3489.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப் பரிப்பே?
|
2614.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 30
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பது அன்றோ அழகு?
|
3659.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன் இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும் எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே
|
3773.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக்கண் என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய் அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழிபட்டு ஓட அருளிலே?
|
1949.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத
இங்கே போதும்கொலோ- இன வேல் நெடுங் கண் களிப்ப? கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால் இங்கே போதும்கொலோ?
|
2345.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 64
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு?
|
2508.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 31
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள் திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே?
|
3426.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே
|
276.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்ணன் குழல் ஊதல்
இட அணரை இடத் தோளொடு சாய்த்து இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக் குடவயிறு பட வாய் கடைகூடக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது மட மயில்களொடு மான்பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே
|
3305.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன் மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த் தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
|
2252.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 71
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும் தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான் பூ ஆர் அடி நிமிர்த்த போது
|
2120.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 39
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே- பேர் ஓத வண்ணர் பெரிது
|
2447.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 66
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு திடமாக வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் வையேன் ஆட் செய்யேன் வலம்
|
2802.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 7
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத் திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே
|
3355.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே ஆய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே
|
2553.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 76
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய் வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே?
|
2354.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 73
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம்
|
2159.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 78
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும் கொய்ந் நாகப் பூம் போது கொண்டு
|
3224.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
|
3454.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே
|
3894.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே
|
2888.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 3
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகில் இட்டுச் சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில் நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே? சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே
|
1002.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நைமிசாரணியம்
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய்
|
3689.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள்! உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான் அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய கடையறப் பாசங்கள் விட்டபின்னை அன்றி அவன் அவை காண்கொடானே
|
3575.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்வண்ணா கடியைகாண் என்னும் வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் இவள்திறத்து என் சிந்தித்தாயே?
|
1709.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 7
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்- மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே
|
651.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 5
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால் தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே
|
1050.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவேங்கடம் 4
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக் கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை- அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
|
1067.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு எவ்வுளூர்
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார் அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே
|
1819.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருமாலிருஞ்சோலை: 1
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்- விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன் வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே
|
2409.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 28
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு
|
525.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
துகிலைப் பணித்தருள் எனல்
இது என் புகுந்தது இங்கு? அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
|
2247.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 66
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக் காரணமும் வல்லையேல் காண்
|
3288.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
வெறி விலக்கு
இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின் மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே
|
3723.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு
இதுவோ பொருத்தம்? மின் ஆழிப் படையாய் ஏறும் இரும் சிறைப்புள் அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான் மது வார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
|
3826.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 50
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்? வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே
|
1071.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லிக்கேணி
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே
|
1251.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை- சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே
|
192.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
காப்பிடல்
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய்
|
558.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருமணக் கனவை உரைத்தல்
இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
|
1409.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 4
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண் இல் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்- அரங்க மா நகர் அமர்ந்தானே
|
2055.0
திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
திரு நெடுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே
|
1266.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர் வண்புருடோத்தமம்
இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான் முகனைத் தன் எழில் ஆரும் உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்- குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய் மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்- வண்புருடோத்தமமே
|
3401.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும் இன ஆயர் தலைவனும் யானே என்னும் இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ? இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?
|
2477.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 96
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
|
2364.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 83
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்
|
3871.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 95
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? இணை முலை நமுக நுண் இடை நுடங்க துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
|
1575.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:10
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு- இம்மையே அருள்பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர் கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை-இன்று கண்டுகொண்டேனே
|
889.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 18
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி-அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே?
|
2655.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 71
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு முகத்தான் நின் உந்தி முதல்
|
3035.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே
|
2168.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 87
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இனி யார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு
|
2216.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 35
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் சேம நீர் ஆகும் சிறிது
|
3568.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே
|
3630.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை
இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன் தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே
|
3825.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 49
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள் என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர் என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?
|
3654.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
இன் கவி பாடும் பரம் கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
|
1072.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவல்லிக்கேணி
இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும் இன்பன் நல் புவி-தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே
|
2506.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 29
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மைகொலோ? குடிச் சீர்மை இல் அன்னங்களே
|
1950.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை- இன்னார் என்று அறியேன்
|
2753.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும். தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, - தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்
|
2751.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 11
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய், முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்
|
2754.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே, முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்
|
764.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 13
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?
|
2725.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண் மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
|
199.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
காப்பிடல்
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய்
|
2820.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 3
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில் மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே
|
3835.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 59
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே
|
3660.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ?
|
2897.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே
|
2268.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 87
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம்
|
3810.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 34
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது
இன்றிப் போக இருவினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது சென்று தேவர்கள் கைதொழுவார்களே
|
2388.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 7
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை
|
3522.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய் தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே
|
3976.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்? குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
|
817.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 66
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?
|
942.0
கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்
பாடல் # 6
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே
|
3903.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே
|
515.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
சிற்றில் சிதையேல் எனல்
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச் சிற்றிலை நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக் கம் எழாதது எம் பாவமே
|
593.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே
|
2283.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 2
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டுகொண்டு என் மனம்
|
2671.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 87
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்
|
2379.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 98
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு
|
2468.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 87
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டான் உலகோடு உயிர்?
|
394.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்டம் என்னும் திருப்பதி
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆடக் கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே
|
2113.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 32
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய் நாகத்து அணையான் நகர்
|
1887.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே
|
563.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
திருமணக் கனவை உரைத்தல்
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
|
2038.0
திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந் தாண்டகம்
திருக்குறுந் தாண்டகம்
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திரு அரங்கம் மேய செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை தன்மையை நினைவார் என்-தன் தலைமிசை மன்னுவாரே
|
871.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 120
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே
|
2796.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே
|
2501.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 24
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கைக் கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால் புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க் கொயல்வாய் மலர்மேல் மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே?
|
2094.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 13
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக நீதியால் ஓதி நியமங்களால் பரவ ஆதியாய் நின்றார் அவர்
|
3044.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல
இரக்க மனத்தோடு எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே?
|
1858.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பொங்கத்தம் பொங்கோ
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? குரக்கு-நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
|
3503.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால் துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே
|
852.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 101
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
|
922.0
திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்
பாடல் # 6
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
965.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருப்பிரிதி
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி-அது கூர அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய அருவரை இமயத்து பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே
|
2075.0
திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்
பாடல் # 24
திருமங்கை ஆழ்வார்
திரு நெடுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!- இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
|