சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
முதல் எழுத்து :
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
க
ச
ஞ
த
ந
ப
ம
வ
பாசுர பாடல் சொல் ஏ%
ஏ
ஏக
ஏடு
ஏதங்கள்
ஏதம்
ஏதலர்
ஏது
ஏத்த
ஏத்தி
ஏத்துகின்றோம்
ஏத்துமின்
ஏனத்தின்
ஏனம்
ஏனோர்
ஏன்
ஏன்றேன்
ஏய்ந்த
ஏர்
ஏறனை
ஏறிய
ஏறு
ஏறும்
ஏறேல்
ஏற்கும்
ஏற்ற
ஏற்றான்
ஏற்றினை
ஏற்று
ஏழு
ஏழை
ஏழையர்
ஏழ்
ஏவினார்
ஏவிற்றுச்
ஏவு
Number of search results : 49
Divya Prabandham songs
3021.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்
ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே?
3255.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
ஏக மூர்த்தி இரு மூர்த்தி
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
ஆவி அல்லல் மாய்த்ததே
768.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 17
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே
1593.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவழுந்தூர்: 1
ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர்போலும்-
நீடு மாடத் தனிச் சூலம் போழக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே
1876.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
குழமணிதூரம்
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின்
கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே
4.0
திருப்பல்லாண்டு -பாசுரம்
பாடல் # 4
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே
450.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
பண்டன்று பட்டினம் காப்பே
ஏதங்கள் ஆயின எல்லாம்
இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரனார்
பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம்
புகுந்து என் சென்னித் திடரிற்
பாத இலச்சினை வைத்தார்
பண்டு அன்று பட்டினம் காப்பே
925.0
திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்
பாடல் # 9
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
1007.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நைமிசாரணியம்
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
உம்பரும் ஆகுவர் தாமே
1711.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 7
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர்-நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்-மகள்
காதல்செய் கணபுரம்-அடிகள்-தம் இடமே
1211.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவாலி:3
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ?
1770.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருப்புல்லாணி: 1
ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு-
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே
3030.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்
ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே
1743.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 10
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப்
பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே
1868.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
குழமணிதூரம்
ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே
3901.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே
1100.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கடல்மல்லை:2
ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான்
வானத்தில்-அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே
3412.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே
1385.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 1
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய
் தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்-
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல
்தேனும் பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே
978.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவதரி ஆச்சிரமம்
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
இணை-அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத்
தடஞ் சிலை குனித்த என் தலைவன்-
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே
994.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருச்சாளக்கிராமம்
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்
அரி ஆய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த
ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்
மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் தானும் ஆனான்-தன்
சாளக்கிராமம் அடை நெஞ்சே
1400.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 3
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும
்தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்
ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே
2476.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 95
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி
1010.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 3
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
சிங்கவேழ்குன்றம்
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே
1337.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவிந்தளூர்
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே
1683.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 4
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ
740.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 11
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
தசரதன் புலம்பல்
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்
வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல்தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்கோன்
குடைக் குல சேகரன் சொற் செய்த
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்
தீ நெறிக்கண் செல்லார் தாமே
698.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்
எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை
அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்
கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்
வாசுதேவா உன் வரவு பார்த்தே
3022.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்
ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே?
3270.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்
ஏறிய பித்தினோடு எல்லா
உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத் திருவே
660.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்
சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு
அரங்கன் கோயில்-திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்
சேறு என் சென்னிக்கு அணிவனே
3308.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ
ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே
2244.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 63
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை
1841.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கோட்டியூர்
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு
இசைந்து உடம்பில் ஓர்
கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்-
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி
இன் இள வண்டு நல் நறும்
தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே
3108.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
புருஷார்த்த நிர்ணயம்
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
3219.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
494.0
திருப்பாவை -பாசுரம்
பாடல் # 21
ஆண்டாள்
திருப்பாவை
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய்
2155.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 74
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு
1643.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணமங்கை
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினை புனலை-சென்று நாடி-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
3625.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்கு ஆய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே
1693.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 5
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து
இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும்
பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை
சுடர் படு முதுநீரில்
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர்
அந்தி வந்து அடைகின்றதே
1418.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 5
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி
உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
3051.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல
ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
289.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
நற்றாய் இரங்கல்
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்
பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த
சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழ மோழையில்
பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும்
மூதுரையும் இலளே
3627.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன்
சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே?
1286.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1005.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நைமிசாரணியம்
ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
-நைமிசாரணியத்துள் எந்தாய்
343.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலிருஞ்சோலை-1
ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்-தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே
1305.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்க் காவளம்பாடி
ஏவு இளங் கன்னிக்கு ஆகி
இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே
Total counts 4000
Aayiram
Aazhvaar
Thalam
Prabandham
Song # from
Song # to
Counts
முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
திருவில்லிபுத்தூர்
திருப்பல்லாண்டு
1.0
12.0
12
முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
திருவில்லிபுத்தூர்
பெரியாழ்வார் திருமொழி
13.0
473.0
461
முதல் ஆயிரம்
ஆண்டாள்
திருவில்லிபுத்தூர்
திருப்பாவை
474.0
503.0
30
முதல் ஆயிரம்
ஆண்டாள்
திருவில்லிபுத்தூர்
நாச்சியார் திருமொழி
504.0
646.0
143
முதல் ஆயிரம்
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
647.0
751.0
105
முதல் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
752.0
871.0
120
முதல் ஆயிரம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
872.0
916.0
45
முதல் ஆயிரம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி
917.0
926.0
10
முதல் ஆயிரம்
திருப்பாணாழ்வார்
உறையூர்
அமலன் ஆதிபிரான்
927.0
936.0
10
முதல் ஆயிரம்
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
937.0
947.0
11
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
948.0
2031.0
1084
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந் தாண்டகம்
2032.0
2051.0
20
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
திரு நெடுந்தாண்டகம்
2052.0
2081.0
30
மூன்றாம் ஆயிரம்
பொய்கை ஆழ்வார்
காஞ்சிபுரம்
முதல் திருவந்தாதி
2082.0
2181.0
100
மூன்றாம் ஆயிரம்
பூதத்தாழ்வார்
மாமல்லபுரம்
இரண்டாம் திருவந்தாதி
2182.0
2281.0
100
மூன்றாம் ஆயிரம்
பேயாழ்வார்
மயிலாப்பூர்
மூன்றாம் திருவந்தாதி
2282.0
2381.0
100
மூன்றாம் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
2382.0
2477.0
96
மூன்றாம் ஆயிரம்
நம்மாழ்வார்
ஆழ்வார்திருநகரி
திருவிருத்தம்
2478.0
2577.0
100
மூன்றாம் ஆயிரம்
நம்மாழ்வார்
ஆழ்வார்திருநகரி
திருவாசிரியம்
2578.0
2584.0
7
மூன்றாம் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
காஞ்சிபுரம்
பெரிய திருவந்தாதி
2585.0
2589.0
5
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
காஞ்சிபுரம்
நம்மாழ்வார்
2590.0
2671.0
82
மூன்றாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
2672.0
2672.0
1
மூன்றாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
2673.0
2712.0
40
மூன்றாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
2713.0
2790.0
78
மூன்றாம் ஆயிரம்
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
2791.0
2898.0
108
நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
2899.0
4000.0
1102
This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
divya prabandham all list