம் எல்லாங்
காதல் துணையொடுங் கூடக்
கண்டேன் எனப்பாடி நின்றார்.
| [384] |
கண்டு தொழுது வணங்கிக்
கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்திரு வையா
றமர்ந்தனர் நாவுக் கரசர்.
| [385] |
நீடிய அப்பதி நின்று
நெய்த்தான மேமுத லாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை
பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார்
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
| [386] |
சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித்
தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து
நிறைந்தொழி யாஅன்பு பொங்க
ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க
அயர்வுறுந் தன்மைய ரானார்.
| [387] |
திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடை யானைஆன் ஏற்றுப்
பொருப்பூர்ந் தருளும் பிரானைப்
பொய்யிலி யைக்கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத் தோடு
மேவிய காதல் விளைப்ப
இருப்போந் திருவடிக் கீழ்நாம்
என்னுங் குறுந்தொகை பாடி.
| [388] |
அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.
| [389] |
பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.
| [390] |
பொன்னிவலங் கொண்டதிருப்
பூந்துருத்தி அவர்இருப்பக்
கன்மனத்து வல்அமணர்
தமைவாதில் கட்டழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்தருளித்
திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர்
மறையவனார் வருகின்றார்.
| [391] |
தீந்தமிழ்நாட் டிடைநின்றும்
எழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு
வந்தணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர்இருந் தமைகேட்டு
விரைந்தவர்பால் செல்வன்எனப்
பூந்துருத்தி வளம்பதியின்
புறம்பணையில் வந்தணைந்தார்.
| [392] |
சண்பைவருந் தமிழ்விரகர்
எழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி
வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக்
கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த
எழுந்தருளி எதிர்சென்றார்.
| [393] |
காழியர்கோன் வரும்எல்லை
கலந்தெய்திக் காதலித்தார்
சூழுமிடைந் திடுநெருக்கிற் காணாமே தொழுதருளி
வாழியவர் தமைத்தாங்கும்
மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு
தாங்குவன்யான் எனத்தரித்தார்.
| [394] |
வந்தொருவர் அறியாமே
மறைத்தவடி வொடும்புகலி
அந்தணனார் ஏறியெழுந்
தருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத்
தாங்குவா ருடன்தாங்கிச்
சிந்தைகளிப் புறவருவார்
தமையாருந் தெளிந்திலரால்.
| [395] |
திருஞான மாமுனிவர்
அரசிருந்த பூந்துருத்திக்
கருகாக எழுந்தருளி
எங்குற்றார் அப்பர்என
உருகாநின் றுஉம்அடியேன்
உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்தெய்தப்
பெற்றிங்குற் றேன்என்றார்.
| [396] |
பிள்ளையார் அதுகேளாப்
பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி
உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர்
அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார்
தொண்டரெலாந் தொழுதார்த்தார்.
| [397] |
கழுமலக்கோன் திருநாவுக்
கரசருடன் கலந்தருளிச்
செழுமதியந் தவழ்சோலைப்
பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து
திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுருகி இன்புற்றுத்
துதிசெய்தங் குடனிருந்தார்.
| [398] |
வல்அமணர் தமைவாதில்
வென்றதுவும் வழுதிபால்
புல்லியகூன் நிமிர்த்ததுவும்
தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லையிலாத் திருநீறு
வளர்த்ததுவும் இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுவந்தார்
தூயபுகழ் வாகீசர்.
| [399] |
பண்புடைய பாண்டிமா
தேவியார் தம்பரிவும்
நண்புடைய குலச்சிறையார்
பெருமையும்ஞா னத்தலைவர்
எண்பெருக வுரைத்தருள
எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்.
| [400] |
பிரமபுரத் திருமுனிவர்
பெருந்தொண்டை நன்னாட்டில்
அரனுறையுந் தானங்கள்
அணைந்திறைஞ்சிப் பாடுவதற்
குரனுடைய திருநாவுக்
கரசர் உரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுதகன்றார்.
| [401] |
ஆண்டஅர சங்கணர்சீர்
அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும்
பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர்
பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத்
திருவால வாய்சேர்ந்தார்.
| [402] |
சென்றணைந்து மதுரையினில்
திருந்தியநூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியஅங் கணர்கோயில்
முன்றிலினை வலங்கொண்டு
முன்னிறைஞ்சி உள்புக்கு
வன்றனிமால் விடையாரை
வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார்.
| [403] |
எய்தியபே ரானந்த
இன்பத்தின் இடைஅழுந்தி
மொய்திகழுஞ் சடையானை
முளைத்தானை என்றெடுத்துச்
செய்தவத்தோர் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் புறத்தணைவார்
கைதொழுது பணிந்தேத்தித்
திருவுள்ளங் களிசிறந்தார்.
| [404] |
சீர்திகழும் பாண்டிமா
தேவியார் திருநீற்றின்
சார்வடைய கூன்நிமிர்ந்த தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார்
வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதல்மிக
அடிபோற்ற அங்கிருந்தார்.
| [405] |
திருவால வாய்அமர்ந்த
செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும்
தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப்
பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார்
பூவணத்தை வந்தடைந்தார்.
| [406] |
கொடிமாடம் நிலவுதிருப்
பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார்
நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப்
புனிதர்பதி பிறபணிவார்.
| [407] |
தென்னிலங்கை இராவணன்தன்
சிரம்ஈரைந் துந்துணித்த
மன்னவனாம் இராமனுக்கு
வரும்பெரும்பா தகந்தீர்த்த
பிஞ்ஞகனைத் தொழுவதற்கு
நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி
துன்னிமனங் கரைந்துருகத்
தொழுதெழுந்தார் சொல்லரசர்.
| [408] |
தேவர்தொழுந் தனிமுதலைத்
திருவிரா மேச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர்
நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள்
முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு
நலம்பெருகச் செய்தமர்ந்தார்.
| [409] |
அங்குறைந்து கண்ணுதலார்
அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப்
புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந்
திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள்
எல்லாம்புக் கிறைஞ்சுவார்.
| [410] |
தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.
| [411] |
தேம்பொழில்சூழ் செந்தமிழ்நாட்
டினில்எங்குஞ் சென்றிறைஞ்சிப்
பாம்பணிவார் தமைப்பணிவார்
பொன்னிநா டதுஅணைந்து
வாம்புனல்சூழ் வளநகர்கள்
பின்னும்போய் வணங்கியே
பூம்புகலூர் வந்தடைந்தார்
பொய்ப்பாசம் போக்குவார்.
| [412] |
பொய்கைசூழ் பூம்புகலூர்ப்
புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு
நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு
செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த
வண்டமிழ்மா லைகள்மொழிவார்.
| [413] |
நின்றதிருத் தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுறைவார் வாழ்பதிகள்
வழுத்துதிருத் தாண்டகமும்
கொன்றைமலர்ச் சடையார்பால்
குறைந்தடைந்த நேரிசையுந்
துன்றுதனி நேரிசையும்
முதலான தொடுத்துரைத்தார்.
| [414] |
ஆருயிரின் திருவிருத்தம்
தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா
சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந் திருப்பதிகம் முதற்பிறவும்
பேரருளின் கடல்அளிக்கும்
பெருமானைப் பாடினார்.
| [415] |
அந்நிலைமை தனில்ஆண்ட
அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார்
நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம்
நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க அருள்செய்தார்.
| [416] |
செம்பொன்னும் நவமணியும்
சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில்
உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர்
உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல
வாவியினில் புகஎறிந்தார்.
| [417] |
புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா
டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் திருப்புகலூர்
நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல்மடவார்
விசும்பூடு வந்திழிந்தார்.
| [418] |
வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில்
தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும்
கனிவாயில் ஒளிபரப்பப்
பானல்நெடுங் கண்கள்வெளி
பரப்பிஇசை பாடுவார்.
| [419] |
கற்பகப்பூந் தளிரடிபோங்
காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்
டணையோடுங் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி
பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி
ஆடுவபோல் ஆடுவார்.
| [420] |
ஆடுவார் பாடுவார்
அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்றணைவார்
குழல்அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே
ளுடன்மீள்வர் ஒளிபெருக
நீடுவார் துகிலசைய
நிற்பாரும் ஆயினார்.
| [421] |
இத்தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ்
நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய
விழுத்தவத்து மேலோர்தம்
சித்தநிலை திரியாது
செய்பணியின் தலைநின்றார்.
| [422] |
இம்மாயப் பவத்தொடக்காம்
இருவினைகள் தமைநோக்கி
உம்மால்இங் கென்னகுறை
உடையேன்யான் திருவாரூர்
அம்மானுக் காளானேன்
அலையேன்மின் நீர்என்று
பொய்ம்மாயப் பெருங்கடலுள்
எனுந்திருத்தாண் டகம்புகன்றார்.
| [423] |
மாதரவர் மருங்கணைய
வந்தெய்தி மதனவசக்
காதலவர் புரிந்தொழுகுங்
கைதவங்கள் செய்திடவும்
பேதமிலா ஓருணர்விற்
பெரியவரைப் பெயர்விக்க
யாதும்ஒரு செயலில்லா
மையில்இறைஞ்சி எதிரகன்றார்.
| [424] |
இந்நிலைமை உலகேழும்
எய்தஅறிந் தியல்பேத்த
மன்னியஅன் புறுபத்தி
வடிவான வாகீசர்
மின்னிலவும் சடையார்தம்
மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை அணித்தாகச்
சிலநாள்அங் கமர்ந்திருந்தார்.
| [425] |
மன்னியஅந் தக்கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன்
என்னையினிச் சேவடிக்கீழ்
இருத்திடும்என் றெழுகின்ற
முன்னுணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பலமொழிந்தார்.
| [426] |
மண்முதலாம் உலகேத்த
மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே
போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த
ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ்
ஆண்டஅர சமர்ந்திருந்தார்.
| [427] |
வானவர்கள் மலர்மாரி
மண்நிறைய விண்ணுலகின்
மேனிறைந்த ஐந்துபே
ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினஎல்லாம்
உளநிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற்
சதயமாந் திருநாளில்.
| [428] |
அடியனேன் ஆதரவால்
ஆண்டஅர சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது குலச்சிறையார்
முடிவில்புகழ்த் திருத்தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன்.
| [429] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.220  
குலச்சிறை நாயனார் புராணம்
பண் - ( )
பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி.
| [1] |
அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்பெரு நம்பிஎன் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை
வைப்பி னால்திருத் தொண்டில் வழாதவர்.
| [2] |
கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.
| [3] |
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்.
| [4] |
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடை யார்அடி யாரெனில்
தலமு றப்பணிந் தேத்துந் தகைமையார்.
| [5] |
பண்பின் மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்தமு தூட்டும் நலத்தினார்.
| [6] |
பூதி கோவணம் சாதனத் தாற்பொலிந்
தாதி தேவர்தம் அஞ்செழுத் தாமவை
ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்.
| [7] |
இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த்
தென்ன வன்நெடு மாறற்குச் சீர்திகழ்
மன்னு மந்திரி கட்குமே லாகியார்
ஒன்ன லர்ச்செற் றுறுதிக்கண் நின்றுளார்.
| [8] |
ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுளார்
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.
| [9] |
புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்
தென்னன் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.
| [10] |
வாதில் தோற்ற அமணரை வன்கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித் தார்திறம்
யாது போற்றினேன் மேலினி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்.
| [11] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.230  
பெரு மிழலைக் குறும்ப
பண் - ( )
சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.
| [1] |
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய்
முதிரும் அறிவின் பயன்கொள்வார்.
| [2] |
தொண்டர் பலரும் வந்தீண்டி
உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார்.
| [3] |
இத்தன் மையராய் நிகழுநாள்
எல்லை இல்லாத் திருத்தொண்டின்
மெய்த்தன் மையினை உலகறிய
விதியால் வணங்கி மெய்யடியார்
சித்தம் நிலவுந் திருத்தொண்டத்
தொகைபா டியநம் பியைப்பணிந்து
நித்தன் அருள்பெற் றவர்பாதம்
நினைக்கும் நியமத் தலைநின்றார்.
| [4] |
மையார் தடங்கண் பரவையார்
மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்குங் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
உய்வான் சேர உற்றநெறி
இதுவே என்றன் பினில்உய்த்தார்.
| [5] |
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தி யான அணைந்ததற்பின்
மூளும் காத லுடன்பெருக
முதல்வர் நாமத் தஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
| [6] |
இன்ன வாறே இவர்ஒழுக
ஏறு கொடிமேல் உயர்த்தவர்தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னும் ஓலை அவைமுன்பு
காட்டி ஆண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங்கோள் ஊரைச் சேர்வுற்றார்.
| [7] |
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத்
தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்த வரும்வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்குணந்தார்
நீடு மிழலைக் குறும்பனார்.
| [8] |
மண்ணில் திகழும் திருநாவல்
ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை
நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய
வாழ்வார் போல வாழேன்என்
றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென்
றடைவன் யோகத் தாலென்பார்.
| [9] |
நாலு கரணங் களும்ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி
எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.
| [10] |
பயிலச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடியடைந்த மிழலைக் குறும்பர் கழல்வணங்கி
மயிலைப் புறங்கொள் மென்சாயல் மகளிர் கிளவி யாழினொடுங்
குயிலைப் பொருவுங் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.
| [11] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.240  
காரைக்கால் அம்மையார் புராணம்
பண் - ( )
மானமிகு தருமத்தின்
வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர்
குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து
கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம்
பெருகுதிருக் காரைக்கால்.
| [1] |
வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்.
| [2] |
வணிகர்பெருங் குலம்விளங்க
வந்துபிறந் தருளியபின்
அணிகிளர்மெல் லடிதளர்வுற்று
அசையுநடைப் பருவத்தே
பணியணிவார் கழற்கடிமை
பழகிவரும் பாங்குபெறத்
தணிவில்பெரு மனக்காதல்
ததும்பவரும் மொழிபயின்றார்.
| [3] |
பல்பெருநற் கிளைஉவப்பப்
பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார்
திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின்
வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின்
கொழுந்தெழுவ தெனவளர்வார்.
| [4] |
வண்டல்பயில் வனஎல்லாம்
வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
தொண்டர்வரின் தொழுதுதா
தியர்போற்றத் துணைமுலைகள்
கொண்டுநுசுப் பொதுங்குபதங்
கொள்கையினிற் குறுகினார்.
| [5] |
நல்லவென உறுப்புநூ
லவர்உரைக்கும் நலம்நிரம்பி
மல்குபெரு வனப்புமீக்
கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில்
இவர்கள்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகள்
பேசுதற்குத் தொடங்குவார்.
| [6] |
நீடியசீர்க் கடல்நாகை
நிதிபதியென் றுலகின்கண்
பாடுபெறு புகழ்வணிகன்
பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபில்
சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால்
வள நகரின் வரவிட்டார்.
| [7] |
வந்தமூ தறிவோர்கள்
மணங்குறித்தம் மனைபுகுந்து
தந்தையாந் தனதத்தன்
தனைநேர்ந்து நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந்
தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கும்
முறைமைமணம் புரிகென்றார்.
| [8] |
மற்றவனும் முறைமையினால்
மணம்இசைந்து செலவிடச் சென்
றுற்றவர்கள் உரைகேட்ட
நிதிபதியும் உயர்சிறப்புப்
பெற்றனன் போல் உவந்துதனிப்
பெருமகற்குத் திருமலியுஞ்
சுற்றமுடன் களிகூர்ந்து
வதுவைவினைத் தொழில்பூண்டான்.
| [9] |
மணமிசைந்த நாளோலை
செலவிட்டு மங்கலநாள்
அணையவது வைத்தொழில்கள்
ஆனவெலாம் அமைவித்தே
இணரலங்கல் மைந்தனையும்
மணவணியின் எழில்விளக்கிப்
பணைமுரசம் எழுந்தார்ப்பக்
காரைக்கால் பதிபுகுந்தார்.
| [10] |
அளிமிடைதார்த் தனதத்தன்
அணிமாடத் துள்புகுந்து
தெளிதருநூல் விதிவழியே
செயல்முறைமை செய்தமைத்துத்
தளிரடிமென் நகைமயிலைத்
தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக்
கலியாணஞ் செய்தார்கள்.
| [11] |
மங்கலமா மணவினைகள்
முடித்தியல்பின் வைகுநாள்
தங்கள்குடிக் கொருபுதல்வி
ஆதலினால் தனதத்தன்
பொங்கொலிநீர் நாகையினிற்
போகாமே கணவனுடன்
அங்கண்அமர்ந் தினிதிருக்க
அணிமாடம் மருங்கமைத்தான்.
| [12] |
மகட்கொடையின் மகிழ்சிறக்கும்
வரம்பில்தனங் கொடுத்ததற்பின்
நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்
நிதிபதிதன் குலமகனும்
தகைப்பில்பெருங் காதலினால்
தங்குமனை வளம்பெருக்கி
மிகப்புரியுங் கொள்கையினில்
மேம்படுதல் மேவினான்.
| [13] |
ஆங்கவன்தன் இல்வாழ்க்கை
அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும்
பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல்
ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரு மனையறத்தின்
பண்புவழா மையில்பயில்வார்.
| [14] |
நம்பரடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியுஞ்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவி னாலவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.
| [15] |
பாங்குடைய நெறியின்கண்
பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு
வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி
அவர்வேண்டுங் குறையளித்தே
ஈங்கிவற்றை இல்லத்துக்
கொடுக்கவென இயம்பினான்.
| [16] |
கணவன்தான் வரவிடுத்த
கனியிரண்டுங் கைக்கொண்டு
மணமலியும் மலர்க்கூந்தல்
மாதரார் வைத்ததற்பின்
பணஅரவம் புனைந்தருளும்
பரமனார் திருத்தொண்டர்
உணவின்மிகு வேட்கையினால்
ஒருவர்மனை உட்புகுந்தார்.
| [17] |
வேதங்கள் மொழிந்தபிரான்
மெய்த்தொண்டர் நிலைகண்டு
நாதன்தன் அடியாரைப்
பசிதீர்ப்பேன் எனநண்ணிப்
பாதங்கள் விளக்கநீர்
முன்னளித்துப் பரிகலம்வைத்
தேதந்தீர் நல்விருந்தா
இன்னடிசில் ஊட்டுவார்.
| [18] |
கறிஅமுதங் குதவாதே
திருஅமுது கைகூட
வெறிமலர்மேல் திருவனையார்
விடையவன்தன் அடியாரே
பெறலரிய விருந்தானால்
பேறிதன்மேல் இல்லையெனும்
அறிவினராய் அவரமுது
செய்வதனுக் காதரிப்பார்.
| [19] |
இல்லாளன் வைக்கவெனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமையமுது செய்வித்தார்.
| [20] |
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவையடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயலுவந்து போயினார்.
| [21] |
மற்றவர்தாம் போயினபின்
மனைப்பதியா கியவணிகன்
உற்றபெரும் பகலின்கண்
ஓங்கியபேர் இல்எய்திப்
பொற்புறமுன் நீராடிப்
புகுந்தடிசில் புரிந்தயிலக்
கற்புடைய மனையாருங் கடப்பாட்டில் ஊட்டுவார்.
| [22] |
இன்னடிசில் கறிகளுடன்
எய்துமுறை இட்டதற்பின்
மன்னியசீர்க் கணவன்தான்
மனையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியில்
இருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமும்
கொடுவந்து கலத்தளித்தார்.
| [23] |
மனைவியார் தாம்படைத்த
மதுரமிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
ஆராமைத் தார்வணிகன்
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுகவென
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்.
| [24] |
அம்மருங்கு நின்றயர்வார்
அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற
விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே
அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த
ததிமதுரக் கனியொன்று.
| [25] |
மற்றதனைக் கொடுவந்து
மகிழ்ந்திடலும் அயின்றதனில்
உற்றசுவை அமுதினுமேற்
படவுளதா யிடஇதுதான்
முன்தருமாங் கனியன்று
மூவுலகிற் பெறற்கரிதால்
பெற்றதுவே றெங்கென்று
பெய்வளையார் தமைக்கேட்டான்.
| [26] |
அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால்
கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்.
| [27] |
செய்தபடி சொல்லுவதே
கடனென்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துறவணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார்என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனைமொழிந்தார்.
| [28] |
ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.
| [29] |
பாங்ககன்று மனைவியார்
பணியணிவார் தமைப்பரவி
ஈங்கிதளித் தருளீரேல்
என்னுரைபொய் யாம்என்ன
மாங்கனியொன் றருளால்வந்
தெய்துதலும் மற்றதனை
ஆங்கவன்கைக் கொடுத்தலுமே
அதிசயித்து வாங்கினான்.
| [30] |
வணிகனுந் தன்கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேற் கொள்ள
உள்ளமுந் தடுமா றெய்தி
அணிகுழல் அவரை வேறோர்
அணங்கெனக் கருதி நீங்குந்
துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில்.
| [31] |
விடுவதே எண்ண மாக மேவிய
முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங் கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன
நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள்
மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.
| [32] |
கலஞ்சமைத் ததற்கு வேண்டும்
கம்மிய ருடனே செல்லும்
புலங்களில் விரும்பும் பண்டம்
பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலந்தரு கடவுட் போற்றித்
தலைமையாம் நாய்கன் தானும்
நலந்தரு நாளில் ஏறி
நளிர்திரைக் கடல்மேற் போனான்.
| [33] |
கடல்மிசை வங்கம் ஓட்டிக்
கருதிய தேயந் தன்னில்
அடைவுறச் சென்று சேர்ந்தங்
களவில்பல் வளங்கள் முற்றி
இடைசில நாள்கள் நீங்க
மீண்டும்அக் கலத்தில் ஏறிப்
படர்புனற் கன்னி நாட்டோர்
பட்டினம் மருங்கு சார்ந்தான்.
| [34] |
அப்பதி தன்னில் எய்தி
அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம்
ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்
விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத்
திருமலி வதுவை செய்தான்.
| [35] |
பெறலருந் திருவி னாளைப்
பெருமணம் புணர்ந்து முன்னை
அறலியல் நறுமென் கூந்தல்
அணங்கனார் திறத்தில் அற்றம்
புறமொரு வெளியு றாமற்
பொதிந்தசிந் தனையி னோடு
முறைமையின் வழாமை வைகி
முகமலர்ந் தொழுகு நாளில்.
| [36] |
முருகலர் சோலை மூதூர்
அதன்முதல் வணிக ரோடும்
இருநிதிக் கிழவன் என்ன
எய்திய திருவின் மிக்குப்
பொருகடற் கலங்கள் போக்கும்
புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போலோர்
பெண்கொடி அரிதிற் பெற்றான்.
| [37] |
மடமகள் தன்னைப் பெற்று
மங்கலம் பேணித் தான்முன்
புடனுறை வஞ்சி நீத்த
ஒருபெரு மனைவி யாரைத்
தொடர்வற நினைந்து தெய்வத்
தொழுகுலம் என்றே கொண்டு
கடனமைத் தவர்தம் நாமங்
காதல்செய் மகவை இட்டான்.
| [38] |
இன்னிலை இவன்இங் கெய்தி
இருந்தனன் இப்பால் நீடும்
கன்னிமா மதில்சூழ் மாடக்
காரைக்கால் வணிக னான
தன்னிகர் கடந்த செல்வத்
தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பி னோடு
மனையறம் புரிந்து வைக.
| [39] |
விளைவளம் பெருக்க வங்க
மீதுபோம் பரம தத்தன்
வளர்புகழ்ப் பாண்டி நாட்டோர்
மாநகர் தன்னில் மன்னி
அளவில்மா நிதியம் ஆக்கி
அமர்ந்தினி திருந்தான் என்று
கிளரொளி மணிக்கொம் பன்னார்
கிளைஞர்தாங் கேட்டா ரன்றே.
| [40] |
அம்மொழி கேட்ட போதே
அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி
அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி
மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக்
கொண்டுபோய் விடுவ தென்றார்.
| [41] |
மாமணிச் சிவிகை தன்னில்
மடநடை மயில்அன் னாரைத்
தாமரைத் தவிசில் வைகுந்
தனித்திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக்
காதல்செய் சுற்றத் தாரும்
தேமொழி யவருஞ் சூழச்
சேணிடைக் கழிந்து சென்றார்.
| [42] |
சிலபகல் கடந்து சென்று
செந்தமிழ்த் திருநா டெய்தி
மலர்புகழ்ப் பரம தத்தன்
மாநகர் மருங்கு வந்து
குலமுதல் மனைவி யாரைக்
கொண்டுவந் தணைந்த தன்மை
தொலைவில்சீர்க் கணவ னுக்குச்
சொல்லிமுன் செல்ல விட்டார்.
| [43] |
வந்தவர் அணைந்த மாற்றங்
கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச்
செழுமணம் பின்பு செய்த
பைந்தொடி தனையுங் கொண்டு
பயந்தபெண் மகவி னோடும்
முந்துறச் செல்வேன் என்று
மொய்குழ லவர்பால் வந்தான்.
| [44] |
தானும்அம் மனைவி யோடும்
தளர்நடை மகவி னோடும்
மானிளம் பிணைபோல் நின்ற
மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம தருளால் வாழ்வேன்
இவ்விளங் குழவி தானும்
பான்மையால் உமது நாமம்
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.
| [45] |
கணவன்தான் வணங்கக் கண்ட
காமர்பூங்கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பால்
அச்சமோ டொதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி
உன்திரு மனைவி தன்னை
மணமலி தாரி னாய்நீ
வணங்குவ தென்கொல் என்றார்.
| [46] |
மற்றவர் தம்மை நோக்கி
மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல்
நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆத லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின் என்றான்.
| [47] |
என்றபின் சுற்றத் தாரும்
இதுவென்கொல் என்று நின்றார்
மன்றலங் குழலி னாரும்
வணிகன்வாய் மாற்றங் கேளாக்
கொன்றைவார் சடையி னார்தங்
குரைகழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க
உணர்வுகொண் டுரைசெய் கின்றார்.
| [48] |
ஈங்கிவன் குறித்த கொள்கை
இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்.
| [49] |
ஆனஅப் பொழுது மன்றுள்
ஆடுவார் அருளி னாலே
மேனெறி உணர்வு கூர
வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம்
உதறிஎற் புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்குபேய் வடிவ மானார்.
| [50] |
மலர்மழை பொழிந்த தெங்கும்
வானதுந் துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம
உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம்
குணலையிட் டனமுன் னின்ற
தொலைவில்பல் சுற்றத் தாருந்
தொழுதஞ்சி அகன்று போனார்.
| [51] |
உற்பவித் தெழுந்த ஞானத்
தொருமையின் உமைகோன் தன்னை
அற்புதத் திருவந் தாதி
அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத
புண்டரீ கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன் றானேன்
நான்என்று நயந்து பாடி.
| [52] |
ஆய்ந்தசீர் இரட்டை மாலை
அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க
எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக்
கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர
வழிபடும் வழியால் வந்தார்.
| [53] |
கண்டவர் வியப்புற் றஞ்சிக்
கையகன் றோடு வார்கள்
கொண்டதோர் வேடத் தன்மை
உள்ளவா கூறக் கேட்டே
அண்டர்நா யகனார் என்னை
அறிவரேல் அறியா வாய்மை
எண்டிசை மாக்க ளுக்கியான்
எவ்வுரு வாயென் என்பார்.
| [54] |
வடதிசைத் தேசம் எல்லாம்
மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச்
சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற்
பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல்
தலையினால் நடந்து சென்றார்.
| [55] |
தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே.
| [56] |
அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்.
| [57] |
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.
| [58] |
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம் பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
| [59] |
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
| [60] |
கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்
டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.
| [61] |
அப்பரி சருளப் பெற்ற
அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை
விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால்
திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே
நடந்துபுக் கடைந்தார் அன்றே.
| [62] |
ஆலங்கா டதனில் அண்ட
முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை
திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை
மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும்
நடம்போற்றி நண்ணு நாளில்.
| [63] |
மட்டவிழ்கொன் றையினார்தந்
திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல்
எழுந்தோங்க வியப்பெய்தி
எட்டிஇல வம்ஈகை
எனஎடுத்துத் திருப்பதிகங்
கொட்டமுழ வங்குழகன்
ஆடுமெனப் பாடினார்.
| [64] |
மடுத்தபுனல் வேணியினார்
அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ்
என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல்
ஆரளவா யினதம்மா.
| [65] |
ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்.
| [66] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.250  
அப்பூதி அடிகள் நாயனார்
பண் - ( )
தாண்டவம் புரிய வல்ல
தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக்
கலந்தஅன் பினராய் உள்ளார்.
| [1] |
களவுபொய் காமம் கோபம்
முதலிய குற்றங் காய்ந்தார்
வளமிகு மனையின் வாழ்க்கை
நிலையினார் மனைப்பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள்
ஆவொடு மேதி மற்றும்
உளவெலாம் அரசின் நாமஞ்
சாற்றும்அவ் வொழுகல் ஆற்றார்.
| [2] |
வடிவுதாங் காணா ராயும்
மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார்
அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து
முறைமையால் வாழும் நாளில்.
| [3] |
பொருப்பரையன் மடப்பிடியி
னுடன்புணருஞ் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்துபணி
செய்திருநா வுக்கரசர்
ஒருப்படுகா தலிற்பிறவும்
உடையவர்தம் பதிவணங்கும்
விருப்பினொடுந் திங்களூர்
மருங்குவழி மேவுவார்.
| [4] |
அளவில்சனஞ் செலவொழியா
வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய்
உறுவேனில் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போல்
குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவும் நிழல்தருதண்
ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.
| [5] |
வந்தணைந்த வாகீசர்
மந்தமா ருதசீதப்
பந்தருடன் அமுதமாந்
தண்ணீரும் பார்த்தருளிச்
சிந்தைவியப் புறவருவார்
திருநாவுக் கரசெனும்பேர்
சந்தமுற வரைந்ததனை
எம்மருங்குந் தாங்கண்டார்.
| [6] |
இப்பந்தர் இப்பெயரிட்
டிங்கமைத்தார் யார்என்றார்க்
கப்பந்தர் அறிந்தார்கள்
ஆண்டஅர செனும்பெயரால்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள
சாலைகுளங் காவென்றார்.
| [7] |
என்றுரைக்க அரசுகேட்
டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர்
எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத்
தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும்
சேய்த்தன்று நணித்தென்றார்.
| [8] |
அங்ககன்று முனிவரும்போய்
அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன்
சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர்
செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர்
எனக்கேட்டு நண்ணினார்.
| [9] |
கடிதணைந்து வாகீசர்
கழல்பணிய மற்றவர்தம்
அடிபணியா முன்பணியும்
அரசின்எதிர் அந்தணனார்
முடிவில்தவஞ் செய்தேன்கொல் முன்பொழியுங் கருணைபுரி
வடிவுடையீர் என்மனையில்
வந்தருளிற் றென்என்றார்.
| [10] |
ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.
| [11] |
ஆறணியுஞ் சடைமுடியார்
அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணீர்ப்பந்
தரில்நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத
வேண்டியகா ரணம்என்கொல்
கூறும்என எதிர்மொழிந்தார்
கோதில்மொழிக் கொற்றவனார்.
| [12] |
நின்றமறை யோர்கேளா
நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்
நாணில்அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூட்சி
திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தந் திருப்பேரோ
வேறொருபேர் எனவெகுள்வார்.
| [13] |
நம்மையுடை யவர்கழற்கீழ்
நயந்ததிருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பதென
என்போல்வா ருந்தெளியச்
செம்மைபுரி திருநாவுக்
கரசர்திருப் பெயரெழுத
வெம்மைமொழி யான்கேட்க
விளம்பினீர் எனவிளம்பி.
| [14] |
பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்.
| [15] |
திருமறையோர் அதுமொழியத்
திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந் துரைசெய்வார்
பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
| [16] |
அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக்
கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ்
சரணகம லம்பூண்டார்.
| [17] |
மற்றவரை எதிர்வணங்கி
வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம்
பெற்றார்போல் அருமறையோர்
முற்றவுளங் களிகூர
முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ
ஓடினார் பாடினார்.
| [18] |
மூண்டபெரு மகிழ்ச்சியினால்
முன்செய்வ தறியாதே
ஈண்டமனை அகத்தெய்தி
இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டஅர செழுந்தருளும்
ஓகைஉரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங்
கொடுமீளப் புறப்பட்டார்.
| [19] |
மனைவியா ருடன்மக்கள்
மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி
ஆராத காதலுடன்
முனைவரைஉள் ளெழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்.
| [20] |
ஆசனத்தில் பூசனைகள்
அமர்வித்து விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக்
காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசம்உய்ய வந்தவரைத்
திருவமுது செய்விக்கும்
நேசம்உற விண்ணப்பம்
செயஅவரும் அதுநேர்ந்தார்.
| [21] |
செய்தவர் இசைந்த போது
திருமனை யாரை நோக்கி
எய்திய பேறு நம்பால்
இருந்தவா றென்னே என்று
மைதிகழ் மிடற்றி னான்தன்
அருளினால் வந்த தென்றே
உய்தும்என் றுவந்து கொண்டு
திருவமு தாக்கல் உற்றார்.
| [22] |
தூயநற் கறிக ளான
அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆயஇன் னமுதும் ஆக்கி
அமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த
திருநாவுக் கரசை வாழை
மேயபொற் குருத்துக் கொண்டு
வாஎன விரைந்து விட்டார்.
| [23] |
நல்லதாய் தந்தை ஏவ
நான்இது செயப்பெற் றேன்என்
றொல்லையில் அணைந்து தோட்டத்
துள்புக்குப் பெரிய வாழை
மல்லவங் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராஒன்
றல்லல்உற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
| [24] |
கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்.
| [25] |
பொருந்திய விடவே கத்தில்
போதுவான் வேகம் முந்த
வருந்தியே அணையும் போழ்து
மாசுணங் கவர்ந்த தியார்க்கும்
அருந்தவர் அமுது செய்யத்
தாழ்க்கயான் அறையேன் என்று
திருந்திய கருத்தி னோடுஞ்
செழுமனை சென்று புக்கான்.
| [26] |
எரிவிடம் முறையே ஏறித்
தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார்
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
| [27] |
தளர்ந்துவீழ் மகனைக் கண்டு
தாயருந் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று நோக்கி
உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியுங் கண்டு
விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர்
அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.
| [28] |
பெறலரும் புதல்வன் தன்னைப்
பாயினுள் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர்
புடையினில் மறைத்து வைத்தே
அறஇது தெரியா வண்ணம்
அமுதுசெய் விப்போம் என்று
விறலுடைத் தொண்ட னார்பால்
விருப்பொடு விரைந்து வந்தார்.
| [29] |
கடிதுவந் தமுது செய்யக்
காலந்தாழ்க் கின்ற தென்றே
அடிசிலும் கறியும் எல்லாம்
அழகுற அணைய வைத்துப்
படியில்சீர்த் தொண்ட னார்முன்
பணிந்தெழுந் தமுது செய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீர்
என்றவர் கூறக் கேட்டு.
| [30] |
அருந்தவர் எழுந்து செய்ய
அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப்
பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி
இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
| [31] |
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
| [32] |
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.
| [33] |
பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க என்னோ
வருவதென் றுரையா ரேனும்
மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டுஞ்
சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்
குற்றது பகர்ந்தார் அன்றே.
| [34] |
நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்.
| [35] |
தீவிடம் நீங்க உய்ந்த
திருமறை யவர்தஞ் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி
விரைந்தெழு வானைப் போன்று
சேவுகைத் தவர்ஆட் கொண்ட
திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு
புனிதநீ றளித்தார் அன்றே.
| [36] |
பிரிவுறும் ஆவி பெற்ற
பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார்
நின்றஅப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர்
அமுதுசெய் தருளு தற்குச்
சிறிதிடை யூறு செய்தான்
இவனென்று சிந்தை நொந்தார்.
| [37] |
ஆங்கவர் வாட்டந் தன்னை
அறிந்துசொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி
அமுதுசெய் தருள வுற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல்
பயில்மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடுந்
தகுவன சமைத்துச் சார்வார்.
| [38] |
புகழ்ந்தகோ மயத்து நீரால்
பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்தவான் சுதையும் போக்கிச்
சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்தஅக் கதலி நீண்ட
குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய்
வலம்பட மன்னு வித்தார்.
| [39] |
திருந்திய வாச நன்னீர்
அளித்திடத் திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப்
பிள்ளைக ளுடனே நோக்கி
அரும்புதல் வர்களும் நீரும்
அமுதுசெய் வீர்இங் கென்ன
விரும்பிய உள்ளத் தோடு
மேலவர் ஏவல் செய்வார்.
| [40] |
மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுது செய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமு தெடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை வேணிக்
கூத்தனார் அடியா ரோடும்
அந்தமி ழாளி யார்அங்
கமுதுசெய் தருளி னாரே.
| [41] |
மாதவ மறையோர் செல்வ
மனையிடை அமுது செய்து
காதல்நண் பளித்துப் பன்னாள்
கலந்துடன் இருந்த பின்றை
மேதகு நாவின் மன்னர்
விளங்கிய பழன மூதூர்
நாதர்தம் பாதஞ் சேர்ந்து
நற்றமிழ்ப் பதிகஞ் செய்தார்.
| [42] |
அப்பூதி யடிக ளார்தம்
அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை
விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார்
திருநாவுக் கரசர் பாதம்.
| [43] |
இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே
| [44] |
மான்மறிக் கையர் பொற்றாள்
வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மைஅப் பூதி யாராம்
வேதியர் பாதம் போற்றிக்
கான்மலர்க் கமல வாவிக்
கழனிசூழ் சாத்த மங்கை
நான்மறை நீல நக்கர்
திருத்தொழில் நவிலல் உற்றேன்.
| [45] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.260  
திரு நீல நக்க
பண் - ( )
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
| [1] |
நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.
| [2] |
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.
| [3] |
சீலம் உய்த்தவத் திருமறை
யோர்செழு மூதூர்
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள்
விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்தகண் டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார்.
| [4] |
வேத உள்ளுறை யாவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி
யாரையும் நயந்து
பாத அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காத லால்அவை இரண்டுமே
செய்கருத் துடையார்.
| [5] |
மெய்த்த ஆகம விதிவழி
வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு
நியமமுஞ் செய்தே
அத்தர் அன்பருக் கமுதுசெய்
விப்பது முதலா
எத்தி றத்தன பணிகளும்
ஏற்றெதிர் செய்வார்.
| [6] |
ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.
| [7] |
உறையு ளாகிய மனைநின்றும் ஒருமைஅன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கும்
முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார்
தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தினர்
எல்லையில் தவத்தோர்.
| [8] |
அணைய வந்துபுக் கயவந்தி
மேவிய அமுதின்
துணைம லர்க்கழல் தொழுதுபூ
சனைசெயத் தொடங்கி
இணைய நின்றங்கு வேண்டுவ
மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச்
சனைமுறை உய்த்தார்.
| [9] |
நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்
தேடு மாமறைப் பொருளினைத்
தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத் துணர்வுற
இருந்துமுன் நவின்றார்.
| [10] |
தொலைவில் செய்தவத் தொண்டனார்
சுருதியே முதலாங்
கலையின் உண்மையாம் எழுத்தஞ்சுங்
கணிக்கின்ற காலை
நிலையின் நின்றுமுன் வழுவிட
நீண்டபொன் மேருச்
சிலையி னார்திரு மேனிமேல்
விழுந்ததோர் சிலம்பி.
| [11] |
விழுந்த போதில்அங் கயல்நின்ற
மனைவியார் விரைவுற்
றெழுந்த அச்சமோ டிளங்குழ
வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதிமுன்
துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதிமேல்
துமிந்தனர் போக.
| [12] |
பதைத்த செய்கையால் மனைவியார்
முற்செயப் பந்தஞ்
சிதைக்கு மாதவத் திருமறை
யவர்கண்டு தங்கண்
புதைத்து மற்றிது செய்ததென்
பொறியிலாய் என்னச்
சுதைச்சி லம்பிமேல் விழஊதித்
துமிந்தனன் என்றார்.
| [13] |
மனைவி யார்செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல்மணி மார்பர்தம்
பூசனைத் திறத்தில்
இனைய செய்கைஇங் கநுசித மாம்என எண்ணும்
நினைவி னால்அவர் தம்மைவிட் டகன்றிட நீப்பார்.
| [14] |
மின்நெ டுஞ்சடை விமலர்மேல்
விழுந்தநூற் சிலம்பி
தன்னை வேறொரு பரிசினால்
தவிர்ப்பது தவிர
முன்அ ணைந்துவந் தூதிவாய் நீர்ப்பட முயன்றாய்
உன்னை யான்இனித் துறந்தனன்
ஈங்கென உரைத்தார்.
| [15] |
மற்ற வேலையிற் கதிரவன்
மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார்
ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுதுதீர்
பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டருங்
கடிமனை புகுந்தார்.
| [16] |
அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.
| [17] |
பள்ளி கொள்பொழு தயவந்திப்
பரமர்தாங் கனவில்
வெள்ள நீர்ச்சடையோடுதம்
மேனியைக் காட்டி
உள்ளம் வைத்தெமை ஊதிமுன்
துமிந்தபால் ஒழியக்
கொள்ளும் இப்புறஞ் சிலம்பியின்
கொப்புள்என் றருள.
| [18] |
கண்ட அப்பெருங் கனவினை
நனவெனக் கருதிக்
கொண்ட அச்சமோ டஞ்சலி
குவித்துடன் விழித்துத்
தொண்ட னார்தொழு தாடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றிநின் றழுதார்.
| [19] |
போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையுங் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்.
| [20] |
பின்பு முன்னையிற் பெருகிய
மகிழ்ச்சிவந் தெய்த
இன்பு றுந்திறத் தெல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர்
மிகஅணை வார்க்கு
முன்பு போலவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார்.
| [21] |
அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.
| [22] |
பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும்அப் பருவம்
மண்பெ ருந்தவப் பயன்பெற
மருவுநற் பதிகள்
விண்பி றங்குநீர் வேணியார்
தமைத்தொழ அணைவார்
சண்பை மன்னருஞ் சாத்தமங்
கையில்வந்து சார்ந்தார்.
| [23] |
நீடு சீர்த்திரு நீலகண்
டப்பெரும் பாணர்
தோடு லாங்குழல் விறலியார்
உடன்வரத் தொண்டர்
கூடும் அப்பெருங் குழாத்தொடும்
புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டுளம்
மகிழ்நீல நக்கர்.
| [24] |
கேட்ட அப்பொழு தேபெரு
மகிழ்ச்சியிற் கிளர்ந்து
தோட்ட லங்கலுங் கொடிகளும்
புனைந்துதோ ரணங்கள்
நாட்டி நீள்நடைக் காவண
மிட்டுநற் சுற்றத்
தீட்ட முங்கொடு தாமுமுன்
பெதிர்கொள எழுந்தார்.
| [25] |
சென்று பிள்ளையார் எழுந்தரு
ளுந்திருக் கூட்டம்
ஒன்றி அங்கெதிர் கொண்டுதங்
களிப்பினால் ஒருவா
றன்றி ஆடியும் பாடியும்
தொழுதெழுந் தணைவார்
பொன்ற யங்குநீள் மனையிடை யுடன்கொடு புகுந்தார்.
| [26] |
பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.
| [27] |
அமுது செய்தபின் பகலவன்
மேல்கடல் அணையக்
குமுத வாவியிற் குளிர்மதிக்
கதிரணை போதில்
இமய மங்கைதன் திருமுலை
அமுதுண்டார் இரவும்
தமது சீர்மனைத் தங்கிட
வேண்டுவ சமைத்தார்.
| [28] |
சீல மெய்த்திருத் தொண்டரோ
டமுதுசெய் தருளி
ஞாலம் உய்ந்திட நாயகி
யுடன்நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்தடி
பணிந்துமுன் நின்றார்.
| [29] |
நின்ற அன்பரை நீலகண்
டயாழ்ப் பாணர்க்
கின்று தங்கஓர் இடங்கொடுத்
தருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை
வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடங்கொடுத்
தனர்திரு மறையோர்.
| [30] |
ஆங்கு வேதியில் அறாதசெந்
தீவலஞ் சுழிவுற்
றோங்கி முன்னையில் ஒருபடித்
தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோடயாழ்த் தலைவர்
பாங்கு பாணியா ருடன்அரு
ளாற்பள்ளி கொண்டார்.
| [31] |
கங்கு லிற்பள்ளி கொண்டபின்
கவுணியர் தலைவர்
அங்கு நின்றெழுந் தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்
கரைச்சிறப் பித்தே
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி
கத்தொடை புனைந்தார்.
| [32] |
பதிக நாண்மலர் கொண்டுதம்
பிரான்கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்
கருக்களித் தருளி
எதிர்தொ ழும்பதி களில்எழுந்
தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை
மொழிந்தபூ சுரனார்.
| [33] |
பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.
| [34] |
மேவு நாளில்அவ் வேதியர்
முன்புபோல் விரும்புந்
தாவில் பூசனை முதற்செய்கை
தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராந்
திருமறைச் சிறுவர்
பூவ டித்தலம் பொருந்திய
உணர்வொடும் பயின்றார்.
| [35] |
சண்பை யாளியார் தாமெழுந்
தருளும்எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண்பெ ரும்புக ழவருடன்
பயின்றுவந் துறைந்தார்
திண்பெ ருந்தொண்ட ராகிய
திருநீல நக்கர்.
| [36] |
பெருகு காதலில் பின்நெடு
நாள்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர்
வாழிசீ காழி
ஒருவர் தந்திருக் கல்லியா
ணத்தினில் உடனே
திரும ணத்திறஞ் சேவித்து
நம்பர்தாள் சேர்ந்தார்.
| [37] |
தருதொ ழில்திரு மறையவர்
சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல
நக்கர்தாள் வணங்கி
இருபி றப்புடை அந்தணர்
ஏறுயர்த் தவர்பால்
ஒருமை உய்த்துணர் நமிநந்தி
யார்தொழில் உரைப்பாம்.
| [38] |
Back to Top
சேக்கிழார் திருநின்ற சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.270  
நமிநந்தி அடிகள் நாயனார்
பண் - ( )
வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
| [1] |
மாலை பயிலும் தோரணங்கள்
மருங்கு பயிலும் மணிமறுகு
வேலை பயிலும் புனல்பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேதஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச்செய்.
| [2] |
பணையில் விளைந்த வெண்ணெல்லின் பரப்பின் மீது படச்செய்ய
துணர்மென் கமலம் இடைஇடையே
சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகைமேல்
மணல்வெண் பரப்பின் இடைஇடையே
வளர்த்த செந்தீ மானுமால்.
| [3] |
பெருமை விளங்கும் அப்பதியில்
பேணும் நீற்றுச் சைவநெறி
ஒருமை வழிவாழ் அந்தணர்தம்
ஓங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை உலகும் ஈசர்கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பா ராயினார்.
| [4] |
வாய்மை மறைநூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்
தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப்
பொருளென் றறியுந் துணிவினார்
சாம கண்டர் செய்யகழல்
வழிபட் டொழுகும் தன்மைநிலை
யாம இரவும் பகலும்உணர்
வொழியா இன்பம் எய்தினார்.
| [5] |
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.
| [6] |
செம்பொற் புற்றின் மாணிக்கச்
செழுஞ்சோ தியைநேர் தொழுஞ்சீலம்
தம்பற் றாக நினைந்தணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்துபோந்
தம்பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர்க் கிடமாங் கோயிலினுள்
புக்கு வணங்க நண்ணினார்.
| [7] |
நண்ணி இறைஞ்சி அன்பினால்
நயப்புற் றெழுந்த காதலுடன்
அண்ண லாரைப் பணிந்தெழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்குபல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்
கெடுத்த கருத்தின் இசைந்தெழுவார்.
| [8] |
எழுந்த பொழுது பகற்பொழுதங்
கிறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியி னிடையப்பாற்
செல்லிற் செல்லும் பொழுதென்ன
ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக்
குறுநெய் வேண்டி உள்புகலும்
அழிந்த நிலைமை அமணர்மனை
ஆயிற் றங்கண் அவருரைப்பார்.
| [9] |
கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.
| [10] |
அருகர் மதியா துரைத்தவுரை
ஆற்றா ராகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன்
பெயர்ந்து போந்து பிறையணிந்த
முருகு விரியும் மலர்க்கொன்றை
முடியார் கோயில் முன்எய்தி
உருகும் அன்பர் பணிந்துவிழ
ஒருவாக் கெழுந்த துயர்விசும்பில்.
| [11] |
வந்த கவலை மாற்றும்இனி
மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர்
முகந்து கொடுவந் தேற்றுமென
அந்தி மதியம் அணிந்தபிரான்
அருளால் எழுந்த மொழிகேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வ தறிந்திலரால்.
| [12] |
சென்னி மிசைநீர் தரித்தபிரான்
அருளே சிந்தை செய்தெழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு
நாதர் நாமம் நவின்றேத்தி
அந்நீர் முகந்து கொண்டேறி
அப்பர் கோயில் அடைந்தகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப
முறுக்குந் திரிமேல் நீர்வார்த்தார்.
| [13] |
சோதி விளக்கொன் றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த ததுநோக்கி
ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிருங் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு
நீரால் எரித்தார் நாடறிய.
| [14] |
நிறையும் பரிசு திருவிளக்கு
விடியும் அளவும் நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாம் கொள்ள வேண்டும் நீர்வார்த்து
மறையின் பொருளை அர்ச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.
| [15] |
இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.
| [16] |
வந்து வணங்கி அரனெறியார்
மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளுந் திருப்பணிகள்
முந்த முயன்று பகலெல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத் தரியவிளக்
கெங்கும் ஏற்றி அடிபணிவார்.
| [17] |
பண்டு போலப் பலநாளும்
பயிலும் பணிசெய் தவர்ஒழுகத்
தண்டி அடிக ளால்அமணர்
கலக்கம் விளைந்து சார்வில்அமண்
குண்டர் அழிய ஏழுலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர்கழல்
அமரர் பணியும் அணியாரூர்.
| [18] |
நாத மறைதேர் நமிநந்தி
அடிக ளார்நற் தொண்டாகப்
பூத நாதர் புற்றிடங்கொள்
புனிதர்க் கமுது படிமுதலாம்
நீதி வளவன் தான்வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான்
வேதா கமநூல் விதிவிளங்க.
| [19] |
வென்றி விடையார் மதிச்சடையார்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
என்றுந் திருவா ரூர்ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்
டொன்றுஞ் செயலும் பங்குனிஉத்
திரமாந் திருநாள் உயர்சிறப்பும்
நின்று விண்ணப் பஞ்செய்த
படிசெய் தருளும் நிலைபெற்றார்.
| [20] |
இன்ன பரிசு திருப்பணிகள்
பலவுஞ் செய்தே ஏழுலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர்
மன்னர் அடியார் வழிநிற்பார்
அன்ன வண்ணந் திருவிளையாட்
டாடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்தி
அடிகள் தொழுதார் நாம்உய்ய.
| [21] |
தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.
| [22] |
பொழுது வைகச் சேவித்துப்
புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது தம்மூர் மருங்கணைந்து
தூய மனையுள் புகுதாதே
இழுதும் இருள்சேர் இரவுபுறங்
கடையில் துயில இல்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார்
வந்துள் புகுத மொழிகின்றார்.
| [23] |
திங்கள் முடியார் பூசனைகள்
முடித்துச் செய்யுங் கடன்முறையால்
அங்கி தனைவேட் டமுதுசெய்து
பள்ளி கொள்வீர் எனஅவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்
கெழுச்சி சேவித் துடன்நண்ண
எங்கும் எல்லா ரும்போத
இழிவு தொடக்கிற் றெனைஎன்று.
| [24] |
ஆத லாலே குளித்தடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசையினைத்
தொடங்க வேண்டும் அதற்குநீ
சீத நன்னீர் முதலான
கொண்டிங் கணைவாய் எனச்செப்பக்
காதல் மனையார் தாமும்அவை
கொணரும் அதற்குக் கடிதணைந்தார்.
| [25] |
ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.
| [26] |
மேன்மை விளங்குந் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்என்
றருளிச் செய்தங் கெதிர்அகன்றார்.
| [27] |
ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.
| [28] |
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத் தனைய மணிகண்டர்
வடிவே யாகிப் பெருகொளியால்
மொய்வைத் தமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத் தஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார்.
| [29] |
படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
| [30] |
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி யாகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில்
இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர்
விளம்பப் பெற்ற பெருமையினார்.
| [31] |
இன்ன வகையால் திருப்பணிகள்
எல்லா உலகும் தொழச்செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல்மிகும்
வளர்பொற் சோதி மன்னினார்.
| [32] |
நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.
| [33] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.280  
திருஞான சம்பந்த சுவாமிகள்
பண் - ( )
வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.
| [1] |
சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்.
| [2] |
அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.
| [3] |
அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.
| [4] |
வளம்பயிலும் புறம்பணைப்பால்
வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா
மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ
தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற்
போல்பஉள இலஞ்சிபல.
| [5] |
உளங்கொள்மறை வேதியர்தம்
ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில்
கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி
யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு
வேறிரவும் பகலும்மிகை.
| [6] |
பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.
| [7] |
வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.
| [8] |
காமர்திருப் பதியதன்கண்
வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும்
தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து
துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால்
செழுஞ்சாமம் பாடுமால்.
| [9] |
புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.
| [10] |
வேள்விபுரி சடங்கதனை
விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப்
பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து
அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார்
நெருங்கியுள மணிமறுகு.
| [11] |
விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.
| [12] |
மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.
| [13] |
பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
| [14] |
அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.
| [15] |
மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.
| [16] |
மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்.
| [17] |
மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்.
| [18] |
மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.
| [19] |
பெருத்தெழும்அன் பாற்பெரிய
நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார்
சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும்
காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே
றுலகுய்ய உளதாக.
| [20] |
ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.
| [21] |
அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க.
| [22] |
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.
| [23] |
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.
| [24] |
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.
| [25] |
அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.
| [26] |
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
| [27] |
சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.
| [28] |
பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.
| [29] |
மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.
| [30] |
பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.
| [31] |
பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.
| [32] |
அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
| [33] |
இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.
| [34] |
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.
| [35] |
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.
| [36] |
சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார் .
| [37] |
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.
| [38] |
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
| [39] |
ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
| [40] |
நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.
| [41] |
பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.
| [42] |
ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.
| [43] |
தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.
| [44] |
வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.
| [45] |
நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.
| [46] |
விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.
| [47] |
சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனவழைப்ப.
| [48] |
திருநகையால் அழைத்தவர்தம்
செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப
மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய
உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார்
பெரும்புகலிப் பிள்ளையார்
| [49] |
வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.
| [50] |
தாதியர்தங் கைப்பற்றித்
தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை
தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப்
பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி
விளையாடத் தொடங்கினார்.
| [51] |
சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.
| [52] |
மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.
| [53] |
நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
| [54] |
பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.
| [55] |
மேதகைய இந்நாளில்
வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி
முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது
தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில்
தொடர்ந்தழுது பின்சென்றார்.
| [56] |
பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.
| [57] |
கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.
| [58] |
பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.
| [59] |
நீராடித் தருப்பித்து
நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார்
காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால்
அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார்
பெருங்காவல் பெற்றாராய்.
| [60] |
மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.
| [61] |
கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்.
| [62] |
மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.
| [63] |
அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.
| [64] |
திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.
| [65] |
அழுகின்ற பிள்ளையார்
தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்
திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில்
பொன்வள்ளத் தூட்டென்ன.
| [66] |
ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.
| [67] |
எண்ணரிய சிவஞானத்
தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கணனார் அருள்புரிந்தார்.
| [68] |
யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.
| [69] |
சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்.
| [70] |
எப்பொருளும் ஆக்குவான்
ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார்
அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித்
தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு
துகளாகச் சூழந்தெழுந்தார்.
| [71] |
சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.
| [72] |
எச்சில்மயங் கிடவுனக்கீ
திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும்
ஒருதிருக்கை விரற்சுட்டி.
| [73] |
விண்ணிறைந்த பெருகொளியால்
விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள்
பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த
உயர்ஞானத் திருமொழியால்.
| [74] |
எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம்
மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து.
| [75] |
செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.
| [76] |
மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.
| [77] |
தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.
| [78] |
வேதகா ரணராய
வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்.
| [79] |
திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார்
எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள
னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப்
பிரசமலர் மழைபொழிந்தார்.
| [80] |
வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.
| [81] |
மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.
| [82] |
அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந்தோணி.
| [83] |
அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.
| [84] |
ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.
| [85] |
தாணு வினைத்தனி கண்டு
தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும்
நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு
ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு
காதலர் பின்சென்றார்.
| [86] |
அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.
| [87] |
பொங்கொளி மால்விடை மீது
புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு
வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை
யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர்
ஞானத் தமுதுண்டார்.
| [88] |
இன்னிசை ஏழும் இசைந்த
செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள்
பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண
விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார்.
| [89] |
பேணிய அற்புத நீடருள்
பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர
வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர்
கொண்டு துதிக்கின்றார்.
| [90] |
காழியர் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனையென்பார்.
| [91] |
மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.
| [92] |
புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.
| [93] |
என்றினைய பலகூறி இருக்குமொழி
அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்
மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத
இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்
கொண்டுகளி கூர்ந்து செல்ல.
| [94] |
மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்
தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில்
எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல்
| [95] |
நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.
| [96] |
மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.
| [97] |
தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.
| [98] |
தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.
| [99] |
காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய
மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா
யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.
| [100] |
பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர்
பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார்
குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான்
கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்
ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.
| [101] |
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.
| [102] |
கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.
| [103] |
காழிவரும் பெருந்தகையார் கையில்வருந்
திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி
மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண்
தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
| [104] |
உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.
| [105] |
செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது
தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி
அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி
புரத்தோணிச் சிகரக் கோயில்.
| [106] |
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத்
தருளினார் பூவார் கொன்றை.
| [107] |
எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.
| [108] |
அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
| [109] |
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.
| [110] |
வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.
| [111] |
செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.
| [112] |
தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத்
துடன்போந்தார் ஞான முண்டார்.
| [113] |
தேனலருங் கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்
பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத்
தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல்
தொடைமாலை நவில லுற்றார்.
| [114] |
காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.
| [115] |
ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.
| [116] |
அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.
| [117] |
காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப்
பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
வளம்பதி கொண்டு புக்கார்.
| [118] |
திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.
| [119] |
கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.
| [120] |
பன்னகப் பூணி னாரைப்
பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம்
மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.
| [121] |
வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.
| [122] |
சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.
| [123] |
பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.
| [124] |
முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும்
சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப்
பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி
நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.
| [125] |
மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.
| [126] |
அருமையாற் புறம்பு போந்து
வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம் பந்தர் சார்ந்தார்.
| [127] |
தோணிவீற் றிருந்தார் தம்மைத்
தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந்
திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார்.
| [128] |
வைகுமந் நாளிற் கீழ்பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப்
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
| [129] |
அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.
| [130] |
திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு
மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்.
| [131] |
பெரும்பாணர் வரவறிந்து
பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த்
துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி
மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு
வந்தெய்த மகிழ்சிறந்தார்.
| [132] |
அளவிலா மகிழ்ச்சியினார்
தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த
உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப
இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார்
பாலணையுங் கவுணியனார்.
| [133] |
கோயிலினிற் புறமுன்றிற்
கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள்
இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார்
அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ்
வீக்கிஇசை விரிக்கின்றார்.
| [134] |
தானநிலைக் கோல்வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார்
நான்மறையோர் அதிசயத்தார்.
| [135] |
யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.
| [136] |
எண்ணருஞ்சீர்த் திருத்தோணி
எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப்
பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால்
காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து
நல்விருந்து சிறந்தளிப்ப.
| [137] |
பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.
| [138] |
காழியார் தவப்பயனாம்
கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம்
அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே
எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்.
| [139] |
சிறியமறைக் களிறளித்த
திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர்
பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக
இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப்
பெறவேண்டும் எனத்தொழுதார்.
| [140] |
மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.
| [141] |
சிரபுரத்தில் அமர்ந்தருளுந்
திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம்
பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல்
வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத்
தவமுனிவர்க்கு அருள்செய்தார்.
| [142] |
பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.
| [143] |
தாவில்யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள்
புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும்
புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
திருத்தில்லை வழிச்செல்வார்.
| [144] |
நள்ளி ருட்கண்நின் றாடுவார்
உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க்
கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும்
படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
அணைந்தனர் கவுணியர் குலதீபர்.
| [145] |
வண்டி ரைத்தெழு செழுமலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும்
பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு
எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.
| [146] |
பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.
| [147] |
செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.
| [148] |
கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.
| [149] |
இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.
| [150] |
ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.
| [151] |
பவந்த விர்ப்பவர் தில்லைசூழ்
எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆ
குதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய
பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
னித்தது போன்றது நெடுவானம்.
| [152] |
கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.
| [153] |
பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.
| [154] |
வேத நாதமும் மங்கல
முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந்
தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று
சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம்
பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.
| [155] |
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
| [156] |
மலர்ந்த பேரொளி குளிர்தரச்
சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர்
பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.
| [157] |
நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
| [158] |
நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.
| [159] |
அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.
| [160] |
உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.
| [161] |
ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.
| [162] |
பண்ணார் பதிகத்
திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும்
உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து
வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார்
காலம் பெறஅழுதார்.
| [163] |
முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.
| [164] |
செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.
| [165] |
செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.
| [166] |
கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.
| [167] |
பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.
| [168] |
ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.
| [169] |
அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.
| [170] |
செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.
| [171] |
பொங்கி யெழுங்காதல்
புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார்
திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி
பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று
திருவாயி லுட்புக்கார்.
| [172] |
ஒன்றிய சிந்தை
உருக உயர்மேருக்
குன்றனைய பேரம்
பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும்
மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார்
திருக்களிற் றுப்படிக்கீழ்.
| [173] |
ஆடி னாய்நறு நெய்யொடு
பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு
தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.
| [174] |
இன்ன தன்மையில் இன்னிசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பே
ரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந்
தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.
| [175] |
அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.
| [176] |
பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.
| [177] |
இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.
| [178] |
ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
| [179] |
அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
| [180] |
மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.
| [181] |
வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
| [182] |
தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
| [183] |
ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
| [184] |
கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.
| [185] |
முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.
| [186] |
ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
| [187] |
மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
| [188] |
பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.
| [189] |
இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.
| [190] |
மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.
| [191] |
உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
| [192] |
அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.
| [193] |
இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.
| [194] |
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
| [195] |
நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.
| [196] |
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
| [197] |
அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.
| [198] |
ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
| [199] |
சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
| [200] |
திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.
| [201] |
கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
| [202] |
சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
| [203] |
மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.
| [204] |
இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
| [205] |
அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.
| [206] |
சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.
| [207] |
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.
| [208] |
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.
| [209] |
ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.
| [210] |
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
| [211] |
என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.
| [212] |
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.
| [213] |
எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
| [214] |
பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
| [215] |
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.
| [216] |
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.
| [217] |
வளையும் ஆர்த்தன வயிர்களும்
ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும்
ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின்
ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை
ஆர்த்தது மிசையே.
| [218] |
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.
| [219] |
நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.
| [220] |
செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.
| [221] |
சுற்று மாமறைச் சுருதியின்
பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர்
தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே
முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந்
தான்எனப் பிடிக்க.
| [222] |
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி
நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை
அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந்
தானென ஊத.
| [223] |
தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன்
மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத்
துறையைவந் தணைந்தார்.
| [224] |
வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.
| [225] |
மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.
| [226] |
சூடி னார்கர கமலங்கள்
சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்
அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்
கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏ
ழிசையொடும் பயில.
| [227] |
இசைவி ளங்கிட இயல்பினில்
பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார்
அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள்
பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன்
அப்பதி அமர்ந்தார்.
| [228] |
தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.
| [229] |
விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.
| [230] |
அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
| [231] |
சிவிகை முத்தினிற் பெருகொளி
திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி
கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர்
குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந்
தருளினார் போந்தார்.
| [232] |
மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.
| [233] |
உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.
| [234] |
அனைய செய்கையால் எதிர்கொளும்
பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர்
கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி
பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர்
மகிழ்பெரும் பழுவூர்.
| [235] |
அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
| [236] |
மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
| [237] |
பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
| [238] |
அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
| [239] |
விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.
| [240] |
புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
| [241] |
அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.
| [242] |
திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
| [243] |
ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
| [244] |
மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.
| [245] |
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.
| [246] |
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
| [247] |
வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.
| [248] |
இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.
| [249] |
ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.
| [250] |
மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
| [251] |
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
| [252] |
நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
| [253] |
அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.
| [254] |
பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
| [255] |
மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.
| [256] |
பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.
| [257] |
ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.
| [258] |
கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.
| [259] |
திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
| [260] |
பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.
| [261] |
மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
| [262] |
செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
| [263] |
ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
| [264] |
சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.
| [265] |
மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
| [266] |
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.
| [267] |
பந்தணை மெல்விர லாளும்
பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த
வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர்
திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர்.
| [268] |
வாக்கின் பெருவிறல் மன்னர்
வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ்
புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்
றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும்
எதிர்கொள எய்தும் பொழுதில்.
| [269] |
சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.
| [270] |
கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.
| [271] |
பேரிசை நாவுக் கரசைப்
பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு
திருமா ளிகையினில் சேர்ந்தார்.
| [272] |
அணையுந் திருந்தொண்டர் தம்மோ
டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி
இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்
| [273] |
அந்நாள் சிலநாள்கள் செல்ல
அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும்
மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த
புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார்.
| [274] |
வாக்கின் தனிமன்னர் ஏக
மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித்
தொழுதங் குறைகின்ற நாளில்.
| [275] |
செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று
வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம்
தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு.
| [276] |
நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப்
பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.
| [277] |
இன்னிசை பாடின எல்லாம்
யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வான
மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார்
புகலியிற் போற்றி யிருந்தார்.
| [278] |
அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
| [279] |
பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.
| [280] |
ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.
| [281] |
அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.
| [282] |
சின்னந் தனிக்காளந் தாரை
சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்க
ஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த
முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார்
வந்தெதிர் கொண்டு வணங்க.
| [283] |
சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.
| [284] |
திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.
| [285] |
போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிக மணிந்தார்.
| [286] |
நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.
| [287] |
அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.
| [288] |
திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார்
வேதம் தமிழால் விரித்தார்.
| [289] |
அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.
| [290] |
செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.
| [291] |
திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும்
இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
| [292] |
கஞ்சனூ ராண்டதங் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங் கலக்குடி சேர்ந்தார்.
| [293] |
வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.
| [294] |
திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.
| [295] |
மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
| [296] |
இன்னம்பர் மன்னும்பி ரானை
இறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப்
பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப்
புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி
வடகுரங் காடு துறையில்.
| [297] |
வடகுரங் காடு துறையில்
வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில்
அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார்
பழனத் திருப்பதி சார்ந்தார்.
| [298] |
பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி
உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்றடை கின்றார்.
| [299] |
மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.
| [300] |
வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
| [301] |
மணிவீதி இடங்கடந்து மாலயனுக்
கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி
உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்
தெழுந்தன்பாற் பரவு கின்றார்.
| [302] |
கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்
திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு
வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம்
ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து பாய.
| [303] |
பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள்
நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து
பெருகார்வங் கூரு நாளில்.
| [304] |
குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங்
கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு
நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா
லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை
மழபாடி போற்றச் சென்றார்.
| [305] |
செங்கைமான் மறியார்தந் திருமழபா
டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம்
எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
போற்றிசைத்தே கோயில் புக்கார்.
| [306] |
மழபாடி வயிரமணித் தூணமர்ந்து
மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத்
தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.
| [307] |
அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர்
பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்
பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந்
துறையணைந்தார் மணிநூல் மார்பர்.
| [308] |
சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.
| [309] |
அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.
| [310] |
அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த
அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ
மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந்
தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத்
தானும்மனந் தளர்வு கொள்வான்.
| [311] |
மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.
| [312] |
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.
| [313] |
மாநகரம் அலங்கரிமின் மகரதோ
ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக
இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
தொழுதணைந்தான் மழவர் கோமான்.
| [314] |
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.
| [315] |
மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.
| [316] |
கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
| [317] |
அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.
| [318] |
பன்னு தமிழ்மறை யாம்பதிகம்
பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.
| [319] |
வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.
| [320] |
நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
| [321] |
பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து
தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.
| [322] |
செங்கட் குறவரைத் தேவர்போற்றுந்
திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து
கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார்
கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.
| [323] |
அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.
| [324] |
அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.
| [325] |
தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.
| [326] |
அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.
| [327] |
ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.
| [328] |
அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.
| [329] |
மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.
| [330] |
நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.
| [331] |
அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.
| [332] |
அந்நாளில் கொடிமாடச்
செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா
ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில்
பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து
மூள்வதுபோல் முடுகுதலும்.
| [333] |
அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.
| [334] |
அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.
| [335] |
ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.
| [336] |
அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.
| [337] |
பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.
| [338] |
செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.
| [339] |
பன்னெடுங் குன்றும் படர்நெடுங்
கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின
எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர்
பராய்த்துறை யுட்புகுந்தார்.
| [340] |
நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.
| [341] |
தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.
| [342] |
கற்குடி மாமலை மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.
| [343] |
செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.
| [344] |
விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
பரவிநின் றேத்தினர் பான்மையினால்.
| [345] |
நாரணன் நான்முகன் காணாவுண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை
செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை
ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை
ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.
| [346] |
கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.
| [347] |
ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
| [348] |
நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும்
இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள்
அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
| [349] |
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.
| [350] |
அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.
| [351] |
கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.
| [352] |
வினவி எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.
| [353] |
அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.
| [354] |
தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.
| [355] |
இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.
| [356] |
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
| [357] |
எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
| [358] |
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.
| [359] |
பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
| [360] |
மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.
| [361] |
சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.
| [362] |
தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
| [363] |
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
| [364] |
காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
| [365] |
மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
| [366] |
நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.
| [367] |
வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
| [368] |
பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.
| [369] |
அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.
| [370] |
நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.
| [371] |
வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.
| [372] |
பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
| [373] |
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.
| [374] |
பழுதில் சீர்த்திருப் பரிதிநன்
| [375] |
பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.
| [376] |
பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.
| [377] |
மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.
| [378] |
மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.
| [379] |
கலந்த அன்பர்கள் தொழுதெழக்
கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம்
குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்
கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம்
இறைஞ்சியுட் புகுந்தார்.
| [380] |
மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.
| [381] |
ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
| [382] |
புலங்கொள் இன்தமிழ் போற்றினர்
புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப்
பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள்
நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம்
முடன் மகிழ்ந்தார்.
| [383] |
மகிழ்ந்த தன்தலை வாழும்அந்
நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர்
ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ்
கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின்
முதிர்ந்தது வேனில்.
| [384] |
தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.
| [385] |
அறல்மலியுங் கான்யாற்றின்
நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று
பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள்
தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப்
பனிப்புறத்து வதியுமால்.
| [386] |
நீணிலைமா ளிகைமேலும்
நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும்
மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த
பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து
மாந்தர்கலந் துறைவரால்.
| [387] |
மயிலொடுங்க வண்டாட
மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல்
தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும்
துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும்
வேனில்விரி தருநாளில்.
| [388] |
சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.
| [389] |
திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.
| [390] |
திருச்சத்தி முற்றத்தில்
சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள்
ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல்
கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச்
சரம்பணிய மேவுங்கால்.
| [391] |
வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.
| [392] |
அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.
| [393] |
அதுபொழுதே அணிமுத்தின்
பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு
பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர்
மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர்
பூம்பந்த ரும்போலும்.
| [394] |
தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.
| [395] |
பாரின்மிசை அன்பருடன்
வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த
அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப
எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன்
திருப்பட்டீச் சரம்அணைந்தார்.
| [396] |
சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.
| [397] |
அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.
| [398] |
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.
| [399] |
தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.
| [400] |
வண்டமிழின் மொழிவிரகர்
மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங்
கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை
அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம்
பரம்பொருளைப் பாடுவார்.
| [401] |
நிகரிலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக்
கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள்
தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின்
பொருள்விரியப் பாடினார்.
| [402] |
பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.
| [403] |
அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
| [404] |
போற்றிசைத்துப் புனிதரருள்
பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந்
தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த
இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக்
குடமூக்கு நண்ணினார்.
| [405] |
தேமருவு மலர்ச்சோலைத்
திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத்
தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு
தம்பதியில் கொடுபுக்கார்.
| [406] |
திருஞான சம்பந்தர்
திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை
வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக்
குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று
பெருகிசையால் பரவினார்.
| [407] |
வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.
| [408] |
பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு
வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால்
தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார்
கழல்பணிந்து கண்களித்தார்.
| [409] |
கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.
| [410] |
திருநாகேச் சரத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த
கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர்
பெருகார்வத் தின்புற்றார்.
| [411] |
மாநாகம் அருச்சித்த
மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார்
பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர்
பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித்
தடங்கரைபோய்ப் புகுகின்றார்.
| [412] |
ஓங்குதிருப் பதிகம்ஓ
டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி
தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான்
இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால்
பாடிஎழுந் தருளினார்.
| [413] |
அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.
| [414] |
பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.
| [415] |
மருங்குளநற் பதிகள்பல
பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து
குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து
பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம்
அருள்செய்து பரவினார்.
| [416] |
அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.
| [417] |
மூவ ருக்கறி வரும்பொரு
ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு
துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல்
தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ
தரவுடன் கலந்தார்.
| [418] |
வந்த ணைந்தவர் தொழாமுனம்
மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப்
பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங்
கோயில்முன் சென்றார்.
| [419] |
நீடு கோபுரம் இறைஞ்சியுள்
புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்
தருந்தமிழ் நவின்றார்.
| [420] |
அன்பு நீடிய அருவிகண்
பொழியும்ஆர் வத்தால்
முன்பு போற்றியே புறம்பணை
முத்தமிழ் விரகர்
துன்பு போமனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவிஅப் பதியினில்
இனிதமர்ந் திருந்தார்.
| [421] |
மேவி அங்குறை நாளினில்
வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந்
தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற
எதிர்நின்று புகன்றார்.
| [422] |
தந்தை யார்மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன
ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள்
அன்றோஎன எழுந்தார்.
| [423] |
சென்று தேவர்தம் பிரான்மகிழ்
கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி
வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார்.
| [424] |
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா
லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன்
னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்
தஞ்சலி அளித்தார்.
| [425] |
நச்சி இன்தமிழ் பாடிய
ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய
இறைவர்இன் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன்
விரைந்தகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன்ஆ
யிரக்கிழி யொன்று.
| [426] |
வைத்த பூதம்அங் கணைந்துமுன்
நின்றுநல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன்னுல
வாக்கிழி உமக்கு
நித்த னாரருள் செய்ததென்
றுரைக்கநேர் தொழுதே
அத்த னார்திரு வருள்நினைந்
தவனிமேற் பணிந்தார்.
| [427] |
பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.
| [428] |
ஆதிமாமறை விதியினால்
ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே
புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும்
திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால்.
| [429] |
என்று கூறிஅங் கவர்தமை
விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும்
புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்தினி திருந்தார்.
| [430] |
அண்ண லார்திரு வாவடு
துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி
னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர்
போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக்
கோழம்பஞ் சேர்ந்தார்.
| [431] |
கொன்றை வார்சடை முடியரைக்
கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா
டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர்
சிரபுரச் செல்வர்.
| [432] |
வைகல் நீடுமா டக்கோயில்
மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்
தெழுந்துகண் ணருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ்
மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்த ராய்த்திர
நல்லத்தில் நண்ணி.
| [433] |
நிலவு மாளிகைத் திருநல்லம்
நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன்
தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி
பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா
டக்கோயில் அடைந்தார்.
| [434] |
மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.
| [435] |
திரைத்த டம்புனல் பொன்னிசூழ்
திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும்
வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந்
துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத
லார்கழல் பணிந்தார்.
| [436] |
மூவ லூருறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப்
புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு
துறையினில் வந்தார்.
| [437] |
மல்கு தண்டலை மயிலாடு
துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோ
டெதிர்கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக்
கோயில்புக் கிறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்முன்
பெருகிட எழுந்தார்.
| [438] |
உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை
விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி
மருவுதல் மகிழ்ந்தார்.
| [439] |
அத்தி ருப்பதி யகன்றுபோய்
அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம்
பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப்
பதிகம்முன் பகர்ந்தார்.
| [440] |
பாடும் அப்பதி பணிந்துபோய்ப்
பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறைமறை வேந்தர்.
| [441] |
பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.
| [442] |
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்.
| [443] |
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
பயிற்றும்பே றருளிச் செய்தார்.
| [444] |
கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
| [445] |
அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
யான்காட்டப் பெறுவ னென்றார்.
| [446] |
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
நிலத்தநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த.
| [447] |
வண்புகலி வேதியனார் மாதர்மடப்
பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
இடஅடங்கிற் றில்லை யன்றே.
| [448] |
அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.
| [449] |
வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர்பணித் தருளு கின்றார்.
| [450] |
ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
| [451] |
சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
| [452] |
அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
பதிபிறவும் பணியச் செல்வார்.
| [453] |
பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.
| [454] |
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.
| [455] |
உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.
| [456] |
யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.
| [457] |
பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.
| [458] |
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
| [459] |
நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.
| [460] |
அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தங்
கோயில்மருங் கணைந்து வானோர்
உயவந்தித் தெழுமுன்றில் புடைவலங்கொண்
டுட்புக்கா றொழுகுஞ் செக்கர்
மயவந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து
மாதவம் இவ்வைய மெல்லாம்
செயவந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்தெழுந்து திருமுன் னின்றார்.
| [461] |
போற்றிசைக்கும் பாடலினால் பொங்கியெழும்
ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
துதித்துப்போந் தெல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
மனையிலெழுந் தருளி அன்பால்
ஆற்றும்விருந் தவர்அமைப்ப அன்பருடன்
இன்புற்றங் கமுது செய்தார்.
| [462] |
நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.
| [463] |
கோதிலா ஆரமுதைக் கோமளக்கொம்
புடன்கூடக் கும்பிட் டேத்தி
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
இசைப்பதிகம் போற்றி செய்தார்.
| [464] |
பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
| [465] |
மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
| [466] |
கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
| [467] |
அருகணையுந் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திருமருவு செங்காட்டங் குடிநின்றும்
சிறுத்தொண்டர் ஓடிச் சென்றங்
குருகுமனங் களிசிறப்ப எதிர்கொண்டு
தம்பதியுட் கொண்டு புக்கார்.
| [468] |
சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங்
குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேதகீதர்.
| [469] |
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
| [470] |
போந்துமா மாத்திரர்தம் போரேற்றில்
திருமனையிற் புகுந்து சிந்தை
வாய்ந்தமா தவரவர்தா மகிழ்ந்தருள
அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்தமால் விடையார்தங் கணபதீச்
சரம்பரவு காதல் கூர
ஏந்துநூ லணிமார்பர் இன்புற்றங்
கன்பருடன் இருந்த நாளில்.
| [471] |
திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத்
தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.
| [472] |
அந்நாளில் ஒருவணிகன் பதிக னாகி
அணைவானோர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயில் மாடு
புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலும் கிளர்ந்த
விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் தன்மை கண்டு
சாயல்இளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்.
| [473] |
வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.
| [474] |
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.
| [475] |
அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.
| [476] |
வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
| [477] |
இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.
| [478] |
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.
| [479] |
வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.
| [480] |
மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.
| [481] |
சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.
| [482] |
பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
| [483] |
மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
| [484] |
புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.
| [485] |
மருகல் அமர்ந்து நிறைந்த கோலர்
மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார்
அங்கமும் வேதமும் என்றெ டுத்து.
| [486] |
கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப் போது கின்றார்.
| [487] |
சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
| [488] |
திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும்
செம்மை முருகனார் மெய்ம்ம கிழ்ந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து
வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து
பூமலி முன்றில் புடைவ லம்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ள ணைந்தார்
ஓதாது ஞானமெ லாமு ணர்ந்தார்.
| [489] |
புக்கெதிர் தாழ்ந்து விழுந்தெ ழுந்து
பூம்புக லூர்மன்னு புண்ணி யரை
நெக்குரு குஞ்சிந்தை அன்பு பொங்க
நிறைமலர்க் கண்ணீ ரருவி செய்ய
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி
மேவிய ஏழிசை பாடிப் போந்து
திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல அவர்மடஞ் சென்று புக்கார்.
| [490] |
ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.
| [491] |
மற்றத் திருப்பதி வைகு நாளில்
வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப்
பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
| [492] |
நாவுக் கரசர் எழுந்த ருளும்
நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
| [493] |
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.
| [494] |
மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.
| [495] |
அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட
அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண்
தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி
மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க்
குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.
| [496] |
சொற்பெரு வேந்தருந் தோணி மூதூர்த்
தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்ற ணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி
விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும்
பாடல னான்மறை பாடிப் போந்தார்.
| [497] |
துணரிணர்ச் சோலையுஞ் சாலி வேலித்
துறைநீர்ப் பழனமுஞ் சூழ்க ரும்பின்
மணமலி கானமும் ஞானம் உண்டார்
மருங்குற நோக்கி மகிழ்ந் தருளி
அணைபவர் அள்ளற் கழனி ஆரூர்
அடைவோம் எனமொழிந் தன்பு பொங்கப்
புணரிசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன்மதி லாரூர்ப் புறத்த ணைந்தார்.
| [498] |
வானுயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும்
தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப்
பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத்
திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
| [499] |
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேற் பொலிவ தென்ன
எங்குங் குளிரொளி வீசு முத்தின்
இலங்கு சிவிகை இழிந்த ருளிச்
செங்கை நிறைமலர் கொண்டு தூவித்
திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான்அர சாளும் ஆரூர்
தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.
| [500] |
படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார்முடிவுறக் காண்பார்.
| [501] |
நான மான்மத நளிர்பெருஞ்
சேற்றிடை நறும்பொன் தூந றுந்துகள் சொரிதலிற்
சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்
தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது
மலர்மது மாரி.
| [502] |
ஆடல் நீடுவ துகிற்கொடி
கொடிகள் அணிகுழற் தோடு சூழ்வன சுரும்பொடு
தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ
ரணநிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்
களின்மருங் கெல்லாம்.
| [503] |
மாலை சூழ்புறங் கடைகளின்
மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன்
கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர
நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே
திகைமலர்ப் பந்தர்.
| [504] |
தழைம லர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங்
கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம்
யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின
மங்கல இயங்கள்.
| [505] |
விரவு பேரணி வேறுவே
றின்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ்
பெருந்திரு வாரூர்
அரச ளிப்பவர் அருளினால்
அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்தணைந்
தெதிர்கொளும் பொழுது.
| [506] |
வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங்
குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம்
பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ
ளுங்கொல்என் றிசைத்தார்.
| [507] |
ஆன அத்திருப் பதிகம்முன்
பாடிவந் தணையும்
| [508] |
மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.
| [509] |
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம்
பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச்
செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப்
பலமுறை பணிந்தார்.
| [510] |
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.
| [511] |
செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி
கத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை
வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர்
திருமடத் தணைந்தார்.
| [512] |
அங்க ணைந்தமர்ந் தருளுவார்
அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி
| [513] |
புற்றி டங்கொளும் புனிதரைப்
போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப்
பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க
ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகுமந் நாளில்.
| [514] |
மல்லல் நீடிய வலிவலங்
கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம்
பதிபல தொழுதே
எல்லை யில்திருப் பதிகங்க
ளாற்பணிந் தேத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும்
ஆரூர்தொழ அணைந்தார்.
| [515] |
ஊறு காதலில் ஒளிவளர்
புற்றிடங் கொண்ட
ஆறு லாவிய சடைமுடி
ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வென நிகழ்திருத்
தொண்டர்க ளோடும்
ஈறி லாத்திரு ஞானசம்
பந்தர்அங் கிருந்தார்.
| [516] |
அங்கு நன்மையில் வைகும்அந்
நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக்
கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ
அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார்.
| [517] |
புவனவா ரூரினிற் புறம்புபோந்
ததனையே நோக்கிநின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ
உய்யுமா றறிதிஅன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற
வாதென்று செங்கைகூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப்
பதிகமுன் பாடினாரே.
| [518] |
காழியார் வாழவந் தருள்செயும்
கவுணியப் பிள்ளை யார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்
ஆரூர்பணிந் தரிது செல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந்
தார்பனை யூர்ப ணிந்து
வாழிமா மறையிசைப் பதிகமும்
பாடிஅப் பதியில் வைகி.
| [519] |
அங்குநின் றரிதெழுந் தருளுவார்
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந்
தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத்
தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப்
புனல்வயற் புகலூர் சார.
| [520] |
நாவினுக் கரசரும் நம்பிசீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா
னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார்
போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே
விமலர்கோ யிலைஅ டைந்தார்.
| [521] |
தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்
சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்
பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்
தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்
இனிதின்அங் குறையு நாளில்.
| [522] |
நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்
செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்
தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்
தருளினார் காழி நாடர்.
| [523] |
கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்
பதிகமுன் னான பாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்
பெருமைசால் புறவி ளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்
உள்ளமெய்க் காதல் கூர
நம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன்
நண்ணியே தொழந யந்தார்.
| [524] |
புள்ள லம்புதண் புனற்புக
லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக்
கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
| [525] |
கண்ண கன்புக லூரினைத்
தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்
கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்
கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.
| [526] |
நாயனார்உமக் களித்தருள்
செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந்
தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான்
பின்வரப் போவதென் றருள்செய்தார்.
| [527] |
என்று பிள்ளையார் மொழிந்தருள்
செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே
செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு
நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
| [528] |
சண்பை மன்னருந் தம்பிரான்
அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக்
கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங்
கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.
| [529] |
அம்பர் மாநகர் அணைந்துமா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன்
பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.
| [530] |
தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங்
காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார்
வாழவந் தருளிய மறைவேந்தர்.
| [531] |
பொருவி லாதசொற் புல்குபொன்
னிறமுதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவினார்ந்தகோச் செங்கணான்
அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர்
மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன்
பரவினார் பேணிய உணர்வோடும்.
| [532] |
இன்ன வாறுசொல் மாலைக
ளால்துதித் திறைஞ்சிஅங் கமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக்
காதல்செய் தருளிப் போய்
மன்னு கோயில்கள் பிறபதி
வணங்கியே வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவுறக்
கலயரோ டடியவர் எதிர்கொண்டார்.
| [533] |
மற்றவ் வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு
காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை
யானெனும் பதிகஇன் னிசைபாடி.
| [534] |
பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
| [535] |
சிறப்பு டைத்திருப் பதியத
னிடைச்சில நாளமர்ந் தருளோடும்
விறற்பெ ருங்கரி யுரித்தவர்
கோயில்கள் விருப்பொடுந் தொழச் செல்வார்
மறைப்பெ ருந்திருக் கலயரும்
உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ ரும்பயன் அனையஅத்
தொண்டரோ டணைந்தனர் திருவாக்கூர்.
| [536] |
தக்க அந்தணர் மேவும்அப்
பதியினிற் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப்
பணிந்திசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன்
தொழுதுபோய் மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்
றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.
| [537] |
பாம்பு ரத்துறை பரமரைப்
பணிந்துநற் பதிகஇன் னிசைபாடி
வாம்பு னற்சடை முடியினார்
மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றிக்
காம்பி னில்திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனியம் பணைநீங்கித்
தேம்பொ ழில்திரு வீழிநன்
மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
| [538] |
அப்பொழுதின் ஆண்ட
அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள்
வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும்
பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந்
தணைந்தங் கெதிர்கொண்டார்.
| [539] |
நிறைகுடந்தூ பந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம்
நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப
மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை
எதிர்கொள்வர வேற்றார்.
| [540] |
வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.
| [541] |
அப்போ தரையார்
விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத்
தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார்
தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற்
கொண்டு கவுணியனார்.
| [542] |
நாவின் தனிமன்னர்
தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த
கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான்
போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு
சிந்தைவியப் பெய்தினார்.
| [543] |
வலங்கொண்டு புக்கெதிரே
வந்து வரநதியின்
சலங்கொண்ட வேணித்
தனிமுதலைத் தாழ்ந்து
நிலங்கொண்ட மேனியராய்
நீடுபெருங் காதல்
புலங்கொண்ட சிந்தையினால்
பொங்கியிசை மீப்பொழிந்தார்.
| [544] |
போற்றிச் சடையார்
புனலுடையான் என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத்
தமிழ்மாலைச் சந்தவிசை
ஆற்ற மிகப்பாடி
ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ்
நின்றலைந்து நீடினார்.
| [545] |
நீடியபே ரன்புருகி
உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப்
பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள்
ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில்
புறத்தரிது வந்தணைந்தார்.
| [546] |
வந்தணைந்து வாழ்ந்து
மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும்
செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச்
சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார்
அங்கோர் மடத்தமர்ந்தார்.
| [547] |
அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
| [548] |
ஓங்குபுனற் பேணு
பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப்
பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர்வீழி மிழலையினில்
மீண்டும் அணைந்
தாங்கினிது கும்பிட்
டமர்ந்துறையும் அந்நாளில்.
| [549] |
சேணுயர் மாடப் புகலி யுள்ளார்
திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை
கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து
வீழி மிழலையில் வந்த ணைந்தார்.
| [550] |
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்
தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம்
வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி
எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.
| [551] |
சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார்
பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ
டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.
| [552] |
என்றவர் விண்ணப்பஞ் செய்த போதில்
ஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்
நன்றிது சாலவுந் தோணி மேவும்
நாதர் கழலிணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும்
இறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே
அன்று புகலி அரும றையோர்க்
கருள்செய் தவர்க்கு முகமளித்தார்.
| [553] |
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க் காய விருந்த ளிப்பப்
பாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து
பரம்பொரு ளானார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத்
திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்
கனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.
| [554] |
தோணியில் நாம்அங் கிருந்த வண்ணம்
தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின் றிழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்
பேணும் படியால் அறிதி என்று
பெயர்ந்தருள் செய்யப் பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.
| [555] |
அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே
அதிசயித் துச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த
விண்ணிழி கோயிலிற் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணி மேல்முன்
வணங்கும் படியங்குக் கண்டு வாழ்ந்து
குறியிற் பெருகுந் திருப்ப திகம்
குலவிய கொள்கையிற் பாடு கின்றார்.
| [556] |
மைம்மரு பூங்குழல் என்றெ டுத்து
மாறில் பெருந் திருத்தோணி தன்மேற்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலங் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்த கோயில்
திகழ்ந்த படிஇது என்கொல் என்று
மெய்ம்மை விளங்குந் திருப்ப திகம்
பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.
| [557] |
செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.
| [558] |
பிரம புரத்தி லமர்ந்த முக்கட்
பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்குஞ் சென்று
விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டங்
கமர்ந்த வகையிங் களித்த தென்று
தெரிய வுரைத்தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
| [559] |
என்று கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய் உறைந்தார்.
| [560] |
சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும்
பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி
ஓங்கிய நாவுக் கரச ரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர
மேவி இனிதங் குறையும் நாளில்.
| [561] |
மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
| [562] |
வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.
| [563] |
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்தவிர்வ தாகும் என்றே
அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
| [564] |
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.
| [565] |
காதலொடுந் தொழுதெடுத்துக் கொண்டு நின்று
கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர்விரும் படியார்கள் நாளும் நாளும்
நல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று
தீதில்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறிநெய்பால் தயிரென் றின்ன
ஏதமுறா தினி துண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.
| [566] |
நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.
| [567] |
திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..
| [568] |
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்.
| [569] |
மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.
| [570] |
அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெய்யத் தொண்டர்அள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தா ருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாகத்
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்
கரசர்இவர் பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
| [571] |
அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
அனைத்துயிருந் துயர்நீங்கி அருளி னாலே
புவனமெலாம் பொலிவெய்துங் காலம் எய்தப்
புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடுங் கூடத்
தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழுந் தானங்கள் வணங்கப் போவார்
தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.
| [572] |
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.
| [573] |
நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
| [574] |
மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.
| [575] |
கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
| [576] |
முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.
| [577] |
சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.
| [578] |
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்
| [579] |
அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.
| [580] |
அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.
| [581] |
பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
| [582] |
மற்றது கண்ட போதே வாக்கின்மன்
னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட
அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு
மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி
குறுகிப் புக்கார்.
| [583] |
கோயிலுட் புகுவார் உச்சி
குவித்தசெங் கைக ளோடும்
தாயினும் இனிய தங்கள்
தம்பிரா னாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்ய ராகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.
| [584] |
அன்பினுக் களவு காணார்
ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி
இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்
மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப்
பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
| [585] |
புறம்புவந் தணைந்த போது
புகலிகா வலரை நோக்கி
நிறங்கிளர் மணிக்க பாடம்
நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி
யருளும்நீர் என்றார் தீய
மறம்புரி அமணர் செய்த
வஞ்சனை கடக்க வல்லார்.
| [586] |
அன்றர சருளிச் செய்ய
அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை
விருப்பினாற் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல்
இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு
நிரம்பிட அடைத்த தன்றே.
| [587] |
அடைத்திடக் கண்டு சண்பை
ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாருந்
தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பொழிந் திழிந்த தெங்கும்
பூமழை புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை
நிரம்பிட நவின்று போற்றி.
| [588] |
அத்திரு வாயில் தன்னில்
அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த
வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து
வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
| [589] |
அருமறை யான வெல்லாம்
அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும்
எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள.
| [590] |
வேதங்கள் எண்ணில் கோடி
மிடைந்துசெய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார்
இருவருஞ் செய்து வைத்தார்
நாதங்கொள் வடிவாய் நின்ற
நதிபொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர்
பெருமையார் பகரும் நீரார்.
| [591] |
திருமறை நம்பர் தாமுன்
பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே
வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க்
கிடையீடு பெரிதா மன்றே.
| [592] |
இவ்வகை திரும றைக்காட்
டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின்
வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே
வாஎன அருளிப் போக.
| [593] |
கண்டஅப் போதே கைகள்
குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு
மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக்
கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின்
போயினார் ஆர்வத் தோடும்.
| [594] |
அங்கவர் ஏகச் சண்பை
ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப
எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று
தாமும்அங் கணையப் போந்தார்.
| [595] |
அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத்
தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி
இருவரும் போற்றி செய்தார்.
| [596] |
நீடுசீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால்
பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க
இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார்
திருமறைக் காடு சேர்ந்தார்.
| [597] |
சண்பைநா டுடைய பிள்ளை
தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ
மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங்
கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப்
பரவிஅங் கிருந்தா ரன்றே.
| [598] |
இவ்வகை இவர்கள் அங்கண்
இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா
வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை
கழியமுன் கலங்குங் காலை.
| [599] |
தென்னவன் தானும் முன்செய்
தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை
அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி
நவைநெறி நடந்த தன்றே.
| [600] |
பூழியர் தமிழ்நாட் டுள்ள
பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.
| [601] |
பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவ ரெங்கு மாகி
அறியும்அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.
| [602] |
வரிசிலைத் தென்ன வன்தான்
உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப்
பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங்
குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச்
சைவம்அங் கெய்தா தாக.
| [603] |
ஆங்கவர் தாங்கள் அங்கண்
அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச்
சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு
புலப்படா வகைகொண் டுய்த்தார்.
| [604] |
இந்நெறி யொழுகு கின்றார்
ஏழுல குய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர்
வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார்
திருமறைக் காடு சேர்ந்த
நன்னிலை கன்னி நாட்டு
நல்வினைப் பயத்தாற் கேட்டார்.
| [605] |
கேட்டஅப் பொழுதே சிந்தை
கிளர்ந்தெழு மகிழ்ச்சி பொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா
மரைநகை முகத்த ராகி
வாட்படை அமைச்ச னாரும்
மங்கையர்க் கரசி யாரும்
சேட்படு புலத்தா ரேனுஞ்
சென்றடி பணிந்தார் ஒத்தார்.
| [606] |
காதலால் மிக்கோர் தாங்கள்
கைதொழு கருத்தி னாலே
போதவிழ் சோலை வேலிப்
புகலிகா வலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று
பரிசன மாக்கள் தம்மை
மாதவஞ் சுருதி செய்த
மாமறைக் காட்டில் விட்டார்.
| [607] |
ஆங்கவர் விடமுன் போந்த
அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார்.
| [608] |
திருமறைக் காடு நண்ணிச்
சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம்
வாயில்கா வலர்க்குச் சொன்னார்.
| [609] |
மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.
| [610] |
புகலிகா வலர்தாங் கேட்டுப்
பொருவிலா அருள்முன் கூர
அகமலர்ந் தவர்கள் தம்மை
அழையும்என் றருளிச் செய்ய
நகைமுகச் செவ்வி நோக்கி
நற்றவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத்
தலையினால் வணங்கி நின்றார்.
| [611] |
நின்றவர் தம்மை நோக்கி
நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம்
மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக்
குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி
நற்பதம் போற்று வார்கள்.
| [612] |
கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.
| [613] |
என்றவர்கள் விண்ணப்பஞ் செய்த பின்னை
ஏறுயர்த்த சிவபெருமான் தொண்ட ரெல்லாம்
நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே யாக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித் தங்கு
நின்றசெயல் சிவனடியார் செயலே யாக
நினைந்தருள வேண்டும்என நின்று போற்ற.
| [614] |
மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.
| [615] |
அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.
| [616] |
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்
கரசும்அதற் குடன்பாடு செய்து தாமும்
அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது
புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்.
| [617] |
வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.
| [618] |
திருநாவுக் கரசரும் அங்கிருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்றம்
உயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணும் உள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணீற்
றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலாம் என்ன
மாதவரார்ப் பொலிவையம் நிறைந்த தன்றே.
| [619] |
பொங்கியெழுந் திருத்தொண்டர்
போற்றிசைப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழங்க
மறைமுழங்க மழைமுழங்கும்
சங்கபட கம்பேரி
தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப
இருவிசும்பு கொடிதூர்ப்ப.
| [620] |
மலர்மாரி பொழிந்திழிய
மங்கலவாழ்த் தினிதிசைப்ப
அலர்வாசப் புனற்குடங்கள்
அணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்கள்
நிரைத்தடியார் எதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையார்
இடம்பலவுங் கைதொழுவார்.
| [621] |
தெண்டிரைசூழ் கடற்கானல்
திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி
அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு
சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார்
தோணிபுரத் தோன்றலார்.
| [622] |
கண்ணார்ந்த திருநுதலார்
மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா
வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும்
மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப்
பரவியே செல்கின்றார்.
| [623] |
திருவுசாத் தானத்துத்
தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிகம்
மால்போற்றும் படிபாடி
இருவினையும் பற்றறுப்பார்
எண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப்
பிறபதியும் பணிந்தணைவார்.
| [624] |
கருங்கழிவே லைப்பாலைக்
கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனல்நாட்டுத்
தென்மேல்பால் திசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி
மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த
நிறைமருத வழிச்சென்றார்.
| [625] |
சங்கங்கள் வயலெங்கும்
சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக்
குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம்
ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர்
இவைகழிய எழுந்தருளி.
| [626] |
தடமெங்கும் புனல்குடையும்
தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள்
ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்
மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா
நற்பதிகள் அவைகடந்து.
| [627] |
நீர்நாடு கடந்தருளி
நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக்
கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர்
புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி
நன்னாடு சென்றணைவார்.
| [628] |
மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
| [629] |
கொடுங்குன்றத் தினிதமர்ந்த
கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை
வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும்
நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத்
தொன்னகர்வந் தணைகின்றார்.
| [630] |
இந்நிலை இவர்வந் தெய்த
எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட்
கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம்
பதைப்பத்தீக் கனாக்க ளோடும்
துன்னிமித் தங்கள் அங்கு
நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.
| [631] |
பள்ளிகள் மேலும் மாடு
பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும்
உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும்
கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில்
பூசலிட் டழிவு சாற்றும்.
| [632] |
பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்.
| [633] |
கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்.
| [634] |
இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்.
| [635] |
அந்நகர் தன்னில் வாழ்வார்
புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் தனக்குங் கூறி
மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய அழுக்கு மெய்யில்
தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம்
எனஎடுத் தியம்ப லுற்றார்.
| [636] |
சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.
| [637] |
குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங்
கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும்
உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை யுற்றார்.
| [638] |
கானிடை நட்ட மாடும்
கண்ணுதல் தொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னில்
| [639] |
மழவிடை இளங்கன் றொன்று
வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி
ஒருவருந் தடுக்க அஞ்சி
விழவொரு புகலு மின்றி
மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்கள் ஏறி
நின்றிடக் கண்டோம் என்பார்.
| [640] |
ஆவதென் பாவி காள்இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி
நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி
இடர்உழன் றழுங்கி னார்கள்.
| [641] |
அவ்வகை அவர்க ளெல்லாம்
அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த
தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல்
பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும்
விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.
| [642] |
அளவிலா மகிழ்ச்சி காட்டும்
அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணருங் காலை
உலகெலாம் உய்ய வந்த
வளரொளி ஞானம் உண்டார்
வந்தணைந் தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
வந்தவர் மொழியக் கேட்டார்.
| [643] |
அம்மொழி விளம்பி னோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார்.
| [644] |
மங்கையர்க் கரசி யார்பால்
வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம்
குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய
ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம்
எனஎதிர் கொள்ளும் என்றார்.
| [645] |
மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.
| [646] |
அம்புய மலராள் போல்வாள்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத்
தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல்வர வேற்று நின்றார்.
| [647] |
திருநிலவு மணிமுத்தின்
சிவிகையின்மேல் சேவித்து
வருநிலவு தருமதிபோல்
வளரொளிவெண் குடைநிழற்றப்
பெருகொளிய திருநீற்றுத்
தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத்
தமுதுண்டார் அணைகின்றார்.
| [648] |
துந்துபிகள் முதலாய
தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள்
ஆயிரமா மறையெடுப்ப
வந்தெழும்மங் கலநாதம்
மாதிரம்உட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதம்எதிர்கொண்
டெம்மருங்குஞ் சேவிப்ப.
| [649] |
பண்ணியவஞ் சனைத்தவத்தால்
பஞ்சவன்நாட் டிடைப்பரந்த
எண்ணில்அமண் எனும்பாவ
இருஞ்சேனை இரிந்தோட
மண்ணுலக மேயன்றி
வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி
போலெய்தும் பொலிவெய்த.
| [650] |
துன்னும்முழு வுடல்துகளால்
சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த
அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை
அணைந்ததெனுங் கவின்காட்ட.
| [651] |
பானல்வயல் தமிழ்நாடு
பழிநாடும் படிபரந்த
மானமிலா அமண்என்னும்
வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பால்
அண்டமெலாம் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து
வருவதென நலம்படைப்ப.
| [652] |
புரசைவயக் கடகளிற்றுப்
பூழியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச்
சைவநெறி தழைத்தோங்க
உரைசெய்திருப் பேர்பலவும்
ஊதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந்
தான்என்றுபணிமாற.
| [653] |
இப்பரி சணையும் சண்பையர் பெருமான்
எழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பில்நித் திலப்பொன் தனிப்பெருங் காளம்
உலகுய்ய ஒலித்தெழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தம்
செவிநிறை அமுதெனத் தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே
அளப்பருங் களிப்பின ரானார்.
| [654] |
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிதுசென் றணைவார்
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா
ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வமுன் செல்லக்
கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
பாங்குற அணைந்துமுன் பணிந்தார்.
| [655] |
நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர்
குலச்சிறை யார்எனக் கூற.
| [656] |
சிரபுரச் செல்வர் அவருரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
விரைந்துசென் றவர்தமை அணைந்து
கரகம லங்கள் பற்றியே எடுப்பக்
கைதொழு தவரும்முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுரவாக் களிப்பார்.
| [657] |
செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும்
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையாம் நிலையுரைக் கின்றார்.
| [658] |
சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
| [659] |
இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
எய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரும்நம் முடைய
வாழ்வெழுந் தருளிய தென்றே
அங்குநீர் எதிர்சென் றடிபணி வீர்என்
றருள்செய்தார் எனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்.
| [660] |
ஆங்ஙனம் போற்றி அடிபணிந் தவர்மேல்
அளவிலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலையளித் தருளும்அப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலும்
உயர்தவத் தொண்டரை நோக்கி
ஈங்குநம் பெருமான் திருவால வாய்மற்
றெம்மருங் கினதென வினவ.
| [661] |
அன்பராய் அவர்முன் பணிந்தசீ ரடியார்
அண்ணலார் அடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை அளக்குநீள் கொடிசூழ்
வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி அணிவார் இனிதமர்ந் தருளுந்
திருவால வாய்இது வென்றார்.
| [662] |
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.
| [663] |
பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
| [664] |
ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால்
பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில
முறவிழுந் தெழுவார்.
| [665] |
அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப்
புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்
திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார்
புகலியர் இறைவர்.
| [666] |
நீல மாமிடற் றாலவா
யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக்
குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர்
தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன்.
| [667] |
சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந்
திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச்
சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண்
பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே
திருமுன்றில் அணைய.
| [668] |
பிள்ளையார் எழுந் தருளிமுன்
புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார்
தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா
தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார்
சென்றுமுன் பெய்த.
| [669] |
மருங்கின் மந்திரி யார்பிள்ளை
யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி
கைத்தளிர் உடையார்
பருங்கை யானைவாழ் வளவர்கோன்
பாவையார் என்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர்
பிள்ளையார் அணைந்தார்.
| [670] |
தென்ன வன்பெருந் தேவியார்
சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற்
பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந்
திருக்கையால் எடுத்தார்.
| [671] |
ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
| [672] |
யாழின் மென்மொழி யார்மொழிந்
தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய
கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம
யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண
வந்தனம் என்றார்.
| [673] |
இன்ன வாறருள் செய்திடத்
தொழுதடி வீழ்ந்தார்
மன்னு மந்திரி யார்வரு
திறமெலாம் மொழிய
அன்ன மென்னடை யார்தமக்
கருள்செய்து போக்கித்
துன்னு மெய்த்தொண்டர் சூழவந்
தருளும்அப் பொழுது.
| [674] |
செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.
| [675] |
அத்தி ருத்தொண்டர் தங்களுக்
கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்
தொடும்இனி தமர்ந்தார்.
| [676] |
பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை
யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய
செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன்
எல்லிவந் தணைய.
| [677] |
வழுதி மாநகர் அதனிடை
மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன்
பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண்
குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென
ஈண்டினர் ஒருபால்.
| [678] |
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
| [679] |
மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும்
ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர்
முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை
விளம்புவீர் என்றார்.
| [680] |
வாயில் காவலர் மன்னவன்
தனைஎதிர் வணங்கி
ஆய மாகிவந் தடிகள்மார்
அணைந்தனர் என்ன
ஏயி னான்அணை வாரென
அவருஞ்சென் றிசைத்தார்
பாயி னால்உடல் மூடுவார்
பதைப்புடன் புக்கார்.
| [681] |
புக்க போதவர் அழிவுறு
மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும்
கண்டெதிர் வினவி
ஒக்க நீர்திரண் டணைவதற்
குற்றதென் என்னத்
தக்க தல்லதீங் கடுத்தது
சாற்றுதற் கென்றார்.
| [682] |
ஆவ தேல்நுமக் கடுத்தது
கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும்
கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற்
சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட்
டியாமென்று விளம்ப.
| [683] |
என்று கூறலும் கேட்டுமுட்
டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா
நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக்
கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென்
அவர்கள்யார் என்றான்.
| [684] |
மாலை வெண்குடை வளவர்சோ
ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற்
றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல.
| [685] |
என்று கூறுவார் இத்திற
முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை
உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும்
செயிர்த்துமுன் சொல்வான்.
| [686] |
மற்ற மாமறை மைந்தன்இம்
மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய்
கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும்
செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர்
குறித்துரை செய்வார்.
| [687] |
வந்த அந்தணன் தன்னைநாம்
வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை
யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந்
திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான்
ஏகும்என் றிசைத்தார்.
| [688] |
ஆவதொன் றிதுவே யாகில்
அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப்
பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே
எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான்
பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.
| [689] |
மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.
| [690] |
தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள்
காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான்
சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று.
| [691] |
வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்.
| [692] |
மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.
| [693] |
சிந்தையிற் களிப்பு மிக்குத்
திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள
எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக்
குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம்
அவர்க்குரைத் திருந்த பின்னர்.
| [694] |
கொற்றவன் அமைச்ச னாரும்
கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளை யாரிங்
கணைந்திடப் பெறும்பே றென்பார்
இற்றைநாள் ஈசன் அன்பர்
தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்றினிச் சமணர் செய்யும்
வஞ்சனை அறியோம் என்றார்.
| [695] |
மானியார் தாமும் அஞ்சி
வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார்
செய்வதென் நாம்என் றெண்ணி
ஞானசம் பந்தர் தம்பால்
நன்மையல் லாத செய்ய
ஊனம்வந் தடையில் யாமும்
உயிர்துறந் தொழிவ தென்றார்.
| [696] |
இவர்நிலை இதுவே யாக
இலங்குவேல் தென்ன னான
அவன்நிலை யதுவாம் அந்நாள்
அருகர்தம் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார்
தங்கள்மந் திரத்தால் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார்
திருமடஞ் சேரச் செய்தார்.
| [697] |
ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம்
புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண்
குண்டர்கள் தளர்ந்தார்.
| [698] |
தளர்ந்து மற்றவர் தாஞ்செய்த
தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய
கீழ்மையோர் கூடி
விளங்கு நீள்முடி வேந்தன்
ஈதறியின்நம் மேன்மை
உளங்கொ ளான்நமர் விருத்தியும்
ஒழிக்குமென் றுணர்வார்.
| [699] |
மந்தி ரச்செயல் வாய்த்தில
மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப்
புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர்
வஞ்சனை மனத்தோர்.
| [700] |
திரும டப்புறச் சுற்றினில்
தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப்
படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்துசென் றணைவார்.
| [701] |
கழும லப்பதிக் கவுணியர்
கற்பகக் கன்றைத்
தொழுது நின்றமண் குண்டர்செய்
தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்இத்
திருமடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள்
எனப்பரிந் தருளி.
| [702] |
என்பொ ருட்டவர் செய்ததீங்
காயினும் இறையோன்
அன்ப ருக்கெய்து மோஎன்று
பின்னையும் அச்சம்
முன்பு றப்பின்பு முனிவுற
முத்தமிழ் விரகர்
மன்பு ரக்குமெய்ம் முறைவழு
எனமனங் கொண்டார்.
| [703] |
வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய்
எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள்
இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற்
காகெனப் பணித்தார்.
| [704] |
பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
| [705] |
திருந்தி சைப்பதி கத்தொடை
திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த்
தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப்
பெயர்பெற்ற தன்றே.
| [706] |
செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.
| [707] |
இரவு பாதகர் செய்ததீங்
கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை
யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத்
தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே
எனமனம் மயங்கி.
| [708] |
பெருகும் அச்சமோ டாருயிர்
பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ
தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய்
தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென
மனங்கொளும் பொழுது.
| [709] |
அரச னுக்குவெப் படுத்ததென்
றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித்
தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக்
குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன்
மருங்குவந் தணைந்தார்.
| [710] |
வேந்த னுக்குமெய் விதிர்ப்புற
வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கதுமென
மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின்
றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது
விழுந்துடல் திரங்க.
| [711] |
உணர்வும் ஆவியும் ஒழிவதற்
கொருபுடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகுதூ
ரத்திடை அகலப்
புணர்இ ளங்கத லிக்குருத்
தொடுதளிர் புடையே
கொணரி னுஞ்சுருக் கொண்டவை
நுண்துக ளாக.
| [712] |
மருத்து நூலவர் தங்கள்பல்
கலைகளில் வகுத்த
திருத்த குந்தொழில் யாவையும்
செய்யவும் மேன்மேல்
உருத்தெ ழுந்தவெப் புயிரையும்
உருக்குவ தாகக்
கருத்தொ ழிந்துரை மறந்தனன்
கௌரியர் தலைவன்.
| [713] |
ஆன வன்பிணி நிகழ்வுழி
அமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும்
வெய்துயிர்த் தழிந்து
போன கங்குலிற் புகுந்ததின்
விளைவுகொல் என்பார்
மானம் முன்தெரி யாவகை
மன்னன்மாட் டணைந்தார்.
| [714] |
மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.
| [715] |
கருகியமா சுடையாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென் றோதி
அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப்
பெருகும்எரி தழற்சொரிந்த நெய்போ லாகிப்
பேர்த்துமொரு தழல்அதன்மேற் பெய்தாற் போல
ஒருவரும்இங் கிருமருங்கும் இராது போமென்
றமணரைப்பார்த் துரைத்தரசன் உணர்வு சோர்ந்தான்.
| [716] |
பாண்டிமா தேவி யாரும்
பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல்
அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி
முடிந்ததோ என்று கூற.
| [717] |
கொற்றவன் அமைச்ச னாராம்
குலச்சிறை யாருந் தாழ்ந்து
மற்றிதன் கொடுமை இந்த
வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பாற்
செய்ததீங் கரசன் பாங்கு
முற்றிய திவர்கள் தீர்க்கின்
முதிர்வதே யாவ தென்பார்.
| [718] |
இருதிறத் தவரும் மன்னன்
எதிர்பணிந்து இந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த
வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய
அநுசித மதனால் வந்து
பெருகிய திதற்குத் தீர்வு
பிள்ளையார் அருளே என்று.
| [719] |
காயமும் மனமும் மாசு
கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை
வளர்ப்பதே வளர்வெண் திங்கள்
மேயவே ணியர்பால் ஞானம்
பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப்
பிறவியுந் தீரு மென்றார்.
| [720] |
மீனவன் செவியி னூடு
மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னும்
நாமமந் திரமுஞ் செல்ல
ஆனபோ தயர்வு தன்னை
அகன்றிட அமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து
மாற்றமொன் றுரைக்க லுற்றான்.
| [721] |
மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.
| [722] |
என்றுமுன் கூறிப் பின்னும்
யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்
விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங்
காதல்வெள் ளத்தில் செல்வார்
| [723] |
பாயுடைப் பாத கத்தோர்
திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திருவுள் ளத்தால்
மேயஅத் துயரம் நீங்க
விருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தம்
நற்பதம் பணிவா ராகி.
| [724] |
மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
| [725] |
திருமடஞ் சாரச் சென்று
சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு
விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப்
பதமறிந் துணர்த்து கின்றார்.
| [726] |
பாண்டிமா தேவி யாரும்
பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று
விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட
அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார்
விரைவுறு விருப்பின் மிக்கார்.
| [727] |
ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
| [728] |
கண்டபொழு தமண்கொடியோர்
செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர்
பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி
துயிர்த்தழிந்த கொள்கையராய்.
| [729] |
உரைகுழறி மெய்ந்நடுங்கி
ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து
சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர்
கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால்
விடாதொழிவார் தமைக்கண்டு.
| [730] |
அருமறைவாழ் பூம்புகலி
அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால்
எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்
தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால்
தீங்குளதோ எனவினவ.
| [731] |
வெஞ்சமணர் முன்செய்த
வஞ்சனைக்கு மிகஅழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்
கடாதென்றே அதுதீர்ந்தோம்
வஞ்சகர்மற் றவர்செய்த
தீத்தொழில்போய் மன்னவன்பால்
எஞ்சலிலாக் கொடுவெதுப்பாய்
எழாநின்ற தெனத்தொழுது.
| [732] |
வெய்யதொழில் அமண்குண்டர்
விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன்
உயிருமென உரைத்தார்கள்.
| [733] |
என்றவர் உரைத்த போதில்
எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா
உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த
யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ
றணிவிப்பன் விதியால் என்றார்.
| [734] |
மொழிந்தருள அதுகேட்டு
முன்னிறைஞ்சி முகமலர்வார்
அழுந்தும்இடர்க் கடலிடைநின்
றடியோமை எடுத்தருளச்
செழுந்தரளச் சிவிகையின்மேல்
தென்னாடு செய்தவத்தால்
எழுந்தருளப் பேறுடையோம்
என்பெறோம் எனத்தொழலும்.
| [735] |
ஆவதும் அழிவும் எல்லாம்
அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும்
பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந்
திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப்
புரவலர் போது கின்றார்.
| [736] |
வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது
குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திருவால வாயுள் புக்கார்.
| [737] |
நோக்கிட விதியி லாரை
நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே
திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள
பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப்
பதிகந்தான் நுவல லுற்றார்.
| [738] |
கானிடை ஆடு வாரைக்
காட்டுமா வுரிமுன் பாடித்
தேனலர் கொன்றை யார்தம்
திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி
என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை
வாதில்வென் றழிக்கப் பாடி.
| [739] |
ஆலமே அமுத மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்.
| [740] |
நாதர்தம் அருள்முன் பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி
விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு
முதல்திரு வாயில் சார்ந்தார்.
| [741] |
அம்மலர்க் குழலி னார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின்
சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர்
எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம்
முழுதுடன் நிறைந்த தன்றே.
| [742] |
பல்லிய நாதம் பொங்கப்
படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி
நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம்
தாரைசங் கெங்கும் ஊத.
| [743] |
கண்ணினுக் கணியாய் உள்ளார்
எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார்.
| [744] |
தென்னவன் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு
பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி
யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில்
காழிநா டுடைய பிள்ளை.
| [745] |
கொற்றவன் தன்பால் முன்பு
குலச்சிறை யார்வந் தெய்திப்
பொற்றட மதில்சூழ் சண்பைப்
புரவலர் வரவு கூற
முற்றுயர் சிறிது நீங்கி
முழுமணி அணிப்பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்
திடுகென வல்ல னானான்.
| [746] |
மந்திரி யாரைப் பின்னும்
எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார்
செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன்
பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை
நாட்டுமா றென்று பின்னும்.
| [747] |
நின்அற நெறியை நீயே
காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க
மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ
மாகவும் இசைவா யென்றார்.
| [748] |
பொய்தவ மாகக் கொண்ட
புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும்
செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால்
இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன்
என்றுகை தவனுஞ் சொன்னான்.
| [749] |
என்றவன் உரைப்பக் குண்டர்
எண்ணங்கெட் டிருந்த எல்லைத்
தென்தமிழ் நாடு செய்த
செய்தவக் கொழுந்து போல்வார்
வன்தனிப் பவனம் முன்னர்
வாயிலுள் அணைந்து மாடு
பொன்திகழ் தரளப் பத்திச்
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
| [750] |
குலச்சிறை யார்முன் பெய்தக்
கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார்
தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று
நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டான்.
| [751] |
கண்டஅப் பொழுதே வேந்தன்
கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி
அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சங் கொண்டார்.
| [752] |
செழியனும் பிள்ளை யார்தம்
திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே
வெம்மைநோய் சிறிது நீங்கி
அழிவுறும் மனம் நேர்நிற்க
அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியா தென்று
விருப்புடன் கேட்ட போது.
| [753] |
பொன்னிவளந் தருநாட்டுப்
புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம்
கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும்
பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார்
திருஞான சம்பந்தர்.
| [754] |
பிள்ளையார் செம்பொன்மணிப்
பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
சிவந்துபல சொல்லுவார்.
| [755] |
காலையெழுங் கதிரவனைப்
புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர்
பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால்
வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித்
தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.
| [756] |
பிள்ளையார் அதுகேளாப்
பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
பொறாராகி உள்நடுங்கி.
| [757] |
தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார்.
| [758] |
மாறனும் அவரை நோக்கி
வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல்
வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக்
கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை
என்னிடைத் தெரிப்பீர் என்றான்.
| [759] |
ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
| [760] |
பெற்றியால் அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா
அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற
பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில்
வென்றனர் என்று செப்ப.
| [761] |
மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.
| [762] |
யாதும்ஒன் றறிவி லாதார்
இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
சிரபுரத் தவரைப் பார்த்தான்.
| [763] |
தென்னவன் நோக்கங் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
பகர்திருப் பதிகம் பாடி.
| [764] |
திருவளர் நீறு கொண்டு
திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க
அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி
இடங்கொளா தென்னப் பொங்க.
| [765] |
உறியுடைக் கையர் பாயின்
உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத்
தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி
அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார்
அறிவிலா நெறியில் நின்றார்.
| [766] |
பலர்தொழும் புகலி மன்னர்
ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார்
வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி
வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்த தன்றே.
| [767] |
மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.
| [768] |
வெந்தொழில் அருகர் தோற்றீர்
என்னைவிட் டகல நீங்கும்
வந்தெனை உய்யக் கொண்ட
மறைக்குல வள்ள லாரே
இந்தவெப்பு அடைய நீங்க
எனக்கருள் புரிவீ ரென்று
சிந்தையால் தொழுது சொன்னான்
செல்கதிக் கணிய னானான்.
| [769] |
திருமுகங் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண்
ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும்
முழுதும் உய்ந்தான்.
| [770] |
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை யின்று
பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே
உளங்களித் துவகை மிக்கார்.
| [771] |
மீனவன் தன்மேல் உள்ள
வெப்பெலாம் உடனே மாற
ஆனபே ரின்ப மெய்தி
உச்சிமே லங்கை கூப்பி
மானமொன் றில்லார் முன்பு
வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம்
நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.
| [772] |
கந்துசீறு மாலியானை
மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று
மாசுமேனி நீசர்தாம்
முந்தைமந் திரத்துவிஞ்சை
முற்றம்எஞ்ச அஞ்சியே
சிந்தைசெய்து கைவருந்
திறந்தெரிந்து தேடுவார்.
| [773] |
சைவமைந்தர் சொல்லின்வென்றி
சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த
தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம்
வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ
தென்றுதம்மில் எண்ணினார்.
| [774] |
பிள்ளையாரும் உங்கள்வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு
தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே
குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில்
உய்ப்பதென்ன ஒட்டினார்.
| [775] |
என்றுவாது கூறலும்
இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க
வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள்
என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று
சில்லிவாயர் சொல்லுவார்.
| [776] |
என்னவாது செய்வதென்
றுரைத்ததே வினாவெனாச்
சொன்னவா சகந்தொடங்கி
ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின்
வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை
வெற்றியாவ தென்றனர்.
| [777] |
என்றபோது மன்னன்ஒன்
றியம்புமுன்பு பிள்ளையார்
நன்றுநீ ருரைத்தவாறு
நாடுதீயி லேடுதான்
வென்றிடிற் பொருட்கருத்து
மெய்ம்மையாவ தென்றிரேல்
வன்றனிக்கை யானைமன்னன்
முன்புவம்மின் என்றனர்.
| [778] |
அப்ப டிக்கெதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும்
திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென
வினைஞரை விடுத்தான்.
| [779] |
ஏய மாந்தரும் இந்தனங்
குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு
புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும்
படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணையவந் தருளி.
| [780] |
செங்கண் ஏற்றவ ரேபொருள்
என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன்
முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள்
எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு
காப்புநாண் அவிழ்த்தார்.
| [781] |
சாற்று மெய்ப்பொருள் தருந்திரு
முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும்
வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார்
மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போக
மார்த்தபூண் முலையாள்.
| [782] |
அத்தி ருப்பதி கத்தினை
அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள்
ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக்
கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர்.
| [783] |
நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின்
நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன்
நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக்
காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள
வளரொளி பாடி.
| [784] |
செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.
| [785] |
இட்ட ஏட்டினில் எழுதிய
செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை
மலைமகள் பாகத்
தட்டமூர்த்தியைப் பொருளென
உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய்
விளங்கிய தன்றே.
| [786] |
மையல் நெஞ்சுடை அமணரும்
தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந்
தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே
நடுங்கிநின் றிட்டார்.
| [787] |
அஞ்சும் உள்ளத்த ராகியும்
அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில்
விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது
படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை
சோர்ந்திலர் நின்றார்.
| [788] |
மான மன்னவன் அவையின்முன்
வளர்த்தசெந் தீயின்
ஞானம் உண்டவர் இட்டஏ
டிசைத்தநா ழிகையில்
ஈனம் இன்மைகண் டியாவரும்
வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும்
புதுமையும் பயப்ப.
| [789] |
எடுத்த ஏட்டினை அவையின்
முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய
கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக்
காட்டுமின் என்றான்.
| [790] |
அருகர்தாம் இட்ட ஏடு
வாங்கச்சென் றணையும் போதில்
பெருகுதீக் கதுவ வெந்து
போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத்
தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும்
கரியலால் மற்றென் காண்பார்.
| [791] |
செய்வதொன் றறிகி லாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும்
ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப்
புகுந்தநீர் போமின் என்றான்.
| [792] |
வெப்பெனுந் தீயில் யான்முன்
வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்
ஆதலால் அதுஆ றாக
இப்பொழு தெரியில் இட்ட
ஏடுய்ந்த தில்லை என்றால்
துப்புர வுடையீர் நீங்கள்
தோற்றிலீர் போலு மென்றான்.
| [793] |
தென்னவன் நகையுட் கொண்டு
செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம்
முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை
இனியொன்று காண்ப தென்றார்.
| [794] |
தோற்கவும் ஆசை நீங்காத்
துணிவிலார் சொல்லக் கேட்டிம்
மாற்றமென் னாவ தென்று
மன்னவன் மறுத்த பின்னும்
நீற்றணி விளங்கு மேனி
நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
வேற்றுவா தினியென் செய்வ
தென்றலும் மேற்கோள் ஏற்பார்.
| [795] |
நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்.
| [796] |
என்றமண் கையர் கூற
ஏறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோம் என்றங்
கருள்செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்ச னார்தாம்
வேறினிச் செய்யும் இவ்வா
தொன்றினுந்தோற்றார் செய்வ
தொட்டியே செய்வ தென்றார்.
| [797] |
அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்.
| [798] |
மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.
| [799] |
பிள்ளையார் முன்னம் பைம்பொற்
பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச்
சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு
மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார்
உணர்வுமால் ஏறிச் சென்றார்.
| [800] |
தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவே றினைய சொன்னார்.
| [801] |
மீனவன் கொண்ட வெப்பை
நீக்கிநம் விழுமந் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்
பானறுங் குதலைச் செய்ய
பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு
வாழவந் தணைந்தார் என்பார்.
| [802] |
எரியிடை வாதில் தோற்ற
திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற்
| [803] |
ஏதமே விளைந்த திந்த
அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட்
புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி
விரவிடும் எங்கும் என்பார்.
| [804] |
அடிகள்மார் முகங்கள் எல்லாம்
அழிந்தன பாரீர் என்பார்
கொடியவஞ் சனைகள் எல்லாம்
குலைந்தன போலும் என்பார்
வடிகொள்வேல் மாறன் காதல்
மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்த திந்த
வெஞ்சமண் இருளும் என்பார்.
| [805] |
நெருப்பினில் தோற்றார் தாங்கள்
நீரில்வெல் வர்களோ என்பார்
இருப்புநெஞ் சுடைய ரேனும்
பிள்ளையார்க் கெதிரோ என்பார்
பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள்
படுவன பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார்
மந்திரி யார்தா மென்பார்.
| [806] |
ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற் கணைந்தார் என்பார்
ஓடுநீ ருடன்செ லாது
நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாங் காண இங்கு
நண்ணுவர் காணீர் என்பார்.
| [807] |
தோற்றவர் கழுவி லேறத்
துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப்
பிள்ளையார்க்கு அழகி தென்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ
நெறியினைப் போற்று மென்பார்.
| [808] |
இன்னன இரண்டு பாலும்
ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின்னொளி மணிப்பொற் காம்பின்
வெண்குடை மீது போதப்
பன்மணிச் சிவிகை தன்மேற்
பஞ்சவ னாட்டு ளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தார்
நான்மறை வாழ வந்தார்.
| [809] |
தென்றமிழ் விளங்க வந்த
திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான
வட்டில்வண் கையன் வந்தான்
வென்றுல குய்ய மீள
வைகையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச்சின் னங்கள்
எண்டிசை நெருங்கி ஓங்க.
| [810] |
பன்மணி முரசம் சூழ்ந்த
பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவி யாரும்
உடன்செலத் திரண்டு செல்லும்
புன்னெறி அமணர் வேறோர்
புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின்
கரைமிசை மருவ வந்தார்.
| [811] |
கார்கெழு பருவம் வாய்ப்பக்
காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால்
விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி
நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை யாறு.
| [812] |
ஆற்றில்நீர் கடுக வோடும்
மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி
நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும்
விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று
முன்னுறத் துணிந்திட் டார்கள்.
| [813] |
படுபொரு ளின்றி நெல்லிற்
பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி
நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலைமேற் படர்ந்த தன்றே.
| [814] |
ஆறுகொண் டோடும் ஏட்டைத்
தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார்
கரைமிசை ஓடிச் சென்றார்
பாறுமப் பொருள்மேற் கொண்ட
பட்டிகை எட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே
போனது நோக்கிக் காணார்.
| [815] |
காணவும் எய்தா வண்ணம்
கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார்.
| [816] |
வேறொரு செயலி லாதார்
வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே
மன்னவன் எதிர்வந் தெய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம்
வெளிப்பட வொளிப்பார் போன்று
மாறுகொண்ட வரும் இட்டால்
வந்தது காண்டும் என்றார்.
| [817] |
மாசுசேர் அமணர் எல்லாம்
மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த
அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந்
திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார்
பரசம யங்கள் பாற.
| [818] |
தென்னவன் மாறன் தானுஞ்
சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந்
திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி
முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத்
துலையென நிற்ற லாலே.
| [819] |
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்
கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்
பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
| [820] |
அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.
| [821] |
வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கு முறைமையால்.
| [822] |
ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.
| [823] |
சொன்ன வையக முந்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்.
| [824] |
அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.
| [825] |
ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.
| [826] |
பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.
| [827] |
வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்.
| [828] |
தமக்குத் தந்தையர் தாயிலர் என்பதும்
அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.
| [829] |
தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.
| [830] |
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.
| [831] |
ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
| [832] |
அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
| [833] |
மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.
| [834] |
தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்ப
தான்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.
| [835] |
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
| [836] |
ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.
| [837] |
ஆடும் எனவருந் திருப்பாட்டில்
| [838] |
கருதுங் கடிசேர்ந்த எனுந்திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனம்என்றனர் பிள்ளை யார்தாம்.
| [839] |
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென் றுரைசெய் தனர்யாவும் ஓதா துணர்ந்தார்.
| [840] |
பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.
| [841] |
மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.
| [842] |
ஆனஅற் றன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா
ஈனர்க ளெல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம்ஈ சன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
| [843] |
வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர்
மெய்ப்பா சுரத்தைக்
குறியே றியஎல்லை அறிந்துகும்
பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கவர் தந்திருப்
பாதந் தந்த
நெறியே சிறிதியான் அறிநீர்மைகும்
பிட்டேன் அன்பால்.
| [844] |
அலரும் விரைசூழ் பொழிற்காழியுள் ஆதி ஞானம்
மலருந் திருவாக் குடைவள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந் துய்யப்பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையால் நீட்டி யிட்டார்.
| [845] |
திருவுடைப் பிள்ளை யார்தந்
திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி யாற்றில்
மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றில்
எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லாம்
இதுபொரு ளென்று காட்டி.
| [846] |
எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.
| [847] |
ஏடுநீ ரெதிர்ந்து செல்லும்
பொழுதிமை யோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி
நிறைந்தபூ மாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன்
அற்புத மெய்தி நின்றான்
பாடுசேர் அமண ரஞ்சிப்
பதைப்புடன் பணிந்து நின்றார்.
| [848] |
ஆற்றின்மேற் செல்லும்ஏடு
தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும்
கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல
குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப்
பாடினார் ஏடு தங்க.
| [849] |
ஏடகம் பிள்ளை யார்தாம்
வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு
குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடும்
கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு
நின்றஏ டெடுத்துக் கொண்டார்.
| [850] |
தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்.
| [851] |
மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.
| [852] |
மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.
| [853] |
புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர்
இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த
தன்மையாற் சாலு மென்றே
மிகையிலா வேந்தன் செய்கை
விலக்கிடா திருந்தவேலை.
| [854] |
பண்புடை அமைச்ச னாரும்
பாருளோர் அறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞானம் உண்டார்
மடத்துத்தீ நாடி யிட்ட
எண்பெருங் குன்றத் தெண்ணா
யிரவரும் ஏறி னார்கள்.
| [855] |
தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்.
| [856] |
தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.
| [857] |
பூதிமெய்க் கணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி
யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய
அமணிருள் மாய்ந்த தன்றே.
| [858] |
மீனவற் குயிரை நல்கி
மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி
உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை
ஞாலத்திற் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தந்
திருநெறி நடந்த தன்றே.
| [859] |
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.
| [860] |
அங்கயற் கண்ணி தன்னோ
டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம்
பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும்
மன்னனும் போற்றி வந்தார்.
| [861] |
எண்ணரும் பெருமைத் தொண்டர்
யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப்
புகழ்ந்துடன் போற்றிப் போத
மண்ணெலாம் உய்ய வந்த
வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள்
கன்னிநாட் டவர்க ளெல்லாம்.
| [862] |
ஆலவாய் அண்ணல் கோயில்
அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க
பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
| [863] |
தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும்
ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி
உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார்.
| [864] |
கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.
| [865] |
ஒன்றுவே றுணர்வு மில்லேன்
ஒழிவற நிறைந்த கோலம்
மன்றிலான் மறைக ளேத்த
மானுடர் உய்ய வேண்டி
நின்றுநீ ஆடல் செய்கை
நினைப்பதே நியம மாகும்
என்றுபூம் புகலி மன்னர்
இன்தமிழ்ப் பதிகம் பாட.
| [866] |
தென்னவன் பணிந்து நின்று
திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை
உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத்
தந்தனை இறைவ என்றான்.
| [867] |
சீருடைப் பிள்ளை யாரும்
சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத்
திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி
அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால்
இனிதெழுந் தருளிப் புக்கார்.
| [868] |
நீடுசீர்த் தென்னர் கோனும்
நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி
மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள்
நாதரைப் பாட லுற்றார்.
| [869] |
திருஇய மகத்தி னுள்ளும்
திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி
அவரொடும் அளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத்
திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார்
இனிதமர்ந் திருந்தா ரன்றே.
| [870] |
பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியு மான எல்லாம்
| [871] |
மீனவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் மிக்க
ஞானசம் பந்தர் பாதம்
நாள்தொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரும்
ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக ஏத்தி
உளங்களித் துறையும் நாளில்.
| [872] |
செய்தவத்தாற் சிவபாத
இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை
மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார்
அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே
இருந்தநாள் மிகநினைந்தார்.
| [873] |
ஆனபுகழ்த் திருநாவுக்
கரசர்பால் அவஞ்செய்த
மானமிலா அமணருடன்
வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுய்ய
வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பாற் புகுந்தபடி
அறிவனெனப் புறப்படுவார்.
| [874] |
துடியிடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை
அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம்
பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன்
வளநாடு வந்தணைந்தார்.
| [875] |
மாமறை யோர் வளம்பதிகள்
இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த்
தென்னவன்தன் திருமதுரை
தாமணைந்து திருவால
வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப்
புக்கார்வத் தொடுபணிந்தார்.
| [876] |
அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.
| [877] |
செப்புதலும் அதுகேட்டுத்
திருமடத்தைச் சென்றெய்த
அப்பர்எழுந் தருளினார்
எனக்கண்டோர் அடிவணங்கி
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார்
தமக்கோகை உரைசெய்ய
எப்பொழுது வந்தருளிற்
றென்றெதிரே எழுந்தருள.
| [878] |
சிவபாத இருதயர்தாம்
முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந்
தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித்
திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம்
பாதங்கள் நினைவுற்றார்.
| [879] |
இருந்தவத்தோர் அவர்முன்னே
இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப்
பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி
உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல்
திருப்பதிகம் போற்றிசைத்தார்.
| [880] |
மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.
| [881] |
திருப்பதிகந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினால் அவர்தமக்கு
அருப்புறுமெய்க் காதல்புரி
அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர்
பதிபிறவும் தொழப்போவார்.
| [882] |
ஆலின்கீழ் நால்வர்க்கன்
றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக்
கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன்போத.
| [883] |
தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.
| [884] |
ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி
அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி
நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து
நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த
சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்
ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை
எய்திஇறைஞ் சிச்சிலநாள்அங் கிருந்தா ரன்றே.
| [885] |
பற்றார்தம் புறங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்
பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்
கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே.
| [886] |
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.
| [887] |
செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.
| [888] |
சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.
| [889] |
அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.
| [890] |
அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.
| [891] |
பதிநிலவு பாண்டிநா டதனில் முக்கட்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்குயர்ந்த
கதியருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான்
திருத்தொண்டர் பலருஞ் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.
| [892] |
அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.
| [893] |
பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.
| [894] |
சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.
| [895] |
பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.
| [896] |
மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.
| [897] |
தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.
| [898] |
உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
| [899] |
நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார்.
| [900] |
போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையும் நாளில்
பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ
டேற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
பதிகமுடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும்அங் கருள்பெற்றுப் போந்து முன்னம்
அணைந்தபதி களும்இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவுதிரு நள்ளா றெய்தி
நாடுடைநா யகர்கோயில் நண்ணினாரே.
| [901] |
நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.
| [902] |
தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.
| [903] |
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.
| [904] |
புல்லறிவிற் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர்
எடுத்தஆர்ப் பொலியாலும் எதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன ஒலிக ளாலும்
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.
| [905] |
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.
| [906] |
புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி
பொருவில்ஞா னப்புனிதர் திருமுன் பூதும்
மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை
வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா
திதுபொறுக்கில் தங்கணிலை ஏற்ப ரென்று
முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
| [907] |
வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.
| [908] |
ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.
| [909] |
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.
| [910] |
அஞ்சிஅகன் றோடியஅப் புத்த ரெல்லாம்
அதிசயித்து மீண்டுமுடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான்மற் றவர்தஞ்சைவ
வாய்மையோ எனமருண்டு மனத்திற் கொள்வார்
எஞ்சலின்மந் திரவாத மன்றி எம்மோ
டெதிர்ந்து பொருள் பேசுவதற் கிசைவ தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரிபுத்தன்
தன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.
| [911] |
அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.
| [912] |
சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.
| [913] |
அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.
| [914] |
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே நன்மை
புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவின்றி உரைத்த ஞானத்
தொழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன
பான்மையான் யாங்கள்தொழும் பரமன் என்றான்.
| [915] |
என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
| [916] |
ஆங்கவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர்
அதனைஅனு வாதஞ்செய் தவனை நோக்கித்
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என் றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகார மேசெய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்கவென உரைக்க லுற்றான்.
| [917] |
கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன்
கலந்துளன்முத் தியில்என்றான் என்னக் காணும்
இந்திரியங் கண்முதலாம் கரணந் தானும்
இல்லையேல் அவனுணர்ச்சி யில்லை யென்றார்
முந்தையறி விலனாகி உறங்கி னானை
நிந்தித்து மொழிந் துடல்மீ தாடினார்க்கு
வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும்
வருமன்றோ நன்மையென மறுத்துச் சொன்னான்.
| [918] |
சொன்னவுரை கேட்டருளி அன்பர் தாமும்
தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக்
கன்னவற்றி னுடன்பாடும் எதிர்வு மில்லை
ஆனபோ தவன்பெறுதல் இல்லை யென்றார்
முன்னவற்றி னுடன்பாடும் எதிர்வுமின்றி
முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ
இப்படியால் எம்மிறைவற் கெய்தும் என்றார்.
| [919] |
இப்படியால் எய்துமென இசைத்துநீ இங்கு
எடுத்துக்காட் டியதுயிலும்இயல்பி னான்போல்
மெய்ப்படிய கரணங்கள் உயிர்தா மிங்கு
வேண்டுதியா னும்மிறைவற் கான போது
செப்பியஅக் கந்தத்தின் விளைவின் றாகித்
திரிவில்லா முத்தியிற்சென் றிலனும் ஆனான்
அப்படியக் கந்தத்துள் அறிவுங் கெட்டால்
அம்முத்தி யுடன்இன்ப மணையா தென்றார்.
| [920] |
அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.
| [921] |
உணர்வுபொதுச் சிறப்பென்ன இரண்டின் முன்ன
துளவான மரப்பொதுமை உணர்தல் ஏனைப்
புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்றல்
இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம்
கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு
குறைத்தவற்றைத் தனித்ததனியே இடினும் வெந்தீத்
துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோன் என்றான்.
| [922] |
எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.
| [923] |
ஆதலினால் உன்னிறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்ததுநும் முத்திபோல் ஆயிற் றன்றே
ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்
என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய
வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர்
பாததா மரைபணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
| [924] |
புந்தியினால் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்றொன்றும் இல்லை யென்றே
அந்தமில்சீர் மறைகள்ஆ கமங்கள் ஏனை
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
| [925] |
அன்றவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம்
அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன்தொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்
| [926] |
அந்நகரில் அடியார்கள்
எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார்
குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள்
வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற்
றென்றடியார் தமைவினவ.
| [927] |
அங்கவரும் அடிபோற்றி
ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி
நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும்
மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த
படியெல்லாம் இயம்பினார்.
| [928] |
அப்பரிசங் கவர்மொழிய
ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு
மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர்
கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப்
பிள்ளையார் செல்கின்றார்.
| [929] |
பூவிரியுந் தடஞ்சோலை
புடைபரப்பப் புனல்பரக்கும்
காவிரியின் தென்கரைபோய்க்
கண்ணுதலார் மகிழ்ந்தஇடம்
மேவிஇனி தமர்ந்திறைஞ்சி
விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரசர் உழைச்சண்பை
நகரரசர் நண்ணுவார்.
| [930] |
அந்தணர்சூ ளாமணியார்
பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை
நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று
முகமலர அகமலர்வார்
| [931] |
எதிர்சென்று பணிவனென
எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார்
நற்பதங்கள் தொழுதந்தப்
பதிநின்றும் புறப்பட்டுப்
பரசமயஞ் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர்
முன்னெய்த வந்தணைந்தார்.
| [932] |
திருச்சின்னம் பணிமாறக்
கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால்
பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா
வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத்
தொண்டர்குழாத் துடன்அணைந்தார்.
| [933] |
வந்தணைந்த வாகீசர்
வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார்
திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று
நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.
| [934] |
அப்பர்தாம் எங்குற்றார்
இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா
வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன்
ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
பெற்றுய்ந்தேன் யான்என்றார்.
| [935] |
அவ்வார்த்தை கேட்டஞ்சி
அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்
றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர்
திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ
தென்றெதிரே இறைஞ்சினார்.
| [936] |
சூழ்ந்துமிடைந் தருகணையுந்
தொண்டரெல்லாம் அதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி
எழுந்துஅங்கை தலைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய்
மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோம்என்
றண்டமெலாம் உறஆர்த்தார்.
| [937] |
திருஞான சம்பந்தர்
திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடும்அணைந்து
தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலரடிகள்
வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார்
மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.
| [938] |
அன்பர்குழாத் தொடும்செல்வார்
ஆனேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று
கோபுரத்தை முன்னிறைஞ்சித்
துன்பமிலாத் திருத்தொண்ட
ருடன்தொழுது புக்கருளி
என்புருக வலங்கொண்டு
பணிந்தேத்தி இறைஞ்சினார்.
| [939] |
பொய்யிலியா ரைப்பணிந்து
போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில்
திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம்
வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க
ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.
| [940] |
வாக்கின் தனிமன்னர்
வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும்
வினவப் புகுந்ததெல்லாம்
தூக்கின் தமிழ்விரகர்
சொல்லிறந்த ஞானமறை
தேக்குந் திருவாயால்
செப்பி யருள்செய்தார்.
| [941] |
காழியினில் வந்த
கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில்
வந்தார் அடிவணங்கி
வாழிதிருத் தொண்டென்னும்
வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி
யானீர்எனத் தொழுதார்.
| [942] |
பிள்ளையார் தாமும்அவர்
முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ்
மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம்
மொழிந்தங் குவந்திருந்தார்.
| [943] |
தென்னற் குயிரோடு
நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும்
அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின்
தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர்
கேட்டு மனமகிழ்ந்தார்.
| [944] |
சொல்லின் பெருவேந்தர்
தொண்டைவள நாடெய்தி
| [945] |
அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.
| [946] |
வாகீச மாமுனிவர்
மன்னுதிரு வாலவாய்
நாகம் அரைக்கசைத்த
நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப்
பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல்
பிள்ளையார் ஏற்றெழுவார்.
| [947] |
பூந்துருத்தி மேவும்
புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயில்
புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம்
மேவவிடை கொண்டருளி
ஏந்தலார் எண்ணிறந்த
தொண்டருடன் ஏகினார்.
| [948] |
மாடுபுனற் பொன்னி
இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப்
பழனம் சென்றணைந்தார்.
| [949] |
செங்கண் விடையார்
திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன்
போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர்
சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால்
உண்டருளும் வள்ளலார்.
| [950] |
தென்னாட் டமண்மா
சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார்
வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென
ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம்
முழங்க எதிர்கொண்டார்.
| [951] |
போத நீடுமா மறையவர்
எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின்
றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ
யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.
| [952] |
அங்கம் மாநிலத் தெட்டுற
வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங்
கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந்
தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.
| [953] |
முற்றும் மெய்யெலாம் புளகங்கள்
முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு
வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை
எதிர்நதி மிசைவரு கரனென்பார்.
| [954] |
சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.
| [955] |
தாதை யாரும்அங் குடன்பணிந்து
அணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யில்திரு வாயிலைத்
தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆதரித்துவாழ்த் துரையிரு
மருங்கெழ அணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து
தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.
| [956] |
நறவம் ஆர்பொழிற் புகலியில்
நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலி யாருடன் நீலகண்
டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி
உறையு ளாம்அவர் மாளிகை
செலவிடுத் துள்ளணை தரும்போதில்
அறலி னேர்குழ லார்மணி
விளக்கெடுத் தெதிர்கொள அணைவுற்றார்.
| [957] |
அங்க ணைந்தரு மறைக்குலத்
தாயர்வந் தடிவணங் கிடத்தாமும்
துங்க நீள்பெருந் தோணியில்
தாயர்தாள் மனங்கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கமர்ந்
தருளுநாள் தம்பிரான் கழல்போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதி
கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.
| [958] |
நீல மாவிடந் திருமிடற்
றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும்
பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர்
தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும்
ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.
| [959] |
தண்ட கத்திரு நாட்டினைச்
சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென்
றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந்
தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத்
தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.
| [960] |
அப்பர் நீர்இனி இங்கொழிந்
தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப்
பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர்
தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி
யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.
| [961] |
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
| [962] |
கன்னி மாவனங் காப்பென
இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற்
கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு
கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
| [963] |
வக்க ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங் கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா
காளமும் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந்
தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.
| [964] |
ஆதி தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.
| [965] |
பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.
| [966] |
சென்ற ணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப்
பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல்
வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
| [967] |
கோவல் நீடிய வீரட்டம்
அமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார்
அறையணி நல்லூரை அணைந்தேத்திப்
மேவு மன்புறு மேன்மையாம்
தன்மையை விளங்கிட அருள்செய்தார்.
| [968] |
சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.
| [969] |
அண்ணா மலைஅங் கமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலையைச் சென்று சேர்வுற்றார்.
| [970] |
அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.
| [971] |
ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப்
பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற்
சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.
| [972] |
மங்கை பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும்
திருவோத் தூரைச் சேர்வுற்றார்.
| [973] |
தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த
திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி எதிர்கொண்டார்.
| [974] |
சண்பை வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார்
சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும்
வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து
பரமர் கோயில் உள்ளடைந்தார்.
| [975] |
வார ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும்
நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
| [976] |
தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.
| [977] |
அங்கை அனலேற் றவர்க்கடியேன்
ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க்
காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன
காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்
அருள வேண்டு மெனப்புகல.
| [978] |
பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.
| [979] |
விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும்
என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
யரும்பு பெண்ணை யாகியிடக்
கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.
| [980] |
சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.
| [981] |
தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார்.
| [982] |
பிள்ளை யார்தந் திருவாக்கில்
பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
வாய்மை கூறின் வரம்பென்னாம்.
| [983] |
அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.
| [984] |
ஆதி முதல்வர் குரங்கணில்முட்
டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.
| [985] |
நீடுகாஞ்சி வாழ்நரும்
நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
காமர்தோ ரணங்களால்.
| [986] |
கொடிநிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
பண்பில் ஈண்டுவார்.
| [987] |
கோதைமாதர் ஆடலுங்
குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும்
மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர்
கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென்
றணைந்துமுன் வணங்கினார்.
| [988] |
சண்பையாளும் மன்னர்முன்பு
தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
வானம்முட்ட ஆர்த்தனர்.
| [989] |
சேணுயர்ந்த வாயில்நீடு
சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
கைந்நிரை யெடுத்தனர்.
| [990] |
வியல்நெடுந் தெருவினூடு
மிக்கதொண்டர் ஆர்ப்பெழக்
கயல்நெடுங்கண் மாதரும்
காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாமெனப்
பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்தெடுத்
திருமருங்கும் வீசினார்.
| [991] |
இன்னவண்ணம் யாவரும்
இன்பமெய்த எய்துவார்
பின்னுவார் சடைமுடிப்
பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய்
மொய்வரைத் திருமகள்
மன்னுபூ சனைமகிழ்ந்த
மன்னர்கோயில் முன்னினார்.
| [992] |
கம்பவாணர் கோயில்வாயில்
கண்டுகை குவித்தெடுத்
தும்பர்ஓங்கு கோபுரத்தின்
முன்னிறைஞ்சி உள்ளணைந்
தம்பொன்மா ளிகைப்புறத்தில்
அன்பரோடு சூழவந்
திம்பர்ஞாலம் உய்யவந்த
பிள்ளையார் இறைஞ்சுவார்.
| [993] |
செம்பொன்மலைக் கொடிதழுவக்
குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும்
கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி
பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.
| [994] |
பலமுறையும் பணிந்தெழுந்து
பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு
மணிவாயால் மறையான்என்
றுலகுய்ய எடுத்தருளி
உருகியஅன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாளம்
நிரம்பியநீர் மையில்நிகழ.
| [995] |
பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.
| [996] |
மருவியஏ ழிசைபொழிய
மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப
உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
பரவியே புறத்தணைந்தார்.
| [997] |
புறத்தணைந்த தொண்டருடன்
போந்தமைந்த திருமடத்தில்
பெறற்கரும்பே றுலகுய்யப்
பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன்
வந்தெய்தி மகிழ்ந்துறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக்
கோட்டம்அணைந் திறைஞ்சினார்.
| [998] |
திருவேகம் பத்தமர்ந்த
செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே
உள்ளுருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும்
வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத்
தொடைபுனைந்தார் பிள்ளையார்.
| [999] |
நீடுதிருப் பொழில்காஞ்சி
நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார்
துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும்
அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள்
பணிந்தேத்தி வைகுநாள்.
| [1000] |
எண்திசையும் போற்றிசைக்கும்
திருப்பதிமற் றதன்புறத்துத்
தொண்டருடன் இனிதேகித்
தொல்லைவிடம் உண்டிருண்ட
கண்டர்மகிழ் மேற்றளியும்
முதலான கலந்தேத்தி
மண்டுபெருங் காதலினால்
வணங்கிமீண் டினிதிருந்தார்.
| [1001] |
அப்பதியில் விருப்பினொடும்
அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித்
திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு
மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை
மொழிமாலை சாத்தினார்.
| [1002] |
திருமாற்பே றுடையவர்தம்
திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க்
காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
பெரும்பிணையல் அணிவித்தார்.
| [1003] |
அங்குள்ள பிறபதியில்
அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின்
புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார்
இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத்
திருப்பதிகம் பாடினார்.
| [1004] |
திருத்தொண்டர் பலர்சூழத்
திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை
புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார்
தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல்
மேவினார் தமைப்பணிந்தார்.
| [1005] |
தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.
| [1006] |
குன்றநெடுஞ் சிலையாளர்
குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி
நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப்
பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டருகு.
| [1007] |
இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.
| [1008] |
மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.
| [1009] |
துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.
| [1010] |
நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.
| [1011] |
திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.
| [1012] |
மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
| [1013] |
மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
| [1014] |
இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
| [1015] |
மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.
| [1016] |
கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.
| [1017] |
அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
| [1018] |
திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற் சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.
| [1019] |
வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.
| [1020] |
திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
| [1021] |
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
| [1022] |
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.
| [1023] |
பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.
| [1024] |
யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.
| [1025] |
அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
| [1026] |
கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.
| [1027] |
தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.
| [1028] |
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
| [1029] |
திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
| [1030] |
மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
| [1031] |
பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.
| [1032] |
இன்ன தன்மையிற் பிள்ளையார்
இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி
லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந்
தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை
நிகழ்ந்தவா மொழிவாம்.
| [1033] |
அருநி தித்திறம் பெருக்குதற்
கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப்
பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப்
பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின்
எல்லையில் வளத்தார்.
| [1034] |
தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.
| [1035] |
கற்றை வார்சடை முடியினார்
அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி
உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும்
உடையராய்த் திகழ்வார்.
| [1036] |
ஆன நாள்செல அருமறைக்
கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும்
நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம்
இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால்
கேட்டுவந் துளராய்.
| [1037] |
செல்வ மல்கிய சிரபுரத்
தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின்
இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந்
தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும்
தொழிலின ரானார்.
| [1038] |
நிகழும் மாங்கவர் நிதிப்பெருங்
கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற்
சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில்
பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை
வாழ்க்கையின் மருண்டு.
| [1039] |
அரிய நீர்மையில் அருந்தவம்
புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில
செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார்
வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு
பெண்கொடி யுதித்தாள்.
| [1040] |
நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்.
| [1041] |
ஆறு சூடிய முடியினார்
அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா
வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண்
டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி
பெருங்களி சிறந்தார்.
| [1042] |
சூத நல்வினை மங்கலத்
தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள்
தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடிவிழா அயர்ந்தார்.
| [1043] |
யாவ ரும்பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர்
பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின்
பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர்
புவியின்மேல் விளங்க.
| [1044] |
திங்கள் தோறுமுன் செய்யும்அத்
திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை
மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி
தளர்நடை பயில.
| [1045] |
தளரும் மின்னின்அங் குரமெனத்
தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென
மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென
அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க்
ஏழுயாண் டெய்த.
| [1046] |
அழகின் முன்னிளம் பதமென
அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய
ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம்
என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென
மனையிடை ஆடி.
| [1047] |
பொற்றொ டிச்சிறு மகளிர்
ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட
னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி
மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட்
டயர்வுடன் வளர.
| [1048] |
தந்தை யாரும்அத் தளிரிளம்
கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற்
றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக்
குரியனென்று அறைந்தார்.
| [1049] |
ஆய நாள்களில் அமண்பயில்
பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய
தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை
வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன்
மேலொழித் ததுவும்.
| [1050] |
நெருப்பில் அஞ்சினார் தங்களை
நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற்
றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ
னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம்
போற்றுவித் ததுவும்.
| [1051] |
இன்ன வாறெலாம் அறிந்துளார்
எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி
தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்
தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந்
தெழுந்துசெந் நின்று.
| [1052] |
சுற்றம் நீடிய கிளையெலாம்
சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா
டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும்
பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன்
யானென்று மொழிந்தார்.
| [1053] |
எல்லை யில்பெருங் களிப்பினால்
இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை
யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும்
மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும்
சிந்தையால் மகிழ்ந்தார்.
| [1054] |
ஆற்று நாள்களில் அணங்கனார்
கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற்
பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய
ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால்
முகைமலர் கொய்ய.
| [1055] |
அன்பர் இன்புறும் ஆர்வத்தின்
அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா
வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர்
எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர்
முள்ளெயிற்று அரவம்.
| [1056] |
மௌவல் மாதவிப் பந்தரில்
மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு
தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற்
செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல்
கவர்ந்தது குறித்து.
| [1057] |
நாலு தந்தமும் என்புறக்
கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின்
றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ
நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்றுள மயங்கி.
| [1058] |
தரையில் வீழ்தரச் சேடியர்
வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு
புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந்
துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன்
கலங்கினார் கலுழ்ந்தார்.
| [1059] |
விடந்தொ லைத்திடும் விஞ்சையில்
பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற்
கணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா
வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த்
தனித்தனிச் சூழ்வார்.
| [1060] |
மருந்தும் எண்ணில் மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே
கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண்மென் கொடியனாள்
தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையும்
கடந்துதீர்ந் திலதால்.
| [1061] |
ஆவி தங்குபல் குறிகளும்
அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித்
தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும்
சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர்
படரொலிக் கடல்போல்.
| [1062] |
சிந்தை வெந்துயர் உறுசிவ
நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப்
பறையறை வித்தார்.
| [1063] |
முரசி யம்பிய மூன்றுநாள்
அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட
அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும்
அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா
தொழிந்திடப் போனார்.
| [1064] |
சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.
| [1065] |
உடைய பிள்ளையார்க் கெனஇவள்
அடைவு துன்புறு வதற்கிலை
யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய
என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற்
புகப்பெய்து வைப்பார்.
| [1066] |
கன்னி மாடத்தின் முன்புபோல்
பொன்னு முத்துமே லணிகலன்
பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை
விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள்
அணிந்துவைத் தனரால்.
| [1067] |
மாலை சாந்தொடு மஞ்சனம்
நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம்
பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன
நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும்
வியப்பெய்து நாளில்.
| [1068] |
சண்பை மன்னவர் திருவொற்றி
யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க
ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந்
நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு
வந்துரை செய்தார்.
| [1069] |
சொன்ன வர்க்கெலாந் தூசொடு
காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா
மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு
வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந்
துகில்விதா னித்து.
| [1070] |
மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.
| [1071] |
இன்ன வாறணி செய்துபல்
குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை
முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப்
புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும்
உடன்செல வணைந்தார்.
| [1072] |
ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி
லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர்வந்து தோன்ற.
| [1073] |
மாறில் வண்பெரு வணிகரும்
தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை
நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி
னால்விழுந் திறைஞ்ச.
| [1074] |
காழி நாடரும் கதிர்மணிச்
சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன்
தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய்
திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித்
திருநகர் அணைந்தார்.
| [1075] |
அத்தி றத்துமுன் நிகழ்ந்தது
திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர்
தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர்
புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக்
கால்மகிழ்ந் தருளி.
| [1076] |
கங்கை வார்சடை யார்கபா
லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம்
தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை
வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத்
திருமுன்பு சேர்ந்தார்.
| [1077] |
தேவ தேவனைத் திருக்கபா
லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார்
ஞானசம் பந்தர்.
| [1078] |
போற்றி மெய்யருள் திறம்பெறு
பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப்
புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின்
புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற்
செலவருள் செய்வார்.
| [1079] |
ஒருமை உய்த்தநல் லுணர்வி
னீர்உல கவர்அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு
நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி
வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில்
கொணர்கென்று செப்ப.
| [1080] |
அந்த மில்பெரு மகிழ்ச்சியால்
அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில்
மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா
டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர்
குடத்தைவே றெடுத்து.
| [1081] |
மூடு பன்மணிச் சிவிகையுள்
பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை
சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா
லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச்
சிவிகையை நீக்கி.
| [1082] |
அங்க ணாளர்தம் அபிமுகத்
தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை
வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா
வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம்
நிலைமைசா திப்பார்.
| [1083] |
மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க.
| [1084] |
தொண்டர் தம்பெரும் குழாம்புடை
சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு
நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி.
| [1085] |
இந்த மாநிலத் திறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம்
பாவைபேர் செப்பி.
| [1086] |
மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.
| [1087] |
மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.
| [1088] |
ஆன தன்மையில் அத்திருப்
பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும்
பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன்
னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண்
பாட்டினை நவில்வார்.
| [1089] |
தேற்ற மில்சமண் சாக்கியத்
திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப்
பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக்
குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந்
தெழுந்தனள் போன்றாள்.
| [1090] |
எடுத்த பாட்டினில்வடிவுபெற்
றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண்
டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்
காப்புமேல் விரித்தார்.
| [1091] |
ஆங்கனம் எழுந்து நின்ற
அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா
அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர்
அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர்
நாட்டினை உற்ற தன்றே.
| [1092] |
தேவரும் முனிவர் தாமும்
திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி
மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
| [1093] |
அங்கவள் உருவங் காண்பார்
அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார்
பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற்
றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும்
சமணர்தள் ளாடி வீழ்ந்தார்.
| [1094] |
கன்னிதன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா
மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற
சூழல்போ லிருண்டு தோன்ற.
| [1095] |
பாங்கணி சுரும்பு மொய்த்த
பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும்
திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி
பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின்
வளரொளி வனப்பு வாய்ப்ப.
| [1096] |
புருவமென் கொடிகள் பண்டு
புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா
யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும்
சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண்
டெழுந்தன போல ஏற்ப.
| [1097] |
மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.
| [1098] |
பணிவளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும்
நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட.
| [1099] |
இளமயில் அனைய சாயல்
ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும்
வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு
கெழுமிய தன்மை யாலும்
| [1100] |
விற்பொலி தரளக் கோவை
விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்
பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும்
நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த
அருட்கடை யாளங் காட்ட.
| [1101] |
எரியவிழ் காந்தள் மென்பூத்
தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற.
| [1102] |
ஏர்கெழு மார்பிற் பொங்கும்
ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங்
கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித்
தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ்
செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
| [1103] |
காமவேள் என்னும் வேடன்
உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை
யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த
சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி
மருங்கின்மேல் உரோம வல்லி.
| [1104] |
பிணியவிழ் மலர்மென் கூந்தல்
பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள்
அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன்
பணம்விரித் தடைதல் காட்ட.
| [1105] |
வரிமயில் அனைய சாயல்
மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச்
செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப்
பொலிந்தொளி விளங்கிப் பொங்க.
| [1106] |
பூவலர் நறுமென் கூந்தல்
பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும்
அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின்
வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப்
பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.
| [1107] |
கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக் கணியாய் நின்றாள்.
| [1108] |
எண்ணில்ஆண் டெய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.
| [1109] |
இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.
| [1110] |
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.
| [1111] |
சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
| [1112] |
பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.
| [1113] |
மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
| [1114] |
வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.
| [1115] |
தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.
| [1116] |
பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
| [1117] |
தேவர்பிரான் அமர்ந்தருளும்
திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர்
விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை
கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்.
| [1118] |
தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.
| [1119] |
திருத்தொண்டர் அங்குள்ளார்
விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர
மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள்
வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி
யூர்பணிய அணைவுற்றார்.
| [1120] |
திருவான்மி யூர்மன்னும்
திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள்
மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி
அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித்
தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.
| [1121] |
மிக்குயர்ந்த கோபுரத்தை
வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப்
புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும்
குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.
| [1122] |
தாழ்ந்துபல முறைபணிந்து
தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன்
சாத்திமிக இன்புற்றார்.
| [1123] |
பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
| [1124] |
அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
| [1125] |
சென்னியிள மதியணிந்தார்
மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி
உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார்
தம்பிரான் திருமுன்பு.
| [1126] |
கண்டபொழு தேகலந்த
காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து
குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி
மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி
வண்ணங்கண்டு அதிசயித்தார்.
| [1127] |
இருந்தஇடைச் சுரம்மேவும்
இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத்
தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத்
திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
பேருலகின் பேறானார்.
| [1128] |
நிறைந்தாரா வேட்கையினால்
நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல்
திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.
| [1129] |
சென்றணையும் பொழுதின்கண்
திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை
இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத்
திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார்.
| [1130] |
திருக்கழுக்குன் றத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால்
பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங்
கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச்
சிந்தைநிறை மகிழ்வுற்றார்.
| [1131] |
இன்புற்றங் கமர்ந்தருளி
ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர்
எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு
அச்சிறுபாக் கத்தணைந்தார்.
| [1132] |
ஆதிமுதல் வரைவணங்கி
ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை
குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன்
வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார்
சின்னாள்அங் கமர்ந்தருளி.
| [1133] |
ஏறணிந்த வெல்கொடியார்
இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானம்
கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு
அரசிலியை வந்தடைந்தார்.
| [1134] |
அரசிலியில் அமர்ந்தருளும்
அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார்
பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த
திருத்தில்லை நகரணைந்தார்.
| [1135] |
எல்லையில்ஞா னத்தலைவர்
எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த்
திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச
மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன்
அஞ்சலிகொண் டணைகின்றார்.
| [1136] |
திருவெல்லை யினைப்பணிந்து
சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும்
வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன்
உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப்
பெருந்திருவீ தியைஅணைந்தார்.
| [1137] |
நலம்மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில்
குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித்
தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே
ரம்பலத்தை வணங்கினார்.
| [1138] |
வணங்கிமிக மனம்மகிழ்ந்து
மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில்
பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர்
பெருங்கூத்துக் கும்பிடுவார்.
| [1139] |
தொண்டர்மனம் பிரியாத
திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால்
நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த
ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின்
கரையில்லா நிலையணைந்தார்.
| [1140] |
அந்நிலைமை யடைந்துதிளைத்
தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை
வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப்
புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக்
கும்பிட்டங் கினிதமர்ந்தார்.
| [1141] |
திருந்தியசீர்த் தாதையார்
சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும்
பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார்
எனக்கேட்டு வந்தணைந்தார்.
| [1142] |
ஆங்கவரைக் கண்டுசிறப்
பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால்
தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ்
அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார்
திருச்சிற்றம் பலம்பணிந்தார்.
| [1143] |
தென்புகலி அந்தணரும்
தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த
ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர்
அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார்
தமைவணங்க எழுந்தருள.
| [1144] |
நற்றவர்தங் குழாத்தோடும்
நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை
பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த
பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக்
கழுமலமே சென்றடைவார்.
| [1145] |
பல்பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின்
சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல்
திருப்பதிகம் அருள் செய்வார்.
| [1146] |
மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.
| [1147] |
வாழிவளர் புறம்பணையின்
மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப
தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின்எனக்
கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி
எயில்மூதூர் உட்புகுந்தார்.
| [1148] |
சேணுயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து
நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில்
வலங்கொண்டு முன்பணிந்தார்.
| [1149] |
முன்னிறைஞ்சித் திருவருளின்
முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன்
புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம்
கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி
மனங்களிப்ப வணங்குவார்.
| [1150] |
பரவுதிருப் பதிகங்கள்
பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர்
வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப்
புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார்
தந்திருமா ளிகைசேர்ந்தார்.
| [1151] |
மாளிகையின் உள்ளணைந்து
மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத்
தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான்
அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம்
மிகப்பெருக நிகழுநாள்.
| [1152] |
காழிநா டுடையபிரான்
கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும்
ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல்
தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன்
றோணிபுரந் தொழுதணைந்தார்.
| [1153] |
வந்தவரை எதிர்கொண்டு
மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க
ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன்
றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பலபாடி.
| [1154] |
பெருமகிழ்ச்சி யுடன்செல்லப்
பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான
மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர்
திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி
அறிவிக்கப் பாங்கணைந்தார்.
| [1155] |
நாட்டுமறை முறையொழுக்கம்
ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார்
கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல
புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென
விண்ணப்பம் செய்தார்கள்.
| [1156] |
மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.
| [1157] |
அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென.
| [1158] |
மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்.
| [1159] |
திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்.
| [1160] |
ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்.
| [1161] |
திருஞான சம்பந்தர்
சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர்
மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம்
மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர்
சார்கின்றார் தாதையார்.
| [1162] |
மிக்கதிருத் தொண்டர்களும்
வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப்
பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம்
திருப்பாதம் தொழுதெழுவார்.
| [1163] |
ஒப்பரிய பேருவகை
ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு
மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு
பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன்
எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.
| [1164] |
எதிர்கொண்டு மணிமாடத்
தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து
வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய
சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும்
அணைந்ததிறம் மொழிகின்றார்.
| [1165] |
ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
| [1166] |
உம்முடைய பெருந்தவத்தால்
உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில்
குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை
யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
| [1167] |
பேருவகை யால்இசைவு
பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக்
கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு
அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின்
பான்மைவினை தொடங்குவார்.
| [1168] |
திருமணஞ்செய் கலியாணத்
திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித
மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை
பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில்
அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.
| [1169] |
செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.
| [1170] |
அருந்தவத்தோர் அந்தணர்கள்
அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை
பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார்
நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார்
வதுவைவினை தொடங்குவார்.
| [1171] |
மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.
| [1172] |
சேணுயரும் மாடங்கள்
திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள்
நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம்
கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண்
மங்கலக்கோ லம்புனைந்து.
| [1173] |
நீடுநிலைத் தோரணங்கள்
நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை
மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள்
செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின்
பெரும்பந்தர் பலபுனைந்தார்.
| [1174] |
மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.
| [1175] |
எங்கணும்மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள்
கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில்
நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம்
பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.
| [1176] |
மங்கலதூ ரியநாதம்
மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை
கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின்
தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும்
தெய்வவிரை மணம்பெருக.
| [1177] |
எண்திசையில் உள்ளோரும்
ஈண்டுவளத் தொடுநெருங்கப்
பண்டநிறை சாலைகளும்
பலவேறு விதம்பயில
மண்டுபெரு நிதிக்குவைகள்
மலைப்பிறங்கல் எனமலிய
உண்டிவினைப் பெருந்துழனி
ஓவாத ஒலியோங்க.
| [1178] |
மாமறைநூல் விதிச்சடங்கின்
வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம்
சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந்
தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப்
புண்ணியநீர் பொலிவெய்த.
| [1179] |
குங்குமத்தின் செழுஞ்சேற்றின்
கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப்
புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச்
சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர்
ஈட்டங்கள் மிகப்பெருக.
| [1180] |
இனையபல வேறுதொழில்
எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம்
மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள்
நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச்
சமைத்ததுபோல் அமைந்துளதால்.
| [1181] |
மாறி லாநிறை வளந்தரு
புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில்
வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும்
நிகரிலா தவருக்
காறு சூடினார் அருள்திருக்
காப்புநா ணணிவார்.
| [1182] |
வேத வாய்மையின் விதியுளி
வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை
ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள்
மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண்
நகர்வலம் செய்தார்.
| [1183] |
நகர்வ லஞ்செய்து புகுந்தபின்
நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண்
டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா
வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார்
திருமுன்பு சேர்ந்தார்.
| [1184] |
செம்பொ னின்பரி கலத்தினில்
செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ்
மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம்
அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக்
கொளிர்தரும் பரப்பில்.
| [1185] |
நாத மங்கல முழக்கொடு
நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந்
தவர்முன்பு மேவி.
| [1186] |
ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.
| [1187] |
கண்ட மாந்தர்கள் கடிமணம்
காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ்
கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந்
தார்த்தன மகிழ்ந்தே.
| [1188] |
நிரந்த கங்குலின் நிதிமழை
விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம்
புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன்
னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந்
தெழுந்தனன் பகலோன்.
| [1189] |
அஞ்சி றைச்சுரும் பறைபொழில்
சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத்
தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென
மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி
யணிந்தன திசைகள்.
| [1190] |
பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.
| [1191] |
நங்கள் வாழ்வென வருந்திரு
ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச்
சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை
ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன்
எழுந்தது புணரி.
| [1192] |
அளக்கர் ஏழும்ஒன் றாமெனும்
பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன்
விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி
தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித்
தெழுந்தது வன்னி.
| [1193] |
சந்த மென்மலர்த் தாதணி
நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங்
கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந்
தெழுந்தது மருத்து.
| [1194] |
எண்தி சைத்தலத் தியாவரும்
புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச்
சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க்
கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது
போன்றது விசும்பு.
| [1195] |
ஏல இந்நலம் யாவையும்
எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய
கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல்
முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால்
மணத்தின்மேற் செல்வார்.
| [1196] |
காழி மாநகர் வேதியர்
குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர்
துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட
வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
| [1197] |
ஆன வாகனம் ஏறுவார்
யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச்
சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும்
நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன்
மங்கல வியங்கள்.
| [1198] |
சங்கொடு தாரை சின்னம்
தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று
மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்த தன்றே.
| [1199] |
கோதையர் குழல்சூழ் வண்டின்
குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை
மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை
யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத
நயப்பொலி ஒருபா லாக.
| [1200] |
விண்ணினை விழுங்க மிக்க
வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க
கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும்
அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின்
பொதிப்பரப் பெங்கும் நண்ண.
| [1201] |
சிகையொடு மான்தோல் தாங்கும்
கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ
இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க
பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற
மாதவ ரியல்பின் மல்க.
| [1202] |
அறுவகை விளங்குஞ் சைவத்
தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம்
நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின்
வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர்
குழாங்குழாம் ஆகி ஏக.
| [1203] |
விஞ்சையர் இயக்கர் சித்தர்
கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்
தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித்
தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது
மணவணி காணச் சென்றார்.
| [1204] |
மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர்
மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த
அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை
போன்றுமுன் பொலியச் செல்ல.
| [1205] |
தவஅர சாள உய்க்கும்
தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார்
பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த
பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த்
திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.
| [1206] |
பெருமணக் கோயி லுள்ளார்
மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர்
வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும்
சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத்
திறைவர்தங் கோயில் புக்கார்.
| [1207] |
நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில்
புறத்தொரு மடத்திற் புக்கார்.
| [1208] |
பொற்குடம் நிறைந்த வாசப்
புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை
மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய
நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம்
பான்மையில் அணிந்த பின்னர்.
| [1209] |
திருவடி மலர்மேற் பூத்த
செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை
மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது
விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம்
பிறங்கிய தொங்கல் சாத்தி.
| [1210] |
தண்சுடர்ப் பரிய முத்துத்
தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக்
கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு
வனப்பொளி வளரச் சாத்தி.
| [1211] |
ஒளிகதிர்த் தரளக் கோவை
யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின்
சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின்
பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை
நகுசுடர் ஆரஞ் சாத்தி.
| [1212] |
வாள்விடு வயிரக் கட்டு
மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின்
தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு
நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண்
சுந்தரத் தோள்மேற் சாத்தி.
| [1213] |
திருக்கழுத் தாரந் தெய்வக்
கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த
படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி
பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின்
வடிக்குழை விளங்கச் சாத்தி.
| [1214] |
நீற்றொளி தழைத்துப் பொங்கி
நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி
வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப்
பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின்
எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.
| [1215] |
இவ்வகை நம்மை யாளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக்
கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர்
திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத்
தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.
| [1216] |
அழகினுக் கணியாம் வெண்ணீ
றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப்
படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை
மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின்
சிவிகைமேல் கொண்ட போது.
| [1217] |
எழுந்தன சங்க நாதம்
இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர்
கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர்
சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது
மலர்ந்தன உலகம் எல்லாம்.
| [1218] |
படர்பெருந் தொங்கல் பிச்சம்
பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில்
அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும்
கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின்
மணிக்குடை நிழற்ற வந்தார்.
| [1219] |
சீரணி தெருவி னூடு
திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம்
இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான
சம்பந்தர் வந்தா ரென்று.
| [1220] |
மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.
| [1221] |
முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை
நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்த வேலை.
| [1222] |
செம்பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த
பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன
அழகலங் கரித்து வைத்தார்.
| [1223] |
மாமறை மைந்தர் எல்லாம்
மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம்
தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச.
| [1224] |
விண்ணவர் மலரின் மாரி
விசும்பொளி தழைப்ப வீச
மண்ணக நிறைந்த கந்த
மந்தமா ருதமும் வீசக்
கண்ணொளி விளக்கம் மிக்க
காமர்தோ ரணங்க ளூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.
| [1225] |
பொன்னணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி
வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம்
பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார்
மூவுல குய்ய வந்தார்.
| [1226] |
மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள்
நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை
நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி
உடன்எதி ரேற்று நின்றார்.
| [1227] |
ஆங்குமுன் னிட்ட செம்பொன்
அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம்
உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண்
தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார்
பரசம யங்கள் வீழ்த்தார்.
| [1228] |
எதிர்வர வேற்ற சாயல்
இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான
வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக்
கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி
மேவுநல் வினைகள் செய்தார்.
| [1229] |
மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன்
இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத்
தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடுவை கையினுள் இட்டார்.
| [1230] |
திருமகட் கொடுக்கப் பெற்ற
செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை
அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம்
விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர்
உடனெடுத் தேந்தி வந்தார்.
| [1231] |
வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.
| [1232] |
விருப்பினால் விளக்கி மிக்க
புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும்
புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும்
பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும்
தெளித்தனர் ஆர்வத் தோடும்.
| [1233] |
பெருகொளி ஞானம் உண்ட
பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக்
கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின்
தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப்
பிள்ளையார்க் களித்தேன் என்றார்.
| [1234] |
நற்றவக் கன்னி யார்கை
ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில்
பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார்
பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக்
கொண்டுமுன் துன்னி னார்கள்.
| [1235] |
ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம்
இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல்
நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க
மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக்
கொடியென விளங்க வைத்தார்.
| [1236] |
புனிதமெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங்
கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில்
நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார்
கண்ணிமை யாது வாழ்த்தி.
| [1237] |
பத்தியிற் குயிற்றும் பைம்பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச்
செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு
முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
மேவுமுள் ளத்தாற் செய்ய.
| [1238] |
மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.
| [1239] |
அருப்புமென் முலையி னார்தம்
அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை
யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை
உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வார்.
| [1240] |
மந்திர முறையால் உய்த்த
எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும்
தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள்தன் னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்
என்னும்ஆ தரவு பொங்க.
| [1241] |
மலர்பெருங் கிளையும் தொண்டர்
கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை
அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க
உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம்
கோயிலை நோக்கி வந்தார்.
| [1242] |
சிவனமர்ந் தருளுஞ் செல்வத்
திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார்
தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள்
ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும்
என்னும்நல் லுணர்வு நல்க.
| [1243] |
காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந்
தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும்
| [1244] |
தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி
இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம
முழுச்சுடர்த் தாணு வாகி.
| [1245] |
கோயிலுட் படமேல் ஓங்குங்
கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட
மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு
பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய
வழியினை அருளிச் செய்வார்.
| [1246] |
ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
| [1247] |
வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுள் புக்கார்.
| [1248] |
சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.
| [1249] |
அணிமுத்தின் சிவிகைமுதல்
அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
தொழுதுடன்புக் கொடுங்கினார்.
| [1250] |
ஆறுவகைச் சமயத்தின்
அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும்
கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால்
வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள்
எல்லாரும் புக்கதற்பின்.
| [1251] |
காதலியைக் கைப்பற்றிக்
கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும்
திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி
நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப்
புக்கொன்றி உடனானார்.
| [1252] |
பிள்ளையார் எழுந்தருளிப்
புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப்
பேறில்லார் தெருமந்தார்.
| [1253] |
கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.
| [1254] |
அருந்தமிழா கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும்
பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம
னார்செய்கை வழுத்துவேன்.
| [1255] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.290  
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
பண் - ( )
நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
| [1] |
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
| [2] |
விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்
உழவ றாதநல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
| [3] |
நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னில்திகழ் கண்டர்தங் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.
| [4] |
இன்ன வாழ்பதி யதனிடை
ஏயர்கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்சே
னாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால்
நிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையில்
உயர்ந்தபொற் பினதால்.
| [5] |
அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
| [6] |
புதிய நாள்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி அநேகமுஞ் செய்து
நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்.
| [7] |
நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.
| [8] |
திருத்தொண்டத் தொகையருளித்
திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினால்
கனகமதில் திருவாரூர்
ஒருத்தர்கழல் முப்பொழுதும்
உருகியஅன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினாற்
பிரியாதங் குறையுநாள்.
| [9] |
தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க்
கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்தன்பா லொழுகுவார்.
| [10] |
செந்நெல்லும் பொன்னன்ன
செழும்பருப்பும் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதும்முதல்
எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்றொண்டர்க்
கமுதாக வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார்
மாளிகைக்குப் படிசமைத்தார்.
| [11] |
ஆனசெயல் அன்பின்வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல்
மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப
எடுப்பதற்குப் போதாமை
மானமழி கொள்கையினால்
மனமயங்கி வருந்துவார்.
| [12] |
வன்றொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற
தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால்
துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள
| [13] |
ஆரூரன் தனக்குன்பால்
நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார்
நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை
அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங்
கரக்கநிறைந் தோங்கியதால்.
| [14] |
அவ்விரவு புலர்காலை
உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா
னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதெழுவார்.
| [15] |
நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும்
இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார்
புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார்.
| [16] |
குண்டையூர்க் கிழவர் தாமும்
எதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னில்
தொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த
பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே
நெல்மலைஅளித்தா ரென்று.
| [17] |
மனிதரால் எடுக்கு மெல்லைத்
தன்றுநெல் மலையின் ஆக்கம்
இனியெனால் செய்ய லாகும்
பணியன்றி தென்னக் கேட்டுப்
பனிமதி முடியா ரன்றே
பரிந்துமக் களித்தார் நெல்லென்
றினியன மொழிந்து தாமும்
குண்டையூர் எய்த வந்தார்.
| [18] |
விண்ணினை அளக்கு நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி
அதிசயம் மிகவு மெய்தி
எண்ணில்சீர்ப் பரவை யில்லத்
திந்நெல்லை யெடுக்க ஆளும்
தண்ணில வணிந்தார் தாமே
தரிலன்றி ஒண்ணா தென்று.
| [19] |
ஆளிடவேண் டிக்கொள்வார்
அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான்
கோயிலினை வந்தெய்தி
வாளனகண் மடவாள்
வருந்தாமே எனும்பதிகம்
மூளவருங் காதலுடன்
முன்தொழுது பாடுதலும்.
| [20] |
பகற்பொழுது கழிந்ததற்பின்
பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில்
விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம்
பூதங்க ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு
நிகழ்ந்ததுநின் மலனருளால்.
| [21] |
தம்பிரான் அருள்போற்றித்
தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய
திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார்
நாவலூர் நாவலனார்.
| [22] |
பூங்கோயில் மகிழ்ந்தருளும்
புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி
யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து
போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையின்
உள்ளணைந்தார் ஆரூரர்.
| [23] |
கோவைவாய்ப் பரவையார்
தாம்மகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு
மிகஇன்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும்
வருவார்தந் திருவருளின்
ஏவலினால் அவ்விரவு
பூதங்கள் மிக்கெழுந்து.
| [24] |
குண்டையூர் நென்மலையைக்
குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை
மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர்
அடங்கவும்நெல் மலையாக்கிக்
கண்டவர்அற் புதமெய்துங்
காட்சிபெற அமைத்தனவால்.
| [25] |
அவ்விரவு புலர்காலை
ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல்
மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின்
நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு
நம்பியளித் தனவென்பார்.
| [26] |
நீக்கரிய நெற்குன்று
தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு
மீண்டுந்தம் மில்புகுவார்
பாக்கியத்தின் திருவடிவாம்
பரவையார்க் கிந்நெல்லுப்
போக்குமிட மரிதாகும்
எனப்பலவும் புகல்கின்றார்.
| [27] |
வன்றொண்டர் தமக்களித்த
நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக்
குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற்
புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார்
மிக்கபுகழ்ப் பரவையார்.
| [28] |
அணியாரூர் மறுகதனில்
ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப்
பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமற் கட்டிநகர்
களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்.
| [29] |
நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.
| [30] |
குலபுகழ்க் கோட்புலியார்
குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர்
எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ
திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார்
மீண்டுந்தம் பதியணைந்தார்.
| [31] |
தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.
| [32] |
மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
| [33] |
தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
| [34] |
பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருவில் விரைச்சந் தனக்கலவை
வாய்ந்த அகிலி னறுஞ்சாந்து
வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்கா யமுதினைய
எண்ணில் மணிப்பா சனத்தேந்தி.
| [35] |
வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா
பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்டர்
அளவில் பூசை கொளவளித்தார்.
| [36] |
செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவார்.
| [37] |
ஆனா விருப்பின் மற்றவர்தாம்
அருமை யால்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும் அவர்பின் கருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து வன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமுந் தொழுது சொல்லுவார்.
| [38] |
அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
| [39] |
கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துட் கசிவால் அணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து
வேண்டு வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.
| [40] |
வென்றி வெள்ளே றுயர்த்தருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப்
பதிகம் பூணா னென்றெடுத்துக்
கொன்றை முடியா ரருளுரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.
| [41] |
சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப்
பதனி னிடைச்சிங் கடியாரைப்
பிறப்பித்தெடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடியப்ப
னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற் புடைய இசைபாடி
நிறைந்த அருள்பெற் றிறைஞ்சுவார்.
| [42] |
அங்கு நின்றும் எழுந்தருளி
அளவி லன்பில் உள்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
வலிவ லத்துக் கண்டேனென்
றெங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த விசைபுனைவார்.
| [43] |
நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.
| [44] |
இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.
| [45] |
செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.
| [46] |
சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
| [47] |
சிறிது பொழுது கும்பிட்டுச்
சிந்தை முன்னம் அங்கொழிய
வறிது புறம்போந் தருளியயல்
மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருடன்
அணிமுன் றிலினோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளேயோ
மலர்க்கண் துயில்வந் தெய்தியதால்.
| [48] |
துயில்வந் தெய்தத் தம்பிரான்
றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமட் பலகைபல
கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி
முடிமேல் அணையா உத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்.
| [49] |
சுற்று மிருந்த தொண்டர்களுந்
துயிலு மளவில் துணைமலர்க்கண்
பற்றுந் துயில்நீங் கிடப்பள்ளி
யுணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே
வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொன்திண் கல்லா யினகண்டு
புகலூ ரிறைவ ரருள்போற்றி.
| [50] |
தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.
| [51] |
பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.
| [52] |
செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
| [53] |
வளமல் கியசீர்த் திருப்பனையூர்
வாழ்வா ரேத்த எழுந்தருளி
அளவில் செம்பொன் இட்டிகை
களால்மேல் நெருங்கி யணியாரூர்த்
தளவ முறுவற் பரவையார்
தம்மா ளிகையிற் புகத்தாமும்
உளமன் னியதம் பெருமானார்
தம்மை வணங்கி உவந்தணைந்தார்.
| [54] |
வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
| [55] |
பலநாள் அமர்வார் பரமர்திரு
வருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார்
திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள்
வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற தண்ணியல்வெம்
மையினான் என்னுந் தமிழ்மாலை.
| [56] |
பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
| [57] |
வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
| [58] |
படங்கொள் அரவில் துயில்வோனும்
பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை
விரவும் புளக முடன்பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர்
அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை
சாத்தி யங்குச் சாருநாள்.
| [59] |
வாசி யறிந்து காசளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள்
பணிந்து பொருவ னார்என்னும்
மாசில் பதிகம் பாடியமர்ந்
தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
| [60] |
செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.
| [61] |
புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
அருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
| [62] |
விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
| [63] |
சாத்தி யங்கு வைகுநாள்
தயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப்
பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல்
திகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்தம் இடைமருதை
யடைந்தார் முனைப்பா டித்தலைவர்.
| [64] |
மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
| [65] |
பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்
| [66] |
செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
| [67] |
அங்கு நின்று திருக்குடமூக்
கணைந்து பணிந்து பாடிப்போய்
| [68] |
நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.
| [69] |
அழனீ ரொழுகி யனையவெனும்
அஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங்
காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப்
போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி
பலவும் பணிந்து முன்னுவார்.
| [70] |
தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.
| [71] |
மழபா டியினில் வருவதற்கு
நினைக்க மறந்தா யோவென்று
குழகா கியதம் கோலமெதிர்
காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி
வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி
யணைந்தார் நம்பி யாரூரர்.
| [72] |
அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி
அன்பர் சூழ வுடன்புகுந்து
பணங்கொ ளரவ மணிந்தார்முன்
பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொ ளருளின் திறம்போற்றிக்
கொண்ட புளகத் துடனுருகிப்
புணர்ந்த விசையாற் றிருப்பதிகம்
பொன்னார் மேனி என்றெடுத்து.
| [73] |
அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.
| [74] |
செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
| [75] |
மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.
| [76] |
வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும்
வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த
தன்மை சிறக்கச் சாற்றினார்.
| [77] |
சாற்றி யங்குத் தங்குநாள்
தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்
போற்றி யங்கு நின்றும்போய்ப்
பொருவி லன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சி ராமம் சென்றடைந்தார்.
| [78] |
சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.
| [79] |
அன்பு நீங்கா அச்சமுட னடுத்த
திருத்தோழமைப் பணியாற்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற்
றிலையோ யென்ன வெடுக்கின்றார்.
| [80] |
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
யொருமையா மெழுமையு முணர்த்தி
எத்தனை யருளா தொழியினும் பிரானார்
இவரலா தில்லையோ யென்பார்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
எனவழுத் தினார்வழித் தொண்டர்.
| [81] |
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.
| [82] |
அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.
| [83] |
கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.
| [84] |
பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
| [85] |
கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன்குறுகிச்
சங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து
சார்ந்தடி யிணையினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது
புனிதர்பொன் மேனியை நோக்கி
இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப.
| [86] |
அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.
| [87] |
உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்துமெய் யுணர்வறா வொருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
நீங்குவார் பாங்குநற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகுமா தரவால்.
| [88] |
அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.
| [89] |
காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.
| [90] |
அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.
| [91] |
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.
| [92] |
வீடு தரும்இக் கற்குடியில்
விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை யுடன்பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன்
பதிகள் பலவும் அணைந்திறைஞ்சித்
தேடு மிருவர் காண்பரியார்
திருவா றைமேற் றளிசென்றார்.
| [93] |
செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.
| [94] |
ஏரின் மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி
ஆரா அருளால் அங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார்
மருவும் புறம்ப யம்போற்றச்
சேரும் உள்ளம் மிக்கெழமெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார்.
| [95] |
அங்க மோதியோ ராறை மேற்றளி
யென்றெ டுத்தமர் காதலில்
பொங்கு செந்தமி ழால்வி ரும்பு
புறம்ப யந்தொழப் போதும்என்
றெங்கும் மன்னிய இன்னி சைப்பதி
கம்பு னைந்துட னெய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ் சேரவே.
| [96] |
அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.
| [97] |
நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.
| [98] |
அங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்
மிகப்பொ ழிந்தெழு மன்பினால்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்
தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர்
தாம கிழ்ந்த விடங்களில்
தங்கு கோல மிறைஞ்சு வாரருள்
தாவி லன்பரோ டெய்தினார்.
| [99] |
வம்புநீ டலங்கல் மார்பின்
வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க
டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம்
பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு
கூடலை யாற்றூர் சார.
| [100] |
செப்பரும் பதியிற் சேரார்
திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும்
ஒருவழி யுமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளா யுள்ளார்
வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலுந் தாங்கி
நம்பியா ரூரர் முன்பு.
| [101] |
நின்றவர் தம்மை நோக்கி
நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த
வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று
செல்வழித் துணையாய்ச் செல்ல.
| [102] |
கண்டவர் கைகள் கூப்பித்
தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை
வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த
அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும்
கூடலை யாற்றூர் புக்கார்.
| [103] |
கூடலை யாற்றூர் மேவும்
கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றி னேர்ந்தார்.
| [104] |
தடநிலைக் கோபு ரத்தைத்
தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி
யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று.
| [105] |
நாதர்பாற் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
மெய்யில்வெண் பொடியும் பாட.
| [106] |
பனிமதிச் சடையார் தாமும்
பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றால்
நல்கிட உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத்
தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன்
பின்னொன்று கழற லுற்றார்.
| [107] |
அருளும்இக் கனக மெல்லாம்
அடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே
வரப்பெற வேண்டு மென்னத்
தெருளுற வெழுந்த வாக்கால்
செழுமணி முத்தாற் றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க்
குளத்திற்போய்க் கொள்க வென்றார்.
| [108] |
என்றுதம் பிரானார் நல்கும்
இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக்
கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட
அருளிதில் அறிவே னென்று.
| [109] |
மேவிய காதல் தொண்டு
விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக்
கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
| [110] |
மாடுள பதிகள் சென்று
வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ்
செழுந்திரு வீதி சார்ந்தார்.
| [111] |
பொற்றிரு வீதி தாழ்ந்து
புண்ணிய விளைவாய் ஓங்கும்
நற்றிரு வாயில் நண்ணி
நறைமலி யலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல்
வணங்கியுட் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிசைழ் வந்து
தொழுதுகை தலைமேற் கொள்வார்.
| [112] |
ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய.
| [113] |
பரவுவாய் குளறிக் காதல்
படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட
நிறைவுதங் கருத்திற் கொள்ள.
| [114] |
மடித்தாடும் அடிமைக்கண் என்றெடுத்து
மன்னுயிர்கட் கருளு மாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்கண் நின்றார்கள்
வழுவிநர கணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை
சிறப்பித்துத் தனிக்கூத் தென்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவா
றெனுங்களிப்பால் நயந்து பாடி.
| [115] |
மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேரன்பால் பொற்பதியை
வணங்கிப்போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர்தங் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.
| [116] |
கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி
எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்
புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
சாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்
தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்.
| [117] |
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
| [118] |
திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்ளணைந்து பணிந்தேத்தி உருகு மன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.
| [119] |
கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே னென்று
வானாளுந் திருப்பதிகம் வள்வாய் என்னும்
வண்டமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்.
| [120] |
எத்திசையுந் தொழுதேத்த மத்த யானை
எடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
அருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
| [121] |
காட்டுநல் வேள்விக் கோலங்
கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு
நம்பிஆ ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ
அங்குநின் றேகி அன்பு
பூட்டிஆட் கொண்டார் மன்னுந்
தானங்கள் இறைஞ்சிப் போந்து.
| [122] |
எஞ்சாத பேரன்பில்
திருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றார்
இடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த
மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத்
திருவாரூர் சென்றடைந்தார்.
| [123] |
செல்வமலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து
வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக
எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன்
பரமர்திரு முன்னணைந்தார்.
| [124] |
மூவாத முதலாகி
நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத்
திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காதல்
உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை
யார்திருமா ளிகைசார்ந்தார்.
| [125] |
பொங்குபெரு விருப்பினொடு
புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப்
பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற்
றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும்
மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
| [126] |
நாயனார் முதுகுன்றர்
நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில்
புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால்
குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப்
போதுவாய் எனப்புகல.
| [127] |
என்னஅதி சயம்இதுதான்
என்சொன்ன வாறென்று
மின்னிடையார் சிறுமுறுவ
லுடன்விளம்ப மெய்யுணர்ந்தார்
நன்னுதலாய் என்னுடைய
நாதனரு ளாற்குளத்தில்
பொன்னடைய எடுத்துனக்குத்
தருவதுபொய் யாதென்று.
| [128] |
ஆங்கவரும் உடன்போத
வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த
புராதனரைப் புக்கிறைஞ்சி
ஓங்குதிரு மாளிகையை
வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார்
பரவையார் தனித்துணைவர்.
| [129] |
மற்றதனின் வடகீழ்பால்
கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி
முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக்
கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார்
போல்அங்குத் தடவுதலும்.
| [130] |
நீற்றழகர் பாட்டுவந்து
திருவிளையாட் டினில்நின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து
வருவியா தொழிந்தருள
ஆற்றினிலிட் டுக்குளத்தில்
தேடுவீர் அருளிதுவோ
சாற்றுமெனக் கோற்றொடியார்
மொழிந்தருளத் தனித்தொண்டர்.
| [131] |
முன்செய்த அருள்வழியே
முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை
தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின்
வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர்
எனப்பதிகம் போற்றிசைத்து.
| [132] |
முட்டஇமை யோரறிய
முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த
தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவளெதிரே
| [133] |
ஏத்தாதே இருந்தறியேன்
எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக்
கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக்
கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய
நெறிநின்றார் பரவுதலும்.
| [134] |
கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக்
கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் திரளெடுத்து
வரன்முறையாற் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி
பொழிந்திழிந்த தவனியுளோர்
இந்தஅதி சயமென்னே
யார்பெறுவார் எனத்தொழுதார்.
| [135] |
ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.
| [136] |
மீட்டுமவர் பரவுதலும்
மெய்யன்ப ரன்பில்வரும்
பாட்டுவந்து கூத்துவந்தார்
படுவாசி முடிவெய்தும்
ஓட்டறுசெம் பொன்னொக்க
ஒருமாவுங் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக்
கொண்டுகரை யேறினார்.
| [137] |
கரையேறிப் பரவையா
ருடன்கனக மானதெலாம்
நிரையேஆ ளிற்சுமத்தி
நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத்
திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந்
தொழுதணைந்தார் வீதியினில்.
| [138] |
வந்திரு மாளிகையி
னுட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகையேத்து
மளவிறந்தா ரொலிசிறப்பச்
சிந்தைநிறை மகிழ்ச்சியுடன்
சேயிழையா ருடனமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை
நாவலர்தங் காவலனார்.
| [139] |
அணியாரூர் மணிப்புற்றில்
அமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவார்அங் கொருநாளில்
பாராட்டுந் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம்
தலைசிறப்பத் தொண்டருடன்
துணிவாய பேரருள்வினவித்
தொழுதாடிப் பாடுவார்.
| [140] |
பண்ணிறையும் வகைபாறு
தாங்கியென வெடுத்தருளி
உண்ணிறையும் மனக்களிப்பால்
உறுபுளகம் மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக்
கரையிகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படிதோன்ற
ஏத்திமதிழ்ந் தின்புற்றார்.
| [141] |
இன்புற்றங் கமர்நாளில்
ஈறிலரு மறைபரவும்
வன்புற்றில் அரவணிந்த
மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்ற காதலுடன்
அளவிறந்த பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ்
சடையாரைத் தொழப்போவார்.
| [142] |
பரிசனமும் உடன்போதப்
பாங்கமைந்த பதிகள்தொறும்
கரியுரிவை புனைந்தார்தம்
கழல்தொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர்
நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்டர்
எதிர்கொள்ளப் புக்கணைந்தார்.
| [143] |
விண்தடவு கோபுரத்தைப்
பணிந்துகர மேல்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார்
கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு
மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில மிசைப்பணிந்தார்.
| [144] |
அங்கணரைப் பணிந்தேத்தி
அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத்
திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந்
திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு
வார்கொன்றை யெனப்போற்றி.
| [145] |
திருவீரட் டானத்துத்
தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல்
பணிந்துபொடி யார்மேனி
மருவீரத் தமிழ்மாலை
புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப்
பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
| [146] |
வரையோடு நிகர்புரிசை
வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக்
கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப
மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந்
திருச்சாய்க்கா டெய்தினார்.
| [147] |
தேவர்பெரு மான்தன்னைத்
திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத்
திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார்
வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார்
நனிபள்ளித் திருநகரில்.
| [148] |
நனிபள்ளி யமர்ந்தபிரான்
கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து
திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம்
பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம்
திருநின்றி யூர்சார்ந்தார்.
| [149] |
நின்றியூர் மேயாரை
நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப்
பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப்
பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல்
திருப்பதிகம் அருள்செய்தார்.
| [150] |
அப்பதியில் அன்பருடன்
அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர்
பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால்
நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை
விளம்பியே மீண்டணைந்தார்.
| [151] |
மடலாரும் புனல்நீடூர்
மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல்
விருப்புறும்அத் திருப்பதிகம்
அடலார்சூ லப்படையார்
தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம்
மிகப்பணிந்தங் குறைகின்றார்.
| [152] |
அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.
| [153] |
திருஞான சம்பந்தர்
திருக்கைக ளால் ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப்
பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம்
அளித்தபடி சிறப்பித்துப்
பொருள்மாலைத் திருப்பதிகம்
பாடியே போற்றிசைத்தார்.
| [154] |
மூவாத முழுமுதலார்
முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை
வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர்
நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார்
குருகாவூர் மேவுவார்.
| [155] |
உண்ணீரின் வேட்கையுடன்
உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை
யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார்
காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும்
கொண்டுவழிச் சார்கின்றார்.
| [156] |
வேனிலுறு வெயில்வெம்மை
தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும்
பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியராய்
அருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார்
வன்தொண்டர் தமைப்பார்த்து.
| [157] |
குருகாவூர் அமர்ந்தருளும்
குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான்
தோழர்திருத் தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப்
புகுந்துதிரு மறையவர்பால்
பெருகார்வஞ் செலவிருந்தார்
சிவாயநம வெனப்பேசி.
| [158] |
ஆலநிழற் கீழிருந்தார்
அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப்
பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே
கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர்
குடித்திளைப்புத் தீரஎன.
| [159] |
வன்தொண்டர் அதுகேட்டு
மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க
லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர்
தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன்
திருவமுது செய்தருளி.
| [160] |
எண்ணிறந்த பரிசனங்கள்
எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு
பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய்
ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த
பொதிசோறு பொலிந்ததால்.
| [161] |
சங்கரனார் திருவருள்போல்
தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால்
அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந்
தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப்
பந்தரொடுந் தாங்கரந்தார்.
| [162] |
சித்தநிலை திரியாத
திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி
யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை
அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம்
விளம்பியே சென்றடைந்தார்.
| [163] |
குருகாவூர் அமர்ந்தருளும்
குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை
யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங்
கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக்
கண்களாற் பருகினார்.
| [164] |
கண்ணார்ந்த இன்னமுதைக்
கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல்
உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன்
அங்கினிது நயந்திருந்தார்.
| [165] |
அந்நாளில் தம்பெருமான்
அருள்கூடப் பணிந்தகன்று
மின்னார்செஞ் சடைமுடியார்
விரும்புமிடம் பலவணங்கிக்
கன்னாடும் எயில்புடைசூழ்
கழிப்பாலை தொழுதேத்தித்
தென்னாவ லூர்மன்னர்
திருத்தில்லை வந்தடைந்தார்.
| [166] |
சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.
| [167] |
திருத்தினைமா நகர்மேவும்
சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனார் அமர்ந்தருளும்
நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர்
போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவால்
கைதொழச்சென் றெய்தினார்.
| [168] |
திருநாவ லூர்மன்னர்
சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து
வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார்
செழுங்கோயி லுள்ளணைந்தார்.
| [169] |
மேவியஅத் தொண்டர்குழாம்
மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப
முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா
ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப்
பாடியே கும்பிட்டார்.
| [170] |
நலம்பெருகும் அப்பதியில்
நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர்
குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார்
தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் தொழப்போவார்.
| [171] |
தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத்
தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை
வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
கழுக்குன்றை யெய்தினார்.
| [172] |
தேனார்ந்த மலர்ச்சோலை
திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு
மெதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த
சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின்
திருப்பதிகம் பாடினார்.
| [173] |
பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
| [174] |
அணைந்தருளும் அவ்வேலை
அமுதுசெயும் பொழுதாகக்
கொணர்ந்தமுது சமைத்தளிக்கும்
பரிசனமும் குறுகாமைத்
தணந்தபசி வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார்
முனைப்பாடிப் புரவலனார்.
| [175] |
வன்தொண்டர் பசிதீர்க்க
மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ
டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி
அருள்கூரச் செப்புவார்.
| [176] |
மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே
சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறும் சென்றிரப்பார்.
| [177] |
வெண்திருநீற் றணிதிகழ
விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல்
பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட்
கொண்டவர்முன் கொடுவந்தார்.
| [178] |
இரந்துதாங் கொடுவந்த
இன்னடிசி லுங்கறியும்
அரந்தைதரும் பசீதீர
அருந்துவீ ரெனவளிப்பப்
பெருந்தகையார் மறையவர்தம்
பேரருளின் திறம்பேணி
நிரந்தபெருங் காதலினால்
நேர்தொழுது வாங்கினார்.
| [179] |
வாங்கிஅத் திருவமுது
வன்தொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்போல்
அவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளும்
நீங்காத நிலைமையினார்.
| [180] |
திருநாவ லூராளி
சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனார்
இறையவனா ரெனமதித்தே
பெருநாதச் சிலம்பணிசே
வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற்
றென்பொருட்டாம் எனவுருகி.
| [181] |
முதுவா யோரி என்றெடுத்து
முதல்வ னார்தம் பெருங்கருணை
அதுவா மிதுவென் றதிசயம்வந்
தெய்தக் கண்ணீர் மழையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம்
புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவார் இதழி முடியாரைப்
பாடி மகிழ்ந்து வணங்கினார்.
| [182] |
வந்தித் திறைவ ரருளாற்போய்
மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப்
புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார்
அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
| [183] |
அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார்
வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து
நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
| [184] |
மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக
மறுகு மணித்தோ ரணம்நாட்டி
அல்கு தீபம் நிறைகுடங்கள்
அகிலின் தூபங் கொடியெடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்துத்
தெற்றி யாடன் முழவதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடிப்
பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.
| [185] |
ஆண்ட நம்பி யெதிர்கொண்ட
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து
நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.
| [186] |
ஆழிநெடுமா லயன்முதலாம்
அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி யுறமண் மிசைமேனி
பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந்
தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிபபொற் கோயிலினுள்
வந்தார் அணுக்க வன்தொண்டர்.
| [187] |
கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
| [188] |
வீழ்ந்து போற்றிப் பரவசமாய்
விம்மி யெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி
மாறா விருப்பிற் புறம்போந்து
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும்
நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையா ராலயங்கள்
பலவுஞ் சார்ந்து வணங்குவார்.
| [189] |
சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும்
நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து
மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து பரவினார்.
| [190] |
ஓண காந்தன் தளிமேவும்
ஒருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையால்
பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி
நெய்யும் பாலும் கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்தேத்தி
யெண்ணில் நிதிபெற் றினிதிருந்தார்.
| [191] |
அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
| [192] |
பாட இசையும் பணியினால்
பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
| [193] |
செல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு நண்ணுவார்.
| [194] |
மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
| [195] |
தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.
| [196] |
வணங்கி உள்ளங் களிகூர
மகிழ்ந்து போற்றி மதுரஇசை
| [197] |
வடமா திரத்துப் பருப்பதமும்
திருக்கே தார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த
வெல்லா மிங்கே இருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை
நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம்
பாடிக் காதல் சிறந்திருந்தார்.
| [198] |
அங்குச் சிலநாள் வைகியபின்
அருளாற் போந்து பொருவிடையார்
தங்கும் இடங்க ளெனைப்பலவுஞ்
சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு
புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு
வொற்றியூரைச் சென்றடைந்தார்.
| [199] |
அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி
இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும்
வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.
| [200] |
வரமங் கலநல் லியம்முழங்க
வாச மாலை யணியரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப்
பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும்
வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த
பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.
| [201] |
ஒற்றியூரி னுமையோடுங்
கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர்
பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத்
தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங்
கோயில் வாயி லெய்தினார்.
| [202] |
வானை அளக்குங் கோபுரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக
உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.
| [203] |
ஏட்டு வரியில் ஒற்றியூர்
நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார்
நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து
கோதி லமுத இசைகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும்
பதிக மெடுத்துப் பாடினார்.
| [204] |
பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
| [205] |
இந்த நிலைமை யாரிவரிங்
கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி
அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம்.
| [206] |
நாலாங் குலத்திற் பெருகுநல
முடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை
மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளார்
ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றார்
அருளால் முன்னை அநிந்திதையார்.
| [207] |
மலையான் மடந்தை மலர்ப்பாதம்
மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத்
தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி
ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம்புவார்.
| [208] |
சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
| [209] |
வடிவும் குணமும் நம்முடைய
மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட
பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங்
கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார்
ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.
| [210] |
தாய ரோடும் தந்தையார்
பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான்
வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.
| [211] |
பாங்கு நின்ற தந்தையார்
தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே
ஏங்கும் உள்ளத் தினராகி
இவளுக் கென்னோ உற்றதெனத்
தாங்கிச் சீத விரைப்பனிநீர்
தெளித்துத் தைவந் ததுநீங்க
வாங்கு சிலைநன் னுதலாரை
வந்த துனக்கிங் கென்னென்றார்.
| [212] |
என்று தம்மை ஈன்றெடுத்தார்
வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த
திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார்
ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து
சிவனார் அருளிற் செல்வனென.
| [213] |
அந்த மாற்றங் கேட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி
மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச
விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.
| [214] |
தாதை யாரும் அதுகேட்டுத்
தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து
போக்க அவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற்
செல்ல விடுத்தா ருடன் சென்றான்
மாத ராரைப் பெற்றார்மற்று
அதனைக் கேட்டு மனமருண்டார்.
| [215] |
தைய லார்சங் கிலியார்தம்
திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டும் நினைவுடையார்
உரையா ரென்றங் குலகறியச்
செய்த விதிபோல் இதுநிகழச்
சிறந்தார்க் குள்ள படிசெப்பி
நையும் உள்ளத் துடன்அஞ்சி
நங்கை செயலே உடன்படுவார்.
| [216] |
அணங்கே யாகும் இவள்செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம்
பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.
| [217] |
பண்ணார் மொழிச்சங் கிலியாரை
நோக்கிப் பயந்தா ரொடுங்கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றி
யூரிற் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திருவருளால்
ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற்
றங்கிப் புரிவீர் தவமென்று.
| [218] |
பெற்ற தாதை சுற்றத்தார்
பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது
மங்கை யார்சங் கிலியார் தாம்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து
துதைந்த செல்வத் தொடும்புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி
யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
| [219] |
சென்னி வளர்வெண் பிறையணிந்த
சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து
தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக்
கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத்
தந்தை யார்வந் தடிவணங்கி.
| [220] |
யாங்கள் உமக்குப் பணிசெய்ய
ஈசற் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உறைகின் றீரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும்இறைஞ்சிப்
போனார் எயில்சூழ் தம்பதியில்.
| [221] |
காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் கோயிலினிற்
காலந் தோறும் புக்கிறைஞ்சி
நீதி முறைமை வழுவாது
தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப்பூ மண்டபத்துத்
திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து.
| [222] |
பண்டு கயிலைத் திருமலையில்
செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக்
குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென்
மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த
அமைத்து வணங்கி யமருநாள்.
| [223] |
அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
| [224] |
அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
| [225] |
அன்பு நாரா அஞ்செழுத்து
நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் ளுருகும் அடியாரைத்
தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி
முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையுஞ் சங்கிலியார்
தம்மை விதியாற் கண்ணுற்றார்.
| [226] |
கோவா முத்தும் சுரும்பேறாக்
கொழுமென் முகையு மனையாரைச்
சேவார் கொடியார் திருத்தொண்டர்
கண்ட போது சிந்தைநிறை
காவா தவர்பால் போய்வீழத்
தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத்
தரியார் புறமே போந்துரைப்பார்.
| [227] |
இன்ன பரிசென் றறிவரிதால்
ஈங்கோர் மருங்கு திரைக்குள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்தவொளி
யமுதில் அளாவிப் புதியமதி
தன்னுள் நீர்மை யால்குழைத்துச்
சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை யுள்ளந் திரிவித்தாள்
யார்கொல் என்றங் கியம்புதலும்.
| [228] |
அருகு நின்றார் விளம்புவார்
அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி
பேணுங் கன்னி யாரென்ன
இருவ ராலிப் பிறவியைஎம்
பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள்
மற்றை யவளாம் எனமருண்டார்.
| [229] |
மின்னார் சடையார் தமக்காளாம்
விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு
தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும்
கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால்
பெறுவே னென்று போய்ப்புக்கார்.
| [230] |
மலர்மே லயனும் நெடுமாலும்
வானும் நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருங் திருமுடியும்
நீடுங் கழலும் உடையாரை
உலக மெல்லாந் தாமுடையார்
ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை
இறைஞ்சி முன்னின் றேத்துவார்.
| [231] |
மங்கை யொருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும்
காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தந் தீருமென.
| [232] |
அண்ண லார்முன் பலவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை
யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள்
செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார்.
| [233] |
மதிவாள் முடியார் மகிழ்கோயிற்
புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண
மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம்
புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நினைந்து நினைந்தழிய.
| [234] |
உம்ப ருய்ய உலகுய்ய
ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர்
தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும்
எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகென்ன.
| [235] |
அன்று வெண்ணெய் நல்லூரில்
வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
| [236] |
ஆண்டு கொண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார்
தம்பால் கனவில் தோன்றினார்.
| [237] |
தோற்றும் பொழுதிற் சங்கிலியார்
தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந்
தடியே னுய்ய எழுந் தருளும்
பேற்றுக் கென்யான் செய்வதெனப்
பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும்
நேர்நின் றருளிச் செய்கின்றார்.
| [238] |
சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால என்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.
| [239] |
ஆதி தேவர் முன்னின்றங்
கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார்.
| [240] |
எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.
| [241] |
பின்னும் பின்னல் முடியார்முன்
பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விளக்கனையார்.
| [242] |
மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.
| [243] |
வேயனைய தோளியார்
பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த
தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும்
நிலையுரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால்
அமைப்பதுள தென்றருள.
| [244] |
வன்தொண்டர் மனங்களித்து
வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன
நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ
ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே
செய்கவென வருள்செய்தார்.
| [245] |
என்செய்தால் இதுமுடியும்
ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
வேண்டுவதென் றுரைத்தருள.
| [246] |
வம்பணிமென் முலையவர்க்கு
மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பரிவர் பிறபதியும்
நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக்
கிதுவிலக்கா மெனுங்குறிப்பால்
தம்பெருமான் றிருமுன்பு
தாம்வேண்டுங் குறையிரப்பார்.
| [247] |
சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா
வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால்
அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.
| [248] |
தம்பிரான் தோழரவர்
தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி
நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய
தினியெனக்கென் னெனவேத்தி.
| [249] |
அஞ்சலிசென் னியில்மன்ன
அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத்
திருவிளையாட் டினைமகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார்
வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள்மீ ளவும்அணைந்தார்
அவர்க்குறுதி சொல்லுவார்.
| [250] |
சங்கிலியார் தம்மருங்கு
முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன்
நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும்
அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க்
கொள்கவெனக் குறித்தருள.
| [251] |
மற்றவருங் கைகுவித்து
மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த
அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள்
பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம்
சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
| [252] |
தையலார் தமக்கருளிச்
சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ ததிசயத்தால்
உணர்ந்தெழுந்தவ் விரவின்கண்
செய்யசடை யாரருளின்
திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில்
சேடியரை அணைந்தெழுப்பி.
| [253] |
நீங்குதுயிற் பாங்கியர்க்கு
நீங்கல்எழுத் தறியுமவர்
தாங்கனவில் எழுந்தருளித்
தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர்
பயத்தினுடன் அதிசயமும்
தாங்குமகிழ்ச் சியும்எய்தச்
சங்கிலியார் தமைப்பணிந்தார்.
| [254] |
சேயிழையார் திருப்பள்ளி
யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத்
தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது
வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய
வரவுபார்த் தாரூரர்.
| [255] |
நின்றவர்அங் கெதிர்வந்த
நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான்
திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்
விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார்
உடனொதுங்கி உட்புகுந்தார்.
| [256] |
அங்கவர்தம் பின்சென்ற
ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை
உமக்கிசையும் படியியம்பத்
திங்கள்முடி யார்திருமுன்
போதுவீர் எனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக்
கேட்டதா தியர்மொழிவார்.
| [257] |
எம்பெருமான் இதற்காக
எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர்
நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ
தெங்கென்று கூறுதலும்.
| [258] |
மாதரவர் மகிழ்க்கீழே
அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும்
இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே
அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ்
அவர்போதப் போயணைந்தார்.
| [259] |
தாவாத பெருந்தவத்துச்
சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை
முக்காலும் வலம்வந்து
மேவாதிங் கியானகலேன்
எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை
முனைப்பாடிப் புரவலனார்.
| [260] |
மேவியசீ ராரூரர்
மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங்
கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன்
தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங்
கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.
| [261] |
திருநாவ லூராளி
தம்முடைய செயல்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார்
கோயிலினுட் புகுந்திறைஞ்சி
அருள்நாளுந் தரவிருந்தீர்
செய்தவா றழகிதெனப்
பெருநாமம் எடுத்தேத்திப்
பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.
| [262] |
வார்புனையும் வனமுலையார்
வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத்
தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர்
செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா
டம்புகுந்தார் இருள்புலர.
| [263] |
அன்றிரவே ஆதிபுரி
ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்தொண்டர்
புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி
யூர்நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு
மனங்கொள்ள வுணர்த்துவார்.
| [264] |
நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.
| [265] |
மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.
| [266] |
பண்டுநிகழ் பான்மையினால்
பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
றமர்ந்திருந்தார் காதலினால்.
| [267] |
யாழின்மொழி எழின்முறுவல்
இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார்
மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி
மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான்
அவ்வூழி யொருகணமாம்.
| [268] |
இந்நிலையில் பேரின்பம்
| [269] |
பொங்குதமிழ்ப் பொதியமலைப்
பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர்
அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர்
கொண்டருளும் வகைநினைந்தார்.
| [270] |
வெண்மதியின் கொழுந்தணிந்த
வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த
ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை
யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட்
டார்போலக் கருதினார்.
| [271] |
பூங்கோயில் அமர்ந்தாரைப்
புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினால்
நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு
பணியவரும் பயனுணர்வார்
ஈங்குநான் மறந்தேனென்
றேசறவால் மிகவழிவார்.
| [272] |
மின்னொளிர்செஞ் சடையானை
வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும்
அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம்
எடுத்தியம்பி யிரங்கினார்.
| [273] |
பின்னொருநாள் திருவாரூர்
தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில்
புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார்
தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது
கண்மறைய மூர்ச்சித்தார்.
| [274] |
செய்வதனை யறியாது
திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால்
சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம்
எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப்
பாடுவேன் எனநினைந்து.
| [275] |
அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்
ஆதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே
எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்.
| [276] |
அங்கு நாதர்செய் அருளது வாக
அங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
போது வார்வழி காட்டமுன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
சென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்
சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையிற் பாடி.
| [277] |
தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.
| [278] |
அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக
அங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்
குணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்
குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே
என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.
| [279] |
பிழையுளன பொறுத்திடுவர்
என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை
வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழையெனமா சுணமணிந்த
விறையானைப் பாடினார்
மழை தவழு நெடும்புரிசை
நாவலூர் மன்னவனார்.
| [280] |
முன்னின்று முறைப்பாடு
போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங்
கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன்
வணங்கியே வழிக்கொள்வார்.
| [281] |
அங்கணர்தம் பதியதனை
அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ்
பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத்
தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந்
திருவாலங் காட்டினயல்.
| [282] |
முன்னின்று தொழுதேத்தி
முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
காஞ்சிமா நகரணைந்தார்.
| [283] |
தேனிலவு பொழிற்கச்சித்
திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம்
ஒழியாத கருணையினால்
ஆனதிரு வறம்புரக்கும்
அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில்
வணங்கினார் வன்தொண்டர்.
| [284] |
தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.
| [285] |
விண்ணாள்வார் அமுதுண்ண
மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே
கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங்
கியான்காண எழிற்பவள
வண்ணாகண் ணளித்தருளாய்
எனவீழ்ந்து வணங்கினார்.
| [286] |
பங்கயச்செங் கைத்தளிரால்
பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி
பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப்
போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார்
மறைந்தஇடக் கண்கொடுத்தார்.
| [287] |
ஞாலந்தான் இடந்தவனும்
நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும்
குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என்
றெடுத்தாடிப் பாடினார்.
| [288] |
பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.
| [289] |
மாமலையாள் முலைச்சுவடும்
வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப்
போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித்
திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகம்
திருவாரூர் மேற்பரவி.
| [290] |
அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
| [291] |
மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
| [292] |
அங்கணரை ஆமாத்தூர்
அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம்
பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை
வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த
சீர்நாடு நீர்நாடு.
| [293] |
அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார்
விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க்கல்வா
யகில்என்னுந் தொடைசாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட
ருடன்மகிழ்ந்து வைகினார்.
| [294] |
பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.
| [295] |
அங்கணைவார் தமையடியார்
எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப்
புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர்
கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந்
திருப்பதிக மெடுத்திசைத்தார்.
| [296] |
திருப்பதிகங் கொடுபரவிப்
பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி
தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி
யடியேன்மே லுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள
வேண்டுமென வணங்குவார்.
| [297] |
பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.
| [298] |
மிக்கபுனல் தீர்த்தத்தின்
முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த
துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும்
புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர்
திருமேனி யாயினார்.
| [299] |
கண்டவர்கள் அதிசயிப்பக்
கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால்
கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா
மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய
ஏழிசையால் எடுத்திசைத்தார்.
| [300] |
பண்ணிறைந்த தமிழ்பாடிப்
பரமர்திரு வருள்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன்
பணிந்தங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவும்
உடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர்
முன்தோன்றக் காண்கின்றார்.
| [301] |
அன்றுதிரு நோக்கொன்றால்
ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து
நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர்
மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார்
தமைமுன்னந் தொழவணைந்தார்.
| [302] |
பொங்குதிருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம்
தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து
கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று
பாடியருந் தமிழ்புனைந்தார்.
| [303] |
ஆறணியுஞ் சடையாரைத்
தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர்
விரவுவா ருடன்கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்
டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயா
மத்திறைஞ்ச வந்தணைந்தார்.
| [304] |
ஆதிதிரு அன்பரெதிர்
அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு
பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி
ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற்
பாடியே கலந்தணைவார்.
| [305] |
சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.
| [306] |
வீழ்ந்தெழுந்து கைதொழுது
முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால்
ஆராமல் மனமழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின்
றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக்
கண்தாரும் எனத்தாழ்ந்தார்.
| [307] |
திருநாவ லூர்மன்னர்
திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட்
டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாஇன் னமுதத்தைக்
கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்மற்றைக்
கண்தாரீ ரெனவணங்கி.
| [308] |
மீளா வடிமை எனவெடுத்து
| [309] |
பூத முதல்வர் புற்றிடங்கொண்
டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக்
கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச்
செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
| [310] |
விழுந்தும் எழுந்தும் பலமுறையால்
மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப்
பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும்
அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின்
அருளைப் பருகித் திளைக்கின்றார்.
| [311] |
காலம் நிரம்பத் தொழுதேத்திக்
கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி
நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும்
வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன்
தேவா சிரியன் மருங்கணைந்தார்.
| [312] |
நங்கை பரவை யார்தம்மை
நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கண்
தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு
லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதல் மீதூரப்
புலர்வார் சிலநாள் போனதற்பின்.
| [313] |
செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
| [314] |
மென்பூஞ் சயனத் திடைத்துயிலும்
மேவார் விழித்தும் இனிதமரார்
பொன்பூந் தவிசின் மிசையினிரார்
நில்லார் செல்லார் புறம்பொழியார்
மன்பூ வாளி மழைகழியார்
மறவார் நினையார் என்செய்வார்
என்பூ டுருக்கும் புலவியோ
பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்.
| [315] |
ஆன கவலைக் கையறவால்
அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியார் கோயில் முன்குறுகப்
பானல் விழியார் மாளிகையில்
பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள்
புகுதப் பெறாது புறநின்றார்.
| [316] |
நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி
யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்
குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப்
பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.
| [317] |
மற்ற மாற்றங் கேட்டழிந்த
மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ
செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத்
தீர்வு சொல்லச் செலவிட்டார்.
| [318] |
நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.
| [319] |
பேத நிலைமை நீதியினாற்
பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரும் மறுத்துமனங்
கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவு மவர்திறத்தில்
இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போத லொழியா தெனவுரைத்தார்
அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.
| [320] |
போந்து புகுந்த படியெல்லாம்
பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும்
வெருவுற் றயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாந் துணைகாணார்
நிகழ்ந்த சிந்தா குலம்நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்தெழார்
கங்குல் இடையா மக்கடலுள்.
| [321] |
அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு
அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப்
பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை
முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி
வருந்தி இருந்து சிந்திப்பார்.
| [322] |
முன்னை வினையால் இவ்வினைக்கு
மூல மானாள் பாலணைய
என்னை உடையாய் நினைந்தருளாய்
இந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செயவென்று
பெருமா னடிகள் தமைநினைந்தார்.
| [323] |
அடியார் இடுக்கண் தரியாதார்
ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே
முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும்
உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங்
காணா அடிகள் படிதோய.
| [324] |
தம்பி ரானார் எழுந்தருளத்
தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள்
கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே
நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய
அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.
| [325] |
விழுந்து பரவி மிக்கபெரு
விருப்பி னோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமைநோக்கி
யென்நீ யுற்ற தென்றருளத்
தொழுந்தங் குறையை விளம்புவார்
யானே தொடங்குந் துரிசிடைப்பட்
டழுந்து மென்னை யின்னமெடுத்
தாள வேண்டு முமக்கென்று.
| [326] |
அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.
| [327] |
நாய னீரே நான்உமக்கிங்
கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந்
தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு
புலவி தீர்த்துத் தாருமென.
| [328] |
அன்பு வேண்டும் தம்பெருமான்
அடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பம்
செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம்உனக்கோர்
தூத னாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால்
போகின் றோம்என் றருள்செய்தார்.
| [329] |
எல்லை யில்லாக் களிப்பின ராய்
இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல் லாந்துதித்து
வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகைவெண் ணகைப்பரவை
முகில்சேர் மாடத் திடைச்செல்ல
நில்லா தீண்ட எழுந்தருளி
நீக்கும் புலவி யெனத்தொழுதார்.
| [330] |
அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.
| [331] |
தேவா சிரியன் முறையிருக்குந்
தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார்
போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின்
முதலா னார்கள் முன்போக.
| [332] |
அருகு பெரிய தேவருடன்
அணைந்து வரும்அவ் விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும்
முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்தத்
தெருவும் விசும்பும் நிறைந்துவிரைச்
செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர்
புனித வீதி யினிற்போத.
| [333] |
மாலும் அயனுங் காணாதார்
மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை
அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான்
அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார்
திருமா ளிகையை நேர்நோக்கி.
| [334] |
இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.
| [335] |
பெருவீ ரையினும் மிகமுழங்கிப்
பிறங்கு மதகுஞ் சரம்உரித்து
மரவீ ருரிவை புனைந்தவர்தம்
மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினில் அழகரவர்
மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோகம்
முழுதுங் காண வுளதாமால்.
| [336] |
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.
| [337] |
சென்று மணிவா யிற்கதவம்
செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று
அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார்
உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர்
போலும் அழைத்தார் எனத்துணிந்து.
| [338] |
பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.
| [339] |
மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.
| [340] |
கங்கைநீர் கரந்த வேணி
கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின்
நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும்
அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில்
இசையலாம் என்று சொல்லி.
| [341] |
என்னினைந் தணைந்த தென்பால்
இன்னதென் றருளிச் செய்தால்
பின்னைய தியலு மாகில்
ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி
வரஇங்கு வேண்டு மென்ன
நன்னுத லாருஞ் சால
நன்றுநம் பெருமை யென்பார்.
| [342] |
பங்குனித் திருநா ளுக்குப்
பண்டுபோல் வருவா ராகி
இங்கெனைப் பிரிந்து போகி
ஒற்றியூர் எய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக்
கிங்கொரு சார்வுண் டோநீர்
கங்குலின் வந்து சொன்ன
காரியம் அழகி தென்றார்.
| [343] |
நாதரும் அதனைக் கேட்டு
நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா
தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ
நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய
அடாதென அருளிச் செய்தார்.
| [344] |
அருமறை முனிவ ரான
ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர்
கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும்
போம்என மறுத்துச் சொன்னார்.
| [345] |
நம்பர்தாம் அதனைக் கேட்டு
நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார்
தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும்
திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம்
மறுத்ததே கொண்டு மீண்டார்.
| [346] |
தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.
| [347] |
போயவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டால்
நன்னுதல் மறுக்கு மோதான்
ஆயஎன் அயர்வு தன்னை
அறிந்தெழுந் தருளி னார்தாம்
சேயிழை துனிதீர்த் தன்றி
மீள்வதும் செய்யார் என்று.
| [348] |
வழியெதிர் கொள்ளச் செல்வர்
வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர்
அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்த்தா ரென்று
மீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்க ணுற்றார்.
| [349] |
பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.
| [350] |
சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.
| [351] |
அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.
| [352] |
அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.
| [353] |
வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.
| [354] |
ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.
| [355] |
தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.
| [356] |
மயங்கிய நண்பர் உய்ய
வாக்கெனும் மதுர வாய்மை
நயங்கிள ரமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
உயங்கிய கலக்கம் நீக்கி
யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத்து இவ்வா றன்றோ
பணிகொள்வ தென்று போற்ற.
| [357] |
அன்பர்மேற் கருணை கூர
ஆண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென்றிறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்புடன் போதா தாரும்
முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர்
புனிதமா ளிகையிற் சென்றார்.
| [358] |
மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.
| [359] |
கண்துயில் எய்தார் வெய்ய
கையற வெய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்
காகஅர்ச் சிப்பார் கோலம்
கொண்டணைந் தவரை யானுட்
கொண்டிலேன் பாவி யேன்என்
றொண்சுடர் வாயி லேபார்த்
துழையரோ டழியும் போதில்.
| [360] |
வெறியுறு கொன்றை வேணி
விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடும்
மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர்
முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம்
மாளிகை புகுந்தார் வந்து.
| [361] |
பாரிடத் தலைவர் முன்னாம்
பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சீர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே.
| [362] |
ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
| [363] |
அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.
| [364] |
பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.
| [365] |
துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.
| [366] |
நங்கைநின் தன்மைக் கேற்கும்
நன்மையே மொழிந்தா யென்று
மங்கையோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாணுதலி னாருஞ்
சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்
எங்களை யாளும் நம்பி
தூதர்மீண் டேகு கின்றார்.
| [367] |
ஆதியும் மேலும் மால்அயன்
நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை
யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண
நாதர் புகழ்வீரர்.
| [368] |
அன்னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை
உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை
ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ
னார்பால் வந்துற்றார்.
| [369] |
அன்பரும் என்பால் ஆவி
யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வார் இன்னமும்
என்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூல் மார்பினர்
செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை
தானும் முகிழாரால்.
| [370] |
அந்நிலை மைக்கண் மன்மதன்
வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
ரென்றே தெளியாதார்.
| [371] |
எம்பெரு மானீர் என்னுயிர்
காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்
| [372] |
நந்தி பிரானார் வந்தருள்
செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
யென்பால் இடரென்றார்.
| [373] |
என்றடி வீழும் நண்பர்தம்
அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை
பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி
விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில்
புகுந்தார் புவிவாழ.
| [374] |
தம்பிரா னார்பின் சென்று
| [375] |
முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
சேவகம் முன்பு காட்ட.
| [376] |
மாலைதண் கலவைச் சேறு
மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல.
| [377] |
இவ்வகை இவர்வந் தெய்த
எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.
| [378] |
பூமலி நறும்பொன் தாமம்
புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக்
கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த
தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு
வந்தெதி ரேற்று நின்றார்.
| [379] |
வண்டுலாங் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.
| [380] |
இருவருந் தம்பி ரானார்
தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத்
திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத்
தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு
நிலைமையி லுயிரொன் றானார்.
| [381] |
ஆரணக் கமலக் கோயின்
மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
.
| [382] |
நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.
| [383] |
நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப்
பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா
திருந்ததென் னாவி யென்பார்.
| [384] |
காரிகை தன்பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய
பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது
வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக்
குழல்வராம் ஒருவ ரென்று.
| [385] |
நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே
நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர்
உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப்
பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன்
காணுநாள் எந்நா ளென்று.
| [386] |
அரிவைகா ரணத்தி னாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக
ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில்
வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி
விள்ளும்உள் ளத்த ராகி.
| [387] |
ஈறிலாப் புகழின் ஓங்கும்
ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப்
பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு
வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்
கதனைவிண் ணப்பஞ் செய்து.
| [388] |
நாள்தொறும் பணிந்து போற்ற
நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள்
இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர்
குரிசிலார் தம்பால் மேனி
வாடுறு சூலை தன்னை
அருளினார் வருந்து மாற்றால்.
| [389] |
ஏதமில் பெருமைச் செய்கை
ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை
அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய
மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள்
பற்றியே போற்று கின்றார்.
| [390] |
சிந்தையால் வாக்கால் அன்பர்
திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர்
காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை
வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று
மொழிந்தருள் செய்யக் கேட்டு.
| [391] |
எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.
| [392] |
மற்றவன் தீர்க்கில் தீரா
தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம்
| [393] |
வன்தொண்டர் தம்பால் சென்று
வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே
ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென்
றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவ லூரர்.
| [394] |
அண்ணலார் அருளிச் செய்து
நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார்
ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங்
காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க
வருந்திறஞ் செப்பி விட்டார்.
| [395] |
நாதர்தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும்
வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை
ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில்
யான்செய்வது என்னாம் என்பார்.
| [396] |
மற்றவன் இங்கு வந்து
தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும்
கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும்
சூலையுந் தீர்ந்த தன்றே.
| [397] |
கருதரும் பெருமை நீர்மைக்
கலிக்காமர் தேவி யாரும்
பொருவருங் கணவ ரோடு
போவது புரியுங் காலை
மருவிஇங் கணைந்தார் நம்பி
என்றுமுன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யா
தொழிகவென் றுரைத்துப் பின்னும்.
| [398] |
கணவர்தஞ் செய்கை தன்னைக்
கரந்துகா வலரை நம்பி
அணைவுறும் பொழுது சால
அலங்கரித் தெதிர்போம் என்னப்
புணர்நிலை வாயில் தீபம்
பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித்
தொழுதெதிர் கொள்ளச் சென்றார்.
| [399] |
செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.
| [400] |
பான்மைஅர்ச் சனைக ளெல்லாம்
பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை
நம்பியா ரூரர் கொண்டிங்
கியான்மிக வருந்து கின்றேன்
ஏயர்கோ னார்தாம் உற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி
யுடனிருப் பதனுக் கென்றார்.
| [401] |
மாதர்தம் ஏவ லாலே
மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே
பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும்
என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண
வேண்டுமென் றருளிச் செய்தார்.
| [402] |
வன்தொண்டர் பின்னுங் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத்
தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக்
கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும்
நண்ணுவேன் இவர்முன் பென்பார்.
| [403] |
கோளுறு மனத்த ராகிக்
குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார்
அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே யாகிக் கெட்டேன்
எனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள
வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
| [404] |
மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.
| [405] |
இருவரும் எழுந்து புல்லி
இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத்
திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று
வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த
ணாளன்என் றெடுத்துப் பாடி.
| [406] |
சிலபகல் கழிந்த பின்பு
திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின்
மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குலமுதற் றலைவ னாருங்
கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்
டுறைந்தனர் நிறைந்த அன்பால்.
| [407] |
அங்கினி தமர்ந்து நம்பி
அருளினான் மீண்டு போந்து
பொங்கிய திருவின் மிக்க
தம்பதி புகுந்து பொற்பில்
தங்குநாள் ஏயர் கோனார்
தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதம்
சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
| [408] |
நள்ளிருள் நாய னாரைத்
தூதுவிட் டவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார்
மலரடி வணங்கிப் புக்கேன்
உள்ளுணர் வான ஞானம்
முதலிய வொருநான் குண்மை
தெள்ளுதீந் தமிழாற் கூறுந்
திருமூலர் பெருமை செப்ப.
| [409] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.300  
திரு மூல நாயனார்
பண் - ( )
அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
| [1] |
மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
| [2] |
மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
| [3] |
கங்கைநீள் துறையாடிக்
கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும்
அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த
மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக்
காளத்தி மலைசேர்ந்தார்.
| [4] |
நீடுதிருக் காளத்தி
நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான
ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார்
திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி
வளநகரின் வைகினார்.
| [5] |
நற்பதியங் கமர்யோக
முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை
கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற
அம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப்
புலியூரில் வந்தணைந்தார்.
| [6] |
எவ்வுலகும் உய்யவெடுத்
தாடியசே வடியாரைச்
செவ்வியஅன் புறவணங்கிச்
சிந்தைகளி வரத்திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண்
வருமானந் தக்கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டங்
காராமை அமர்ந்திருந்தார்.
| [7] |
தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்.
| [8] |
காவிரிநீர்ப் பெருந் தீர்த்தங்
கலந்தாடிக் கடந்தேறி
ஆவின்அருங் கன்றுறையும்
ஆவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார்
செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினால்
பணிந்தங்கு விருப்புறுவார்.
| [9] |
அந்நிலைமைத் தானத்தை
அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால்
மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார்
பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற்
புலம்புவன எதிர்கண்டார்.
| [10] |
அந்தணர்தஞ் சாத்தனூர்
ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான்
மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண
வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
| [11] |
மற்றவன்றன் உடம்பினைஅக்
கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன
சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா
நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க
ஒழிப்பன்என வுணர்கின்றார்.
| [12] |
இவன்உயிர்பெற் றெழில்அன்றி
ஆக்களிடர் நீங்காவென்று
அவனுடலில் தம்முயிரை
அடைவிக்க அருள்புரியும்
தவமுனிவர் தம்முடம்புக்
கரண்செய்து தாம்முயன்ற
பவனவழி அவனுடலில்
தம்முயிரைப் பாய்த்தினார்.
| [13] |
பாய்த்தியபின் திருமூல
ராய்எழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந்
தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால்
வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி
நிரந்துபோய் மேய்ந்தனவால்.
| [14] |
ஆவினிரை மகிழ்வுறக்கண்
டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப்
பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர்
கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல்
இனிதாகப் புறங்காத்தார்.
| [15] |
வெய்யசுடர்க் கதிரவனும்
மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர்
ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை
நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர்
வந்தெய்தப் பின்போனார்.
| [16] |
போனவர்தாம் பசுக்களெலாம்
மனைதோறும் புகநின்றார்
மானமுடை மனையாளும்
வைகியபின் தாழ்த்தார்என்று
ஆனபயத் துடன்சென்றே
அவர்நின்ற வழிகண்டாள்
ஈனம்இவர்க் கடுத்ததென
மெய்தீண்ட அதற்கிசையார்.
| [17] |
அங்கவளும் மக்களுடன்
அருஞ்சுற்றம் இல்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி
என்செய்தீர் எனத்தளர
இங்குனக்கென் னுடன்அணைவொன்
றில்லையென எதிர்மறுத்துப்
பொங்குதவத் தோர்ஆங்கோர்
பொதுமடத்தின் உட்புக்கார்.
| [18] |
இல்லாளன் இயல்புவே
றானமைகண் டிரவெல்லாம்
சொல்லாடா திருந்தவர்பால்
அணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநாள்
இவர்க்கடுத்த பரிசுரைப்ப
நல்லார்கள் அவர்திறத்து
நாடியே நயந்துரைப்பார்.
| [19] |
பித்துற்ற மயல்அன்று
பிறிதொருசார் புளதன்று
சித்தவிகற் பங்களைந்து
தெளிந்தசிவ யோகத்தில்
வைத்தகருத் தினராகி
வரம்பில்பெரு மையிலிருந்தார்
இத்தகைமை யளப்பரிதால்
யாராலும் எனவுரைப்பார்.
| [20] |
பற்றறுத்த வுபதேசப்
பரமர்பதம் பெற்றார்போல்
முற்றுமுணர்ந் தனராகும்
முன்னைநிலை மையில்உங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தார்
என்றுரைப்பத் துயரெய்தி
மற்றவளும் மையலுற
மருங்குள்ளார் கொண்டகன்றார்.
| [21] |
இந்தநிலை மையிலிருந்தார்
எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று
வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார்
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல்
ஆராய்ந்து தெளிகின்றார்.
| [22] |
தண்ணிலவார் சடையார்தாம்
தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால்
அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார்
ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
| [23] |
சுற்றியஅக் குலத்துள்ளார்
தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை
முற்றவே மொழிந்தருள
அவர்மீண்டு போனதற்பின்
பெற்றம்மீ துயர்த்தவர்தாள்
சிந்தித்துப் பெருகார்வச்
செற்றமுதல் கடிந்தவர்தாம்
ஆவடுதண் டுறைசேர்ந்தார்.
| [24] |
ஆவடுதண் டுறையணைந்தங்
கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால்
மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச்
சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப்
பொருளோடும் புணர்ந்திருந்தார்.
| [25] |
ஊனுடம்பில் பிறவிவிடம்
தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர்
நல்திருமந் திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்
கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை
ஒன்றவன்தா னெனஎடுத்து.
| [26] |
முன்னியஅப் பொருள்மாலைத்
தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண்
டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந்
திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும்
பிரியாமைத் தாளடைந்தார்.
| [27] |
நலஞ்சிறந்த ஞானயோ
கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல
தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர்
அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி
யடிகள்திறஞ் சாற்றுவாம்.
| [28] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.310  
தண்டியடிகள் புராணம்
பண் - ( )
தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.
| [1] |
காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.
| [2] |
பூவார் சடிலத் திருமுடியார்
மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்
தேவா சிரியன் முன்னிறைஞ்சி
வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி
நாவால் இன்ப முறுங்காதல்
நமச்சி வாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்தோதி
ஒருநாள் போல வருநாளில்.
| [3] |
செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.
| [4] |
குழிவா யதனில் குறிநட்டுக்
கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோடு
இசையக் கட்டி இடைதடவி
வழியால் வந்து மண்கல்லி
எடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சி யால்உய்த்தார்
ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.
| [5] |
நண்ணி நாளும் நற்றொண்டர்
நயந்த விருப்பால் மிகப்பெருகி
அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்
கண்ட அமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பால்
எய்தி முன்னின் றியம்புவார்
மண்ணைக் கல்லிற் பிராணிபடும்
வருத்த வேண்டா வென்றுரைத்தார்.
| [6] |
மாசு சேர்ந்த முடையுடலார்
மாற்றங் கேட்டு மறுமாற்றம்
தேசு பெருகுந் திருத்தொண்டர்
செப்பு கின்றார் திருவிலிகாள்
பூசு நீறு சாந்தமெனப்
புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவது
அறிய வருமோ உமக்கென்றார்.
| [7] |
அந்தம் இல்லா அறிவுடையார்
உரைப்பக் கேட்ட அறிவில்லார்
சிந்தித் திந்த அறங்கேளாய்
செவியும் இழந்தா யோஎன்ன
மந்த வுணர்வும் விழிக்குருடும்
கேளாச் செவியும் மற்றுமக்கே
இந்த வுலகத் துள்ளனஎன்
றன்பர் பின்னும் இயம்புவார்.
| [8] |
வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.
| [9] |
அருகர் அதுகேட் டுன்தெய்வத்
தருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்
பின்னை யிருக்கி லோமென்று
கருகு முருட்டுக் கைகளால்
கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்
தருகைக் கயிறுந் தறியுமுடன்
பறித்தார் தங்கள் தலைபறித்தார்.
| [10] |
வெய்ய தொழிலார் செய்கையின்மேல்
வெகுண்ட தண்டி யடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில்
மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி
ஐய னேஇன்று அமணர்கள்தாம்
என்னை யவமா னஞ்செய்ய
நைவ தானேன் இதுதீர
நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.
| [11] |
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்
பரவி விண்ணப் பஞ்செய்து
தொழுது போந்து மடம்புகுந்து
தூய பணிசெய் யப்பெறா
தழுது கங்கு லவர்துயிலக்
கனவி லகில லோகங்கள்
முழுது மளித்த முதல்வனார்
முன்னின் றருளிச் செய்கின்றார்.
| [12] |
நெஞ்சின் மருவும் கவலையினை
ஒழிநீ நின்கண் விழித்துஅந்த
வஞ்ச அமணர் தங்கள்கண்
மறையு மாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா வென்றருளி
அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசன்பாற்
தோன்றிக் கனவி லருள் புரிவார்.
| [13] |
தண்டி நமக்குக் குளங்கல்லக்
கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
தருளி னார்அத் தொழிலுவப்பார்.
| [14] |
வேந்தன் அதுகண் டப்பொழுதே
விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்
போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படிவிளம்பத்
தம்பி ரானர் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பஇது
புகுந்த வண்ணம் இயம்புவார்.
| [15] |
மன்ன கேள்யான் மழவிடையார்
மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
கொட்டைப் பறித்தா என்றியம்பி.
| [16] |
அந்த னான வுனக்கறிவும்
இல்லை யென்றா ரியானதனுக்
கெந்தை பெருமா னருளால்யான்
விழிக்கி லென்செய் வீரென்ன
இந்த வூரில் இருக்கிலோம்
என்றே ஒட்டி னார்இதுமேல்
வந்த வாறு கண்டிந்த
வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.
| [17] |
அருகர் தம்மை அரசனும்அங்
கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்
மருவுந் தொண்டர் முன்போக
மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல்தண்டி
யடிகள் தம்மை முகநோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்
பெறுமா காட்டும் எனப்பெரியோர்.
| [18] |
ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்
என்னில் இன்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர்
விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே
யாவ தென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார்.
| [19] |
தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
| [20] |
தண்டி யடிகள் தம்முடனே
ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர்
நின்றும் அகன்று போய்க்கழியக்
கண்ட அமணர் தமையெங்கும்
| [21] |
குழியில் விழுவார் நிலைதளர்வார்
கோலும் இல்லை எனவுரைப்பரார்
வழியீ தென்று தூறடைவார்
மாண்டோம் என்பார் மதிகெட்டீர்
அழியும் பொருளை வழிபட்டுஇங்கு
அழிந்தோம் என்பார் அரசனுக்குப்
பழியீ தாமோ என்றுரைப்பார்
பாய்க ளிழப்பார் பறிதலையர்.
| [22] |
பீலி தடவிக் காணாது
பெயர்வார் நின்று பேதுறுவார்
காலி னோடு கைமுறியக்
கல்மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிரெதிரே
தம்மில் தாமே முட்டிடுவார்
மாலு மனமும் அழிந்தோடி
வழிக ளறியார் மயங்குவார்.
| [23] |
அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கங் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மேஅவரை
| [24] |
மன்னன் வணங்கிப் போயினபின்
மாலு மயனும் அறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்
புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்
| [25] |
கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
| [26] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.320  
மூர்க்க நாயனார் புராணம்
பண் - ( )
மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
| [1] |
செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.
| [2] |
கோதின் மரபில் பிறந்துவளர்ந்
தறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின்
அடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி
அமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத
நியதி பூண்ட நிலைமையார்.
| [3] |
தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
| [4] |
இன்ன செயலின் ஒழுகுநாள்
அடியார் மிகவும் எழுந்தருள
முன்ன முடைமை யானபொருள்
முழுதும் மாள அடிமையுடன்
மன்னு காணி யானநிலம்
மற்று முள்ள திறம்விற்றே
அன்னம் அளித்து மேன்மேலும்
ஆரா மனத்தா ராயினார்.
| [5] |
அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
| [6] |
பெற்றம் ஏறிப் பலிக்குவரும்
பெருமான் அமருந் தானங்கள்
உற்றன் அன்பாற் சென்றெய்
உருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதால் நியதியாங்
கடனு முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை
யடைந்தார் வந்து சிலநாளில்.
| [7] |
இருளாரும் மணிகண்டர்
அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப்
புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி
யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங்
கமுதுசெய்வித் தின்புறுவார்.
| [8] |
முற்சூது தாந்தோற்று
முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும்
வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச்
சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும்
பெயர்பெற்றார் நானிலத்தில்.
| [9] |
சூதினில்வென் றெய்துபொருள்
துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு
வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள்
அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும்
அமுதுசெய்தங் கிருக்குநாள்.
| [10] |
நாதன்தன் அடியார்க்கு
நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது
செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல
இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட
வாடுவார் புரம்புக்கார்.
| [11] |
வல்லார்கள் தமைவென்று
சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர்
அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம்
மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி
மாறர்திறஞ் சொல்லுவாம்.
| [12] |
Back to Top
சேக்கிழார் வம்பறா வரிவண்டுச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.330  
சோமாசி மாற நாயனார்
பண் - ( )
சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.
| [1] |
யாழின் மொழியாள் தனிப்பாகரைப்
| [2] |
எத்தன் மையரா யினும்ஈசனுக் கன்பர் என்றால்
அத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்
சித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.
| [3] |
சீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி
ஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.
| [4] |
துன்றும் புலன்ஐந் துடன்ஆறு தொகுத்த குற்றம்
வென்றிங் கிதுநன் னெறிசேரும் விளக்க மென்றே
வன்றொண்டர் பாதந் தொழுதான சிறப்பு வாய்ப்ப
வென்றும் நிலவுஞ் சிவலோகத்தில் இன்ப முற்றார்.
| [5] |
பணையும் தடமும் புடைசூழும்
ஒற்றி யூரிற் பாகத்தோர்
துணையுந் தாமும் பிரியாதார்
| [6] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.340  
சாக்கிய நாயனார் புராணம்
பண் - ( )
அறுசமயத் தலைவராய்
நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம்
வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங்
கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம்
அறிந்தபடி வழுத்துவாம்.
| [1] |
தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்
மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும்
அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும்
நிலைஒழிவேன் எனநிற்பார்.
| [2] |
அந்நாளில் எயிற்காஞ்சி
அணிநகரம் சென்றடைந்து
நல்ஞானம் அடைவதற்குப்
பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தாம்
மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந்
தத்துவத்தின் வழிஉணர்வார்.
| [3] |
அந்நிலைமைச் சாக்கியர்தம்
அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச்
சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச
ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ
தெனவுணர்வு நாட்டுவார்.
| [4] |
செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்.
| [5] |
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலைநிற்பார்.
| [6] |
காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால்
நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்.
| [7] |
நாடோறும் சிவலிங்கங்
கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும்
சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை
நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப்
பதைப்போடும் எடுத்தெறிந்தார்.
| [8] |
அகநிறைந்த பேருவகை
அடங்காத ஆதரவால்
மகவுமகிழ்ந் துவப்பார்கள்
வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலும்
இளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு
நீள்சடையார் தாம்மகிழ்வார்.
| [9] |
அன்றுபோய்ப் பிற்றைநாள்
அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங்
கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ
திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக
வென்றுமது செயநினைந்தார்.
| [10] |
தொடங்கியநா ளருளியவத்
தொழிலொழியா வழிதொடரும்
கடன்புரிவா ரதுகண்டு
கல்லெறிவார் துவராடைப்
படம்புனைவே டந்தவிரார்
பசுபதியார் தஞ்செயலே
அடங்கவுமென் பதுதெளிந்தா
ராதலினால் மாதவர்தாம்.
| [11] |
இந்நியதி பரிவோடு
வழுவாம லிவர்செய்ய
முன்னுதிருத் தொண்டாகி
முடிந்தபடி தான்மொழியில்
துன்னியமெய் யன்புடனே
யெழுந்தவினை தூயவர்க்கு
மன்னுமிகு பூசனையாம்
அன்புநெறி வழக்கினால்.
| [12] |
கல்லாலே யெறிந்ததுவு
மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும்
திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை
யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா
ரரனார்க்கஃ தலராமால்.
| [13] |
அங்கொருநாள் அருளாலே
அயர்ந்துண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் றனையெறியா
தயர்த்தேன்யா னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன்
மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார்
திருமுன்பு மேவினார்.
| [14] |
கொண்டதொரு கல்லெடுத்துக்
குறிகூடும் வகையெறிய
உண்டிவினை யொழித்தஞ்சி
யோடிவரும் வேட்கையொடும்
கண்டருளுங் கண்ணுதலார்
கருணைபொழி திருநோக்கால்
தொண்டரெதிர் நெடுவிசும்பில்
துணைவியொடுந் தோன்றுவார்.
| [15] |
மழவிடைமே லெழுந்தருளி
வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர்
கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி
மிக்கசிவ லோகத்தில்
பழவடிமைப் பாங்கருளிப்
பரமரெழுந் தருளினார்.
| [16] |
ஆதியார் தம்மை நாளுங்
கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட
குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித்
துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன்
சிறப்புலி யாரைச் செப்பி.
| [17] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.350  
சிறப்புலி நாயனார் புராணம்
பண் - ( )
பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
| [1] |
தூமலர்ச் சோலை தோறும்
சுடர்நெடு மாடந் தோறும்
மாமழை முழக்கந் தாழ
மறையொலி முழக்கம் ஓங்கும்
பூமலி மறுகில் இட்ட
புகையகில் தூபந் தாழ
ஓமநல் வேள்விச் சாலை
ஆகுதித் தூப மோங்கும்.
| [2] |
ஆலை சூழ் பூகவேலி
அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார்
நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள்
நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினிற் சிறந்த நீரார்.
| [3] |
ஆளும்அங் கணருக் கன்பர்
அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
முன்புநின் றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
நயந்தன வெல்லாம் நல்கி
நீளும்இன் பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.
| [4] |
அஞ்செழுத் தோதி அங்கி
வேட்டுநல் வேள்வியெல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும்
இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர்
தாள்நிழல் தங்கி னாரே.
| [5] |
அறத்தினின் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ள லார்வண்
சிறப்புலி யார்தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங் காட்டங்
குடியினிற் செம்மை வாய்த்த
விறற்சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன்.
| [6] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.360  
சிறுத்தொண்ட நாயனார் புராணம்
பண் - ( )
உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.
| [1] |
நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.
| [2] |
ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.
| [3] |
உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
| [4] |
ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
| [5] |
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
| [6] |
கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.
| [7] |
தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.
| [8] |
இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
| [9] |
உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.
| [10] |
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
| [11] |
வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.
| [12] |
நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.
| [13] |
தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.
| [14] |
சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.
| [15] |
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
| [16] |
நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.
| [17] |
அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.
| [18] |
மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.
| [19] |
ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
| [20] |
சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.
| [21] |
வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.
| [22] |
அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.
| [23] |
சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.
| [24] |
இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.
| [25] |
மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.
| [26] |
அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.
| [27] |
அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.
| [28] |
வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.
| [29] |
களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.
| [30] |
செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.
| [31] |
மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.
| [32] |
பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.
| [33] |
அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.
| [34] |
அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.
| [35] |
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.
| [36] |
வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.
| [37] |
மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.
| [38] |
அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.
| [39] |
இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.
| [40] |
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.
| [41] |
நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.
| [42] |
அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.
| [43] |
என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
| [44] |
பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.
| [45] |
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.
| [46] |
எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.
| [47] |
அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
| [48] |
சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.
| [49] |
பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.
| [50] |
யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
| [51] |
அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.
| [52] |
அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.
| [53] |
வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.
| [54] |
அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.
| [55] |
மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.
| [56] |
என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.
| [57] |
காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.
| [58] |
பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.
| [59] |
குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
| [60] |
அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.
| [61] |
ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.
| [62] |
இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.
| [63] |
பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.
| [64] |
அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.
| [65] |
மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.
| [66] |
உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.
| [67] |
அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.
| [68] |
இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.
| [69] |
வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.
| [70] |
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.
| [71] |
பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.
| [72] |
பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.
| [73] |
சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.
| [74] |
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
| [75] |
வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.
| [76] |
அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.
| [77] |
உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.
| [78] |
ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.
| [79] |
நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
| [80] |
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.
| [81] |
பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.
| [82] |
வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.
| [83] |
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
| [84] |
தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.
| [85] |
அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.
| [86] |
கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.
| [87] |
ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.
| [88] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.370  
கழற்றி அறிவார் நாயனார்
பண் - ( )
மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
| [1] |
காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.
| [2] |
மிக்க செல்வ மனைகள்தொறும்
விழையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கு சாலைதொறும்
பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க அணிகொள் மடங்கள்தொறும்
சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்
அடங்க நிதியந் துவன்றுவன.
| [3] |
வேத நெறியின் முறைபிறழா
மிக்க ஒழுக்கந் தலைநின்ற
சாதி நான்கும் நிலைதழைக்கும்
தன்மைத் தாகித் தடமதில்சூழ்
சூத வகுள சரளநிரை
துதையுஞ் சோலை வளநகர்தான்
கோதை யரசர் மகோதையெனக்
குலவு பெயரும் உடைத்துலகில்.
| [4] |
முருகு விரியும் மலர்ச்சோலை
மூதூ ரதன்கண் முறைமரபின்
அருகி யழியுங் கலிநீக்கி
அறங்கொள் சைவத் திறந்தழைப்பத்
திருகு சினவெங் களியானைச்
சேரர் குலமும் உலகுஞ்செய்
பெருகு தவத்தால் அரனருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார்.
| [5] |
திருமா நகரந் திருவவதா
ரஞ்செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல்
எடுப்ப வான மலர்மாரி
தருமா விசும்பின் மிகநெருங்கத்
தழங்கும் மொலிமங் கலந்தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.
| [6] |
மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.
| [7] |
உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதி யல்ல எனவுணர்வார்
புலரி யெழுந்து புனல்மூழ்கிப்
புனித வெண்ணீற் றினும்மூழ்கி
நிலவு திருநந் தனவனத்து
நீடும் பணிகள் பலசெய்து
மலரு முகையுங் கொணர்ந்துதிரு
மாலை சாத்த மகிழ்ந்தமைத்து.
| [8] |
திருமஞ் சனமும் கொணர்ந்துதிரு
வலகும் இட்டுத் திருமெழுக்கு
வருமன் புடன்இன் புறச்சாத்தி
மற்று முள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்தமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியி னுணர்வுவர
ஓதிப் பணிந்தே யொழுகுநாள்.
| [9] |
நீரில் மலிந்த கடல்அகழி
நெடுமால் வரையின் கொடிமதில்சூழ்
சீரின் மலிந்த திருநகரம்
அதனிற் செங்கோற் பொறையனெனும்
காரின் மலிந்த கொடைநிழன்மேற்
கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த்
தாரின் மலிந்த புயத்தரசன்
தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான்.
| [10] |
வந்த மரபின் அரசளிப்பான்
வனஞ்சார் தவத்தின் மருவியபின்
சிந்தை மதிநூல் தேரமைச்சர்
சிலநாள் ஆய்ந்து தெளிந்தநெறி
முந்தை மரபின் முதல்வர்திருத்
தொண்டு முயல்வார் முதற்றாக
இந்து முடியார் திருவஞ்சைக்
களத்தில் அவர்பால் எய்தினார்.
| [11] |
எய்தி யவர்தம் எதிரிறைஞ்சி
இருந்தண் சாரல் மலைநாட்டுச்
செய்தி முறைமை யால்உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடிசூடி
யருளு மரபால் வந்ததெனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண்.
| [12] |
இன்பம் பெருகுந் திருத்தொண்டுக்
கிடையூ றாக இவர்மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை
அரசு புரக்கும் அருளுண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை
இடைபெற் றறிவே னெனப்புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால்.
| [13] |
மேவும் உரிமை அரசளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாருங் கழறினவும்
அறியும் உணர்வும் ஈறில்லாத்
தாவில் விறலுந் தண்டாத
கொடையும் படைவா கனம்முதலாம்
காவல் மன்னர்க் குரியனவும்
எல்லாங் கைவந் துறப்பெற்றார்.
| [14] |
ஆன அருள்கொண் டஞ்சலிசெய்
திறைஞ்சிப் புறம்போந் தரசளித்தல்
ஊன மாகுந் திருத்தொண்டுக்
கெனினும் உடையா னருளாலே
மேன்மை மகுடந் தாங்குதற்கு
வேண்டும் அமைச்சர்க் குடன்படலும்
மான அமைச்சர் தாம்பணிந்துஅவ்
வினைமேற் கொண்டு மகிழ்ந்தெழுந்தார்.
| [15] |
உரிமை நாளில் ஓரைநலன்
எய்த மிக்க வுபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன
வெல்லாம் பிறங்க மங்கலஞ்செய்
திருமை யுலகுக் கொருமைமுடி
கவித்தார் எல்லா வுயிருமகிழ்
தரும நிலைமை யறிந்துபுவி
தாங்குங் கழறிற் றறிவார்தாம்.
| [16] |
தம்பி ரானார் கோயில்வலங்
கொண்டு திருமுன் தாழ்ந்தெழுந்து
கும்ப யானை மேல்கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர்தாங்க
நலங்கொள் நகர்சூழ் வலங்கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதிசுமந்தோர்
வண்ணான் முன்னே வரக்கண்டார்.
| [17] |
மழையிற் கரைந்தங் குவரூறி
மேனி வெளுத்த வடிவினால்
உழையிற் பொலிந்த திருக்கரத்தார்
அடியார் வேடம் என்றுணர்ந்தே
இழையிற் சிறந்த வோடைநுதல்
யானைக் கழுத்தி னின்றிழிந்து
விழைவிற் பெருகுங்காதலினால்
விரைந்து சென்று கைதொழுதார்.
| [18] |
சேரர் பெருமான் தொழக்கண்டு
சிந்தை கலங்கி முன்வணங்கி
யார்என் றடியே னைக்கொண்ட
தடியேன் அடிவண் ணானென்னச்
சேரர் பிரானு மடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர்
வருந்தா தேகும் எனமொழிந்தார்.
| [19] |
மன்னர் பெருமான் திருத்தொண்டு
கண்டு மதிநீடு அமைச்சரெலாம்
சென்னி மிசைஅஞ் சலிசெய்து
போற்றச் சினமால் களிறேறி
மின்னு மணிப்பூண் கொடிமாட
வீதி மூதூர் வலங்கொண்டு
பொன்னின் மணிமா ளிகைவாயில்
புக்கார் புனைமங் கலம்பொலிய.
| [20] |
யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.
| [21] |
உலகு புரக்கும் குடைவளவர்
உரிமைச் செழிய ருடன்கூட
நிலவு பெருமுக் கோக்களாய்
நீதி மனுநூல் நெறிநடத்தி
அலகில் அரசர் திறைகொணர
அகத்தும் புறத்தும் பகையறுத்து
மலருந் திருநீற் றொளிவளர
மறைகள் வளர மண்ணளிப்பார்.
| [22] |
நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைதவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும்
தில்லைத் திருச்சிற் றம்பலத்துள்
ஆடுங் கழலே எனத்தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனைமேல்
கொண்டார் சேரர் குலப்பெருமாள்.
| [23] |
வாசத் திருமஞ் சனம்பள்ளித்
தாமஞ் சாந்த மணித்தூபம்
தேசிற் பெருகுஞ் செழுந்தீபம்
முதலா யினவும் திருவமுதும்
ஈசற் கேற்ற பரிசினால்
அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலியளித்தார்.
| [24] |
நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோ ரெவர்க்கும் ஈகையினால்
செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
திருந்து வென்றி யுடன்பொருந்தி
உம்பர் போற்றத் தம்பெருமாற்
குரிய வேள்வி பலசெய்தார்.
| [25] |
இன்ன வண்ணம் இவரொழுக
எழில்கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால
வாயில் இறைவர் வருமன்பால்
பன்னும் இசைப்பா டலிற்பரவும்
பாண னார்பத் திரனார்க்கு
நன்மை நீடு பெருஞ்செல்வம்
நல்க வேண்டி அருள்புரிவார்.
| [26] |
இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.
| [27] |
அதிர்கழல் உதியர் வேந்தற்
கருள்செய்த பெருமை யாலே
எதிரில்செல் வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க வென்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகங் கொடுத்தார் காண.
| [28] |
சங்கப் புலவர் திருமுகத்தைத்
தலைமேற் கொண்டு பத்திரனார்
அங்கப் பொழுதே புறப்பட்டு
மலைநா டணைய வந்தெய்தித்
துங்கப் புரிசைக் கொடுங்கோளூர்
தன்னிற் புகுந்து துன்னுகொடி
மங்குல் தொடக்கும் மாளிகைமுன்
வந்து மன்னர்க் கறிவித்தார்.
| [29] |
கேட்ட பொழுதே கைதலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழிநீர் வழிந்திழிய
எழுந்து நடுக்கம் மிகவெய்தி
ஓட்டத் தம்பொன் மாளிகையின்
புறத்தி லுருகுஞ் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகாற் பணிகின்றார்.
| [30] |
அடியேன் பொருளாத் திருமுகங்கொண்
டணைந்த தென்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகங்கைக்
கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேற் கொண்டு கூத்தாடி
மொழியுங் குழறிப் பொழிகண்ணீர்
பொடியார் மார்பிற் பரந்துவிழப்
புவிமேற் பலகால் வீழ்ந்தெழுந்தார்.
| [31] |
பரிவில் போற்றித் திருமுகத்தைப்
பலகால் தொழுது படியெடுக்க
உரிய வகையா லெடுத்தோதி
யும்பர் பெருமா னருள்போற்றி
விரிபொற் சுடர்மா ளிகைபுக்கு
மேவும் உரிமைச் சுற்றமெலாம்
பெரிது விரைவிற் கொடுபோந்து
பேணும் அமைச்சர்க் கருள்செய்வார்.
| [32] |
நங்கள் குலமா ளிகையதனுள்
நலத்தின் மிக்க நிதிக்குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையிற் பொலிந்த பண்டாரம்
அங்க ணொன்று மொழியாமே
அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேற்
சமைய வேற்றிக் கொணருமென.
| [33] |
சேரர் பெருமான் அருள்செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரு மணிமா ளிகையுள்ளால்
தனங்கள் எல்லாம் நிறைந்தபெரும்
சீர்கொள் நிதிய மெண்ணிறந்த
வெல்லாம் பொதிசெய் தாளின்மேல்
பாரில் நெருங்க மிசையேற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள்.
| [34] |
பரந்த நிதியின் பரப்பெல்லாம்
பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு
நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகள்
முதலாம் உயிருள் ளனதனமும்
புரந்த அரசுங் கொள்ளுமென
மொழிந்தார் பொறையர் புரவலனார்.
| [35] |
பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
| [36] |
இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
| [37] |
பண்பு பெருகும் பெருமாளும்
பாண னார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதல்நீர்
வழியக் கையால் தொழுதணைய
நண்பு சிறக்கு மவர் தம்மை
நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை
புக்கார் திருந்தும் இசைப்பாணர்.
| [38] |
வான வரம்பர் குலம்பெருக்கும்
மன்ன னாரும் அறித்தேகிக்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியா ரடிமை கொண்டருளும்
பான்மை யருளின் பெருமையினை
நினைந்து பலகாற் பணிந்தேத்தி
மேன்மை விளங்கு மாளிகைமண்
டபத்துள் அரசு வீற்றிருந்தார்.
| [39] |
அளவில் பெருமை அகிலயோ
னிகளும் கழறிற் றறிந்தவற்றின்
உளமன் னியமெய் யுறுதுயர்கள்
ஒன்று மொழியா வகையகற்றிக்
களவு கொலைகள் முதலான
கடிந்து கழறிற் றறிவார்தாம்
வளவர் பெருமா னுடன்செழியர்
மகிழும் கலப்பில் வைகு நாள்.
| [40] |
வானக் கங்கை நதிபொதிந்த
மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பின் அர்ச்சனையாம்
தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினார்
ஆடற் சிலம்பின் ஒலி முன்போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளா தொழிய மதிமயங்கி.
| [41] |
பூசை கடிது முடித்தடியேன்
என்னோ பிழைத்த தெனப் பொருமி
ஆசை உடம்பால் மற்றினிவே
றடையும் இன்பம் யாதென்று
தேசின் விளங்கும் உடைவாளை
யுருவித் திருமார் பினில்நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஒசை மிகவும் இசைப்பித்தார்.
| [42] |
ஆடல் சிலம்பின் ஒலிகேளா
வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக்
கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார்
நெடுமால் பிரமன் அருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன்
செய்யா தொழிந்த தென்னென்றார்.
| [43] |
என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின் றருளா தெழுமொலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வால் நமைப்போற்றி
யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.
| [44] |
என்னே அடியார்க் கிவரருளும்
கருணை யிருந்த வாறென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய்
புலியூர்ப் பொன்னம் பலம்இறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர்
தமையுங் காண்பன் எனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார்
நாமச் சேரர் கோமானார்.
| [45] |
பொன்னார் மௌலிச் சேரலனார்
போற்றும் அமைச்சர்க் கஃதியம்பி
நன்னாள் கொண்டு பெரும்பயணம்
எழுக வென்று நலஞ்சாற்ற
மின்னா ரயில்வேற் குலமறவர்
வென்றி நிலவுஞ் சிலைவீரர்
அந்நாட் டுள்ளார் அடையநிரந்
தணைந்தார் வஞ்சிஅக நகர்வாய்.
| [46] |
இட்ட நன்னாள் ஓரையினில்
இறைவர் திருவஞ் சைக்களத்து
மட்டு விரிபூங் கொன்றையினார்
தம்மை வலங்கொண் டிறைஞ்சிப்போய்ப்
பட்ட நுதல்வெங் களியானைப்
பிடர்மேற் கொண்டு பனிமதியந்
தொட்ட கொடிமா ளிகைமூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார்.
| [47] |
யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.
| [48] |
புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவி னசைவிற் போதுவன
அரவச் சேனைக் கடற்றரங்க
மடுத்து மேன்மே லடர்வனபோல்
விரவிப் பரந்து சென்றனவான்
மிசையு மவலு மொன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ்சேனை
நேமி நெளியச் சென்றனவால்.
| [49] |
அந்நாட் டெல்லை கடந்தணைய
அமைச்சர்க் கெல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டு வாரை யுடன்கொண்டு
கொன்னார் அயில்வேல் மறவர்பயில்
கொங்கு நாடு கடந்தருளிப்
பொன்னாட் டவரும் அணைந்தாடும் பொன்னி நீர்நாட் டிடைப்போவார்.
| [50] |
சென்ற திசையில் சிவனடியார்
சிறப்பி னோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக்குறும்பர்
இடங்கள் தோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந்
துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையார் இடம்பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார்.
| [51] |
பொருவில் பொன்னித் திருநதியின்
கரைவந் தெய்திப் புனிதநீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி
மருங்கு வடபாற் கரையேறித்
திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச்
செம்பொன் மன்றுள் நடம்போற்ற
உருகி மனத்தி னுடன்சென்றார்
ஒழியா அன்பின் வழிவந்தார்.
| [52] |
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்த ணாளர் தொண்டர்குழாம்
அணைந்த போதில் எதிர்வணங்கிச்
சந்த விரைப்பூந் திருவீதி
இறைஞ்சித் தலைமேற் கரமுகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழுநிலைக்கோ
புரத்தை யணைந்தார் சேரலனார்.
| [53] |
நிலவும் பெருமை எழுநிலைக்கோ
புரத்தின் முன்னர் நிலத்திறைஞ்சி
மலருங் கண்ணீர்த் துளிததும்பப்
புகுந்து மணிமா ளிகைவலங்கொண்டு
உலகு விளக்குந் திருப்பேரம்
பலத்தை வணங்கி யுள்ளணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்நின்று
ஆடுந் திருச்சிற் றம்பலமுன்.
| [54] |
அளவில் இன்பப் பெருங்கூத்தர்
ஆட எடுத்த கழல்காட்ட
உளமும் புலமும் ஒருவழிச்சென்று
உருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு
தன்றி மன்றிற் கழல்வைத்
வளருந் திருக்கூத் தமுதுலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார்.
| [55] |
ஆரா ஆசை ஆனந்தக்
கடலுள் திளைத்தே யமர்ந்தருளால்
சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பார்ஆ தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார் பருவ மழைபொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழறிற் றறிவார் தாம்.
| [56] |
தம்பி ரானார்க் கெதிர்நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடும்
ஒருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினில்எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்தவொலி
தாமும் எதிரே கேட்பித்தார்.
| [57] |
ஆடற் சிலம்பின் ஒலிகேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும்பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியுங் காலமெலாம்
நின்று தொழுது புறம்போந்து
மாடத் திருமா ளிகைவீதி
வணங்கிப் புறத்து வைகினார்.
| [58] |
பரவுந் தில்லை வட்டத்துப்
பயில்வார் பைம்பொன் அம்பலத்துள்
அரவும் புனலுஞ் சடையாட
ஆடு வார்கூத் தாராமை
விரவுங் காதல் மிக்கோங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்தேத்தி
இன்பம் சிறக்கும் அந்நாளில்.
| [59] |
ஆடும் பெருமான் பாடல்கேட்
டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசால் முன்பருளிச்
செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண
நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாதர் அருளினால்
திருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
| [60] |
அறிவின் எல்லை யாயதிருத்
தில்லை யெல்லை யமர்ந்திறைஞ்சிப்
பிறிவி லாத திருவடியைப்
பெருகும் உள்ளத் தினிற்பெற்றுச்
செறியு ஞான போனகர்வந்து
அருளும் புகலி சென்றிறைஞ்சி
மறிசேர் கரத்தார் கோயில்பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.
| [61] |
வழியில் குழியில் செழுவயலில்
மதகில் மலர்வா விகளில்மடுச்
சுழியில் தரளந் திரைசொரியுந்
துறைநீர்ப் பொன்னி கடந்தேறி
விழியில் திகழுந் திருநுதலார்
விரும்பும் இடங்கள் இறைஞ்சியுகக்
கழிவில் பெருவெள் ளமுங்கொள்ளாக்
கழனி யாரூர் கண்ணுற்றார்.
| [62] |
நம்பி தாமும் அந்நாள்போய்
நாகைக் காரோ ணம்பாடி
அம்பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்தேத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
| [63] |
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவா ரூர்எய்த
அந்த ணாளர் பெருமானும்
அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர்கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்றொண்டர்
முன்பு விருப்பி னுடன்தாழ்ந்தார்.
| [64] |
முன்பு பணிந்த பெருமாளைத்
தாமும் பணிந்து முகந்தெடுத்தே
அன்பு பெருகத் தழுவவிரைந்
தவரும் ஆர்வத் தொடுதழுவ
இன்ப வெள்ளத் திடைநீந்தி
ஏற மாட்டா தலைவார்போல்
என்பும் உருக வுயிரொன்றி
யுடம்பும் ஒன்றாம் எனஇசைந்தார்.
| [65] |
ஆன நிலைமை கண்டதிருத்
தொண்டர் அளவில் மகிழ்வெய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்றொண் டருங்கலந்த
பான்மை நண்பால் சேரமான்
தோழர் என்று பார்பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க் காகி விளங்கியதால்.
| [66] |
ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.
| [67] |
சென்று தேவா சிரியனைமுன்
இறைஞ்சித் திருமா ளிகைவலங்கொண்டு
ஒன்றும் உள்ளத் தொடும்புகுவார்
உடைய நம்பி முன்னாக
நின்று தொழுது கண்ணருவி
வீழ நிலத்தின் மிசைவீழ்ந்தே
என்றும் இனிய தம்பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார்.
| [68] |
தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.
| [69] |
அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
| [70] |
சோதி மணிமா ளிகையின்கண்
சுடரும் பசும்பொற் கால்அமளி
மீது பெருமாள் தமையிருத்தி
நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து
நிறைபூ சனைகள் முறையளித்தார்.
| [71] |
தாண்டு புரவிச் சேரர்குலப்
பெருமாள் தமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க்
கெல்லாம் இயல்பின் விருந்தமைத்தார்.
| [72] |
அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.
| [73] |
சேரர் பெருமான் எழுந்தருளி
அமுது செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல்மடவாய்
தாழா தமுது செய்வியெனப்
பாரின் மலிசீர் வன்றொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருக்கரத்தில்
இரண்டு படியா ஏற்றுதலும்.
| [74] |
ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.
| [75] |
ஒக்க அமுது செய்தருள
வுயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்
தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையுந்
தாம்வேண் டியவா றினிதருந்தத்
தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத்
தூயவிருந்தின் கடன்முடித்தார்.
| [76] |
பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதை யவர்கள் சமைத்தெடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுது மேந்தினார்.
| [77] |
ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
| [78] |
மலைநாட் டரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர்தழுவிக்
கலைநாட் பெருகு மதிமுகத்துப்
பரவை யார்தங் கணவனார்
சிலைநாட் டியவெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக்கங்கை
அலைநாட் கொன்றை முடிச்சடையார்
அருளே போற்றி யுடனமர்ந்தார்.
| [79] |
செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.
| [80] |
இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
| [81] |
சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கன்று
மதுரை யால வாயமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பில் வணங்குதற்குச்
சார வெழுந்த குறிப்பாலுந்
தாமும் உடனே செலத்துணிந்தார்.
| [82] |
இருவர் திருவுள் ளமும்இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி
யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவும் உரிமைப் பெருஞ் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு
போது வார்கள் உடன்போத.
| [83] |
சேவித் தணையும் பரிசனங்கள்
சூழத் திருவா ரூர்இறைஞ்சிக்
காவிற் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல்வணங்கிப்
போந்து வேலைக் கழிக்கானல்
பூவில் திகழும் பொழில்நாகை
புகுந்து காரோ ணம்பணிந்தார்.
| [84] |
திருக்கா ரோணச் சிவக்கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார் வச்செந் தமிழ்மாலை
சாத்திச் சிலநாள் உறைந்துபோய்ப்
பெருக்கா றுலவு சடைமுடியார்
இடங்கள் பலவும் பணிந்தேத்தி
அருட்கா ரணர்தந் திருமறைக்கா
டணைந்தார் சேர ராரூரர்.
| [85] |
முந்நீர் வலங்கொன் மறைக்காட்டு
முதல்வர் கோயில் சென்றெய்திச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்
கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்நேர் திறக்க அடைக்கவெனப்
பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய்
நாயன் மாரை நினைந்திறைஞ்சி.
| [86] |
நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட் டருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து
போற்றி யாழைப் பழித்தென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தா தியிற்சிறப்பித்
தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
| [87] |
எழுந்து பணிந்து புறத்தெய்தி
இருவர் பெருந்தொண் டருஞ்சிலநாள்
செழுந்தண் பழனப் பதியதனுள்
அமர்ந்து தென்பால் திரைக்கடனஞ்
சழுந்து மிடற்றார் அகத்தியான்
பள்ளி யிறைஞ்சி அவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர்
கோடிக் கோயில் குறுகினார்.
| [88] |
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.
| [89] |
அங்கு வைகிப் பணிந்தருளால்
போவார் அகன்சோ ணாட்டரனார்
தங்குமிடங்கள் வணங்கிப் போய்ப்
பாண்டி நாடு தனைச்சார்ந்து
திங்கண் முடியார் திருப்புத்தூர்
இறைஞ்சிப் போந்து சேண்விளங்கு
மங்குல் தவழும் மணிமாட
மதுரை மூதூர் வந்தணைந்தார்.
| [90] |
சேரமான் தோழரும்அச்
சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை
ஆலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய
வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித்
தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
| [91] |
தென்னவர்கோன் மகளாரைத்
திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண்
இனிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட
அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய்
மணிக்கோயில் வந்தணைந்தார்.
| [92] |
திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
| [93] |
படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.
| [94] |
செம்பியனா ருடன்செழியர்
தாம்பணிந்து சேரருடன்
நம்பியும்முன் புறத்தணைய
நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின்
றுடன்கொடுபோ யிருவர்க்கும்
பைம்பொன்மணி மாளிகையிற்
குறைவறுத்தார் பஞ்சவனார்.
| [95] |
உளம்மகிழக் கும்பிட்டங்
குறையுநாள் உதியருடன்
கிளரொளிப்பூண் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி
வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோ
டளவளா வியவிருப்பால்
அமர்ந்துகலந் தினிதிருந்தார்.
| [96] |
அந்நாளில் மதுரைநகர்
மருங்கரனார் அமர்பதிகள்
பொன்னாரம் மணிமார்பிற்
புரவலர்மூ வரும்போதச்
செந்நாவின் முனைப்பாடித்
திருநாடர் சென்றிறைஞ்சிச்
சொன்மாலை களுஞ்சாத்தித்
தொழத்திருப்பூ வணத்தணைவார்.
| [97] |
நீடுதிருப் பூவணத்துக்
கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர்
மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத்
திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ
தோவென்று பணிந்தணைவார்.
| [98] |
சென்றுதிருப் பூவணத்துத்
தேவர்பிரான் மகிழ்கோயில்
முன்றில்வலங் கொண்டிறைவர்
முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி
| [99] |
அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.
| [100] |
செஞ்சடையார் திருவாப்ப
னூர்திருவே டகம்முதலாம்
நஞ்சணியுங் கண்டரவர்
நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால்
இனிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையும் மதில்மதுரை
மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
| [101] |
பரமர்திருப் பரங்குன்றில்
சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங்
கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமைநினைந் தஞ்சுதும்என்
றாரூரர் பாடுவார்.
| [102] |
கோத்திட்டை எனஎடுத்துக்
கோதில்திருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி
முக்கோக்கள் தம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை
இன்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார்
தங்குதிருப் பரங்குன்றில்.
| [103] |
இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
| [104] |
அந்நாட்டுத் திருப்பதிகள்
பலவும்அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன்
நம்பிதாம் எழுந்தருள
மின்னாட்டும் பன்மணிப்பூண்
வேந்தர்இரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன
செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
| [105] |
இருபெருவேந் தரும்இயல்பின்
மீண்டதற்பின் எழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர்
புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும்
பணிந்துபோய் மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்கும்
குற்றாலஞ் சென்றடைந்தார்.
| [106] |
குற்றாலத் தினிதமர்ந்த
கூத்தர்குரை கழல்வணங்கிச்
சொல்தாம மலர்புனைந்து
குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத்
திருநெல்வே லியையணைந்தார்.
| [107] |
நெல்வேலி நீற்றழகர்
தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
திருவிரா மேச்சரத்து.
| [108] |
மன்னும்இரா மேச்சரத்து
மாமணியை முன்வணங்கிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பணிந்த
சென்னியர்மா தோட்டத்துத்
திருக்கேதீச் சரஞ்சார்ந்து
சொன்மலர்மா லைகள்சாத்தித்
தூரத்தே தொழுதமர்ந்தார்.
| [109] |
திருஇரா மேச்சரத்துச்
செழும்பவளச் சுடர்க்கொழுந்தைப்
பரிவினால் தொழுதகன்று
பரமர்பதி பிறபணிந்து
பெருவிமா னத்திமையோர்
வணங்குபெருந் திருச்சுழியல்
மருவினார் வன்றொண்டர்
மலைவேந்த ருடன்கூட.
| [110] |
திருச்சுழியல் இடங்கொண்ட
செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியின் வீழாமைக்
| [111] |
அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.
| [112] |
கானப்பேர் யாம்இருப்ப
தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவும்
மாமுடியார் தாம்அகல
ஞானப்பே ராளர்உணர்ந்
ததிசயித்து நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தார்
அருளிருந்த பரிசென்பார்.
| [113] |
கண்டருளும் படிகழறிற்
| [114] |
காளையார் தமைக்கண்டு
தொழப்பெறுவ தென்றென்று
தாளைநா ளும்பரவத்
தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண
வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன
முனைப்பாடி வளநாடர்.
| [115] |
மன்னுதிருக் கானப்பேர்
வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார்
செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து
முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை
பாடினார் பரவினார்.
| [116] |
ஆராத காதலுட
னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர்
சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக்
கானப்பேர் கடந்தணைந்தார்
போரானேற் றார்கயிலைப்
பொருப்பர்திருப் புனவாயில்.
| [117] |
புனவாயிற் பதியமர்ந்த
புனிதரா லயம்புக்கு
மனவார்வம் உறச்சித்த
நீநினைஎன் னொடுஎன்று
வினவான தமிழ்பாடி
வீழ்ந்திறைஞ்சி யப்பதியில்
சினவானை யுரித்தணிந்தார்
திருப்பாதந் தொழுதிருந்தார்.
| [118] |
திருப்புனவா யிற்பதியில்
அமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல
பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கான்அகன்று
புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார்தம்
பாம்பணிமா நகர்தன்னில்.
| [119] |
பாதாளீச் சரமிறைஞ்சி
அதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல்
வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார்
மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந்
திருவாரூர் சென்றணைந்தார்.
| [120] |
திருநாவ லூர்வேந்தர்
| [121] |
வாசமலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி
நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவால் திருப்பதிகம்
எடுத்தேத்தி எழுந்தருளால்
பாசவினைத் தொடக்கறுப்பார்
பயில்கோயில் பணிந்தணைவார்.
| [122] |
பரவையார் மாளிகையில்
பரிசனங்கள் முன்னெய்த
விரவுபே ரலங்கார
விழுச்செல்வம் மிகப்பெருக
வரவெதிர்கொண் டடிவணங்க
வன்றொண்டர் மலைநாட்டுப்
புரவலனா ரையுங்கொண்டு
பொன்னணிமா ளிகைபுகுந்தார்.
| [123] |
பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
| [124] |
மங்கலமாம் பூசனைகள்
பரவையார் செயமகிழ்ந்து
தங்கியினி தமர்கின்றார்
தம்பிரான் கோயிலினுள்
பொங்குபெருங் காலமெலாம்
புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து
நங்கள்பிரா னருள்மறவா
நல்விளையாட் டினைநயந்தார்.
| [125] |
நிலைச்செண்டும் பரிச்செண்டும்
வீசிமிக மகிழ்வெய்தி
விலக்கரும்போர்த் தகர்ப்பாய்ச்சல்
கண்டருளி வென்றிபெற
மலைக்கு நெடு முட்கணைக்கால்
வாரணப்போர் மகிழ்ந்தருளி
அலைக்குமறப் பலபுள்ளின்
அமர்விரும்பி யமர்கின்றார்.
| [126] |
விரவு காதல் மீக்கூர
மேவு நாள்கள் பலசெல்லக்
கரவில் ஈகைக் கேரளனார்
தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப்
பரவை யார்தங் கொழுநனார்
தம்மைப் பனிந்து கொண்டணைவான்
இரவும் பகலுந் தொழுதிரக்க
இசைந்தார் அவரும் எழுந்தருள.
| [127] |
நங்கை பரவை யார்உள்ளத்
திசைவால் நம்பி யெழுந்தருளத்
திங்கள் முடியார் திருவருளைப்
பரவிச் சேர மான்பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்
கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி இருவரும்போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில்.
| [128] |
தம்பி ரானைத் தொழுதருளால்
போந்து தொண்டர் சார்ந்தணைய
நம்பி யாரூ ரருஞ்சேரர்
நன்னாட் டரச னாராகும்
பைம்பொன் மணிநீண் முடிக்கழறிற்
றறிவார் தாமும் பயணமுடன்
செம்பொன் நீடு மதிலாரூர்
தொழுது மேல்பாற் செல்கின்றார்.
| [129] |
பொன்பரப்பி மணிவரன்றிப்
புனல்பரக்குங் காவேரித்
தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த
கோயில்பல சென்றிறைஞ்சி
மின்பரப்புஞ் சடையண்ணல்
விரும்புதிருக் கண்டியூர்
அன்புருக்குஞ் சிந்தையுடன்
பணிந்துபுறத் தணைந்தார்கள்.
| [130] |
வடகரையில் திருவையா
றெதிர்தோன்ற மலர்க்கரங்கள்
உடலுருக வுள்ளுருக
வுச்சியின்மேற் குவித்தருளிக்
கடல்பரந்த தெனப்பெருகுங்
காவிரியைக் கடந்தேறித்
தொடர்வுடைய திருவடியைத்
தொழுவதற்கு நினைவுற்றார்.
| [131] |
ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
| [132] |
ஆறு பெருகி இருகரையும்
பொருது விசும்பில் எழுவதுபோல்
வேறு நாவாய் ஓடங்கள்
மீது செல்லா வகைமிகைப்ப
நீறு விளங்குந் திருமேனி
நிருத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியா தழைத்துப் பாடுவார்.
| [133] |
பரவும் பரிசொன் றெடுத்தருளிப்
பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமைஐயா
றுடைய வடிக ளோவென்று
விரவும் வேட்கை யுடனழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர்
நின்று தொழுது பாடுதலும்.
| [134] |
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடையுண் டெதிரழைக்கக்
கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்று முணர்வால் சராசரங்கள்
எல்லாங் கேட்க வோலமென
நின்று மொழிந்தார் பொன்னிமா
நதியு நீங்கி நெறிகாட்ட.
| [135] |
விண்ணின் முட்டும் பெருக்காறு
மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர்
வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக்
கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங்
கலக்கக் கைஅஞ் சலிகுவித்தார்.
| [136] |
நம்பி பாதஞ் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்ச்
செம்பொன் முந்நூன் மணிமார்பர்
சேரர் பெருமான் எதிர்வணங்கி
உம்பர் நாதர் உமக்களித்த
தன்றோ என்ன வுடன்மகிழ்ந்து
தம்பி ரானைப் போற்றிசைத்துத்
தடங்கா வேரி நடுவணைந்தார்.
| [137] |
செஞ்சொல் தமிழ்நா வலர்கோனும்
சேரர் பிரானும் தம்பெருமான்
எஞ்ச லில்லா நிறைஆற்றின்
இடையே யளித்த மணல்வழியில்
தஞ்ச முடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதிவா ணரைப்பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார்.
| [138] |
அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
| [139] |
ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.
| [140] |
கொங்கு நாடு கடந்துபோய்க்
குலவு மலைநாட் டெல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பி ரான்தோழர்
அங்க ணுடனே யணையவெழுந்து
அருளா நின்றார் எனும்விருப்பால்
எங்கும் அந்நாட் டுள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண் டின்புறுவார்.
| [141] |
பதிகள் எங்குந் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்குங் குளிர்பந்தர்
மனைகள் எங்கும் அகிற்புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப்பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள் எங்கும் முழவினொலி
நிலங்கள் எங்கும் பொலஞ்சுடர்ப்பூ.
| [142] |
திசைகள் தோறும் வரும்பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசைகொள் வாசி நிரைவெள்ளங்
கும்ப யானை யணிவெள்ளம்
மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவுஞ் சோற்று வெள்ளங்கண்
டசைவி லின்பப் பெருவெள்ளத்
தமர்ந்து கொடுங்கோ ளூர்அணைந்தார்.
| [143] |
கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.
| [144] |
நகர மாந்தர் எதிர்கொள்ள
நண்ணி எண்ணில் அரங்குதொறும்
மகரக் குழைமா தர்கள்பாடி
ஆட மணிவீ தியிலணைவார்
சிகர நெடுமா ளிகையணையார்
சென்று திருவஞ் சைக்களத்து
நிகரில் தொண்டர் தமைக்கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.
| [145] |
இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
| [146] |
தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
| [147] |
நல்ல தோழர் நம்பெருமாள்
தமக்கு நம்பி இவரென்பார்
எல்லை யில்லாத் தவம்முன்பென்
செய்தோம் இவரைத் தொழவென்பார்
செல்வம் இனியென் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக் கெனவுரைப்பார்
சொல்லுந் தரமோ பெருமாள்செய்
தொழிலைப் பாரீ ர் எனத்தொழுவார்.
| [148] |
பூவும் பொரியும் பொற்றுகளும்
பொழிந்து பணிவார் பொருவில்இவர்
மேவும் பொன்னித் திருநாடே
புவிக்குத் திலதம் எனவியப்பார்
பாவுந் துதிகள் எம்மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவுங் களிறும் நெருங்குமணி
வாயில் புகுந்து மருங்கிழிந்தார்.
| [149] |
கழறிற் றறியுந் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற் பொலியுந் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை யுடன்கொண்டு
விழவிற் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்கா சனத்தின்மிசை
நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று.
| [150] |
செம்பொற் கரக வாசநீர்
தேவி மார்கள் எடுத்தேந்த
அம்பொற் பாதந் தாம்விளக்கி
யருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கியிது
தகாதென் றருளத் தரணியில்வீழ்ந்
தெம்பெற் றிமையாற் செய்தனஈங்
கெல்லாம் இசைய வேண்டுமென.
| [151] |
பெருமாள் வேண்ட எதிர்மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த வெல்லாங் கண்டிருந்தார்
அருமா னங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததற்பின்
ஒருமா மதிவெண் குடைவேந்த
ருடனே அமுது செய்துவந்தார்.
| [152] |
சேர ருடனே திருவமுது
செய்த பின்பு கைகோட்டி
ஆரம் நறுமென் கலவைமான்
மதச்சாந் தாடை யணிமணிப்பூண்
ஈர விரைமென் மலர்ப்பணிகள்
இனைய முதலா யினவருக்கம்
சார வெடுத்து வன்தொண்டர்ச்
சாத்தி மிக்க தமக்காக்கி.
| [153] |
பாடல் ஆட ல் இன்னியங்கள்
பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள்
நெருங்கு காலந் தொறும்நிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செய்
ஆரா மங்கள் வைகுவித்ததுக்
கூட முனைப்பா டியர்கோவைக்
கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.
| [154] |
செண்டாடும் தொழின்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடும் மலர்வாவி
மருவியநீர் விளையாட்டும்
தண்டாமும் மதகும்பத்
தடமலைப்போர் சலமற்போர்
கண்டாரா விருப்பெய்தக்
காவலனார் காதல்செய்நாள்.
| [155] |
நாவலர்தம் பெருமானும்
திருவாரூர் நகராளும்
தேவர்பிரான் கழல்ஒருநாள்
மிகநினைந்த சிந்தையராய்
ஆவியைஆ ரூரானை
மறக்கலுமா மேஎன்னும்
மேவியசொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார்.
| [156] |
திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.
| [157] |
வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.
| [158] |
ஆரூரர் மொழிந்தருள
அதுகேட்ட அருட்சேரர்
பாரோடு விசும்பாட்சி
எனக்குமது பாதமலர்
தேரூரும் நெடுவீதித்
திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காதல்
நீக்கவும்அஞ் சுவன்என்றார்.
| [159] |
மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
| [160] |
மற்றவரும் பணிந்திசைந்தே
மந்திரிகள் தமையழைத்துப்
பொற்புநிறை தொன்னகரில்
இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும்பண் டாரநா
னாவருக்க மானவெலாம்
பற்பலவாம் ஆளின்மிசை
ஏற்றிவரப் பண்ணும்என.
| [161] |
ஆங்கவரும் அன்றுவரை
ஆயமா கியதனங்கள்
ஓங்கியபொன் நவமணிகள்
ஒளிர்மணிப்பூண் துகில்வருக்கம்
ஞாங்கர்நிறை விரையுறுப்பு
வருக்கமுதல் நலஞ்சிறப்பத்
தாங்குபொதி வினைஞர்மேல்
தலம்மலியக் கொண்டணைந்தார்.
| [162] |
மற்றவற்றின் பரப்பெல்லாம்
வன்றொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவிட்டு
முனைப்பாடித் திருநாடர்
பொற்பதங்கள் பணிந்தவரைத்
தொழுதெடுத்துப் புனையலங்கல்
வெற்பியர்தோ ளுறத்தழுவி
விடையளித்தார் வன்றொண்டர்.
| [163] |
ஆரூரர் அவர்தமக்கு
விடையருளி அங்ககன்று
காரூரும் மலைநாடு
கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு
நெடுங்கானும் பலகழியச்
சீரூருந் திருமுருகன்
பூண்டிவழிச் செல்கின்றார்.
| [164] |
திருமுருகன் பூண்டிஅயல்
செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள
ஒண்ணாமைக் கதுவாங்கி
பெருகருளால் தாங்கொடுக்கப்
பெறுவதற்கோ அதுஅறியோம்.
| [165] |
வென்றிமிகு பூதங்கள்
வேடர்வடி வாய்ச்சென்று
வன்றொண்டர் பண்டாரங்
கவரஅருள் வைத்தருள
அன்றினார் புரமெரித்தார்
அருளால்வேட் டுவப்படையாய்ச்
சென்றவர்தாம் வரும்வழியில்
இருபாலும் செயிர்த்தெழுந்து.
| [166] |
வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.
| [167] |
ஆரூரர் தம்பால்அவ்
வேடுவர்சென் றணையாதே
நீரூருஞ் செஞ்சடையார்
அருளினால் நீங்கஅவர்
சேர்ஊராந் திருமுருகன்
பூண்டியினிற் சென்றெய்திப்
போரூரும் மழவிடையார்
கோயிலைநா டிப்புக்கார்.
| [168] |
அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.
| [169] |
உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.
| [170] |
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
| [171] |
கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
| [172] |
நாவலர்மன் னவர்அருளால்
விடைகொண்ட நரபதியார்
ஆவியின்ஒன் றாநண்பின்
ஆரூரர் தமைநினைந்து
மாவலரு மலர்ச்சோலை
மகோதையினின் மன்னிமலைப்
பூவலயம் பொதுநீக்கி
அரசுரிமை புரிந்திருந்தார்.
| [173] |
இந்நிலைமை யுதியர்பிரான்
எம்பிரான் வன்றொண்டர்
பொன்னிவள நாடகன்று
மகோதையினின் மேற்புகுந்து
மன்னுதிருக் கயிலையினின்
மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந்
திருத்தொழில்பின் மொழிகின்றாம்.
| [174] |
மலைமலிந்த திருநாட்டு
மன்னவனார் மாகடல்போல்
சிலைமலிந்த கொடித்தானைச்
சேரலனார் கழல்போற்றி
நிலைமலிந்த மணிமாட
நீண்மறுகு நான்மறைசூழ்
கலைமலிந்த புகழ்க்காழிக்
கணநாதர் திறமுரைப்பாம்.
| [175] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.380  
கணநாத நாயனார் புராணம்
பண் - ( )
ஆழி மாநிலத் தகிலம்ஈன்
றளித்தவள் திருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந்
தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து
மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை
யவர் குலக் காவலர் கணநாதர்.
| [1] |
ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநல் திருப்பணி
யாயின நாளும்அன் பொடுசெய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
| [2] |
நல்ல நந்தன வனப்பணி
செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்ம லர்த்தொடை புனைபவர்
கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பக லும் திரு
வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.
| [3] |
இனைய பல்திருப் பணிகளில்
அணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின்
வினைவி ளங்கிட வேண்டிய
குறையெலாம் முடித்துமே விடச்செய்தே
அனைய அத்திறம் புரிதலில்
தொண்டரை யாக்கிஅன் புறுவாய்மை
மனைய றம்புரிந் தடியவர்க்
கின்புற வழிபடுந் தொழில்மிக்கார்.
| [4] |
இப்பெ ருஞ்சிறப் பெய்திய
தொண்டர்தாம் ஏறுசீர் வளர்காழி
மெய்ப்பெ ருந்திரு ஞானபோ
னகர்கழல் மேவிய விருப்பாலே
முப்பெ ரும்பொழு தருச்சனை
வழிபாடு மூளும்அன் பொடுநாளும்
ஒப்பில் காதல்கூர் உளங்களி
சிறந்திட வொழுகினார் வழுவாமல்.
| [5] |
ஆன தொண்டினில் அமர்ந்தபேர்
அன்பரும் அகலிடத் தினில்என்றும்
ஞான முண்டவர் புண்டரீ
கக்கழல் அருச்சனை நலம்பெற்றுத்
தூந றுங்கொன்றை முடியவர்
சுடர்நெடுங் கயிலைமால் வரையெய்தி
மான நற்பெருங் கணங்கட்கு
நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.
| [6] |
உலகம் உய்யநஞ் சுண்டவர்
தொண்டினில் உறுதிமெய் யுணர்வெய்தி
அலகில் தொண்டருக் கறிவளித்
தவர்திற மவனியின் மிசையாக்கும்
மலர்பெ ரும்புகழ்ப் புகலியில்
வருங்கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்றுவண் கூற்றுவ
னார்திறங் கொள்கையின் மொழிகின்றாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.390  
கூற்றுவ நாயனார் புராணம்
பண் - ( )
துன்னார் முனைகள் தோள்வலியால்
வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில்
நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம்
பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில்
முயன்றார் களந்தை முதல்வனார்.
| [1] |
அருளின் வலியால் அரசொதுங்க
அவனி யெல்லாம் அடிப்படுப்பார்
பொருளின் முடிவுங் காண்பரிய
வகையால் பொலிவித் திகல்சிறக்க
மருளுங் களிறு பாய்புரவி
மணித்தேர் படைஞர் முதல்மாற்றார்
வெருளுங் கருவி நான்குநிறை
வீரச் செருக்கின் மேலானார்.
| [2] |
வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.
| [3] |
மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.
| [4] |
ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.
| [5] |
அற்றை நாளில் இரவின்கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம்
பெறவே வேண்டும் எனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக்
கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளால் அவைதாங்கி யுலக
மெல்லாந் தனிப் புரந்தார்.
| [6] |
அம்பொன் நீடும் அம்பலத்துள்
ஆரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ்
கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர எய்தும்
பெரும்பூ சனை யியற்றி
உம்பர் மகிழ அரசளித்தே
யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.
| [7] |
காதற் பெருமைத் தொண்டின்நிலைக்
கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக்
கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை
நடைநூற் பாவில் நவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை
யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.
| [8] |
தேனும் குழலும் பிழைத்த திரு
மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும்
சடையார் தூது தருந்திருநாட்
கூனும் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றே
னேழு பிறப்பின் முடங்குகூன்.
| [9] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.400  
பொய்யடிமை யில்லாத புலவர்
பண் - ( )
செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
| [1] |
பொற்பமைந்த அரவாரும்
புரிசடையார் தமையல்லால்
சொற்பதங்கள் வாய்திறவாத்
தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினில் மெய்யடிமை
யுடையாராம் பெரும்புலவர்
| [2] |
ஆங்கவர்தம் அடியிணைகள்
தலைமேற்கொண் டவனியெலாம்
தாங்கியவெண் குடைவளவர்
குலஞ்செய்த தவம்அனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டின்
உண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர்
திருத்தொண்டு புகல்கின்றாம்.
| [3] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.410  
புகழ்ச் சோழ நாயனார்
பண் - ( )
குலகிரியின் கொடுமுடிமேல்
கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ்
நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம்
உள்ளுறையூ ராம்உறையூர்.
| [1] |
அளவில்பெரும் புகழ்நகரம்
அதனில்அணி மணிவிளக்கும்
இளவெயிலின் சுடர்ப்படலை
இரவொழிய எறிப்பனவாய்க்
கிளரொளிசேர் நெடுவானப்
பேர்யாற்றுக் கொடிகெழுவும்
வளரொளிமா ளிகைநிரைகள்
மருங்குடைய மறுகெல்லாம்.
| [2] |
நாகதலத் தும்பிலத்தும்
நானிலத்தும் நலஞ்சிறந்த
போகமனைத் தினுக்குறுப்பாம்
பொருவிறந்த வளத்தினவாய்
மாகம்நிறைந் திடமலிந்த
வரம்பில்பல பொருள்பிறங்கும்
ஆகரமொத் துளஅளவில்
ஆவணவீ திகளெல்லாம்.
| [3] |
பார்நனைய மதம்பொழிந்து
பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும்
புடையினம்என் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச்
சுடரும்நெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா
களிற்றுநிரைக் களமெல்லாம்.
| [4] |
படுமணியும் பரிச்செருக்கும்
ஒலிகிளரப் பயில்புரவி
நெடுநிரைமுன் புல்லுண்வாய்
நீர்த்தரங்க நுரைநிவப்ப
விடுசுடர்மெய் யுறையடுக்கல்
முகில்படிய விளங்குதலால்
தொடுகடல்கள் அனையபல
துரங்கசா லைகளெல்லாம்.
| [5] |
துளைக்கைஅயிரா வதக்களிறும்
துரங்கஅர சுந்திருவும்
விளைத்தஅமு துந்தருவும்
விழுமணியுங் கொடுபோத
உளைத்தகடல் இவற்றொன்று
பெறவேண்டி உம்பரூர்
வளைத்ததுபோன் றுஉளதங்கண்
மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.
| [6] |
காரேறுங் கோபுரங்கள்
கதிரேறும் மலர்ச்சோலை
தேரேறும் மணிவீதி
திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார்
மருங்கேறு மலர்க்கணைஒண்
பாரேறும் புகழ்உறந்தைப்
பதியின்வளம் பகர்வரிதால்.
| [7] |
அந்நகரில் பாரளிக்கும்
அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர்
மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன்
திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார்
புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
| [8] |
ஒருகுடைக்கீழ் மண்மகளை
உரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினால்
பார்மன்னர் பணிகேட்ப
திருமலர்த்தும் பேருலகும்
| [9] |
பிறைவளரும் செஞ்சடையார்
பேணுசிவா லயமெல்லாம்
நிறைபெரும்பூ சனைவிளங்க
நீடுதிருத் தொண்டர்தமைக்
குறையிரந்து வேண்டுவன
குறிப்பின்வழி கொடுத்தருளி
முறைபுரிந்து திருநீற்று
முதல்நெறியே பாலிப்பார்.
| [10] |
அங்கண்இனி துறையுநாள்
அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல்
தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச்
சுற்றமுடன் வந்தணைந்தார்.
| [11] |
வந்துமணி மதிற்கருவூர்
மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி
எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார்
மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி
மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
| [12] |
மாளிகைமுன் அத்தாணி
மண்டபத்தில் மணிபுனைபொன்
கோளரிஆ சனத்திருந்து
குடபுலமன் னவர்கொணர்ந்த
ஓளிநெடுங் களிற்றின்அணி
உலப்பில்பரி துலைக்கனகம்
நீளிடைவில் விலகுமணி
முதனிறையுந் திறைகண்டார்.
| [13] |
திறைகொணர்ந்த அரசர்க்குச்
செயலுரிமைத் தொழிலருளி
முறைபுரியுந் தனித்திகிரி
முறைநில்லா முரண்அரசர்
உறையரணம் உளவாகில்
தெரிந்துரைப்பீர் எனவுணர்வு
நிறைமதிநீ டமைச்சர்க்கு
மொழிந்தயுளி நிகழுநாள்.
| [14] |
சென்றுசிவ காமியார்
கொணர்திருப்பள் ளித்தாமம்
அன்றுசித றுங்களிற்றை
அறஎறித்து பாகரையுங்
கொன்றஎறி பத்தர்எதிர்
என்னையுங்கொன் றருளுமென
வென்றிவடி வாள்கொடுத்துத்
திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
| [15] |
விளங்குதிரு மதிக்குடைக்கீழ்
வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத்
தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா
அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்ப
வுறுவியப்பால் முறுவலிப்பார்.
| [16] |
ஆங்கவன்யார் என்றருள
அதிகன்அவன் அணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத்
துள்ளுறைவான் எனவுரைப்ப
ஈங்குநுமக் கெதிர்நிற்கும்
அரணுளதோ படையெழுந்தப்
பாங்கரணந் துகளாகப்
பற்றறுப்பீர் எனப்பகர்ந்தார்
| [17] |
அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக்
கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமும் நெடுங்கிரியும்
பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற
வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
| [18] |
வளவனார் பெருஞ்சேனை
வஞ்சிமலர் மிலைந்தேற்ப
அளவில்அர ணக்குறும்பில்
அதிகர்கோன் அடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி
யுயர்காஞ்சி மலைந்தேற்ப
கிளர்கடல்கள் இரண்டென்ன
இருபடையுங் கிடைத்தனவால்.
| [19] |
கயமொடு கயம்எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியலிட மிக்கதே.
| [20] |
மலையொடு மலைகள் மலைந்தென
அலைமத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறு
கொலைமத கரிகொலை யுற்றவே.
| [21] |
சூறை மாருதம் ஒத்தெதிர்
ஏறு பாய்பரி வித்தகர்
வேறு வேறு தலைப்பெய்து
சீறி யாவி செகுத்தனர்.
| [22] |
மண்டு போரின் மலைப்பவர்
துண்ட மாயிட வுற்றுஎதிர்
கண்ட ராவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.
| [23] |
வீடி னாருட லிற்பொழி
நீடு வார்குரு திப்புனல்
ஓடும் யாறென வொத்தது
கோடு போல்வ பிணக்குவை.
| [24] |
வானி லாவு கருங்கொடி
மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம்
ஆன வூணொ டெழுந்தவே.
| [25] |
வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
| [26] |
வடிவேல் அதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.
| [27] |
முற்றும் பொருசே னைமுனைத் தலையில்
கல்திண் புரிசைப் பதிகட் டழியப்
பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்
சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.
| [28] |
மாறுற் றவிறற் படைவாள் அதிகன்
ஊறுற் றபெரும் படைநூ ழில்படப்
பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு
ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
| [29] |
அதிகன் படைபோர் பொருதற் றதலைப்
பொதியின் குவையெண் ணிலபோ யினபின்
நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா
எதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.
| [30] |
அரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்
இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்
முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்
தரணித் தலைவன் கழல்சார் வுறவே.
| [31] |
மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
| [32] |
மண்ணுக் குயிராம் எனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
| [33] |
. கண்டபொழு தேநடுங்கி
மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்துடன்
குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற்
சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர்
பொழிந்திழியப் புரவலனார்.
| [34] |
முரசுடைத்திண் படைகொடுபோய்
முதலமைச்சர் முனைமுருக்கி
உரைசிறக்கும் புகழ்வென்றி
ஒன்றொழிய வொன்றாமல்
திரைசரித்த கடலுலகில்
திருநீற்றி நெறிபுரந்தியான்
அரசளித்த படிசால
அழகிதென அழிந்தயர்வார்.
| [35] |
தார்தாங்கிக் கடன்முடித்த
சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமான்
நெறிதாங்கண் டவரானார்
சீர்தாங்கும் இவர்வேணிச்
சிரந்தாங்கி வரக்கண்டும்
பார் தாங்க இருந்தேனோ
பழிதாங்கு வேன்என்றார்.
| [36] |
என்றருளிச் செய்தருளி
இதற்கிசையும் படிதுணிவார்
நின்றநெறி யமைச்சர்க்கு
நீள்நிலங்காத் தரசளித்து
மன்றில்நடம் புரிவார்தம்
வழித்தொண்டின் வழிநிற்ப
வென்றிமுடி என்குமரன்
தனைப்புனைவீர் எனவிதித்தார்.
| [37] |
அம்மாற்றங் கேட்டழியும்
அமைச்சரையும் இடரகற்றிக்
கைம்மாற்றுஞ் செயல்தாமே
கடனாற்றுங் கருத்துடையார்
செம்மார்க்கந் தலைநின்று
செந்தீமுன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றுந் திருநீற்றுப்
புனைகோலத் தினிற்பொலிந்தார்.
| [38] |
கண்டசடைச் சிரத்தினையோர்
கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக்
குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத்
தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை
மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
| [39] |
புக்கபொழு தலர்மாரி
புவிநிறையப் பொழிந்திழிய
மிக்கபெரு மங்கலதூ
ரியம்விசும்பில் முழக்கெடுப்பச்
செக்கர்நெடுஞ் சடைமுடியார்
சிலம்பலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழற்கீழ்
ஆராமை யமர்ந்திருந்தார்.
| [40] |
முரசங்கொள் கடற்றானை
மூவேந்தர் தங்களின்முன்
பிரசங்கொள் நறுந்தொடையல்
புகழ்ச்சோழர் பெருமையினைப்
பரசுங்குற் றேவலினால்
அவர்பாதம் பணிந்தேத்தி
நரசிங்க முனையர்திறம்
நாமறிந்த படியுரைப்பாம்.
| [41] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.420  
நரசிங்க முனையரைய நாயனார்
பண் - ( )
கோடாத நெறிவிளங்கும்
குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
நரசிங்க முனையரையர்.
| [1] |
இம்முனையர் பெருந்தகையார்
இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே
அரும்பெரும்பேறு எனஅடைவார்.
| [2] |
சினவிடையார் கோயில்தொறும்
திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க
வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல்
அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக்
கடனாற்றிச் செல்கின்றார்.
| [3] |
ஆறணிந்த சடைமுடியார்க்
காதிரைநாள் தொறும்என்றும்
வேறுநிறை வழிபாடு
விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந்
தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித்
தின்னமுதும் நுகர்விப்பார்.
| [4] |
ஆனசெயல் முறைபுரிவார்
ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு
விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை
வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய்
ஒருவர்நீ றணிந்தணைந்தார்.
| [5] |
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.
| [6] |
சீலமில ரேயெனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த
படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய
மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
| [7] |
இவ்வகையே திருத்தொண்டின்
அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித்
திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார்
பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின்
மீளாத நிலைபெற்றார்.
| [8] |
விடநாகம் அணிந்தபிரான்
மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க
முனையர்பிரான் கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத்
தனஞ்சொரியுங் கலஞ்சேரும்
கடல்நாகை அதிபத்தர்
கடல்நாகைக் கவினுரைப்பாம்.
| [9] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.430  
அதிபத்த நாயனார் புராணம்
பண் - ( )
மன்னி நீடிய செங்கதி
ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந்
திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப்
பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட்
டினத்திரு நகரம்.
| [1] |
தாம நித்திலக் கோவைகள்
சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந்
தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக்
கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென
ஏறுவ மருங்கு.
| [2] |
பெருமை யில்செறி பேரொலி
பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட
மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும்
பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில்
சொரிவதாங் கலத்தால்.
| [3] |
நீடு தொல்புகழ் நிலம்பதி
னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள்
மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன்
குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ்
வணிகிளர் மூதூர்.
| [4] |
அந்நெ டுந்திரு நகர்மருங்
கலைகடல் விளிம்பில்
பன்னெ டுந்திரை நுரைதவழ்
பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத்
துணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது
தடநுளைப் பாடி.
| [5] |
புயல ளப்பில வெனவலை
புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப்
பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில்
வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர்
கருநெடுங் கண்கள்.
| [6] |
உணங்கல் மீன்கவர் வுறுநசைக்
குருகுடன் அணைந்த
கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்
புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று
இழியல மருளும்.
| [7] |
வலைநெ டுந்தொடர் வடம்புடை
வலிப்பவர் ஒலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப்
பவர்விளி ஒலியும்
தலைசி றந்தவெள் வளைசொரி
பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கடல் அதிரொலிக்
கெதிரொலி யனைய.
| [8] |
அனைய தாகிய அந்நுளைப்
பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங்
குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர்
அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர்
எனநிகழ் மேலோர்.
| [9] |
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்
தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்
பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன்
படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில
வுடையராய் உயர்வார்.
| [10] |
முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்
தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
புடன்என்றும் விருப்பால்.
| [11] |
வாகு சேர்வலை நாள்ஒன்றில்
மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற்
கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள்
அடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையில்
படவிட்டு வந்தார்.
| [12] |
மீன்வி லைப்பெரு குணவினில்
மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி
அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்
பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற்
கெனவிட்டு மகிழ்ந்தார்.
| [13] |
சால நாள்கள்இப் படிவரத்
தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
பெனும்அமு துண்பார்.
| [14] |
ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்.
| [15] |
வாங்கு நீள்வலை அலைகடற்
கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
படுத்தனம் என்றார்.
| [16] |
என்று மற்றுளோர் இயம்பவும்
ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி
பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா
ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத்
திரையொடுந் திரித்தார்.
| [17] |
அகில லோகமும் பொருள்முதற்
றாம்எனும் அளவில்
புகலு மப்பெரும் பற்றினைப்
புரையற எறிந்த
இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்
இறைவர்தாம் விடைமேல்
முகில்வி சும்பிடை யணைந்தனர்
பொழிந்தனர் முகைப்பூ.
| [18] |
பஞ்ச நாதமும் எழுந்தன
அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை
யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர்
சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங்
குறத்தலை யளித்தார்.
| [19] |
தம்ம றம்புரி மரபினில்
தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர்
விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள்
முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர்
திருத்தொண்டு பகர்வாம்.
| [20] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.440  
கலிக்கம்ப நாயனார் புராணம்
பண் - ( )
உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்.
| [1] |
மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்.
| [2] |
ஆன அன்பர் தாம்என்றும்
அரனார் அன்பர்க் கமுதுசெய
மேன்மை விளங்கு போனகமும்
விரும்பு கறிநெய் தயிர்தீம்பால்
தேனின் இனிய கனிகட்டி
திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன
எல்லாம் இன்ப முறவளிப்பார்.
| [3] |
அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்.
| [4] |
திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.
| [5] |
முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்.
| [6] |
கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்.
| [7] |
வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்.
| [8] |
விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.
| [9] |
ஓத மலிநீர் விடமுண்டார்
அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.450  
கலிய நாயனார் புராணம்
பண் - ( )
பேருலகில் ஓங்குபுகழ்ப்
பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை
நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக்
கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி
சிறந்ததிரு வொற்றியூர்.
| [1] |
பீடுகெழு பெருந்தெருவும்
புத்தருடன் பீலிஅமண்
வேடமுடை யவர்பொருள்போல்
ஆகாச வெளிமறைக்கும்
ஆடிகொடி மணிநெடுமா
ளிகைநிரைகள் அலைகமுகின்
காடனைய கடல்படப்பை
யெனவிளங்குங் கவின்காட்டும்.
| [2] |
பன்னுதிருப் பதிகஇசைப்
பாட்டுஓவா மண்டபங்கள்
அன்னநடை மடவார்கள்
ஆட்டு ஓவா அணியரங்கு
பன்முறைதூ ரியமுழங்கும்
விழவுஓவா பயில்வீதி
செந்நெல்லடி சிற்பிறங்கல்
உணவுஓவா திருமடங்கள்.
| [3] |
கெழுமலர்மா தவிபுன்னை
கிளைஞாழல் தளையவிழும்
கொழுமுகைய சண்பகங்கள்
குளிர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீரும்
கமழமலர் முருகுயிர்க்கும்
செழுநிலவின் துகளனைய
மணற்பரப்புந் திருப்பரப்பு.
| [4] |
எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.
| [5] |
அக்குலத்தின் செய்தவத்தால்
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார்
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத்
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
| [6] |
எல்லையில்பல் கோடிதனத்
திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து
திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம்
கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும்
திருவிளக்கின் அணிவிளைத்தார்.
| [7] |
எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.
| [8] |
திருமலிசெல் வத்துழனி
தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில்
பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால்
எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால்
தமதுதிருப் பணிசெய்வார்.
| [9] |
வளமுடையார் பால்எண்ணெய்
கொடுபோய்மா றிக்கூலி
கொளமுயலும் செய்கையும்மற்
றவர்கொடா மையின்மாறத்
தளருமனம் உடையவர்தாம்
சக்கரஎந் திரம்புரியும்
களனில்வரும் பணிசெய்து
பெறுங்கூலி காதலித்தார்.
| [10] |
செக்குநிறை எள்ளாட்டிப்
பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும்
பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி
தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார்
விழுத்தொண்டு விளக்கிட்டார்.
| [11] |
அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.
| [12] |
மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார்.
| [13] |
பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.
| [14] |
திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.
| [15] |
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
| [16] |
தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
| [17] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.460  
சத்தி நாயனார் புராணம்
பண் - ( )
களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
| [1] |
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.
| [2] |
அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
| [3] |
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
| [4] |
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
| [5] |
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.
| [6] |
நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.470  
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பண் - ( )
வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.
| [1] |
திருமலியும் புகழ்விளங்கச்
சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப்
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத்
தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க
அரசளிக்கும் அந்நாளில்.
| [2] |
மன்னவரும் பணிசெய்ய
வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பார் ஆயினார்.
| [3] |
தொண்டுரிமை புரக்கின்றார்
சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும்
ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின்
கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா
ஓர்ஒன்றா வழுத்துவார்.
| [4] |
பெருத்தெழுகா தலில்வணங்கிப்
பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல்
புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து
நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின்
வெண்பாமென் மலர்புனைந்தார்.
| [5] |
அவ்வகையால் அருள்பெற்றங்கு
அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான்
கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து
திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும்
இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.
| [6] |
இந்நெறியால் அரனடியார்
இன்பமுற இசைந்தபணி
பன்னெடுநாள் ஆற்றியபின்
பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து
வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக்
காடவர் ஐடிகளார்.
| [7] |
பையரவ மணியாரம்
அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்
அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார்
கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர்
திருத்தொண்டு விரித்துரைப்பாம்.
| [8] |
உளத்திலொரு துளக்கம் இலோம்
உலகுய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர்தரு
கனகம் ஆற்றினிலிட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும்
வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின்
குழிவாய்நின்று எனையெடுத்தார்.
| [9] |
Back to Top
சேக்கிழார் கறைக் கண்டன் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.480  
கணம்புல்ல நாயனார் புராணம்
பண் - ( )
திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.
| [1] |
அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.
| [2] |
தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச்
சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.
| [3] |
தில்லைநகர் மணிமன்றுள்
ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி
அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச்
சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி
எரித்துவரும் அந்நாளில்.
| [4] |
ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.
| [5] |
இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.
| [6] |
முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.
| [7] |
தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
| [8] |
மூரியார் கலியுலகில்
முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
| [9] |
Back to Top
சேக்கிழார் கறைக் கண்டன் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.490  
காரிநாயனார் புராணம்
பண் - ( )
மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
| [1] |
அங்கவர்தாம் மகிழும்வகை
அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால்
பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும்
தானங்கள் பலசமைத்தார்.
| [2] |
யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.
| [3] |
ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.
| [4] |
வேரியார் மலர்க்கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி
அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை
வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம்.
| [5] |
Back to Top
சேக்கிழார் கறைக் கண்டன் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.500  
நின்ற சீர் நெடுமாற
பண் - ( )
தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.
| [1] |
அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச்
செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச்
சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில்
புரவலனார் பொலிகின்றார்.
| [2] |
ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.
| [3] |
எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.
| [4] |
வயப்பரியின் களிப்பொலியும்
மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும்
கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின்
மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று
தாம்விடுக்கும் படிதயங்க.
| [5] |
தீயுமிழும் படைவழங்கும்
செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக்
குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள்
பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய
உணவளித்த தெனப்பிறங்க.
| [6] |
இனையகடுஞ் சமர்விளைய
இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து
முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை
பூழியர்வேம் புடன்புனைந்து.
| [7] |
வளவர்பிரான் திருமகளார்
மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந்
தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க்
கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி
அருள்பெருக அரசளித்தார்.
| [8] |
திரைசெய்கட லுலகின்கண்
திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி
ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம்
அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத்
தின்புற்றுப் பணிந்திருந்தார்.
| [9] |
பொன்மதில்சூழ் புகலிகா
வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார்
செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம்
பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் கறைக் கண்டன் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.510  
வாயிலார் நாயனார் புராணம்
பண் - ( )
சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.
| [1] |
நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
| [2] |
கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றும்முத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமும்
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.
| [3] |
தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.
| [4] |
வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.
| [5] |
மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.
| [6] |
வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதல் தோன்றியே
நாய னார்திருத் தொண்டில் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.
| [7] |
மறவாமை யால்அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும்
ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம்
எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும்
அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.
| [8] |
அகமலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமைநாளும்
நிகழவரும் அன்பினால்
நிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாட்செய்து
சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்.
| [9] |
நீராருஞ் சடையாரை
நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால்
அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற
பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர்
முனையடுவார் திறம்உரைப்பாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் கறைக் கண்டன் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.520  
முனையடுவார் நாயனார் புராணம்
பண் - ( )
மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.
| [1] |
விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார்
கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில்
உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு
மாறா தளிக்கும் வாய்மையார்.
| [2] |
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்
வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால்
அதனை நடுவு நிலைவைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால்
கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த
பொன்னுங் கொண்டு மன்னுவார்.
| [3] |
இன்ன வகையால் பெற்றநிதி
எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக்
கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால்
கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா
வழித்தொண் டாற்றி வைகினார்
| [4] |
மற்றிந் நிலைமை பன்னெடுநாள்
வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து
பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார்
என்னு நாமம் முன்னுடையார்.
| [5] |
யாவர் எனினும் இகலெறிந்தே
ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார்
விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
| [6] |
செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும் குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
| [7] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.530  
கழற்சிங்க நாயனார் புராணம்
பண் - ( )
படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
கோக்கழற் சிங்கர் என்பார்.
| [1] |
காடவர் குரிசி லாராம்
கழற்பெருஞ் சிங்க னார்தாம்
ஆடக மேரு வில்லார்
அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய
வடபுலங் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக
நன்னெறி வளர்க்கும் நாளில்.
| [2] |
குவலயத் தரனார் மேவும்
கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து
தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும்
தென்திரு வாருர் எய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங்
கோயிலுள் பணியப் புக்கார்.
| [3] |
அரசியல் ஆயத் தோடும்
அங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர்
முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்தல்
உரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத்
தொருதனித் தேவி மேவி.
| [4] |
கோயிலை வலங்கொண்டு அங்கண்
குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள்
தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம்
தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு
விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
| [5] |
புதுமலர் மோந்த போதில்
செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள்
எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று
கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன்
மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
| [6] |
வார்ந்திழி குருதி சோர
மலர்க்கருங் குழலும் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை
மயிலெனத் துளங்கி மண்ணில்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி
புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு
அரசரும் அணையவந்தார்.
| [7] |
வந்தணை வுற்ற மன்னர்
மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று
பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை
நோக்கிஇவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே
யார்செய்தார் என்னும் எல்லை.
| [8] |
அந்நிலை யணைய வந்து
செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப்
புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி
மற்றிதற் குற்ற தண்டம்
தன்னைஅவ் வடைவே யன்றோ
தடிந்திடத் தகுவ தென்று.
| [9] |
கட்டிய வுடைவாள் தன்னை
உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம்
முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்
பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை
வளையொடுந் துணித்தா ரன்றே.
| [10] |
ஒருதனித் தேவி செங்கை
உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின்
பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும்
இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச
மலர்மழை பொழிந்த தன்றே.
| [11] |
அரியஅத் திருத்தொண் டாற்றும்
அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி
மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே
செய்யசே வடியி னீழல்
பெருகிய வுரிமை யாகும்
பேரருள் எய்தி னாரே.
| [12] |
வையகம் நிகழக் காதல்
மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர்
கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர்
இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர்
செய்வினை விளம்ப லுற்றாம்.
| [13] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.540  
இடங்கழி நாயனார் புராணம்
பண் - ( )
எழுந்திரைமா கடலாடை
இருநிலமாம் மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத்
தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த
பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு
குயில்நாடுங் கோனாடு.
| [1] |
முருகுறுசெங் கமலமது
மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் திரைவாவிப்
பயில்பெடையோடு இரையருந்தி
வருகுறுதண்து ளிவாடை
மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக்
கொடிநகரங் கொடும்பாளூர்.
| [2] |
அந் நகரத் தினில்இருக்கு
வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து
மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால்
பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன்
புகழ்மரபிற் குடிமுதலோர்.
| [3] |
இடங்கழியார் எனவுலகில்
ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார்
அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும்
உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால்
தொண்டர்வேண் டியசெய்வார்.
| [4] |
சைவநெறி வைதிகத்தின்
தருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார்
மன்னியகோ யில்களெங்கும்
மெய்வழிபாட்டு அர்ச்சனைகள்
விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக
முறைபுரியும் அந்நாளில்.
| [5] |
சங்கரன்தன்அடி யாருக்கு
அமுதளிக்கும் தவமுடையார்
அங்கொருவர் அடியவருக்கு
அமுதொருநாள் ஆக்கவுடன்
எங்குமொரு செயல்காணாது
எய்தியசெய் தொழின்முட்டப்
பொங்கியெழும் பெருவிருப்பாற்
| [6] |
அரசரவர் பண்டாரத்
தந்நாட்டின் நெற்கூட்டில்
நிரைசெறிந்த புரிபலவா
நிலைக்கொட்ட காரத்தில்
புரைசெறிநள் ளிருளின்கண்
புக்குமுகந்து எடுப்பவரை
முரசெறிகா வலர்கண்டு
பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.
| [7] |
மெய்த்தவரைக் கண்டிருக்கும்
வேல்மன்னர் வினவுதலும்
அத்தன்அடி யாரையான்
அமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தேனென்று
இயம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட்டு இவரன்றோ
பண்டாரம் எனக்கென்பார்.
| [8] |
நிறையழிந்த வுள்ளத்தால்
நெற்பண்டா ரமும்அன்றிக்
குறைவில்நிதிப் பண்டார
மானவெலாங் கொள்ளைமுகந்
திறைவனடி யார்கவர்ந்து
கொள்கவென எம்மருங்கும்
பறையறையப் பண்ணுவித்தார்
படைத்தநிதிப் பயன்கொள்வார்.
| [9] |
எண்ணில்பெரும் பண்டாரம்
ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
மலரடியின் நிழல்சேர்ந்தார்.
| [10] |
மைதழையும் மணிமிடற்றார்
வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்துபெருஞ் சிறப்புடைய
இடங்கழியார் கழல்வணங்கி
மெய்தருவார் நெறியன்றி
வேறொன்றும் மேலறியாச்
செய்தவராம் செருத்துணையார்
திருத்தொண்டின் செயல் மொழிவாம்.
| [11] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.550  
செருத்துணை நாயனார் புராணம்
பண் - ( )
உள்ளும் புறம்பும் குலமரபின்
ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர்
மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
| [1] |
சீரின் விளங்கும் அப்பதியில்
திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை
நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ்
மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார்
பரவுந் தொண்டின் நெறிநின்றார்.
| [2] |
ஆன அன்பர் திருவாரூர்
ஆழித் தேர்வித் தகர்கோயில்
ஞான முனிவர் இமையவர்கள்
நெருங்கு நலஞ்சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள்
செய்து காலங் களின்வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார்
தொண்டு பொலியக் குலவுநாள்.
| [3] |
உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்
சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து
மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு
வந்து பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத்
தெழுந்த வேகத் தாலெய்தி.
| [4] |
கடிது முட்டி மற்றவள்தன்
கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்
டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
| [5] |
அடுத்த திருத்தொண் டுலகறியச்
செய்த அடலே றனையவர்தாம்
தொடுத்த தாம மலரிதழி
முடியார் அடிமைத் தொண்டுகடல்
உடுத்த உலகின் நிகழச்செய்
துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே
இறவா வின்பம் எய்தினார்.
| [6] |
செங்கண் விடையார் திருமுன்றில்
விழுந்த திருப்பள் ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு
அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணிமூக் கரிந்தசெருத்
துணையார் தூய கழல்இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார்
உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.560  
புகழ்த்துணை நாயனார் புராணம்
பண் - ( )
செருவிலிபுத் தூர்மன்னும்
சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் ஆளிதனக்கு
அகத்தடிமை யாம்அதனுக்கு
ஒருவர்தமை நிகரில்லார்
உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு
புகழ்த்துணையார் எனும்பெயரார்.
| [1] |
தங்கோனைத் தவத்தாலே
தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து
வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன்
அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு
குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
| [2] |
மாலயனுக் கரியானை
மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால்
வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு
குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார்
முடிமீது வீழ்த்தயர்வார்.
| [3] |
சங்கரன்றன் அருளாலோர்
துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்கண்
அருள்புரிவான் அருந்துணவு
மங்கியநாட் கழிவளவும்
வைப்பதுநித் தமும்மொருகா
சிங்குனக்கு நாமென்ன
இடர்நீங்கி யெழுந்திருந்தார்.
| [4] |
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின்
கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும்
மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால்
உணங்கும் உடம்புடன் உவந்து
முற்றுணர்வு தலை நிரம்ப முகம்
மலர்ந்து களி கூர்ந்தார்.
| [5] |
அந்நாள்போல் எந்நாளும்
அளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந்
திறுத்தநாள் நீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு
மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டில் அமரர்தொழப்
புனிதர்அடி நிழற்சேர்ந்தார்.
| [6] |
பந்தணையும் மெல்விரலாள்
பாகத்தர் திருப்பாதம்
வந்தணையும் மனத்துணையார்
புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச்
சந்தணியும் மணிப்புயத்துத்
தனிவீர ராந்தலைவர்
கொந்தணையும் மலர்அலங்கல்
கோட்புலியார் செயல்உரைப்பாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் கடல் சூழ்ந்த சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.570  
கோட்புலி நாயனார் புராணம்
பண் - ( )
நலம்பெருகுஞ் சோணாட்டு
நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார்
கோட்புலியார் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர்
தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப்
போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.
| [1] |
மன்னவன்பால் பெறுஞ்சிறப்பின்
வளமெல்லாம் மதிஅணியும்
பிஞ்ஞகர்தங் கோயில்தொறுந்
திருவமுதின் படிபெருகச்
செந்நெல்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே
பன்னெடுநாள் செய்தொழுகும் பாங்குபுரிந்து ஓங்குநாள்.
| [2] |
வேந்தன் ஏவலிற்பகைஞர்
வெம்முனைமேற் செல்கின்றார்
பாந்தள்பூண் எனஅணிந்தார்
தமக்கமுது படியாக
ஏந்தலார் தாம்எய்தும்
அளவும்வேண் டும்செந்நெல்
வாய்ந்தகூடு அவைகட்டி
வழிக்கொள்வார் மொழிகின்றார்.
| [3] |
தந்தமர்கள் ஆயினார்
தமக்கெல்லாந் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்கு
ஏற்றியநெல் இவையழிக்கச்
சிந்தையால் தாம்நினைவார்
திருவிரையாக் கலியென்று
வந்தனையால் உரைத்தகன்றார்
மன்னவன்மாற் றார்முனைமேல்.
| [4] |
மற்றவர்தாம் போயினபின்
சிலநாளில் வற்காலம்
உற்றலும்அச் சுற்றத்தார்
உணவின்றி இறப்பதனில்
பெற்றமுயர்த் தவர்அமுது
படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போம்
எனக்கூடு குலைத்தழிந்தார்.
| [5] |
மன்னவன்தன் தெம்முனையில்
வினைவாய்த்து மற்றவன்பால்
நன்னிதியின் குவைபெற்ற
நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரில் தமர்செய்த
பிழையறிந்த தறியாமே
துன்னினார் சுற்றமெலாம்
துணிப்பனெனுந் துணிவினராய்.
| [6] |
எதிர்கொண்ட தமர்க்கெல்லாம்
இனியமொழி பலமொழிந்து
மதிதங்கு சுடர்மணிமா
ளிகையின்கண் வந்தணைந்து
பதிகொண்ட சுற்றத்தார்க்
கெல்லாம்பைந் துகில்நிதியம்
அதிகந்தந் தளிப்பதனுக்
கழைமின்கள் என்றுரைத்தார்.
| [7] |
எல்லோரும் புகுந்ததற்பின்
இருநிதியம் அளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன்
கடைகாக்க நாதன்தன்
வல்லாணை மறுத்தமுது
படியழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ
எனக்கனன்று கொலைபுரிவார்.
| [8] |
தந்தையார் தாயார்மற்
றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார்
பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற்று
உண்ணவிசைந் தார்களையும்
சிந்தவாள் கொடுதுணித்தார்
தீவினையின்பயன் துணிப்பார்.
| [9] |
பின்னங்குப் பிழைத்ததொரு
பிள்ளையைத்தம் பெயரோன்அவ்
அன்னந்துய்த் திலதுகுடிக்
கொருபுதல்வ னருளுமென
இந்நெல்லுண் டாள்முலைப்பால்
உண்டதுஎன எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால்
இருதுணியாய் விழவேற்றார்.
| [10] |
அந்நிலையே சிவபெருமான்
அன்பர்எதிர் வெளியேநின்று
உன்னுடைய கைவாளால்
உறுபாசம் அறுத்தகிளை
பொன்னுலகின் மேலுலகம்
புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடன்அணைகஎன்
றுஏவியெழுந் தருளினார்.
| [11] |
அத்தனாய் அன்னையாய்
ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள்
அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார்
அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார்தம்
பரிசினையாம் பகருவாம்.
| [12] |
மேவரிய பெருந்தவம் யான்
முன்பு விளைத் தன வென்னோ
யாவது மோர் பெருளல்லா
என் மனத்து மன்றியே
நாவலர் காவலர் பெருகு
| [13] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.580  
பத்தாராய்ப் பணிவார் புராணம்
பண் - ( )
ஈசருக்கே அன்பானார்
யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
இனியனவே பேசுவார்.
| [1] |
தாவரிய அன்பினால்
சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்
படிகண்டால் இனிதுவந்து
பாவனையால் நோக்கினால்
பலர்காணப் பயன்பெறுவார்
மேவரிய அன்பினால்
மேலவர்க்கும் மேலானார்.
| [2] |
அங்கணனை அடியாரை
ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன்
தாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான்
பாம்பணையான் என்றிவர்கள்
தங்களுக்கும் சார்வரிய
சரண்சாருந் தவமுடையார்.
| [3] |
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின்
பாலாக எனும்பரிவால்
காதார்வெண் குழையவர்க்காம்
பணிசெய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர்புகழ்க்குப்
புவனமெலாம் போதாவால்.
| [4] |
சங்கரனைச் சார்ந்தகதை
தான்கேட்குந் தன்மையராய்
அங்கணனை மிகவிரும்பி
அயலறியா அன்பினால்
கங்கைநதி மதியிதழி
காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ்
சேர்வதனுக் குரியார்கள்.
| [5] |
ஈசனையே பணிந்துருகி
இன்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக்
கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங்
கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித்
திடுவார்மெய்க் குணமிக்கார்.
| [6] |
நின்றாலும் இருந்தாலும்
கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும்
விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம்
ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார்
தொண்டராம் குணமிக்கார்.
| [7] |
சங்கரனுக் காளான
தவங்காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன்துய்ப்பார்
படிவிளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர்
ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கிஎழுஞ் சித்தமுடன்
பத்தராய்ப் போற்றுவார். ]" 59
| [8] |
தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.
]" 60
| [9] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.590  
பரமனையே பாடுவார் புராணம்
பண் - ( )
புரமூன்றும் செற்றானைப்
பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை
உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல்
கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார்
தம்பெருமை பாடுவாம்.
| [1] |
தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்.
| [2] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.600  
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
பண் - ( )
காரணபங் கயம்ஐந்தின்
கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி
பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த
சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர்
அடித்தொண்டின் வழியடைந்தார்.
| [1] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.610  
திருவாரூர் பிறந்தார் புராணம்
பண் - ( )
அருவாகி உருவாகி
அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள்
மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள்
திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால்
உரைக்கலாந் தகைமையதோ.
| [1] |
திருக்கயிலை வீற்றிருந்த
சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப்
பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கியஐம் பொறியடக்கி
மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கியநெஞ் சுடையவர்க்கே
அணித்தாகும் உயர்நெறியே.
| [2] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.620  
முப்போதும் திருமேனி தீண்டுவார்
பண் - ( )
எப்போதும் இனியபிரான்
இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த
விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும்
ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார்
முதற்சைவ ராமுனிவர்.
| [1] |
தெரிந்துணரின் முப்போதும்
செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிஅர்ச் சனைகள்சிவ
வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை
யாம்புகழும் பெற்றியதோ.
| [2] |
நாரணற்கும் நான்முகற்கும் அறிய வொண்ணா
நாதனைஎம் பெருமானை ஞான மான
ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் மாகும்
அண்ணலைஎண் ணியகாலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறுபூசி வாழும்
புனிதர்செயல் அறிந்தவா புகல லுற்றேன்.
| [3] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.630  
முழுநீறு பூசிய முனிவர்
பண் - ( )
சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.
| [1] |
Back to Top
சேக்கிழார் பத்தராய்ப் பணிவார் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.640  
அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
பண் - ( )
மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.
| [1] |
செற்றார்தம் புரம்எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட
தொகு நிதியின் பரப்பெல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலைஉமையாள் பாகன் பூத
முதற் கணமேயுடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ அடியேன் முன்னைப்
பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.
| [2] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.650  
பூசலார் நாயனார் புராணம்
பண் - ( )
அன்றினார் புரம் எரித்தார்க்
காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே
நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை
வினை யுரைக்க லுற்றாம்.
| [1] |
உலகினில் ஒழுக்கம் என்றும்
உயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க
நான்மறை விளங்கும் மூதூர்
குலமுதற் சீலமென்றுங் குறை
விலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி
நிகழ்திரு நின்ற வூராம்.
| [2] |
அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந்
தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு
வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக்
கலையுணர் பொலிவின் மிக்கார்.
| [3] |
அடுப்பது சிவன்பால் அன்பர்க்
காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர்
மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
இருநிதி இன்மை யெண்ணார்.
| [4] |
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி
என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
| [5] |
சாதனத் தோடு தச்சர்
தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய்
நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால்
அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங்
கண்படா தெடுக்க லுற்றார்.
| [6] |
அடிமுதல் உபான மாதி
யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற
மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும்
முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில்
நிரம்பிட நினைவால் செய்தார்.
| [7] |
தூபியும் நட்டு மிக்க
சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு
கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க
விதித்தநாள் சாரும் நாளில்.
| [8] |
காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப்
பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத்
தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
இரவிடைக் கனவில் எய்தி.
| [9] |
நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து
நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்.
| [10] |
தொண்டரை விளக்கத் தூயோன்
அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும்
என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான்.
| [11] |
அப்பதி யணைந்து பூசல்
அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
வருகஎன் றுரைத்தான் வேந்தன்.
| [12] |
பூசுர ரெல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான்.
| [13] |
தொண்டரைச் சென்று கண்ட
மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த
எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித்
தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன்
கண்ணுதல் அருள்பெற் றென்றான்.
| [14] |
மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.
| [15] |
அரசனும் அதனைக் கேட்டங்
கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
மீண்டுதன் மூதூர் புக்கான்.
| [16] |
அன்பரும் அமைத்த சிந்தை
ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத்
தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம்
பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும்
பொற்கழல் நீழல் புக்கார்.
| [17] |
நீண்டசெஞ் சடையி னார்க்கு
நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத
பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம்
பாதங்கள் பரவ லுற்றேன்.
| [18] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.660  
மங்கையர்க்கரசியார் புராணம்
பண் - ( )
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
| [1] |
பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறும் தவத்தி னாரைச்
செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை
| [2] |
வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளுங்கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.
| [3] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.670  
நேச நாயனார் புராணம்
பண் - ( )
சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.
| [1] |
அந்நக ரதனில் வாழ்வார்
அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள்
மரபின் மேம்பாடு பெற்றார்
பன்னாகா பரணற் கன்பர்
பணிதலைக் கொண்டு பாதம்
சென்னியிற் கொண்டு போற்றுந்
| [2] |
ஆங்கவர் மனத்தின் செய்கை
யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை
யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை
தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும்
பழுதில்கோ வணமும் நெய்வார்.
| [3] |
உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்.
| [4] |
கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்.
| [5] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.680  
கோச்செங்கட் சோழ நாயனார்
பண் - ( )
துலையிற் புறவின் நிறையளித்த
சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந்
தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த்
தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த
நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
| [1] |
அப்பூங் கானில் வெண்ணாவல்
அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக்
கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட் டொழுகுமால்.
| [2] |
ஆன செயலால் திருவானைக்
காவென்று அதற்குப் பெயராக
ஞான முடைய ஒருசிலந்தி
நம்பர் செம்பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகுஉதிரா
வண்ணங் கலந்த வாய்நூலால்
மேல்நல் திருமேற் கட்டியென
விரிந்து செறியப் புரிந்துளதால்.
| [3] |
நன்றும் இழைத்த சிலம்பிவலைப்
பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என்
றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற்
றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள்
அடல்வெள் ளானை அழித்ததால்.
| [4] |
எம்பி ரான்தன் மேனியின்மேல்
சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம்
அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில்
புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின்
மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.
| [5] |
தரையிற் புடைப்பக் கைப்புக்க
சிலம்பி தானும் உயிர்நீங்க
மறையிற் பொருளுந் தருமாற்றான்
மதயா னைக்கும் வரங்கொடுத்து
முறையில் சிலம்பி தனைச்சோழர்
குலத்து வந்து முன்னுதித்து
நிறையிற் புவனங் காத்தளிக்க
அருள்செய் தருள நிலத்தின்கண்.
| [6] |
தொன்மைதரு சோழர்குலத்
தரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி
கமலவதி யுடன்சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை
மன்றாடு மலர்ப்பாதம்
சென்னியுறப் பணிந்தேத்தித்
திருப்படிக்கீழ் வழிபடுநாள்.
| [7] |
மக்கட்பே றின்மையினால்
மாதேவி வரம்வேண்டச்
செக்கர்நெடுஞ் சடைக்கூத்தர்
திருவுள்ளஞ் செய்தலினால்
மிக்கதிருப் பணிசெய்த
சிலம்பிகுல வேந்துமகிழ்
அக்கமல வதிவயிற்றின்
அணிமகவாய் வந்தடைய.
| [8] |
கழையார் தோளி கமலவதி
தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த
வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப்
பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும்
அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.
| [9] |
பிறவா தொருநா ழிகைகழித்துஎன்
பிள்ளை பிறக்கும் பரிசென்கால்
உறவார்த் தெடுத்துத் தூக்கும்என
வுற்ற செயன்மற் றதுமுற்றி
அறவா ணர்கள்சொல் லியகாலம்
அணையப் பிணிவிட்டு அருமணியை
இறவா தொழிவாள் பெற்றெடுத்துஎன்
கோச்செங் கண்ணா னோஎன்றாள்.
| [10] |
தேவி புதல்வன் பெற்றிறக்கச்
செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன்
தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத்
தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து
தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
| [11] |
கோதை வேலார் கோச்செங்கட்
சோழர் தாம்இக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி அருளால்முன்
அறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் தான்மகிழ்ந்து
பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந்
தொண்டு புரியுங் கடன்பூண்டார்.
| [12] |
ஆனைக் காவில் தாம்முன்னம்
அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ
லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான்
அமருங் கோயிற் பணிசமைத்தார்.
| [13] |
மந்திரிகள் தமைஏவி
வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ
ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில்
அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந்
தானங்கள் பலசமைத்தார்.
| [14] |
அக்கோயில் தொறுஞ்சிவனுக்
கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள்
விருப்பினால் மிகஅமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோல்
முறைநிறுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முதல் நடமாடும்
முதல்தில்லை முன்னினார்.
| [15] |
திருவார்ந்த செம்பொன்னின்
அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப்
பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத்
தொழுதேத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு
மாளிகைகள் பலசமைத்தார்.
| [16] |
தேவர்பிரான் திருத்தொண்டில்
கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி
யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந்
திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை
வேந்தர்திரு வடிநிழற்கீழ்.
| [17] |
கருநீல மிடற்றார் செய்ய
கழலடி நீழல் சேர
வருநீர்மை யுடைய செங்கட்
சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசைகொள் யாழின்
தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர்
திறம்இனிச் செப்ப லுற்றேன்.
| [18] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.690  
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
பண் - ( )
எருக்கத்தம் புலியூர் மன்னி
வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப்
பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம்
பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும்
ஆலவாய் பணியச் சென்றார்.
| [1] |
ஆலவாய் அமர்ந்தார் கோயில்
வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த
பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில்
கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர்
பாணிகள் யாழில் இட்டார்.
| [2] |
மற்றவர் கருவிப் பாடல்
மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக்
கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ
அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார்
திருமுன்பு கொண்டு புக்கார்.
| [3] |
அன்பர்கள் கொண்டு புக்க
பொழுதினில் அரிவை பாகன்
மன்பெரும் பாண னாரும்
மாமறை பாட வல்லார்
தன்பெரும் பணியாம் என்று
தமக்குமெய் யுணர்த லாலே
முன்பிருந் தியாழிற் கூடல்
முதல்வரைப் பாடு கின்றார்.
| [4] |
திரிபுரம் எரித்த வாறும்
தேர்மிசை நின்ற வாறும்
கரியினை யுரித்த வாறும்
காமனைக் காய்ந்த வாறும்
அரிஅயற் கரிய வாறும்
அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப்
பரமனார் அருளி னாலே.
| [5] |
அந்தரத் தெழுந்த ஓசை
அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந்
தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர்
இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந்
திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.
| [6] |
தமனியப் பலகை ஏறித்
தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை
உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி
எண்ணில்தா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளாது ஆரூர்
ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.
| [7] |
கோயில் வாயில் முன்னடைந்து
கூற்றன் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெருங்கருணை
அடியார்க் களிக்குந் தண்ணளியும்
ஏயுங் கருவி யில்தொடுத்தங்
கிட்டுப் பாடக் கேட்டுஅங்கண்
வாயில் வேறு வடதிசையில்
வகுப்பப் புகுந்து வணங்கினார்.
| [8] |
மூலத் தானத் தெழுந்தருளி
இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து
தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத
திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார்
அமருந் தானம் பலவணங்கி.
| [9] |
ஆழி சூழுந் திருத்தோணி
யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம்
ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன்
கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில்
வந்தார் சந்த இசைப்பாணர்.
| [10] |
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.
| [11] |
வரும்பான் மையினில் பெரும்பாணர்
மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்ல லுறுகின்றாம்.
| [12] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.700  
சடைய நாயனார் புராணம்
பண் - ( )
தம்பி ரானைத் தோழமைகொண்
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ
| [1] |
Back to Top
சேக்கிழார் மன்னிய சீர்ச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.710  
இசை ஞானியார் புராணம்
பண் - ( )
ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார்
ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்.
| [1] |
Back to Top
சேக்கிழார் வெள்ளானைச் சருக்கம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.720  
வெள்ளானைச் சருக்கம்
பண் - ( )
மூல மான திருத்தொண்டத்
தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண்
கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை
அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.
| [1] |
படியில் நீடும் பத்திமுதல்
அன்பு நீரில் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர்
செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின்
களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
| [2] |
ஆரம் உரகம் அணிந்தபிரான்
அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை
எழிலா ரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து
தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநா டணைவதற்குத்
தவிரா விருப்பி னுடன்போந்தார்.
| [3] |
நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு
நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்றுபோய்
முல்லைப் படப்பைக் கொல்லைமான்
துன்னி உகைக்குங் குடக்கொங்கில்
அணைந்து தூய மதிவான்நீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத்
திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்.
| [4] |
மறையோர் வாழும் அப்பதியின்
மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள்
இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில்
அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்னென்றார்.
| [5] |
அந்த ணாளர் வணங்கிஅரும்
புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத் தினர்குளித்த
மடுவில் முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை
முந்நூல் அணியுங் கலியாணம்
இந்த மனைமற் றந்தமனை
இழந்தார் அழுகை யென்றுரைத்தார்.
| [6] |
இத்தன் மையினைக் கேட்டருளி
இரங்குந் திருவுள் ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர்
தம்மை முன்னே கண்டிறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும்
மனைவி தானும் மகவிழந்த
சித்த சோகந் தெரியாமே
வந்து திருத்தாள் இறைஞ்சினார்.
| [7] |
துன்பம் அகல முகமலர்ந்து
தொழுவார் தம்மை முகநோக்கி
இன்ப மைந்தன் தனையிழந்தீர்
நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனதது
முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுதா காமல்எழுந்
தருளப் பெற்றோம் எனத்தொழுதார்.
| [8] |
மைந்தன் தன்னை இழந்ததுயர்
மறந்து நான்வந் தணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும்
மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்றும்
அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவேன்
என்றார் சென்றார் இடர்களைவார்.
| [9] |
இவ்வா றருளிச் செய்தருளி
இவர்கள் புதல்வன் தனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும்மடு
எங்கே என்று வினவிக்கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்
தருளி அவனை அன்றுகவர்
வைவாள் எயிற்று முதலைகொடு
வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.
| [10] |
உரைப்பார் உரையென் றெடுத்ததிருப்
பாட்டு முடியா முன்உயர்ந்த
வரைப்பான் மையின்நீள் தடம்புயத்து
மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற்
றுடலிற் சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப
முதலை வாயில் தருவித்தான்.
| [11] |
பெருவாய் முதலை கரையின்கண்
கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய்ஓடி
எடுத்துக் கொடுவந் துஉயிரளித்த
திருவா ளன்தன் சேவடிக்கீழ்ச்
சீல மறையோ னொடுவீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர்மாரி
பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.
| [12] |
மண்ணில் உள்ளார் அதிசயித்தார்
மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார்
வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி
அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங்
கொண்டு பணிந்தார் காசினிமேல்.
| [13] |
பரவும் பெருமைத் திருப்பதிகம்
பாடிப் பணிந்து போந் தன்பு
விரவு மறையோன் காதலனை
வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம்
முடித்து முடிச்சே ரலர்தம்பால்
குரவ மலர்பூந் தண்சோலை
குலவு மலைநாடு அணைகின்றார்.
| [14] |
சென்ற சென்ற குடபுலத்துச்
சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று
நலஞ்சேர் தலமுங் கானகமும்
துன்று மணிநீர்க் கான்யாறும்
துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார்
குலவும் அடியேன் அகம்புகுந்தார்.
| [15] |
முன்னாள் முதலை வாய்ப்புக்க
மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூரர் எழுந்தருளா
நின்றார் என்று சேரர்பிராற்கு
அந்நாட் டரனார் அடியார்கள்
முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும்
காசுந் தூசும் பொழிந்தளித்தார்.
| [16] |
செய்வ தொன்றும் அறியாது
சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும்
அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம்
தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று
ஓகை முரசம் சாற்றுவித்தார்.
| [17] |
பெருகும் மதிநூல் அமைச்சர்களை
அழைத்துப் பெரியோ ரெழுந்தருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப்
பண்ணிப் பயணம் புறப்படுவித்
தருவி மதமால் யானையினை
அணைந்து மிசைகொண் டரசர்பெருந்
தெருவு கழிய எதிர்வந்தார்
சேரர் குலம்உய்ந் திடவந்தார்.
| [18] |
மலைநாட் டெல்லை யுட்புகுத
வந்த வன்தொண் டரைவரையில்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச்
சேரர் பெருமான் எதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய
சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத ஆரூரர்
தாமுந் தொழுது கலந்தனரால்.
| [19] |
சிந்தை மகிழும் சேரலனார்
திருவா ரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமே னிகள்வேறாம்
எனினும் ஒன்றாந் தன்மையராய்
முந்த எழுங்கா தலின்தொழுது
முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச்
செல்வம் வினவி யின்புற்றார்.
| [20] |
ஒருவர் ஒருவ ரில்கலந்து
குறைபா டின்றி உயர்காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட
இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார்
பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசையேற்றித்
தாம்பின் மதிவெண் குடைகவித்தார்.
| [21] |
உதியர் பெருமாள் பெருஞ்சேனை
ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக்
கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம்
கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப
எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம்
ஏறும் இவுளித் துகளார்ப்ப
மதிதங் கியமஞ் சணியிஞ்சி
வஞ்சி மணிவா யிலையணைந்தார்.
| [22] |
ஆரண மொழிகன் முழங்கிட
ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மதமழை சிந்தின
வாசிகள் கிளரொலி பொங்கின
பூரண கலசம் மலிந்தன
பூமழை மகளிர் பொழிந்திடும்
தோரண மறுகு புகுந்தது
தோழர்கள் நடவிய குஞ்சரம்.
| [23] |
அரிவையர் தெருவில் நடம்பயில்
அணிகிளர் தளிரடி தங்கிய
பரிபுர வொலிகள் கிளர்ந்தன
பணைமுர சொலிகள் பரந்தன
சுரிவளை நிரைகள் முரன்றன
துணைவர்கள் இருவரும் வந்தணி
விரிதரு பவன நெடுங்கடை
விறன்மத கரியி னிழிந்தனர்.
| [24] |
தூநறு மலர்தர ளம்பொரி
தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல
நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை
வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும்
மாளிகை நடுவு புகுந்தனர்.
| [25] |
அரியணை யதனில் விளங்கிட
அடன்மழ விடையென நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட
மலையர்கள் தலைவர் பணிந்தபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன
உரைமுடி விலவென முன்செய்து
பரிசனம் மனமகி ழும்படி
பலபட மணிநிதி சிந்தினர்.
| [26] |
இன்ன தன்மையில் உதியர்கள்
தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி
துறையுநாள் மலைநெடு நாட்டெங்கும்
பன்ன கம்புனை பரமர்தந்
திருப்பதி பலவுடன் பணிந்தேத்திப்
பொன்னெ டுந்தட மூதெயில்
மகோதையிற் புகுந்தனர் வன்தொண்டர்.
| [27] |
ஆய செய்கையின் நாள்பல
கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில்
தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப்
பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக்
குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.
| [28] |
கரிய கண்டர்தங் கோயிலை
வலங்கொண்டு காதலால் பெருகன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்
திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி
அரிய செய்கையில் அவனியில்
வீழ்ந்தெழுந்து அலைப்புறு மனைவாழ்க்கை
சரிய வேதலைக் குத்தலை
மாலையென் றெடுத்தனர் தமிழ்மாலை.
| [29] |
எடுத்த அத்திருப் பதிகத்தின்
உட்குறிப்பு இவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட
வேண்டுமென்று அன்பர்அன் பினில்பாடக்
கடுத்த தும்பிய கண்டர்தங்
கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத்
தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்.
| [30] |
மன்ற லந்தரு மிடைந்தபூங்
கயிலையின் மலைவல்லி யுடன்கூட
வென்றி வௌள்விடைப் பாகர்தாம்
வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் மூரனை
உம்பர்வெள் ளானையில் உடன்ஏற்றிச்
சென்று கொண்டிங்கு வாருமென்று
அயன்முதல் தேவர்கட் கருள்செய்தார்.
| [31] |
வான நாடர்கள் அரிஅயன்
முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள்
ளானையுங் கொண்டுவன் தொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ்
| [32] |
தேவர் தங்குழாம் நெருங்கிய
வாய்தனில் திருநாவ லூரர்தம்
காவல் மன்னரும் புறப்பட
எதிர்கொண்டு கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை
முடியவர் அருளிப்பா டெனப்போற்றி
ஏவல் என்றபின் செய்வதொன்று
இலாதவர் பணிந்தெழுந் தெதிரேற்றார்.
| [33] |
ஏற்ற தொண்டரை அண்டர்வெள்
ளானையின் எதிர்வலங் கொண்டேற்ற
நாற்ற டங்கடல் முழுக்கென
ஐவகை நாதமீ தொழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை
பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர்பெருந்
துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.
| [34] |
சேரர் தம்பிரான் தம்பிரான்
தோழர்தஞ் செயலறிந் தப்போதே
சார நின்றதோர் பரியினை
மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண்
மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம்
மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்.
| [35] |
விட்ட வெம்பரிச் செவியினில்
புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின்
இருவிசும் பெழப் பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன்
தொண்டர்மேல் கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு
சென்றது மற்றதன் முன்னாக.
| [36] |
உதியர் மன்னவர் தம்பெரும்
சேனையின் உடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர்
தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை
எதிர்வி சும்பில் கண்டுபின்
கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருகிய
சுரிகையான் முறைமுறை உடல்வீழ்த்தார்.
| [37] |
வீர யாக்கையை மேல்கொண்டு
சென்றுபோய் வில்லவர் பெருமானைச்
சார முன்சென்று சேவகம்
ஏற்றனர் தனித்தொண்டர் மேல்கொண்ட
வாரு மும்மதத் தருவிவெள்
ளானைக்கு வயப்பரி முன்வைத்துச்
சேரர் வீரருஞ் சென்றனர்
மன்றவர் திருமலைத் திசைநோக்கி.
| [38] |
யானை மேல்கொண்டு செல்கின்ற
பொழுதினில் இமையவர் குழாமென்னும்
தானை முன்செலத் தானெனை
முன்படைத் தான்எனும் தமிழ்மாலை
மான வன்தொண்டர் பாடிமுன்
அணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார்
திருமலைத் தென்திசைத் திருவாயில்.
| [39] |
மாசில் வெண்மைசேர் பேரொளி
உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசி லன்பர்தம் சிந்தைபோல்
விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும்
புரவியும் இழிந்துசே ணிடைச்செல்வார்
ஈசர் வௌள்ளிமா மலைத்தடம்
பலகடந் தெய்தினர் மணிவாயில்.
| [40] |
அங்கண் எய்திய திருவணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
| [41] |
சென்று கண்ணுதல் திருமுன்பு
தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந்
ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந்
தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்றும் மேனியர் ஊரனே
வந்தனை என்றனர் உலகுய்ய.
| [42] |
அடிய னேன்பிழை பொறுத்தெனை
யாண்டுகொண் டத்தொடக் கினைநீக்கி
முடிவி லாநெறி தருபெருங்
கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை
பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப
வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.
| [43] |
நின்ற வன்தொண்டர் நீரணி
வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி
வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரியதே
வரைச்சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க் கருளிப்பாடு
எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி.
| [44] |
மங்கை பாகர்தந் திருமுன்பு
சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர்
போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநா
யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமைநீ
எய்திய தென்னென அருள்செய்தார்.
| [45] |
அரசர் அஞ்சலி கூப்பிநின்று
அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து
வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து
புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய்
இனியொரு விண்ணப்பம் உளதென்று.
| [46] |
பெருகு வேதமும் முனிவரும்
துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவு லாப்புறம் பாடினேன்
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட
வன்றொண்டர் கூட்டம்வைத் தாய்என்ன
அருளும் ஈசருஞ் சொல்லுக
என்றனர் அன்பருங் கேட்பித்தார்.
| [47] |
சேரர் காவலர் பரிவுடன்
கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு
திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊர னாகிய ஆலால
சுந்தரன் உடனமர்ந் திருவீரும்
சார நங்கண நாதராம்
தலைமையில் தங்கும் என் றருள்செய்தார்.
| [48] |
அன்ன தன்மையில் இருவரும்
பணிந்தெழுந் தருள்தலை மேற்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால
சுந்தர ராகித்தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை
நின்றனர் முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர்கண நாதராய்
அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்.
| [49] |
தலத்து வந்துமுன் னுதயஞ்செய்
பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத்
தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி
யாருடன் அனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள்
கோயிலில் தந்தொழில் வழிநின்றார்.
| [50] |
வாழி மாதவர் ஆலால
சுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசைத் திருப் பதிகம்இவ்
வுலகினில் ஏற்றிட எறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக்கு
அளித்திட அவனும்அவ் வருள்சூடி
ஊழி யில்தனி யொருவர்தம்
திருவஞ்கைக் களத்தில்உய்த் துணர்வித்தான்.
| [51] |
சேரர் காவலர் விண்ணப்பம்
செய்யஅத் திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில்
கேட்டமா சாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிட
வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில்
விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
| [52] |
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
| [53] |
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
| [54] |
Back to Top
கடவுண்மாமுனிவர் திருவாதவூரர் புராணம்
12 -ஆம் திருமுறை பதிகம் 12.900  
பண் - (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )