சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் க%
கங்குலும்     கங்கை     கங்கையிற்     கச்சொடு     கஞ்சனும்     கஞ்சனைக்     கஞ்சன்     கஞ்சன்தன்னால்     கஞ்சைக்     கடம்     கடலிற்     கடலும்     கடலே     கடல்     கடி     கடி-மலர்க்     கடிது     கடியனாய்க்     கடியன்     கடிவார்     கடு     கடுங்     கடுவினை     கடை     கடைநின்றமரர்     கடைந்த     கட்கு     கட்டப்     கட்டு     கட்டுரைக்கில்     கண     கணம்     கண்     கண்களால்     கண்கள்     கண்ட     கண்டதுவே     கண்டவர்     கண்டவர்-தம்     கண்டாயே     கண்டார்     கண்டு     கண்டுகொண்டு     கண்டுகொண்டேன்     கண்டும்     கண்டே     கண்டேன்     கண்டோம்     கண்ண     கண்ணனை     கண்ணன்     கண்ணமங்கையுள்     கண்ணா     கண்ணாலம்     கண்ணி     கண்ணித்     கண்ணில்     கண்ணும்     கண்ணுள்     கண்ணுள்ளே     கண்ணே     கண்ணைக்     கதவி     கதவு     கதிக்குப்     கதியேல்     கதிரவன்     கதிர்     கதிர்-ஒளித்     கதைப்     கதையின்     கத்தக்     கந்த     கனங்குழையாள்     கனம்     கனி     கனை     கனைத்து     கன்நிறைந்து     கன்னற்     கன்னல்     கன்னவில்தோள்     கன்னி     கன்னி,தன்     கன்னியரோடு     கன்மம்     கன்றப்     கன்றினை     கன்று     கன்று-அதனால்     கன்றுகள்     கமலக்     கம்ப     கயம்     கயலோ     கர     கரண்டம்     கரிய     கரு     கருங்கண்     கருத்தில்     கருத்தே     கருந்     கருப்பு     கருப்பூரம்     கரும     கருமமும்     கருமலர்க்     கரும்பார்     கருளக்     கருளப்     கருள்     கருவிளை     கரை     கரையாய்     கறந்த     கறவா     கறவை     கறவைகள்     கறுத்திட்டு     கறுத்து     கறை     கற்கும்     கற்பகக்     கற்பார்     கற்றா     கற்றார்     கற்றினம்     கற்றிலேன்     கற்றுக்     கற்றுப்பிணை     கலக்க     கலக்கம்     கலக்கிய     கலங்க     கலந்தான்     கலந்து     கலி     கலியுகம்     கலை     கலைகளும்     கலையும்     கல்     கல்லா     கல்லாதவர்     கல்லால்     கல்லின்     கல்லும்     களங்கனி     களி     களிப்பும்     களிறு     களைவாய்     கள்     கள்ள     கள்ளக்     கள்ளச்     கள்ளத்தால்     கள்ளத்தேன்     கள்ளம்     கள்வனேன்     கள்வன்கொல்?     கள்வா     கழறேல்     கழல்     கழி     கழிமின்     கழிய     கவள     கவியினார்     கவ்வை     கவ்வைக்     கா     காக்கும்     காசின்     காசும்     காசை     காடுகள்     காட்கரை     காட்டி     காட்டித்     காட்டில்     காண     காணக்     காணப்புகில்     காணல்     காணிலும்     காணுமாறு     காண்     காண்கின்ற     காண்கின்றனகளும்     காண்கொடுப்பான்     காண்டாவனம்     காண்டும்கொலோ     காண்பது     காண்பார்     காண்மின்கள்     காதம்     காதல்     காதில்     காத்த     கான     கானிடை     கான்     காப்பார்     காப்பு     காமன்     காமன்-தனக்கு     காமர்     காமற்கு     காமுற்ற     காய     காயும்     காயோடு     காய்     காய்த்த     காய்ந்து     காரார்     காரிகையார்     காரிகையார்க்கும்     காரியம்     காரும்     காரொடு     கார்     கார்-இனம்     கார்க்கோடற்     கார்த்     கார்த்திகையானும்     காறை     காற்றிடைப்     காற்றினை     கால     காலநேமி     காலம்     காலம்பெற     காலும்     காலே     காலை     காலைக்     காலையும்     காளியன்     காவலன்     காவலிற்     காவி     காவிப்     காவியும்     காவியை     கிடக்கில்     கிடந்த     கிடந்தானை     கிடந்து     கிண்கிணி     கிறி     கிற்பன்     கிளர்     கிழக்கிற்     கீசு     கீழ்     கீழ்மையினால்     கீழ்வானம்     குங்குமம்     குடங்கள்     குடதிசை     குடி     குடிக்கிடந்து     குடியிற்     குடைத்     குடைந்து     குடையா     குடையும்     குணம்     குண்டலம்     குண்டு     குத்து     குந்தமோடு     குன்றமும்     குன்றம்     குன்றால்     குன்றினால்     குன்றில்     குன்று     குமரி     குமுறும்     கும்பம்     கும்மாயத்தொடு     குயில்     குரக்கினப்     குரக்கு     குரங்குகள்     குரவை     குருந்தம்     குரை     குறள்     குறிக்கொள்     குறிப்பில்     குறிப்பு     குறுக     குறுகா     குறுகாத     குறைகொண்டு     குறையாக     குறைவு     குற்றம்     குலங்களாய     குலத்     குலம்     குலம்-தான்     குலை     குளித்து     குழகனே     குழகி     குழல்     குழாம்     குழையும்     கூக்குரல்     கூசம்     கூடச்     கூடா     கூடாரை     கூடி     கூடிக்     கூடிற்றாகில்     கூடும்     கூட்டில்     கூட்டுண்டு     கூட்டுதி     கூட்டும்     கூத்த     கூத்தன்     கூத்தர்     கூந்தலார்     கூந்தல்     கூன்     கூறு     கூறுதல்     கூறும்     கூற்றமும்     கூற்று     கூவாய்     கூவிக்     கூவுதல்     கூவும்     கெடும்     கெண்டை     கெண்டையும்     கேசவனே     கேசவன்     கேடு     கேட்க     கேட்டு     கேட்டும்     கேட்பார்கள்     கேயத்     கேவலம்     கை     கைகளால்     கைதவம்     கைத்தனன்     கைத்தலத்து     கைந்நாகத்து     கைப்     கைம்     கைய     கையின்     கையில்     கையும்     கையுள்     கொங்கு     கொங்கும்     கொங்கை     கொங்கைச்     கொடி     கொடிய     கொடியார்     கொடு     கொடுங்     கொட்டாய்     கொண்ட     கொண்டது     கொண்டல்     கொண்டல்வண்ணனைக்     கொண்டல்வண்ணா     கொண்டாட்டும்     கொண்டானை     கொண்டான்     கொண்டு     கொண்டை     கொந்து     கொன்னவிலும்     கொன்னா     கொன்று     கொன்றேன்     கொம்பின்     கொம்பு     கொம்பும்     கொம்மை     கொற்றப்     கொலை     கொலைப்     கொலையானைக்     கொல்     கொல்லா     கொல்லை     கொள்     கொள்கின்ற     கொள்கை     கொள்மின்     கொள்ள     கொள்ளக்     கொள்ளும்     கொள்வன்     கொழுங்     கொழுங்கொடி     கொழுந்து     கொழுந்துவிட்டு     கொழுப்பு     கோ     கோக்     கோங்கு     கோட்டுமண்     கோது     கோதை     கோமள     கோயில்     கோல     கோலப்     கோலமே     கோலம்     கோலால்     கோல்     கோளரியின்     கோள்     கோழி     கோழியும்     கோவலனாய்     கோவிந்தன்     கோவை    
Number of search results : 611
Pages:    1    2  3  4  5  6  7  Next
17.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்   
18.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
21.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய
50.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
      குடந்தைக் கிடந்தானே தாலேலோ
51.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
நச்சுமுலை உண்டாய் தாலேலோ
      நாராயணா அழேல் தாலேலோ
65.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்
      குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி
      மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்
      கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
69.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா
      கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா
      துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
      அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
82.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
      நேமியங் கையனே சப்பாணி
89.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
      கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
      முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
      தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
      தளர்நடை நடவானோ
101.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிது உடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ அச்சோ
      ஆழி அங் கையனே அச்சோ அச்சோ
105.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
      மார்வில் மறுவனே அச்சோ அச்சோ
109.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினிற்
கங்கணம் இட்டுக் கழுத்திற் தொடர் கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்
      எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
110.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
      ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்
116.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்  
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்
      உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
120.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்
தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
125.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
131.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
      கள்ளச் சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல்லடியால்
      பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே
      ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால்
      வலைப்படுத்தாய் முலை உணாயே
148.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
      காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
      விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
      பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
      இருடிகேசா என்தன் கண்ணே <>
149.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
      கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
      பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
      நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
      பற்பநாபா இங்கே வாராய்
153.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கன்றுகள் ஓடச் செவியிற்
      கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
      திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்
      நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்
      எம்பிரான் ஓடாதே வாராய்
155.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
      கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
      வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
      வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
      அழகனே நீராட வாராய்
158.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கறந்த நற்பாலும் தயிரும்
      கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
      பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
      என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
      மஞ்சனம் ஆட நீ வாராய்
159.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கன்றினை வால் ஓலை கட்டி
      கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
      பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
      நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
      நாரணா ஓடாதே வாராய்
161.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே
166.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்
      ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்
167.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழிஅதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்
      கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்
171.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே
173.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா
      அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா
174.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா
      தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
183.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

கரு உடை மேகங்கள் கண்டால்
      உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
      உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
      திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
      மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
188.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
      மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
      இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
      குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்
193.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கன்றுகள் இல்லம் புகுந்து
      கதறுகின்ற பசு எல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி
      நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு
      நான் உன்னைக் காப்பிட வாராய்
195.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கண்ணில் மணல்கொடு தூவிக்
      காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
      -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
      கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
      வள்ளலே காப்பிட வாராய்
197.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
      கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
      என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
      அழகனே காப்பிட வாராய்

198.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கள்ளச் சகடும் மருதும்
      கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே நீ பேயைப்
      பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன்
      ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும்
      பரமனே காப்பிட வாராய்
205.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

கொண்டல்வண்ணா இங்கே போதராயே
      கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
      திருநாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
      ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
      கண்ணபிரான் கற்ற கல்வி தானே
209.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

கேசவனே இங்கே போதராயே
      கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
      நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
      தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
      தாமோதரா இங்கே போதராயே
210.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

கன்னல் இலட்டுவத்தோடு சீடை
      காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்
      இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
      பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
      கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
214.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்
      வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
225.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
      குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
      பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை
      என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
228.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
      கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி
      வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
      சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
233.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
      கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்
      அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
      பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்
      இருடிகேசன் அடியாரே             
242.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்
கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின்
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே
245.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற்
      காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா
      பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
      ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை
      என்குட்டனே முத்தம் தா
246.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
      மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
      தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
      நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
      உன்னோடு உடனே உண்பான்
247.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும்
      போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
      கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன
      சிறுக்குட்டச் செங் கமல-
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்
      அசைந்திட்டாய் நீ எம்பிரான்
251.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா
      கோவலர் இந்திரற்குக்
காட்டிய சோறும் கறியும் தயிரும்
      கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு
      ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை
      அஞ்சுவன் இன்று தொட்டும்
257.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்
      கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
      கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
      கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில்லா வளை கழன்று துகில்
      ஏந்து இள முலையும் என் வசம் அலவே
267.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
      கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
      அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
      கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
273.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்
      கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல
      மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்
      முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
284.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து
      கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
      அவனொருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
      மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
      பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே
285.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             
293.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
      கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
      தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே
294.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

கைத்தலத்து உள்ள மாடு அழியக்
      கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
      நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
      செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
      வளர விடுமின்களே
299.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

குமரி மணம் செய்து கொண்டு
      கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறியத்
      தாமோதரற்கு என்று சாற்றி   
அமரர் பதியுடைத் தேவி
      அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித்
      தோரணம் நாட்டிடுங் கொல்லோ?
304.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

குடியிற் பிறந்தவர் செய்யும்
      குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்
      நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க
      இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
கடைகயிறே பற்றி வாங்கிக்
      கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?
313.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
      தூ மணிவண்ணனைப் பாடிப் பற
316.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
      அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
320.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்
328.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்
330.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர்
337.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடு உரைத்துப்
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனிப் புதுவைத்
திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே
345.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச்
சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே
350.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே
355.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த ஏழிற் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே
357.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே
361.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்
      குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி
      வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
      நோய்செய்வான் பிறந்தார்களே
366.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று
      கூடி ஆடி விழாச் செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல்
      ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்
கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்
      கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
      எத்தவங்கள் செய்தார் கொலோ
368.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம்
      கோவிந்தன் குணம் பாடு சீர்ச்
செம்பொன் ஆர் மதில் சூழ் செழுங் கழ
      னி உடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று
      ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவர்
      இவர் என்று ஆசைகள் தீர்வனே
369.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

காசின் வாய்க் கரம் விற்கிலும் கர
      வாது மாற்று இலி சோறு இட்டுத்
தேச வார்த்தை படைக்கும் வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்
கேசவா புருடோத்தமா கிளர்
      சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்தம்மை
      விற்கவும் பெறுவார்களே
378.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து
      குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு
      நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம்
      கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால்
      குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே
381.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
405.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
      கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
      இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்
      கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்
      திருவரங்கம் என்பதுவே
407.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

கீழ் உலகில் அசுரர்களைக்
      கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
      கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
      தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
      ஆளம் வைக்கும் அரங்கமே
408.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

கொழுப்பு உடைய செழுங்குருதி
      கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
      பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
      தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
      அடிதொழும் சீர் அரங்கமே
410.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

குன்று ஆடு கொழு முகில் போல்
      குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல்
      நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து
      கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம்
      மதில் அரங்கம் என்பதுவே
414.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும்
      கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு
      ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து
      ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர்
      அணி அரங்கமே
418.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி
      அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த
      எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்
      அரவு-அணையின்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு
      எறிக்கும் திருவரங்கமே
422.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
      கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
      திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
      உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
      இருப்பர் தாமே
431.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
      கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியாக ஆதி அஞ் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன்தமர்கள்
      நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது
அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
438.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

கண்ணா நான்முகனைப் படைத்தானே
      காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
      ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
      வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
      அன்று எனக்கு அவை பட்டினி நாளே
442.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

காமர் தாதை கருதலர் சிங்கம்
      காண இனிய கருங்குழற் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன்
      மாதவன் மதுசூதனன் தன்னைச்
சேம நன்கு அமரும் புதுவையர் கோன்
      விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
449.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

கொங்கைச் சிறு வரை என்னும்
      பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
      அழுந்திக் கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான்
      வல்வினை ஆயின மாற்றிப்
பங்கப் படாவண்ணம் செய்தான்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
456.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர்
      நிழல் இல்லை நீர் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
      நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர்
      பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
457.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
      சோர்ந்து நடுங்கிக் குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
      தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
      வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
466.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

கடல் கடைந்து அமுதம் கொண்டு
      கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
      மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
      கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ
      சார்ங்க விற் சேவகனே
480.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   திருப்பாவை  

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
      பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
      வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ?
      நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
      தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்
481.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   திருப்பாவை  

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
      மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
      மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
  ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய்
484.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 11   ஆண்டாள்   திருப்பாவை  

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
      செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
  புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
      முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
      எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்
485.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 12   ஆண்டாள்   திருப்பாவை  

கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி
      நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்
  பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
  அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்
492.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 19   ஆண்டாள்   திருப்பாவை  

குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
      மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
      வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
      தத்துவம் அன்று தகவு-ஏலோர் எம்பாவாய்
500.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 27   ஆண்டாள்   திருப்பாவை  

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
      பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
      சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
      கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்
501.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 28   ஆண்டாள்   திருப்பாவை  

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
      அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
  அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
      இறைவா நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய்
510.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
      கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
      மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
      திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும்
      தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே
513.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
      கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த
      மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
      புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்
      விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
516.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

குண்டு நீர் உறை கோளரீ மத
      யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக்
      கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்
      கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக்கடற் பள்ளியாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே
524.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

கோழி அழைப்பதன் முன்னம்
      குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்
      அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம்
      இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
      துகிலைப் பணித்தருளாயே
528.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

காலைக் கதுவிடுகின்ற
      கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள்
      ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும்
      கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே
      குருந்திடைக் கூறை பணியாய்
532.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

கஞ்சன் வலைவைத்த அன்று
      காரிருள் எல்லிற் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
      நின்ற இக் கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
      மசிமையிலீ கூறை தாராய்
533.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

கன்னியரோடு எங்கள் நம்பி
      கரிய பிரான் விளையாட்டைப்
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
      புதுவையர்கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை
      ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு
      வைகுந்தம் புக்கு இருப்பாரே
Pages:    1    2  3  4  5  6  7  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%95