3106.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
புருஷார்த்த நிர்ணயம்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே
|
1641.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணமங்கை
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை-மங்கை-தன் பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் மங்குலை சுடரை வட மா மலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை பகலை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
|
1838.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கோட்டியூர்
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்- தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்- பொங்கு தண் அருவி புதம் செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே
|
3799.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 23
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருள
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய் திரு வைகுந்தத்துள்ளாய் தேவா இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே
|
3705.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு
எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே?
|
2278.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 97
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய் குடமூக்குக் கோயிலாக் கொண்டு
|
1898.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
|
3676.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே? ஏழ் உலகங்களும் நீயே அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால் மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே
|
3619.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ வெம் கதிர் வச்சிரக் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ; கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே?
|
3096.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?
|
3725.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
|
1123.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார் சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆகப் புகுந்து தாமும் பொங்கு கருங் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே
|
1412.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 4
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்? -இரணியன் இலங்கு பூண் அகலம் பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உறக் கனல் விழித்து எழுந்தது அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்- அரங்க மா நகர் அமர்ந்தானே
|
3385.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்? நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே
|
1861.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பொங்கத்தம் பொங்கோ
எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
|
1733.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 9
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை- நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்- மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே
|
3138.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே
|
3673.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கைஉகிர் ஆண்ட எம் கடலே அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே?
|
347.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-1
எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த் தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே
|
828.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 77
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
|
1023.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவேங்கடம் 1
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன் ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு திண் திறல் அரியாயவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே
|
1766.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாகை: அச்சோப்பதிகம்
எண் திசையும் எறி நீர்க் கடலும் ஏழ் உலகும் உடனே விழுங்கி மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன் கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் அண்டத்து அமரர் பணிய நின்றார்- அச்சோ ஒருவர் அழகியவா
|
2919.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உலகிற்கு உபதேசம்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறு இல வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
|
1445.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநந்திபுரவிண்ணகரம்
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி யாளர் திரு ஆர் பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் -நண்ணு மனமே
|
157.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
நீராட்டம்
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனம் ஆட நீ வாராய்
|
2133.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 52
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று
|
3982.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
|
550.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
குயிற் பத்து
எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங் குயிலே என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே
|
674.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
|
460.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன் மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு மாலிருஞ் சோலை எந்தாய்
|
694.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே
|
833.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 82
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின் பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே
|
3072.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா < கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?
|
3144.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே
|
6.0
திருப்பல்லாண்டு -பாசுரம்
பாடல் # 6
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே
|
1336.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவிந்தளூர்
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே
|
3004.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் எந்தை எம் பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
|
3555.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே மெய்ந் நான் எய்தி எந் நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
|
10.0
திருப்பல்லாண்டு -பாசுரம்
பாடல் # 10
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
|
3995.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய் புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா என் அன்பேயோ
|
2170.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 89
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம் பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ மா மேனி காட்டும் வரம்
|
2432.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 51
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை?
|
2795.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 11
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே
|
3854.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 78
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே
|
3709.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு
எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை இமையவர் தந்தை தாய் தன்னை தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே
|
3102.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
புருஷார்த்த நிர்ணயம்
எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
|
3034.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்
எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே? எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய் எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே
|
3481.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல
என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய் பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே
|
3706.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே
|
3212.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்? மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே
|
104.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அச்சோப் பருவம்
என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ அச்சோ வேங்கடவாணனே அச்சோ அச்சோ
|
1596.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவழுந்தூர்: 1
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்- மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
|
2115.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 34
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் ஆய்த் தாய் முலை தந்த ஆறு?
|
3841.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 65
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே
|
146.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
காது குத்தல்
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே? வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
|
3344.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும் வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
|
55.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அம்புலிப் பருவம்
என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான் தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
|
3573.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ? என்னும் முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்கொலோ முடிகின்றது இவட்கே?
|
1576.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:10
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த் தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே
|
3251.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர
என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே
|
2933.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே? முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே
|
3364.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை? என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே
|
3650.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே?
|
3580.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
|
3622.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ?
|
1213.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவாலி:3
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?
|
307.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என் நாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற
|
3420.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத
என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே
|
2935.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ? நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ?
|
3949.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
|
2439.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 58
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு
|
2276.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 95
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய் ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் ஆழியான் அத்தியூரான்
|
3386.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே
|
3570.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ
|
3533.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே
|
308.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற
|
3960.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே?
|
46.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
தாலப் பருவம்
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ
|
3646.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே
|
3645.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே
|
3260.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே?
|
2745.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்
|
2588.0
பெரிய திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 4
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி
திருவாசிரியம்
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று
|
3691.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
|
3620.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
|
2770.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை, கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை
|
2749.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும் மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
|
2757.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி
|
2719.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
|
2716.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
|
3055.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்
என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே
|
3562.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய் கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே
|
2744.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்
|
2972.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராதிப்பார்க்கு மிக இனியன்
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை முன்னை அமரர் முழுமுதல் தானே
|
3959.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர் தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?
|
705.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
என்னை வருக எனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்-நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப் பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
|
2794.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
|
2860.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால் பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே?
|
2938.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?
|
548.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
குயிற் பத்து
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது நீயும் அறிதி குயிலே பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் புண்ணியனை வரக் கூவாய்
|