2210.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 29
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை நீறு ஆக எய்து அழித்தாய் நீ
|
2373.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 92
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறைசெய்து என் நெஞ்சே நினை
|
2130.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 49
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது
|
3104.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
புருஷார்த்த நிர்ணயம்
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
|
2213.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 32
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து
|
1881.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய் செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
|
3966.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே.
|
706.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில்-தழைப் பீலி சூடி பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து கொங்கு நறுங் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே?
|
446.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
பண்டன்று பட்டினம் காப்பே
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிது அன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் பங்கப்படாது உய்யப் போமின் பண்டு அன்று பட்டினம் காப்பே
|
2424.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 43
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும் குடை ஏற தாம் குவித்துக் கொண்டு
|
610.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல் இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே?
|
184.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
பூச் சூட்டல்
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்தம் இடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய்
|
1138.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கோவலூர்
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை- துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
|
1121.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த
மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன் வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே
|
1765.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாகை: அச்சோப்பதிகம்
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்- அச்சோ ஒருவர் அழகியவா
|
1969.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்
மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ? நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே
|
957.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பெரிய திருமந்திரத்தின் மகிமை
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு - நாராயணா என்னும் நாமம்
|
1377.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவெள்ளறை
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை-அதன் மேய அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐஇரண்டும் எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை யோர்க்கு அரசு ஆவர்களே
|
1815.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லவாழ்
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல் சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
|
1812.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லவாழ்
மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
|
2523.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 46
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப்பொன்பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட போய் திட நெஞ்சம் ஆய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே
|
3310.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி பட நாகத்து அணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம்புருடன் நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே
|
3985.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே
|
3248.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர
மடந்தையை வண் கமலத் திருமாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே
|
1674.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 3
மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே
|
3766.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய்த் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் பட அரவு அணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே
|
375.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 5
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
பத்தராய் இறப்பார் பெறும் பேறு
மடி வழி வந்து நீர் புலன்சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டம் அடைப்பக் கண் உறக்கமது ஆவதன் முன்னம் தொடை வழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே
|
834.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 83
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல் விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே
|
1871.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
குழமணிதூரம்
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே
|
3678.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே
|
3862.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 86
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே?
|
3309.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ
மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன் அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன் பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே
|
3899.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே
|
3008.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன் தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
|
1033.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவேங்கடம் 2
மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்- விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!- அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
|
1299.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்க் காவளம்பாடி
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய் துண் என மாற்றார்-தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே
|
2372.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 91
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன்
|
2008.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே
|
1525.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:5
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே
|
387.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலின் நாமம் இடுதல்
மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
|
40.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 18
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்ணனது திருமேனியழகு
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே
|
2091.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 10
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் உலகு அளவும் உண்டோ உன் வாய்?
|
336.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம் திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இருநிலம் புக்கு இடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்
|
3540.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப
மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே
|
2271.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 90
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித் திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை கைதொழுத பின்
|
796.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 45
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர் கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம் புண்ணியா புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே
|
1267.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர் வண்புருடோத்தமம்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ ரோடும் கூடுவரே
|
3264.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே?
|
856.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 105
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே
|
1913.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில்-தான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன்? என் செய்கேனோ?
|
2831.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 3
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே
|
3493.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய் விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே?
|
585.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
மேகவிடு தூது
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பு-அணையான் வார்த்தை என்னே கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்-கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே?
|
2232.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 51
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம் மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை மதிக் கண்டாய் பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த நீர் ஆழி வண்ணன் நிறம்
|
2393.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 12
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு
|
3080.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பன்னிரு நாமப் பாட்டு
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே
|
2955.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராதனைக்கு எளியவன்
மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதலவனுக்கு எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே
|
506.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
தைத்திங்களில் காமனை வழிபடல்
மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித் தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே
|
28.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்ணனது திருமேனியழகு
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே
|
561.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருமணக் கனவை உரைத்தல்
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
|
68.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 5
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
செங்கீரைப் பருவம்
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
|
929.0
அமலன் ஆதிபிரான் -பாசுரம்
பாடல் # 3
திருப்பாணாழ்வார்
அமலன் ஆதிபிரான்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
|
2124.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 43
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
மன மாசு தீரும் அரு வினையும் சாரா தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தம் தொழாநிற்பார் தமர்
|
2442.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 61
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத் தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான் இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு
|
901.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 30
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன்சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே
|
2284.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 3
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து
|
2209.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 28
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும் தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன்
|
2900.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆத்ம உபதேசம்
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே
|
3490.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் புனத் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
|
3807.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 31
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது
மனமே உன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்! புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இலானை அடைவதுமே
|
2635.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 51
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச் சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே வண் துழாம் சீரார்க்கு மாண்பு?
|
1865.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பொங்கத்தம் பொங்கோ
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
|
3170.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி தன்னை தடங் கடல் சேர்ந்த பிரானை கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே
|
1564.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:9
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்- நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ
|
1972.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைவி இரங்கிக் கூறல்
மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்- என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே
|
2738.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே?, பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின், மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
|
2761.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து, பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண் மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்
|
2760.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள் முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின் சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல் அன்ன கடலை மலையிட் டணைகட்டி
|
170.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
குழல்வாரக் காக்கையை வா எனல்
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப் பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்
|
344.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-1
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே
|
1127.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த
மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
|
1752.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணங்குடி
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே
|
1043.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவேங்கடம் 3
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன் மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே
|
2767.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
|
2723.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண் கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்
|
687.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 11
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல
மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக் கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே
|
2713.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச
|
2800.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 5
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே
|
2674.2
சிறிய திருமடல் -பாசுரம்
பாடல் # 0
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
இயற்பா
மன்னியபல்பொறிசேர் ஆயிரவாய்வாளரவின் சென்னிமணிக்குடுமித் தெய்வச்சுடர்நடுவுள் மன்னியநாகத்தணைமேல் ஓர்மாமலைபோல் மின்னுமணிமகரகுண்டலங்கள் வில்வீச துன்னியதாரகையின் பேரொளிசேராகாசம் என்னும்விதானத்தின்கீழால் இருசுடரை மன்னும் விளக்காகவேற்றி மறிகடலும் பன்னுதிரைக்கவரிவீச நிலமங்கை தன்னைமுனநாள் அளவிட்டதாமரைபோல் மன்னியசேவடியை வானியங்குதாரகைமீன் என்னும்மலர்ப்பிறையாலேய்ந்த மழைக்கூந்தல் தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையாவடிவமைந்த அன்னநடையவணங்கே அடியிணையைத் தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து ஓர் உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை தன்னாபிவலயத்துப் பேரொளிசேர் மன்னியதாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல் முன்னந்திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும் முன்னம்படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில் நன்னெறிமேம்பட்டன நான்கன்றே நான்கினிலும் பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது ஓர் தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும் என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து தொன்னெறிக்கட்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால் இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார் என்னவுங் கேட்டறிவதில்லை உளதென்னில் மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னும் தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து ஆங் கன்னவரைக் கற்பிப்போம்யாமே அதுநிற்க முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற அன்னவர்த்தாம்காண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன் பொன்னகரம்புக்கமரர் போற்றிசைப்ப பொங்கொளிசேர் கொல்நவிலுங்கோளரிமாத் தாஞ்சுமந்தகோலம்சேர் மன்னியசிங்காசனத்தின்மேல் வாள்நெடுங்கண் கன்னியராலிட்ட கவரிப்பொதியவிழ்ந்து ஆங் கின்னிளம்பூந்தென்றலியங்க மருங்கிருந்த மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல் முன்னம்முகிழ்த்த முகிழ்நிலாவந்தரும்ப அன்னவர்த்தம்மானோக்க முண்டாங்கணிமலர்சேர் பொன்னியல்கற்பகத்தின் காடுடுத்தமாடெல்லாம் மன்னியமந்தாரம் பூத்தமதுத்திவலை இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர் மன்னியமாமயில்போற்கூந்தல் மழைத்தடங்கண் மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின் மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள் அன்னநடைய அரம்பயர்த்தம்வகை வளர்த்த இன்னிசை யாழ்பாடல்கேட்டின்புற்று இருவிசும்பில் மன்னுமழைதழும் வாணிலாநீண்மதிதோய் மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல் மன்னுமணி விளக்கைமாட்டி மழைக்கண்ணார் பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல் துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப அன்னமுழக்க நெறிந்துக்கவாள்நீலச் சின்னநறுந்தாது சூடி ஓர்மந்தாரம் துன்னுநறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின் மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல் நன்னறுஞ்சந்தனச்சேறு புலர்த்த தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல் பொன்னரும்பாரம்புலம்ப அகங்குழைந்தாங்கு இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் அன்னவர்த்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் இன்னமுதம் மாந்தியிருப்பர் இதுவன்றே அன்னவறத்தின் பயனாவது ஒண்பொருளும் அன்னதிறத்ததே யாதலால் காமத்தின் மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்னநடையாரலரேச ஆடவர்மேல் மன்னும்மடலூரா ரென்பதோர்வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மையறியாதார் ஆயன்வேய் இன்னிசை யோசைக்கு இரங்காதார் மால்விடையின் மன்னுமணி புலம்பவாடாதார் பெண்ணைமேல் பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு உன்னியுடலுருகிநையாதார் உம்பவர்வாய்த் துன்னிமதியுகுத்த தூதிலா நீள்நெருப்பில் தம்முடலம்வேவத் தளராதார் காமவேள் மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய பொன்னொடுவீதிபுகாதார் தம்பூவணைமேல் சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும் இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும் பொன்னனையார் பின்னுந்திருவுறுக போர்வேந்தன் தன்னுடையதாதை பணியாலரசொழிந்து பொன்னகரம் பின்னேபுலம்ப வலங்கொண்டு மன்னும்வளநாடு கைவிட்டு மாதிரங்கள் மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு கல்நிறைந்துதீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடுங்கதிரோன் துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால் மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும் அன்னநடைய அணங்குநடந்திலளே? பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்ப்பிணைநோக்கின் மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும் கன்னி தன் இன்னுயிராம் காதலனைக்காணது தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்காது அழித்துரப்பி வாளமருள் கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய் பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? பூங்கங்கை முன்னம் புனல்பரக்கும் நல்நாடன் மின்னாடும் கொன்னவிலும்நீள்வேல் குருக்கள் குலமதலை தன்னிகரொன்றில்லாத வென்றித்தனஞ்சயனை பன்னாகராயன் மடப்பாவை பாவைதன் மன்னியநாணச்சம் மடமென்றிவையகல தன்னுடைய கொங்கை முகம்நெரிய தானவன்தன் பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் தனது நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும் முன்னுரையில் கேட்டறிவதில்லையே? சூழ்கடலுள் பொன்னகரஞ்செற்ற புரந்தரனோடேரொக்கும் மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன் தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும் கன்னியரையில்லாத காட்சியாள் தன்னுடைய இன்னுயிர்த்தோழியால் எம்பெருமானீன்துழாய் மன்னும்மணிவரைத்தோள் மாயவன் பாவியேன் என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள் மன்னவன்தன்காதலனை மாயத்தாற்கொண்டுபோய் கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ மன்னியபேரின்பமெய்தினாள் மற்றிவைதான் என்னாலேகேட்டீரே? ஏழைகாள்! என்னுரைக்கேன்? மன்னுமலையரயன் பொற்பாவை வாள்நிலா மின்னுமணிமுறுவல் செவ்வாயுமையென்னும் அன்னநடைய அணங்கு நுடங்கிடைசேர் பொன்னுடம்புவாடப் புலனைந்தும்நொந்தகல தன்னுடையகூழைச் சடாபாரம்தாந்தரித்து ஆங்கு அன்னவருந்தவத்தினூடுபோய் ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னியெரிவீச மேலெடுத்தசூழ்கழற்கால் மன்னுகுலவரையும் மாருதமும்தாரகையும் தன்னினுடனே சுழலச்சுழன்றாடும் கொல்நவிலும் மூவிலைவேல் கூத்தன்பொடியாடி அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கணைந்திலளே? பன்னியுரைக்குங்கால் பாரதமாம் பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக்கேண்மின் இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருநறையூர்மாமலைபோல் பொன்னியலுமாடக் கவாடம்கடந்துபுக்கு என்னுடையகண்களிப்ப நோக்கினேன் நோக்குதலும் மன்னன்திருமர்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல்காடு ஓர்மணிவரைமேல்பூத்ததுபோல் மின்னியொளிபடைப்ப வீழ்நாணும்தோள்வளையும் மன்னியகுண்டலமும் ஆரமும்நீண்முடியும் துன்னுவெயில்விரித்த சூளாமணியிமைப்ப மன்னும்மரதகக் குன்றின்மருங்கே ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்றுநின்றதுதான் அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய் முன்னாயதொண்டையாய்க் கொண்டைகுலமிரண்டாய் அன்னதிருவுருவம் நின்றதறியாதே என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு மன்னும்மறிகடலுமார்க்கும் மதியுகுத்த இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும் தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ? தென்னன்பொதியில் செழுஞ்சந்தின்தாதளைந்து மன்னிவ்வுலகை மனங்களிப்பவந்தியங்கும் இன்னிளம்பூந்தென்றலும் வீசுமெரியெனக்கே முன்னியபெண்ணைமேல் முள்முளரிக்கூட்டகத்து பின்னுமவ்வன்றில் பேடைவாய்ச்சிறுகுரலும் என்னுடையநெஞ்சுக்கு ஓரீர்வாளாம் என்செய்கேன்? கல்நவில்தோள்காமன் கருப்புச்சிலைவளைய கொல்நவிலும்பூங்கணைகள் கோத்துப்பொதவணைந்து தன்னுடையதோள்கழியவாங்கி தமியேன்மேல் என்னுடையநெஞ்சே இலக்காகவெய்கின்றான் பின்னிதனைக் காப்பீர்தானில்லையே பேதையேன் கன்நவிலுங்காட்டகத்து ஓர்வல்லிக்கடிமலரின் நன்நறுவாசம் மற்றாரானுமெய்தாமே மன்னும்வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல் என்னுடையபெண்மையும் என்நலனும்என்முலையும் மன்னுமலர்மங்கைமைந்தன் கணபுரத்துப் பொன்மலைபோல்நின்றவன்தன்பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளாஎனக்கேபொறையாகி முன்னிருந்துமூக்கின்று மூவாமைக்காப்பதோர் மன்னும்மருந்தறிவிரில்லையே? மல்விடையின் துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு வன்தொடரால் கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு மாலைவாய் தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின் இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும் என்னிதனைக்காக்குமா? சொல்லீர் இதுவிளைத்த மன்னன்நறுந்துழாய்வாழ்மார்பன் மாமதிகோள் முன்னம்விடுத்த முகில்வண்ணன் காயாவின் சின்னநறும்பூந் திகழ்வண்ணன் வண்ணம்போல் அன்னகடலை மலையிட்டணைகட்டி மன்னனிராவணனை மாமண்டுவெஞ்சமத்து பொன்முடிகள்பத்தும் புரளச்சரந்துரந்து தென்னுலகமேற்றுவித்த சேவகனை ஆயிரங்கண் மன்னவன்வானமும் வானவர்த்தம்பொன்னும்லகும் தன்னுடையதோள்வலியால் கைக்கொண்டதானவனை பின்னோரரியுருவமாகி எரிவிழித்து கொல்நவிலும்வெஞ்சமதுக் கொல்லாதே வல்லாளன் மன்னும்மணிக்குஞ்சி பற்றிவரவீர்த்து தன்னுடையதாள்மேல் கிடாத்தி அவனுடைய பொன்னகலம்வள்ளுகிரால் போழ்ந்துபுகழ்படைத்த மின்னிலங்கும்ஆழிப்படைத் தடக்கைவீரனை மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர்தான்விழுங்க பின்னுமோரேனமாய் புக்குவளைமருப்பில் கொன்னவிலுங்கூர்நுதிமேல் வைத்தெடுத்தகூத்தனை மன்னும்வடமலையை மத்தாகமாசுணத்தால் மின்னுமிருசுடரும் விண்ணும்பிறங்கொளியும் தன்னினுடனே சுழலமலைதிரித்து ஆங்கு இன்னமுதம் வானவரையூட்டி அவருடைய மன்னுந்துயர்க்கடிந்த வள்ளலை மற்றன்றியும் தன்னுருவம் ஆருமறியாமல் தானங்கு ஓர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர் மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப மற்றவனும் என்னால்தரப்பட்டதென்றலுமே அத்துணைக்கண் மின்னார்மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த பொன்னார்கனைகழற்கால் ஏழுலகும்போய்க்கடந்து அங்கு ஒன்னாவசுரர் துளங்கச்செலநீட்டி மன்னிவ்வகலிடத்தை மாவலியைவஞ்சித்து தன்னுலகமாக்குவித்த தாளானை தாமரைமேல் மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை மன்னியதண் சேறை வள்ளலை மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற் பொன்னை மரதகதைப் புட்குழியெம்போரேற்றை மன்னுமரங்கத்துஎம்மாமணியை வல்லவாழ் பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை என்மனத்துமாலை இடவெந்தையீசனை மன்னுங்கடல்மல்லை மாயவனை வானவர்தம் சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை அன்னத்தைமீனை அரியைஅருமறையை முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை கோவலூர் மன்னுமிடைகழி யெம்மாயவனை பேயலறப் பின்னும்முலையுண்டபிள்ளையை அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை மின்னிமழைதவழும் வேங்கடத்துஎம்வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலைமணாளனை கொல்நவிலும் ஆழிப்படையானை கோட்டியூர் அன்னவுருவினரியை திருமெய்யத்து இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை மன்னியபாடகத்து எம்மைந்தனை வெஃகாவில் உன்னியயோகத்துறக்கத்தை ஊரகத்துள் அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை என்னைமனங்கவர்ந்தஈசனை வானவர்த்தம் முன்னவனை மூழிக்களத்துவிளக்கினை அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை நென்னலையின்றினை நாளையை நீர்மலைமேல் மன்னும்மறைநான்குமானானை புல்லாணித் தென்னன்தமிழை வடமொழியை நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை நான்வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை தென்னறையூர் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான் தன்னருளுமாகமும் தாரானேல் தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள் மின்னிடையாய்ச்சியர்த்தம் சேரிக்களவிங்கண் துன்னுபடல்திறந்துபுக்கு தயிர்வெண்ணெய் தன்வயிறார விழுங்க கொழுங்கயல்கண் மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும் அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய் தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும் மன்னுபறைகறங்க மங்கையர்த்தம்கண்களிப்ப கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும் தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை மன்னனிராவணன்தன் நல்தங்கை வாளெயிற்றுத் துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து மன்னியதிண்ணெனவும் வாய்த்தமலைபோலும் தன்னிகரொன்றில்லாத தாடகையை மாமுனிக்காகத் தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் மற்றிவைதான் உன்னியுலவாவுலகறிய ஊர்வன்நான் முன்னிமுளைத்தெழுந்து ஓங்கியொளிபரந்த மன்னியம்பூம் பெண்ணை மடல்.
|
2747.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும், தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி, அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?
|
1077.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லிக்கேணி
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நல் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே
|
351.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-2
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே
|
1423.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 5
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம்- தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
|
719.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
தாலாட்டு
மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
|
545.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
குயிற் பத்து
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி-முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே? புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள-வாயன் வரக் கூவாய்
|
2322.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 41
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ
|
626.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதிதன் அளவும் தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவை பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.
|
1410.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 4
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே
|
806.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 55
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?
|
2771.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
மன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ் பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை
|