3475.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய் நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே
|
3592.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே?
|
2114.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 33
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியால் ஆம் பயன் அங்கு என்?
|
2185.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 4
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப் பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி
|
3682.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
நங்கள் வரிவளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன் வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கடவாணனை வேண்டிச் சென்றே
|
3250.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை? சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்?
|
836.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 85
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம் மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
|
107.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 11
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அச்சோப் பருவம்
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே
|
1421.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவரங்கம்: 5
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
|
812.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 61
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
|
603.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 7
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
காதல்-நோய் செய்த பரிசு
நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடம்-ஆட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதல் இலேன் குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ-மிறை செய்து எம்மை உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே?
|
632.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே
|
3961.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே
|
1098.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கடல்மல்லை:2
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே
|
3319.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க
நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே
|
3948.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே
|
1687.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 4
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல் கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ
|
317.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 11
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே
|
2030.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப
நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்- எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய் சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!- அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே
|
1633.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
சிறுபுலியூர்ச் சலசயனம்
நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச் செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே
|
1218.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர் மணிமாடக்கோயில்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில்போல் எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்-எத் திசையும் கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
|
3830.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 54
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்
|
2292.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 11
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப் பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான்
|
0.5
-பாசுரம்
பாடல் # 0
இயற்பா
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0 2742.0
|
2672.9
-பாசுரம்
பாடல் # 0
இயற்பா
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0 2742.0
|
948.5
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 0
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
இயற்பா
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0 2742.0
|
2742.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
|
236.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும் பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின் என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே
|
2428.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 47
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ ரோடு பொருது உருளும் கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம்
|
1517.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:4
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியைக் கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே
|
435.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
தன் தகவின்மையை அறிவித்தல்
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை ஆவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே
|
940.0
கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்
பாடல் # 4
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மை ஆகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே
|
3753.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே
|
814.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 63
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?
|
2152.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 71
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு
|
3282.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
|
883.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 12
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே
|
441.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
தன் தகவின்மையை அறிவித்தல்
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமது ஆனாய் உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக் கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே
|
3194.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்
நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே
|
388.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலின் நாமம் இடுதல்
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
|
941.0
கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்
பாடல் # 5
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
|
3006.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்
நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி அம் சோதியை எம் பிரானை என் சொல்லி மறப்பனோ?
|
66.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
செங்கீரைப் பருவம்
நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
|
2825.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 8
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப் புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?
|
2145.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 64
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வரும் ஆறு என் என்மேல் வினை?
|
1447.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநந்திபுரவிண்ணகரம்
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும் உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை யானை ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை ஐந்தும் ஐந்தும் முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே
|
2355.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 74
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து?
|
3116.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை வலம் முறை எய்தி மருவுதல் வலமே
|
2555.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 78
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே
|
1317.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் என வல்லவர் வானவர்-தாமே
|
3433.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த
நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே?
|
1567.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 10
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:9
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன் சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே
|
1980.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
தலைவி இரங்கிக் கூறல்
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே
|
2936.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால் மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே
|
3473.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய் பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
|
606.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
காதல்-நோய் செய்த பரிசு
நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்? வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
|
3780.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அம் தண் குருகூர்ச் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே
|
297.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி
நல்லது ஓர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ இல்லம் வெறியோடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?
|
2577.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 100
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே
|
2870.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 7
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே
|
1016.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
சிங்கவேழ்குன்றம்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்- நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே
|
2584.0
திருவாசிரியம் -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாசிரியம்
திருவாசிரியம்
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவகை உலகமும் யாவரும் அகப்பட நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே?
|
367.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருக்கோட்டியூர்
நளிர்ந்த சீலன் நயாசலன் அபி மான துங்கனை நாள்தொறும் தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர்க் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே
|
2267.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 86
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம் மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான் எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?
|
360.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருக்கோட்டியூர்
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் மூவர்காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் பாவகாரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ
|
2176.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 95
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் தீக் கதிக்கண் செல்லும் திறம்?
|
586.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
மேகவிடு தூது
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே
|
2417.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 36
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள் நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் ஆவான்
|
3929.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை மாகத்து இள மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே
|
757.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 6
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம்
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல் மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே
|
3450.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ
நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே
|
2456.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 75
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு
|
2940.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே
|
1324.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 7
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
நாடி என்-தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே
|
3331.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனைப் பாடி ஆடி பரவிச் செல்மின்கள் பல் உலகீர் பரந்தே
|
2169.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 88
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு என் ஆகில் என்னே எனக்கு?
|
3939.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்
நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே
|
290.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 5
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
நற்றாய் இரங்கல்
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதர்கின்றாள் கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளைப் பாடிகாவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
|
386.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 6
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலின் நாமம் இடுதல்
நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக் கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
|
881.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 10
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்கச் சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
|
1746.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்கண்ணபுரம்: 10
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே
|
2844.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 5
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல் வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே
|
3606.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?
|
645.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 9
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்தன்னைக் கண்டீரே? காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
|
618.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால்-அயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் மாணி உருவாய் உலகு அளந்த மாயனைக் காணிற் தலைமறியும் ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்.
|
3371.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே
|
3189.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப் போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர் ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே
|
2985.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்
நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே
|
2675.1
சிறிய திருமடல் -பாசுரம்
பாடல் # 0
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
இயற்பா
நாதமுனிகள் அருளிச்செய்தது பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்க்மயம் ஸஹஸ்ரஸாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம்த்ராவிடவேதஸாகரம்
|
1015.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
சிங்கவேழ்குன்றம்
நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்- காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த் தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே
|
111.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
புறம் புல்கல்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
|
329.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர்
|
3584.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த
நானக் கருங் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே
|
2503.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 26
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது அம் பூந் தேன் இளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே
|
2697.0
சிறிய திருமடல் -பாசுரம்
பாடல் # 0
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
இயற்பா
நான் அவனைக் கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும்
|
430.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகே என்று மோதும்போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் வான் ஏய வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே
|
2630.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 46
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதி ஆம் நெஞ்சே நினை
|
2382.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து
|
1179.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 2
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருக்காழிச் சீராமவிண்ணகரம்
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
|
2099.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 18
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- மருது இடை போய் மண் அளந்த மால்
|